ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவ அனுபவம் — ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

வைநதேயஸ்ச பக்ஷிணாம் பறவைகளுக்குள் நான் பக்ஷிராஜ னான கருடனாக இருக்கிறேன்
என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றான்.

பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருடன்மேல் கண்டாய் தெளி பேயாழ்வார்

வேத ஸ்வரூபி வேதாத்மா விஹகேஸ்வர….
வேதப்பகுதி – கருடனின் அங்கம்
காயத்ரி மந்திரம் – கண்கள்
த்ரிவ்ருத் – தலை
வாமதேவ்யம் – உடல்
ஸ்தோமம் – ஆத்மா
சந்தஸ் – கால்கள்
தீஷ்ண்யம் – நகங்கள்
யஜ்ஞாயஜ்ஞம் – வால்
ப்ருஹத், ரதாந்தரம் – இறக்கைகள்

கருடனுக்கு கருத்மான் சுபர்ணன் பந்தகாசனன் பதகேந்திரன்
பக்ஷிராஜன் தார்ச்டயன் மோதகாமோதர் மல்லீபுஷ்யபிரியர் மங்களாலயர் சோமகாரீ
பெரிய திருவடி விஜயன் கிருஷ்ணன் ஜயகருடன்
புள்ளரசு கலுழன் சுவணன்கிரி என்றும்
ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

எம்பெருமானும் உவண கேதனன் -உவணமுயர்த்தோன்
வெஞ்சிறைப்புள் உயர்த்தான், அரவப்பகை கொடியோன் -கருடத்வஜன், கருட கமனன்,
ஆடும் கருளக்கொடியுடையான் வெற்றிக்கொடியுடையான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான்.

உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த“ என்று பெரியாழ்வார்….

தாஸஸ் ஸகாவாஹந மாஸநம் த்வஜ:
யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய:
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபினா II

“ வேதங்களைத் தனக்கு அவயவங்களாகக்கொண்டவனும், அடியவனாகவும், நண்பனாகவும்,
சிம்மாஸனமாகவும், வாகனமாகவும், மேற்கூரையாகவும், ப்ரகாசமான கொடியாகவும்,
நீர் ஏறிச்செல்லும் போது, உமது திருவடிகளின் நெருக்கத்தினால் உண்டான தழும்பை ஏந்தி
அடையாளமாகக் கொண்டவனும், நீர் ஏறிச்செல்லும் போது சந்தோஷத்தை அளிக்கும்
சாமரங்கள் போன்று வீசும் சிறகுகளை உடையவனும், நின்முன் கைகட்டி நிற்பவனுமான,
கருடனென்கிற பழையவனை உடையவனாக உள்ளாய். ” என்று
ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்னத்தில் ” ஒரு ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார்….

எம்பெருமானைக் கருட வாகனத்தில் சேவித்தவர்க்கு வைகுண்ட பேறு உண்டு
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

———–

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடுமறியாது
என்னிது வந்ததென்ன இமையோர் திசைப்ப எழில் வேதமின்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்த அது நம்மை யாளும் அரசே…..

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை…..

ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழி யாகி -முன் காமற்பயந்தான்……..

முன் இவ் வேழ் உலகு உணர்வின்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்……

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்….

என்றெல்லாம் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகள்… 🙏🙏

கல்வி கரையில! கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே *நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து* (நாலடியார்)

கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது.
போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன.
இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து
எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

பூமியில் நடக்கவும், வானத்தில் பறக்கவும், தண்ணீரில் நீந்தவும் கூடிய அன்னப்பறவைகள் குறித்து,
இந்தியப் புராணங்கள் கூறுகின்றன

நீரில் வாழ்ந்தாலும் அதன் இறகில் ஒருதுளி நீர் கூட ஒட்டாது.
பாலும் நீரும் கலந்திருந்தாலும், அன்னம் தனியாகப் பாலினை பிரித்து அருந்தும்.
நீரின் அழுக்குகளில் வாழ்ந்தாலும், தான் உண்பவற்றை, அருந்துபவற்றை சுத்தமாக்கி உண்ணும் பண்புடையது அன்னப்பறவை …

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம்
என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன….

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது.

அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை,
கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!

ஆசார்யர்களை அன்னத்திற்கு ஒப்பாகக் கூறுவர்
அஸாரங்களைத் தள்ளி ஸாரத்தை உணர்த்துபவர்கள்… 🙏

———–

ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:

ஆதி³த்யாநாம் விஷ்ணு:…..

ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி:……

ஆண்டாளும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு… என்கிறாள்…………

காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி…….

சூரிய ரதத்தின் ஏழு குதிரைகள்
காயத்ரி பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்று ஏழு சந்தஸ்ஸுக்கள்.

ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம்……

முக்தி மார்க்கத் தலைவாசல்……..

ஜகத் ஏக சக்ஷுஷே…..

ஸவித்ருமண்டல மத்யவர்த்தி நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:……. …..

செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி சிரீதரன் மூர்த்தி ஈதென்னும்…..…..

புரவியேழ் ஒருகாலுடைய தேரிலே…….

ஏழு குதிரைகளும்
(ஏழு சந்தஸ்ஸுக்களும்) ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
தேஜோ விசேஷத்தாலே
திருவாழியுடன் ஒத்து
கால சக்ர நிர்வாஹகனான எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டல தேஜஸைக் குறைத்து அக்னியினுடைய தேஜஸ் ஸூக்கும்
சந்திரனுடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்

மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும்

அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலாயும்

ஜகத் சக்ஷுஷே-
என்கிற படியே அனைவருக்கும் கண் போன்ற
ஸர்வேஸ்வரன் கண்ணிலே பிறந்த கண் மணியாயும்
வேத மயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில்
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய்

தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும்
செந்தாமரைக் கண்களும் உடையனாய் பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க உரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற

சூர்யப்ரபை.. யில்
ஸ்ரீ பார்த்தஸாரதி திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்….🙏🙏

————-

சந்த்ரமா மநசோ ஜாத…

புருஷ ஸூக்தத்தின்படி
பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் என்கை…

ஆண்டாளும்…
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்–என்கிறாள்..

விஷ்ணோ கடாட்சம் !! குளிர்ச்சியான கண் ஞானத்தை பெருக்க வல்லது,
வெப்பம் தரும் கண் அஞ்ஞான இருளை விலக்க வல்லது–திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் …
ஆண்டாள் பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது,
அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம்….

ஏககாலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரைமலர் பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்று கொண்டு,
கண்ணபிரானுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர்.
இஃது, இல்பொருளுவமை’ வடநூலார், அபூதோபமை’ என்பர்.
கண்ணனுடைய திருக்கண்கள் சேதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும்,
அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதிதிறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.

மகாவிஷ்ணுவின் இரண்டு கண்களும் சூரியன் மற்றும் சந்திரனாகப் பிரகாசிக்கிறது.
இரண்டுமே உதய காலத்தில் குளிர்ந்த கிரணங்களைப் பெற்றிருக்கும்.
எனவே, எழுந்தாற்போல் உதயமான சூரிய *சந்திரனைப் போன்று, இரண்டு கண்களால் எங்களை நோக்கினால்,
நாங்கள் சாபம் நீங்கியவர்களாக ஆவோம் என அழைக்கிறாள் ஆண்டாள் . 

சந்த்ரப்ரபை வாஹனத்தில் ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

———-

அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: என்று
வந்தவர் பிராட்டி ஸம்பந்தத்தாலே
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய *ராமஸ்யாக்லிஷ்ட
கர்மண:*
என்றாரிரே!!!! 🙏🙏

ஹனுமன் கருடனை போல் நித்யசூரி அல்ல! அவன் ஒரு சிரஞ்சீவி!
இன்னும் பூமியில் தானே வசிக்கிறான் அப்படியிருக்க ஏன் ஹனுமந்த வாகனம்…

இராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தத்தில் ஒரு நிகழ்வு

ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை ஶ்ரீராமானுஜனான இலக்குமணன் முதலில் எதிர்த்து போரிடுகிறான்

இராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச்செய்து கொண்டே வருகிறான்

ஒரு சில நிமுடத்துளியில் இலக்குமணன் விட்ட அம்பு
இராவணனின் பத்து கைகளிலில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச் செய்ததுடன்
மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்

ஶ்ரீலக்குமணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன்
இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு
பிரம்மா விசேடமாக தனக்கு தந்த வில்லை இலக்குமணன் மேல் ஏவுகிறான்

தன் மார்பை நோக்கி வரும் வில்லின் மகிமையை உணர்ந்த லக்குமணன்
அதனை எதிர்க்காமல் விட அந்த வில் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான்

இராவணன் வேகமாக வந்து இலக்குமணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான்
அவனால் துளி கூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் முடியவில்லை

இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான் இலக்குமணன் உடல் அருகே வேகமாக வந்து
ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல
இலக்ஷ்மணனை கைகளால் தூக்கிக் கொண்டு இராவணன் கண் முன்னாடியே வேக வேகமாக
ஶ்ரீஇராமன் இருக்குமிடம் சென்றடைந்தான்

மூர்ச்சையாகிக் கிடந்த இலக்ஷ்மணனை அவனெதிரே கிடத்தினான்

செயலற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த இலக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த இராமன்
சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு
மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய இராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்

அதே நேரம் இராவணனும் ஶ்ரீஇராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீஇராமன்முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த
அதர்மத்தையே தொழிலாக கொண்ட இராவணன் தேரில் போரிட வருகின்றபோது
தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும் தரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட வாயு புத்திரன்
மனம் நெகிழ, விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க,
ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி நாத்தழுதழுக்க ஶ்ரீஇராமனை பார்த்து

ஐயனே அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான்
அவன் எதிரில் தர்மமே வடிவமான ராமா !!!வெறும்தரையில நின்று போரிடப் போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது
தேவரீர் அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு
என்னோட தோள்மேல ஏறிகொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்ட
அனுமனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த இராமனின் விழியோரம் நீர்துளிர்க்க

ஹே! வாயுபுத்ரா!!எனக்கு இதைவிடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்கமுடியும்
அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது
எனக்கு ஏதுகுறை என சொல்லிக்கொண்டே அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்

ஹனுமானும் ஆனந்தத்தில் ஜொலித்தான்
ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும்
ஒரு ஆண் சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க

இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை
இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க….
காலம் காலமாய், நடந்தால் குடையாக நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக
திருமாலைத் தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேஷனும்
திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும்
விஸ்மயமாகி நோக்கிக்கொண்டிருக்க…..!!!

ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீஇராமனோ ,
ஹே! வானரவீரா!!
வெகுகாலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம், ஆசனம் இன்றே கிட்டியது என்னும் விதமாக
அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான்

அதே கோலத்துடன் இராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும்
அழகிய தேரையும் பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச்செய்து நிராயுத பாணியாக நிறுத்தி
ஹே! ராவணா!!நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை.
நீ இன்றுபோய் நாளை வா என கூறி அனுப்பியது வரலாறு…..

அந்த போர்க்கள ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே
இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்யதேச மற்றும்
அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது

ஹனுமன் வானரமோ மானுடமோ அல்ல
அவன் அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன்/ஸ்ரீ ராமதாஸன்🙏🙏

தூதோஹம் ராமஸ்ய என்று வந்தவன்,
பிராட்டி ஸம்பந்தத்தால்
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய
என்றானிறே🙏🙏

நவ வ்யாகரண பண்டித:* என்று பெருமாளே கொண்டாடிய ஹனூமந்தன்…
,
மாயா காலமிமம் ப்ராப்யதத்தம் தஸ்ய மஹாத்மந:
அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிலம்பிதம் அவ்யதம் !
உரஸ்த: கண்டகம் வாக்யம் வர்ததே மத்யமஸ்வரம் !!

ஏஷ ஸர்வஸ்வபூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத:
ஏஷ ஸர்வஸ்வபூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத:
அலப்யலாபமான ராம பரிஷ்வங்கம்🙏

இவ்வாறு பல பெருமைகள் வாய்ந்த ஹனுமந்த வாஹனத்தில்
ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

————

சூர்ணத்தால் எம்பெருமானுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே,
ஸ்ரீ பார்த்தஸாரதி ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதனாய்த்
தங்கச்சப்பரத்தில் திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்..
🙏🙏🙏

——–

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –பெரியாழ்வார் திருமொழி..1-7-1-

யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள்..
கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால்
அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல
தூங்கு பொன்மணியொலிப்ப உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க
கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப,
அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்ப்பரிக்க,
இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல்
பெருமளவு சத்தம் உண்டாக்க தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல
தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து,சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன்
தளர்நடை நடக்கிறான்…!!!🙏

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும்பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனதுதிருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிறகயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலேயே அழுக்கோடு சேரும். எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான்
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டுப்
புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே….
நீண்ட அந்தக் கருமுகிலையெம்மான் தன்னை”(பெரிய திருமொழி )
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்த உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே…!!!!

(காஞ்சி ஸ்வாமி )
🙏🙏
இனி

ஆழ்வார்கள் ஈரச்சொல்லால் எம்பெருமானை யானையாக அநுபவித்த ஒரு சில பாசுரங்கள்….. 🙏

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்–பெரியாழ்வார் திருமொழி -1-2-6-

தந்த களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலை–1-2-8-

தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய *செரு வதிரச்
செல்லும்ஆனை* எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி –7-1-

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6-

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை–2-10-6-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் *காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை* என்றும்–4-8-1-

அண்டர் கோன் என் ஆனை என்றும் –4-8-3-

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே -4-9-2-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று-7-4-1-

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

என் ஆனாய் தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்-10-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் –
திரு நெடும்தாண்டகம்-15

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -திருவாய்மொழி–3-9-1-
அமுதனாரும் இராமானுசனை
யானையாய் பாவித்து…..

பண் தரும் மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் என்றாரிறே..
🙏🙏🙏🙏

இவ்வாறெல்லாம் எம்பெருமானை ஒரு யானை யோடு
ஸாம்யம் தெரிவிக்கப்பட்டதெனினும்….

கஜேந்த்ரனுக்கு மோக்ஷமளித்த எம்பெருமானை ஆழ்வார்களின் ஈரச்சொல்லால்* அனுபவிப்போம்..

பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள் ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன்………

ஒரு ஆரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஜேந்திரன் என்ற யானையின் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்டு, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, . . ..

ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக் கொன்றான்;…….
ஒப்பிலேன் ஆகிலும், நின்னை அடைந்தேன், ஆனைக்கு நீஅருள்
செய்தமையால்…..

குண்டு நீருறை கோளரீ மத யானை கோள்விடுத்தாய்…..

ஆனை காத்து ஓர் ஆனை கொன்றது….

மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள் விடுப்பான்…….

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்…..

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா……

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அணுங்கி ,
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்தான்….

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணி….

பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டதற்கு எள்கி, அழுந்தி யமா களிற்றினுக்கு
அன்று ஆழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள் செய்தான்….

முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய,
விதலைத் தலைச் சென்றதற்கே உதவி வினை தீர்த்த அம்மான்….

தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளியவன்….

தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்று ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், ….

பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன்….

இன்னும் பல…. 🙏

யானை வாகனத்தை ஆரோஹித்த
ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு
கண்டருள்கிறார்🙏🙏

———-

*இன்று …
திரு அல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமானின் தேர்த்திருவிழா!!!!*!

தேர்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும்.
இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும்,
மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் உருவங்களும்
செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்…………. .. 🙏

திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள்
அழகாகக் கற்சிற்பங்கள் போன்று காட்சியளிக்கும்…… . . 🙏

தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது.
இத்தேர் சதுரம், அறுகோணம் என பல வகைகளில் அமைக்கப்படுகிறது…. . 🙏

வண்ண வண்ண மலர்த் தோரணங்கள், உதிரிப் பூக்கள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள்,
குஞ்சங்கள் கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும்……….. 🙏

வாழை மரங்கள், அழகிய வண்ணக்கொடிகள், பல்வேறு சிற்பங்கள் என்பன கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும்……….. 🙏

அர்ச்சுனனை
(பார்த்தன்) வில் எடுக்கும்படி பண்ணி அவனுடைய
திண்தேர்மேல் முன் நின்ற–வண்மையான- தேரில்…….
எம்பெருமான் தானே சாரதியாக முன்னின்று

அர்ஜூனன்… மேல் விழவேண்டிய அம்புகளை தன்மேல் தாங்கி!!

செங்கண்-செம்மையான அருள் நோக்கு நோக்கும் திருமால்
வாத்ஸல்யம் மிக்க- கண்களால் பரிவுடனே பாண்டவர்களை ரக்ஷித்த கண்ணழகு!!!!
செங்கண்மாலின் செந்தாமரைக் கண்ணழகு!!

அலவலை தன்னால் வந்த வெற்றி என்று இல்லாமல்
அப்படி ஆகிவிடாதவாறு அர்ஜூனன் வெற்றி பெற்றான் என்பது போல அவனைப் புகழ்ந்த கண்ணன்.!!!!

பக்தர்களுக்குத் தன்னை நம்பி சரணடைந்தவர்களின் பால் பகவான் அருளும் பாங்கு அப்படிப்பட்டது!!

அலவலை என்றால், தான் சொன்ன உபதேசத்தின் அர்த்தமும் கேட்பவர்கள் தகுதியும் பார்க்காது…….
அலை!! அலையாக!!! உபதேசம் பண்ணின சீர்மை!…. எளிமை!
🙏🙏🙏🙏

மங்கல நன் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழைப்பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்திப்
பூங்கொத்து காதில் புணரப் பெய்து ……. …

தேரில் எழுந்தருளி உலா வரும் எம்பெருமான் …
🙏🙏🙏🙏

அழகுடன் அலங்காரம் செய்யப்பட்ட பீடத்தின்
நடுவில்

ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமான்*
*ஸ்ரீதேவி பூதேவி
ஸஹிதனாய்த்* தேரில் ஆரோஹித்துத் திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

கோஷ்டியார் தொடக்கத்தில்…

திருமங்கையாழ்வார்
அருளிச் செய்த

திருவெழுகூற்றிருக்கை என்னும் ப்ரபந்தமும், தொடர்ந்து
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்………….என்னும் பெரிய திருமொழியும்
சேவிக்கப்படுகிறது
🙏🙏

பெரிய கயிறுகள், சங்கிலிகள் தேரில் இணைக்கப்படும், அவற்றை வடம் என்று கூறுவர்.
இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை வடம் பிடித்தல் என்பர்.
கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும்…….

தேர் செல்லும் வழி எங்கும் மக்கள் தத்தம் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு,
வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள்…………

தேரோட்டத்தன்று எம்பெருமான் எழுந்தருளிய எழில்மிகு தேரை வடம் பிடித்து ஊர்மக்கள் யாவரும்,
அந்த ரதவீதிகளில் தேரை இழுத்து வருவர்.
எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லித் தேர் இழுப்பவர்களுக்கு நீர்மோர், பானகம், தண்ணீர்
என வழங்க பந்தல்கள் அமைக்கப் பெற்று விளங்கும்….
கோவிலின் நாற்புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து திரும்பவும் தேர்
தன் நிலை வந்து அடையும் வரை தேரோட்டம் நடைபெறும்….. 🙏

இன்று உதயம் 7 மணி முதல் திருத்தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து
கோவிந்தா!! பார்த்தஸாரதி!! கோவிந்தா!!!! ….என்னும் முழக்கத்துடன் வடம்பிடித்து வருகின்றனர்….
🙏🙏🙏🙏

——–

கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என்று திருப்பாணாழ்வார்…
விரலொடு வாய்தோய்ந்த வெண்ணெய் என்று பொய்கையாழ்வார்..

ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெயுண்டு மண்ணையுண்டு என்று திருமழிசையாழ்வார்.

கானாயன் கழமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன்
என்று திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களின் ஈடுபாட்டை வ்யாக்யானிக்கும் ஆசாரியர்களின் ஸ்ரீஸூக்திகள் அற்புதமானவை.

மஹதா தபஸா என்று சக்ரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெறவேணும் என்று
நோன்பு நோற்றுப் பெற்றாப்போலே.
கவ்யங்கள் பாழ்போக வொண்ணாது. இவற்றை புஜிப்பானொருபிள்ளை வேணும் என்று
இதுக்கன்றோ இவனைப் பெற்றது.
என்பன இவ்விடத்து வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள்……..

இப்படியிருக்கக் கண்ணன் வெண்ணெய் உண்ட போது இவர்கள் மகிழாமல்
அவனைக் கட்டவும் அடிக்கவும் காரணமென்ன
வெண்ணெய்தானமுது செய்ய வெகுண்டு *மற்றாய்ச்சி யோச்சி
கண்ணியார் குறுங்கயிற்றால்* கட்டவெட்டென்றிருந்தான்

அளவுக்கு அதிகமாக உண்டானாகில் இவனுக்கு ஜரிக்காதே என்று அவர்கள் அவற்றை
இவனுக்கு அகப்படாத வண்ணம் உறிகளிலே சேமித்து வைப்பார்கள்.
அவர்கள் அவற்றை மறைக்க மறைக்க இவனுக்கு அதிலே ஆசை அதிகமாகும்.
எப்படியாவது அவற்றைத் திருடி உண்டு விடுவான். அகப்பட்டுக் கொள்வான்.
அவர்கள் அவனை உரலோடு வைத்துக் கட்ட வெட்டென்றிருந்தான் – அதற்கு இசைந்திருந்தான் கண்ணன்.
தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம், ஆச்ரித பாரதந்தர்யம் முதலிய குணங்களை வெளியிடுவதற்காகவே
அவதரித்திருக்கிற தன்னுடைய விருப்பம் நிறைவேறிய இசைந்திருந்தானாம்.

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்
அன்றாய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடாப்புண்டிருந்த பெருமான்
பெற்ற தாயாலாப்புண்டிருந்தழுதேங்கும் தாடாளா!!.. என்று
திருமங்கையாழ்வார்!!!

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளம் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும்” என்று குலசேகராழ்வார்……

பெரியாழ்வார்…………..
“பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆரவிழுங்கிய அத்தன்” என்றும்

“மிடறுமெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்” என்றும் அனுபவித்தார்…

ஆண்டாளும்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று…

திருமங்கையாழ்வாரும்.. …

ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று, தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்………… ஆராவயிற்றினோடு ஆற்றாதான் என்று…

உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்
என்று அருளிச் செய்கின்றார் பெரியாழ்வார்.

இங்கு
ஒன்றொழியாமல்
என்பதன் தாத்பர்யமாவது…
ஆழ்வார்களுக்கு அத்வாரகமாயும் ரிஷிகளுக்கு ஸத்வாரகமாயும் திருவருள் செய்தருளின எம்பெருமான்…….
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது!
கண்ணனுடைய வெண்ணெய்க் களவு சரித்ரத்திலேயே ஈடுபட்ட நம்மாழ்வாரும் கூட,
இந்தச் சரித்திரத்தை நெஞ்சால் நினைக்கவும் முடியாது என்கிறார்.

*துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்*
*தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால்* வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே
(திருவிருத்தம் 98)

மிகவும் தாழ்ந்தவர்களான இந்நிலவுலகத்தவர்கள் இவ்வுலகத்து போகங்களையும் கூட முழுமையாக அனுபவிப்பதற்குச் சக்தியற்றவர்கள்.
ஆனால் பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள் எப்போதும் எம்பெருானோடு கூடியிருப்பவர்களாய் நிரந்தரமாக
அவனையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குங்கூட கண்ணபிரானுக்கு
வெண்ணெய் உணவாயிற்று என்று சொல்லப்படும் இழிசொல் நெஞ்சால் நினைப்பதற்கும் அரிதானது என்கிறார் நம்மாழ்வார்.

இங்கு நம்பிள்ளை ஈடு:

ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்குங்கூட ஆச்ரயணீயனாய், அவாப்த ஸ்மஸ்தகாமனாய் இருக்கிறவன்,
ஆச்ரித ஸ்பர்சமுள்ள த்ரவ்யமே தனக்கு தாரகமாய், நேர்கொடு நேர்கிட்டப் பெறாதே, இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்கவேண்டி,
அதுதான் தலைக்கட்ட பெறாதே, வாயது கையதாக அகப்பட்டு, கட்டுண்டு, அடியுண்டு, ப்ரதிக்ரியையற்று,
உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ?”

கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவை அனுபவிப்பதிலேயே திளைத்திருக்கும் நம்மாழ்வார்
“கண்ணபிரானுடைய மற்ற சரிதங்களை அனுபவித்தாலும் அனுபவிக்கலாம். .
ஆனால் இந்த வெண்ணெய்க்களவை அனுபவிப்பது என்பது நெஞ்சினால் நினைக்கவும் முடியாது.
நித்யசூரிகளுக்கும் நெஞ்சினால் நினைக்கவும் முடியாததை நாம் அனுபவிப்பது முடியுமோ? என்கிறார்.

வெண்ணெய்த்தாழிக்கண்ணனாய்

ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்
🙏🙏🙏🙏

———————

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –நம்மாழ்வார்

மாவாய்ப்பிளந்தா னை– ஆண்டாள்..

கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்து கொன்றவர்…

அதுவுமன்றிக்கே….

குதிரை முகனாய் ஹயக்ரீவனாய்….
மாவாகி ஆமையாய் மீனாகி என்ற நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே…

அவதாரக் காரணம்
மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டனர்.
அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர்.
அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார்.
மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர்.
அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார்.
இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது.
அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

குதிரை……….

புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது.
இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர்.
பண்டையஅரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓடும் வல்லமை பெற்றது.

நமது வைணவ திருக்கோவில்களில் பிரஹ்மோத்சவத்தில் குதிரைவாஹனம் சிறப்பானது.

குதிரை….

புரவி தவிர ~
மா பரி மான், இவுளி, *கலிமா – என்று குதிரையின் வேறு பெயர்கள்.

குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை
விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலியன் நீலன் திருவாலிநாடன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர்.
தினமும் 1008 பாகவத அடியார்களுக்கு நித்யம் ததீயாராதனை செய்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் களவு செய்தாவது அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.
அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக எம்பெருமான் திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்
அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, திருமங்கையாழ்வார்’ என்று பெயர்பெற்றார்.

இந்த உன்னத நிகழ்வை நினவு கூறும் விதமாக இன்று
ஸ்ரீ பார்த்தஸாரதி தங்க குதிரையின் மீது எழுந்து அருளுகிறார்
🙏
திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார்.
பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.
ஸ்ரீமன் நாராயணன், ஆலி நாடனை கலியனாக ஆட்கொண்டு நம் கலியனோ?!!? என்று…

ஓம் நமோ நாராயணா என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்;
🙏
சிந்தை தெளிந்து அருள் பெற்ற ஆழ்வாரும்,
திருமொழி பாசுரங்களை வாடினேன் வாடி வருந்தினேன் என தொடங்குகிறார்.
🙏🙏

சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில் உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே,
ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை வாசித்தல் நடைபெறுகிறது.
இன்று பெருமாள் திருப்பரிவட்டத்துடன் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள
இந்தப் பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
🙏

ஸ்ரீ பார்த்தஸாரதி
குதிரை வாகனத்தில்..
திருமங்கையாழ்வாரைக் கடாக்ஷிக்கும் பொருட்டு
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார்…
🙏🙏🙏🙏

————

அழகான கண்ணாடி பல்லக்கு–
முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருக்கும்
பெரிய கண்ணாடி பல்லக்கில் இன்று ..

மின் இலங்கு திருஉருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்
என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்திப்படி…
ஸ்ரீ பார்த்தஸாரதி
கண்ணாடி பல்லக்கில் …
எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க, வாண வேடிக்கைகளுடன், விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது…. 🙏

கண்ணாடி உருவத்தைக் காட்டும்.
ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது.
கண்ணாடி ஸ்வரூப ஜ்ஞானத்திற்கு ப்ரதீகை…….

ஆண்டாள் ……
உக்கமும் * *தட்டொளியும் தந்து என்கிறாள்…
உக்கம் என்பது விசிறி=ஆலவட்டம்
தட்டொளி என்பது கண்ணாடி….
ஆலவட்டம் கைங்கர்யத்தையும்
தட்டொளி என்பது ஸ்வரூப ஜ்ஞானத்தையும்……
ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு……..
கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று
ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதையே ஆண்டாள் கூறுகிறாள்….

கண்ணாடிப் பல்லக்கில்
ஸ்ரீதேவி பூதேவி ஸஹிதனாய் சேவை சாதிக்கும்
ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமான்… 🙏

———–

நம்மாழ்வார் வைபவம்

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||……. பராங்குச பஞ்ச விம்சதி… 🙏

ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்).
* ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம் ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி.
இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.
ஸம்ஸாரிகளைக்காட்டிலும் பெருமை படைத்தவர் என்று ஒப்புக்கொண்டாலும்

விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் நித்யசூரிகளைக்காட்டிலும் வ்யாவ்ருத்தரே !
யாவர்நிகர் அகல்வானத்தே ( எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர்
என்று ஆழ்வாரும் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவர் புகழ்🙏

வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமமிட்டுக் குறிப்பிடுகிறார் உபதேசரத்தினமாலையில் ஸ்ரீமத் வரவரமுனிகள்🙏

இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.
ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम्* – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு
அது தன்னையேபிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !🙏

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை
த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.🙏

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள். …
இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை.
இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை
நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான் *
ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!. …

பகவத் விஷயம்
இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம் என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள்.

இதற்குக் காரணம் என்னென்னில்
திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம்

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை
ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார்.
எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே
ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும்
எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்…🙏

எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும்இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய் சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை..
இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்… 🙏

பகவதேகபரத்வம்
மாற்றங்களாய்ந்து கொண்டு என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே
எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யத்வம்
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்

ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.
முதலிலேயே பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும்
*தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”
இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.
இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்… 🙏

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது.
* அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்று முமூக்ஷுப்படி……….
.
திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்…

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்
ஸ்ரீபராசரபட்டர்🙏

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல்
போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும்
* தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்….. 🙏

ஸம்ஸார விச்சேதமுமாய்……
அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய்
இருப்பது திருவாய்மொழி.
* ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே என்றாறிரே ஆழ்வார்.
ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும்என்றபடி.🙏

இத்தகைய திருவாய்மொழியை செவி சாய்த்துக் கொண்டு
ஆனந்திக்கும் ஸர்வேஸ்வரனும்
ஆழ்வார்கள் ஆசார்யர்களும்
ஸுக்ருதின: ஜனா:
என்கிறபடியே
ஸர்வஜன ஸுக்ருத்துக்களும்…
🙏🙏🙏🙏

———-

வெட்டிவேர்!!!!! நறுமணத்துடன் குளிர்ச்சியையும் தரக்கூடியது!!!!!
வெட்டிவேர்சப்பரம் என்று பிரபலமாக அறியப்படும் *சின்ன திருத்தேர்..
இந்த வெட்டிவேர்…… இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது.
வெட்டிவேர் என்று அழைக்கப்படும் இவை 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது…..
மற்றும் அகலமான கொத்துக்களை உருவாக்குகிறது……
இந்த தேர் வெட்டிவேர்சப்பரம் என்று அழைக்கப்படுகிறது…
இந்த புல்லால் செய்யப்பட்ட பல தாள்கள் கோயில் தேரின் மீது வைக்கப்பட்டுள்ளன…
தூரத்திலிருந்தே தெய்வீக வாசனையை ஒருவரால் உணர முடியும்…..
புல் வெட்டிவேரின் தண்டு வெட்டப்பட்டு, மிருதுவாகி பாய் போடப்படுகிறது…..
இந்த பாய்கள் முன்பு கூட வீடுகளில் பயன்படுத்தப்பட்டன,
மேலும் காற்று அதன் வழியாக செல்லும்போது, ​​​​காற்றின் நறுமணமும் இயற்கையான குளிர்ச்சியும் இருக்கும்……….

இன்று …..
ஸ்ரீ பார்த்தஸாரதி
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஸமேதனாய்
வெட்டிவேர்ச்சப்பரத்தில்
எழுந்தருளி திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏

புறப்பாட்டில் கோஷ்டியாரால் திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி
சேவிக்கப்படுகிறது… 🙏🙏🙏

—————————————————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading