ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —நோற்றுச் சுவர்க்கம் —

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
பெண்கள் எல்லாரும் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை அவன் தான் பட்டு
தண்ணீர் தண்ணீர் -என்னும்படி வீறு உடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(அருங்கலமே -நாயகக்கல் போலே என்றாதல்–நல்ல பெண் -என்றாதல் –
வேதனம் சாதனம் என்று இராதே-ஈஸ்வரனே சாதனம் என்று-
கிருஷ்ணன் அசல் திருமாளிகையாய்-நடுவிட்ட வாசல் ஆகையாலே-ஒரு போகியாக அனுபவிக்கிறாள் -என்றுமாம்-
புகுகின்ற -வர்த்தமானம் -கிருஷ்ண அனுபவம் கை புகுந்தவள் என்ற கருத்து-)

ஒரு கிடையிலே பல பிள்ளைகள் ஓதா நின்றால் –
ஒருவனுக்கு ஒத்துப் போய் சமர்த்தனும் ஆனால் அவனே
அவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகன் ஆமா போலே –

இவ்வூரில் பெண் பிள்ளைகள் எல்லாரிலும் கிருஷ்ண சம்ஸ்லேஷத்தில் விதக்தையாய்
எல்லாப் பெண்களையும் கிருஷ்ணன் படுத்துமத்தை கிருஷ்ணன் தன்னைப் படுத்துவாள் ஒருத்தியாய்
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் வீறுடையாள் ஒருத்தியாய் –
இவர்கள் தாழ்த்ததுக்கு அவளை இட்டு பொறுப்பிக்கும் படி அவன் பக்கலில் பேர் முகமுடையாளுமாய்
கிருஷ்ணன் திரு மாளிகைக்கு அசல் திரு மாளிகையுமாய்
நடுவு இடைச் சுவர் தள்ளி -தண்ணீர் துரும்பு -பிரதிபந்தகம் – பொகட்டு-ஒரு போகியாக தண்ணீர் துரும்பும் அற்று
ஒரு படுக்கையில் அவனும் தானுமாக எப்போதும் அனுபவிப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -என்னாதே-
ஏஷ ஹ்யேவ ஆநந்தயாதி -என்று
அவன் ஆனந்திப்பிக்க இருப்பாள் ஒருத்தி –

(ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்
தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ந பிபேதி கதாசனேதி தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய
“ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி” – ப்ரம்ஹத்தின் ஆனந்தத்தை உணர்ந்தவருக்கு பயம் ஏது?

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

(இந்த்ர லோகம் ஆளும் -ஸ்ரீ வைகுண்டம் போல் இங்கும் ஸ்வர்க்க சப்தம்

கிருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக
அனுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
(நித்ய விபூதிக்கு தானே கூட்டிச் செல்வான்
ஸித்த உபாயமே நமக்கு என்று -நாம் பற்றினோம் என்ற எண்ணமும் இல்லாதவள் )

தேக யாத்திரை வேறே ஆத்ம யாத்திரை வேறே -அறிந்து –
தேக யாத்திரையும் பெருமாளை சார்ந்தே ஆழ்வார்களுக்கு –
அவனாலே இதற்காகவும் நிர்வஹிக்கப்படுகிறோம் என்ற எண்ணமும் வேண்டுமே –
வாழ்க்கைப்பட்டாள் -என்றாலே இதுவே -ஆத்மாக்கள் அனைவரும் பெண் பிராயர் தானே -)

பகவத் குண வித்தரான பாசுரம் கேட்க்கையிலே அபேக்ஷிக்கும் படி சொல்கிறது –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

ஞானீ த்வாத்மைவ மே மதம்
அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

(கீழேயும் அனந்தல் -இங்கும் ஆற்ற அனந்தல் -வாழும் சோம்பர் -நிஸ் சிந்தையாய் -மார்பில் கை வைத்து உறங்குவது
ஆனந்தம் ப்ரஹ்மண வித்வான் -அறிந்து அடைகிறான் -ஸ்வ கத ஸ்வீ காரம்
ஏஷ ஹ்யேவா -ஆனந்தம் ஊட்டுகிறான் -நாம் அனுபவிக்கிறோம் -அவனே கைக்கொள்ள்ளும் பாசுரம் இது-
பரதன் குகன் போல் இரண்டும்
வந்து உன் மனம் புகுந்தேன் -திருக்கமல பாதம் வந்து போல் இது –
அடியார் குழாங்கள் உடன் கூட அன்றோ அனுபவித்தால் அன்றோ சிறக்கும் –
எம்பெருமானார் போல் அனைத்து உலகும் வாழ அன்றோ இருக்க வேண்டும்
பறை அந்தரங்க கைங்கர்யமாகிய புருஷார்த்தம் -புண்ணியனால்-கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் -உபாய உபேயம் இவனே -)

————

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-

வியாக்யானம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்-
வைகின பின்பும் எழுந்திராமையாலே-
அம்மே அழகியதாக நோற்று சுகம் பெறக் கோலினாய்-என்று-ஸ்தோபிக்கிறார்கள் -என்றுமாம்
நோற்க வேண்டாதபடி நோன்பின் பலம் கை புகுந்தவள் இறே இவள் என்றுமாம் –

நோற்று –
சித்த சாதனை யாகையாலே-உபாய அம்சத்தில் நிர்பரையாய் இருந்தாள் –
அவனுடைய ரஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
தன் சேஷத்வத்தை உணர்ந்தாலும் பிராப்தி இல்லை இறே-

எழுப்புகிறவர்களுக்கும் இது வன்றோ ஸ்வரூபம் என்னில்-
சித்த உபாய நிஷ்டருக்கு விளம்ப ஹேது இல்லாமையாலே
பிராப்யத்தில் த்வரையாலே பதறுகிறார்கள்-

சித்த உபாய நிஷ்டருக்கும் கர்ம ஞான பக்திகள் உண்டு-
இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்திலே அந்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்தில் அந்விதம்
பக்தி பிராப்ய ருசியிலே அந்விதம்

ஸ்வர்க்கம் புகுகின்ற –
சுகத்தை இடைவிடாதே அனுபவிக்கிற-இவர்களுக்கு கிருஷ்ண அனுபவம் இறே சுகம் –
சவர்க்க சப்தம் சுக வாசி

நோற்றுச்
கிருஷ்ணனைப் பிரிந்த போதே பிடித்துக் குளிப்பது நோற்பதாகா நிற்க –
இவள் படி பத்தொன்பதாம் பாஷையாய் இருப்பாள் ஒருத்தி
(செப்பு மொழி 18 உடையாள் -இல்லாத ஒன்றை 19 பாஷை)
ஓக்க நோற்கக் கடவோம் –
ஒக்கக் குளிக்கக் கடவோம் –
கிருஷனோடே ஓக்க அனுபவிக்கக் கடவோம் என்று சொல்லி
நோன்பின் பலம் கை புகுந்து
கிருஷ்ண அனுபவம் பண்ணிக் கரச்சல் அற்று கிடந்து
உறங்க அமையுமோ –

சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி –
சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்
யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-
ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —
க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –
செய்த வேள்வியர் -என்றும்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே–5-7-5-

பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
சித்த சாதனை யாகையாலே உபாயாம்சத்திலே நிர்ப்பரையாய் இருந்தாள்
சித்த சாதனராய் இருப்பிற்கு கர்த்தவ்யம் ஒன்றும் இன்றிக்கே ஒழிகிறபடி
எங்கனே என்னில் –

அவனுடைய ரக்ஷகத்வத்தை யுணர்ந்தால் தனக்கு யத்னம் பண்ணப் பிராப்தி இல்லை –
தன் சேஷத்வத்தை யுணர்ந்தாலும் பிராப்தி இல்லை –
விரோதி பிராபல்யத்தை யுணர்ந்தாலும் ஒன்றும் செய்ய பிராப்தி இல்லை –
இதர உபாயங்களுக்கும் அவன் பிரசாதம் வேண்டி இருக்கையாலே ஒன்றும் செய்யப் பிராப்தி இல்லை

ஆன பின்பு நாராயணனே என்று அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து வைத்து
விடிவாறே எழுந்து இருந்து குளிக்கக் கடவதோ என்று இருக்கிறாள்-

புறம்பு நின்று எழுப்புகிறவர்களுக்கும் இப்படி இருக்கை அன்றோ ஸ்வரூபம்
என்னில்
அவர்களுக்கு நினைவு உபாயம் என்னும் சப்தத்தை விஸ்வஸித்து இருக்கவோ –
உபேயத்துக்காக வன்றோ உபாய ஸ்வீகாரம் –
சித்த உபாய நிஷ்டருக்கும் ப்ராப்யத்தில் த்வரை இல்லை யாகில் சேதனன் இன்றிக்கே ஒழியும் அத்தனை என்று –
விளம்ப ஹேது இல்லாமையாலே ப்ராப்யத்தில் த்வரையால் பதறுகிறார்கள் –

(சம்பந்தம் உணர்ச்சி தோழி
உபாய துணிவு தாய் நாராயணனே நமக்கே பறை தருவான்
புருஷார்த்த நாராயணா-தலைவி பதற்றம் -இங்கு போற்றப் பறை தருவான் – பதற்றம் –
உபேயத்துக்காகவே தான் உபாயம் பற்றுகிறோம்
உபாயம் அவனே என்று இருந்தாலும் விளம்பம் பொறுக்க மாட்டாமல் பதற்றம் வருமே
அதுக்கும் மேல் உபேயம் நினைக்க பதற்றம் மிக்கு இருக்குமே )

சித்த உபாய நிஷ்டருக்கும் கர்மா ஞான பக்திகள் உண்டு –
இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்தில் அன்விதமாய் இருக்கும்-
ஞானம் ஸ்வரூபத்திலே அன்விதம்-
பக்தி ப்ராப்ய ருசியில் புகும் –

ஆன பின்பு
பிராப்யத்தில் த்வரை இல்லை யாகில்
அசித்தோடு ஒக்கும் அத்தனை என்கிறார்கள்

சுவர்க்கம் புகுகின்ற-
ஸூகத்தை விடாதே அனுபவிக்கிற -ஸ்வர்க்கம் -என்று ஸூகத்தைச் சொல்கிறது
சாஷாத் ஸூக சப்த வாச்யனாகையாலே கிருஷ்ணனை சுவர்க்கம் என்கிறது –

யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்னக் கடவது இறே
(நின் பிரிவினும் சுடுமோ காடு கம்பர் )

(பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றவனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டுடையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடென்றாள்

பரிவு இகந்த – இரக்கம் இல்லாத
பற்றில்லாது- விருப்பம் இல்லாது
ஒருவு கின்றவனை – போகிறவனை
ஊழி – அழிவு
அருக்கன் – சூரியன்
யாண்டுடையது – எத்தன்மையானது
ஈண்டு – இங்கு
பிரிவினும் சுடுமோ – உன் பிரிவை விட சுடுமோ
பெருங்காடென்றாள் – நீ போவதாகச் சொல்கிற பெருங்காடு!

பெரும் ஊழியில் சூரியன் சுடுவதா பிரச்சினை எனக் கேட்கிறாள் ஜானகி. நானும் வருவேன் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறாள்.)

(நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –ஞான சாரம் -2-)

ஆனந்த ரூபனாய் –
ஆனந்த குணகனாய்
ஆனந்தாவாஹனாய் இருக்கிற கிருஷ்ணனுடைய அனுபவம் இறே சாஷாத் ஸூகமாகிறது 
(ஸ்வரூபமும் ஆனந்தம் குணமும் ஆனந்தம் -இரண்டையும் கொண்டால் அத்வைதம் போகுமே )

புகுகின்ற-
(வர்த்தமானம் நிகழ் கால வினை )அனுபவத்தில் விச்சேதம் இல்லாமை சொல்லுகிறது –
உபாசன வேளையில் ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய அனுசந்தானத்தாலே வருவதொரு சாரஸ்யம் உண்டு –
அது தான் காதா சித்கம் ஆகையால் ஹேய சம்பந்தம் அற்று அவ்வருகே போனால்
அவிச்சின்னமாக அனுபவிப்பதொரு அனுபவம் உண்டு –
அது இங்கேயே கை புகுந்து இருக்கை

இவள் நோற்ற நோன்பாவது –
ஸித்த ஸதாந ஸ்வீகாரமென்க.
க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோயே தேஷாம் ராஜந்! ஸர்வ யஜ்ஞாஸ் ஸமாப்தாழூவிது- என்ற மஹாபாரதங்காண்க.

நோற்றுச் –
நோற்கக் கடவ நோன்பும் இவ் விரவிலே நோற்று நோன்பின் பலமான கிருஷ்ணனாகிற
ஸ்வர்க்கமும் உன் கை புகுந்தது ஆகாதே செல்லுகிறது
கிருஷ்ணன் தர்மம் சநாதநம் -என்னுமா போலே
ஆபாச தர்மங்கள் இவளுக்கு அஞ்சிக் கை விட்டது அத்தனை இறே
இவளுக்கு சாதனமான தர்மம் எம்பெருமானே இறே -(இவள் பரித்யஜிக்க வெண்டாதே ஸாஷாத் தர்மம் கை புகுந்தவள் )

(கிருஷ்ணனை அனுபவிக்கும் ஸூகம் என்று கூடச் சொல்லாமல் -கிருஷ்ணன் வேறே ஸூகம் வேறே என்று எண்ணாதவர்கள்

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ குணம் குணி வேறுபாடு இல்லையே)

சாதன அனுஷ்டானம் பண்ணாதே இவனே உபாயம் என்று அறுதியிட்டால் பலத்தில் அந்வயிக்கும் அத்தனை இறே
1-அவனுடைய ஸ்வரூபம் (ஸ்வாமித்வம் )உணர்ந்தார்க்கு யத்னம் பண்ண பிராப்தி இல்லை 
2-தன் ஸ்வரூபம் (பாரதந்தர்யம் )உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
3-விரோதிகளுடைய பாஹுல்யத்தை (இரு வல் வினைகள் ) உணர்ந்தாருக்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை-
4-ப்ராப்தியினுடைய சீர்மையை உணர்ந்தார்க்கும் யத்னம் பண்ண பிராப்தி இல்லை
5-இதர உபாயங்களுக்கும் அவனே வேண்டுகையாலே யத்னம் பண்ண பிராப்தி இல்லை என்று இருந்தாள்

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
1-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மா ஸூச
2-மாம் ஏகம் வ்ரஜ மா ஸூச
3-அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச)

விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா -(ஸர்வே வேதா  -யஜ்ஜம் ஹோம குண்டம்-எல்லாம் கண்ணனே -அறிந்தவன் அனைத்தையும் செய்தவன் ஆகிறான் )
செய்த வேள்வியர் –
யே ச வேத விதோ விப்ரா -கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –
யோ மாம் அபி ஜானாதி ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேந பாரத(கீதை )
க்ருத க்ருத்யா -ப்ரதீ ஷந்தே(மிருத்யுவை பிரியமனான அதிதியாக பார்ப்பான் -இதிஹாச சமுச்சயம் )
ரஷ்ய ரஷக பாவம் வியவசிதமானால் ஞானமே இறே வேண்டுவது

(எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-)

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில் –
நமக்கு நீரிலே புக்கு முழுக வேணுமோ -என்று இருக்கிறாள் இவள் -(நிர்ப் பரோ நிர் பயோஸ்மி )

இவர்களுக்கு உபாயம் என்கிற சப்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கலாமோ
உபேயத்துக்கு அன்றோ உபாயம் -சித்த உபாய நிஷ்டர்க்கு விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனர் என்று இருக்கிறார்கள் அல்லர் –

சித்த உபாய நிஷ்டர்க்கு கர்மம் கைங்கர்யத்தில் புக்குப் போம் –

ஞானம் ஸ்வரூபத்திலே புக்குப் போம் –
பக்தி ப்ராப்ய ருசியில் புக்குப் போம்

பேசாதே இருக்க உபாயம் உண்டோ –
சிலர் முழுகி நோற்கவும் சிலர் பலம் அனுபவிப்பதாயேயாய் இருப்பது –
அழகியதாய் இருந்தது உன்படி -என்கிறார்கள்

அவர்கள் கிருஷ்ணனோடு பலம் புக்கு இருக்கிலும்
இக் கோஷ்ட்டியில் உள்ளார்க்குத் தனியே அனுபவிக்கை கைவல்யத்தோபாதி குடிப் பழி –

(குரு பரம்பரையை முன்னிட்டு சொல்லாத த்வயம் கூட மந்த்ராந்தங்களுக்கு சமம் ஆகுமே)

புருடன் மணி வரமாக -கௌஸ்துபம் -பரமாத்மா தானே ஜீவனை கூட்டிக் கொண்டு அனுபவிப்பான் அன்றோ )

நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் —
(ஸூந்தர –31-திருவடி பேச பிராட்டி மதுரம் வாக்கியம் என்றாளே -செவிக்கு இனிய செஞ்சொல் )
பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

நோற்று -நோற்காமலேயே விபரீத லக்ஷணை-இடைச்சுவர் -தாய்ச்சுவர் -பள்ளி அறைகளுக்கும் -நோற்காமலேயே கிருஷ்ண அனுபவம் –

————

அம்மனாய் –
ரஷகை ஆனவளே-
நீ ரஷகையாக-நாங்கள் உனக்கு குழைச் சரக்கு ஆனபடி அழகியதாய் இருந்ததே-

அவள் பேசாதே கிடப்பான் என் என்னில்
திருவடிவாரத்தில் பிராட்டி இருந்தாப் போலே
இவர்கள் பேச்சே அமையும் என்று கிடக்கிறாள் –
தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை அம்மனாய் என்பதே -என்று கிடக்கிறாள் ஆகவுமாம் 

வம்மனாய்
அழகிதாக இது திரளுக்கு ரஷகை யானாய் –
நீ ரக்ஷகை யாக நாங்கள் குழைச் சரக்கான படி என் —
எங்களை கிருஷ்ணனோடு அனுபவிப்பித்து –
அவ் வனுபவம் உன் முலையோடும் தோளொடும் அணைத்தால் போலே இருக்க வேண்டாவோ

1-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே
இவர்கள் பேச்சில் இனிமையாலும் –

2-ப்ரகர்ஷேண அவ்ருத்தாச என்று
இவர்களைக் கண்ட ஹர்ஷத்தாலே விக்கி வார்த்தை சொல்ல மாட்டாமையாலும்

3-தங்கள் அடியேனான என்னை –
தாய் -என்று பழி விடுவதே -என்று ஸ்வரூபத்தை அனுசந்திக்கையாலும்

4-இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணுகிறோம் என்று பழி இடா நின்றார்கள் –
இவ்வளவிலே ஓன்று சொல்லுவோமாகில் –
இவர்கள் சொன்னதுக்கு இசைந்து மதியாமல் உத்தரம் சொன்னோம் ஆவுதோம் என்று பேசாதே கிடந்தாள் –

இவள் நினைவு அறியாதே
தாங்கள் புறம்பே நின்று துவழுகிற துவட்சி பொறுக்க மாட்டாமையாலே

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்-
சித்த சாதனத்தை-பரிக்ரஹம் பண்ணி –ஸூக ரூபமான பிராப்யத்தை அனுபவிக்கிற –ஸ்வாமிநி யானவளே

“ப்ரஹர்ஷேணாவருத்தா ஸா வ்யஜஹார ந கிஞ்சந” என்றபடி ஒன்றும் பேசாதே திடுக்கிட்டுக் கிடந்தாற் போல,
இவளும் இவர்களது மதுரமான வாய் மொழியைக் கேட்டுப் பரமாநந்தத்திற்கப் பரவசப் பட்டிருந்தமையாலும்,
‘இவர்களுக்கு அடிச்சியாகிய என்னை இவர்கள், ‘தாயே!’ என்று விளித்துப் பழியிடுகின்றனரே’ என்ற உள் வெதுப்பினாலும்,
‘நாம் கிருஷ்ணாநுபவம் பண்ணுவதாக இவர்கள் பழியிடா நின்றார்கள்;
இத் தருணத்தில் நாம் இவர்கட்கு மறு மொழி கூறுதல் தகாது’ என்ற நினைவினாலும் அவள் பேசாதே கிடந்தாள்;

அம்மனாய் –
என்பதே -தங்கள் அடியேனாய் இருக்கிற என்னை –என்று பேசாதே இருந்தால் ஆகவுமாம்
ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -என்று ப்ரீதியாலே விக்கிப் பேசாதே இருக்கிறாள் ஆகவுமாம்-
(பாகவத சம்பந்தம் கிட்டிற்றே நமக்கு கிருஷ்ண அனுபவம் சித்தம் என்ற ஆனந்தம் ப்ரீதி மண்டுமே
இனிமை
குற்றம்
தலைவி என்பதே
இவர்கள் வாய்ந்ததே இப்படி நான்கு காரணங்கள் )
இவர்கள் பொறுக்க மாட்டாமை

அம்மனாய் –
ரஷ்ய ரஷக பாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது -அழகிதாக நிர்வாஹகையானாய்

(இதே போல் இது தான் பாகவதருக்கு இரண்டாவது முக்கிய கர்தவ்யம்)

சுவர்க்கம் புகுகின்ற
ஸூகம் அனுபவிக்கை -யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்க –(சீதாப்பிராட்டி பெருமாள் இடம் சுவர்க்கம் நரகம் விளக்கியது-கச்ச ராம மயா சஹா )
நிர்வாஹகையாய் இருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ
அனுபவிப்பார் அனுபவிப்பது இடையும் முலையும் ஒழியவோ-

(“யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா”
(உன்னுடன் கூடி யிருத்தல் – சுவர்க்கம்; உன்னைப் பிரிந்திருத்தல் – நரகம்) என்ற ஸ்ரீராமாயணம்)

இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் –பழி இடுவதே என்று பேசாதே கிடந்தாள் ஆகவுமாம் –

இவர்கள் பொறுக்க மாட்டாமை -பாடு ஆற்றாமை

————

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே –
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -என்கிறார்கள் –

வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ –
உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ –
மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது –

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-
என்கிறார்கள் –

வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ –
கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –
ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ-
படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –

மாற்றமும் தாராரோ-
உன் உடம்பைக் கிருஷ்ணனுக்கு கொடுத்தால்
எங்களுக்கு பேச்சாகிலும் தந்தால் ஆகாதோ –
கிருஷ்ணனை அருக்கினால் உன்னையும் அருக்க வேணுமோ

உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ
உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ

(திருக்கோளூருக்கு தனது ஜீவனம் தேடிப் போன பராங்குச நாயகி என் ஜீவனம் பரிக்க வேண்டுமோ
ராமனை அன்றி மற்று ஓன்று அறியாத பரதனை அன்று மற்று ஓன்று அறியாத
சத்ருக்கனன் நிலை தானே இவர்களது )

மாற்றமும்
மதுரா மதுரா லாபா -என்று
இவள் பேச்சுக்கு அவனும் தோற்று இறே இருப்பது –
இப்படி இவர்கள் பழி இடா நின்றால் ஒரு உத்தரம் சொல்லி யாகிலும் பிழைப்போம் என்று
நீங்கள் சொல்லுகிற பழிக்கு அவன் இங்கு உண்டோ என்ன

வாசல் திறவாதார் -மாற்றமும் தாராரோ-
த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும்
நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –

அவனை எழுந்து இருக்க ஒட்டா விடிலும்-
இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –

மாற்றமும் தாராரோ –
என்கிறார்கள் -ஏதேனும் ஒருபடியால் இவள் பேச்சே அமையும் இவர்களுக்கு
படுகொலை யடித்தால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் இடவும் ஆகாதோ
வாசலைச் செம்பினால் வாயையும் செம்ம வேணுமோ

துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –
ஆசயா யதி வா ராம புநஸ் சப்தா பயேதி தி -(சுமந்திரன் பெருமாள் வார்த்தை சொல்லுவார் என்று காத்து இருந்தா)
இவர்களுக்குப் புகுருங்கோள்-என்னவுமாம் –
போங்கோள் என்னவுமாம் –

(துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-)

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்த மத்யத்திலே –
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே இவர்களுக்கு இவள் பேச்சு-
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ

மதுரா மதுரா லாபா(தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்)
நீயும் அவனும் வாழ்ந்து எங்களுக்குப் பரிவட்டம் தருகிறபடியோ இது
நாங்கள் செய்தபடி செய்ய உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு தரிக்க வேண்டாவோ
ஸூக மாஸ்ஸ்வ ரமஸ்வ ச(சுமந்திரன் பெருமாளை சக்ரவர்த்தி கூப்பிட சென்ற பொழுது சீதாப்பிராட்டிக்குப் பெருமாள் சொல்லிப் போன வார்த்தை )
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –

இவளுடைய பேச்சு உஜ்ஜீவனமாய் தாரகமாய் இறே இருப்பது

தர்மபுத்ரன் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என் புகுகிறதோ என்று அஞ்சின அளவிலே யுத்தத்தில்
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனியைக் கேட்டு தரித்தால் போலே
இவர்களுக்கு இவள் பேச்சு
உடம்பை கிருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமிநீ இறே அங்கு செல்லுகிறது –
கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி யாகிலும் தீர்க்கலாகாதோ –
(சீதை என்ன சொன்னாள் அங்கு பெருமாள் கேட்டார் -இவர்களுக்கு இவள் வார்த்தை கேட்க பிரார்தனை )

—————

நீங்கள் பழி இடுகிறது ஏன் -அவன் இங்கே உண்டோ -என்ன –

நாற்றத் துழாய் முடி –
கோயில் சாந்தை உன்னால் ஒளிக்கப் போகுமோ–(நாற்றத் துழாய் -நாற்ற முடி)

இப்போது உண்டாக வேண்டா
அவனை ஒரு கால் அணைத்து விட்டால் அது அஞ்சு ஆறு குளிக்கு பரிமளம் நிற்குமே —
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு -என்ன

நாற்றத் துழாய் முடி
நீயும் மறைத்து உன் களவுக்கு அவனும் பெரு நிலை நின்றால்
கோயில் சாந்தை உன்னால் ஒளிக்கப் போமோ –
அன்றி மற்றோர் உபாயம் என் (குட்ட நாட்டுத் திருப்புலியூர் மேல் இவள் நேர் பட்டதே )-என்னும் படி
மாளிகைச் சாந்தை மறைக்கப் போமோ –

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

இப்போது அவன் உண்டாக வேணுமோ -அவன் ஒருக்கால் அணைத்து விட்டால் நூறு குளிக்கு நிற்கும்
நாம் எல்லாரும் ஓக்க இப்போதே எழுந்து இருந்து போந்த பின்பு படுக்கையிலே சாய்ந்தேன்
அந்தியம் போதே பிடித்து வாசலைப் பற்றிக் கொண்டு நின்றி கோளே-
கட்டும் காவலுமாய் இருக்கிற வாசலிலே புகுரப் போமோ அவனுக்கு என்ன –

————

நாராயணன் –
அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –
வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ –
உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –

நாராயணன்
எங்களைப் போலே கதவு திறக்கும் தனையும் பார்த்து இருக்க வேணுமோ அவனுக்கு
அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –

நாராயணன்
ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –
விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது
உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –
ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும்
எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )

நாற்றத் துழாய் முடி நாராயணன்
ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ
(தீஷிதம் விரதம் சம்பன்னம் )

பேசாதே கிடக்கில் வாய் திறந்திலள் -என்னா நின்றாள்
வாய் திறக்கில் உத்தரம் சொல்லிற்று என்பார்கள் என்று சொல்லி
உறங்குவாரைப் போலே கிடந்தாள்

நாராயணன் -இங்கு மூன்றாவது -நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் -அழியாத குணக் கடல் நிறைந்தவன்
ரம் -அழிய வைக்கும்
கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

————-

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் –
வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-
ருசியாலே-

புண்ணியன் –
இவர்கள் உபாயம் அவன் தானே இறே –
சிநேக உக்தியாகவுமாம் –

நம்மால்
வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )

நம்மால்
அவனுக்கு ஆகாதார் உண்டாய் முடிந்தான் அல்ல கிடீர்-
ஜென்ம விருத்தாதிகள் ஏதேனும் அமையும் கிடீர்

போற்ற
இவர்கள் குடிப் பிறப்பு இருக்கும் படி –
பல்லாண்டு என்று இருக்குமவர்கள் இறே –
இவர்கள் ஆஸ்ரயணம் உபாயம் அன்று

போற்ற
செய்ய வேண்டுவது பெரிதாய் முடிந்தான் அல்லன் (கும்ப கர்ணன் )கிடீர்

பறை தரும்
உக்கமும் தட்டொளியும் உன் மாணாளனையும் தந்து

புண்ணியனால்
தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியில் தலை கீழாக விழுந்து சாவாரைப் போலே

புண்ணியனால்
1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்
2-ருசி ஜனகனும்
3-உபாயமும்
4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —ஆச்சார்ய ஹிருதயம்–162
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம்
வானமா மலையிலே கொழுந்து விடும் —ஆச்சார்ய ஹிருதயம்-163
களை கண் அற்றாரை உருக்கும்மாதுர்யம்
குடமூக்கிலே பிரவஹிக்கும்–ஆச்சார்ய ஹிருதயம்-164)

ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்றது புறம்பாம் படி
யதிவா ராவண ஸ்வயம் -என்கிறபடி
ரீபூணாம் அபி வத்சலரானவராலே கிடீர் முடிந்தது

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்

நீங்கள் பழி இடுகிறது என் -இங்கு அவன் உண்டோ என்ன
நாற்றத் துழாய் முடி –
உன்னைப் போலே புறப்படாத தத்துவமோ அவன் சூடின தத்வம்
விரை குழுவு நறும் துளவம்
மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப் போமோ -என்ன –
அந்தியம் போதே வாசலைக் கைக் கொண்டீர்கள் -அவனுக்கு புகுர வழி யுண்டோ -என்ன

(குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே-10-6-7-)

நாராயணன் –
அவனுக்கு எங்களை போலே கதவு திறக்கப் பார்க்க வேணுமோ–
புகுகிற வழி தேட வேணுமோ -புறப்படுகைக்கு வழி தேடும் அத்தனை அன்றோ(அனைவர் உள்ளும் அவனே இருக்க அத்வேஷம் செய்து தள்ளப் பார்க்கிறோம் அன்றோ )
விடாதார்க்குப் பேர் அன்றோ இது(நாரங்களுக்கு எல்லாம் உள்ளே இருப்பதால் தானே நாராயணனன் பெயர் பெற்றான் )-

யுகாவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ -நீ விலக்கிடாய்
பதிம் விஸ்வஸ்ய  ஆத்மேஸ்வர -என்று அவன் அழகிதாகப் பொதுவாய் இருந்தான் –
நாராயண தத்துவத்துக்கு இன்று தொடங்கி நமஸ்காரம்(குத்தல் பேச்சு )
கௌசல்யா லோக பர்த்தாரம்-
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று துணிந்தார்க்கு இப்படியோ-
ரக்ஷகனாக வேண்டாவோ -பறை தரும் என்று க்ஷேபம்

நம்மால்-
வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்

போற்றப்
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல

பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் –
நாராயணன் அன்றோ -போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்

புண்ணியனால்
கிருஷ்ணம் தர்மம் சநாதநம் –
புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –

உன் படிகள் அழகிதாய் இருந்தது -என்ன –
பின்னையும் அவன் பாசுரமாக ஓன்று பிறக்கக் காணாமையாலே (இவனும் உள்ளே இருக்க -விண்ணோர்களை எழுப்பிய பின்பு தானே இவர்கள் என்னிடம் வர வேண்டும் என்று இவனும் பேசாமல் இருந்தானே )அவனை விட்டு

இவள் நம்மில் ஒருத்தியாய் (பிராட்டியாரும் உபேயத்தில் அவனை அனுபவிக்க நம்முடன் சேருவாளே )ஓக்க நோன்பு நோற்று ஓக்க அனுபவிக்க இருந்து
நம் திறத்தில் செய்தபடி செல்லாதே மாற்றாராய்ச் செல்வதே -என்று அவளைத் திரிய எழுப்ப

திரியவும் நம்மைப் பிரித்தார்கள் ஆகில் நாம் பேசாதே கிடப்போம் என்று   அவள் வாய் திறவாதே கிடக்க
உறக்கத்துக்குக் கும்ப கர்ணனையும் ஜெயித்ததாய் இருந்ததீ -என்கிறார்கள் –

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்
இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –
இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே

(போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –
அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)

பரித்ராணாய ஸாது நாம் ஏவ உத்தேச்யம் -மற்றவை தன்னடையே ஆனு ஷங்கிகம்-

முடியில் துழாய் அவனுக்கு மட்டும் அசாதாரணம் -நாற்றம் முடி நாற்றமும் துழாய் நாற்றமும்-சேது அணையில் அர்ஜுனன் ராமனின் நாற்றத்துழாய் முடி பார்த்ததாக வில்லிபுத்தூர் மஹா பாரதம் -யுகம் கடந்து இருக்கும் -மங்கள குணம் நீங்காமல் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் நாராயணன் இதில் –

நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ

குழல் இனிது யாழ் இனிது -தம் மக்கள் அழு குரல் இனிது –
கண்ணன் தனது புல்லாங்குழலை விட பக்த நாரதர் வீணை ஒலியை மிக இனியது என்றும்
நம் போல்வார் அழுகையையும் ஸ்தோத்ரமாகக் கொள்ளும் மால் அன்றோ

————

இவனால் -பண்டு -ஒரு நாள் –
முன்பு உன்னைப் போலே உணராதே படுத்தினார் உண்டு காண் என்கை-

பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே-
ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –

கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –
உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ –
அவனது -துயில்
உன்னது -பெரும் துயில்
அவன் ஒருத்தியை இறே பிரித்தது
நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-

பண்டொருநாள்
முன்பு உன்னைப் போலே உணராதே நோவு படுத்தினான் ஒருவன் உண்டு காண்

ஒரு நாள்
உணர்ந்திலன் என்று ஒரு கால் கேட்டு இருந்தோம் –
இன்று அனுபவியா நின்றோம்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த
தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே-
வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே
இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

கும்பகர்ணனும்
உறக்கத்தில் தலையானவனும் உனக்குத் தோற்று தன் உறக்கத்தையும் தானே தந்து போனானோ –
நீயும் அவனுமாக சமயம் பண்ணி உறங்கப் புக்கு நீ ஜெயித்த பின்பு
நான் இதைக் கைக் கொள்ளுவன் அல்லேன் என்று விட்டானோ –
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே  நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ –

பெரும் துயில் –
அவன் அளவோ உன்னுடைய நித்திரை –
அவனதோ துயில் -உன்னதோ பெரும் துயில் –

அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்
ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே

அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு –
நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –
இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு

அவன் ஒருத்தியினுடைய பிரிவுக்கு ஹேது பூதனனாம் அத்தனை இறே
நீ ஓர் வூராகப் பிரிக்கைக்கு ஹேது பூதையாய் உறங்குகிறாய் இறே

ந ஷமாமி என்கிற அஸஹ்ய அபசாரம் பண்ணினவனை அரை க்ஷணம் உணராதே இருக்கிற
நமக்கு ஒப்பாகச் சொல்லா நின்றார்கள் என்று
இவர்களுக்குச் சென்று முகம் காட்ட வேணும் என்று துணுக் என்று தான் உணர்ந்தமை தோற்ற –
கிருஷ்ண கிருஷ்ண என்றாள்

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை
தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு
இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று
தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்

சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-
ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –

புண்ணியனால் பண்டொருநாள் கூட்டத்தின் வாய் வீழ்ந்த
எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் –
விளக்கு வீட்டில் போலேயும் சாவுகை

பண்டு ஒரு நாள் –
முன்பும் உன்னைப் போலே ஒருத்தன் உண்டு காண் -உணராதே படுத்தினான் என்கை –

(விழித்து இருக்காமல் தூங்கிக் கொண்டே படுத்தினான்
இவளும் பாகவத சமாஹம் தான் ப்ராப்யம் என்று உணராமல் படுத்துகிறாள் )

புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
கொடுவினைப் படைகள் வல்லையாய்-
ததோ ராமோ மஹா தேஜா –கோஸ்ய வசமே -என்று நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறுகைக்கு உள்ள அருமை

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

(நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்)

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ

(எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே
ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே)

புண்ணியனால் -வீழ்ந்த -வீழ்க்கப்பட்ட இல்லையே -வீட்டில் பூச்சி போல் -வீழ்ந்தான் அன்றோ
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரத மரகத மணித்தடம் –

ஸ்ரீ பரசுராமன் கையில் வில்லை சக்கரவர்த்தி திருமகன் வென்று வாங்கினால் போலே
கும்ப கர்ணன் நித்திரையை வென்று வாங்கிக் கொண்டாயோ –

—————–

ஆற்ற அனந்தல் உடையாய் –
இப்படி சொல்லக் கேட்டு பெரிய அனந்தலோடே -கிருஷ்ணா கிருஷ்ணா -என்ன
எங்களுக்கு அங்கே போய்-துயில் எழப் பாட வேண்டுமோ -நீ உணரும்படி காண அமையாதா 

ஆற்ற வனந்தல் உடையாய்
இது ஒரு உணர்த்தி இருந்த படி என் –
எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ –
நீ உணரும் படி காண அமையாதோ –

ஆற்ற அனந்தல்
ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –
ஜாலக ரந்தரத்தாலே (ஜன்னல் ஓட்டை வழியே ) இவள் உணர்ந்த படியைப் பார்த்தார்கள்
தங்கள் கோஷ்ட்டிக்கு நாயக ரத்னம் போலே இருந்தாள் –

சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –

அஸஹ்யாபசாரிகளில் அக்ரேஸரனான இராக்கதப் பையலோ டொக்காம்மைச் சேர்க்கின்றனரே இவர்கள்!
இஃது என்ன கொடுமை! இனி வெளியிற் சென்று முகங்காட்டுவோம்’ என்று எண்ணி,
தான் உணர்ந்தமை தோற்றச் சோம்பல் முறித்தாள்;

அதனை உணர்ந்த இவர்கள், ‘ஓ! உறக்க மிருந்தபடி யென்!’ என வியந்து,
“ஆற்ற அனந்தலுடையாய்!” என விளிக்கின்றனர்.
பின்பு சாலக வாசலாலே அவளுணர்ந்தபடியை உற்று நோக்கினார்கள்; அவள் தங்கள் திரளில் வந்து கூடினால்
நவரத்நமாலையில் நாயகக்கல் அழுத்தினாற்போலாமெனக் கருதி, அருங்கலமே! என்கிறார்கள்.
நாயகமணி இல்லாத ஹாரம் போல் இத்திரள் இருள் மூடிக்கிடக்கிறது; இதனை நீ விளக்கவாராய் என விளித்தவாறாம்.

ஆற்ற வனந்தல் உடையாய் –
இனி கிடக்கில் த்ரோஹிகள் ஆவுதோம்-என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம் என்று உணர்ந்தபடி தெரிய
கிருஷ்ண கிருஷ்ண -என்றாள்-

எங்களுக்கு அங்கே போய்த் துயில் எழப் பாட வேணுமோ
நீ உணரும்படி கண்டு வாழ அமையாதா-

———

அருங்கலமே –
எங்களுக்கு எல்லாம் சிரோ பூஷணம் அல்லையோ
ஹாரத்தைப் பண்ணி அதுக்கு கல் அழுத்தினாப் போலே
நீ புகுந்து இக் கோஷ்டியை ஸ்நாதமாக்காய்-என்கிறார்கள்
எங்களுக்கு பெறுவதற்கு அரியவள் அல்லையோ நீ என்னவுமாம் –

அருங்கலமே
என்கிறார்கள் –
எங்களுக்கு எல்லாம் ஸீரோ பூஷணம் அல்லையோ நீ –
ஒரு ஹாரத்தைப் பண்ணி அதிலே ஒரு ரத்னத்தை அழுத்தினால்
அந்த ரத்னம் அந்த ஹாரத்தை விளக்குமா போலே
இத் திரளை (ச தனம் )ச நாதம் ஆக்கப் பாராய்

அரும் கலமே
எங்களுக்கு பெறுதற்கு அரியவள் அல்லையோ நீ –
அவள் புறப்பட
அவனும் ஒக்கப் புறப்பட்டு
தங்களைத் தலை மேலே கொள்ளும் என்று இருக்கிறார்கள் –

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே -என்கையாலே-
சோம்பல் முறிக்கையும்
துர்லபமான ஆபரணம் போலே-அத்யாகர்ஷகமாய் இருக்கிறது -என்றுமாம்-

அருங்கலமே-
இனித் தெளிவு கண்டு அனுபவிக்க வேணும் -ஹாரத்தைப் பண்ணினால் -அதுக்கு கல் அழுத்த வேண்டாவோ –
இக் கோஷ்ட்டியை சநாதம் ஆக்காய்-என்றவாறே பதறிப் புறப்படப் புக

(இது தானே பாகவதர்களை எழுப்புவதில் நடுப் பாட்டு -கீழ் நான்கும் மேல் ஐந்தும் உண்டே)

(1-பிள்ளாய் –2-பேய்ப் பெண்ணே -(நாயகப் பெண் பிள்ளாய்)3-கோது கலமுடைய பாவாய் –4-மாமான் மகளே –
5-(ஆற்ற அனந்தல் யுடையாய் )அரும் கலமே-இப் பெண் பிள்ளை
6-புன மயிலே –7-நற் செல்வன் தங்காய் –8-போதரிக் கண்ணினாய் -(பாவாய் )- 9-(நங்காய் ) (நாணாதாய்) நாவுடையாய் 10-இளங்கிளியே )

அரும் கலமே
எம்பெருமானாரைப் போலே -(குரு பரம்பரை ஹார நாயக ரத்னம் அன்றோ )
மஹாதா தபஸா (பெரும் தவம் புரிந்து கௌசல்யை ராமனைப் பெற்றாள் )-(அவ்வாறு பெரும் தவத்தினால் )பெறலாமவள் அல்லள்-
தானே தன்னைப் பெறுமத்தனை-ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே (சீதா லங்கனா உத்பவ –கோதா துளஸீ கான உத்பவ போல்)

(அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-ஸ்ரீ யதிராஜ சப்ததி-15-)

———–

இவர்கள் ஆர்த்தியைக் கண்டு துணுக் என்று வரப் புக்காள்-

தேற்றமாய் வந்து திற –
இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே-
தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –

தேற்றமாய் வந்து திற-
ஊராகத் திரண்டு கிடக்கிறது-படுக்கையில் கிடந்தபடி வாராதே
சதஸ்தையாய் வந்து திற

இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்-

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
பயப்பட்டு மேல் நிலங்களில் நின்று தடுமாறாதே வந்து இழிஞ்சி திற

அங்கன் அன்றிக்கே
வூராகத் திரண்டு கிடக்கிறது –
அவர்களில் உன்னையும் நியமிக்க வல்லார் உண்டு —
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்த படியே வராதே –

உன்னைப் பேணிக் கொண்டு ஸதஸ்யையாய் வந்து திற –

சாப்ரஸ் கலந்தீ –ஜகமா தாரா லஷ்மண சன்னிதானம் -என்னும் படி வராதே கொள்-

தேற்றமாய் வந்து திற-என்கையாலே-
இவ்வதிகாரிக்கும் லோக கர்ஹை வாராமல்
லௌகிக அனுவர்த்தனம் கார்யம் என்றது ஆய்த்து –

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-
மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி-தள்ளம் பாறி – விழாதே தெளிந்து திற –
ஊராகத் திரண்டு வந்து கிடக்கிறது -படுக்கையிலே கிடந்தபடியே வராதே -சதஸ்யை யாய்த் திற -என்றுமாம் –

தேற்றம்
சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதி வத்-

(ப்ரஹர் ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன … சா ப்ரஸ்கலந்தீ –இத்யாதிப்படியே
ஸ்ரீ இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த தாரை போல் இல்லாமல்)

——————————

ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு

———————-

(ஸ்வாபதேசம்)

அஞ்சாம் பாட்டில்
அம்மனாய் என்கிறது -குலசேகர பெருமாளை-அது எங்கனே என்னில் –
குலசேகரன் ஆகையாலும்

எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனன் ஆகையாலும் –

அல்லிமலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து
இள யாய்ச்சியார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த யுரையதனை ஸ்த்ரீத்வ பாவனயா பேசுகையாலும்

ஏறு அடர்த்ததும் -என்றும்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் -என்று நப்பின்னை விஷயமாக வியாபாரித்த
வியாபாரத்தில் தோற்று-அடிமை அல்லது -என்கையாலும் –

ஆலை நீர் கரும்பன்னவன் -என்று தொடங்கி –
மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்தி என்னும் அளவும்
கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கையாலும் –

இதிலே நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றதை –
வண்டு கிண்டு நாறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை என்றும் –

அந் நாரணனை-நலம் திகழ் நாரணன் என்று பேசுகையாலும்

இவருக்கு அசல் உணர்த்தி அனுபவம் போலே
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் அனுபவம் நடந்து செல்லுகையாலே

பிரபன்ன குல சேகரரான குலசேகர பெருமாளை –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்கிறது என்கை –

————————————————————————–

திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இரு விளக்கேற்றி யிருளை யகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
அவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

14 பாசுரங்கள் திருத்துழாய் பற்றி மூன்றாம் திருவந்தாதியில் உண்டே

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

அம்மனாய் -முதல் நாயகி பாசுரம் –வெற்பு என்று வேங்கடம் பாடும்-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

கும்பம் -கர்ண -அகஸ்தியர் -பெரும் தமிழன் நான்

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading