ஸ்ரீ ப்ரஹ்ம மீமாம்ஸை -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரமும் ஸ்ரீ எம்பெருமானாரும்-விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது –ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

ஸ குணமான ப்ரஹ்ம விசாரம்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம்
ஹிதம் -அவன் கிருபையே பரம ஹிதம்
புருஷார்த்தம் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
ஸ்ரீ பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் திரு அவதரித்த -வேத வியாஸர் -ஞான மார்க்க ப்ரவர்த்தனத்துக்கு ஆவேச அவதாரம் –
ஸூசநாத் ஸூத்ரம் -அநேக அர்த்தங்களை ஸூசனம் பண்ணும் –
வேதாந்தார்த்த கு ஸூம க்ருதனார்த் தத்வாத் ஸூத்ரம் -அழகானப் பூக்களைத் தொடுப்பது போல் –
ச விசேஷம் ப்ரஹ்மம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குண மயன் -ஸர்வாத்மா –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –
பூர்வ பாக கர்ம பலன் அல்பமாயும் அஸ்திரமாயும் இருப்பதை அறிந்து -அதனாலேயே ப்ரஹ்ம விசாரம்
பரீஷ்ய லோகான் – ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

ப்ருஹதி ப்ரஹ்மயதி தஸ்மாத் உச்யதே பரம் ப்ரஹ்ம –

ப்ருஹத்வாத் ப்ரும்ஹணாத் வாச் ச தத் ப்ரஹமேத் யபி தீயதே

ஸ்வரூப ப்ருஹத்வமாவது -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபம் -தன்னை ஒழிந்த ஸமஸ்த பதார்த்தங்களிலும் பூர்ணமாய் இருக்கும் இருப்பு –

குண ப்ருஹத்வமாவது -முக்கால ஸகல பதார்த்தங்களையும் அறிதல் முதலானவை –

யோ வேத்தி யுகபத் ஸர்வம் பிரத்யஷேண ஸதா ஸ்வத -நாத முனிகள்

ப்ருஹ்மணத்வமாவது -நாம ரூப ஸ்தூல அவஸ்தா ஜனக ஸங்கல்ப விசேஷமும்-

ஒரு கால விசேஷத்தில் ஆத்மாவுக்கு ஞான சங்கோசம் நீங்கப்பெற்று ஸ்வரூப ஆவிர்பாவமும்

யேந அக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோ வாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
எந்த ஞானத்தால் ஸ்வரூப விகாரமும் ஸ்வ பாவ விகாரமும் அற்ற புருஷனை அறிய முடியுமோ -அந்த ப்ரஹ்ம வித்யையை
தன்னைச் சரண் அடைந்த சிஷ்யனுக்கு ஆச்சார்யன் உபதேசிக்கக் கடவன் –
புருஷ ஸப்த வாஸ்யனும் ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனும் ஒன்றாகவே நிர்த்தேசித்துச் சொல்லும் ஸ்ருதி வாக்கியம் இது
நாராயண மாத்ர ப்ரதிபாதகமான ஸூக்தமே புருஷ ஸூக்தம் ஆகும் –

—————-

முதல் நான்கு ஸூத்ரங்களும் உபோத்காதம்

ஐந்தாவது ஈஷத் அதிகரணம்-சத் ஏவ சோம்ய இதம் அக்ரே –இத்யாதி
சத்தானதே காரண வஸ்து-என்பது நிர்விவாதம் –
அது ஆனுமானிக பிரதானமா -அசித் தத்துவமா -அல்லது ஸர்வஞ்ஞாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமா –
காரியமும் காரணமும் பிரதானம் தான் பூர்வபக்ஷம்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண்மயம் விஞ்ஞாதம் பவதி -த்ருஷ்டாந்தம் ஸ்பஷ்டம் என்பர்
இத்தை வேத வியாசர் ஈஷதேர் நா ஸப்தம் -என்கிற ஸூ த்ரத்தால் கண்டிக்கிறார் –
பஹுஸ்யாம் என்று ஸங்கல்பித்து -ஸ்ருஷ்டித்து -அனுபிரவேசித்து-சத்தா தாரகனாய் இருப்பது வேதாந்த விஷயம் –
இத்தால் சங்கல்பத்தைக் குணமாகச் சொல்லி ப்ரஹ்மம் ச குண விசிஷ்டம் என்று தேறும் அன்றோ –

————

ஆனந்தமய அதிகரணம்
ஸங்கல்ப விசிஷ்டமே ஜகத் காரணம் –
அசித்துக்குக் கூடாமையால் சித் -சேதனனான ஜீவனே ஜகத் காரணம் என்று கொள்ளலாம்
அதீந்த்ரமான பகவான் காரணம் அல்லன் என்று பூர்வ பக்ஷம்
இத்தை ஆனந்தமய அப்யாஸத் -என்று வேத வியாசர் கண்டிக்கிறார்
அதிக ஆனந்தம் உள்ளவன் பரமாத்மாவுக்கே புஷ்கலம்-அல்ப ஆனந்தமயமான ஜீவாத்மா காரணம் ஆகமாட்டான் –
வேதாந்தம் ஸைஷா நந்தஸ்ய மீமாம்ஸா -என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக பெருமையைப்பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று அபரிச்சின்ன த்வத்தைச் சொல்லுகையாலே
ஆனந்தம் என்கிற குண விசேஷ விஸிஷ்ட ப்ரஹ்மமே விஷயம் –

————-

அந்தர் அதிகரணம்
ப்ரஹ்ம உபாசனம் செய்யும் அதிகாரிக்கு தேச விசேஷத்தில் ப்ரஹ்மத்தையும் ப்ரஹ்ம குணங்களையும் அனுபவிப்பதே புருஷார்த்தம்
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
ஆத்ம பதார்த்தம் என்பதை ஸ்தூல அருந்ததீ நியாயத்தால் உபநிஷத் தெரிவிக்கிறது –
அன்ன ரசமான சரீரத்துக்கு ஆத்மவத்தைச் சொல்லி -பிறகு பிராணமயம் -மநோ மயம் -விஞ்ஞான மாயம் -ஆனந்த மயம் -சொல்லி பரமாத்வாவுக்கு ஆத்மத்வத்தை ஸ்தாபிக்கிறது –
அவ்விடத்திலேயே -ஸ யஸ் சாயம் புருஷே யஸ் ஸாசா வாதித்யே -என்று
யத் தத் சப்தங்களால் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தியான புருஷனுக்கும் ஹ்ருதய குஹ வாஸியான புருஷனுக்கும் ஐக்யம் தெரிகிறது

சாந்தோக்யம் -தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேஸ –
இதில் ஆதித்ய மண்டல மத்ய வர்த்தி புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் சொல்லிற்று –
கர்மானுகுணமான ஸூக துக்கம் அனுபவிப்பதற்கே சரீர ஸம்பந்தம்
ந ஹ வை ஸ சரீரஸ்ய சத ப்ரீய அப்ரீயயோ அபஹரதிஸ்தி
பரமாத்வாவுக்கு இது கூடாதே என்பதால் இவன் ஜீவனே இவனே ஜகத் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத் என்றும்
பேத வியபதே சாச்ச அந்நிய -என்றும்
உள்ள ஸூத்ர த்வயத்தாலே கண்டிக்கிறார்
அபஹத பாப்மத்வாதிகளான சில தர்ம விசேஷங்களை வேதாந்தம் சொல்லுகையாலும்
ஆதித்யாதி தேவதைகளைக் காட்டிலும் ப்ரஹ்மதுக்கு பேதத்தை
ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்ய சரீரம் -இத்யாதி வாக்யங்களால் பேதம் சொல்லுகையாலும்
புண்டரீகாக்ஷத்வம் பகவத் அசாதாரணம் ஆகையால்
இச்சா க்ருஹீதா பிமதோரு தேஹ -அனுக்ரஹ அதீனமான சரீரம் கொண்டவன்
ஆக காரணத்வமும் பரத்வமும் உபாஸ்யத்வமும் நாராயண அசாதாரணம்
ப்ரஹ்ம ச குணத்வமே தேறும்

———–

ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
அநா வ்ருத்தி சப்தாத்
ந ச புனரா வர்த்ததே
வாஸூ தேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
உயர்வற உயர்நலம் உடையவன்
வண் புகழ் நாரணன்
நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

——————

வேத அபஹாரிணாம் தைத்யம் மீன ரூபி நிராகரோத்
ததர்த்த அபஹாரிணஸ் ஸர்வான் வ்யாஸ ரூபீ மஹேஸ்வர –

வேதத்தை சோமுகன் அபஹரிக்க மத்ஸ்யமூர்த்தி திரு அவதாரம்
வேதார்த்தங்களை வைசேஷிக பவுத்த ஜைன பாசுபதாதி மதஸ்தர்கள் அபஹரிக்க ஸ்ரீ வேத வியாஸர் திரு அவதாரம் –

ப்ரஹ்ம ஸூ தர கிரந்தம் சாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -எனப்படும் –
தஸ்யைஷா ஏவ சாரீர ஆத்மா -பரமாத்மாவே சாரீரன்
ஜகத் சர்வம் சரீரம் தே
ஸம்ஹிதம் ஏதச் சாரீரகம் -ஸ்ரீ போதாயன மகரிஷி

இதன் அர்த்தங்களை விஸ்தரேண ஸங்க்ரஹ பாவத்தால் ஸ்ரீ பாஷ்ய வேதாந்த தீபம் வேதாந்த சாரம் –

—————–

மூலமாக வெளியிட்டு அருளினார்

திருமந்திரம் மூன்று பதங்களால் சகல ஜீவாத்மாக்களுடைய

அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -மூன்று ஆகாரங்களும்
பரமாத்மாவினுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் கிடைக்கும்
சாரீரகத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பர ப்ரஹ்மம்

ஜகத் ஏக காரணமாயும் சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் அறுதியிடுகின்றன
இதுவே ப்ரணவார்த்த நிரூபணம்
மூன்றாம் அத்யாயம் ப்ரஹ்மம் உபாயம் -என்று அறுதி இடுகிறது -இதுவே நமஸ் ஸப்தார்த்தம்
நான்காம் அத்யாயம் பரம ப்ராப்யம் என்று அறுதி இடுகிறது -இதுவே நாராயணாய நிரூபணம்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம் -எகிற நான்கு அர்த்தங்களும் நான்கு அத்தியாயங்களின் சாரமாகும் –

வேதாந்தங்களிலே ஜகத் காரண வஸ்துவே த்யேயம் -சரண்யம் -ப்ராப்யம் என்று காட்டப்பட்டுள்ளத்து
காரணந்து த்யேய
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -தம் ஹ தேவம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –என்று இறே வேதாந்த கோஷம்
தாபத்ரயாதுரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாஸ்ய -ஸ்ரீ பாஷ்யகாரர்
இந்த வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபிக்கவே வேத வியாசர் திரு அவதாரம் –


 

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதிக்ருத கணநா சின்மயீ ப்ரஹ்ம காண்டே என்கிறபடியே
545-ஸூ த்ரங்கள்
156-அதிகரணங்கள்
16-பாதங்கள்
4-அத்தியாயங்கள்

ஜைமினி அருளிச் செய்த பூர்வ மீமாம்ஸை -கர்ம மீமாம்ஸை -முதல் 12 அத்தியாயங்களில் ஜ்யோதிஷ்டோமோதி கர்மங்கள் விசாரம்
மேல் நான்கு அத்யாயங்களின் கர்ம ஆராத்யா
தேவதைகள் விசாரம் -ஆக மீமாம்ஸா சாஸ்திரம் 20 அத்தியாயங்கள் கொண்டது –
ஸர்வ கர்ம ஸமாராத்யம் -ஸர்வ தேவதா அந்தராத்ம பூதம் -பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் என்று வேதாந்த ஸித்தம்
ஐக அர்த்யம்
பூர்வ காண்ட யுக்த கர்மங்கள் அங்கங்கள்
உத்தர காண்ட யுக்த ஞானம் அங்கி
கர்ம அங்கமான ஞானம் உபாயம் -ஐக ஸாஸ்த்ர்யம்
கர்த்ரு பேதமும் விஷய பேதமுமே உண்டு

விஷய த்விகம்-அல்லது ஸித்த த்விகம் என்றும்
விஷயி த்விகம் -அல்லது ஸாத்ய த்விகம் -என்றும் இந்த நான்கு அத்தியாயங்களை பிரிப்பர்
திருவாய் மொழியையும்
முதலிட்டு ஐந்து பத்துக்கள் ஸித்த பரங்கள்
மேலிட்டு ஐந்து பத்துக்கள் ஸாத்ய பரங்கள் -என்று பிரிப்பர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயர் ஸ்வாமிகள் –

அது பக்தாம்ருதம்
இது பராசர்ய வசஸ் ஸூதா

16 பாதங்களும் 16 திருக்கல்யாண குணங்களைக் கூறும்
அமலனாதி பிரான் -க குணவான் கஸ் ச வீர்யவான் போலே


விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய–ஸ்ரீ அதிகரண சாராவளி

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –அந்யாதாரன்
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்-பஞ்சகால பராயண ஆப்தன்
7-காத்மாதே –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்-உசித ஜனன க்ருத -ஆகாச ஜீவர்களுக்கு ஸ்வரூப விகார ஸ்வாஸ் பாவ விகார ரூப ஜனனங்களுக்குக் கர்த்தா
8-தேகேந்திரியாதே – –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்-உசித ஜனன க்ருத்

மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்-ஜாக்ரதாதி அவஸ்தா நிர்வாஹகன்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண ஏக நாதன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்-நாநா வித வித்ய உபாஸ்யம்
12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்-வர்ணாஸ்ரம ஆசாரத்தாலே திரு உள்ளம் உகக்குமவன் –

நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்-உபாஸகர்களின் உத்தர பூர்வ பாபங்களினுடைய அஸ்லேஷ விநாஸ கர்த்தா
14-ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்-ஸ்தூல தேஹ யுக்தனுக்குப் பலம்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்- ஸ்தூல தேஹாத் உதகராந்தனுக்கு ஏற்படும் பலன்கள்
16-சாம்யதச் ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி
முக்திம் ததோ ஹி பரமம் தவ ஸாம்யம் ஆஹு த்வத் தாஸ்ய மேவ விதுஷாம் பரமம் மதம் தத -ஆழ்வான்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதிகாரித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தித உசித -அசேஷ சேஷ விருத்தி தானே மோக்ஷம் -ஸாம்யா பத்தி

—————————–

முதல் அத்யாயம் -35 அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸ அதிகரணம் -ப்ரஹ்ம விசாரம் கர்த்தவ்யம் -கர்ம விசார அநந்தரம் கர்த்தவ்யம் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கிறது
35 வது அதிகரணம் -வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த நியாய அதிதேசம் பண்ணுகிறது
இடையில் 26-அதிகரணம் -அப ஸூத்ராதிகரணம் -ப்ரஹ்ம வித்யா அதிகார பரம் –
மற்ற அதிகரணங்கள் -பரமாத்மா சேதன அசேதன விலக்ஷணன் -ஜகத் ஏக காரண பூதன் என்கிற அர்த்தத்தை ஸ்தாபிக்கின்றன –

ஸாஸ்த்ர உபோத்காதம் -முதலிட்டு நான்கு அதிகரணங்கள்
ஈஷத் அதிகரணம் ஐந்தாவது-அசேதன வைலக்ஷண்யத்தை ஸ்தாபித்து -இது தொடங்கியே ஸாஸ்த்ர ஆரம்பம்
ஆனந்தமய அதிகரணத்தில் சேதன வைலக்ஷண்யம் ஸ்தாபித்து
இவற்றின் விவரணம் மேலுள்ள அதிகரண விஷயங்கள்
ஈஷத் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தின் உபாயத்வமும்
ஆனந்தமய அதிகரணத்தில் ப்ரஹ்மத்தினுடைய உபேயத்வமும்
இவ்விரண்டும் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே யாகையால் அந்தர் அதிகரணத்தில் பரமாத்மா திவ்ய மங்கள விஸிஷ்டன் என்றும் ஸ்தாபித்தார்

இந்த அடைவே திருவாய் மொழியின் மூன்று பத்துக்களின் அடைவாகும் -இதின் விவரணமே மேல் பிரபந்த சேஷம் –

காரண வாக்கியங்கள் சேதன அசேதன விலக்ஷண விசிஷ்ட ப்ரஹ்மத்தின் இடத்தில் அந்வயம் என்பதால் முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் எனப்படுகிறது –

இரண்டாம் அத்யாயம் அவிரோத அத்யாயம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -ஜகத் ப்ரஹ்ம கார்யம் -என்பதில் விரோதம் இல்லை என்று ஸ்தாபிக்கிறார்
முதல் இரண்டு பாதங்கள் காரணத்வ விசார பரம்
அடுத்த இரண்டு பாதங்கள் கார்யத்வ விசார பரம்

ப்ரஹ்ம காரணத்வத்தை அங்கீ கரியாமல்
பிரதான -ப்ரக்ருதி தத்வ -காரணத்வத்தையும்
பரமாணு காரணத்வத்தையும் கூறும்
சாங்க்ய -வைசேஷிக -பவ்த்த -ஜைன -சைவ மதங்களைக் கண்டித்து
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்ம காரணத்வத்தைத் தழுவிய பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்

இரண்டாம் பாதத்தில் ஸாங்க்யாதி பஞ்ச மதங்களைத் தூஷித்து பாஞ்சராத்ரத்தைக் கொண்டாடுகிறார்
பஞ்சே தராணி சாஸ்த்ராணி ராத்ரீ யந்தே மஹாந்த்யபி -பாத்மதந்திர வசனம்

மூன்றாம் பாதமான வியத் பாதத்திலும்
நான்காம் பாதமான ப்ராண பாதத்திலும்
ஸர்வம் ப்ரஹ்ம கார்யம் என்பதை ஸ்த்ரீ கரணம் செய்து ஸ்தாபிக்கிறார்

ஆகாசத்துக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ப்ரஹ்ம காரியத்தை உபபாதிக்கிறார்
அசித்துக்குக் கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்குக் கார்யத்வம் ஸ்வ பாவ அந்யதா பாவம் என்று ஸித்தாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா –

அசித்து போக்யமாக ஸ்வரூப விகாரம் அடைய வேணும் -மாம்பூ மாம்பிஞ்சு மாவடு மாங்காய் மாம்பழம் போல் ஆக வேண்டுமே –
அதே போல் பிரகிருதி -மஹான் -அகங்கார பூத பஞ்ச காதிகளாகப் பரிணமிக்க வேண்டுமே
அவ்வாறு பரிணமிக்கும் படி சங்கல்பிக்கிறான் காரணபூதனான ஸர்வேஸ்வரன்
ஜீவன் இவற்றுக்குப் போக்தா
ஸ்வரூபத்தால் நிர்விகாரன்
ஸ்வ தர்மபூத பெற்று அனுபவிக்கிறான் –
இவற்றுக்கு நியாந்தா ஸர்வேஸ்வரன்
ஜீவாத்மா வேறு அவனது தர்மபூத ஞானம் வேறு -ஓன்று தர்மி -மற்ற ஓன்று தர்மம் –
தத்வத்ரயமும் ச விசேஷமே
வைலக்ஷண்யம் கூற ஓரோர் அதிகரணத்திலும் ஒரு விசேஷம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –
ஸங்கல்பம் ஆனந்தம் முதலான விசேஷ குணங்களோடு ப்ரஹ்மம் என்று ஸ்தாபிக்கிறார் –

மூன்றாம் அத்தியாயத்தில்
உபபத்தேச்ச -என்று உபாய பூதன் என்று கூறுகிறார்
வ்யாஜங்களாக பக்த்யாதிகள்
பக்தி விளையும் போது விஷயாந்தர வைராக்கியமும் -பகவத் விஷய ராகமும் வேண்டுமே –
முதல் பாதம் வைராக்ய பாவம் -இரண்டாம் பாதம் உபாயலிங்க பாதம் –
மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்ம உபாஸ்ய குணங்கள் விசாரம்
நான்காம் பாதம் ப்ரஹ்ம வித்யா அங்க பாதம்

நான்காம் அத்யாயம் பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய பலம் –
இதில் முதல் முன்னமே வித்யா ஸ்வரூப சோதனம் செய்து மேலே வித்யா பலத்தைக் கூறுகிறார்
கர்ம விநாசம் அஸ்லேஷம் தூநநம் -உதறுதல் -உபாயனம் -வேறே ஒருவன் இடம் சேர்த்தால் இவன் எல்லாம் சொல்லப்படுகின்றன –
இப்படி சரீரத்தோடு கூடி இருக்கும் காலத்தில் வித்யா பலம் கூறப்பட்டு மேல் –
மூன்றாம் பாதத்தில் அர்ச்சிராதி கதி
நான்காம் பாதம் பிராப்தி பாதம் -பரமபதபிராப்தி
அனைத்துலகும் யுடைய அரவிந்த லோசனனைத் தினைத்தனையும் விடாதே அனுபவிக்கும் அனுபவம்
அபுநா வ்ருத்தி -பலமும் கூறப்படுகிறது –

ஆக
ஜகத் ஏக காரணமாய்
ஸர்வ சேஷியாய்
சேதன அசேதன விலக்ஷணமாய் உள்ள
ப்ரஹ்மமே
உபாஸ்யம்
முக்த ப்ராப்யம்
முக்தி பிரதம்
பரம போக்யம்
என்று சாரீரகத்தில் ஸ்ரீ வேத வியாஸ பகவான் அறுதியிடுகிறார்

இவை இத்தனையும்
ஸ்ரீ பாஷ்ய
வேதாந்த தீப
வேதாந்த சார
வேத்யங்கள் ஆகும் –

————-

விஷய நியமமே பிரபத்திக்கு உள்ளது

ஸ்ரீ வாஸூதேவனையே விஷயமாகக் கொள்ள வேண்டும்
ஆத்மாவுக்கு உத்தமம் மத்யமம் அதமம் என்ற புருஷார்த்தங்களாவன சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்கள் -நஞ்சீயர்

தரதி சோகம் ஆத்மவித் -சாந்தோ -7-1-3-என்று சோக நிவ்ருத்தியும்
தத் ஸூஹ்ருத துஷ் க்ருதே நூ நுதே -கௌ -2-1-4- என்று புண்ய பாப கர்ம நிவ்ருத்தியும் –
சோத்வ ந பரம ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்று தேச விசேஷ பிராப்தியும்
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்று ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவமும்
நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபையதி -முண்ட -3-1-3- என்று பரம சாம்யா பத்தியும்
ஆனந்தமயம் ஆத்மானம் உப ஸங்க்ராமதி -தைத்ரியம் ஆனந்த -8- என்று பகவத் ஸாமீப்யமும்
சோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா -தைத்த-ஆனந்த -1- என்று பகவத் குண அனுபவமும்
ரஸம் ஹ்யேவாயம் லப்தவா ஆனந்தீ பவதி -தைத்ரியம் -என்று பகவத் அனுபவ ஜெனித ஆனந்தமும்
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதா -என்று பகவத் அனுவ்ருத்தி ரூபமான கைங்கர்யமும்
ஞான பலமாக உபநிஷத்துக்கள் கோஷிக்கும் –
பக்திக்கும் பிரபதிக்கும் விஷய நியமம் பரம அவஸ்யகம் என்று நம் முன்னோர் அறுதியிட்டுள்ளனர் –

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை விஷய நியமமே உள்ளது -பிள்ளை லோகாச்சார்யார்-

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

உபாஸன மேவ நது ஞான மாத்ரம் இத்யேகா ப்ரதிஜ்ஜா தத்ராபி பக்தி ரூபா பன்னம் நோபாஸந மாத்ரம் இதி த்விதயா
ஏவம் விதம் உபாஸன மேவ ந து கர்ம சமுச்சிதம் -இதை த்ரு தயா தச்ச பர விஷய மேவ இதி சதுர்த்தீ -தேசிகன்

மீமாம்ஸா -கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரா சாத்ரிதா -தத்வ ரத்நாகர வசனம் -ஏகார்த்த ப்ரதிபாதகங்கள் –
ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைனிநீ யேந – போதாயனர்
ஸகல கர்மாக்காலுக்கும் ஆராத்யன் -ஸகல தேவதைகளுக்கும் அந்தராத்மா -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யன் பரமாத்மாவே -புருஷோத்தமன் –

ப்ரஹ்ம மீமாம்ஸையில் முதல் பத்து பாதங்கள் தத்வ பரம்
மேல் ஆறும் பர ப்ரஹ்ம ப்ராப்த்ய அனுபவ கைங்கர்ய ரூப பரம மோக்ஷ ரூப பரம புருஷார்த்துக்கு உடலாக உபாய நிஷ்கர்ஷம்

உயர்வற -தத்வத்பரம்
வீடுமின் -ஹித பரம்
ஆதவ் சாரீரார்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதி வக்தி சாக்ரா -தேசிகன்

விரக்தி பூர்வகமாக ப்ராப்ய ருசி உண்டானால் ஜிஜ்ஞாசை பிறக்கும் அதிகாரிக்கு ஆச்சார்யன் ஸ்வரூப ப்ராப்ய உபாய அனுகுணமான உபதேசம் செய்து அருளுவான்
முதல் பத்து பாதங்களால் ப்ராப்யாந்தர ஹேயதையும் பரம ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் அறிவித்து ப்ராப்ய ருசியைப் பிறப்பித்து
மேல் ஆறு பாதங்களால் ப்ராப்ய ஆணுக்கான ப்ராபகத்தை உபதேசிக்கிறார் –
பத்தாம் பாதத்தின் முடிவில் ஸித்த உபாய பூதனான சர்வேஸ்வரனுடைய காரணாந்தர நிரபேஷ காரணத்வ ரூபமான காரணத்வத்தை
உப பத்தே ச -3-2-34-என்ற ஸூத்ரத்தாலேயும்
பல ப்ரதத்வ ரூப ரக்ஷகத்வத்தை பல மத உபபத்தே -3-2-37- என்ற ஸூ த்ரத்தாலேயும் அறுதியிட்டு
வியாஜ உபாயத்தை மேல் விவரிக்கிறார் என்பது சம்ப்ரதாயம் –

——–

மூன்றாம் அத்யாயம் மூன்றாவது பாதம் -26 அதிகரணங்கள் கொண்டது
பர வித்ய அனுபந்தி விஷயங்கள் விசாரம் சில அதிகரணங்கள்
த்ருஷ்ட உபாஸன விஷயங்கள் விசாரம் பல அதிகரணங்கள் –
உபாஸன பேத அபேத விஷய விசாரம் சில அதிகரணங்கள்

இதில் 19 அதிகரணத்தில் -லிங்க பூயஸ்த்வ அதிகரணத்தில்
நாராயண அநுவாகம் ஸர்வ பர வித்ய உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம்-என்று அறுதிப்படுகிறது –
ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் -தைத்ரியம் -தஹர வித்யா ப்ரகரணம் -ஆரம்பித்து
ஸோஷர பரம ஸ்வராட் -என்று முடிவாக ஓதப்பட்டதே இவ்வதிகரணத்துக்கு விஷய வாக்கியம் –
இந்த நாராயண அனுவாகம் -தஹர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா –
ஸர்வ பர வித்யா உபாஸ்ய வஸ்து நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமா என்பது சம்சயம்
தஹ்ரம் விபாப்மம் -என்று முன்னுக்கும் பத்மகோச ப்ரதீகாசம் என்றும் பின்னும் தஹர வித்யா பிரஸ்தாபம் உள்ளபடியால்
நடுவே உள்ள நாராயண ஸப்த கடித வாக்கியங்கள் தஹர வித்யா உபாஸ்யம் என்று பூர்வ பக்ஷம்
இத்தைக் கண்டிக்கிறார் -லிங்க பூயஸ்த்வாத் தத்தி பலீய ததபி -3-3-43-இது ஸித்தாந்த ஸூத்ரம்-

லிங்க ஸப்தம் வாக்ய பரம்
இந்த அனு வாகத்தில் பிரதி ஸ்லோகம் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும்
நான்காவது ஸ்லோகத்தில் பதம் தோறும் நாராயண ஸப்த ஆவ்ருத்தியும் உள்ளது
பரவித்யைகளில் அக்ஷரம் என்றும் சம்பு என்றும் சிவன் என்றும் பரப்ரஹ்மம் என்றுமாம் பரஞ்சோதி என்றும் பரதத்வம் என்றும் பரமாத்மா என்றும்
நிர்தேசிக்கப்பட்ட உபாஸ்ய வஸ்துவை தத் தச்சப்தத்தாலே இங்கு -நாராயண அனுவாகத்தில் -அனுவதித்து அந்த உபாஸ்ய வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது –
ஆக இது ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணாய ப்ரவ்ருத்தமே
வாக்ய பஹுத்வத்தைக் கொண்டு பூர்வ பக்ஷம் நிரஸனம்

தத்தி பலீய -என்று மேலே ஸ்ருதி லிங்க வாக்யாதி பிராமண உபந்யாஸம் தோற்றுகிறபடியால் லிங்க ஸப்தம் ஹேது பரம் அன்று -சிஹ்ன பூத வாக்ய பரம் என்று கொள்ளப்பட்டது –
ப்ரகரணத்தை விட வாக்யம் பலிதம் என்பதே சித்தாந்தம் –

இதற்கு பூர்வபஷி மீண்டும் -எங்களுக்கு சாதகமாக லிங்கம் உள்ளது -முடிவில் பத்மகோச ப்ரதீகாசம் -என்று தஹர வித்யா சேஷத்வ உபபாதக லிங்கம் உள்ளதே
பிரகரணத்தை விடப் வாக்யம் பலிதமானாலும் லிங்கம் வாக்யத்தை விட பலிதம் ஆகுமே –

இதுக்கு லிங்க பூயஸ்த்வாத் -பரிஹார ஸூத்ரம்
இங்கே வாக்ய பூயஸ்தம் இருக்கிறபடியால் வாக்யங்களுக்கே பிரா பல்யம் –
மேலும் ஸஹஸ்ர ஸீர்ஷம் தேவம் -உபக்ரம லிங்கம் புருஷ ஸூக்த ப்ரத்யபிஜ்ஞ்ஞாபகம்
ஆகையால் உப சம்ஹாரகத லிங்கம் உபக்ரம லிங்கத்தை விட துர்லபம்
இந்த ப்ராபல்ய துர்லபத்வத்தை ததபி சப்தத்தால் பூர்வ காண்டத்தில்
ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான ஸமாக்யானம் சமவாயே பரா துர்பல்யம் அர்த்த விப்ர கர்ஷாத் -என்றே சொல்லிற்றே –

தஹர வித்யா ப்ரகரணத்தில் நாராயண அனுவாகம் படிக்கப்படுவான் என் என்னில்
உத்தாலகரான தகப்பனார் –
ஜகதாத்ம்யமிதம் ஸர்வம் -என்றும் –
ஸர்வம் ப்ரஹ்மாத்மகம் என்றும் பொதுவாகச் சொல்லி
பிறகு தத்வமஸி ஸ்வேதகேதோ -என்று பிள்ளை இடத்தில் விசேஷித்து உப ஸம்ஹரித்தால் போலே
பொதுவான விஷயத்தை தஹர வித்யா ரூப ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் காட்டி அருளுகிறார் வேத புருஷன் –
தஹர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று அறுதிப்படுமே யானால்
விகல்ப அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற ஸூத்ரத்தின் படியே
ஸர்வ பர வித்யா உபாஸ்யன் நாராயணன் என்று நியாய பூர்வகமாக அறுதிப்படும் –
நியாய நிரபேஷமாகவே ஸ்ருதியைக் கொண்டே இவ்வர்த்தத்தை அறுதியிட வேண்டி
நாராயண அனுவாகத்துக்கு தஹர வித்யா மாத்ர சேஷத்வத்தைக் கண்டித்து

ஸர்வ பர வித்யா உபாஸ்ய நிர்த்தாரணார்த்தத்வத்தை ஸ்ரீ வேத வியாசர் நிர்ணயித்தார் –

இந்த அநுவாகத்தில் -நாராயண பரம் ப்ரஹ்மா என்ற இடத்தில் நாராயணாத் பரம் -என்று பஞ்சமி ஸமாஸம் கொண்டு
சிலர் நாராயணனைக் காட்டிலும் மேம்பட்டது ப்ரஹ்மம் என்று வாதம் செய்தார்கள் –
இதுக்கு பூர்வ அபர விரோதமும் ஸ்ருத்யந்தர விரோதமும் வரும்
தத்வம் நாராயண பர -என்று இறே மேல் வாக்யம்
ஸமஸ்த பதமாகக் கொண்டால் லக்ஷனை ப்ரசங்கிக்கும்
லக்ஷணை இல்லாத வ்யஸ்த நிர்தேச நிர்வாகமே யுக்தம்
பற்றிற்று விடாமல் நாராயண பரம் என்றதனை ஸமஸ்த பதமாகக் கொண்டாலும்
நாராயண பர என்ற மஹா உபநிஷத்தில் பிரதம விபக்தியந்த நிர்த்தேசம் காணப்படுவதால்

இங்கும் -நாராயண பரம் என்னும் இடத்தில் -நாராயண பரம் ப்ரஹ்ம -என்று கொள்வதே யுக்தம்
தத் விருத்தமாகப் பஞ்சமீ ஸமாஸம் கொள்வது யுக்தம் அன்று –

———————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading