ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் -எல்லே இளங்கிளியே-

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை-
எல்லாருடைய திரட்சியையும்-காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை-எழுப்புகிறார்கள்-

(அத்யாபயந்தி -அவனும் இவள் வாயால் சொல்லக் கேட்டு நடக்கும் படி வைத்த சீர்மை
கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறும் உபதேசித்தார் அன்றோ நம்மாழ்வார்
இப்பாசுரம் பாகவதர் நடக்க வேண்டியவை
சிற்றம் சிறு காலை பகவான் நடக்க வேண்டியவை
ஆகவே இப் பாசுரங்கள் திருப்பாவை ஆகிறது -என்பர் )

பெண்கள் எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
கீழ்ப் பத்துப் பட்டாலும் சொன்ன யுக்தி ப்ரத்யுக்தியை முக்த கண்டமாகச் சொல்லுகிறது இப்பாட்டில் –
(மாயனை பாசுரத்தில் யுக்தி ப்ரதி யுக்தி உண்டே
ராமர் பட்டாபிஷேகம் நின்றதே என்ற கோபிக்குப் பதில் தானே அது
அன்றிக்கே இப்பாசுரம் சேர்த்தே பத்து என்கிறார் )

அன்விதாபிதானம் பண்ணி இறே கிடக்கிறது –

(அபிஹித அபிதானம் –பட்டர் மீமாம்சகர்
பானையைச் செய்கிறான் -பானை -செய்தல் செய்யும் அவனையும் இது குறிக்கும் –
பானையை செய்யும் தொழிலுக்கு ஆஸ்ரயம் குயவன்
க்ருதி ஆஸ்ரயம்
செய்யப்படுவது -தன்மை -சப்தத்தால் போதிக்கப்படும்
கீழ் பாட்டைப் பார்த்தால் தெரியாது -அபிஹித அபிதானம்
இப் பாட்டு அன்விதாபிதானம்-பிரபாகர் மீமாம்சகர் –
சொல்லிலே இருக்கும் பொருள் )

திருப்பாவை யாகிறது இப் பாட்டு இறே-
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையிலே சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப் பாட்டில் சொல்லுகிறது –

பங்கயக் கண்ணானைப் பாட -என்று
அசலத்தில் பெண் பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவர்கள் பாசுரத்தை
தன் மிடற்றிலே இட்டு நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
த்வனி வழியே சென்று
பேச்சில் இனிமையாலே எல்லே -இளங்கிளியே -என்கிறார்கள் –

(பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே–திருவாய்மொழி -3-4-6-)

இப் பாட்டில் பாகவத கோஷ்டியைக் காண-ஆசைப்பட்டு இருப்பாரை-எழுப்பு கிறார்கள்

உக்தி ப்ரத்யுக்தி இரண்டும் சாப்தமாக இதிலே மட்டும் உள்ளது –
கீழே ஒன்பது பாசுரங்களிலும் அர்த்தமாக அனுமானித்துத் தான் கொள்ள வேண்டும் –
பிரமாதா பிரமாணம் ப்ரமேயம் மூன்றுமே பத்து -உண்டே –

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டைக் கொண்டு அசல் திரு மாளிகையிலே
கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளையை
தன்னிலே நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
(நுடங்கு கேள்வி இசை என்கோ -உள்ளே வைத்து பாடும் இசை –
குயில் தானாகப் பாடும் -முன்னோர் மொழிந்த முறை ஓர்ந்து தான் பேச வேண்டுமே ஆகவே கிளி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே )

திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் –
(திருவான பேச்சு–வாக்மீ ஸ்ரீ மான் சொல்லின் செல்வன் -)
யாழியிலே இட்டுப் பாடி இனிதானவாறே
மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

(திருப்பாவை ஆகிறது இப்பாட்டும் சிற்றம் சிறு காலை பாசுரமும்
இரண்டாலும் பாகவதர் நடக்க வேண்டிய முறையும் பகவான் நடக்க வேண்டிய முறையும் அறிவிக்கும் பாசுரங்கள்
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை – -5 தொடங்கி-மாயனை தாமோதரனைச் செப்பு-9- -இதில் மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-அங்கு ஏஷ நாராயணன் -இங்கு ஆகாதா மதுரா புரிம் -அங்கும் வடமதுரை அவதாரம் -இங்கும் வடமதுரையில் விரோதி நிரஸனம்
உக்திகளும் பிரதி உக்திகளும் வியக்தம் இதில் மட்டும் -கீழே அவ்யக்தமாக இருந்தது அன்றோ)

(நாராயணா நாமம் முதலில் -நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -பேசுமின் எட்டு எழுத்தும் –எட்டு எழுத்தும் கற்று -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -கலியன்
முதலில் நாராயணனே நமக்கே பறை தருவான் –எல்லாரும் போந்தாரோ போந்தார் எண்ணிக்கொள் -பாகவத சேஷத்வம் -மாயனை -அடியாருக்கு ஆட்படுத்தும் விமலன்)

ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

பாகவத விஷயத்திலிருக்கும்படி இப்பாட்டில் கூறியவாறென்? எனில்,
“சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே அவர்களை மை கொள்ளுகிற முகத்தாலே
ஈஸ்வரனை மைகொள்ள வேணுமென்னுமிடம் –
“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்” என்று ரஹஸ்யத்ரய ஸாரத்தில்
அபராத பரிஹாராதிகாரத்தில் தூப்புற்பிள்ளை அருளிச் செய்தபடி –
பாதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து,
‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால்,
அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று –
பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.
“திருப்பாவையாகிறது இப்பாட்டிறே” என்றதும் இவ்வர்த்த விசேஷத்தில் ஊற்றத்தினாலேயென்பது அறியத் தக்கது.

———–

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனை பாட -என்று
அசல் அகத்து பெண்பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு-
இவள் அந்த பாசுரத்தை தன மிடற்றிலே இட்டு பாட
எழுப்புகிறவர்கள் -அந்த த்வனி வழியே கேட்டுச் சென்று
இவள் பேச்சின் இனிமையாலே -எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது -கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை –
பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை

எல்லே இளங்கிளியே
யாழில் இட்டுப் பாடி –
அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு

எல்லே இளங்கிளியே
திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் –
பேச்சில் இனிமை இருந்தபடி –
எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ –
பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்

எல்லே
சம்போதனை ஆகவுமாம்

இளங்கிளியே –
என்று கிளியை வியாவ்ருத்திக்கிறது-
பசுமைக்கும் பேச்சுக்கும் கிளி ஒப்பாம் அத்தனை -பருவத்துக்கு ஒப்பாக மாட்டாது –
ஒக்கிலும் பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பாம் அத்தனை –

இவர்கள் கீழ் -தாம்
இளங்கிளி –
மென் கிளி போலே மிக மிழற்றும் –
அணி மழலைக் கிளி மொழியாள்-என்னக் கடவது இறே –

கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே!என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-

நாணாதாய் நா உடையாய் -என்று கீழ் பாட்டிலே அவளை உட்பட வெறுத்தவர்கள்-
அவளிலும் பிற்பாடையாய்
சாபரதையாய் கிடக்கிற நம்மை ஸ்லாகிக்கக் கூடாது –

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து (1-8 )-என்னும் படியே
தங்கள் உடம்பு விவர்ணமாய் வாயும் வெளுத்து இருக்க
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே உடம்பு பசகு பசகு என்று
வாயும் சிவந்து நாம் குறி அழியாது இருந்தோம் என்று நம்மை நிந்திக்கிறார்கள்
இவ்வளவில் இவர்களுக்கு வாய் திறக்கில் வெறுப்பாம் என்று பேசாதே கிடக்க

எல்லே –
அசல் அகத்து பிள்ளையை எழுப்பு கிறவர்கள்
சங்கோடு சக்கரம் இத்யாதியைப் பாட –
அப்பாசுரத்தை தம் மிடற்றிலே வைத்து பாடுகையாலே
அது தானும் இவர்களுக்கு அத்யந்தம் ஆகர்ஷகமாய் இருக்கையாலே
அவரை கொண்டாடுவதற்கு முன்பே -எல்லே-என்று
ஆச்சர்யப் படுகிறார்கள் –

இளங்கிளியே –
கிளி பேச்சுக்கு ஒப்பாம் அதனை அல்லது பருவதுக்கு ஒப்பாமோ –
இவ்விடத்தில் பருவம் எனபது அபிநிவேசத்தை
அவற்றுக்கு அபிநிவேச பூர்வகமாக வார்த்தை சொல்ல வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே –

இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டான –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்ற பாட்டைக் கேட்டு
அசல் திருமாளிகையிலே கிடந்தாள் ஒரு பெண் பிள்ளை தன்னிலே கிடந்தது நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
எல்லே இளங்கிளியே
திருவான பேச்சு இருந்தபடி என் என்று கொண்டாடுகிறார்கள் -(நுடங்கு கேள்வி இசை என்கோ -ஆழ்வார் )

யாழியிலே இட்டுப் பாடி -இனிதானவாறே-மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே- முற்படப் பெண் பாடக் கேட்டு அவர்கள் பாடுகிறார்கள் –

(குயில் போல் தனக்குத் தோன்றியதைப் பேசாமல் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -பொருளிலும் மதிப்பிலும் இனிமை கிளிக்கே)

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
எல்லே என்றது -என்ன ஆச்சர்யம் என்றபடி -சம்போதனம் ஆகவுமாம் –
இளங்கிளி -என்று கிளியை வ்யாவர்த்தித்த படி -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி
பாட்டில் இனிமையால் உறங்கி இவள் பேச்சு கிடையாது என்னும்படி இருக்கை – –
இதொரு பேச்சே -என்று கொண்டாடுகிறார்கள் —

(கிளியும் இளம் கிளியும் கால ஷேப தலைப்பு -கார்ப்பங்காடு ஸ்வாமி
வேளுக்குடி வரதாச்சார்யரை முதலில் செய்ய சொல்லி அருளினாரே )

இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை தன் -பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும்
வெளுத்து இருக்க -கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே -தன் உடம்பு பசுமை யுண்டாய் வாயும் சிவந்து இருக்கிறது என்கிறார்கள்-
இவ்வளவில் வாய் திறக்கில் பழி இடுவார்கள் என்று நினைத்து நான் இங்கனே பசுகு பசுகு என்று
சிறகுகளும் தானுமாய் இருந்தேனோ என்று ஒன்றும் பேசாதே கிடந்தாள்

உணர்த்த வந்தவர்கள் உறங்குமவளை, ‘இளங்கிளியே!’ என விளித்ததும் அவள் நினைத்தாள்;
நம் அயலகத்துப் பெண்ணை ‘நாணாதாய்!’ என வெறுத்துரைத்தவிவர்கள்
நம்மை நோக்கி ‘இளங்கிளியே!’ என்றால், இதை நாம் மெய்யே புகழ்ச்சியாகக் கருதலாகாது.
உறக்கத்தில் அவளிலும் மேற்பட்டவளாயிராநின்ற நாம் நிந்தைக்கு உரியோமத்தமையன்றிப் புகழ்தற்கு உரியோமல்லோம்;
ஆனபின்பு, இப்போது இவர்கள் புகழ்ச்சி தோன்ற விளித்தமைக்குக் கருத்து வேறாக வேணும்?
“மாசுடையுடம்பொடு தலையுலறி வாய்ப்புறம் வெளுத்து” என்னும்படி
எங்களுடம்பு வைவர்ணியமடைந்து வாயும் வெளுத்திருக்க, உன் உடம்பு கிருஷ்ண ஸம்ச்லேஷத்தினால் பசுகுபசுகென்று,
வாயும் சிவந்து குறியழியாமே கிடக்கிறபடி வெகு அழகிதாயிராநின்றது! என்ற கருத்துப்பட;
‘இளங்கிளியே!’ என்ற மெல்லிய பேச்சினால் நிந்திக்கின்றனரே யன்றி வேறில்லை;
இவ்வளவில் இவர்களுக்கு நாம் ஒரு மறுமாற்றந் தந்தால் வெறுப்பா” மென்று பேசாதே கிடந்தாள்;

——————–

எல்லே -என்னே –
எல்லே என்று பேச்சின் இனிமையாலே ஆச்சர்யப் படுகிறார்கள் –

இன்னம் உறங்குதியோ –
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க –

இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் –
கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே-
உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும்-உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் –
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன –

இன்னம் உறங்குதியோ-
என்கிறார்கள் –
நாங்கள் வருவதற்கு முன்பு உறக்கத்தை பொறுத்தோம் ஆகிலும்
நாங்கள் வந்தால் உறங்கக் கடவதோ

இன்னம் உறங்குதியோ-
கிருஷ்ண விரஹத்தாலும்
உன் கடாக்ஷம் படாமையாலும்
துவண்ட எங்கள் ஆர்த்த த்வனி கேட்டும் கண் உறங்குவதே உனக்கு

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தால் உறங்குவார் உண்டோ –
கிருஷ்ண அனுபவத்துக்கு ஏகாந்தம் பெற்றாலும் உறங்கக் கடவதோ

தான் அனுபவிக்கிற பங்கயக் கண்ணனுடைய அனுசந்தானத்துக்கு –
இளங்கிளியே -என்பது –
இன்னம் உறங்குதியோ -என்பது –
இவர்கள் சொல்லுகிறவை விக்னம் ஆகையால் சிலுக்கிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ(கண்கள் துஞ்சுதலே முன்பு -பெற்ற பின்பு ஸதா பஸ்யந்தி – -ப்ராப்யத்திலே கண் வைக்க வேண்டுமே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் )
எங்களுக்கு கிருஷ்ண விரஹத்தாலே தளர்வதுக்கு மேல் உறக்கம் இல்லை –
அதுக்கு உன் கடாக்ஷமும் பெறாது ஒழிவதே
உன் பாட்டுக் கேட்கப் பெறாது ஒழிவதாய் உயிர்க் கொலையாக்கி இட்டு வைத்தால் தரிக்க ஒண்ணுமோ –

இளம்கிளியே என்று கீழே கொண்டாடி இன்னும் உறங்குதியோ என்றது பதில் பேசாமல் இருப்பாயோ -என்றவாறு-

—————-

சில்லென்று அழையேன்மின் –
தன் அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிறது விக்நம் ஆகையாலே
சிலுகிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அசஹ்யமோ -என்னில் –
திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அசஹ்யமாம் போலே –

சில்லென்று அழையேன்மின்
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாம் போலே –
(கூட்டம் கலக்கியவர் என்று சொல்வார்களே செல்வரை )
பிராட்டிமாரும் சர்வேஸ்வரனும் கூட எழுந்து அருளி இருந்தால்
ஒட்டு வட்டில் காளாஞ்சியோ பாதி பிரியாதே இருக்கக் கடவ – ஸ்ரீ நாரத பகவானையும்
ஸ்வேத தீபத்திலே எழுந்து அருளுகிற போது
உன் வன்மை யவர்கள் பொறாதே இருக்கக் கூடும் என்று –
நான் வரும் அளவும் இங்கேயே இரு என்று அருளிச் செய்து எழுந்து அருளினார் இறே

(ஸ்வேத தீப வாசிகள் ஸநகாதிகள் பரம மென்மை என்று நாரதரை நிற்க வைத்து போனார் அன்றோ )

தன்னால் அல்லது செல்லாத எங்களை சிவிடக்கு என்பதே -என்று இன்னாதாய் –
நாங்களும் –
எங்கள் தரிசனமும்
எங்கள் பேச்சும்
அஸஹ்யமாம் படி உன்னுடைய பூர்த்தி இருந்த படி என் என்ன

சில்லென்று அழையேன்மின் –
பிராட்டிமாரோடே கூட எழுந்து அருளி இருந்தாலும் படிக்கத்தோபாதி அந்தரங்கனாய்
இருக்கக் கடவ ஸ்ரீ நாரத பகவானை(ஜிதந்தேயில் இந்த சரித்திரம் உண்டே )
ஸ்வேத த்விபத்துக்கு எழுந்து அருளினை போது உள்ளே புகப் புக்கவாறே-
இவன் வெட்டத்தனம் அவர்களுக்குப் பொறாது என்று –
நீ இங்கே நில்லு -என்று எழுந்து அருளினால் போலே( அசுணமா முடியுமா போல் லௌகிக சப்தம் )
தான் அனுசந்திக்கிற அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே-
சிலுகிடாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அஸஹ்யமோ என்னில் திருப் புன்னை கீழே
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் (கூட்டம் கலக்கி )எழுந்து அருளுகையும் அஸஹ்யமாமாம் போலே –

————–

நங்கைமீர் போதர்கின்றேன் –
நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்த படி என் -என்ன
சிவிட்கென்ன கூசி –
நங்கைமீர் போதர்கின்றேன் —
நீங்கள் வாய் திறவாது இருக்க வல்லிகோள் ஆகில்-நான் புறப்படுகிறேன் -என்ன

நங்கைமீர் போதர்கின்றேன்
என் பிரகிருதி அறியாதே -இளங்கிளியே என்று என்னை பாதிக்கின்ற நீங்களே
அன்றோ பூர்ணைகள்-
வாய் திறவாது இருக்க வல்லி கோள் ஆகில் –
நான் புறப்படுகிறேன் என்ன

நங்கைமீர் போதர்கின்றேன்-
நாங்களும் நம் பேச்சும் போராதபடி உன் பூர்த்தி என் -என்ன
நம் பாசுரத்தை மிடற்றிலே வைத்துப் பாடுகிற இவ் வனுபவதிற்கு விரோதம் பண்ணலாகாதே-என்று
எழுப்பாதே இருக்க வேண்டி இருக்க
அது பொறாதே எழுப்புகிற நீங்கள் அன்றோ பூரணைகள் –
நீங்கள் வெறுமனே இருந்தி கோள் ஆகில்-நான் புறப்பட்டு வருகிறேன் -என்ன –

நங்கைமீர் போதர்கின்றேன்
இவர்கள் சிவிடுக்கென்ன நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என் என்ன
நீங்கள் அன்றோ குறைவற்றீர்கள் -படுத்தாதே கொள்ளுங்கோள் -புறப்படா நின்றேன் -என்ன

—————–

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும் –
நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம்
சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
சொல்லிற்றைச் சொல்லி
எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்

வல்லை யுன் கட்டுரைகள்
எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி
உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே

பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
பண்டே அறியோமோ –

குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –
நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –
உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன

வல்லை யுன் கட்டுரைகள் பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை
என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -என்ன

(உன்னுடைய சுண்டாயம் நாம் அறிவோம் -பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
பெருமாள் விஷயம் அங்கு -இங்கு பாகவத விஷயம் )

——————-

பண்டே அறியோமோ -என்றுமாம் —

வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –
வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன
உன் வாசலில் வந்து எழுப்ப
சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன

அது என் குற்றம் அன்று –
அதுவும் உங்கள் குற்றமே
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள்-நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க
அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –

அது கிடக்க-ஸ்வரூபம் இருப்பதால்

வல்லீர்கள் நீங்களே –
உங்கள் வாசலிலே நான் வந்து துவளப்
பேசாதே கிடந்து வெட்டிமை சொல்லிப் படுத்த வல்லி கோளே நீங்கள் அன்றோ –
உங்கள் வாசலிலே வந்து எழுப்ப நான் எத்தனை பண்ணைக் கேட்டேன் என்ன –

அது சாத்தியம் –
இது சித்தம் –
ப்ரத்யக்ஷம் கிடக்க அனுமானத்தைக் கொள்ளவோ என்ன –

பதகம் மூட்டினவாறே

வல்லீர்கள் நீங்களே –
உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு
விரோதியைப் பண்ணி
அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல
நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன –

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ வல்லை யுன் கட்டுரைகள் -என்னும் வெட்டிமை உங்களதே —
நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன
அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

————–

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –

பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நானே தான் ஆயிடுக
பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது

இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால் இல்லை செய்யாதே இசைகை இறே வைஷ்ணவ லக்ஷணம் –

மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று
பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக
ராம பக்தன் -விரல் விட ஒருவனே ப்ராதா என்பதால் அல்ல பரதன் என்பதால் -பாதுகா சஹஸ்ரம் )

ஸ்வ குண அபதானத்துக்காக கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணலாகாது என்றும் வேதார்த்தம் பிரகாசிக்கிறது –

இப்படி தோஷ துஷ்டையான நான் உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

நானே தான் ஆயிடுக
பதகம் மூட்டினவாறே (பதக முதலை வாய் களிறு )சிறிது போதாகிலும் பேசாதே இருப்பார்கள் இறே என்று –
நானே தான் ஆயிடுக -என்கிறாள் –
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

(துளஸீ மாலையும் பன்னிரண்டு திரு நாமங்களும் ஸ்ரீ வைஷ்ணவத்வ லக்ஷணம் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே
உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்)

ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே வாத்ர -நிமித்தம் ஆஸீத் வன பிரவேச ரகு நந்தனஸ்ய -என்றான் –

பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் –
அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

—————–

ஒல்லை நீ போதாய் –
எங்களுக்கு ஒரு ஷணமும் உன்னை ஒழியச் செல்லாமையாலே-
எங்கள் திரளிலே சடக்கென புகுந்து கொடு நில்லாய் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே -என்று-அவர்களுக்கும் இத் திரள் இறே பிராப்யம்

ஒல்லை நீ போதாய்
உன் குற்றத்துக்கு இசைந்த பின்பு சடக்கென புறப்பட்டு இத் திரளில் புகுந்து பொருப்பித்துக் கொள்ளாயோ-
(அபராத ஷாமணம் -பாகவதர்கள் இடம் தான் பெற வேண்டும் )

ஒல்லை
ஒல்லைக் கூடுமினோ -என்றார் இறே –
சாதி கோட்டியுள் கொள்ளப்படுவார்(பெரியாழ்வார் – 3-6-10 )-என்று
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியுள் புகுருகை ஏற்றம் என்று அருளிச் செய்தார் இறே

ஒல்லை நீ போதாய் –
உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி –
புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்
ஆகில் புறப்பட நின்றேன் என்ன

துடித்துக் கொண்டு புறப்பட்டு நின்று நாங்கள் பட்டது படாமையாலே
சிவிட்க்கு என்று

ஒல்லை நீ போதாய்
உன் படுக்கையிலே கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய்
அரை க்ஷணம் வைஷ்ணவ கோஷ்ட்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய –
என்கிற ஸூப்ராஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது -(பிணக்கு வர மத்யஸ்த்யம் நடுநிலை பண்ண வரச் சொல்ல -அவர் சொன்ன பதில் )

—————

உனக்கென்ன வேறுடையை-
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய-
தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே-உனக்கு வேறு சில உண்டோ –
வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும்
பாகவத விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –
நீ ஒருவருக்கு விரோதி அல்லை
நீ புக்குத் திருவடி தொழு -என்ற ஆழ்வான் வார்த்தையை நினைப்பது –

உனக்கென்ன வேறுடையை
என்கிறார்கள் –
இவள் ஒரு சற்று விளம்பித்து புறப்படும் காட்டில் அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களுக்கு ஒழிய
உனக்கு என்ன ஒரு ஸ்வயம் பாகம் வேணுமோ –
உன் ஸ்வயம் பாகம் தவிர்ந்திலையோ பெருமானைக் கண்ட பின்பும்
வைஷ்ண விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பகவத் விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –

இளைய பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வானுடைய விரோதம் என்கிற அதி சங்கையால் உத்தியோகித்து –
வில்லிலே நாண் ஏறிடுவது -அம்பைத் திரிப்பது ஆகிற படியைக் கண்டு
பெருமாளுக்கு அஸஹ்யமாய்
அவனுக்கு ராஜ்யத்தில் ஸ்ரத்தை இல்லை –
உனக்கு அபேக்ஷை உண்டாகில் வாங்கித் தருகிறோம் என்று
அருளிச் செய்த போது
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே இவளும் –
உனக்கு என்ன வேறுடையை -என்றது பொறுக்க மாட்டாமே

யுனக்கென்ன வேறுடையை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்து இல்லை-எங்கள் -பெரும் பானை கண்ட பின்பும் -என்கிறார்கள் –
அதாவது மத்யம பதமும் மூன்றாவது பதமும் –

சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-என்னக் கடவது இறே
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் (5-8-ஸஹ போஜனம் )-என்னுமா போலே
இளைய பெருமாள் கைகேயின் மகன் வருகிறான் என்று ஸ்ரீ பரத ஆழ்வானைச் சீறி –
வில்லையோட்டிக் கொல்ல என்ன –
பெருமாளுக்கு அது அஸஹ்யமாய் -(போர் பெரும் கோலம் என்றாயே நீர்ப் பெரும் கோலம் பார் )பிள்ளைக்குச் சொல்லிக் கொள்கிறோம்
நீ இங்கண் அலமாக்கிறது ராஜ்யத்தை ஆசைப்பட்டு அன்றோ
நீ ராஜ்யத்தைப் பண்ணு-என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே -இவளும் உனக்கு என்ன வேறுடையை -என்ன அப்படி தரைப் பட்டாள்-

ச சைன்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந சம்சய – ராஜ்ய மஸ்மை ப்ரதீயதாம்- ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா(மூன்றுக்கும் பிரமாணங்கள் )
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் (பெரியாழ்வார் -3-6)என்று -புருஷார்த்தமான
இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தம் உண்டோ –
விஷயங்களைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –
ஈஸ்வரனைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம்
ஆத்மாவைப் பற்றி புறம்பாய் இருக்கவுமாம் –

(சைன்யம் உடன் கூடிய பரதன் இடம் சென்று வெல்வேன்
ராஜ்ஜியம் உனக்கு விருப்பமானால் பரதன் இடம் சொல்லிக் கொடுக்கச் செல்வேன்
பாஷம் -அப்படியே -ஓரே வார்த்தை மட்டுமே பதில் சொல்லுவான்
வெட்க்கி உடம்பு சுருங்கினானே -ராமன் நலத்திலே விருப்பம் –
பாகவத அபசாரம் கூடாது என்பதற்கு அன்றோ இச்சுடு சொல் )

————-

எல்லாரும் போந்தாரோ –
எனக்கு உங்களை ஒழிய சுகம் உண்டோ
உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்பட இருந்தேன் –
எல்லாரும் போந்தாரோ -என்ன –

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –
உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
உணர அறியாத சிறு பெண்களும் இழக்க ஒண்ணாது –
அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன் -இத்தனை –
எல்லாரும் போந்தார்கள் ஆகில் புறப்படுகிறேன் -என்றாள்-

———–

போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன
ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –

போந்து எண்ணிக் கோள் –
புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-
மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்
தனித் தனியே பார்க்கையும்
அனுபவிக்கையும் –

நாம் எல்லாம் கூடினால் செய்வது என் என்ன –

எல்லாரும் போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடக்கிறது

நான் எழுந்து இருக்கைக்காக ஒன்றைச் சொல்லுகிறீர்கள் அத்தனை அன்றோ –
வந்தார்கள் யாகில் உள்ளே புகுரா விடுங்கோள்-என்ன

வந்தமை நிச்சிதம் –
புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-
மெய்க் காட்டு கொள்ளுகைக்கு பிரயோஜனமாக இவர்கள் நினைக்கிறது –
தனித் தனியே பார்க்கையும் –
பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்-
ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்-
பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –

நாம் எல்லாரும் கூடிச் செய்யப் பார்த்தது என் என்ன –

கிருஷ்ணனுடைய விஜயங்களை நீ பாட நாங்கள் கேட்க வேணும் என்கிறார்கள்

எல்லாரும் போந்தாரோ – போந்தார் போந்து எண்ணிக் கோள்
அடைய வந்து புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-என்ன
மெய்க் காட்டுகைக்கு பிரயோஜனம் தொட்டு எண்ணுகையும்-
தனித்தனி எல்லாரையும் தழுவுகையும்

(அவனே உகந்து நெருங்கி வந்தானே இடை கழியிலே
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே
புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ )

————-

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தைக் கொன்று-நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தை கொன்று நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –
பெரு மிடுக்கு உண்டாம் படி மதப் படுத்தி நின்ற குவலயா பீடத்தை கொன்று –
ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வந்து நம்மோட்டை பெண்களை வாழ்வித்தவனை –
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்று இறே பெண்கள் வாய் வெருவுவது

கவள மால் யானை கொன்ற கண்ணன் -(பெரிய திரு மொழி 4-8-1/திருமாலை -45)-என்று
ஆண்களை எழுதி முடிக்கப் பண்ணினது –
பெண்களை எழுத்து வாங்குவிக்கச் சொல்ல வேணுமோ –

வெஞ்சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்-(9-2 )என்னக் கடவது இறே
வாரணத்தை மருப்பு ஒடித்த பிரான் மாதவனே –
பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன்-
பின்னை மணாளனாகி கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தான்-
என்று பிரதான மஹிஷிகள் மூவரும் இவ்வாபத்தானத்துக்கு இறே தோற்றுக் கிடப்பது –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்த்திலும் காட்டிலும்
இத்தை குணமாக
ஓர் ஆனை காத்து ஓர் ஆனை கொன்று (திருச்சந்த )-என்று அருளிச் செய்தார் இறே –

வல்லானை கொன்றானை
எல்லாரும் வந்தாராகில்
இனி உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –வேறு உண்டோ –
உன் அழகிய மிடற்றாலே -ஒரு கால் -வல்லானை கொன்றானை -என்னாய் என்கிறார்கள் –

வல்லானை கொன்றானை
ஒரு நாள் செய்த உபகாரம் அமையாதா நமக்கு -என்று கொண்டாடுகிறார்கள்

வல்லானை கொன்றானை
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்-(பெரிய திருமொழி -6-5)என்று வாசலிலே ஆனையை நிறுத்தி
பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்ப்போம் இறே என்று
கம்சன் அம்மானாய் இருக்கப் பார்க்க அத்தைக் கொன்று அவ் வூரில் பெண்களையும் நம்மையும்
உளோமாம் படி பண்ணி ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்

————

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
எதிரிட்ட கம்சாதிகளை அனாயேசேன நசிப்பித்து-அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
சக்கரவர்த்தி திருமகனைப் போலே -கச்ச -என்று விடாதே –
குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி –
மல்ல ரங்கத்திலே புக்கு
சாணூர முஷ்டிகர் தொடக்கமான மல்லரைக் கொன்று –
உயர்ந்த மஞ்சத்தில் இருந்த கஞ்சனை மயிரைப் பிடித்து இழுத்து
பூதலத்திலே புரட்டி –
திருவடிகளாலே உதைத்து –
மதிப்பு அறுத்து –
குஞ்சி பிடித்து அடித்து -தன்னை உபகரித்து
நசமம் யுத்தம் இத்யாஹு -என்று அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை

வார் கடா வருவியில் செய்தவற்றை எல்லாம் நினைத்து சொல்கிறார்கள் –

வார் கடா வருவி யானை மா மலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக் கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–(திருவாய் -8-4-1)

மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை –
சக்ரவர்த்தி திருமகனைப் போலே -நாளை வா என்று விடாதே அக் கணத்திலே கம்சாதிகள் நினைத்த நினைவை
அவர்கள் தங்களோடு போக்கி தாய் தம்மப்பன் காலிலே விலங்கைப் போக்கி வாழ்வித்தவன்

————-

மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை-பெண்கள் கையில் படுமவனை –

மாயனைப்
தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று –
அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை

மாயனைப்
தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்

——–

வல் ஆனை கொன்றானை –
அங்கே குவலயா பீடத்தை கொன்றாப் போலே-
நம்முடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தைப் போக்கினவனே-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை —
சாணூர முஷ்டிகாதிகளை நிரசித்தாப் போலே-
நம்மை தம்மோடு சேர ஒட்டாத இடையர் உடைய-சங்கல்பத்தை போக்கினவனே –

எதிரிகளை தான் தோற்பிக்குமா போலே-
நம் கையிலே தோற்ற ஆச்சர்ய பூதனை –

பாட –
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்கு தோற்றுப் பாட –

வல்லானை கொன்றானை மாயனை
குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –
மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி
எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே
நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –

பாடேலோ ரெம்பாவாய்-
நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

1-எல்லே இளங்கிளியே -என்று பகவத் விஷயத்திலே ருசி உடையார் பேச்சும் உத்தேச்யம் என்கிறது –

2-இன்னம் உறங்குதியோ -என்று பாகவத ஸஹவாசம் சித்தித்தால் புறம்பு அந்நிய பரதை பண்ணும் இடம் தப்பு என்கிறது –

3-சில்லென்று அழையேன்மின் -என்றதால் ருசி உடையார்க்கு எல்லாம் சொன்னாலும் பொறுக்க வேணும் என்னும் இடம் சொல்லுகிறது

4-நங்கைமீர் போதர்கின்றேன்-என்கிறதால் சாபலத்தால் சில பிறந்தாலும் பகவத் விஷயத்திலே அவகாஹித்தவர்களை
சாபலத்தால் பிறந்தவற்றை நினையாதே கௌரவதை தோற்றச் சொல்ல வேணும் என்கிறது –

5-வல்லையுன் கட்டுரைகள்-என்றதால் -சில்லென்று அழையேன்மின்-என்றது இவர்களுக்கு உத்தேசியமானவோ பாதி
உன் வெட்டிமை அறிந்தோம் என்றதும் அவளுக்கு உத்தேச்யமாகக் கடவது என்கிறது

6-வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக-என்கிற இத்தால் பர தோஷத்தையும் ஸ்வ தோஷமாகக் கொள்ளவும்
கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணக் கடவது அல்ல என்னும் இடத்தையும் சொல்லுகிறது

7-ஒல்லை நீ போதாய் -என்கிற இத்தால் -பாகவத சம்ச்லேஷம் சத்தா சித்தி என்கிறது –

8-உனக்கென்ன வேறுடையை-என்கிற இத்தால் –
யதா தேத தத்ர வர்த்தேர தன்-என்கிற வேதாந்த பிரகிரியையாலே
ஸ்ரேஷ்டர் வர்த்தித்தபடி வர்த்தியாது ஒழிகை தப்பு என்கிறது

9-எல்லாரும் போந்தாரோ -என்கிற இத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் உத்தேசியர் என்கிறது

10-போந்து எண்ணிக் கோள்-என்கிற இத்தால் ஒருவர் குறைந்தாலும் பகவத் அனுபவத்துக்கு குறை என்கிறது

11-வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-என்று
திரண்ட பாகவதர்களுக்கு உஜ்ஜீவனம் -உண்ணும் சோறு இத்யாதி படியே பகவத் விஷய அனுபவமே என்கிறது

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட
ஸ்வ யத்னத்தால் கடக்க அரிதாய்-பிராயச்சித்த விநாச்யமுமாய் இன்றிக்கே இருக்கிற
அஹங்கார நிவர்தகனாய்-மற்றும் உள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகனாய்
ஆஸ்ரித பரதந்த்ரனைப் பாட-ஒல்லை நீ போதாய் – இத் அந்வயம்-

பாடேலோ ரெம்பாவாய்-
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட
இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

(சோழ ஸிம்ஹ புரத்தில் பக்த உசிதன் -=பக்த லோசனன் கிடந்தவாறு எழுந்து இருந்து வாழி கேசனே
சொன்ன வண்ணம் செய்து அருளி –ஆஸ்ரித பாரதந்தர்யம் காட்டி நம்மை எழுதிக் கொள்கிறானே)

எல்லே இளங்கிளியே —
பண்டே யுன் வாய் அறிதும் —
மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாட
வாக் பாணிதி யுடையாரையும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர
நாம சங்கீர்த்தனத்திலே சஹகாரிகளாக்கிக் கொண்டபடியைச் சொல்கிறது
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருப்பவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது —

ஏவம்வித சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும்
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷித்ங்களை விண்ணப்பம் செய்து அடிமை செய்யும் படியையும்
அவன் அடிமை கொள்ளும் படியையும்
அவனுக்கு அறிவித்துத் தலைக் கட்டுகிறது
மற்று எல்லாம் –

வாக் பணிதி யுடையாராயும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே
சஹகாரிகள் ஆக்கிக் கொண்ட படியைச் சொல்லுகிறது –

————

சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில்,

“ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேதவிழுப் பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.”–என்ற நான்காம் பாட்டு,
“எல்லேயிளங்கிளியே” என்னும் இப்பாட்டின் பொருள் நடையை அடியொற்றியதென்பதை இங்கு உணர்க.

——

(ஸ்வாபதேசம்.)

எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை-அது எங்கனே என்னில் –

அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்

பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக –

ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் –
பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –

நீராடப் போதுவீர் -என்றத்தை –
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் –

சந்த மலர்க குழல் –பூம் கோதை –
எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –

பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி –
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் –
இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –

வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் –

இப் பாட்டில்
வல்லானை கொன்றானை என்கிற வித்தை
ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

——————

பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

குமுதவல்லித்தாயார் மேல் இருந்த காமத்தால் பக்தரான திருமங்கை ஆழ்வார் -மங்கையர் தோள் கை விடாமலேயே -எல்லே -என்ன ஆச்சரியம்
வயலாலி மணவாளன் திருமந்திரம் சொல்லி அருள
இளம் கிளி போல் தானும் பத்து தடவை சொல்லி நானும் சொன்னேன் நீரும் சொல்லும் என்றாரே
ஆண் பாவத்தில் ஊடி -உனக்கு வேறுடையை

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading