ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கனைத்திளம் கற்று எருமை—

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரியாமல்-இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன்
தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்-இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தைத் தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

ஆண்டாளுக்கும்
ஆழ்வாருக்கும்
தசாரதாதிகளுக்கும் –
குகாதிகளுக்கும்
சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் –

(பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஸ்ரீ ராமாவதாரம் -சார்ங்கம் உதைத்த 4- அவ்யக்தம்
இங்கு தென் இலங்கை கோமானைச் பெற்றவன் -பெயர் சொல்லாமலே -மேல் –22-தென் இலங்கை செற்றான் போற்றி
ஓங்கி -உம்பர் கோமான் –17-உலகம் அளந்தாய் போற்றி –
பத்து பத்தாகப் பிரித்து பார்த்து ஒவ் ஒன்றிலும் ஒரு தடவை இரண்டு அனுபவம் –
மத் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -திரு நெடும் தாண்டகம் மூன்று பத்தாக பிரித்து அனுபவிப்பது போல் இங்கும்
அனந்தலோ –9- பெரும் துயில் -10- இங்கு பேர் உறக்கம் -அவளைப் போல் கும்பகர்ணனை வென்று வாங்காமல் –
எல்லாமே சரணாகதி -ஸூவ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிவது -அவனே கொள்ளுவது பேர் உறக்கம் –
காம்பற தலை சிறைத்து -பரகத ஸ்வீ காரம் -தன்னேற்றம்
கீழே செல்வப் பெண்டாட்டி-பொற் கொடி யானவள் கோவலனைப் பற்றி அங்கு –
இங்கு நற் செல்வன் தங்காய் -அவன் உகப்புக்குக்காக செய்யும் கைங்கர்யமாகிய நற் செல்வம் –
அவனாகவே கைக் கொண்ட இவளது ஏற்றம்
கீழே செல்வம் -இங்கு நல் செல்வம் –
அது ஆஜ்ஜா கர்ம யோக ரூபா பகவத் ஆராதனம் –
இது அநு ஜ்ஜா விதி ப்ரேரித கைங்கர்யம் )

கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே இவனைக் காக்கைக்கு
இவனைப் பிரியாதே போகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –
(இளைய பெருமாளைப் போலவும் நம்பி மூத்த பிரானைப் போலவும் உடையவரைப் போலவும் உள்ள நற் செல்வன் -இப்பாசுரம் ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்களே )

(ஸ்ரீ விபீஷணனுக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் கிடைத்தது போல் திரிஜடை –இவளே நற் செல்வன் தங்காய் -பிராட்டிக்கு கைங்கர்யம்
நற் செல்வன் ஸ்ரீ விபீஷணன் உடைய தங்கை தாரம் மகள் மூவரும் பிராட்டிக்கு கைங்கர்யம் உண்டு

(திரிஜடை -விபீஷணன் உடன் பிறந்தவள்
அநலா -பெண்
சரபா -மனைவி -மூவரையும் பிராட்டிக்கு கைங்கர்யம் செய்ய வைத்து அன்றோ வந்தான் )

ஸ்ரீ ராமாவதா பிரஸ்தாபம் இதில் -மனத்துக்கு இனியன் -பெயர் சூட்டுகிறாள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணுக்குப் பட்டம்
திரிவிக்ரமன் வியக்தமாக திருப்பாவையில் உண்டே)

(அனைத்து இல்லத்தாரும் அறிந்து – உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாரணற்கு ஆளாயினரே)

(மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)

(விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே -)

(அனந்தல்-ஆற்ற அனந்தல்- பெரும் துயில் -உபாயத்தில் விஸ்வாஸம் -பெரும் துயில் -மார்பில் கை வைத்து துயில்-பரகத ஸ்வீ காரம் -அங்கு கைங்கர்ய பிரஸ்தாபம் இல்லை
பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள் -)

கிருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கை புக்குவாறே —
ஸ்ரீ நந்தகோபர் வ்ருத்தராகையாலும் –
நம்பி மூத்த பிரான் விலக்க மாட்டாதே அவன் வழியே போகையாலும் –
இவனைக் காக்கைக்கு இளைய பெருமாளை போலே இவனைப் பிரியாதே போகிறான்
ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள் –

(பரதனும் தம்பி சத்ருக்கனனும் -இலக்குவனோடு மைதிலியும் -அங்கே சேர்த்தால் போல் இங்கும் பிரியாதே -பதம்
இளைய பெருமாள் ஊர்மிளை உடன் அக்னி கார்யம் செய்த போது இவனும் பால் கறப்பான்)

இப் பாடலில்-பாகவத அபிமான நிஷ்டரை-எழுப்புகிறார்கள்

ஏழாம் பாட்டில்
நற் செல்வன் தங்காய் –
மனத்துக்கு இனியானைப் பாடவும்
பகவத் ப்ரத்யா சந்தரோடு ஆசத்தி யுடையாரையும் மநோபி ரமமான நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் தத் யுக்தி பரராக்கும்படி சொல்லுகிறது
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேசியர் என்றும்
அவர்களடியாக பகவத் ஸமாச்ரயணீயம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் -என்கிறது –

பகவத் ப்ரத்யாஸன்னரோடு ஆசத்தி யுடையாரையும் மநோ ராபிமான திரு நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் ததுக்கி பரராம் படி சொல்லுகிறது

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்-மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது

நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–

———

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே-முலை கடுத்து கதறுகை –

கனைத்து
உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே –
ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –

ப்ராப்த காலத்திலேயே கறப்பார் இல்லாமையாலே முலை கடுத்து –
இவ் வாசலிலே கன்று காலியாய் நாம் பட்டதோ என்று குமுறி
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே
காற்கடைக் கொள்ளுவான் என் என்னில்

இளைய பெருமாளுக்கு அக்னி காரியத்தில் அந்வயம் உண்டாம் அன்று
இவனுக்கு இவற்றினுடைய ரக்ஷணத்தில் அந்வயம் உள்ளது –

இளைய பெருமாளுக்கு பெருமாளைப் பிரிய மாட்டாமையாலே –
இவன் கிருஷ்ணனைப் பிரிய மாட்டாமையாலே –
(சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே )
இப்படி பகவத் விஷயத்தில் ப்ரேமத்தாலே பிரிய அவசரம் இல்லாமை –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை –

விடுகை யாவது -அல்லது –
ஆலஸ்யத்தாலே(சோம்பலால் ) விடுமது விடுகை என்று –
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும் படியே –

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் தொழில் எனக்கு -நான்முகன் திருவந்தாதி–85–

ஸ்வாசார்யன் தனக்கும்
ஸ்வ சந்தானத்துக்கும்
பகவத் குணாநுபவம் பண்ணுவிக்க வில்லை என்று-வியசனப் பட்டு –

கனைத்தல் – குமுறுதல்;
இடைவீடின்றித் தானஞ் செய்தலையே தொழிலாக வுடைய உதார சிகாமணிகள் ஒரு கணப் பொழுது கொடாதொழியில் மனந்தளும்புமாறு போலவும்,
எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாதொழியில்
“ருணம் ப்ரவ் ருத்தமிவ மே ஹ்ருதயாந்நாபஸர்ப்பதி” என்று திருவுள்ளந் தளும்புமாறு போலவும்,
பசுக்கள் கிரமமான காலத்திற் கறக்கப் பெறாதொழியில் முலைக் கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பென்க.

————

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே-பாடாற்றாமை –

இளம் கற்று எருமை
இளம் கன்றான எருமை என்னுதல்-
இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –
இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி

கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே-(7-1) என்னக் கடவது இறே
(அங்கு கன்று தாயை உள்ளினது
இங்கு எருமை கன்றை உள்ளினது )

பால சந்தானமுடைய சிஷ்யர் –

————-

கன்றுக்கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால்-அவை படும் பாட்டை-
நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை

கன்றுக்கிரங்கி
தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று
அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –

அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை –
நாங்கள் உன் வாசலிலே வந்து நின்று புகுரப் பெறாமையாலே படா நின்றோம்

எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

(பசுப்பால் சரியான தமிழ் -பசும்பால் என்றால் பச்சைப்பால் அல்ல
கீழே கறைவைகள் முத்திறமும் -இங்கு எருமை -இவன் பசுக்களைக் கறந்து -அதுவே பகவத் திருமஞ்சனம் உபயோகி- பாகவத கைங்கர்யம் பண்ணிய பின்பு பகவத் கைங்கர்யம் செய்து -பின்பே நித்ய கர்மாநுஷ்டானம் என்றபடி -)

——————

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர –
நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே
பால் மாறாதே சொரிகை

இவன் எருமை கறவாமை ஒழிவது என் என்னில்
இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில்
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே-
பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-

நினைத்து
மனஸா சிந்த யத்தரிம் -என்று (கஜேந்திரன்)நினைத்த அநந்தரம் –
த்வராயை நம -என்னும் படி திரு உள்ளம் அங்கே ப்ரவணம் ஆனால் போலே
(கஜேந்திர வரதன் நிலை போல் அன்றோ இந்த எருமை பாடு )

நினைத்து முலை வழியே நின்று பால் சோர–
கன்றை அகல கட்டி வைப்பார்கள் -அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே –
கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு
கை வழியும் அன்றிக்கே –
கன்றின் வாய் வழியும் அன்றிக்கே
முலை வழியே பால் சொரியா நிற்கும் –

ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு
ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –

நினைத்து
கன்றை நினைத்து பாவனா ப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாய்க் கொண்டு பால் சொரியா நிற்கும்–நினைவு மாறில் இறே பால் சொரிவது மாறும்

—-

நின்று பால் சோர
மேகங்களுக்கு கடலிலே புக்கு முகந்து கொண்டு வர்ஷிக்க வேணும் —
அவ் வருத்தமும் இவற்றுக்கு இல்லை –
நினைவு ஊற்றாக சொரிகிற பால் ஆகையால் –
(அவன் சங்கல்பத்தாலே அனைத்துமே பண்ணுமா போல் )
நினைவு மாறாமையாலே –
திரு மலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே செல்லும்

பால் சோர-
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே –
அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போலே

(பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா-ஸ்ரீ பகவத்கீதை–10-1-

ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந்தோளுடையாய்,
ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான,
தே அஹம்-உனக்கு நான்,
ஹிதகாம்யயா-உன் நலம் கருதி,
யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ,
மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை,
ஸ்ருணு-கேள்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்;
நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே )

முலை வழியே
கன்றின் வாய் வழியாதல் -கறக்கிறார் கை வழியாதல் அன்றிக்கே முலை வழியே

நின்று பால் சோர
கேட்பார் அன்றியே இருக்க -ஆற்றாமையால்-விம்மலாலே- பகவத் குணங்களைச் சொல்லுவாரைப் போலே –
மேகத்துக்கு கடலிலே முகந்து கொண்டு வர வேணும் –இவற்றுக்கு வேண்டா –

(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் தான் இந்த சிறப்பு உள்ளது)

பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக
பகவத் குணங்கள் சுரக்க –

“பகவத் விஷயப் பொருள் கூற வேணும்” என்று ஒருவர் கேளாதொழியினும் கற்றுணர்ந்த ரஸிகர்
தமது செல்லாமையாலே தாமே பகவத் விஷயார்த்தங்களை எடுத்துரைக்குமாறு போலவும்,

அர்ஜுநன் கேளாதேயிருக்கக் கண்ணபிரான் கீதையில்
“பூய ஏவ மஹா பாஹோ! ஸ்ருணு மே பரமம் வச:” என்று கூறத்தொடங்கினாற்போலவு மாயிற்றுக் கறவைகளின்படி.

—————-

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் -அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால்-
சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை

நனைத்தில்லம் சேறாக்கும்
பால் வெள்ளம் இருக்கையாலும் –
எருமைகள் துகைக்கையாலும் சேறாய்க் கிடக்கும்-

இல்லம் சேறாக்கும்-
எத்தனையேனும் ஏறிப் பாயாதே மேடும் பால் வெள்ளத்தால் சேறான படி
கடலை அகழ் செய்து கொண்டு கிடந்தால்-
ஓடம் ஏறிப் புகுதல் –
சேற்றுக்கு அளற்றுப் பொடி இட்டுப் புகுதல் செய்ய வேண்டும் படி இருக்கை –

ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை
சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

(மேல் பனி வெள்ளம்
கீழே பால் வெள்ளம்
நடுவில் மால் வெள்ளம்
உபய காவேரி வெள்ளம் -குண வெள்ளம் மூன்றையும் தவிர
பெரிய பெருமாள் திருக் கண்கள் கருணை வெள்ளம் தடுமாறாமல் இருக்கவே திரு மணத் தூண்கள்-இவர்கள் இவளது வாசல் கடை பற்றி -பாகவதர் பற்றி உஜ்ஜீவனம் நிச்சயம் அன்றோ )

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியால் அகம் வெள்ளமிடும்-அவற்றின் காலிலே துகை யுண்டு சேறாகும்-சேறாய் புகுர ஒண்கிறது இல்லை என்ன
அளற்றுப் பொடியிட்டுப் புகுருங்கோள் -அவ்வளவு இன்றிக்கே மேலே மேலே வெள்ளம் இட்டதாகில் ஓடம் ஏறிப் புகுருங்கோள் –

——————-

நற்செல்வன் –
தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –
அதாகிறது –
கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-
லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-
கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

லஷ்மி சம்பன்ன -என்றது
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி
தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

நற் செல்வன்-
கர்மத்தாலே யாதல் –
தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்
பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே
அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சம்பத் இறே
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

நதேவ லோகாக்ரமணம் -என்னும் படியே
ப்ராப்ய விரோதிகளில் நசை அற்ற படியால் தோற்றி மாயும் சம்பத் அன்றியிலே இருக்கை –

லஷ்மீ சம்பன்ன –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ
விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –
இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –

நற் செல்வன்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து

சம்பன்ன -(அனந்தம் பிரதம யுகம் தோறும் உண்டே )
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -(6-7)
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவஸ்ரீ யாலே
ஜகத்துக்கள் அடைய வைஷ்ணவத்வம் உண்டாம் படி இருக்கை –

(ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குரு கூர்ச் சட கோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11)

சவ்மித்ரே புங்ஷ்வ போகாம் சத்வம் –யத் விநா பரதம் த்வாம் சத்ருக்நம் சாபி மாநந-(உங்களை விட்டு நான் இல்லையே பெருமாள் )ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய-

————

தங்காய்-
குணத்துக்கு தமையனில்-தன்னேற்றமுடையவள் -என்கை –

தங்காய்-
உங்களுக்கு ரஷ்ய வர்க்கத்தை நோக்காமை ஜென்ம சித்தம் இறே

நற் செல்வன் தங்காய் –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்று
தமையனுடைய தண்மை சொல்ல வேண்டாத ஏற்றம் உண்டு இறே உனக்கு

ஸ்ரீ விபீஷண ஆழ்வானிலும்
அவன் மகளான த்ரிஜடை
பிராட்டிக்கு அடிமை செய்தது போலே
கிருஷ்ணனை நோக்கின தமையினில் காட்டிலும் எங்களை நோக்க வேண்டாவோ
கிருஷ்ணன் ரஷ்யமான போதே நாங்களும் அந்தர் பூதைகள் அன்றோ –

தங்காய்
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்னுமா போலே
குண ஹானிக்கு ராவணனைப் போலே குணத்துக்கு அவனில் இவளுக்குத் தன்னேற்றம்-
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு மகளான த்ரிஜடை போலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் இல்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டு இறே இவளுக்கு –
அப்படியே இங்கு தமையன் கிருஷ்ணனுக்கு துணையாக திரிய இவள் நப்பின்னைப் பிராட்டிக்கு அடிமை செய்யப் பிறந்தவள்-

(ஸ்ரத்தா பக்தி பெண்பால் சொற்கள் ஸமஸ்க்ருதம் -இவர்களுக்கு பள்ளமடை அவன் கிருபா ஸமுத்ரத்துக்கு -நற்செல்வன் தங்காய் ஆண்டாள் போல் இருக்க வேண்டுமே -)

—————

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட –
கீழ் பால் வெள்ளம் இட –
நடுவு மால் வெள்ளம் இட
நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில்
தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –

இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்
என்று பேசாதே கிடக்க-

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
ஆழி மழைக் கண்ணனில் வர்ஷிக்க நியமிக்கையாலே-மேல் வர்ஷமாக-
கீழ் பால் வெள்ளம் இட நின்று அலைகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே தண்டியத்தைப் பற்றிக் கொண்டு நின்றோம் –

ப்ராப்ய பூமியில் ஐஸ்வர்யம் இங்கே கை புகுரச் செய்தே
அவ் வருகே போகத் தேடுகிறது எங்களுடைய அபி நிவேச அதிசயம் இறே
ஈஸ்வரன் அபிநிவேசம் அறிந்து –
விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு (1-6-5 )தன்னைக் கொடுக்குமா போலே
இவர்கள் அபி நிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடக்க
அவள் நினைவு அறியாதே தங்கள் செல்லாமையாலே சொல்லுகிறார்கள்-

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —-திருவாய்மொழி-1-6-5-

பனியானது தலை மேல் சொரிய-
அதாவது-
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற
ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –

நின் வாசற்கடை பற்றிச்-
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்-
பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –

பனித் தலை வீழ
மேலே பனி வெள்ளம் -கீழே பால் வெள்ளம் இட நடு மால் வெள்ளம் இட நின்று அலைந்து –

(மாயோனை மணத் தூணைப் பற்றி நின்று-கருணா ப்ரவாஹம் சிக்கி விழாமல் இருக்க மரக்கலம் போல் )

நின் வாசற்கடை பற்றிச்
மேலப் படியையும் தண்டியத்தைப் பற்றி நாலா (தொங்கி )நின்றோம் –
இத் தர்ம ஹானியை அறிகிறிலை-என்கிறார்கள் –(தண்டியம் பந்தல் கால் நிற்க வைக்கும் நீண்ட மரம் )

இவர்கள் படும் அலமாப்புக் காண்போம் -என்று பேசாதே கிடக்க –
தீரா மாற்றமாக நெஞ்சாரல் பண்ணி முகம் காட்டாத கிருஷ்ணன் என்றால்(கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் )
பெண்கள் சிவிட் க்கென்று இதொரு பித்து என்பார்கள் என்று பார்த்து
கிருஷ்ணனால் பட்ட நெஞ்சாரல் அடையத் தீர்ந்து நெஞ்சுள் குளிரும்படி பெண் பிறந்தார்க்கு தஞ்சமான
சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுவோம் -இவர்கள் எழுந்திருக்க என்கிறார்கள் –

இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே
த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற
நகாரத்தைப் பற்றி என்றபடி –

(பெரிய பெருமாள் ஸூகந்தமே வடிவாகா இருக்கும் திருமணத் தூணைப்பற்றி அரங்கனின் தயா வெள்ளத்தில் தப்பிக்க நின்றால் போல்-)

————

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய
பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை
சொல்லுகிறார்கள் –

சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்
அவர் அழுத போது கூட அழுதார் இறே –

சினத்தினால்
பெண்களுக்காகில் சேர்க்கைப் பல்லி போலே கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுகை பணி இறே
அதவா கிம் ததா லாபை-என்று
பெண்களை தீரா மாற்றமாக நெஞ்சாரல் படும் படி பண்ணுமத்தை நினைத்து கிடக்கிறாள்

உண்ணாது உறங்காது –
அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று
பெண்களைப் பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே
பெண் பிறந்தார்க்கு தஞ்சமான சக்கரவர்த்தி திருமகனைச் சொல்லுவோம் இவள் எழுந்து இருக்கைக்காக என்று
ராம விருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –

உண்ணாது உறங்காது* ஒலிகடலை ஊடறுத்துப்*
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்*
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்*
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே*

விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –
ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

தண்ணீர் போலே இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சினம் உண்டோ என்னில் –
தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –
திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –

ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வசமே இவான்

ததோ ராமோ மஹா தேஜோ -திருவடி மேல் அம்பு பட்ட அநந்தரம்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே பெருமாள் அநபிபவ நீயரானார்

ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா -தான் பருவம் நிரம்பாத காலத்தில் பண்ணிக் கொண்டது அன்றிக்கே
தரம் அல்லாத ராவணனால் நோவு படக் கண்டவாறே

ப்லவக சார்த்தூலம் -திருவடி தன் மேல் அம்பு படப் பட
வர்ஷம் காணப் பணைக்கும் பதார்த்தங்கள் போல்
மேநாணித்து கொடுத்தான் –

கோபஸ்ய வசமே இவான்-திருவடி -தரம் அல்லாத ராவணன் கையிலே புண் பட்டவாறே

க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்

ஆஸ்ரித கார்யம் என்றும் தம் கார்யம் என்றும் இரண்டு அன்று –
மஹா ராஜர் சீற்றம் பிறந்து வாலியைக் கொல்ல வேணும் என்ற போது எய்தார்
அவனுக்கு ஸவ்ப்ராத்ரம் பின்னாட்டி கண்ண நீர் பாய்ந்த வாறே தாமும் கூட அழுதார் –

சினத்தினால் மனத்துக்கு இனியான் –
அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று

(தன்வீ மன்வா -அந்த வில் கையினானாவன் கோபத்துக்கு நமஸ்காரம் பல்லாண்டு -வேதங்களும் கோஷிக்கும்)

சினத்தினால்
ஆஸ்ரிதர் கார்யம் செய்யாதானாய் இரான் கிருஷ்ணனைப் போலே -இவன் தன் கார்யம் தானாய் இருக்கும் –

(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப் புரக்காரியமும் செய்வார் பெருமாள் ) தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

த்விஷ தன்னம் ந போக்த்வயம் –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே தனக்கு சத்ருக்கள் –
பகவத் அபசாரம் பாகவத அபசாரம் என்று இரண்டு இல்லை போலே இருந்தது(மம பிராணா பாண்டவ -) மம பக்த பக்தேஷூ ப்ரீதிரப் லத்திகா ந்ருப -என்று ஆஸ்ரிதற்கு நல்லவர்கள் தனக்கு நல்லவர்கள் என்று இருக்கும்(அருள் பெறுவார் அடியாருக்கு அருள் ஸ்ரேஷ்டம்)
மஹா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் -அவர் அழுத போது கூட அழுதார்
சஞ்ஜாத பாஷ்ப(அடியார் அழ இவரும் அழுகிறார் )

————–

தென்னிலங்கை கோமானைச்
திருவடி மதித்த ஐஸ்வர்யத்தை உடையவனை –

செற்ற –
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே
படையைக் கொன்று
தேரை அழித்து
ஆயுதங்களை முறித்து
தான் போலும் -இத்யாதி -கோன் போலும் என்று எழுந்து
கிளர்ந்து வந்த
மானத்தை அழித்து
நெஞ்சாரல் பண்ணிக் கொன்ற படி –

தென்னிலங்கை
பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –
அத் திக்குக்கும் அஸஹ்யமான படி

தென்னிலங்கை கோமானைச் செற்ற
யத் யதர்மோ ந பலவான்-என்றும் –
அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே

ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
படையைக் கொன்று –
புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து
ஆயுதங்களை முறித்து –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-
பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

மனம் ராவணன்- விவேகம் சரம் -பத்து தலை பத்து இந்திரியங்கள்

யோ வஜ்ரா பாத அசனி சந்நிபா தான் நசு ஷூ பே நாபி சசால ராஜா -ச ராம பாணாபிஹதோட் ரு சார்த்தச்-
சசால சாபஞ்ச முமோச வீர மாதங்க இவசிம் ஹேந கருடே நேவ பன்னக
அபிபூதோ பவத் ராஜா ராகவேண மஹாத்மனா -கச்சா நுஜானா மிரனார்த்தித்த ஸ் த்வம் பிரவிசய ராத்ரிஞ்ச ரராஜா லங்காம்
ஆசுவாஸ்ய நிர்யாஹிர தீச தன்வீத தா பலம் த் ரக்ஷ யசி மே ரதஸ்த

(சசால சாபஞ்ச முமோச வீர-ராமன் முன் கதி அற்று வில் இல்லாமல் வெறும் கையாக இருந்தால் வீரன்
சிங்கம் யானை -கருடன் பாம்பு போல்
இன்று போய் நாளை வா )

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –
கோபத்தினாலே
யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான
அஹங்காரத்தை நசிப்பித்து
அத ஏவ மனத்துக்கு இனியானை –
சக்கரவர்த்தி திருமகனை –

அவன் செய்த அநீதியை நினைத்து -பறைச் சேரி என்பாரைப் போலே-
அத் திக்கும் காண வேண்டாதே இருக்கிற படி
ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி
கொலைக் காரன் இருக்கிற இடம் இறே

கோமானை
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதயம் ராஷேஸ்வர ஸ்யாதயம் ஸூரா லோகஸ்ய
ச சக்ரஸ் யாபி ரக்ஷிதா -என்று திருவடி மதித்த ஐஸ்வர்யம்

செற்ற
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே–மொட்டும் நெம்பும் பாறும் கலங்கும் படி –
தேரைத் தள்ளி –வில்லை முறித்து -படையைக் கொன்று -ஆயுதங்களை அறுத்து –
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் -என்று கிளர்ந்து எழுந்த அபிமானத்தையும் அழித்து-நெஞ்சாரல் படுத்தி
கச்சா நுஜா நாமி என்கிறபடியே படையைச் சிரைத்து விட்ட படியான எளிவரவு மூதலிக்கைக்கு
ஆள் இல்லையாம் என்று கொல்லாதே விட்டார் –

மாதங்க இவ -(ஸிம்ஹம் யானையைப் பிடித்தால் போல் நன்கு பரிபவப்பட்டு )
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசா நாம் என்று – தஸ்யாபி சங்க்ரம்ய ரதம் ச சக்ரம் சாச்வத்வஜச்ச தர மஹா பதாகம்-
ச சாரதிம் சாஸ நி ஸூல கட்கம் ராம பிரசிச்சேத சரைஸ் ஸூ புங்கை
ச ஏவ முக்தோ ஹத தர்ப்பை ஹர்ஷ நிக்ருத்த சாப நிஹாதாஸ்வ ஸூத சரார்த்தித க்ருத்த மஹா கிரீட விவேச லிங்கம் ஸஹஸா ச ராஜா –

——————-

மனத்துக் கினியானைப் –
வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக
பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே
ஏகதார வ்ரதனாய் இருக்கை –

பெண்களை ஓடி எறிந்து துடிக்க விட்டு வைத்து
பின் இரக்கமும் இன்றிக்கே இருக்கும்
கிருஷ்ணனை ஒழிய
சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாயுமவனை என்றுமாம் –

மனத்துக் கினியானைப்
அர்த்திகள் ஒருத்தன் பக்கல் பெறா விட்டால் –
சொல்லாய் சீமான் என்னுமா போலே பெண்களை ஓடி இருந்து துடிக்க இட்டு வைத்து
பின் இரக்கம் இன்றிக்கே துடிப்பைக் கண்டு இத்தனை கண்ண நீரும் விழ விடாதே
படு குலை படிக்கும் தீம்பனான கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே

ரீபூணாம் அபி வத்சலனாய் சத்ருக்களுக்கும் கூட கண்ண நீரை விழா விடுபவனை அன்றோ பாடுகிறது

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு
இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக
சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

உயிர்க்கு அது காலன் என்று* உம்மை யான் இரந்தேற்கு நீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்*
தயிர்ப் பழஞ்சோற்றொடு* பால் அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்* பண்பு உடையீரே! –9-5-8-

வேம்பேயாக வளர்த்தாள்-என்று
பெற்ற தாயையும் குற்றம் சொல்லும் படி இறே இவன் படி
கௌசல்யா லோக பார்த்தாராம் -என்று
பெற்றவளையும் கொண்டாடும் படி இறே அவன் படி –

வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே–நாச்சியார்

மனத்துக் கினியானைப்
வேண்டிற்றுப் பெறா விட்டால் -சொல்லாய் சீமானே-என்னுமா போலே
வேம்பேயாக வளர்த்தாள்-என்னும் கிருஷ்ணன் அல்லவே –
பெண்களைக் கொன்று துடிக்க விட்டு வைத்துத் துளி கண்ண நீரும் விழ விடாதே நிற்கும் கிருஷ்ணனை ஒழிய
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்

கண்ணபிரான் பெண்களைப் படுத்தும்பாடுகளை நினைத்தால்
“வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே” என்னும்படியிருத்தலால்,
அவன் மனத்துக்கு இனியனல்லன் போலும்.

————–

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு
பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை -ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

பாடவும் நீ வாய் திறவாய்
பிறர் அநர்த்தத்துக்காக நீ விசேஷஞஜை யாவதே –
எங்களுக்காக அன்றிக்கே
உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ

பாடவும் நீ வாய் திறவாய்
இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

வாய் திறவாய்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டாவோ -தங்கள் ஒருதலைப் பற்ற வேண்டி இருக்கிறார்கள் –
இனித் தான்
எங்களுக்காக உணரா விட்டால் உனக்காக உணரவும் ஆகாதோ
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே
அகம்பனன் சூர்ப்பணகை உள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன் பக்கலில் கண்டிலோமே

————

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ –
எழுந்திராய் –

இனித் தான் எழுந்திராய்
எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால்
உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –
எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே

இனித்தானெழுந்திராய் –
எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி;
மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.

——————–

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து
இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே
இருப்பதே உன்னுறக்கம் –

யீதென்ன பேருறக்கம்
வைதிகமும் இன்றிக்கே
லௌகீகமும் இன்றிக்கே இருபத்தொரு உறக்கம் உண்டாவதே –

பரார்த்தமாக
உலகு எல்லாம் நன்கு ஒடுங்க உறங்கும்
ஈஸ்வரன் உறக்கமும் இன்றிக்கே
தாபார்த்தராய்
தமோ குண அபிபூதராய் கிலேசம் போக உறங்கும்
சம்சாரிகள் படியும் இன்றிக்கே
இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ

பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவன் உடன் பழகி வைத்தும்
இங்கனம் உறங்குவதே

யீதென்ன பேருறக்கம்-
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே
சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம்
ஆகையாலே
பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
எம்பெருமான் பரார்த்தமாக உணரும்
சம்சாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள்
இது ஒரு படியும் அன்று -ஆர்த்தி கேட்டு உணராது ஒழிவதே

பையத் துயின்ற பரமன் –
பகவதஸ் த்வராயை நம -என்னும்படி ஆர்த்தி கேட்டால் அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்கனே கிடப்பதே

ஈதென்ன பேருறக்கம் –
உறக்கம் இருவகைப்படும் – லௌகிகமும் வைதிகமும்.
தமோ குணத்தின் பிராசுர்யத்தினால் உறங்குகின்ற ஸம்ஸாரிகளின் உறக்கம் – லௌகிகம்.
அனைத்துலகங்களினுடையவும் காவலைச் சிந்தனை செய்து கொண்டு உறங்குவான்
போல் யோகு செய்யும் எம்பெருமானுடைய நித்திரை வைதிகம்.
இவ்விரு வகையிலுஞ் சேராதே யிருப்பதொரு விலக்ஷண நித்திரையாயிராநின்றது உன் உறக்கம் என்கிறார்களென்
அக் குணங்கள் தானே உன்னை உறங்குகிறதோ

—————–

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில்
எல்லாரும் அறிந்தது –

அனைத்து இல்லத்தாரும்
பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –
அது எல்லாம் செய்தற்றது –

நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –
இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

———–

இனி எழுந்திராய்
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –
புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் –

எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்-

(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

இனித் தான் எழுந்திராய்-
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –

புறம்பு இதுக்கு ஆள் உண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து என்றுமாம்

எம்பெருமானார் அவதரித்தது போலே காணும் இப் பெண் பிள்ளையும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து –
நாங்கள் உன்னை எழுப்பு கிறது எல்லாரும் அறிய வேண்டும்
என்று இருந்தாய் ஆகில்
அது எல்லாரும் அறிந்தார்கள் -எழுந்திராய் என்கிறார்கள்
பகவத் விஷயம் ரகஸ்யம் என்று இருந்தாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தமாய்த்து -எழுந்திராய் -என்கிறார்கள் –

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று
ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப்பாட்டில் சொல்லாமையாலே
அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி
ஸ்வரூப விரோதம் என்கிறது

இவன் எருமை கறவாமைக்கு
இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து
உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு
தத் சாதன அனுஷ்டானத்தில்
அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே-

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
உன் வாசலிலே வந்து எழுப்ப நீ எழுந்திராதது ஒழிந்தாய்-என்கிற வேண்டற்பாடு (உனக்கு இருந்ததாகில் )எல்லாரும் அறியும்படி யாய்த்து-
அதுவும் செய்தது காண் -இனி உணராய் என்ன

கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாத ஊரிலே- பதினைந்து நாழிகையில் வந்து- எல்லாரும் கேட்க –
மனத்துக்கு இனியான் என்பது- கிருஷ்ணன் என்பது- எழுந்திராய் என்பதாய்க் கூப்பிட்டால் நம்மை என் சொல்வார்கள் என்ன

நீ நீ யாக நாங்கள் நாங்களாக வந்து போய் ப்ரஸித்தமாயிற்று -இனி அத்தை விடாய் என்கிறார்கள்
ரஹஸ்யமாக பகவத் விஷயம் அனுபவிக்கும் அத்தனை ஒழிய புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று இருக்கிறாயாகில்
நீ பிறந்த பின்பு இது ஒரு வ்யவஸ்தை யுண்டோ

எல்லாரும் உன்னைப் போலே யாம்படி அது போய் ப்ரஸித்தமாயிற்றுக் கிடாய் என்றுமாம்

எம்பெருமானார் திரு அவதரித்ததால் போலே காணும் இந்த நாச்சியார் திரு அவதரித்த பின்பு
எல்லாரும் பகவத் விஷயம் அறிந்தது –

“அனைத்தில்லத்தாருமறிந்து” என்பதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைக்கலாம்;
நீ பரஸம்ருத்தியையே பிரயோஜநமாகவுடையையாதலால், ‘இப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல்
அனைத்தில்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக்கிடக்கிறாயாகில்,
அங்ஙனமே அனைத்தில்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து;

பாடியிலுள்ள பெண்களெல்லாருந் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட,
நீ சிறிது பொழுது உணராமற் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறிய வேண்டுமென்று கிடக்கிறாயாகில்,
அங்ஙனும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து.
இவ்விரண்டினு ள் பின்னருரைத்த கருத்து சிறக்குமென்க.

———————

மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.

மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன் திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.

சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும்,
அநுஷ்டான பிரதராய் கர்ம யோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.

அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.

சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவ பரகாசன், யஞ்ஞ மூர்த்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.

இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.

————–

ஸ்வாபதேசம்)

ஏழாம் பாட்டில் –
நற் செல்வன் தங்காய் -என்கிறது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக -தம் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றும் –
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் –
கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு உதிருமாலோ -என்றும் -தம்முடைய பக்தியைப் பேசுகையாலும் –

கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் உற்ற திரு மாலைப் பாடுகையாலும் –

மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -என்று குன்று குடையாக எடுத்த படியைப் பேசுகையாலும்

கவள மால் யானை கொன்ற கண்ணனை என்கையாலும்

ஸ்ரீ மாலாகாரரைப் போலே செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்து சாற்ற-
அத்தால் வந்த கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய -பெரியாழ்வாருக்கு பிற்பாடராய்
அவர் கைங்கர்ய ஸ்ரீ யை அநு விதானம் பண்ணுகையாலே
அவருக்கு அநுஜர் என்னும் படியாய் –
திருப் பள்ளி உணர்த்துவதிலும் வந்தால் விஷ்ணு சித்த துளஸீ ப்ருத்யர் -என்று ஸஹ படிதர் ஆகையாலும்

நற் செல்வன் தங்காய் என்கிறது ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -என்கை –

இவரும்-இதிலே -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றத்தை –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-என்றும்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -என்றும் -அருளிச் செய்தார் இறே –

——————

பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளா நின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறு போல் வருங் கண்ண நீர் கொண்டு
அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ் வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும் போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப் பேசத் தொடங்கினவரென்பது இவ்வினை யெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூசகம்.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலை வழியே நின்று பால் சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினால் இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

———————

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

One Response to “ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கனைத்திளம் கற்று எருமை—”

  1. ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கனைத்திளம் கற்று எருமை— – renganaayagirengan Says:

    […] ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ… […]

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading