பரம உதாரமான -மேலான வண்மையை உடைய திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க -வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்-என்கிறார்
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை-
நம் சேஷ்டிதங்களை -செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள் என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய அந்தரங்க விருத்திகள் -குற்றேவல்கள் என்றது
அவன் குடக் கூத்தினை அனுசந்தித்து -நினைத்து
இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே அதிகரித்தனர் -மூண்டார் -என்றபடி –
வாய்த்த வாயிரத்துள் இவை –
சர்வேஸ்வரனுக்கு நேர் பட்ட ஆயிரத்துள்ளே வாய்த்தவை ஆயின இவை –
வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த பத்து
கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சோபனா மம
ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9-
ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே என்பது பிரசித்தம்
தர்ம சாஸ்திர விதிப்படி -ரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே
இத் திருவாய் மொழியின் இனிமையாலே திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –
இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –
இப்பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்க்கு-சரீர அவசானத்திலே –
உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி
காளமேகம் வழித் துணையாம்-
———————–
நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
திரு வனந்த புரத்திலே-நிரவதிக – எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்
உலகத்திற்கு எல்லாம் காரணனாய் உள்ளவனை –
ஆஸ்ரயிக்கிறவர்களும் -அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –
ஆஸ்ரயணீயனும்- அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு திரு வனந்த புரத்திலே வந்து-ஆஸ்ரிதர்க்காக – அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து
அருளுகையாலே புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –
சம்சாரத்தை -பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே
புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –
இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை இல்லை ஆயிற்று அவனுக்கு
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு
இந்த சம்சாரத்தில் -உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று
பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே
அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்
இருவருக்கும் இரண்டும் அலாப்ய லாபம் -கிடைக்காத பேறு ஆம் அன்றோ –
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைய சோலைகளால்
சூழப் பட்ட திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –
ரத்தினங்களை முகம் அறிந்து கோத்துச் சேர்த்தியைக் கொண்டாடுமாறு போலே
ஐந்து ஐந்தாக ஆயிற்று அனுபவிக்கிறது –
அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள்இணையே –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்
அந்த முக்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே
அங்குத்தை அப்சரஸ் ஸூ க்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார் -என்றபடி
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு வாசி இல்லை
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ
———
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு –
அவ் வயிர உருக்கான முறுவலாலே எங்களைத் தோற்பித்தால் போலே
தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்பித்த-
சர்வ ஸ்வாமி – எல்லார்க்கும் ஒக்கத் தெய்வம் ஆனவன் திருவடிகளில் சொல்லிற்று –
செங்கனி வாய் ஆயர் தேவு –
செங்கனி-
என்கையாலே-தங்களைத் தோற்பித்த படி சொல்லிற்று –
ஆயர் தேவு –
என்கையாலே -தன் பருவத்தில் உள்ளாரை தோற்பித்த படி சொல்லிற்று –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்-அயோத்யா -3-27-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பது அச் சழக்கி நாமமே -கம்ப நாட்டு ஆழ்வார் –
அத் திருவடி திருவடி மேல் –
சர்வ ஸ்வாமி -எல்லாருக்கும் தெய்வமான அவ் வெம்பருமான் திருவடிகளில் –
அவன் சேஷியாம் தன்மையை காட்டிக் கொடுத்தான் –
திருவடி மேல் –
என்கையாலே இவரும் சேஷத்வத்தில் -அடிமையில் நின்றார்
பொருநல் சங்கணி துறைவன் –
தாம் இருந்த இடத்தில் சத்துக்கள் -மேன்மக்கள் அடங்கலும் வந்து சேருமாறு போலே ஆயிற்று –
திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை –
அவனுடைய பிரிவு பொறுக்க மாட்டாமையாலே
ஒரு பருவத்தில் ஆயர் பெண்கள் கூறிய தொடையாய் –
தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –
சபை -அவை போன்று எல்லாரும் திரண்டு வார்த்தை சொன்னால் செவிப்படாது -என்று பார்த்து
அவனுக்கு மறுக்க ஒண்ணாத படி
நப்பின்னை பிராட்டியின் தரமுடையவள் ஒருத்தி
பசு மேய்க்க போகாமை மீட்கைக்காக சொன்னவை ஆயிற்று –
இப்படியானால்
அடிச்சியோம் -என்றும்
தொழுத்தையோம் -என்றும்
ஆழும் என் ஆர் உயிர் என்றும் –
என் சொற்கொள் -என்றும்
சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் அன்றோ –
இவையும் பத்து அவற்றின் சார்வே –
அவை -என்கிறது கீழில் போந்த திருவாய் மொழிகளையாய் –
அவற்றின் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி
ஆயிற்று சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –
இவையும் பத்து அவற்றின் சார்வே —
கீழ் திருவாய் மொழி களுக்கு சொன்ன பலம் இதற்கு பலம் என்கிறது ஆகவுமாம்
அன்றிக்கே
அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்
இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது
அதனுடைய பலமே இதற்கும் பலம்
அது பலத்தோடு கூடியதாயின் இதற்கு பேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன
அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே
இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –
————–
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை –
பரம்பரனை-மல் திண் தோள் மாலை-பற்று என்று பற்றி-
பரம் பரனை -பிராப்யம்
மல் திண் தோள் மாலை -பிராபகம்
சர்வேஸ்வரனை -பிராப்ய பிராபகம் என்று பற்றி
இவன் பிரபத்தியைச் செய்து-அத்யவசிக்கும் – உறுதி உடையவனாய் இருக்கும் அத்தனையே வேண்டுவது –
ரக்ஷணத்தில் -காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை –
இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு தகுதியான மிடுக்கையும் வ்யாமோஹத்தையும் -அன்பையும்
உடையவன் -என்பார் -மல் திண் தோள் மால் -என்கிறார் –
வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு –
பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை த்ரிபி அந்விதம் -பால -4-3-
மூன்று வகையான பிரமாணங்களோடு கூடினதாயும்
பாடத்திலும் கானத்திலும் இனிமை பொருந்தியதாயும் – என்கிறபடியே
அழகிய சொற்களால் தொடுக்கப்பட்ட அந்தாதியான ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு
இந்தப் பத்தும் கற்றார்க்கு –
ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே –
தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே கிருஷ்ணன் திருவடிகளே –
இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-
—————-
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு பாத்திரமாகும் தன்மையரான ஆழ்வார் -என்றது
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் சேஷ்டிதங்களையும் செயல்களையும்-சாத்மிக்க சாத்மிக்க பொறுக்கப் பொறுக்க
அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை அனுசந்தித்து விஸ்மிதர் – நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி
நொடிதல் –
சொல்லுதல்
ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்
ஈஸ்வரன் கொடுத்த பேறு-சாதர்மயம் – ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை இறே
———————-
வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
வளம் குருகூர்ச் சடகோபன் –
அழகியதான திரு நகரியை -தம்மதாக உடையரான ஆழ்வார் –
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு-
பாடத்திலும் இசையிலும் இனியதான -பாட்யே கேயோ மதுரம் -பால -4-8-
பாட்டு -இசை
இசையிலே புணர்ப்புண்ட திருவாய் மொழி ஆயிரத்திலும் – இப் பத்தினையும் கேட்டு –
ஆரார் வானவர்கள்-
இதனைச் சொல்ல கேளா நின்றால்-இன்னம் சொல் இன்னம் சொல் -என்னும் இத்தனை போக்கி
கேட்ட அம்சத்தில் -கேட்டவற்றைக் கொண்டு மனம் நினைவு திருப்தி பெறார்கள் ஆயிற்று
பகவான் உடைய குணங்களை அனுபவித்து அதற்கு போக்கு விடுகைக்கு பாசுரம் இன்றிக்கே
விம்மல் பொருமலாய் படுமவர்கள்-இப்பாசுரம் கேட்டால் விடார்கள் அன்றோ –
அதற்கு ஹேது -காரணம் என்
அவனுடைய சீல குணங்களை அனுபவித்தோ என்னில்
இப்பாசுரத்துக்கு தோற்று -என்கிறார் –
செவிக்கு இனிய-
கேட்ட போதே இன்பம் பயப்பது -என்றபடியே
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகா கபி
சம்ச்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யஜஹார ஹா -சுந்தர-91-1-என்கிறபடியே
செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே
செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே
அதற்குக் காரணம் என் என்னில் –
செஞ்சொல்லே –
நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கையாலே
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11- என்னா
செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –
——————
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் –
வண்டுகள் உடைய அபிமானமே -செருக்கேயான பொழில்களை உடைய
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-அருளிச் செய்த ஆயிரத்திலும்
மகத்து முதலானவற்றின் உருவமான ப்ரக்ருதி நிரசனமான -இச் சரீரத்தினை
ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு
பெரிய செருக்கோடு சொன்ன இப் பத்தும் -என்னுதல் –
திருமால் இரும் சோலை மலைக்கே –
திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10
என்றும் சொன்னார்கள் அன்றோ –
————
————–
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
விலக்ஷணர்- பெரியார் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்
இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி
ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே
இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –
இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப் பத்தினை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே-
நிரதிசய -எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் – கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-
—————
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே சூழப் பட்ட
திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது –
அலர் –சந்தங்கள் ஆயிரத்து –
சந்தஸ் ஸூ -விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தஸ் ஸூ -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –
இவை வல்லார் முனிவரே –
இப் பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய்
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-
————-
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து –10-10-11-
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பலாத்காரத்தாலே -பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் போரும் உண்டானார்கள்
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுகைக்கு அடி
இவருடைய பக்தி அபிநிவேசம் -காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்த தாயிற்று இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –
கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply