ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார்
அடியேனுடைய திருத்தாயாருக்கு மாமா என்பதால் தேஹ பந்து
திருவவதாரம் –1911–சித்திரை விசாகம்
தர்ம பத்னி ஆழ்வார் அம்மாள்
திருவாராதன பெருமாள் ஸ்ரீனிவாசனுக்கு புரட்டாசி திருவோணம் தோறும் 10 நாள்கள்
உத்சவங்கள் நடத்தி உபன்யாசங்கள் வழங்கி மகிழ்ந்தவர்
தம்முடைய 72 திரு நக்ஷத்ரம்–1982- -துந்துபி வருஷம் ஆவணி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் திருநாட்டுக்கு எழுந்து அருளினார்
நம் ஸ்வாமி சாதித்து அருளிய கிரந்தங்கள்
1-ஸதுஸ் லோஹியும் ஸ்ரீ ஸ்தவமும் -பொன்னுரை என்ற விளக்க உரை
2-ஸ்ரீ ஸ்துதி -அர்த்த தாரா -என்ற விரி உரை
3-ஸ்ரீ குணரத்ன கோஸம் -ஸூவர்ண குஞ்சிகா விரி உரை
4-ஸ்ரீ கோதா தண்டகம்
5-ஸ்ரீ வரத தண்டகம்
6-ஸ்ரீ ஆண்டாள் திருமணம் -நாடகம்
7-ஸ்ரீ தாசாரதி குரு ஸூப்ர பாதம்
8-ஸ்ரீ ஆழ்வார்கள் கண்ட ஸ்ரீ திரு அல்லிக்கேணி
9-ஸ்ரீ முதலியாண்டான் வைபவம்
10-ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி
11-ஸ்ரீ திருக்கச்சி நம்பி நான்மணி மாலை
12-ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதிக்கு அமுத விருந்து விரி உரை
————
இந்த அமுத விருந்து உரையில் இருக்குறது சில அமுத ஸ்ரீ ஸூக்திகளைப் பார்ப்போம் –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மாதுக்கு புக்ககமே சொந்தமாய் பொருந்தி நிற்கும் இடம்
பிறந்தகமோ புக்ககம் புகும் அளவும் ஒதுங்கி தங்கும் இடமே என்பது தோன்ற –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்னும் அழகு காண்க –
இங்கு –
புக்கில மைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு -என்னும்-குறள் நோக்க தக்கது
துச்சு-ஒதுக்கு -உடம்புகளில் ஒதுங்கி இருந்தே போந்த ஆன்மாவிற்கு என்றும்
புகுந்து இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தது இல்லை போலும் என்பது இக் குறளின் பொருளாகும் –
இக் குறளின் உரையில் பரி மேல் அழகர் –
வாதம் முதலிய வற்றின் இல்லாகிய உடம்பு என்றும்
அந் நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும் வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பிலும்
நிலை பெறாது வருதலால் -துச்சில் இருந்த -என்றார் -என்றும்
பின் புறப்படாது புக்கே விடும் இல் -மீட்சஈல்லாத முக்தி -அமைந்ததாயின்
பிறர் இதற்குள் ஒதுக்கி இரார் என்பதாம் -என்றும் உரைத்து ஈண்டு உணர்தல் பாலது –
பிறந்தகமாம் சம்சாரத்தை விட்டு பின் புறப்படாது புக்கே விடும் ஜீவான்மா மீண்டும்
சம்சாரத்துக்கு திரும்பாதது போலே –
பிராட்டியும் பிறந்தகத்தை விட்டு மார்பகம் புக்கவள்-மீண்டும் தாமரைக்கு திரும்பாள் -என்க –
பனி மலராள் வந்து இருக்கும் மார்பன் -என்றார் திரு மங்கை ஆழ்வார்
தாமரைப் பூவை பிறந்தகமாக உடைய பெரிய பிராட்டியார் அப் பூ நெருஞ்சிக் காடோபாதியாய்
திரு மார்பிலே வந்து இருக்கிற வைபவத்தை உடையவன் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .
விட்டுப் போகும் பூப் போன்றதன்று இருக்கும் மார்வு-அகலகில்லேன் என்று அன்றோ அவள் மார்பில் உறைவது
மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்-என்றபடி தன் திருவடிக்கு நெருஞ்சி முள் போன்ற மலரை விட்டவள்
எந்த குற்றம் அற்றதும் எல்லா நலமும் வாய்ந்ததுமான மார்பகத்தை விட வழி இல்லை யன்றோ –
இனி பூவின் பரிமளமே வடிவு எடுத்தது போன்ற பிராட்டிக்குப்
பூவும் வன்மை வாய்ந்து பொருந்தாது ஆயிற்று –
மார்போ –
மெல்லியதாய் –
இடமுடைத்தாய் –
இயைந்து பொருந்துவதாயிற்று என்னும் கருத்துப் பட-
பொருந்திய மார்பன் -என்றதுமாம்
பொலிந்து இருண்ட கார் வானிலே மின்னே போல்-மார்பில் திரு இருந்தது பொருந்தி உள்ளது என்க
விஷ்ணோர் தேக அநுரூபாம் வை கரோத் யேஷாகத் மனஸ்தநூம்
இந்த பிராட்டி எம்பெருமான் திரு மேனிக்கு ஏற்ப தன திருமேனியை அமைத்து கொள்கிறாள் -என்றபடி –
திரு மார்புக்கு ஏற்பப்-பிராட்டியின் திருமேனி அமைந்து பொருந்தி உள்ளது என்க –
இந்த நித்ய சம்ச்லேஷமே மதுப்பின் அர்த்தத்திற்கு சேர த்வ்யார்தமும் என்று மூதலிக்கிறார்-
————
மன்னி வாழ –
ஆஸ்ரயித்து வாழும்படியாக என்றபடி –
ஆஸ்ரயித்து என்னும் இடத்து மன்னி -என்றார் –
பயன் பெற்றவாறே விடுகை அன்றிக்கே என்றும் பற்று விடாது பொருந்தி நிற்றல் தோற்றற்கு-
வேறு பயனைக் கருதாதவனாய் -அநந்ய பிரயோஜனனாய்-ஆஸ்ரயித்து என்றபடி –
மன்னியதற்க்கு பிறகு வாழ்வு
என்றோ வருவது அன்று –
இரண்டும் ஒன்றாய் இணைந்தவையே என்பது தோன்ற –
மன்னி வாழ -என்று
இரண்டு சொற்களும்-இணைந்து நிற்கும் அழகு காண்க –
——–
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ அவன் நாமங்கள் சொல்லுவோம் -என்ற
சொற்களின் அமைப்பை நோக்கும் போது –
நாமங்கள் சொல்வது -வாழ்வாகிய எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு சாதனமாக தோற்றுகிறது –
அங்கனமே சிலர் எம்பெருமானுடைய சரணாரவிந்த ப்ராப்திக்கு சாதனம்
அவருடைய திரு நாம சங்கீர்தனமேயாம் -என்று-வரை உறைந்தும் உள்ளனர் –
ஆயின் அது ஏற்புடைத்தன்று –
எம்பெருமானார் திருவடிகளை அடைதற்கு அத்திருவடிகள் தவிர வேறு ஒன்றும் சாதனமாக மாட்டாது-
என்னும் துணிவு உடையவர் அன்றோ அமுதனார் –
பேறு ஓன்று மற்றும் இல்லை நின் சரண் அன்றி –அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று மேலே – -45 இவர் தாமே-அருளி செய்து இருப்பது கவனித்தற்கு உரியது –
ஆக எம்பெருமானார் திரு நாமங்களை சொல்வது-சாதனமாக மாட்டாது –
போக ரூபமானது என்பது உணரத் தக்கது –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –
இராமானுச நூற்று அந்தாதியை அனுசந்திக்க இசைந்த நெஞ்சைக் கூட்டிக் கொண்ட படி –
இராமானுச நாமம் ஒன்றுமே பாட்டுத் தோறும் சொல்லப் பட்டு இருப்பினும் –
நாமங்கள்
என்று பன்மையில் கூறியது நிர் வசன பேதத்தாலே -ஒரு நாமம் பலவாய் தோற்றுதல் பற்றி என்க –
ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பேர் -என்றது காண்க –
எம்பெருமான் திரு நாமங்களில் -நாராயணன் என்னும் திரு நாமம் போன்றது
எம்பெருமானார் திரு நாமங்களிலோ -ராமானுஜன் -என்னும் திரு நாமம் -என்க —
இனி நாமங்கள் என்பது இப்ப்ரபந்தத்தில் உள்ள பாசுரங்களை கூறலுமாம் –
நாமங்கள் குணங்களையும் செயல்களையும் கூறுவது போலே -பாசுரங்கள்
அவைகளை கூறுதலின் பாசுரங்கள் நாமங்கள் எனப்பட்டன -என்க —
திருவாய் மொழி ஆயிரம் பாசுரங்களையும் -நாமங்கள் ஆயிரம் -5 8-11 – – என்றார் நம் ஆழ்வார் –
அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டி தாதிகளுக்கு பிரதிபாதகமான ஆயிரத்திலும் –என்பது
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூக்தி-
———–
பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற
அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –
சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-
எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –
————-
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-
கள்ளார் பொழில் தென் அரங்கன் –
நித்யம் த்வன் மதுபான மத்த மதுப-என்று பிராட்டியை தேனாக பட்டர் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-
உருவகம் செய்து இருப்பதை நினைவு கூறக –
அடியார்கட்கு போக்யதை மிகுந்து விடாய் தீர்க்கும்-பரம பதம் போன்றது அரங்கனுக்கு இப் பொழில்
உபய விபூதிகளும் உடையான் என்பதை பார்க்கிலும் –
தென் அரங்கம் உடையான் என்பது-
அவனுக்கு ஏற்றமாய் இருக்கிறது –
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
தங்கள் இதய தாமரையிலே -திருவடித் தாமரையை சேர்த்து வைத்து கொளாத மனிசர்களை –
மலரை மலரோடு சேர்த்து வைப்பது அன்றோ முறை –
குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன் –
குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-
வாள் வீசி படித்துறை -நம்போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –
இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு –
ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு –
இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –
மிக்க சீலம் –
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இடம் வேற்றுமை ஏதும் இன்றி கலந்து பழகும் பழக்கம் சீலம் -எனப்படும் –
மிக்க உயர்ந்த இராமானுசன் மிக்க தாழ்ந்த என்னிடம் நெருங்கிப் பழகுவது மிக்க சீலம் அன்றோ –என்கிறார் அமுதனார் –
————-
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-
பேரியல் நெஞ்சே –
வள்ளலே -என்று வாரி வழங்குவாரை விளிப்பது போலப் -பேரியல் நெஞ்சே -என்று
நன்றி அறிவுடன் விளிக்கிறார்
இங்கு பெறுபவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாம் அறிவார் தம் கொடையின் சீர் -என்னும் –
ஔவையார் பாடலை நினைவு கூறுகிறார்
சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான் கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர்.
“தலைமேலாக மணிகள் இழைத்த கிரீடத்தைச் சூட்டி யிருக்கும் சேரமானிடத்தே பால் தரும் ஆடு ஒன்றினை யான் கேட்டேன்.
அவனோ, பொன்னாற் செய்த ஆடொன்றைத் தந்தான். இரப்பவர்கள் என்ன கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் தம் கொடையின் சிறப்பு எங்ஙனமாக இருக்க வேண்டும் என்பதனைக் கொடுப்பவர்கள் தாம் அறிந்து செய்வார்கள்” என்பது பொருள்.
அடி பணிந்தேன் உன்னை
நெஞ்சை பலர் கொண்டாடி உள்ளனர் -அடி பணிந்திலர் –அமுதனார் நெஞ்சு தனிப்பட்டது
ஆழ்வார்களுடைய நெஞ்சிலும் அது தனி சிறப்புற்றது –
இவர்களை விட்டு தான் மட்டும் எம்பெருமான் நாண் மலர்ப்பாதம் அடைவதும் உண்டு –
அத்தகைய குறை ஒன்றும் இன்றி எம்பெருமானார் அன்பர் அடிக் கீழ் தாள் சேர்த்ததோடு
அமுதனாரையும் அவ்விடத்திலே சேர்த்து வைக்கிறது நெஞ்சு –
அப் பேருதவிக்காக நெஞ்சின் அடிகளிலே விழுகிறார் அமுதனார்
பேய்ப் பிறவி யாரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க –
பூரியர் என்று மேலும் கூறியதற்கு கருத்து என் –என்னில் கூறுதும் –
உலகத்தவர் கண்ணால் காணும் இன்பத்தை ஒழிய வேறே ஓன்று உண்டு என்று
பகவத் விஷயத்தை பற்றி விடாப் பிடியாய் -நிற்றலைப் பேய்ப் பிறவி என்பர்
ஞானிகட்கு உலகத்தவர் பேய்ப் பிறவியர் –
உலகத்தவர்க்கு ஞானியர் பேய்ப் பிறவியர் பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் -என்றார் குலசேகரப் பெருமாள் –
உலகத்தவர் சொல்லும் பேய்ப் பிறவியை நீக்கல் பொருட்டு மேலும் பூரியர் என்று கூறினார்
பிறப்பின் கண் உள்ள நோவு மிகுதியை நன்கு புலப் படுத்ததற்கு மேலும்
பூரியர் என்றார் என்க -ஊறி -தோஷம் -அதாவது அஹங்காரம் மமகாரம் முதலிய பொல்லாங்கு –
இனி பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி என்றாலே போதுமாய் இருக்க
பேய்ப் பிறவிப் பூரியர் என்று -விசேடித்தது ஏன்-என்னில் –
தோஷம் சேர்க்கையால் வந்த தன்று பிறவிக் குணம் –
உபதேசாதிகளால் நீங்காது என்று தோஷத்தின் கொடுமை காட்டுவதற்காக அங்கன் விசேடித்தார் என்க –
ஆரியன் செம்மை இராமானுசன்
ஆரியன் இச் சொல்லுக்கு –
சமதிகத சர்வ சாஸ்த்ரராய் –சாஸ்திரம் அனைத்தும் நன்கு அறிந்தவராய்–என்று உரை அருளினார் பெரிய ஜீயர்
அதற்க்கு அடி -அநார்ய ஜூஷ்ட மச்வர்க்யம்-என்னும் இடத்தில் கீதா பாஷ்யத்தில்-
ஆர்ய பதத்துக்கு வித்வான் -என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருக்கிறது –
ஆர்ய என்னும் சொல் வித்வான் என்னும் பொருளை எங்கனம் தருகிறது என்பதை-
தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந்த தேசிகன் –
அதத்த் வேப்யோ தூராத்யாதா புத்தி ஏஷாம் தே ஆர்யா –
தத்துவம் அல்லாதவைகளில் நின்றும் தூர விலகின புத்தி உள்ளவர்கள் ஆர்யர்கள் -என்று விளககித் தந்துள்ளார் –
சாஸ்த்ரங்களில் சொன்ன தத்துவத்தில் ஊன்றி –அல்லாதவற்றில் புத்தியை செலுத்தாத தத்துவ தர்சிகள் ஆர்யர் என்றது ஆயிற்று
பேறு உடையார் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு
எம்பெருமான் விஷயத்தில் அன்பு செய்வது பேறு
எம்பெருமானார் விஷயத்தில் அன்பு செய்வது சீரிய பேறு
சீரிய பேறு உடையார் ஆழ்வான்
அவர் அடிக் கீழ் சேர்த்தல் -அவரை ஆஸ்ரயிக்கும் படி செய்தல்
இனி பேறு உடையார் என்று இராமானுசன் அடியார் எல்லோரையும் சொன்னலுமாம்-
அடிக் கீழ் சேர்ந்த பேருதவிக்கு பொருத்தமாக நெஞ்சின் அடிக் கீழ் பணிகிறார் அமுதனார் என்க
நம் ஆழ்வார் தம்முடைய முந்துற்ற நெஞ்சை -எம்மோடு நீ கூடி இயற்றுவாய் -என்று –
தம்மையும் கூட்டிக் கொண்டு போக வேணும் என்கிறார் –
அமுதனாரோ தம்மைக் கூட்டிக் கொண்டு சரம பர்வத்தின் எல்லையில் சேர்த்து விட்டதாகவே கூறுகிறார் –
————–
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –
முன்பு ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேரியில்வே-என்று உபாயம் தெரிய வில்லை என்றார் –
இப்பொழுது உபாயம் எம்பெருமானாரே என்று தெளிந்து காட்டுகிறார்
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி-
அடியேன் வாய் வார்த்தையாக கூட சொல்ல தெரியாமல் இருந்த என்னை –
மருள் சுரந்த -மருளாலே சுரக்கப் பட்ட என்றபடி –
மருளாவது -பொருள் அல்லாதவற்றை பொருள் என்று உணர்தல் –
இனி மருளை சுரந்த வினை என்னலுமாம் –
முன்பு அவித்தை வினைக்கு ஹேதுவாயிற்று –
இப் பொழுது வினை அவித்யைக்கு ஹேது வாகிறது –
மருளால் வினை -எனபது விதையால் மரம் -எனபது போன்றது –
வினையால் மருள் எனபது மரத்தால் விதை எனபது போன்றது –
முன்பு அநாதி எனபது தவிர வேறு இல்லை –அதனைக் கூறுகிறார் -முன்னைப் பழ வினை -என்று
முன் -பழைமை -இரண்டும் ஒரே பொருளை சொல்வன –
இவ் இரு சொற்களும் மீ மிசை எனபது போலே மிக்க பழைமையை உணர்த்தி
வேர் எனபது வாசனையை –
வாசனையை வேராக உருவினை செய்யவே -வினை மரம் என்பது பெற்றோம் –இது ஏக தேச உருவகம் –
ஊழி முதல்வனையே பன்னப் பணித்த –
எம்பெருமானார் பணித்தது ஸ்ரீ பாஷ்யத்திலே –மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் மட்டுமே காட்டி அருள
பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் இரண்டையும் காட்டி அருளுகிறார் –
முதலினையே -என்னாது முதல்வனையே -என்று உயர் திணையாக கூறினது –
காரணமாய் இருத்தல் பிரமத்துக்கு இயையும் என்பதை கூறும்-சமன்வய அத்யாயத்தின் பொருள்
பன்ன -என்பதால்-முதல்வனையே ஆராயும்படி -அம் முதன்மை -காரணத்வத்தையே உறுதிப்படுத்துவதால் –
பிறர் கூறும் குற்றங்களால் பாதிக்க படாமை கூறும் இரண்டாவதான-அவிரோத அத்யாயத்தின் பொருள் கருதப் படுகிறது –
இனி
பன்னுதல் விவேகித்து -அனுசந்தித்தலாதலின் உபாயம் தோற்றலின்-
மூன்றாவதான -சாதன அத்யாயத்தின் பொருளையும் இங்கேயே கருதுவதற்கும் இடமுண்டு –
இனி
பன்னுதல்-நெருங்குதலாய் -பர பிரமத்தை கிட்டுதல் -கூறுவதாக-கொண்டு
இங்கேயே நான்காவதான பல அத்யாயத்தின் பொருளையும் கூறுவதாக-கருதுவதற்கும் இடம் உண்டு –
பணித்த இராமானுசன் பரன் –
ஆசார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மிக மேம்பாடு உடையவன் –என்றபடி
ஆக்கை கொடுத்து அளித்த ஊழி முதல்வன் இவர்க்குப் பரன் அல்லன் –
ஆவி -ஆத்ம தத்வம் -கொடுத்து அளித்த இராமானுசனே இவர்க்குப் பரனாக தோன்றுகிறார்
நித்ய சம்சாரிகளாய் இருந்த தங்களை நித்ய ஸூரிகளுக்கு ஒப்பப் பொருள் ஆககினமை
கண்டு பரன் எனப் பற்றினர் ஆழ்வார்கள் ஊழி முதல்வனை –
அவனாலும் ஆகாது கை விடப் பட்ட தம்மை -விண்ணுளாரிலும் சீரிய ஒரு பொருளாக
இப்புவியில் ஆக்கினமை கண்டு எம்பெருமானாரையே பரன் எனப் பற்றுகிறார் அமுதனார் –
பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –
பாதமும் -உயர்வு சிறப்பு உம்மை
என் -என்று தம் இழிவை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார்
பரன் பாதமும் -பரம-புருஷனாகிய ரெங்க நாதன் திருவடிகளையும்
பரம புருஷனான ரெங்க நாதனும் எம்பெருமானாருக்கு-வசப்பட்டு இருத்தலின் –
அவன் திருவடிகளை வைத்து அருளுவதாக அமுதனார் அருளி செய்கிறார்
அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் -என்று மேலே இவர் அருளி செய்வதற்கு ஏற்ப
பரன் என்பதற்கு-ரங்க நாதன் என்று பொருள் உரைக்கப் பட்டது –
தரிக்க -தாங்க
இதனால் வைத்ததும் திருவடியை எடுக்காமல் நெடு நேரம் வைத்து இருந்த சுகத்தை அனுபவித்து பேசுவது தெரிகிறது –
இனி –தரிக்க -என்பதற்கு
இவர் தலை மேல் வைக்காமையினால் நிலை கொள்ளாது துடித்த
திருவடிகள் நிலை நிற்று தரிப்புக் கொள்ளும்படி என்று பொருள் கூறலுமாம்
திருப்பாதம் என்னாது பாதம் என்றது –
தலையில் வைபதர்க்கு முன்பு அதற்க்கான-சீர்மை அறியாமையினால் என்க –
இனி சென்னியில் வைத்த பாதத்தை தரிப்பது குணம் கண்டு அன்று –
சத்தா பிரயுக்தம் -இயல்பாக அமைந்தது -என்னும் கருத்துடன் அங்கனம் கூறினார் ஆகவுமாம்-
பரன் பாதம் என்று ப்ராப்தி -சம்பந்தம் கூறப் பட்டது
பரன் -என்று எம்பெருமானார் மேன்மையையும்
பாதம் வைத்தான் -என்று எளிமையையும்
என் சென்னியில் தரிக்க வைத்தான் -என்று சீலமும் அருளும் தோற்றுகின்றன –
எம்பெருமானார் தாமாகவே வந்து தமது நிர்ஹேதுக கிருபையால் தம் திருவடிகளை-
சென்னியில் தரிக்க வைத்து உய்வித்தல் அரங்கமாளி விஷயத்திலும் கண்டு அறிந்ததாம் –
————
எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –
உற்ற செல்வம்
செல்வம் தான் பயன் ஆவதோடு -பயனைப் பெறுதற்கு சாதனமும் ஆவது போலே-
எம்பெருமானார் தாம் ப்ராப்யர் ஆவதுடன் -பெறத் தக்க பேறாவதுடன் -ப்ராபகமும் -சாதனமுமாய்
இருத்தல் பற்றி செல்வகமாக உருவகம் செய்கிறார்
இராமானுச செல்வமோ -அங்கன் உயிர் மாய்வதற்கு ஹேதுவாகாத தோடு உயிர் சத்தை பெற்று-
தரித்து நிற்பதற்கும் ஹேதுவாதல் பற்றி-உற்ற செல்வம் -ஆயிற்று
பண்டைய இராமானுசன்-லஷ்மணன்-லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று செல்வம்-படைத்தவனாக கூறப் பட்டான்
இன்றைய இராமானுசனோ செல்வமாகவே கூறப் படுகிறார் –
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் –
எம்பெருமானார் இடம் உள்ள குணங்கள் வந்தேறின வல்ல –இயல்பாய் அமைந்தவை என்பார் -மன்னிய சீர் -என்றார் –
கீழே செல்வம் என்று இராமானுசனைக் கூறி இங்குச் சீர் தனக்கு உற்ற அன்பர் என்கையாலே
பொன்னின் மாற்று உயர்வுக்கு ஏற்ப அதனை விரும்புவது போல சீருக்கு ஏற்ப அன்புருகின்றனர் –
என்னும் கருத்து நயம்பட விளங்குவது காண்க .
சீர் பெரியதுமாய் அன்பு குறைவுமாய் இல்லாமல் சீருக்கு ஏற்ற அன்பு.
இங்கு அன்பு என்பது பக்தியைச் சொல்லுகிறது. அதாவது பக்தி என்பது ஜாதி குலம் வர்ணாஸ்ரமம் பார்த்து வருவதில்லை.
இங்கு ராமானுசன் என்னும் செல்வம் யாருக்கும் ஜாதி குலம் வர்ணாஸ்ரமம் பார்த்து வருவதில்லை –அவன் இயல்பான சீர் இதற்க்கு ஹேது .
குற்றம் காணகில்லார்
அன்புடைமை –தனக்குற்ற அன்பர்
திரு நாமங்கள் சாற்றுதல்
பக்தி ஏய்ந்த இயல்வு –
இம் மூன்றும் குற்றம்-காண கில்லாமைக்கு ஹேதுக்களாம்-
——–
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –
இயலும் பொருளும் இசையத் தொடுத்து –
தொடுத்து என்னும் சொல் -வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்களையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –
இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க .
இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .
ஈன் கவிகள்
கேட்கும் பொழுதே சுவை ததும்ப பாடும் அவர்கள் ஈன் கவிகள்…இன் கவிகள் என்பதன் நீட்டல் விகாரம் .-இனி
ஈனுகின்ற கவிகள் என்று வினை தொகை-ஆகலுமாம் -ஈனுதல்-உண்டு பண்ணுதல் -அதாவது அழிவற்ற காவிய உலகினைப் படைத்தல்
ஈன் கவிகள் என்னும் இடத்தில் கவிகள் என்றது கவி புனைபவர் என்றபடி –
இன் கவி பாடும் பரம கவிகள் -என்னும் இடத்தில் இரு பொருளினும் கவி என்னும் சொல்-வழங்கப் பட்டுள்ளமை காண்க –
அவன் தன் பெரும் கீர்த்தி –
அவன் கீர்த்தி என்னாது அவன் தன் கீர்த்தி -என்றது -எம்பெருமானார் ஒருவர்க்கே பெரும் கீர்த்தி-சொந்தமானது என்றபடி-
பெரும் கீர்த்தி -பேசி அளவிட முடியாத கீர்த்தி -திக்குற்ற கீர்த்தி என்பர் பின்னும் இவரே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி -என்றதும் காண்க –
எண் திசையும் ஏத்தும் எதிராசன் -என்கிற படியே-மகா தனமான கீர்த்தியை-
முன்னர்ப் பேரியல் நெஞ்சு-என்று கொண்டாடப் பட்ட நெஞ்சு –
இப் பொழுது
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சு -என்று இகழ்ந்து உரைக்கப் படுகிறது
பக்தி இருந்தால் பெரும் கீர்த்தியை மொழிந்திட நெஞ்சு இடம் தந்து இராது-அது இன்மையால் முயல வேண்டியது ஆயிற்று
நெஞ்சில் பக்தி இல்லாமைக்கு ஹேது அது பாவியாய் இருத்தல்
ஆல் என்பது ஓடு என்னும் பொருளில் வந்ததாக கொண்டு நெஞ்சோடு என்னலுமாம் ..
ஈன் கவிகள் அன்பினால் வாழ்த்துவர்
பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய யானோ -பெரும் கீர்த்தியை மொழிந்திட முயல்கின்றேன் –
அன்பினாலான மயல் ஈன் கவிகள் உடையது –
இயல்பான அறியாமை என்னது –
வாழ்த்தல் அன்பினால் ஆகிய மயலால் வந்தது
மொழிந்திட முயலுதல் பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய என் அறியாமையால் வந்தது -என்றபடி
தகுதி அற்ற தான் மொழிந்திட முற்பட்டதன் மூலம் -பக்தி இல்லாத நெஞ்சாலும் பேசும் திறத்தது-
எம்பெருமானார் பெருமை -என்னும் இழுக்கை தேடித் தருதலின் நெஞ்சைப் பாவி என்கிறார் –
இது அமுதனார் நைச்ய அநுசந்தானம் செய்து கொண்ட படி –
——-
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-
நம் கூரத் ஆழ்வான்
என்னும் இவ் இடத்தில் உள்ள சொல் தொடரில் -கூரம் என்பதால் குலச் சிறப்பும்
அறிவில் ஆழம் உடைமையைக் காட்டும் ஆழ்வான் என்பதால் கல்விச் செருப்பும் –
இரட்டுற மொழிதலால் அச் சொல்லாலேயே அறிவின் பயனைய இறை அனுபவத்தில் ஆழம்-உற்றமை தோற்றுதலால்
அறிவுக்கு தக்க படி ஒழுகுதலும் தோன்றுகின்றன –
பின்பற்ற தக்க நாதனாம் உறவு முறையைக் காட்டும் நம் -என்பதால் -அந்த ஒழுக்கத்தின் சிறப்புத் தோன்றுவதும் காண்க
மணவாள மா முனிகள் -அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஆகிற படு குழியை -என்று உரை அருளி உள்ளார் –
சிலர் வ்ருத்ததுக்கு-ஒழுக்கத்துக்கு -பதில் செல்வத்தை சேர்ப்பார் –
ஆழ்வானும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில்-வித்யா தன அபிஜன ஜன்ம மதேன -என்று
செல்வ செருக்கை தான் கூறி உள்ளார் –ஒழுக்கத்தை சொல்லவில்லை –
ஆயினும் இவ்விடத்தில் செல்வச் செருக்கை சொல்லுவது ஏற்ப்புடைதாகுமா எனபது சிந்தித்ததற்கு உரியது –
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடன் ஸ்ரீ ரங்கத்தில் உஞ்ச விருத்தி பண்ணிக் கொண்டு இருக்கும் போது அன்றோ-
அமுதனார் ஆழ்வான் சரண் கூடியது –
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் நைச்ய அனுசந்தானமாக கூறியது-பழைய நிலையை பொறுத்ததாகும் –
பழியைக் கடத்தும் இராமானுசன்
பழி -பாவம்
பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்–(திருக்குறள்: 44)
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் — பொருள் செய்யுங்கால் பாவத்தை யஞ்சி யீட்டி,
அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும்
பகுத்துத் தானுண்டலை ஒருவனில் வாழ்க்கை உடைத்தாயின்;
வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் — அவன் வழி உலகத் தெஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தலில்லை.
இங்கு பாவம் என்னும் பொருளில் பழி எனபது பரிமேலழகர் உரை
செயற்பாலதொரு மரனே ஒருவற்கு உயர்பாலதோரும் பழி -திரு குறள்-அறன் வலி வுறுத்தல் –
என்னும் இடத்தில் அறனுக்கு எதிர் சொல்லாக பழி என்னும் சொல் வழங்கப் பட்டு உள்ளது அறன் -நல் வினை
பழி -தீ வினை
பழிக்கப் படுவதனைப் பழி என்றார் -என்பர் பரிமேல் அழகர்
பெரும்பாலும் ஒழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தார்கே பழி-நேரிடக் கூடும் –
இழுக்கத்தின் எய்துவர் எய்தா பழி -என்றார் வள்ளுவனாரும்–
மணவாள மா முனிகள் பிராரப்த கர்மத்தையும் தொலைக்க வல்லவர் என்னும் கருத்துப் பட-
பழியை உவமை ஆகு பெயராக கொண்டு -பழி போலே அவஸ்யம் அனுபோக்தவ்யமான –அனுபவித்தே தீர வேண்டிய –
பாப கர்மங்கள்-என்று உரை அருளி உள்ளார் –
தீச் செயலில் முழுகி அழுந்தாதபடி கை தூக்கி விடுதலின் –பழியைக் கடத்தும் இராமானுசன் -என்றார் –
சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசன த்வம் -என்று -தன்னை சேர்ந்த மக்களின்
பாபங்களைப்-போக்குவதில் வல்லவர் தேவரீர் -என்றார் மணவாள மா முனிகளும் -யதிராஜ விம்சதியில் –
இனி பழி பாவம் கையகற்றி -இரண்டாம் திருவந்தாதி – -20 -என்னும் இடத்தில் போலே
காரணம் இன்றி வரும் நிந்தையை பழி என்னலுமாம் –
பாவம் செய்யா விடினும் செய்ததாக ஏறிட்டு கூறும் அபவாதம் பழி என்க-
அதாவது
அனுபவித்தே தீர வேண்டிய பாபங்களிலிருந்தும் கூட இராமானுசன் நம்மை கை தூக்கி விடுகிறார் என்றபடி .
காரணம் இன்றி வரும் நிந்தை- பழியிலிருந்தும் நம்மைக் காப்பற்ற வல்லது இராமானுசன் திருவடிகள் என்னும் படி இஃது.
இப்படி அனுபவித்து தீர வேண்டிய பாபங்கள் கழிந்த இடங்கள் உண்டா என்றால் ,
ஆச்சார்ய ஹ்ருத்யத்தில் , –
ஸ்ரமணீ , விதுரர் , ருஷிபத்நிகளைப் பூதராக்கின நெடுநோக்குப் பார்வை என்னும் ஸூர்ணிகையில்
எம்பெருமானுடைய கடாக்ஷம் இவர்கள் மேல் விழுந்து இவர்கள் பாபம் நசித்தது என்று காண்கிறோம்.
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்னும் பாசுர உரையிலும் இது காணலாம்.
சார்ந்த இரு வல்வினை சரித்து என்று ஆழ்வாரும் அருளிச் செயதாரிறே.
எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே
எனக்கு -சரண் கூடிப் புகழ் பாடி அல் வழியைக் கடக்கும் தகுதி வாய்ந்த எனக்கு-
சரண் கூடும் போது தாம் ஒரு பொருளாகத் தோற்றாமையின் தம்மைக் கண்டிலர் –
அதனால் -நான் -சரண் கூடிய பின் -என்றிலர் கீழே –
இப்பொழுது தாம் ஒரு பொருளாகி விட்ட படியால் எனக்கு வருத்தம் அன்று -என்கிறார்
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply