ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் — ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

நம் ராமானுஜ தரிசனத்தில் ப்ரஹ்மம் ச குணன் -ப்ரஹ்மம் நித்யம் அநந்தன் -விபு -தேச கால வஸ்து பரிச்சேத ராஹித்யன்
ஸகல வாஸ்து அந்தராத்மா -ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -ஸ்ரீ மத் பகவத் கீதா
அவனது கல்யாண குணங்களும் அநந்தம்
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோயம் உச்யதே -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்
ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா
ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
ந ஹி தஸ்ய குணா ஸர்வே ஸர்வை முனி கணைரபி வக்தும் சக்யா வியுக்தஸ்ய சத்வாத்யை அகிலை குனை
வர்ஷாயுதை யஸ்ய குணா ந சக்யா
சதே குணா நாம் அயுதைகதேசம் என்று
ஸ்ம்ருதிகளும் பரமாத்வாய் ஸ்வா பாவிக அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண விசிஷ்டானாயே கூறுகின்றன

விரோதி அதிகரண நியாய உபக்ரம அதிகரண நியாயங்களைக் கொண்டு ச குண வாக்யமே பிரபலம் என்று ஸ்தாபித்துள்ளார் ஸ்ரீ பாஷ்யகாரர் –
ச குணம் -கல்யாண குண விசிஷ்டம்
நிர்குண -அபகுணம் இன்மை
இரண்டுக்கும் விரோதம் இல்லையே
ஆக இப்படி
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹ அப்யேக வாக்ய ஸ்ருதவ் ச -என்று விஷய விபாகம் செய்து
ப்ரஹ்மம் ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் என்று ஸ்தாபித்து அருளி உள்ளார் –

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் யசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேய குணாதிபி -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பகவத் கல்யாண குணங்கள்
ஸத்யங்கள்
நித்யங்கள்
மங்களங்கள்
ஸ்வா பாவிகங்கள்
அநாதி சித்தங்கள்
அநந்ய ப்ரயோஜ்யங்கள்
அநவதிக அதிசயங்கள் அஸங்க்யேயங்கள் –

———–

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்-27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஸங்க்யாதும் நைவ ஸக்யந்த குணா தோஷா ச ஸார்ங்கிணா -ஆனந்த்யாத் பிரதமோ ராசி அபாவாதேவ பச்சிம –
தோஷங்களையும் குணங்களையும் என்ன இயலாதே

ஈறில வண் புகழ் நாரணன்

அவற்றில் ஒன்றான ஒவ்தார்யத்தைக் காட்டிக்கொடுத்தது வானமா மலையிலே –

ஆஸ்ரிதர்களுடையாபேஷிதங்களைத் தானே இரந்து கொடுக்கையும்
தன்னிடம் பலத்தைப் பெற்றுப் போவார்களையும் உதாரர்கள் என்கையும்
பெருமவனுடைய நைச்யத்தையும் கொடுக்கப்படும் வஸ்துவினுடைய கௌரவத்தையும் பாராதே
தாய விபாக நியாயத்தாலே பிரதியுபகார நிரபேஷமாகக் கொடுக்கையும் –
நிறைய வாரி வழங்கியபின்பும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருக்கையும்

கன்னலே அமுதே கார்முகிலே -2-3-7-
ஒரு வகையால் வந்த போக்யம் அன்று
ஸர்வ கந்த ஸர்வ ரஸ
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கார்முகில் என்று தனது பேறாக சர்வத்தையும் கொடுக்கை

உபாயமாகத் தன்னையே காட்டிக்கொடுக்கும் குணம்

————

ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -163-

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள்
பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் –
மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை
ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே
அருளி செய்கிறார் மேல் —

ருசி விவசர்க்குப்
பாதமே சரணம் ஆக்கும்
ஒவ்தார்யம்
வானமா மலையிலே
கொழுந்து விடும் —

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள்-ஒவ்தார்யம் தொடங்கி ஸ்வாமித்வம் வரை )

அதாவது
கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே
பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு (பாதமே ஏவகாரம்)
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-திருவாய்-5-7-10- -என்னும்படி
திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம்

ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று
ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -)
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–
( ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -பட்டர் -ஐதிக்யம்-வந்து அருளி -தாளம் தட்டி மேலே போகாமல் -)

(உபாயம் உபேயம் ஐக்யம்-ப்ராப்யம் பிராபகம் -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -பஹுஸ்யாம் ப்ரஜாயேய–
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -உபாதானம் நிமித்த -அபின்ன நிமித்தம் -சகல குண விசிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி –
பாதமே -உபபதயேச் ச–பொருந்தும் -பிள்ளான் நிர்வாகம்
பத்தும் உபாயபரம் –நான்கும் பிராபகம் தானே -எது உபாயம் என்று காட்டும் பிரகரணத்தில் –
நின் பாதமே சரணாகக் காட்டி அருளினீர் -பல நீ காட்டிக் கெடுக்காமல் நெறி காட்டி விலக்காமல் -பட்டர் நிர்வாகம் –
ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -சரணை-திருவடிகளை ஆறாக தந்து ஒழிந்தாய்-
நின் பாதமே -வெளியில் எடுத்து -ப்ரதிஜ்ஜை -ஆணை -இப்படி மூன்று நிர்வாகங்கள் உண்டே -)

——————————————–

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
உனக்கொரு கைம்மாறு நான் ஓன்று இலேன் எனது ஆவியும் உனதே –திருவாய்-5-7-10- -உயிர்ப்பாசுரம்
ஆறு என்று உபாயம்
சரண் என்று உபேயம்
உபாய உபேயங்கள் இரண்டுமே உனது திருவடிகளே யாம்படி பண்ணினாய் -பிள்ளான் நிர்வாஹம்
ப்ராப்ய ப்ராபக ஐக்யம் ஸம்ப்ரதாயிகம்
இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்
எனக்கு உபாயம் உனது திருவடிகளே யாம்படி பண்ணித்தந்தாய்
ஆறு உபாயம்
சரண் என்றும் உபாயம் -எனக்கு என்று உபாயாந்தர நிஷ்டரில் காட்டில் தமக்குள்ள வேறுபாடு –
நோற்ற நோன்பிலேன் தொடங்கி உபாயாந்தர சூன்யதையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய் மொழி

————–

அர்ச்சாவதாரம் தான் ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராயப் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைவிக்கக் கடவதாய்
ருசி பிறந்தால் உபாயமாய்
உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமாய் இருக்கும் -பிள்ளை லோகாச்சார்யார் -ஸ்ரீ வசன பூஷணம்

ஆழ்வாரும்
ருசி ஜனகத்வத்தை திருக்குறுங்குடியிலே அனுபவித்து
மாதுர்யமாகிற உபேயத்வத்தைத் திருக்குடந்தையிலே அனுபவிக்கப் போகிறவராய்
உபாயத்வத்தை வானமா மலையிலே அனுபவிக்கிறார் –

ஆண்டாளும் புண்ணியன் என்று அவன் உபாயத்தைக் கூறி
முகில் வண்ணன் என்று அடியாருக்குத் தன்னை உபாயமாகக் காட்டிக்கொடுக்கும் ஒவ்தார்யத்தை அருளிச் செய்கிறார் –

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
–திருவாய்-5-7-10- -என்று முந்துற முன்னம் அருளிச் செய்து
பின்பே
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -5-8-11-என்று அருளிச் செய்கிறார்
இத்தால் பரகத ஸ்வீ காரம் முற்பட்டது -ஸ்வ கத ஸ்வீ காரம் பிற்பட்டது என்றதாயிற்று
திருக் கமல பாதம் வந்த பின்பு அன்றோ சென்றதாம் என சிந்தனையே –
அவனுடைய ஒவ்தார்யம் முந்துற பிரவஹிக்க பின்பே இவர்கள் பற்றுகிறார்கள்
கமலபாதம் வந்து என் கண்ணனினுள் உள்ளன -முற்பாடானாய் விஷயீ கரித்து சாதனா பாவம் சொல்லி
சென்றதாம் -என்று தன் திரு உள்ளம் மேல் விழுந்த- அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது –


நெறி நாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -நெறி காட்டுகையும் நீக்குகையும் ஒன்றே –
மத்யாஜீ மாம் நமஸ்குரு -என்ன அர்ஜுனனுக்கு சோக விஷயம் ஆயிற்றே
உபாயாந்தரங்கள் உபாயங்கள் அல்லா எண்பதுக்கும் மேலே அபாயமும் ஆகுமே –
அவன் அகற்ற நினைப்பாருக்கு உபாயாந்தர அனுஷ்டானத்திலே மூட்டி அசலாக்கி
அந்தரங்கர்களுக்குத் தன் திருவடிகளையே உபாயமாகக் காட்டுகிறான்
இந்த ஒவ் கார்ய குணம் கில்லுந்து விடுவது வானமா மலையிலே –
மோக்ஷத்துக்கு ஹேதுவாக செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்னில் ஸாஸ்த்ர விஹித கர்ம க்ரியா கலாபங்கள் அனுஷ்டிப்பது
தெருள் கொள் நான்மறை வல்லார் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீ வர மங்கல நகர்
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
அனுஷ்டானம் சாதகம் ஆகாதே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் ஸர்வ யஜ்ஜா ஸமாப்த்தா –
இவ்வளவு பிறந்தவன் இவற்றை விட்டால் குற்றம் வராது
இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் -கர்மம் கைங்கர்யத்தில் புகும் -முமுஷுப்படி

உதாரனான பகவானும்
உதாரரான ஆழ்வாரும்
உதாரரான நம் பூர்வர்களும்
உதாரரான நம் வானமா மலை ஸ்வாமியும்
வாழி வாழி வாழி -என்று பல்லாண்டு பாடுவதே நம் கர்தவ்யம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading