ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —கற்றுக் கறவைக் கணங்கள்—

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
எல்லாவற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-

ஸ்ரீ கிருஷ்ணன் ஊருக்காக ஒரு பிள்ளையாய் எல்லாராலும் கொண்டாட வளர்ந்தால் போலே –
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாய் –
பதி சம்யோக ஸூலபம் -என்னும் படி பருவத்தை உடையளாய்
அவனைப் பெறுகைக்கு நோற்பேன் நானோ
அவன் தானே வேணுமாகில் நோற்று வருகிறான் என்று
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

பதி சம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-

பதி அமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து – அம்
கோல் தேடி ஓடும் கொழுந்து – அதே போன்றதே ,
மால் தேடி ஓடும் மனம் ! இரண்டாம் திருவந்தாதி -27

இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு
மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்
விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம் )

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே
ஆபீஜாத்யம் உடையாளாய் ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
அரியதைச் செய்ய வல்ல குடியிலே பிறந்து வைத்து (பாகவத சமாஹம் கூடாமல் இருப்பதால் )அரியதைச் செய்யாதே கொள் -என்கிறார்கள்
எளியராக வேண்டும் இடத்திலே அரியராக ஒண்ணாதே -(கண்ணன் அஹம் வோ பாந்தவ ஜென்மம் என்று இருக்கும் போல் இல்லையே நீ )

(தந்தை மகள் ஆய்ப்பாடி கோபி போல் இறுதியில் தந்தை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் மூன்றும் உண்டே

குணக் கடல் கூட்டங்களையும் கூட எண்ண முடியாது போல் இங்குள்ள கற்றுக் கறவை கணங்கள் பல-

ஸ்வ பா விக –அஸங்கயேய குண கணவ் மஹார்ணவ் )

கண்ணபிரான் ஊருக்காக ஒரு பிள்ளையாய் அனைவராலுங் கொண்டாடப்பட்டு வளர்ந்தருளுமாறுபோல,
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாயிருப்பாளாய்,
கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவமுடையளாய்,
அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன்?
வேணுமாகில் அவன்றானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

அபிஜாதமும் ஆஹ்வாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிக்கும் படி சொல்கிறது –

பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

புலன்கள் பட்டி மேய்வதே தூக்கம் -ஐந்து பாசுரங்களால் அவற்றைத் திருப்பி அவன் இடம் செலுத்துகிறான்
அரவு -செவி -சஷுஸ் ஸ்ருதி
தங்காய் -மெய்
கண்ணினாய்
நா உடையாய்
இளம் கிளியே மூக்கு

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (ஸ்ரீ கோதா ஸ்துதி -1)-பொற் கொடியைக் கண்டு அருளிச் செய்கிறாள்

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

————–

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கற்றுக் கறவைக் –
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை –
இதுக்கு ஹேது
நித்ய ஸூரிகள் பகவத் ஸ்பர்சத்தாலே பஞ்ச விம்சதி வார்ஷிகராய்
இருக்குமா போலே
இப் பசுக்களும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கிப் பிராயம் புகுகை
பகவத் ஸ்பர்சம் இளகிப் பதிக்கப் பண்ணும் இறே –

கற்றுக் கறவைக்
கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய்
கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே
இவையும் இளகிப் பதித்து இருக்கும் –
அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே

முலை சரிந்தாரைப் பாராத ராஜ குமாரனைப் போலே
கன்று மேய்க்கப் பெற்றால்
பசுக்களை பாரான் –

கன்று மேய்த்து இனிது உகந்த —
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்று பசு மேய்த்து உகக்கும் –
கன்று மேய்த்து இனிது உகக்கும் –
ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்ட மாட்டாதவர்களை இறே உகப்பது –
கன்று மேய்க்கை ஒரு தலை யானால் பசுக்களும் நித்ய ஸூரிகள் ஸ்தானேயாம் அத்தனை 

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (திருநெடும் தாண்டகம் -2)

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே–திருவாய்

(ரோகிணி தோறும் ராஜ ராஜன் திருக்கோலம் மன்னார்குடி கோபால வேஷம் சேவிக்கலாம் )

காளாய்-
அவற்றை இளகிப் பதித்து அவற்றோடு சம்பந்தத்தால்
தானும் இளகிப் பதித்து இருக்கும் –
வத்ஸ மத்திய கதம் பாலம்-(கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும் )
(கன்றுகள் சூழ இருக்க பார்த்தார் அக்ரூரர் தேடிப் போனவர் )-என்னும் படியே –

கற்றுக் கறவை –
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று
சக்கரவர்த்தி இளகினால் போலே-(கன்று -கற்று -வலித்தல் விகாரம்

(சக்கரவர்த்திக்கு இளகிபிப் பதித்ததே
வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே–தேவ குமார ரூபம் என்று ரிஷி கரி பூசுகிறார் )

இவனுக்கு கண் அழிக்கலாம் படி
புக்க இடத்தே புக்கு
புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
இவனுக்கு முன்னோட்டுக் கொடுக்க வற்றாய்
இவனுக்கு ஒதுங்க நிழலாய் இறே இருப்பது –
இட்டமான பசுக்கள் இனிது மறித்து நீரூட்டி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–நாச்சியார்

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
(வா -முன் அழகு சேவித்து -போகு -பின் அழகு சேவித்து -இத்யாதி -வயஸ்ஸூ கீழ் நோக்கி போனால் போல்
கன்றுகளைப் பிரியாதே இருக்கும் கறவைகள் என்றுமாம் )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்–(திரு நெடும் தாண்டகம் -16-இவனும் கரியான் ஒரு காளை )என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி 10-3-10 -என்றும் –
(உகந்த -மாடுகள் இடம் -இனிது உகந்த இங்கு
பிரதமம்-நித்ய ஸூரிகள் ரக்ஷணம் மத்யமம்-பசுக்கள் ரக்ஷணம் சரமம் -கன்றுகள் ரக்ஷணம் )
நித்ய ஸூரிகளிலும் பசு மேய்க்க உகக்கும்

அவன் சரணாகத வத்சலன் ஆனால் (இவையும் )சரணாகத வத்சலமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா (நிழல் போல் பெருமாளைத் தொடர்ந்து போவது போல் இவனும் இவற்றின் பின் போவான் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போல் -( 7-1-1-)
சரணாகத வத்சலா (சீதா பிராட்டி ராவணனுக்கு உபதேசம் )
த்வயி கிஞ்சித் கிம் கார்யம் சீதையா மம (சுக்ரீவன் ராவணன் கிரீடம் பிடுங்கி வந்ததும் பெருமாள் வார்த்தை
(சுக்ரீவனுக்கு கொஞ்சம் அவமரியாதை கூட பொறுக்க ஒண்ணாதவன் -யுத்தம் -41-4–
எனது சரீரத்தாலும் பிரயோஜனம் இல்லை -வாத்சல்யம் )

கற்றுக் கறவைக் –
கன்று நாகுகள் நித்ய ஸூரிகளைப் போலே பஞ்ச விம்சதி வார்ஷிகமாய் இருக்கை-(பிஞ்சாய் பழுத்த அவளைப் போலவே )
அவர்கள் இப்படி இருக்கிறது எம்பெருமானை அனுபவித்து அன்றோ
கிருஷ்ணனுடைய ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கின வயஸ்ஸூ புகும் இத்தனை –
ஸ்பர்சத்தால் வந்த தன்னேற்றம் பார்த்துக் கொள்ளுவது –
திருவாய்ப்பாடியிலே கன்றுகளுக்கு வாசி தெரியாது -பசுக்களுக்கும் வாசி தெரியாது

கற்றுக் கறவை –
பவாமி த்ருஷ்ட்வா ச புனர் யுயேவா(தசரதன் வார்த்தை )
பிரணயத்துக்கு முலை பட்டார் ஆகாதாப் போலே ஆகாது என்கை –

(வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–)

கன்றுகளை ரஷிக்க வென்று வ்யவஸ்தை யுண்டோ என்னில்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-என்றும் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும் –
நித்ய ஸூரி களிலும் பசு மேய்க்க உகக்கும்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே! என்றும்
மன்றம் அர கூத்தாடி மகிழ்ந்தாய்! என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–16-

அவத்தங்கள்  விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

கன்று மேய்க்கப் போனால் பசுக்களும் நித்ய ஸூரிகளோடு ஓக்க தள்ளுண்ணும் அத்தனை
பசு மேய்க்க உகக்கும் –
கன்று மேய்க்க இனிது உகக்கும் –
அதாவது ஸ்வ ரக்ஷணத்திலே அந்வயம் இல்லாதவரை இனிது உகக்கும் என்றபடி

காளாய்
அவை இளகிப் பதிக்கத் தானும் இளகிப் பாதிக்கும்
யா பூர்வ்யாய வேதஸே நவீயசே ஸூமஜ் ஜாநயே விஷ்ணவே ததா சதி —
யோ ஜாநமஸ்ய மஹதோ மஹிப்ரவத் சேது ஸ்ரவோபிர் யுஜ்யம் சிதப் யசத் –

(பழைய -ஆனால் நவோ நவோ -விஷ்ணு -சித்ரை ரேவதியின் இருந்து வைகாசி ரேவடிஜிக்கே ஒரு வயசு குறையும்)

மைந்தனை மலராள் மணவாளனை

(நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.)

அவன் சரணாகத வத்சலன் ஆனால் சரணாகத வத்சலாமாம் இத்தனை இறே
யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்துவம் அநு கச்சேத்(ஸ்ரீ பாகவத மங்கள ஸ்லோகம் )
கறவாத மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-(7-1-நாகை -கன்று -அந்வயித்து-பட்டர் )
அபித்வா ஸூர நோநுமோ துக்தா இவ தேநவ

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

சரணாகத வத்சலா(சீதாபிராட்டி வாக்கியம் )
கன்று இடுகின்ற முன்னாள் கோ மூத்ரமாதல் சாணமாதல் புல்லிலே பதில் மோந்து பார்த்து காற்கடைக் கொள்ளும் –
பிற்றை நாள் கன்றிடில் அக்கன்று சாணத்திலும் கூ மூத்ரத்திலும் புரண்டாலும் அது தன்னையே போக்யமாகக் கொண்டு நக்கா நிற்கும்
முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலே சூடும்
த்வயி கிஞ்சித் சமா பன்ன கிம் கார்யம் சீதயா மம(சுக்ரீவன் இடம் பெருமாள் )
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி

(சீதாபிராட்டி -சுக்ரீவன் -விபீஷணன் -நாம் -அன்று ஈன்ற கன்று போல் நமக்கும்
சர்வ பூதேப்யோ-அனைத்தும் முன் ஈன்ற கன்று – ததாமி-நமக்கு)

(அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –ஞானசாரம் 25-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே – இராமானுச நூற்றந்தாதி –260 )

ராஜகுமாரன் முலை சரிந்த பெண்டிரைப் பாராதவாறு போலக் கண்ணபிரான் கன்றுகளை யன்றிப் பசுக்களைப் பெரும் பான்மையாகக் காணக் கடவனல்லனாதலால்,
இவன் தனது கர ஸ்பர்சத்தினாற் பசுக்களையுங் கன்றாக்கி யருள்வனென்க.

மூப்பு உன்னைச் சிந்திப்பாருக்கு இல்லை திருமாலே -கலியன்

———–

கணங்கள் பல –
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே
சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை
ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இறே
பசுக்களுக்கு தொகை உள்ளது –

கணங்கள் பல –
தனியே எண்ண முடியாமை அன்றிக்கே
சமூகங்களும் எண்ண முடியாது
ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்- என்னுமா போலே
பல என்னும் அத்தனை –

கணங்கள் பல
நாரா என்று -ஆத்ம சமூகங்கள் பல –
பஹு நாம் –
பற்பல்லாயிரம் உயிர் (3-2)-என்று ஆத்மாக்களுக்கு ஸங்க்யை யுண்டாகிலும்
பஹுவோன் ரூப கல்யாண குணான் புத்ரஸ்ய –(அயோத்யா வாசிகள் சக்கரவர்த்திக்கு சொன்ன வார்த்தை )
பாஹ்வோ துர்லபாச்சைவ –(நாரதர் வால்மீகி சம்வாதத்தில் )
எண்ணில் பல் குணங்கள்(பெரிய திருமொழி -5-7-2)-என்றும் சொல்கிற
பகவத் குணங்களுக்கு எல்லை உண்டாகிலும் இப் பசுக்களுக்கு எல்லை இல்லை

கணங்கள் பல
நம்முடைய அனாத்மா குணங்களுக்கும்
அவனுடைய ஞான சக்த்யாதி குணங்களும் –
(அசங்க்யேய நிஸ்ஸீம நிரவதிக நிரதிசய கல்யாண குண கணங்கள் )
நார சப்தத்தில் சொன்ன நாரங்களினுடைய சமூகமானாலும் எண்ணலாம்
இவை எண்ணப் போகாது –
ரத குஞ்ஜர வாஜிமாந் (தேர் யானை குதிரைப்படைகள் )-என்னுமா போலே

————

கறந்து –
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்
நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்
பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி
சம்ருத்தம் ஆகையாலே
முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –

பல கறந்து –
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை
அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும்
ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி
நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும்
பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் –
ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும்
ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –

ஸத் சந்தானரான சிஷ்யர்-அவர்கள் உடைய பலவான சமூகங்களை-
அவர்களுடைய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி-

அரியது செய்ய வல்ல குடியிலே பிறந்தோம் என்னா –
உன்னை அல்லது அறியாத எங்களுக்கு அரியையாக ஒண்ணாது காண் –

கணங்கள் பல –
நாரா என்னுமா போலே ஸமூஹங்கள் பல வென்னும் அத்தனை

பல
நார சப்தத்தில் நாரங்களினுடைய ஸமூஹங்களையும் –அஸங்கயாதமான பகவத் குணங்களையும்–
அவற்றையும் கூட வெல்லும்படி
மலிவான நம்முடைய அநாத்ம குணங்களையும் எண்ணிலும் எண்ணப் போகாது
சொல்லும் போது ரத குஞ்ஜர வாஜிமாந் -(சக்கரவர்த்திக்கு குதிரை யானை தேர்ப்படைகள் போல்)
என்றால் போலே பல வென்னும் அத்தனை
கழியாரும் கன சங்கம் இத்யாதி(திரு நறையூர் -சங்கங்களால் நடை பாவாடை )

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –

பல கறந்து-
ஈஸ்வரன் ஒருவனும் சர்வ ஆத்மாக்களுக்கு நியமனாதிகள் பண்ணுமா போலே
ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்ய வல்ல சாமர்த்தியம் –
(நித்யோ நித்யானாம் ஏகோ பஹுனாம் -இத்யாதி –
பர ப்ரஹ்மம் பரமாத்மா பரஞ்சோதி ஒருவனாய் செய்வது போல் )

——-

செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்
கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –

செற்றார்
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் –
சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று
ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே
நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –

பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் –
பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –

இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு –
தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி –
சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-

பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று
த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று
செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்

எம்பெருமானது மேன்மையைப் பொறாதார் எம்பெருமானடியார்க்குப் பகைவர்
எம்பெருமானடியாரின் மேன்மையைப் பொறாதார் எம்பெருமானுக்குப் பகைவர்.
இவ் விருவகைப் பகைமையுங் கம்ஸனுக்கு உண்டென்பது,
தீய புந்திக் கஞ்சனுன்மேற்சினமுடையன் என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும்,
சாது சனத்தை நலியுங்கஞ்சனை என்ற திருவாய்மொழியினாலும் விளங்கும்.

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம் ப்ராப்த(சத்ரு பக்ஷத்தில் இருந்து வந்ததால் இவனும் சத்ரு என்று சங்கை ) -என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

செற்றார்
சத்ரோஸ் சகாசாத் ஸம்ப்ராப்த -(சத்ருக்கள் பக்கல் வந்த விபீஷணன் -)என்ற அங்கதப் பெருமாளைப் போலே
இவ் வைஸ்வர்யம் காணப் பொறாதார் நமக்கு சத்ருக்களாய் இருக்கிற படி –

————

திறலழியச் –
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு
புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –

செற்றார் திறலழியச்
பஸ்மதாரியான ருத்ரன் –
ப்ராஹ்மணரைப் போலே ஒத்துச் சொல்லித் திரியும் ப்ரஹ்மா –
அப்சரஸ் ஸூக்களை மெய்க்காட்டுக் கொள்ளும் இந்திரன்
அந்நிய பரனாய்க் கொண்டு உறங்கும் ஈஸ்வரன் –
இவர்கள் அடங்கலும் நமக்கு எதிரோ-என்று இருக்கும் கம்சனுடைய மிடுக்கு அழிய –

செற்றார் உண்டு-உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்-
அவர்களுடைய திறல் உண்டு -ஸ்வார்த்த பரதை-அழிய-நசிக்கும்படி

திறலழியச்
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி எலும்பைப் பூண்டு திரியும் ருத்ரனும் –
ஒத்துப் போம் ப்ரஹ்மாவும்
அந்நிய பரனாய் இருக்கிற எம்பெருமானும்
சாது இந்திரனும் எனக்கு எதிரே என்று இருக்கும்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

திறலழியச்
கம்சாதிகளை மறுமுட்டுப் பெறாத படி கிழங்கு எடுக்கைக்கு மிடுக்குடையார்கள் இவ் ஊரார் என்கை

———-

சென்று செருச் செய்யும் –
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே
இருந்த இடங்களிலே சென்று பொருகை –
சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –
எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே
நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –
ராஜாக்கள் எதிரிகளைத் தோற்பிக்கும் படி வியாபாரித்தார்களே யாகிலும் அந்த புரத்தில் வந்தால் எளியராய் அன்றோ இருப்பது –

தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி-அவர்களோடு வர்த்திக்கிற

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபி யாதா ப்ரஹர்த்தா ச

சென்று
சக்ரவர்த்தித் திருமகனைப் போலே ஊராகச் சக்ரவர்த்தி திருமகனோடு ஒப்பார்கள் வீரத்துக்கு –

சென்று செருச் செய்கை எங்கே கண்டோம் என்னில் –
பசு மேய்க்கிறார் இரண்டு இடையர் (பெயர்களே சொல்லாமல் இடையர்கள் உடன் புரையறக் கலந்தார்களே )குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி
விளையாடா நின்றார்கள் என்று கண்டோம் இறே

————–

குற்றமொன்றில்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்

அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்

அவன் படி அறிந்து நடப்பவர்கள் –

குற்றம் ஓன்று இல்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குறை இல்லை –
2-எதிரிகள் கையில் ஆயுதத்தை பொகடக் கொன்றார்கள் என்னும் குறை இல்லை –

3-அழியச் செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால் –
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படி பிறந்தவர்கள்

குற்றம் ஓன்று இல்லாத கோவலர் –
அபிசேத் ஸூதுராசாரோ பஜதே மாம் அநந்ய பாக் –சாது ரேவ சமந்தவ்யஸ் சம்யக்வ்ய வசிதோ ஹிஸ (கீதை )-என்று இறே அவன் படி
நிர்த் தோஷம் வித்திதம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மன-(சாத்விக சம்ஹிதை )

பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –அவனே உபாய உபேயம் என்று-அத்யவசித்து இருப்பவர்களுக்கு

குற்றமொன்றில்லாத
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே
கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

குற்றமொன்றில்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –
2-கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரசிக்கிற குற்றம் இல்லை
3-இப்படி அழியச் செய்தார்கள் என்று எம்பெருமானுக்கு முறைப் பட்டால்
செய்தாரேல் நன்று செய்தார் என்னும்படி பிறந்தவர்கள் என்னவுமாம்

1-சாது ரேவ ச மந்தவ்ய-(கீதா ஸ்லோகம் )என்றும்
2-மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் -தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றும்
3-குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்-(முதல் திருவந்தாதி )என்றும் —

1-பகவத் அனுபவமே தேஹ யாத்ரையாய் இருப்பார்க்கு (உண்ணும் சோறு இத்யாதி)அநீதிக்குப் பெரு நிலை நிற்கும் –
2-வஸ்திர அன்ன பானாதிகளோடே ஓக்க பகவத் குணங்களும் கலசி தாரகமாய் இருப்பார்க்கு அநீதி பொறுக்கும்
3-அல்லாதார் அநீதி எம்பெருமானுக்கு அஸஹ்யமாய் இருக்கும்

நிர்தோஷம் வித்தி தம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மந
பகவத் விஷயத்தில் ஓரடி புகுர நிற்கை இறே ஒருவனுக்கு ஸூத்தி யாவது என்கை -(தீர்த்தன் -உலகு அளந்த திருவடி )

1-ஆஸ்ரிதருடைய தோஷத்தை கடலுக்குத் தொடுத்த அம்பை மிருகாந்தரத்திலே விட்டால் போலே அசல் பிளந்து ஏற்றல்
2-பகதத்தனுடைய அம்பை மார்விலே ஏற்றால் போலே தான் அனுபவித்தல் –
3-அது தன்னையே புண்யமாகக் கொள்ளுதல் செய்யுமவன்

குற்றம் ஓன்று இல்லாத
அத்தியைவ த்வாம் ஹ நிஷ்யாமி–(சுக்ரீவன் இடம் அபசாரம் வாலி-பாகவத அபசாரம் )

ஹந்யா மஹாம்யமாம் பாபாம்-(கைகேயி தாயைக் கூட கொல்லுவேன்-பரதன் -பகவத் அபசாரம் )என்று சொல்லுகிறபடியே
பகவத் பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை
அக்னீஷோமீய ஹிம்சை போலே பாராதே கொல்ல வல்லார்கள் -என்றுமாம்

(வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் போல் -செற்றார் திறல் அழியச் செற்றாலும் குற்றம் இல்லாதவர்கள்)

———

கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை –
பொற் கோடி தர்சநீயமாய் இருக்கையும்
பார்த்தா வாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இறே இருப்பது –

கோவலர் தம் பொற் கொடியே
சீதா தேவி ஜனகாநாம் குலே கீர்த்தி –ஊருக்காகாக ஒரு பெண் பிள்ளை என்கிறபடியே இவளும்
தர்சநீயமாய் உபகனத்தோடே சேர்க்க வேண்டிய படியான அவஸ்தை – கொள் கொம்பு
பதி சம்யோக ஸூ லபம் -(தந்தை கவலைக் கடலில் ஆழ்ந்தார் சீதா தேவி அனசூயை இடம் )
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் 10-10-3-
அவனை ஒழிந்தாலும் உங்களை ஒழிய நிற்க மாட்டேன் என்று சொல்லி வைத்தே
உபக்னத்தை விட நிற்க வல்லதோ கொடி
எங்களையும் கூட்டிக்கொண்டு கிருஷ்ணனை அனுபவிக்கப் பாராய்

ஸ்ப்ருஹணீயமான பொற்கொடி போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம்-
பக்தியை சொல்லி மேலே

கோவலர் தம் பொற் கொடியே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை
(கர்ம யோக நிஷ்டர் ஜனக மஹா ராஜர் போல் இந்த கோவலர்
ஞான யோகத்தால் ஜட பரதர் -பக்தி யோகத்தால் -பிரகலாதன் )

பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்
கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ –
எங்களோடு கூடி நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் (திருவாய் -10-10-3-)

கோவலர் தம் பொற் கொடியே
ஜனகாநாம் குல கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூதா -என்னுமா போலே
ஜனக ராஜன் திருமகள் போலே ஊருக்கு ஒரு பெண் பிள்ளை

பொற் கொடியே
தர்ச நீயமாய் இருக்கையும் கொள் கொம்பை ஒழிய ஜீவியாமையும்

கொடி தரையிலே கிடக்கலாமோ -ஒரு தாரகம் வேண்டாவோ -(கோல் தேடி ஓடும் கொழுந்து )
எங்களோடு-பெண்களோடு – கூடிக் கொண்டு நில்லாய் என்கை
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் -(10-10-3)

(கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-)

கோவலர் தம் பொற்கொடியே என்ற விளியினால்,
ஜநக ராஜன் திருமகள் ஜநகா நாம் குலே கீர்த்திமாரிஷ்யதி மேஸுதா என்றபடி
ஜநககுலத்திற்குப்புகழ் படைத்தாற்போல,
இவள் கோவலர் குடியை விளக்கஞ்செய்பவளென்பதும்,
ஒரு கொள் கொம்போடு அணைந்தன்றி நிற்கமாட்டாத கொடி போல
ஒரு கணவனோடு புணர்ந்தன்றித் தரிக்க மாட்டாதவளென்பதும் போதருமென்க.
இத்தால், எங்களோடு கூடி, உனக்கு; கொள் கொம்பான திருஷ்ணனைச் சேரப்பாராய் என உணர்த்தியவாறாமென்க.

குடந்தை என் கோவலன் -நம்மாழ்வார் -கோபாலனை கோவலன் -பொற் கொடி -ருக்மிணியின் தமிழ் –

———-

புற்றரவல்குல்-
தன்னிலத்தில் சர்ப்பம் போலே
ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்
பெண்களை ஆண்களாக்கும் அழகு இறே
அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை

இத்தனை சொல்லலாமோ என்னில் பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத் யஸ்தா பும்பாவம் மனசா யயு -(திரௌபதி தோழிகள் ஆணாக மனசால் அடைந்து பேச்சு)
என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே -(ஆடவர் பெண்மையை அளாவும் தோளினாய் )
ஆண்களை பெண்களாக்கும் இவள் பெண்களை ஆண்களாக்கும்

———–

புன மயிலே –
தன்னிலத்திலே மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அளகபாரத்தை உடையாளாகை-
பொற் கொடியே -என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று
மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் -கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
அனகபாரத்தை உடையளாய் இருக்கை

——–

புற்று அரவு அல்குல் புன மயிலே
புறம்பே புறப்பட்டு-தன்னிலத்திலே வர்த்திக்கும் சர்ப்பம் போலே -ஒளி படைத்த கழுத்தும்
சுருக்கமான இடையும் -ஊகித்தே இருப்பதை அறியும்படி
பும்பாவாம் மனஸா யயியு -பெண்கள் ஆணாகும் தன்மை
கம்பர் ஆண்கள் பெண்ணாக அவாவும் தோளினான் –
பாஞ்சாலியா –இடை பார்த்து மனசால் சஜாதீயைன பெண்களும் நாயக சமாதியால்
கண்டவர்கள் மனம் வழங்கும் –
பெண்களை ஆண்களாக ஆசைப்படும்படும் இவளது அல்குல்
தன்னிலத்தில் இருக்கும் மயில் தோகை போல் தலைக் குழல்
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
தோகை மா மயிலார்கள் –6-2-

பொற் கொடி சமுதாய சோபை -லாவண்யம்
புற்றரவல்குல்-அவயவ சோபை -சவுந்தர்யம்

புற்றரவல்குல் –
ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது

புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே-
வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக-
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே-
புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

புற்று அரவு அல்குல் –
புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதிபடைத்த உடம்புடைத்தாயிருக்கை யன்றியே
தன் இருப்பிடந் தன்னிலே கிடக்கும் அரவரசின் படமுங்கழுத்தும் போல
ஒளியையும் அகலத்தையுமுடைய நிதம்பத்தை யுடையவளே! என்றபடி.

புற்றரவல்குல்
வெய்யிலடியுண்டு புழுதி படைத்த அரவு போல் அன்றிக்கே
தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலே இருக்கை-

இத்தனை சொல்லலாமோ என்னில்
பெண்ணைப் பெண் சொல்லுகிறது அன்றோ
யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்ட வத்யஸ் தா பும்பாவம் மனசா யயு -என்று அவன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி -யானால் போலே
(ஆடவர் பெண்ணினை அளாவும் தோளினான் -இடை அழகு ஆசை சுருங்கி வைராக்யம் மிக்கு –
கண் -ஞானம் -முலை -பக்தி )

புன மயிலே
இது தன் நிலத்தில் நின்ற மயில் –
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல அனகபாரத்தை உடையளாய் இருக்கை
(அனகபாரம் குழல் -வாசனை -கந்தம் -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டை )

இவர்கள் தானும் பெண்டிராயிருக்கச் செய்தே இவளுடைய அல்குலை வருணித்தது நெஞ்சினால் ஆண்மை பூண்டமையாலென்க.
பெண்டிருமாண்மை வெஃகிப்பேதுறு முலையினாள் (சீவக சிந்தாமணி) என்றது காண்க.

இனி, கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய், (கம்பராமாயணம்.)
வராக வாமனனே அரங்காவட்ட நேமிவல வாராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ் செய்வேன் (திருவரங்கத்தந்தாதி.)
என்பவாதலால், ஆண் பெண்ணாகு மிடமு முண்டென்று உணர்க.

பும்ஸாம் த்ருஷ்டி சித்நாபஹாரிணம் என்று பெருமாள் ஆண்களையும் பெண்ணுடை உடுக்கப் பண்ணுமாபோலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் என்ற ஆறாயிரப்படி அருளிச்செயல் இங்கு அறியற்பாலது.

புற்றுக்குள்ளே யடங்கின பாம்பு போலே நுட்பமான இடையை யுடையவளே! என்னவுமாம்.

புற்று அரவு புன மயிலே உனக்கும் அடியார் குழாங்களுடன் உடன் கூடிய இருப்பது தன்னிலம் அழகு

—————

போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்-
நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –

போதராய்
எங்களை அவன் இடம் சேர்க்க வேண்டாம்
எங்களுக்குத் தாரகமாக நீ நடக்க நாங்கள் பின் பற்றி வர வேண்டுமே
இவளது ஆச்சாரம் பக்தி தானே உத்தேச்யம் இவர்களுக்கு
சோபயன் தண்டகாரண்யம் நீலமானது போல் நாங்கள் நிறக்கும் படி புறப்பட்டு
புனத்தை மயில் சிறப்பிக்குமா போல் இந்த ஸ்த்ரீதவத்தையும் -நம் கோஷ்ட்டியை நீயே சிறப்பிக்க வேண்டும்

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்கப் பண்ணாய் என்கை
(பெருமாள் நுழைந்ததும் ரிஷிகள் ஆனந்தப்பட்டால் போல் )

போதராய்
சோபயன் தாண்ட காரண்யம்-போலே எங்களை வந்து களிக்க-உள் தளிர்க்கப் பண்ணாய் என்கை –

போதராய்
உன்னுடைய அழகைக் காட்டி எங்களை உண்டாக்காய்

இத்தால் சொல்லிற்று ஆய்த்து பகவத் ஸ்பர்சம் உடையாருடைய
தேஹ குணத்தோடு
ஆத்ம குணத்தோடு வாசியற எல்லாம் ஆகர்ஷகமாய் இருக்கிறது என்கிறது –

—————

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது
இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே

நாம் புறப்பட எல்லக்காரும் வந்தீர்களோ என்ன
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து-
இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம்
இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய்
அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி
எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல்
நீயே பிரயோஜனம்

உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரான-பாகவதர் எல்லாரும் வந்து –

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன
உத்தரம் தீரமா ஸாத்ய (விபீஷணன் வந்து ஆகாசத்தில் நின்றால் போல் )-என்னும்படியே
எல்லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர் (பெரிய திருமொழி -10-8-5)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து -(நாச்சியார் )-என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு பிராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன
(அரங்கன் திரு முற்றம் போல்
நீணிலா முற்றம் போல் –
திருக்கோவலூர் இடைகழி முற்றம் போல் )

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்-முற்றம் புகுந்து-
நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்தி கோளோ-என்ன

உத்தரம் தீரமா ஸாத்ய -என்னும்படியே எல்-லாரும் வந்து பிராப்ய தேசமான உன் திரு முற்றத்தே வந்து புகுந்தது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றேர்(பெரிய திருமொழி 10-8)-என்றும்
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து(-நாச்சியார் திருமொழி 2) -என்றும்
சேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திரு முற்றம் சேஷ பூதைகளான எங்களுக்கு ப்ராப்யம் என்னச் சொல்ல வேணுமோ
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது  என்னோ –10-8-5-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-

———-

நின் முற்றம் புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –
இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் –
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே
சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன –

நின் முற்றம்
திரிபாதி விபூதியை விட விசாலம்

புகுந்து
ப்ராப்ய ஸ்தலத்தே புகுந்து
உத்தரம் தீரமாஸ்ய -ராமன் இருக்கும் இடம் விபீஷணன்

இவர்களுக்கு ப்ராப்யம் ஆனபடி என்
சிற்றில் கட்ட ஸங்கேதம் பேசி புகுந்த முற்றம் அன்றோ
முற்றத்தோடு புகுந்து முகம் காட்டி –சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -10-8-கலியன்
சேஷிக்கு ப்ராப்யமாகும் போது சேஷ பூதருக்கு சொல்ல வேண்டுமோ

பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –

முறுவல் செய்து
ஏக ரூபனாய் இருப்பவனையும் விகாரம் செய்ய வைக்கும் முற்றம்

முற்றும் புகுந்து செய்ய வேண்டியது என் என்ன
முகில் வண்ணன் பேர் பாட
மேகம் போல் பொழியும்
ச சர்வா நர்த்திநோ த்ருஷ்ட்வா —
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
முகில் வண்ணன் -நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –
நீ பாட

எனக்கே தன்னைத் தந்த -என்று உதார குணத்தையும் சொல்லி நீ பாட –
நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-
நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாடச் செய்தேயும்

————-

முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்
அவன் அழகிலும்
ஔதார்யத்திலும் ஈடுபட்டு
அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –

பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை
நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட –
நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற –
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட –
உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

முகில் வண்ணன் பேர் பாடச்
உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற
நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

(பெரிய பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் பெருமாள் மேல் ஈடுபட்டு இருக்கும் சீதாபிராட்டி போல்–புன்மயிலுக்கு அனுரூபம் முகில் வண்ணன்)

———-

சிற்றாதே பேசாதே
முகில் வண்ணன் என்றவாறே
அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்

சிற்றாதே -சிற்றுதல் -சிதறுதல் –
உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே
இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் போக்கியம் ஆகையாலே
இன்னாதாகிறார்கள்

சிற்றாதே பேசாதே
அவ்வடிவை நினைத்து அங்கங்களை பரிஸ்பந்திப்புதல் (புரண்டு படுத்தல் )
வார்த்தை பேசுதல் செய்யாதே கிடக்க –
இவள் சேஷ்டிதமும் வார்த்தையும்
கண்ணுக்கும் செவிக்கும் போக்யமாகையாலே
கண்ணையும் செவியையும் சேர பட்டினி கொள்ள வேணுமோ என்று இன்னாதாகிறார்கள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே-வார்த்தையும் சொல்லாதே –

சிற்றாதே
முகில் வண்ணன் என்றவாறே வடிவை நினைத்து விடாய் கெட பேசாதே கிடந்தாள்

சிற்றாதே பேசாதே
சேஷ்டியாதே -கண்ணையும் செவியையும் பட்டினி விடுவியா நின்றாய்

——–

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ
கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –
இல்லையாகில் –

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-
உன்னோடே கூடுவதே எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ –
உன்னுடைய உத்தேச்யம் நீ கூடு பூரித்து வைத்தால் எங்களுக்கு உத்தேச்யம் பெற வேண்டாவோ
இங்கு கூடு பூரித்து கிடக்கிறதோ என்ன

பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-
நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ –

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே–உன் கைங்கர்யம் -உனக்கு கூடு பூரித்து இருந்து என்றுமாம்

——–

எற்றுக்குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு
கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்

எற்றுக்குறங்கும் பொருள்-
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உள்ளு கூடு பூரித்த தில்லை யாகில் எங்கள் ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகிற இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இருக்கும் படி அழகிதாய் இருந்தது –
அவனைத் தனியே அனுபவிக்கை கைவல்ய மோஷத்தோடே ஒக்கும் அத்தனை –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்று இருக்க வேண்டாவோ –

(கேவலம் -ஓன்று மட்டும் -பாகவதர் இல்லாமல் பகவானையே அனுபவித்தாலும் கைவல்யம் போல் ஆகுமே )

எற்றுக்கு உறங்கும் பொருள்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே –
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
ஏதுக்காகக் கிடக்கிறாய் –

எற்றுக்கு உறங்கும் பொருள் –
அவனை உகப்பிக்கப் பார்த்தாய் ஆகில் அவன் உடையாரையும் உகப்பிக்க வேணும் காண்
ஸ்வ பிரயோஜனமாக கைங்கர்யத்தில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோமே உனக்கு

1-உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேணும்
2-அவனைப் பிரிந்த அன்று -வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கைக்கு நாங்கள் வேணும்
3-நீயும் அவனும் அனுபவியா நின்றால்–எடுத்துக் கை நீட்ட நாங்கள் வேணும் –

ஆன பின்பு எங்களை ஒழிய உனக்கு விரகு உண்டோ –

எற்றுக் குறங்கும் பொருள் –
உறங்கும் பொருள் எற்றுக்கு-
உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது –
எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா-சொல்லாய் -என்கிறார்கள் –

இப்பாட்டில்
ஜாதி உசிதமான தர்மத்தை-
சாதனா புத்தி அன்றிக்கே-
கைங்கர்ய புத்யா -அனுஷ்டித்தால்-குற்றம் இல்லை என்கிறது
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
அடியார்கள்  குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி

எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன

இல்லை யாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –

புனமயிலே! முகில் வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என இயைத்து,
மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டியிருக்க,
நீ இங்ஙனே கிடந்துறங்குவது என்றிய? என க்ஷேபிக்கின்றனரெனக் கருத்துக் கூறுக.

முகில் வண்ணன் அரங்கன் திரு முற்றத்து அடியவர் குழாங்களைக் கூடும் பரம புருஷார்த்தம் பெற்ற செல்வப் பெண்டாட்டி அன்றோ இவள்

————————————————

பொற் கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கான கூட்டு மாலடியார் மாட்டு.

——————–

(ஸ்வாபதேசம்)

ஆறாம் பாட்டில் –
கோவலர் தம் பொற் கொடியே-என்கிறது
பெரியாழ்வாரை -எங்கனே என்னில் –

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான இவளை போல கோவலப் பட்டம் தவிக்கும் படி
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினவர் ஆகையாலும்

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை -என்னும் படி –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் என்று தொடங்கி –
பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம் என்கிறபடி
ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அனுபவிக்கையாலும்

நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே -என்றும்
ஐய புழுதி -நல்லதோர் தாமரை -இவைகளில் திருத் தாயார் பேச்சாக பேசுகையாலும்

தழை களும் இத்யாதி அளவாய் கன்னிமார்கள் காமுற்ற மாற்றத்தைப் பேசுகையாலும்

இதிலே முகில் வண்ணன் -என்றத்தை —
விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை -என்கையாலும்

கோவலர் தம் பொற் கொடியே -என்கிறது பெரியாழ்வாரை –

—————————

பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல் தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading