கீழில் திரு மொழியிலே
நாரணன் தன் நாமங்களான திரு நாம ப்ரபாவத்தைப் பல பிரகாரமாக அருளிச் செய்தார்
அத்திரு நாமங்கள் தானும்
ஸ்வரூப
ரூப
குணங்களுக்கு –வாசகம் ஆனாலும்
உகந்து அருளின நிலங்களில் அல்லது குண ப்ரகாஸம் இல்லாமையாலே
திரு நாமங்களை அங்கே சேர்த்து அனுபவிக்கிறார் –
அங்குச் சேர்த்த பிரகாரம் தான் என் என்னில்
வடதிசை மதுரை -என்று தொடங்கி
உகந்து அருளின நிலங்கள் எல்லாத்தையும் எடுத்துத்
திரு அயோத்தியைப் பிரதானம் ஆக்கி
அதிலே இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
திருக் கண்டங்கடி நகர் என்கிறார்
(வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 )
கீழே
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் (4-2-2 )-என்றது
பின்னாட்டித்
தங்கையை மூக்கும் -என்கிறார்
நந்தன் மதலையைக் காகுத்தனை -என்றது
முடியப் பின்னாட்டிப் போருகிற படி
இதில் காகுத்தனை முன்னதாக அனுசந்திக்கிறார் –
————
இரண்டு அவதாரத்திலே ஊற்றமாக
பல காலும் புருஷோத்தமன் என்று மனுஷ்யத்வே பரத்வத்தை அருளிச் செய்கிறார்
புருஷோத்தம வித்யை என்றும் உண்டு இறே
(அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை இடண்டாலும் உபாசித்தில் அதுவே அவனுக்கு கடைசி பிறவி
சரீர அவசா னத்தில் முக்தி பிரபன்னனுக்கு போல் உபாசகனுக்கும் இந்த இரண்டு ஞானமும் கொடுக்கும் )
நந்தன் மாதலை காகுத்தன்
புருஷோத்தம வித்யை கீதையில் 15 அத்யாயம்
தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –
பதவுரை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே–கங்கை கங்கை என்ற சப்த்தத்தைச் சொல்லுவதனால்
என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கங்கை காயத்ரி கீதா கோவிந்தன் -நான்கு க காரம் பாவனம்
கடு வினை–கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்–ஒழிக்க வல்ல சாமர்த்தியம் கொண்ட
கரை மேல்–கரையிலே
கை தொழ நின்ற–(பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்–‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை–(இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்–மூக்கையும்
தமையனை–அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்–தலையையும்
எங்கும்–நாட்டெங்கும்
தன் புகழ்–தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து–பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட–ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்–எமக்குத் தலைவனுமான
தாசரதி–இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
ஆத்மாநாம் மானுஷ்ய மன்ய -உங்களில் ஒருவன் என்று கொண்டாடியது போல் எம் தாசாரதி
எமது இருக்கை–வாஸஸ்தாநமாம்–
தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
தோளும் தலையும் இழக்கும் படி கார்யம் பார்க்கும் வல்லாளன் தங்கை இறே
தன் மூக்கும் தமையன் தலையும் இழக்கும் படி கார்யம் பார்த்தவள் இவள் தானும் இறே
விஷய பாரவஸ்யம் தான் என் செய்யாது தான்
(உலக இன்பம் விஷயாந்தரம்
இவள் பெருமாள் -விஷயம் -மேல் ஈடுபட்டாலும் மூக்கும் காதும் இழந்தாள்
விஷய பாரவஸ்யம் -மடல் எடுக்கப் பண்ணுமே -திருமங்கை ஆழ்வாருக்கும் உண்டே
சூர்பணகையும்-திருமங்கை ஆழ்வார்
அடையும் முறை வாசி உண்டே
பிராட்டியை முன்னிட்டே பிரார்த்தாலும்
வழி அல்லா வழி -துடிப்பால் சென்றார்
அது இல்லையே இவளுக்கு )
தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
ராவண வத அநந்தரம் ப்ரஹ்ம ஈஸாநா திகள் வந்து
பவான் நாராயணோதி தேவ என்ன
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் -என்று
பொருந்தாமை தோற்ற வார்த்தை அருளிச் செய்தார் இறே
அத்தையும்
பின்பு விளைந்த காரியங்களையும் பற்றத் திரு அயோத்தியை நோக்கி மீண்டு எழுந்து அருளித்
திரு அபிஷேகம் செய்து எல்லாரையும் உகப்பித்து தர்ம சமஸ்தானம் செய்து
ரமயதீதி ராம -என்னும் படி
எங்கும் தம் புகழ் ஆக்கி ராஜ்யத்தை ஈர் அரசு தவிர்த்து
நெடு நாள் ஆண்டு
தேவ தூதன் வந்து வீசு வில் இடும்படி திரு உள்ளம் பொருந்து எழுந்து இருந்து அருளி
இருந்தது எல்லாம் தம் பேறாக நினைத்து
எம் தாசரதி போய் இருந்து அரசாண்ட என்கிறார்
எம் புருடோத்தமன் இருக்கை
தாசாரதியான எம் புருடோத்தமன்
இங்குப் போலே கால பரிகணநை இன்றிக்கே நித்ய வாஸம் செய்கிற தேசம் –
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல்
யாதோர் இடத்திலே யாவன் ஒருவன் கங்கா ஸ்நானம் செய்கிறவனாக நினைத்து
கங்கை கங்கை என்று ஸ்நானம் செய்ய
பூர்வாகத்தில் நின்றும் பிரிப்பட்டுப் போந்தவற்றில் ஆஸன்ன அனுபவ யோக்யமான
கொடிய பாபங்களை எல்லாம் போக்கி ரக்ஷிக்க வல்ல கங்கையின் கரை மேல்
கை தொழ நின்ற –
கங்கை முதலான தீர்த்த தேவதைகளும்
கங்கா ஸ்நானம் செய்தவர்களும்
மற்றும் உண்டான லோக விசேஷங்களில் ருசி பிறந்தவர்களும்
கை தொழ நின்ற
கை தொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே
எல்லாரும் கங்கையின் கரை மேல் சென்று கை தொழும்படி இருந்த புருஷோத்தமனிலும் காட்டிலும்
நிலை நின்ற புருஷார்த்தம் திருக்கண்டங்கடி நகர் என்கிறார் –
அன்றிக்கே
கங்கை தான் எல்லாருடைய பாபங்களையும் போக்கும்
கங்கை முதலான தீர்த்தங்கள் தான் எல்லாருடைய பாபங்களையும் தாம் தாம் ஏறிட்டுக் கொண்டு
போக்குமது ஒழியத் தானாகப் போக்க மாட்டாது என்றும்
தாம் தாம் ஏறிட்டுக் கொண்ட பாபங்கள் போய் பாவநமாவது
விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரஷாள நோதகம் -என்கிறபடியே
அவ்வோ தீர்த்தங்களிலே ஸ்ரீ பாதம் விளக்கினால் அவை ஸூத்தமாம் என்கிற அர்த்தம்
பல இடங்களிலும் காணலாம்
ஆகையால்
கண்டம் என்னும் கடி நகர் தானே
கங்கை கங்கை என்கிற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் -என்னவுமாம் –
வடுக நம்பி உடையவர் தீர்த்தத்தாலே
கீழ் நாட்டில் ஷாமம் தீர்த்த வார்த்தையை இவ்விடத்தே ஸ்மரிப்பது
அன்றிக்கே
ஸத்வாரமான மாத்ரமே அன்றிக்கே அத்வாரமாகத் திருக் கண்டங்கடி நகர் தானே
கடுவினை களைந்திட கிற்கும்-என்கிறதே இறே
முக்யமும் பிராப்தமும்
(கங்கையை விட திவ்ய தேசத்துக்கு ஏற்றம் என்றவாறு
இதுவே இப் பதிகத்துக்கு முக்யமும்-வகுத்ததும் ஆகும் )
மோக்ஷயிஷ்யாமி -என்று பாபத்தைப் போக்குகிறேன் -என்றது போலேயோ
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்றது
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது பாவங்கள் சேரா -(பெரிய திருமொழி -7-4 )
கங்கை கங்கை என்ற
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற
எம் புருடோத்தமன் இருக்கை
கண்டம் என்னும் கடிநகர்
வாசகத்தாலே
கடு வினை களைந்திட கிற்கும்
என்று அந்வயம் –
————-
சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4-7-2 –
பதவுரை
நலம் திகழ்–(எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை வஹிக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்–ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி–தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்–(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்–(அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்–திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து–சேர்ந்து
இழி–ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்–ஜலத்தினால்
புகர் படு–விளங்கா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்
சலம்–ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்–வடிவை யுடைய
சந்திரன்–சந்திரனும்
தழல்–நெருப்பை
உமிழ்–உமிழா நின்றுள்ள
பேழ்–பெரிய
வாய்–கிரணங்களை யுடையவனாய்
வெம்–வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்–ஸூர்யனும்
அஞ்ச–அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து–மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு–(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்–(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமன்
வாழ்வு–வாழுமிடம்–அவனுக்கும் இதுவே ப்ராப்ய ஸ்தானம்
சலம் பொதி உடம்பில்
அம்ருத கிரணன் ஆகையாலே
ஜல மயமான சரீரத்தை யுடைய சந்திரன்
அழல் உமிழ் பேழ் வாய் சந்திரன்
அக்னியை உமிழா நின்ற கிரணமாகிற பெரிய வாயை யுடையனுமாய் பிரபாவானான தானும்
வெங்கதிர் அஞ்ச
வெம்மை யுடையவனாய் இருக்கிற ஆதித்யனும் தாழ
மலர்ந்து
ஒரு திருவடிகளைப் படிக்கு அளவாக விரித்து
எழுந்து அணவு
ஒரு திருவடிகள் மேலே கிளர்ந்து
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் குலையும் அளவும் எழா நிற்குமாய்த்து –
(கீலோகம் அளந்து அந்நிய சேஷத்வம் களைந்து
மேலோகம் அளந்து ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் களைந்து )
மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நீல ரத்னம் போன்ற வடிவு அழகையும்
பதறி அளந்த வியாமோஹத்தையும்
யுடைய புருஷோத்தமனுக்கு ப்ராப்யமான தேசம்
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
தீர்த்தத்தை தரிக்கையாலே -நலம் திகழ் சடையான்-என்கிறது
அவன் தலையில் கொன்றையும்
இவனுக்கு சரீரியும்
சேஷியுமான நாராயணன் திருவடிகளில் ப்ரஹ்மா சாத்தின திருத்துழாயும்
கலந்து இழி புனலால்
இரண்டும் கூடி பூமியிலே தாழ்ந்து வருகிற புனலால்
புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தேவதாந்த்ர பரரும்
பகவத் பரரோடு கூடினால்
தாஸோஹம் என்று விளங்குவர்கள் என்று காட்டுகிறது
(ஸ அஹம் ஸோஹம் போய் தாஸோஹம் ஆவார்கள் )
சந்திரன் வெங்கதிர் அஞ்ச என்றது
திருச் சிலம்புக்குக் கீழ் தாழ்கை யாலே –
———-
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-3 –
பதவுரை
(எம் பெருமானுடைய திருவடியை விளக்குகிற போது.)
சதுமுகன் கையில்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்–சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்–சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி–தங்கி,
கதிர்–ஒளியுடையனவும்
மணி–ரத்னங்களை
கொண்டு–கொழித்துக் கொண்டு
இழி–இழிகிற
புனல்–தீர்த்தத்தை யுடைய
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;
அங்கு–உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய–முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி–திருப் பவளத்தில் வைத்து ஊதியும்
அழலுமிழ்–நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து–திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்–(போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்–அஸுரர்களுடைய
தலைகளை–தலைகளை
இடறும்–உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை–எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்–
அதிர் முகம் உடைய வலம்புரி
அதிர் குரல் சங்கம் -என்கிறபடியே
வலம் புரிக்கு அதிருகை ஸ்வபாவமாய் இருக்கும் இறே
குமிழ்த்து
ஊதி
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்து (பெரியாழ்வார் -3-6 )-என்னுமா போலே
அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து
திருக் கையில் இருந்து கருதும் இடம் பொருதும் இறே விரோதி நிரஸனம் செய்வது
அங்கு எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
விரோதி நிரஸனம் செய்த பின் –
எம் புருடோத்தமன் இருக்கை-என்கிறார் –
சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
நான்முகன் கையில்
நால் தோள் அமுதின் திருவடிகளில்
சங்கரன் தலையில் தங்கி –
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
மிக்க ப்ரகாஸத்தை யுடைத்தாய் இருக்கிற ரத்நாதிகளை இரு கரையும் வீசி
எறிந்து கொண்டு இழிகிற புனலை யுடைத்தான
கங்கைக் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர்
அங்கு என்றது
பாரத சமர விபரீதரை –
———–
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுர நணுக நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
கமைஉடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே -4 -7-4 –
பதவுரை
இமவந்தம் தொடங்கி–இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்–பெரிய கடல் வரைக்கும்
இரு கரை–இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து–ஆரவாரித்துக் கொண்டு
ஆட–நீராட
கமை உடை பெருமை–(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;
இமையவர்–(இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து–அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள–ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை–துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம்- யமலோகத்தை
நணுக–கிட்டுகைக்காகவும்
நாந்தகம்–நந்தகமென்னும் வாளை
விசிறும்–வீசா நிற்குமவனும்
நம்–நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்–நகரமாகும்–
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
தேவர்கள் எல்லாம் தங்கள் ஜெயித்தார்களாக கர்வித்துத் தம் தாம் ஆசனங்கள் குலையாமல் இருந்து
தத் தத் பதங்களைத் தம் தம் ஸ்வம்மாக நினைத்து
ஸ அவதியான தத் தத் போக மாத்ரம் ஒழியத் தாம் தாம் அபிமானித்து
நிருபாதிக சேஷித்வ சங்கல்ப நிரங்குச ஸ்வா தந்தர்ய ஹேதுத்வம் முதலான குணங்களோடே
ஸ்ரீ யபதியாக பாவித்தார்கள் –
இவர்களுக்கு ஜென்ம சத்ருக்களாய் இவர்கள் ஈஸ்வரன் கொடுத்த போகத்தை புஜிக்கிறார்கள் என்று
காண மாட்டாமல் அஸஹமானரான அஸூரர்கள் அவர்களை நலியாமல்
தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கச் செய்தேயும்
தன் மேலும் வெல்லலாம் என்று வந்து யுத்த உன்முகரானவர்களுடைய கூட்டுக்கட்டு எல்லாம்
நம புர நணுக
அதர்ம பலம் புஜிப்பிக்கிற தர்ம ராஜனுடைய
ராஜ்யத்திலே சேர
நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
திருக் கையில் வாளை அசைத்து வீசா நின்ற
விசுறும் -என்ற
வர்த்த மானத்தாலே எதிர் பொரு சேனை போயிருக்கச் செய்தேயும்
இன்னமும் எதிர் பொர வருவார் உண்டோ என்று யுத்த உன்முகனாய் நின்று வீசுகையாலே
எம் புருடோத்தமன் என்கிறார் ஆதல்
அவன் நித்ய வாஸம் செய்கிற நம்மூர் என்னுதல்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
ஹிமவானுடைய உச்சி முதலாக மகத்தான ஸமுத்ரம் முடிவாக இரண்டு கரையில் உண்டான
லோகத்தில் உள்ளார் எல்லாம்
தம் தாமுடைய அபிமத ஸித்திக்கு ஜல ஸம்ருத்தி பெற்றோம் என்று
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் செய்யும்படியாக
கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே
க்ஷமையால் வந்த பெருமையை யுடைத்தான கங்கையின் கரை மேல்
அதாவது
இரு கரையும் கடந்து அழித்து அடைவு கெடப் பெருகாமல் அமைவு தோன்றத்
தெளிந்து குளிர்ந்து பெருகுகை இறே பெருமை –
அமைவு -சமைவு என்ற போது
சைதன்ய விவசாயத்தைக் காட்டும்
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் நம்மூர் –
———-
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-
பதவுரை
எழுமையும்–ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட–சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்–பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்–க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்–போக்கி விடும்படியான
பெருமை–பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;
உழுவது ஓர் படையும்–உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்–உலக்கையையும்
வில்லும்–ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்–திரு வாழியையும்
சங்கும–ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு–கோடாலியையும்
வாளும்–நந்தக வாளையும்
படைக்கலம் உடைய–ஆயுதமாக வுடையவனும்
மால்–ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளியிருக்குமிடம்–
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும்
படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
கலப்பை முதலாக ஸாதாரண அசாதாரண ரூபத்தால் அநேகம் ஆயிரம் திவ்ய ஆயுதங்களை
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக யுடையனாய் –
அது தானே பெருமையாக இருக்கிற புருஷோத்தமனுக்கு ப்ராப்ய ஸ்தலம்
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக்
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பூர்வ ஆகத்தில் பிரி பட்டு ஏழு ஜென்மம் முடிவான ப்ராரப்தம் எல்லாம் கூட்டியிட்ட தொகையில்
புண்ய அம்சத்தை நீக்கி பாப அம்சம் எல்லாம் ஸ்நாந வ்யாஜத்தாலே
அல்ப காலத்திலே கழுவிடும் பெருமை கங்கைக்கு உண்டாவது –
ஸ்வ தோஷ தர்சனம் செய்து
தோஷ நிவ்ருத்தி ஸாபேஷனாய் தர்ம ஸபையிலே அறிவித்து
அவர்கள் விதிக்கச் சென்று
திருக் கண்டங்கடி நகர் துறையாலே பூர்வ தோஷமும் நிவர்த்தமாம் என்னுமது அறிந்து
பாப விமோசன ப்ரார்தனையோடே கூடினால் இறே விமோசனம் பிறப்பது –
(இதனால் தான் ஸ்நாந வியாஜ்யம் என்கிறார் )
கழுவிடும்
கழுவி ஸூத்தனாக்கி விடும் –
————–
தலைப் பெய்து குமிறி சலம் பொதி மேகம் சல சல பொழிநதிடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-6-
பதவுரை
அரு தவம் முனிவர்–அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை–அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்–அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட–அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்–(யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்
கண்டம் என்னும் கடி நகர் ;
சலம்–(கடலிலுள்ள) ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்–மேகங்களானவை
தலைப்பெய்து–திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி–கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட–சள சள வென்று மழை பொழிய
கண்டு–(அதைக்) கண்டு
மலை–கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்–பெரிய குடையாலே
மறைத்தவன்–(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை–திரு வடமதுரையில்
மால்–விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்–ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளி யிருக்குமிடம்–
தலைப் பெய்து குமிறி சலம் பொதி
சலம் பொதி -தலைப் பெய்து குமிறி-
இந்திரன் ஏவல் படியே ஸமுத்ரம் தரையாம் படி ஜலத்தை எல்லாம்
தன் வயிற்றிலே பொதிந்து கொண்டு
திருவாய்ப்பாடியிலே தலைப்பட்டு இடித்து முழங்கிச்
மேகம் சல சல பொழிந்திடக்
சல சல எனக் குடத்திட்டுச் சொரிந்தால் போலே சொரிந்திட
சலசலப்பு -அநுகார த்வனி
கண்டு
மேகங்களினுடைய மிகையையும்
திருவாய்ப்பாடியில் உள்ளார் எளிமையையும் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன்
மலையாகிய பெரிய குடையாலே
ஒரு துளி ஒரு கல்லு ஒரு இடி என்றவையும்
ஒருவர் மேல் விழாமல் மறைத்தவன்
மதுரை மால்
அவதரித்த இடத்தில் வ்யாமோஹம் இறே
விரோதி நிவ்ருத்தியும்
நிகள பந்த நிவ்ருத்தியும்
உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்ததும் முதலானவை எல்லாம் –
புருடோத்தமன் வாழ்வு
அவனுக்கு நிரதிசய போக்யமான தேஸம்
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கங்கை அலைகிற திரை வாயிலே தீஷா நிபந்தனமாக அரிய தபஸ்ஸூக்களை செய்து
வாங் நியதியும் செய்து
யாகாதிகளையும் மந்த்ர க்ரியா த்ரவ்ய லோபங்கள் வாராமல் செய்து
அவ ப்ருத ஸ்நானமும் யுக்த லக்ஷணத்திலே செய்த அநந்தரம்
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பெருக்காறாய் யாக சாலையில் உண்டான கலப்பை முதலான யுபகரணங்களை எல்லாம்
எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற கங்கையின் கரை மேல் –
————–
தேவ ஸ்த்ரீகளுடைய அங்க ராக அலங்க்ருதமாய் வருகிறது
கங்கை என்று வர்ணிக்கிறார் –
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே – 4-7- 7-
பதவுரை
அற்புதம் உடைய–ஆச்சர்யமான
ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்–மத நீரும்,
அவர்–அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்–இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்–(அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து–ஒன்று சேர்ந்து
இழீ–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து–(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
(இங்கு உள்ள புருஷோத்தமனும் கையில் வில் பிடித்து சேவை )
வேழத்தை–(குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி–பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்–(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை–தலையை
சாடி–சிதறப் புடைத்தும்
மல்–(சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது–போர் செய்தும்
அரயைனை–உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த–அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்க–
(மூன்று பொருள்கள் இங்கு இழியவும் மூன்று சேஷ்டிதங்கள் அங்கு கண்ணன் செய்ததும்
இவருக்கு மங்களா சாசனத்துக்கு உத்தேச்யம் )
வில் பிடித்து இறுத்து
கம்சன் பரீஷார்த்தமாக இட்ட வில்லை நடுவே பிடித்து முறித்து
வேழத்தை முறுக்கி
குவலயா பீடத்தைக் கொம்பை முறித்துச் சலிப்பித்துக் கொன்று
மேல் இருந்தவன் தலை சாடி
ஆனை கொம்பு இழந்து விழுந்த பின்பும்
சிஷா பலத்தாலே விழாதபடி நடத்த வல்ல பாகனை திருக் கையால்
ஒரு கொம்பாலே தலை சிதறச் சாடி
மல் பொருது
முற்ற வெளியில் நின்ற மல்லரை யுத்தம் செய்து
நெரித்து வெண் கலப்பைப் போலே தூக்கி எறிந்து
எழப் பாய்ந்த அரையனை உதைத்த
எத்தனையேனும் உயர ஏறினது எல்லாம் தனக்கு அரணாம் என்று இருந்த கம்சனை
மஞ்ச ஸ்தலத்திலே இருந்த கம்சன் தலைக்கே மேலே அநேகம் தூரம் எழப் பாய்ந்து
அவன் தலையை இடது திருவடிகளால் உதைத்துக் கொன்ற
மால் புருடோத்தமன் வாழ்வு
வ்யாமோஹத்தாலே உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்த பின்பு இறே
புருஷோத்தமன் ஆய்த்து
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து
இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே
இந்திரனுக்கு நித்ய அபூர்வ புருஷார்த்தமான ஐராவதத்தின் மத ஜலமும்
ஸ்வர்க்க காமரான தேவர்களுக்கு அத்யந்த அபிமதைகளுமாய்
அப் பதம் உள்ள அளவும் யவ்வனம் குலையாத தேவ ஸ்த்ரீகள் முலைகளில் அணிந்த சாந்தும்
அவர்கள் குழலிலே சொருகின கற்பக மலரும்
கலந்து இழி கங்கை –
—————–
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –
பதவுரை
நெடியன–நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்–(பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக–திரள் திரளாக
நிரந்தரம்–இடை விடாமல்
ஒழுங்கு விட்டு–நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை -இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்–யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;
திரை பொரு–அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்–கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்–திண்மையான மதிள்களை யுடைய
துவரை–த்வாரகைக்கு
வேந்து–தலைவனும்
தன்–தன்னுடைய
மைத்துனன் மார்க்கு–மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்–பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய–துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை–ராஜ்யத்தை-அரசை -இன் சாரியை
அருளும்–(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி–(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு–பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்–
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து
பொரு திரை கடல் சூழ்கையாலே ஜல துர்க்கமும்
அதுக்கு உள்ளே திண்ணிதாக யுண்டான கிரி துர்க்கமும் சூழப்பட்ட -என்னுதல்
அன்றிக்கே
செய் குன்றம் போன்ற கற்பார் மதிள் என்னுதல்
இப்படி இருக்கிற ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகராய்
ஈர் அரசு தவிர்த்து விட்டு விளங்க இருந்தவன் –
தன் மைத்துனன் மார்க்காய்
திரௌபதியினுடைய ப்ரீதியிலே நின்று
மைத்துனன் மார்க்காய்-என்கிறார்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு-
வந அக்னி மஹா வர்ஷத்திலே அவியுமா போலே
மிகை விருதூதி வாய் மாறி வந்த ப்ரதி பக்ஷத்தை நிரஸித்து
பாண்டவாதிகளுக்கு அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
வேத வாத ரதராய் ஸப்த மாத்ரத்திலே நிற்பாருக்கும்
வேத வேதாந்த நிகமன தத்வ தர்சிகளாய் பரஸ்பர விரோத ஸமாதான ஸா பேஷராய் இருப்பார்க்கும்
பிரணவ உச்சாரணத்துக்குப் பூர்வ பாவியாயும்
பிரணவ ஸப்த வாச்யனாயும் இறே
ஹரி என்றால் தோற்றுவது
(இருவருமே ஹரி என்றே முதலில் சொல்லுவார் -ஹரி என்றாலே பிரணவமே என்றவாறு )
புருஷோத்தமன் என்றால்
பிரதம அக்ஷர (அகார )விவரண நாராயண பதத்தில்
அசாதாரண குண விசிஷ்டனாய்
வாஸ்ய பிரதானனாயத் தோற்றும்
ஸத்
ப்ரஹ்ம
(ஆத்மா )
இத்யாதிகளில் (போன்ற பொதுச்சொற்கள் )
பஸ்வதி கரண நியாயத்தாலே அது தான் சேராது
(பசு -நாலு கால் பிராணி -ஆடு சாமான்ய விசேஷ நியாயம் போல் அல்ல
ஹரி சாமான்யம் புருஷோத்தமன் விசேஷம் அல்ல
இரண்டுமே அவன் ஒருவனையே குறிக்கும் )
அமர்வு
இதுக்கு அவ்வருகு அவனுக்கு
அபிமதமும்
பிராப்தமுமாய் இருப்பது இல்லை இறே
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு
நிரை நிரையாக ஒழுங்கு பட நாட்டப்பட்டு
நெடிதான யூபங்களும் செய்கிற யாகத்தில் ஹோம தூ மங்களும்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
இரு கரை குறிக்க ஒண்ணாத படி ஒரு கோவையாய்த் தோற்றுகிற கங்கையின் கரை மேல்
—————-
வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகை யுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலைப் பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 –
பதவுரை
தட வரை–(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர–சலிக்கும் படியாகவும்
காணி–பூமியானது
விண்டு இடிய–பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி–(மரங்களினுடைய) தலை யளவுஞ் செல்லக் கிளம்பி
கரை–கரையிலுள்ள
மரம்–மரங்களை
சாடி–மோதி முறித்தும்
இடம் உடை–இடமுடையத்தான் (விசாலமான)
கடல்–(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க–கலக்கும்படி
கடுத்து–வேகங்கொண்டு
இழி–இழியா நின்றுள்ள
களித்திழி-பாட பேதம்
கங்கை–கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;
(யதா காஷ்டஞ்ச காஷ்டஞ்ச -கட்டைகள் -மரம் பிரிந்து வருவது போல் பிறவிகள் தோறும்
சுற்றத்தார் மாறும் -இந்த மரங்களை வைத்தே ஸம்ப்ரதாயார்த்தம் சொல்லுவார்கள் )
வட திசை–வடக்கிலுள்ள
மதுரை–ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்–ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டமும்
துவரை–ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி–திருவயோத்தையும்
இடம் உடை–இடமுடைத்தான (விசாலமான)
வதரி–ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய–வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை-
வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி இடமுடை வதரி
இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
உத்தர மதுரை தொடக்கமாக அநேகம் திருப்பதிகள் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
திரு உள்ளம் பொருந்து வர்த்திக்கும் திருப்பதி
தடவரை அதிர தரணி விண்டிடிய
இடமுடைத்தான ஹிமவான் ஒரு சிறு கல் போலே அதிர்ந்து சலிக்கும் படி அதன் மேல் குதித்து
அதில் நின்றும் போந்து
பூமி ஆழ்ந்திட இடம் கொண்டு தளம் இடியும்படி குதித்து
தலை பற்றி கரை மரம் சாடி
நடு நின்ற மரங்களின் தலையிலே மணல் ஏறக் கிளம்பி
கரை நின்ற மரங்களும் வேரோடு சாய்ந்து ஒழுகும் படி தள்ளி
கடலினை கலங்க
ஒன்றாலும் கலங்காத (அஷோப்யமான )சமுத்திரமும் கலங்கும்படி
களித்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தரணி விந்து இடியக் குதித்த வேகம் அடங்காமல்
குதியா நின்ற கங்கையின் கரை மேல் –
————
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-
பதவுரை
கான்–நறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட–பெரிய
பொழில்–சோலைகளினால்
சூழ்–சூழப் பெற்ற
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை–அகார, உகார, மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்– (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷரமான பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
நிருக்தம்’-வேத சொற்களுக்கு அர்த்தம் சொல்லும் நூலுக்கு மூன்று எழுத்து என்றபடி
மூன்று எழுத்து ஆக்கி–(மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை–(அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு–(தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய–சிறந்த கருணையை யுடையவனும்-தனது பேறாக கொண்டு தயை பண்ணுபவன் -இரக்கமே உபாயம்- இனிமை புருஷார்த்தம்
மூன்று அடி நிமிர்த்து–அந்த பிரணவத்தை நம பதத்தோடும் நாராயண பதத்தோடும் நாராயண பதத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்–(அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி–(ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்–அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்–(காணும்) சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை–
மூன்று எழுத்து அதனை
அகார பிரதானமாய் இருக்கிற பிரணவத்தை
மூன்று எழுத்து அதனால்
நிருத்தம் என்கிற ப்ரக்ரியையாலே
மூன்று எழுத்தாக்கி
அகார உகார மகார என்கிற மூன்று எழுத்துக்கள் ஆக்கி
மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார்க்கு
அகார வாஸ்யனே உத்தேச்யன் என்று பிரதிபத்தி பண்ணி இருப்பார்க்கு
இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
இவர்கள் அளவிலே தன் பேறாக கிருபை பண்ண வல்லனாய்
எனக்கு ஸ்வாமியான
அந்தப் புருஷோத்தமன் நித்ய வாஸம் செய்கிற தேசம்
மூன்றடி நிமிர்த்து
இத்தைப் பிராணவத்தோடே மூன்று பதமாக விவரித்து
மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
அந்தப் பத த்ரயத்திலும் தோற்றின
அநந்யார்ஹ சேஷத்வ
அநந்ய சரண்யத்வ
அநந்ய போக்யத்வங்களாய்த் தோன்றின அர்த்தங்கள்
மூன்றுக்கும் பிரதி சம்பந்தியாய்
சேஷித்வ
சரண்யத்வ
போக்த்ருத்வ
ப்ரகாசங்களான மூன்று உரு ஆனான் என்னுதல்
அன்றிக்கே
மூன்றில் பிரதி சம்பந்தியாய்த் தோன்றின மூன்றிலும் காட்டில்
மேன்மையும் நீர்மையும் வடிவு அழகுமான
ஸ்வரூபேண மூன்று உரு ஆனான்
(மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -பசும் கூட்டம் )
ஆனாலும் அவன் தன்னுடைய மேன்மையைக் காட்டில் அவனுடைய நீர்மையும் குண பரமாம் அத்தனை இறே
சேதன பரமாய் இருக்கிற மூன்றில் ஸாஷாத் ஸ்வரூபேண
தேவும் தன்னையும் (2-7-4 )மூன்று உரு ஆனான்
(கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் –தேவு -ஐஸ்வர்யம் தன்னையும் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஈடு )
கான்றடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
கான் என்று கடல் கரைக் கழிக்கும் பேர்
நீரோடு காலுக்கும் பேர்
இவ்வளவு இறே கங்கைக்கு உள்ளது
பாப விமோசனம் கடி நகரிலே
(கங்கை வெறும் 60000 பாப விமோசனம் அக்காலத்தில்
அனைவர் பாபங்கள் -அனைத்து காலங்களிலும் -போக்கவே இங்கே எழுந்து அருளி உள்ளான் )
நீரோடு கால்களாலும்
தடாகங்களாலும்
திருச் சோலைகளாலும்
சூழப் பட்ட திருக்கண்டங்கடி நகர் எம் புருடோத்தமன் இருக்கை –
————
நிகமத்தில் இத்திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்-
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –
பதவுரை
பொங்கு–நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும்
ஒலி–கோஷத்தை உடையதுமான
கங்கை கரை–கங்கைக் கரையிலுள்ளதும்
மலி–எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து–திருக் கண்டங் கடி நகரில்
புருடோத்தமன்–புருஷோத்தப் பெருமானுடைய
அடி மேல்–திருவடிகளில்,
வெம்கலி நலியா–கொடிய கலியினால் நலியப் பெறாத-விபரீத ஞானம் இல்லாத என்றபடி
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விருப்புற்ற–ஆசைப் படல்
தங்கிய அன்பால்–நிலை நின்ற பக்தியினால்
செய்–அருளிச் செய்த-பாடியது மட்டும் இல்லாமல் அனுஷ்டான பர்யந்தமாக செய்தாரே
தமிழ் மாலை
தங்கிய–நிலை நின்றிருக்கப் பெற்ற
நா உடையார்க்கு–நாக்கை உடையவர்களுக்கு
கங்கையில்–கங்கா நதியில்
குளித்து–நீராடி
திருமால்–ஸ்ரீயபதியினுடைய
இணை–ஒன்றொடொன்றொத்த
கழல் கீழே–திருவடிகளின் கீழே
இருந்த கணக்கு ஆம்–நிரந்தர ஸேவை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும்–
அவன் திரு உள்ளம் உகப்பானே ஆகவே ஒக்கும்
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
மிகவும் பெரிய ஆரவாரத்தோடே கிளம்பி வருகிற கங்கையினுடைய
உயர்ந்த கரை மேலேயாய் இருக்கிற திருக்கண்டங்கடி நகரிலே நித்ய வாஸம் செய்வானாய் இருக்கிற
புருஷோத்தமன் திருவடிகளின் மேலே
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன்
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே (திருவாய் -5-2-11 )-என்னுமா போலே
வெவ்விதான கழியும் நலியாதபடியான திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
வெங்கலி
பிராகிருத ஸ்ருஷ்டியில் க்ருத யுகாதிகளில் முடிவில் வருகிற கலி யுகத்தில்
வெம்மை இல்லை போலே காணும்
வெம்மை யுள்ளது பர்வ க்ரமமாக இறே
விட்டு சித்தன்
இதுவும் ஒரு ஸமாஸ த்வயம்
விருப்புற்று
அத்யந்தம் ப்ரீதியின் மேலே
தங்கியவன் பால்
நிலை நின்ற பக்தி பாரவஸ்யத்தாலே
செய் தமிழ் மாலை
செய்யப்பட தமிழ் மாலை
சொன்ன மாலை என்னாமல்
செய்த -என்கையாலே
அனுஷ்டான பர்யந்தமாகச் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை
தங்கிய நா வுடையார்க்கு
மந பூர்வ வாக் உத்தர -என்னாத நா யுடையாருக்கு
நான் தான் வேண்டா என்றாலும்
என் வாய் அவனை அல்லது வாழ்த்தாது (முதல் திருவந்தாதி -11)-என்பார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே
1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply