ஸ்ரீ பகவத் குணங்கள் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்  —

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

வைதிக மத ப்ரவர்த்தலரில் அக்ரேஸர் ஸ்ரீ பராசர பகவான்
அவரை உதாரர் என்று கொண்டாடுகிறார் நம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்
அவர் அருளியச் செய்த ஸ்ரீ விஷ்ணு புராணமே புராண ரத்னம் என்று கொண்டாடப்படுகிறது –
அதில் பகவச் சப்தார்த்தத்தையும்-அந்த ஸப்தம் இன்னாரைத் தான் முக்கியார்த்தமாகக் குறிக்கும் என்பதை

ஸூத்தே மஹா விபூத் யாக்யே பரே ப்ரஹ்மணி ஸப்தயதே
மைத்ரேய பகவச் ஸப்த ஸர்வ காரண காரணே
ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யஸசஸ் ஸ்ரீய
ஞான வைராக்ய யோஸ் ஸைவ ஷண்ணாம் பக இதீரணா
ஏவமேஷ மஹான் ஸப்த மைத்ரேய பகவா நிதி
பரம் ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நாந்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரி பாஷா ஸமந்வித
சப்தோயம் நோப சாரேண த்வன் யத்ர ஹ்யுபசாரத
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத
பகவச் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -என்று அருளிச் செய்துள்ளார்

பகவச் ஸப்தத்தாலே வாஸூ தேவன் உபய லிங்க விஸிஷ்டனாகக் கூறப்படுகிறான் -அதாவது
அகில ஹேய ப்ரத்யநீக னாகவும் கல்யாண குணாகரனாகவும் கூறப்படுகிறான் என்றபடி

நிகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகத் வம்ஸ உபய லிங்கம்

க்ருத்ஸ்னம் பகவத் ஸப்த வாக்யம் இதி அனுசந்தேயம்-என்று

எங்கள் ஆழ்வான் வியாக்யானம் இட்டு அருளுகிறார் –

பராசர்யரான ஸ்ரீ வேத வியாஸரும்
ந ஸ்தாந தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி -என்று சாரீரகத்தில் அருளிச் செய்தார்
ச குண நிர் குண வாக்யங்களுக்கு விரோதம் இன்மையை
ச குணம் -நித்ய கல்யாண குண விசிஷ்டம் -அபஹத பாப்மா –ஸத்ய காம ஸத்ய சங்கல்பம்
நிர்குணம் -ப்ரக்ருதி குணம் இன்மையால்
தூரே குணா தவ து சத்த் வரஜஸ் தமாம் ஸி தேந த்ரயீ நிர்குணத்வம் -ஆழ்வான்
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹோ அபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -என்று தேசிகனும் அருளிச் செய்தார்கள் இறே
கல்யாண குண ரஹிதம் ப்ரஹ்மம் என்பார்க்கு சாரீரகத்தில் உபயலிங்க பாதமும் குண உப ஸம்ஹார பாதமும் பாதகமாம்
இத்தம் ஜீவேச பூமா பஹரண குஹனா வாத மோமுஹ்யமாநான் ஷேப்தும்
ந ஸ்தானதோ அபி
இத்யதிகரணமதாரப்யதே அநேக ஸ்ருங்கம் -என்றும் அதிகரண சாராவளியிலே தேசிகன் அருளிச் செய்து உள்ளார் –

தோஷோ பதாவதி ஸமாதி சயநா சங்க்யா நிர்லேப மங்கள குணவ் கதுகா ஷடேதா
ஞான ஐஸ்வரீ சகந வீர்ய பாலார்ச்சிஷஸ் த்வாம் ரங்கேச பாச இவ ரத்ன மநர்க்க யந்தி -என்று ஸ்ரீ பராசர பட்டரும் அருளிச் செய்துள்ளார்
க குணவான் -என்று ஸ்ரீ இராமாயண உபக்ரமத்திலும்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் என்று திருவாய் மொழி உபக்ரமத்திலும் உள்ளனவே –
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் இரு கண்கள் -பகவத் விஷயமாம் பர வஸ்துவைக் காண்போர்க்கு –
ஸ்ரீ கீதை ஆறாம் அத்தியாயத்தில் பஜதே யோ மாம் -என்று அருளிச் செய்ய
மாறன் அடி பணிந்து உய்ந்த -எம்பெருமானார் கீதா பாஷ்யத்தில்
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய ஒவ்தார்ய மஹோ ததிம் ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதிம்

பகவத் கல்யாண குணங்களை பரத்வ -ஸுலப்யம் -என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்
அதவா
ஸ்வரூப நிரூபக குணங்கள் என்றும் நிரூபித ஸ்வரூப விசேஷண குணங்கள் என்றும் இரு வகைகள்
அதவா
ஸ்வரூப குணங்கள் என்றும் திருமேனி ரூப குணங்கள் என்றும் இரு வகைகள் –

ஈறில வண் புகழ் –
வண் புகழ் நாரணன்
வாழ் புகழ் நாரணன்
பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி என்று பஞ்ச பிரகாரங்கள்
அர்ச்சை நீர்மைக்கு எல்லை நிலம் -திரு ஆராதனம் செய்து பரம ஷேமத்தைப் பெறலாம் –

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ஸூ வர்ண ரஜதாதிபி -தாம் அர்ச்சயேத் தாம் ப்ரணமேத் —

விசத்ய பாஸ்த்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணிம் -ஸ்ரீ ஸுநக பகவான் அருளிச் செய்கிறார்

அர்ச்சையிலே கீழ் சொன்ன ஸமஸ்த குணங்களும் புஷ்கலம்-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading