ஸ்ரீ திரு மாலை-34-உள்ளத்தே உறையும் மாலை-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

பதவுரை

உள்ளத்தே உறையும் மாலை–நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை
கள்ளத்தேன் நானும்–கள்ளனாகிய அடியேனும்
தொண்டு ஆய்–(உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்
தொண்டுக்கே கோலம் பூண்டு–அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து
(இருந்த போதிலும்)
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்–சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும்
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா-சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத
உடன் இருந்து அறிதி என்று–நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று
(நான் உணர்ந்து)
நான்-நான்
என் உள்ளே–எனக்குள்ளே
வெள்கிப்போய்–மிகவும் வெட்கப் பட்டு
விலவு அற சிரித்திட்டேன்–விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன்.

தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப்போய் என்னுள்ளே
நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்.

விளக்க உரை

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கி யிருக்கிற உன்னைச்
சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவு இல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன்
உனக்கு அடிமைசெய்பவன்போலத் தோன்றி
“இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக
“தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி
கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்த போதிலும்
“இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே இருந்து
கொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே
‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து
எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். –

ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும்.

விலவறச் சிரித்திட்டேன் என்றது – எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading