ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
———–
அதிகாரம் —11-பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்திக்கு பரிகரங்கள் –அதாவது அங்கங்களைச் சொல்வது
அதிகாரத்திலிருந்து
இயாந் இத்தம் பூத : ஸக்ருத் அயம் அவச்யம் பவநவாந்
தயா திவ்ய அம்போதெள ஜகத் அகிலம் அந்த : யமயதி
பவ த்வம்ச உத்யுக்தே பகவதி பர ந்யாஸ வபுஷ :
பரபத்தே : ஆதிஷ்ட : பரிகர விசேஷ : ச்ருதி முகை :
வ்யாக்யானம்
கருணைக் கடல் என்றால் இவனையே குறிக்கும் படியான கருணைக்குச்
சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும் ஹ்ருதயத்தின் உள்ளே
இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற
பகவானிடம் பொறுப்பை ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின்
விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் , இவைகளின்
ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப் பற்றியும் ,ப்ரபத்தி செய்யும் போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நியமிக்கப் பட்டிருக்கிறது.
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தியின் அங்கங்கள் சொல்லப்படுகின்றன
இவ் வித்யைக்குப் பரிகாரமாவது ஆநுகூல்ய ஸங்கல்பமும் , ப்ராதிகூல்ய வர்ஜனமும் ,
கார்பண்யமும் , மஹா விச்வாஸமும் , கோப்த்ருவ வரணமும் .
வ்யாக்யானம்
ப்ரபத்தி என்கிற இந்த ந்யாஸ வித்யைக்கு அங்கங்களாவன —-
1.பகவானுக்கு உகந்தவை ,எவையோ அவற்றை மட்டும் செய்தல் –ஆநுகூல்ய ஸங்கல்பம்
2.பகவானுக்கு உகப்பில்லாதவற்றை செய்யாது தவிர்த்தல் — ப்ராதிகூல்ய வர்ஜனம்
3.பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
4. பகவானிடம் அசஞ்சலமான விச்வாஸம் –மஹா விச்வாஸ
5. பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவ வரணம்
அதிகாரத்திலிருந்து
இவ்விடத்தில்
ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப : ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்
ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா
ஆத்ம நிக்ஷேப கார்ப்பண்யே ஷட் விதா சரணாகதி :
இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வித்யமும் அஷ்டாங்க யோகமென்னுமாப் போலே
அங்க அங்கி ஸமுச்சயத்தாலே ஆகக்கடவதென்னுமிடமும் ,இவற்றில் இன்னது
ஒன்றுமே ,இதரங்கள் அங்கங்களென்னுமிடமும் ,
நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி
என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்
வ்யாக்யானம்
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )
நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —
நாரதர் :— மஹேஸ்வரா ! வெளிப்படையானதும் ,மானஸிகமுமான யோகத்தைப்
பற்றிச் சொன்னீர்கள். அப்போது,”” ந்யாஸம்”””” என்கிற உபாயத்தையும் சொன்னீர்கள்.
இதைப்பற்றி விரிவாகக் கூற வேண்டுகிறேன்
அஹிர்புத்ந்யர் :—இது, பெரிய உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள ,தேவர்களும்
அறியாத ரஹஸ்யம் . அனைத்துப் பாபங்களையும் போக்க வல்லது.கோரும்
பலனைக் கொடுக்கக் கூடியது. இதை, எல்லோருக்கும் சொல்லக் கூடாது.
முக்யமாக , பகவத் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக் கூடாது.
நீர், என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கிறீர். உமது க்ஷேமத்தை விரும்பி
விவரத்தைச் சொல்கிறேன்—– என்று ஆரம்பித்தார்
அஹிர்புத்ந்யர் சொன்னது :—-
யாரால் மற்ற உபாயங்களால் அடைய முடியாததோ ஸாங்க்ய யோகம் ,
பக்தி யோகம் இவற்றால் எந்த மோக்ஷத்தைப் பெற முடியாதோ , எந்த இடத்துக்குச்
சென்றால் திரும்ப இவ்வுலகம் முதலியவற்றுக்கு வரமுடியாதோ , அப்படிப்பட்ட ”பரமபதம்”
ந்யாஸத்தாலே கிடைக்கும். பரமபுருஷனான பகவானுக்குக் கைங்கர்யம்
எய்யும் பாக்கியம் கிடைக்கும்.
ப்ரபத்தியின் அங்கங்கள் ஆறு என்று வேதங்களைக் கற்று அறிந்த ஜ்ஞானிகள்
சொல்கிறார்கள்.
1. ஆநுகூல்ய ஸங்கல்பம் = உமக்கு அநுகூலமாகவே இருப்பேன் என்று உறுதி
2. ப்ராதிகூல்ய வர்ஜனம் = உமக்குப் ப்ரீதியில்லாத கார்யங்களைச் செய்யமாட்டேன்
என்று உறுதி
3.ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ =பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்கிற திடநம்பிக்கை
4. கோப்த்ருவவரணம் = நீ, என்னைக் காத்தருளவேண்டும் என்று ப்ரார்த்திப்பது
5.ஆத்ம நிக்ஷேப : =தன்னுடைய ஆத்மாவை, பகவானுடைய சொத்து என்று நினைத்து
உம்முடைய உம்மிடமே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸமர்ப்பிப்பது .
6. கார்பண்யம் = இது, ஆகிஞ்சின்யம் , அநந்யகதித்வம் , இரண்டும் சேர்ந்தது.
அதாவது, கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் எனக்குத் தெரியாது,
உன்னைத் தவிர எனக்குச் சரணமடைய யாரும் இல்லை,
ஆக , ந்யாஸம் –சரணாகதி –என்பது ஆறு வகை.
அஷ்டாங்க யோகம் என்பதில் யமம் , நியமம் –இவை அங்கங்கள்.ஸமாதி –அங்கி.
இங்கு, ஆநுகூல்ய ஸங்கல்பம் ,ப்ராதிகூல்யவர்ஜனம், கார்பண்யம்,ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ
என்கிற மஹா விச்வாஸம், கோப்த்ருவ வரணம்–இந்த ஐந்து அங்கங்களுடன் கூடிய
ஆத்ம நிக்ஷேப என்கிற ஆத்ம ஸமர்ப்பணமான அங்கியுடன் கூடி –ஆறு எனப்படுகிறது.
ஷட்விதா சரணாகதி என்பர் .ப்ரபத்தி என்று சொல்லும்போது ,சரணம் என்கிற ”சொல் ”
உபாயம் , அதாவது சாதனம்.
லக்ஷ்மீ தந்த்ரம் ( 17—74 )
நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி
ஆத்ம நிக்ஷேபம் என்பது, அங்கி.மற்ற ஐந்தும் அங்கங்கள். இரண்டையும்
சேர்த்து, ”ஷட்விதா சரணாகதி ” என்பர்.
ப்ரபத்தி என்று சொல்லும்போது, சரணம் என்கிற சொல் உபாயம், அதாவது சாதனம்.
அதிகாரத்திலிருந்து
மோக்ஷார்த்த ப்ரபத்தியில் பல —-ஸங்க –கர்த்ருத்வாதி த்யாகங்களின் அவச்யம்
சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ
என்று அஹிர்புத்ந் யோக்தமான பல த்யாக ரூப அங்காந்தரம் மோக்ஷார்த்தமான
ஆத்ம நிக்ஷேபத்திலே நியதம். பல,ஸங்க , கர்த்ருத்வாதி த்யாகம் , கர்மயோகம்
முதலாக நிவ்ருத்தி தர்மங்களெல்லாவற்றிலும் வருகையாலே இவ்வநுஸந்தானம்
முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம்
வ்யாக்யானம்
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார் —
52 வது அத்யாயம் —-பகுதிகள் 13 மற்றும் 14
சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ
அஹிர்புத்ந்யர் சொல்கிறார் —
உலகத்தில் தாழ்ந்தவன் என்கிற வரிசையில் எல்லா ஜீவர்களும் அடங்குவர் .
உயர்ந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஜீவன்கள் நமஸ்கரிக்கிறார்கள் ;
எம்பெருமான் வணங்கப்படுகிறான் ;அவனே வணங்கப்படுபவன் .
ஸம்பந்தம் எந்தப் பலனையும் கருதியது அல்ல .
நமஸ்கரித்தலே , ப்ரபத்தி . இதுவே புருஷார்த்தம் . ”நம ” என்கிற ஸப்தம்
ப்ரபத்தி என்கிற அர்த்தத்தை நிரூபிக்கிறது.
பரம புருஷனைக் குறித்து , நான் நமஸ்கரிக்கிறேன் , என்பது எதுவோ
அதுவே எனக்கு நிலையான புருஷார்த்தம் அல்லது ஸ்வாபாவிக கார்யம்.
இதைவிட வேறான பலனானது எனக்கு வேண்டாம் இதுவே சிறந்த அங்கம் .
மோக்ஷம் அடைய ஆத்ம ஸமர்ப்பணமான ஸரணாகதி –ப்ரபத்தி –இதற்கு
கர்மங்களை நாமே செய்கிறோம் என்கிற எண்ணமும்,பலன்களில் பற்றும்
அறவே கூடாது.
அதிகாரத்திலிருந்து
ஆநுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜநம்–இவற்றுக்கான காரணம் —
இவற்றால் வரும் பயன்
இங்குப் பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ,
ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தனம் , ஸர்வ சேஷியான ஸ்ரீய :பதியைப்
பற்றப் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநுவர்த்தனம் பண்ண வேண்டும்படி
இவனுக்கு உண்டான பாரார்த்ய ஜ்ஞாநம் . இத்தாலே அநுகூல்யேதராப்யாம் து
விநிவ்ருத்தி ரபாயத : என்கிறபடியே அபாய பரிஹாரம் ஸித்தம்
வ்யாக்யானம்
இவனுக்கு ஜ்ஞானம் பிறக்கிறது ? எப்போது ?
ப்ரபத்திக்குச் சொல்லப்பட்ட அங்கங்களில், பகவானுக்குச் சந்தோஷத்தை
உண்டாக்கும் கார்யங்களைச் செய்தல், அவன் விரும்பாத கார்யங்களில்
இழியாது இருத்தல் . இப்படி இருப்பின் பகவானுக்காகவே அனைத்தும்
உள்ளன என்கிற ஜ்ஞானம் பிறக்கிறது. இதுவே சேஷத்வ ஜ்ஞானம்.
ஆதலால், சேஷத்வ ஜ்ஞானம் ஏற்பட, பகவானுக்கு உகப்பானதைச்
செய்தலும், பகவானுக்கு உகப்பில்லாதவற்றைச் செய்யாதிருத்தலுமேயாகும் .
லக்ஷ்மீ தந்த்ரம் ( 17–76 )
அநுகூல்யேதராப்யாம் து விநிவ்ருத்தி ரபாயத : என்கிறது
அதாவது, பகவானுக்கு விருப்பமானதைச் செய்தல், அவன் விரும்பாதவற்றைச்
செய்யாதொழிதல் –என்பதன் மூலமாக, அவனது கட்டளைகளை மீறாமல்
இருக்கும் நிலை ஏற்படுகிறது.
அதிகாரத்திலிருந்து
கார்ப்பண்யம் அதனால் வரும் பலன்
கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தானமாதல் ,
அதடியாக வந்த கர்வஹாநியாதல் , க்ருபா ஜநக க்ருபண வ்ருத்தியாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் ,கார்ப்பண்யேநாப்யுபாயாநாம்
விநிவ்ருத்திரிஹேரிதா என்கிறபடியே பின்பும் அநந்யோபாயதைக்கும்
உபயுக்தமாயிருக்கும்
வ்யாக்யானம்
கார்ப்பண்யம் என்பது, முன்பு சொன்ன ஆகிஞ்சந்யம் இவற்றையெல்லாம்
நினைத்திருத்தலாம் . இந்த நினைவுகள் /எண்ணங்கள் மூலமாக தனது என்கிற
கர்வம் அகலும். இதன் மூலமாக, நாம் எவ்வித உதவியும் /கதியும் இல்லாமல்
இருக்கிறோம் என்கிற எண்ணம் வரும். இவ்வாறு, எண்ணிப் பகவானிடம்
தஞ்சம் என்று அடையும்போது ,பகவானின் கருணையானது ,நம்மிடம்
வெள்ளமிடுகிறது. இதன் மூலம், வேறு எந்த உபாயமும் இல்லை என்கிற
ஜ்ஞானம் மேலோங்குகிறது
லக்ஷ்மீ தந்த்ரம் :— கார்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்திரிஹேரிதா–
மற்ற எந்த உபாயத்தையும் நாடாமலிருப்பதே கார்ப்பண்யம்
அதிகாரத்திலிருந்து
மஹா விச்வாஸம் அதனால் வரும் பலன்
மஹா விச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத் அபீஷ்டோபாய கல்பநம்
என்கிறபடியே அணியிடாத அநுஷ்டான ஸித்தர்த்தமுமாய்ப் பின்பு
நிர்பரதைக்கும் உறுப்பாயிருக்கும்
வ்யாக்யானம்
எவ்வித சந்தேகமும் இல்லாத மஹா விச்வாஸம் என்பது ,ப்ரபத்திக்கு
மிக முக்கியமானது. இதுவே ப்ரபத்திக்குப் பிறகும், நம்மைப் பற்றிய
கவலை கொள்வது, நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாமே முயற்சி
செய்வது போன்ற செயல்களிலிருந்து , நம்மை விலக்குகிறது.
லக்ஷ்மீ தந்த்ரம் : — மஹா விச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத்
அபீஷ்டோபாய கல்பநம்—-
பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற மஹா விச்வாஸத்தால்
பகவானை உபாயமாகப் பற்றுதல் என்கிற பலன் ஏற்படுகிறது
அதிகாரத்திலிருந்து
கோப்த்ருவ வரணம் —-இதன் அவச்யம்
ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும்
புருஷார்த்தமாம்போது புருஷன் அர்திக்கக் கொடுக்க வேண்டுகையாலே
இங்கு கோப்த்ருவ வரணமும் அபேக்ஷிதம் . நன்றாயிருப்பது ஒன்றையும்
இப்புருஷன் அர்த்திக்கக் கொடாத போது புருஷார்த்தங் கொடுத்தானாகானிறே .
ஆகையாலேயிறே அப்ரார்த்திதோ ந கோபாயேத் என்றும், கோப்த்ருவ வரணம்
நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் என்றும் சொல்லுகிறது
இப்படி , இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்களாகையால்
இவை இவாத்மநிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள்
வ்யாக்யானம்
நமது ஸ்வரூபத்துக்கு ,மோக்ஷம் குறிக்கோள் . ஆனால் அதை புருஷார்த்தம்
என்று வேண்டும்போதோ / விரும்பும்போதோ , மற்ற புருஷார்த்தங்களை
யாசித்துப் பெறுவதைப் போல இதையும் யாசித்தே பெற வேண்டும்.
இப்படியாக, மோக்ஷம் என்கிற புருஷார்த்தத்தை ஒருவன் விரும்பும் போது,
அதை யாசித்தால் மட்டுமே பெற முடியும். மஹா விச்வாஸத்துடன் வேண்டுபவனுக்கு
அளிக்கப்படுகிறது. காப்பாற்ற வேண்டும் என்கிற வேண்டுதல் வேண்டியதாகிறது.
எந்த ஒரு நல்ல பொருளும் வேண்டாமல் கிடைப்பதில்லை . ஆதலால்,
ஒருவன் வேண்டாதபோது, மோக்ஷமென்கிற புருஷார்த்தம் அளிக்கப்படுவதில்லை.
லக்ஷ்மீ தந்த்ரம் —17—72
அப்ரார்த்திதோ ந கோபாயேத் = வேண்டுதல் இல்லாமல், எந்த ரக்ஷத்வமும்
செய்யப்படுவதில்லை
லக்ஷ்மீ தந்த்ரம் —17–78 –
கோப்த்ருவ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் = நமது மனத்தில் உள்ளதை பகவானிடம்
சொல்வதே கோப்த்ருவ வரணம்
இப்படியாக, மேலே சொல்லப்பட்ட ஐந்தும் ப்ரபத்திக்கு உதவுவதால், இவை
ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதற்கு முக்யமானவையாகும்
அதிகாரத்திலிருந்து
இவ்வர்த்தம் பிராட்டியைச் சரணமாகப் பற்ற வாருங்கள் என்று ஸாத்த்விக ப்ரக்ருதியான
த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம்
ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது
ஸாந்த்வமேவாபி தீயதாம் என்கையிலே மந :பூர்வமாகவல்லது வாக்ப்ரவ்ருத்தி
இல்லாமையாலே ஆநுகூல்ய ஸங்கல்பம் ஆக்ருஷ்டமாயிற்று.
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் என்று போக்கற்று நிற்கிற
நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய
அநுஸந்தானமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதிரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும்
சொல்லிற்றாயிற்று.
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் என்கையாலும்
இத்தை விவரித்துக்கொண்டு அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம்
என்று திருவடி அநுவதிக்கையாலும் , பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப்
பார்க்கிலும் அவர் சீற்றத்தை யாற்றி இவள் ரக்ஷிக்க வல்லவளாகையாலே
ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப்பட்டது.
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி யாசத்வம்
ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று
வ்யாக்யானம்
இவ்வர்த்தம் என்று சொல்லும்படியான உயர்ந்த விஷயங்கள், ராக்ஷஸிகளில் சிறந்தவளான
த்ரிஜடை , அசோகவனத்தில் மற்ற அரக்கிகளிடம் ” சீதாப்பிராட்டியைச் சரணமடையுங்கள் ”
என்று சொல்வதன் மூலமாகத் தெளிகிறது
ஸ்ரீமத்ராமாயணம்
ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : =நீங்கள் பேசும் குரூர வார்த்தைகளை நிறுத்துங்கள் .
இதன் மூலமாக, பகவானுக்கு ஏற்காததைத் தவிர்க்கிற ”ப்ராதிகூல்ய வர்ஜனம் ”
சொல்லப்பட்டதாகக் கூறுவர்.
ஸாந்த்வமேவாபி தீயதாம் = சாந்தத்தை /சமாதானத்தை உண்டாக்கும் சொற்களைப்
பேசுங்கள் என்பதால், ”ஆனுகூல்ய ஸங்கல்பம் ”சொல்லப்பட்டது என்பர் .பகவானுக்கு
சந்தோஷத்தைத் தருவது இது.
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் =ராமபிரான் மூலமாக , அரக்கர்களுக்கு
பெரிய பயம் ஏற்பட்டது , என்பதால், அரக்கர்களின் கதியற்ற நிலை ”ஆகிஞ்சன்யம் ”
சொல்லப்பட்டது. இதனால், அரக்கர்களின் கர்வம் முதலியன அழியும் என்பதால்,
”கார்ப்பண்யமும் ” சொல்லப்பட்டது என்பர்.
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் = த்ரிஜடை சொல்கிறாள்.
அரக்கிகளே , ராமன் மூலமாக நமக்கு ஏற்படும் பயத்திலிருந்து இவள் –சீதை —
நம்மைக் காப்பாற்றுகிற சக்தி உடையவள்
அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் =
மேற்கூறிய த்ரிஜடையின் பேச்சை , ஹநுமானும், ராமனிடமிருந்து அரக்கிகளைக்
காக்கும் சக்தி உடையவள் இவள் என்று ஆமோதிக்கிறார்.
இவற்றின் மூலம், பகவான் ஒருவனைத் தண்டிக்கவேண்டும் என்று தீர்மானித்தாலும்
அதை மாற்றி பிராட்டி காப்பாற்றுவாள் என்கிற மஹா விச்வாஸம் சொல்லப்பட்டது என்பர்.
ப்ரணிபாத ப்ரஸன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா |
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் ||
மிதிலா நகரைச் சேர்ந்தவள் ,ஜனகமஹாராஜாவின் புத்ரியான ஸீதை ,
நமது நமஸ்காரத்தால் கோபம் தணிந்தவளாக ஆகிவிடுவாள் . ராக்ஷஸிகளே —
பெரிய பயத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ,இவள் சக்தி வாய்ந்தவள் .
த்ரிஜடை இப்படிச் சொன்னபோது, ராக்ஷஸிகளுக்கு , ஸீதை ரக்ஷிப்பாள் என்கிற
மஹாவிச்வாஸம் ஏற்பட்டது.
பகவான் நிக்ரஹிப்பது , சீற்றத்தால் . பிராட்டியின் இங்கிதங்களைப் பார்த்து
அதற்கு மாறாகச் செய்யமாட்டாவதனாய் சீற்றம் ஒழிகிறது. ஸீதையை ஆச்ரயித்து
இருக்கிறார்கள் என்கிறபோது, சீற்றம் போய்விடும் .
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி
யாசத்வம் ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா = ஸீதையிடம் , நாம், அபயம் என்று வேண்டுவோம் .
இதுவே எனக்குச் சரியாகப் படுகிறது என்று த்ரிஜடை ,அரக்கிகளிடம் சொல்கிறாள்.
நீங்கள் ஸீதையைப் பயமுறுத்தி இருந்தாலும் அவளைப் பிரார்த்தியுங்கள் .அவள்
காப்பாற்றுவாளோ என்கிற சந்தேகமே வேண்டாம் . என்கிறாள்
இதன்மூலம் , கோப்த்ருத்வ வரணம் சொல்லப்பட்டது
இப்படியாக ஸீதாதேவியிடமே பர ந்யாஸம் செய்யச் சொல்கிறாள். பகவானும் ,
பிராட்டியும் ஏக தத்வம். அதனால் இவளைக் கதியாகக் கொள்ளலாம்
ஆதலால் ரக்ஷிக்க வேண்டும் என்று ஸீதையை வேண்டுவோம் என்கிறாள் த்ரிஜடை .
அதிகாரத்திலிருந்து
இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிக்ஷேபம் , ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ
ஜநகாத்மஜா என்று ப்ரஸாத காரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத ஸப்தத்தாலே
விவ்க்ஷிதமாயிற்று . ஆகையால் ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : என்கிற சாஸ்த்ரார்த்தம்
இங்கே பூர்ணம்
இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்க மாட்டாதே பற்றாசாகப் பிராட்டி தன் வாத்ஸல்யத்தாலே
பவேயம் சரணம் ஹி வ : என்று அருளிச் செய்தாள் . இப்பாசுரம் ஸஹ்ருதமாய்
பலபர்யந்தமானபடியை
மாதர் மைதிலீ ராக்ஷஸீ : த்வயி ததைவ ஆர்த்ராபராதா : த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் . இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய
பர ஸமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்களென்று
கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள் . அப்படியே
ஸ்ரீ விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸரும் அவருடைய உபாயத்திலே
அந்தர்பூதர்
வ்யாக்யானம்
ப்ரணிபாதம் ( தலை வணங்குதல் ) என்கிற பதம் , மேலே சொல்லப்பட்ட ஐந்து
அங்கங்களுடன் கூடிய ஆத்ம சமர்ப்பணத்தைச் ( அங்கி ) சொல்கிறது.
ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா = நீங்கள் ஸீதையிடம்
செய்த ப்ரபத்தியால் , அவள் உங்களுக்குக் கருணை புரிபவளாக இருக்கிறாள் .
ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : = லக்ஷ்மீ தந்த்ரம் கூறுகிறது.
ஐந்து அங்கங்களுடன் கூடியது , ”ந்யாஸம் ” என்பது ,த்ரிஜடையின் சரணாகதியில்
நன்கு வெளிப்பட்டது. ஐந்துஅங்கங்களுடன் சேர்த்துச் சொல்லப்பட்ட இந்த
நமஸ்காரம் –ப்ரபத்தியே
இப்படியாக, த்ரிஜடை சொன்னதை அரக்கிகள் மறுக்க வில்லை.வெளிப்படையாகச்
”சரணம் அடைகிறோம் ” என்று சொல்லா விட்டாலும், த்ரிஜடை சொன்னதை மறுக்காமல்
இருந்ததையே ,ஏற்புடையதாகக் கொண்டு, ஸீதை , அரக்கிகளிடம் ,”நான் உங்களுக்கு
அடைக்கலமாக இருக்கிறேன் ” என்றால்.
ஸ்ரீகுணரத்னகோசம் ( 50 )
மாதர் மைதிலீ ! ராக்ஷஸீ த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா |
காகம் த விபீஷணம் ”சரணம்” இத்யுக்தி க்ஷமெள ரக்ஷத :
ஸாந : ஸாந்த்ரமஹாகஸ : ஸுகயது க்ஷாந்திஸ் தவாகஸ்மிகீ ||
மாத : ! மைதிலி ! =எல்லாருக்குக்கும் தாயான மிதிலைநகரத்து அரசனின் குமாரியே ! மைதிலியே !
த்வயி =தேவரீரிடம் அப்போதே தவறுகளைச் செய்துகொண்டே இருந்த அசோகவனத்து
ராக்ஷஸிகளை ,வாயுபுத்ரனான அனுமனிடமிருந்து காப்பாற்றிய தேவரால் ,அடைக்கலம்
என்று வந்த காகாசுரனையும் ,தர்மாத்மாவான விபீஷணனையும் பாதுகாத்த ஸ்ரீ ராமபிரானின்
செயலானது , சற்று லேசானதுபோல் ஆகிவிட்டது.
ஸா ஆகஸ்மிகீ = அத்தகைய வேண்டுதலை எதிர்பார்க்காமல் அநுக்ரஹித்த தேவரீருடைய
க்ஷாந்தி: =பொறுமை என்கிற குணம் , ஸாந்த்ரமஹாகஸ : = (குற்றம் செய்த கை உலராமல்
இருக்கும் சமயத்திலும் ) பசுமையான பெரிய குற்றங்களைச் செய்கிற எங்களை,
ந : ஸுகயது =அப்படிப்பட்ட எங்களுக்கு நன்மை அடையச் செய்யட்டும்.
ஹே —மைதிலீ —ரங்கநாயகி –உன்னுடைய க்ஷமை என்கிற குணத்தால் ,ராக்ஷஸிகள் கேட்காமலே
அவர்களை ரக்ஷித்தாய் .எங்களையும் ரக்ஷிப்பாயாக —–
என்கிறார்.
ராக்ஷஸிகளை, வாயுபுத்ரனான ஹநுமானிடமிருந்து காப்பாற்றினாள் .
சரணம் என்று தாமே சொல்லாவிட்டாலும் காப்பாற்றினாள் . காத்தலே –க்ஷமை என்கிற குணம்.
ஸீதையின் திருவோலக்கத்திலே சேர்ந்துவிட்டதாலே ,த்ரிஜடை சொன்னதற்கு மறுப்பு
இல்லாததாலே —இதுவே சரணாகதி . இவர்களுக்கும் சேர்த்து த்ரிஜடை சரணாகதி.
ஒரு ராக்ஷஸ குலத்திலே –பிறவியினாலே ஏற்பட்ட ஸம்பந்தம் .
அதிகாரத்திலிருந்து
விபீஷண சரணாகதி
அங்குற்ற அபயப்ரதான ப்ரகரணத்திலும் இவ்வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம் .
எங்ஙனேயென்னில் ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனக்குங்கூடப்
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ , ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம
ராஜந்நிஹ வீதசோகா : என்று ஹிதம் சொல்லுகையாலே ஆனுகூல்யஸங்கல்பம்
தோற்றிற்று . இந்த ஹித வசனம் பித்தோபஹதனுக்குப் பால் கைக்குமாப்போலே
அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று . த்வாம் து திக் குல பாம்ஸநம் என்று திக்காரம்
பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது , இவனோடு அனுபந்தித்த
விபூதிகளுமாகாது , இருந்தவிடத்தில் இருக்கவுமாகாதென்று அறுதியிட்டு
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச
என்கிற ஸ்வவாக்யத்தின்படியே அங்குத் துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய
வர்ஜந அபிஸந்தி தோற்றிற்று . ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , பின்பும்
அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :
என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப்பட்டது. அஞ்சாதே வந்து கிட்டி ஸர்வலோக
சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹா விச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரண முகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாய வராணாந்தர்நீதமான கோப்த்ருவ வரணம்
சொல்லிற்றாயிற்று . உபாயவரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்ம நிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம்
இப்படி மற்றுமுள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகிக த்ரவ்ய நிக்ஷேபங்களிலும்
ஸம்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க
மாட்டாதொரு வஸ்துவை ரக்ஷிக்க வல்லவனொருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும் போது
தான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியை யுடையவனாய் , ப்ரதிகூலாபிஸந்தியைத்
தவிர்த்து , ”இவன் ரக்ஷிக்க வல்லவன் , அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதும் செய்யும் ” , என்று தேறி
தான் ரக்ஷித்துக் கொள்ள மாட்டாமையை அறிவித்து , நீ ரக்ஷிக்க வேண்டுமென்று அபேக்ஷித்து
ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்பரனாய் பயங்கெட்டு மார்பிலே
கைவைத்துக் கொண்டு கிடந்து உறங்கக் காணா நின்றோமிறே
வ்யாக்யானம்
ராமபிரானால் அபயம் அளிக்கப்பட சந்தர்ப்பத்திலும் இந்த அங்கம் ,அங்கிகள்
காணக் கிடைக்கின்றன. ராவணன் ,தகாதவற்றைச் செய்ய வேகமாக இருந்தான். அவனுக்கு
விபீஷணன் சொன்ன நன்மையைக் கொடுக்கும் வார்த்தைகள்
ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் ( 9–22 ) ம் மற்றும்
பூரா ஸரத்ஸூர்ய மரீசி ஸன்னிபான் நவான்
ஸுபுங்கான் ஸுத்ருடான் ந்ருபாத்மஜ |
ஸ்ருஜத்யமோகான் விஸிகான் வதாய தே
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
த்யஜஸ்வ கோபம் ஸுகதர்ம நாஸனம்
யஜஸ்வ தர்மம் ரதிகீர்தி வர்தனம் |
ப்ரஸீத ஜீவேம ஸுபுத்ர பாந்தவா :
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
யாவன்ன லங்காம் ஸமபித்ரவந்தீ வலீமுகா : பர்வத கூடமாத்ரா : |
தம்ஷ்ட்ராயுதாஸ்சைவ நகாயுதாஸ்ச ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
யாவன்ன க்ருஷ்ணந்தி ஸிராம்ஸி வாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவானாம் |
வஜ்ரோபமா வாயு ஸமான வேகா : ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||
ராமனிடம் ஸீதையை ஒப்படைத்து விடு
என்றும்,ஸீதையை , ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ,நாம் இந்த லங்காராஜ்யத்தில்
வருத்த மில்லாமல் வாழலாம் —
என்றெல்லாம் விபீஷணன் சொல்கிறான்—இவை ஆனுகூல்ய ஸங்கல்பம்
இந்த வார்த்தைகள், பித்து ஏறிய ஒருவனுக்குப் பால் கசக்குமாப்போலே
ஆயிற்று. ராவணன் கோபப்பட்டான்
த்வாம் து திக் குல பாம்ஸநம் = நம்முடைய அசுரகுலத்தைக் கெடுக்கிற
உன்னை அவமதிக்கிறேன் என்று ராவணன் கோபப்பட்டவுடன் , இனி இவனுக்கு
உபதேசம் செய்துப் பயனில்லை; இவனுடைய சொத்துக்கள் எதையும்
அனுபவிக்கக் கூடாது; இவனுடன் இங்கு இருக்கவும் தகாது —என்று விபீஷணன் தீர்மானிக்கிறான்
இப்படித் தீர்மானித்த விபீஷணன்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச =
புத்ரன் ,மனைவி இவர்களைத் துறந்து ராமனைச் சரணடைந்தேன் ;லங்கை, நண்பர்கள்
செல்வம் ஆகியவற்றையும் துறந்தேன் –என்று சொல்வதால் , ப்ராதிகூல்ய வர்ஜனம்
வெளிப்படுகிறது.
அதே யுத்த காண்டத்தில்,
ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , = ராவணன் மோசமான நடவடிக்கையுள்ளவன், அனைவரையும்
ஜயித்திருக்கிறான் , அவனிடம் விரோதப்பட்டேன் , எனக்கு வேறு புகலிடம் இல்லை,
ராவணனின் இளைய சகோதரன், அவனால் அவமானப்படுத்தப்பட்டேன், எல்லா ஜீவன்களுக்கும்
ரக்ஷகன் நீ, உன்னைச் சரணமாக அடைந்தேன் —-
என்கிறான்.
அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :
இதனால், கார்பண்யம் வெளிப்பட்டது.
ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹா விச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரண முகத்தாலே சொல்லப் பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாய வராணாந்தர்நீதமான கோப்த்ருவ வரணம்
சொல்லிற்றாயிற்று . உபாய வரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்ம நிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம் =
ராமன் சர்வலோக சரண்யன் என்கிறான் —மஹாவிச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : =விபீஷணன் மிகுந்த புத்திசாலி ;அறிவுள்ளவன்
”மஹ ” என்கிற பதத்தாலே மிகுந்த –ஞானம் —இவற்றைச் சொல்லி, விபீஷணனின்
விச்வாஸத்தையும் சொல்கிறது.
ராகவம் சரணம் கத : =ராமனைச் சரணமடைந்தேன் — இது கோப்த்ருத்வ வரணம் ஆகும்.
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் =விபீஷணனாகிய என்னை, ராமனிடம்
ஸமர்ப்பியுங்கள் –இதில் ”ஆத்ம நிக்ஷேபம் ”சொல்லப்பட்டது.
விபீஷணனுடன் கூடவந்தவர்களுக்கும் ,ராமபிரான் அருள்கிறான். அவர்கள் கேட்கா விட்டாலும்,
விபீஷணன் ப்ரார்த்தித்த போது , அதில் அடக்கம்.
மற்ற ப்ரபத்தி நூல்களிலும், இந்த விஷயங்கள் , அதாவது,ஒருவரின் பொருளை ,மற்ற ஒருவரிடம்
வைப்பது—அப்பொருளைத் தன்னால் காக்க இயலாது நினைப்பவன், இவனால்தான்
பாதுகாக்க முடியும் வேண்டினால் இவன் பாதுகாப்பான் என்று தீர்மானித்து,அவனிடம் சென்று
பொருளைக்காக்க இயலாத நிலைமையைச் சொல்லி, நீயே காக்கவேண்டும் என்று
வேண்டுவது. வேண்டுதல் நிறைவேறியவுடன் , பொருளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ,
மார்பிலே கைவைத்துச் சுகமாக உறங்குவது –இவற்றை இவ்வுலகில் காண்கிறோம்
அதிகாரத்திலிருந்து
இக்கட்டளை யெல்லாம் க்ரியாமாணார்த்த ப்ரகாசகமான த்வயாக்யமந்த்ரத்திலே அநுஸந்திக்கும்படி
எங்ஙனே யென்னில் —ஸர்வஜ்ஞ ஸர்வ சக்தியுக்தனாய் ,கர்மாநுரூப பலப்ரதனாய் ,ஸர்வோபகார
நிரபேக்ஷனாய் ,க்ஷூ த்ர தேவதைகளைப் போலே க்ஷிப்ரகாரி யன்றிக்கே யிருப்பானாய் ,
ஸமாதிக தரித்ரனான ஸர்வேச்வரன் அநந்தாபராதங்களையுடையார்க்கு அபிகமயனாகையும்,
ப்ராப்தி விரோதியான அநந்தாபராதங்களை யுடையார்க்குஅளவில்லாத பலத்தைத் தருகையும்
அல்பவ்யாபாரத்துக்குத் தருகையும் ,தாழாதே தருகையும் ,தரம் பாராதே தருகையும் கூடுமோவென்கிற
சங்கைகளுக்கு நிவர்த்தகங்களுமாய் யதா ஸம்பவம் உபாயத்வப்ராப்யத்வோப யுக்தங்களுமாய்
இருந்துள்ள புருஷகார ஸம்பந்த குண வ்யாபார ப்ரயோஜன விசேஷங்களாகிற சேஷியினுடைய
ஆகாரங்களைப் பொதிந்து கொண்டிருக்கிற ஸ்ரீமச் சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் ஆர்த்தமாக
ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ராதிகூல வர்ஜனமும் அநுஸந்தேயமாகக் கடவது . இப்படி
விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஒளசித்யத்தாலே அவன் திறத்தில் ப்ராப்தமான
அபிவதாநுவர்த்தன ஸங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் ப்ரகாசிப்பிக்கின்றன
வ்யாக்யானம்
ப்ரபத்தியின் உள்ளார்ந்த அர்த்தத்தைச் சொல்லும் ”த்வயத்”தில் ஐந்து அங்கங்கள் வெளிப்படுகின்றன
எப்படி என்றால், எல்லாம் அறிந்துணர்ந்தவன் , எங்குமுள்ளவன் , செய்யும் கர்மங்களுக்கு
ஏற்றபடி பலனளிப்பவன் ,வேறு எவருடைய உதவியும் வேண்டாதவன் ,மற்ற தேவதைகள் போன்று
உடனே பலனளிக்காதவன் தனக்கு நிகரும் .மிக்காரும் இல்லாதவன் என்று இருக்கிற
ஸர்வேச்வரன் விஷயத்தில் சந்தேகங்கள் வந்தால் ,
1. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள் ,பகவானை நெருங்கமுடியுமா
2. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள்,அவற்றால் தடைப்படும் பலன்களை எவ்விதக்
கட்டுப்பாடும் இல்லாமல் பகவானிடமிருந்து பெறமுடியுமா
3.அல்பமான கர்மாக்களைச் செய்தவர்களும் பலன்களை அடைய முடியுமா
4.இத்தகைய பலன்கள் தாமதமின்றிக் கிடைக்குமா
5.தன்னடியார்களிடம் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பானா
இவற்றுக்கெல்லாம் , பகவான் எவ்வித விசேஷங்களை உடையவன் என்பதை முதலில்
அறியவேண்டும்
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டுள்ளவன்
பிராட்டியோடு கலந்து பேசும் போது ,குற்றங்களைப் பற்றியே பேசும் பகவான் ,
புருஷகாரமாகப் பிராட்டியைப் பற்றிய பிறகு ,இவன்( சேதனன் ) செய்த குற்றங்களை
மறந்தாற்போல இருக்கிறான் ..பகவானுக்கு ”அவிஜ்ஞாதா ” என்று ஸஹஸ்ரநாமத்தில்
ஒரு திருநாமம் உண்டு. குற்றத்தை அறியாதவன் என்று பொருள் . தெரிந்தும் தெரியாதவன்போல
இருப்பவன் .
எஜமானன் –வேலைக்காரன் என்கிற உறவுமுறை தனது படைப்புகள் மீது ஆழ்ந்த அன்பு
உள்ளவன் . அனைத்து உயிர்களையும் , கரைசேர்க்கும் எண்ணமுள்ளவன் .
இவ்வாறு கரையேற்றுவதைத் தனது பலனாகக் கொண்டவன்
இந்த எஜமானக் குணங்கள் ,த்வயத்தில் ”ஸ்ரீமத் ” என்கிற வார்த்தை மூலமாகவும்
அவனின் திருவடியை அடைதல் என்பதை ”நாராயண ” என்கிற வார்த்தை மூலமாகவும்
தெளியப்படுகிறது . ஆனால், பகவானுக்கு விருப்பமானத்தைச் செய்வேன்,விருப்பமில்லாததைச்
செய்யமாட்டேன் என்கிற எண்ணம் இல்லாதவனுக்கு ,மேற்கூறியவைகள் வெளிப்படாது.
மோக்ஷர்த்தமாகப் பகவானைச் சரணமடையும்போது ,பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு
சரணமடையவேண்டும். ஸ்ரீ பாஷ்யகாரர் , கத்ய த்ரய ஆரம்பத்தில், சரணாகதி கத்யத்தில்
பகவந் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப , ரூபகுண ,விபவ ,ஐஸ்வர்யசீலாதி ,அநவதிக,
அதிசய ,அசங்க்யேய , கல்யாண குணகணாம் பத்மவநாலயாம் ,பகவதீம் ச்ரியம் தேவீம் ,
நித்யானபாயினீம் ,நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம் அகிலஜகன்மாதரம் அஸ்மந்
மாதரம் அசரண்ய சரண்யாம் ,அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே —-
என்று இப்படி, முதல் சூர்ணிகையாலே பிராட்டியைச் சரணமடைகிறார்.
”பகவந் நாராயண” —-என்று ஆரம்பம் . ”பகவதீம் ச்ரியம் தேவீம்—-” நடுவில் வருவது.
”பகவத்” ஸப்த ஸ்தானத்தில் ,”பகவதீம் ” என்றும் , ”நாராயண ” ஸப்த ஸ்தானத்திலே
”ச்ரியம் ” என்றும் உள்ளது . இதனால்,பகவத் ஸப்தத்தின் பொருளும் ,நாராயண ஸப்தத்தின்
பொருளும் பிராட்டியிடம் உண்டு என்பது தெளிவாகிறது.த்வய அதிகாரத்தில் ,
ஸ்ரீ பாஷ்யகாரரும்” பகவந் நாராயண ” என்கிற நேரிலே ”பகவத் ச்ரியம் ” என்று
அருளிச் செய்தாரென்று ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். மேற்கொண்டு,
இதன் விவரத்தை 28 வது ”த்வய அதிகாரத்தில் ” பார்க்கலாம்.
ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா ஆசார்யர் ——
சரணாகதி கத்ய வ்யாக்யானத்தில் பிராட்டியின் சாக்ஷாத் உபாயத்வத்தை ,
ஸம்ப்ரதாய ஸித்தம் என்று அருள்கிறார்.
பகவந் நாராயண ——-இத்யாதியை புருஷகார ப்ரபத்திபரமாக யோசித்து
ச்ரியம் ப்ரபத்ய ,தத் ஸந்நிதெள , மூல மந்த்ரேண ,ஸ்வரூபானுரூப ,புருஷார்த்தப்ரார்த்தனம்
ததுபாய ப்ரார்த்தனா பர்யந்தம் க்ருத்வா ,ததுநுஜ்ஞயா ,த்வயம் அநுஸந்தீயதே இதி
பூர்வாசார்ய அநுஸந்தானம் அநுசஸ்மரன் ப்ரதமம் ச்ரியம் ப்ரபத்யதே —————-
மூல மந்த்ரத்தைக் கொண்டு பிராட்டியிடம் புருஷார்த்த ப்ரார்த்தனமும் செய்து ,
உபாயத்வ ப்ரார்த்தனமும் செய்து ,பிறகு பகவானை சரண வரணம் பண்ணுவது
பூர்வாசார்ய ஸம்ப்ரதாயம் .
லக்ஷ்மி கல்யாணத்தில், பட்டர்
”பத்மாயா : தவ ச சரணெள ந : சரணயந் ” ஸாரஸாஸ்த்ரத்திலே உதாஹரித்துள்ளார் .
ஸ்ரீ பராசர பட்டர் தன்னுடைய குணரத்ன கோசத்திலே –32 வது ச்லோகத்தில்
ப்ரஸகந பலஜ்யோதிர் ஜ்ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா —
ப்ரணத வரணப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா : |
அபி பரிமல : காந்திர் லாவண்யம் அர்ச்சி :இதீந்திரே !
தவ பகவதஸ்சைதேஸாதாரணா குணராஸய : ||
ப்ரேம = அடியார்களின் பிரிவைத் தாங்காதவன் க்ஷேமங்கரத்வ =அடியார்களிடம்
குற்றங்களை நீக்கி அவர்களுக்கு மோக்ஷபர்யந்தமான நன்மைகளைச் செய்பவன்
சதுச்லோகி
—————–
நான்கு வ்யூஹம் —அதில் அநிருத்தன் ஒன்று.அநிருத்த வ்யூஹத்திலிருந்து
விபவ மூர்த்திகள் —-ஹார்த்தம் ( ஹ்ருதயத்தில் வாஸம் )
அர்ச்சை , விபவ மூர்த்திகளே —-
லக்ஷ்மி தந்த்ரம் —பகவானின் 38 விபவங்களைச் சொல்கிறது.கேசவாதி மூர்த்திகள்
அம்மூர்த்திகளுக்குப் பத்னியும் சொல்லப்படுகிறது
ப்ரஹ்ம ஸூத்ரம் —–4 அத்யாயம் பகவானுக்கு இதில் சொல்லப்பட்ட 4 அம்சங்களும்
பிராட்டிக்கும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது
சதுச்லோகீ —4 ச்லோகமாக ஸ்ரீ ஆளவந்தார் அருளினார்
1. உலகுக்கெல்லாம் இவள் பகவானைப்போல ”சேஷீ ”
2.பகவானுக்கும் ,பிராட்டிக்கும் ”மேன்மை ”ஒரே விதமாகத் தானாகவே ஏற்பட்டது
3.மோக்ஷமும் இவள் அநுக்ரஹத்தாலே
4. இவளுக்கும் ”விபுத்வம் ” பகவானின் எங்கும் பரவியிருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில்
பிராட்டியும் நெருக்கமாக இணைந்திருப்பதாலே ,பகவானுக்கு உள்ள விபுத்வம்
இவளுக்கும் உண்டு.
மதுராந்தகம் ஸ்வாமி தன்னுடைய ”ஸம்ப்ரதாய ஸுதா ” என்கிற க்ரந்தத்தில்,
6 வது அதிகாரத்தில் ” லக்ஷ்மி உபாயத்வ ஸம்ரக்ஷணம் ” என்பதாகச் சொல்கிறார்.
ஸ்ரீ ஸுக்த பாஷ்யத்திலே —-பெரிய ஜீயர் சொன்னதை இங்கு சொல்கிறார்
ச்ரியம் ஸ்ரீரீஸ்ரயே இதி ஸர்வாதாரத்வம் புருஷகாரத்வேந உபாயத்வேந
சாஸ் ரீயமாணத்வம் ஸ்ர்ருஹிம்ஸாயாமிதி ஆச்ரித தோஷ நிவர்தகத்வம்
ஸ்ராபரிபாகே இதி ஆச்ரிததோஷாநபஹாய ச்ரீணாத் ச குணைர்ஜகத் இதி
ஆச்ரிதகுணபூரகத்வம் ஏவமாதயே : தர்மா : ஸுசிதா : ச்ரீஸப்தேந ——
——————————————-
ஸ்ரீ பாஞ்சராத்ர வசனம் இப்படிச் சொல்கிறது —-
லக்ஷ்மீம் ச மாம் ஸுரேசம் ச த்வயேன சரணம் கத : |
மல்லோகம் அசிரால்லப்த்வா மத்ஸாயுஜ்யம் ஸ கச்சதி ||
அதிகாரத்திலிருந்து
சேஷியின் புருஷகாரம் போன்றவைகள்
இப் புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்களாவன —
மறுக்க வொண்ணாமையும் ,ஒழிக்க ஒழியாமையும் , நிருபாதிகமாகையும் ,ஸஹகாரியைப்
பார்த்திருக்க வேண்டாமையும் ,தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும்
வ்யாக்யானம்
பிராட்டியிடமிருந்து புருஷகாரமாக ( சிபாரிசாக ) பகவான் பெறுகின்றவை ஐந்து
தன்மைகள் உள்ளவையாகும். அவை —-1.பிராட்டி சொல்வதை மறுக்க இயலாமை
2.சரணம் என்று வந்தவர்களைத் தள்ள இயலாமை 3.எதிர்பார்ப்பு இல்லாமல்
இருத்தல் 4.சரணம் அடைய வேறு எதையும் எதிர்பாராது இருத்தல் 5.சரணமடைத்தவர்களின்
பலனைத் தன்னுடைய பலனாக நினைத்தால்
புருஷகாராதிகள் 5ம் ஸ்ரீமந் நாராயண என்கிற சொல்லில் அடங்கியுள்ளன.
ஸ்ரீ —என்பதால், புருஷகாரமான பிராட்டி சொல்லப்படுகிறாள். நார —-என்பதிலிருந்து
பகவானுக்கும் ஜீவனுக்கும் உள்ள ஸம்பந்தம் சொல்லப்படுகிறது . நார –சப்தமே
பகவானின் குணங்களைச் சொல்லிற்று .ஆனுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜனம்
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி -இதற்கு ஐந்து சந்தேகங்கள்
இவ் விசேஷங்கள் அஞ்சாலும் சங்காபரிஹாரம் பிறந்தபடி எங்ஙனே யென்னில்
ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தி யாயிருந்தானே யாகிலும் மறுக்க வொண்ணாத புருஷகார
விசேஷத்தாலே அந்தப்புர பரிஜந விஷயத்திற்போலே அபிகந்தவ்யதா விரோதிகளான
அபராதங்களை யெல்லாம் க்ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும்படி நின்று அபீகந்தவ்யனாம்
கர்மாநுரூப பலப்ரதனேயாகிலும் இப்பிரபத்தி ரூப வ்யாஜத்தாலே ப்ரஸன்னானாய்
ஸ்வாமித்வ தாஸத்வ ஸம்பந்தோபோதிதமாய் தாயம் போலே ஸ்வத :ப்ராப்தமான
அளவில்லாத பலத்தையும் தரும்.
அவாப்த ஸமஸ்த காமதையாலே ஸர்வோபகார நிரபேக்ஷனேயாகிலும் அல்பவ்யாஜத்தாலே
வசீகார்யனான ஸுஜந ஸார்வபௌமனைப் போலே தன் நிரூபாதிக காருண்யாதிகளாலே
இவன் செய்கிற சிலவான வ்யாபாரத்தைத் தனக்குப் பறிபோபகாரமாக ஆதரித்துக்கொண்டு
க்ருதஜ்ஞனாய்க் கார்யம் செய்யும் க்ஷூத்ர தேவதைகளைப் போலே க்ஷிப்ரகாரியன்றாகிலும்
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்துப் பலங்கொடுத்தானே யாகிலும்
அநந்ய சரணனுடைய ப்ரபத்திக்கு ஒளதார்யாதி குண ஸஹிதமாய் சஹகார்யாந்தர நிரபேக்ஷமான
தன் ஸங்கல்ப மாத்ரத்தாலே காக விபூஷணாதிகளுக்குப் போலே இவன் கோலின காலத்திலே
அபேக்ஷிதம் கொடுக்கும்
ஸமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ரயாதி குணவிசிஷ்டனாய் தன் ப்ரயோஜனமாக
ஆச்ரிதருக்கு அபேக்ஷிதம் செய்கிறானாகையால் கோசல ஜனபதத்தில் ஜந்துக்களுக்குப் போலே
குமாரனோடொக்கத் திர்யக்கான கிளிக்குப் பாலூட்டுங்கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும்
இப்படி யதாலோகம் பிறந்த சங்கைகளுக்கு யதாலோகம் பரிஹாரமுண்டாகையாலே
யதா சாஸ்த்ரம் ப்ரபத்தி அபேக்ஷித சாதனமாகக் குறையில்லை
வ்யாக்யானம்
ப்ரபத்தி சம்பந்தமான ஐந்து சந்தேகங்களும் .ஐந்து தன்மைகளால் நீங்கியது
எப்படியெனில் —–
பகவான் அனைத்துமறிந்தவன் ;அனைத்து சக்தியுமுள்ளவன்.இருப்பினும், பிராட்டியின்
புருஷகாரத்தை மறுக்க இயலாதவன்.ராணியின் ஆட்கள் தவறுகள் செய்தாலும் ,
அரசன் பொறுத்துக்கொள்வதைப் போலே , புருஷகார பூதையான பிராட்டியின் தயைக்கு
உள்ளானவர்களின் குற்றங்களைப் பொறுக்கிறான் .இவைகளைக் காணாமல் போல்
இருக்கிறான்
அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலனை அளிப்பவனாக இருந்தாலும், ப்ரபத்தி
செய்தவனிடம் அதிகக் கருணை காட்டுகிறான் . ஆண்டான் –அடிமை உறவு இருந்தாலும்
அடிமை தவறுகள் செய்தாலும், அவர்கள் அடையவேண்டிய நன்மைகளைச் செய்கிறான்
பகவான் அடையவேண்டிய அனைத்துமுள்ளவன் ;அதற்கு எவருடைய உதவியும்
தேவையில்லாதவன். நாம் செய்யும் ப்ரபத்தியை ,நாம் அவனுக்குச் செய்யும் பேறாகக்
கருதுகிறான்;இது அவனுடைய காருண்யத்தைக் காட்டுகிறது.ஒரு அரசனுக்கு, ஒருவன்
சிறியதாக ஒன்றைச் சமர்ப்பித்தாலும் , அதனால் மகிழும் அவர் , எண்ணற்ற உதவிகளைச்
செய்வதை இது ஒக்கும்
பகவான் சாதாரண தேவதைகளைப்போல உடனே பலனளிப்பதில்லை . மற்ற சாஸ்த்ரங்களின்படி
நடப்பவனுக்கு சற்றுத் தாமதமாகவே பலனைத் தருகிறான் . ஆனால்,மற்ற உபாயங்களைத்
தள்ளி, சரணம் என்று ப்ரபத்தி செய்தவர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுகிறான்
இதை,காகாசுரன், விபீஷணன் விருத்தாங்தங்களில் காணலாம்.
இவனுக்கு ஒப்பாரும் இல்லை ; மிக்காரும் இல்லை.இவன் ஸர்வ ஸ்வதந்த்ரன் .
ஆனாலும் தன்னை அண்டியவர்களின் விருப்பப்படி நடந்து ,மகிழ்ச்சி அடைகிறான் யாருடைய
உயர்வு தாழ்வையும் பார்ப்பதில்லை.தான் வளர்க்கும் கிளிக்குப் பாலூட்டும்
ராஜகுமாரன் முதல், குழந்தைக்குப் பாலூட்டும் விலங்குகள் வரை, ராமபிரான்
கோசலநாட்டில் சமமாக நடத்தினான்
ப்ரபத்தி குறித்து நாம் அன்றாடம் செயல்படும்போது ஏற்படும் சந்தேகங்கள் ,நாம் அன்றாடம்
செய்யும் செயல்கள் மூலமாகவே தீர்க்கப்பட்டன ஆதலால், ப்ரபத்தி என்பது
பகவானை அடைவதற்கான உபாயம் என்று தெளிவாகிறது.
அதிகாரத்திலிருந்து
மஹாவிச்வாஸம் —ஆசார்ய கடாக்ஷம் மூலமே
இவ் விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே
தெளிந்தவனுக்கல்லது மஹா விச்வாஸம் பிறவாது.எங்ஙனேயென்னில் —-ஈச்வரன்
அபிமுகநல்லாமையாலே கர்ம யோகாதிகளுக்குஅநர்ஹனாம்படியான மஹாபராதங்களை
உடையவனாய் திகசுசிமவிநீதம் என்கிற ச்லோகத்தின்படியே எட்ட அரிய பலத்தைக்
கணிசிக்கும்படியான சாபலத்தையுமுடையவனாய் இப்பலத்துக்கு அநுஷ்டிக்கப் புகுகிற
உபாயம் காயக்லேச அர்த்தவ்யய காலதைர்த்யாதிகளொன்றும் வேண்டாததொரு
ஸக்ருதநுஸந்தானமாதல் , ஸமுதாயஜ்ஞான பூர்வக ஸக்ருதுக்திமாத்ரமாதலாய் ,
இந்த லகுதரமான உபாயத்தைக் கொண்டு அந்த குருதரமான பலத்தைத் தான்
கோலின காலத்திலே பெற ஆசைப்பட்டு இப்பலத்துக்கு சுநமிவ புரோடாச :
என்கிறபடியே ஜன்மவ்ருத்தாதிகளாலே தான் அநர்ஹனாய் வைத்துத் தன் அநுபந்திகளையுங் கொண்டு
இப்பேறு பெறுவதற்காக ஒருத்தனுக்கு மஹாவிச்வாஸம் பிறக்கையில் அருமையை நினைந்து
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்தாரிறே
வ்யாக்யானம்
இதற்கு முன்பு சொல்லப்பட்ட புருஷகாரம் முதலான ஐந்தையும் ,ஆசார்யன் க்ருபையால்
தெரிந்துகொள்ளாதவனுக்கு ,மஹாவிச்வாஸம் ஏற்படாது. மஹாவிச்வாஸம் ஏற்படவில்லையெனில்
பகவானின் கடாக்ஷம் கிடைக்காது. இதனால்,கர்மயோகம் போன்றவற்றைச் செய்யும்
தகுதி இல்லாது, பாபியாக இருக்கிறான் . இதை ஸ்ரீ ஆளவந்தார் ,தனது ஸ்தோத்ர ரத்னத்தில் (47)
கூறுகிறார்.
திகசுசிமவிநீதம் நிர்ப (த )யம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹம் யோகிவர்யாக்ரகண்யை : |
விதிசிவ ஸநகாத்யைர் த்யாது மத்யந்ததூரம்
தவபரிஜந பாவம் காமயே காமவ்ருத்த : ||
சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ஸாத்விக ஆகாரங்களை உண்டு ,இந்த்ரியங்களை
அடக்கி , மனத்தையும் ஸாத்விகமாக்கி பெரியவர்களிடம் அடக்க ஒடுக்கமாக அவர்களுக்குப்
பணிவிடை செய்து பூர்ண புருஷாகாரம் இருந்தாலும் உன்னிடம் நெருங்க அஞ்சுகிறார்கள் .
யோக்யதை இருந்தாலும் பெரியோர்கள் கோஷ்டியில் சேர வெட்கப்பட்டு , அநுஷ்டானபரர்களும்
நெருங்கப் பயப்படுகிறார்கள் . ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸநகாதி முனிவர்களும்
உன்னை அண்டவே அஞ்சுகிறார்கள் .அப்படி அஞ்சாமல் உன்னிடம் மோக்ஷத்தைக்
கேட்டிருந்தால் எப்போதோ மோக்ஷம் அடைந்திருப்பார்கள்.
நானோ ஒருவித சக்தியுமில்லாதவன் எவ்வித சிக்ஷையும் பெறாதவன் .துணிந்து
வெட்கமின்றிப் ப்ரார்த்திப்பது தகாதுதான் . ஆனால், நான் காமவ்ருத்தன் ; எல்லா சாஸ்திரங்களையும்
மீறி நடந்ததைப்போல ,மோக்ஷம் வேண்டுவதற்கான சாஸ்த்ரங்களையும் மீறி இருக்கிறேன்.
துணிந்து கேட்கிறேன், மோக்ஷம் . இதனை ஆராய்ந்தால் நானே என்னை வெறுத்து
ஒதுக்கவேண்டியவன் ஆவேன்.
திகசுசிமவிநீதம் =தூய்மை வெட்கம் தயை போன்றவை இல்லாதவனை நிந்திக்கவேண்டியதுதான்
நியாயம். ஆனால், அடையஇயலாத ஒன்றுக்கு முயற்சி செய்து சுலபமான உபாயத்தைச் செய்கிறான் .
இந்த உபாயம் கடுமையான உடல் முயற்சி இல்லாதது; பணச் செலவு இல்லாதது;
அதிக நேரம் தேவையில்லை; மிக எளிமையானது ; மனஸ் அல்லது வாக்கால் பொருள் அறிந்து
சொன்னாலே போதும்.இந்த உபாயத்தின் மூலம்,தான் விரும்பும் மோக்ஷத்தை, தான்
அடைய விரும்பும் நேரத்தில் பெறுவதற்கு ஆசைப்படுகிறான் .
பாத்ம ஸம்ஹிதையில் , ” சுநமிவ புரோடாச : —–” என்று சொல்லுமாப்போலே , அதாவது,
புரோடாசம் என்பது ஹோம த்ரவ்யம் –இது தேவர்களுக்கு உரியது, அதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை—
அதைப்போல,பிறவி, மற்றும் சாஸ்த்ர விரோத நடவடிக்கைகளால்,மோக்ஷம்பெறத் தகுதி
இல்லாவிடினும் அதை அடைய ஆசைப்படுகிறான். பக்தியோகம் செய்யவே அச்சமும் தயக்கமும்
உள்ளவன் ப்ரபத்திக்கு முக்ய அங்கமான மஹாவிச்வாஸம் கொள்ள எண்ணுதல்
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்ததைப்
போலுள்ளது அதாவது, ஒரு வாணியனின் –எண்ணெய் விற்பவனின்— செக்கு —எண்ணையை
ஆட்டும் மரத்தாலான சாதனம்—-பழுதுபட , வாணியன் ,கானகத்துக்குச் சென்று செக்குக்கான
ஒரு மரத்தை வெட்ட முயன்றான். அப்போது அந்த மரத்தில் குடியிருந்த ஒரு பிசாசு,
”மரத்தை வெட்டாதே—-உனக்குப் பிழைப்பதற்கு தினமும் ஒரு மூட்டை எள்ளையே
தருகிறேன்;எள்ளை விற்றுப் பிழைத்துக்கொள் —” என்க , வாணியனும் சம்மதிக்க, அந்தப்
பிசாசு, தினமும் ஒரு மூட்டை எள் கொடுத்து வந்தது.சிறிது நாள் கழித்து,அந்த மரத்தினடியே
வந்த மற்றொரு பிசாசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு,முதல் பிசாசிடம் , நான் அந்த வாணியனைக்
கொன்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாணியனின் வீட்டுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில், வாணியன் , தனது பிள்ளையிடம் , முரண்டு பிடிக்கும் இரண்டாவது
காளை மாட்டைக் காட்டி , ” மகனே—அந்த இரண்டாவது பிசாசைப் பிடித்துக் கட்டு –”
என்றான். வாணியனைக் கொல்ல வந்த பிசாசு ,நடுங்கிப்போய் ,”ஐயா —நான் உனக்கு
தினமும் எண்ணெயாகவே கொடுக்கிறேன் –என்னை —” என்று சொல்லி ஓடிப்போயிற்று.
இதைக் கேள்வியுற்ற முதல் பிசாசு, சிரித்ததாம் .
இதைப்போன்றே மஹாவிச்வாஸம் , பக்தி யோகத்தைக் காட்டிலும் சிரமமானது என்பர்.
ஒருபிடி எள்ளையே , கொடுக்க இயலாதவனிடம் ,ஒரு பாத்திரம் நிரம்ப எண்ணெய்
கேட்பது போல—கர்ம யோகத்துக்கே தகுதி இல்லாதவன் மஹா விச்வாஸம் கொள்ள நினைப்பது
உள்ளது –என்றும் பொருள் கொள்ளலாம் .
அதிகாரத்திலிருந்து
அப்புள்ளாரின் விவரணங்கள்
இவ்விடத்தில் ஸர்வேச்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நராதமனென்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானிற் காட்டில் இடைச்சிகளைப்போலே விவேகமில்லையேயாகிலும்
ஸௌலப்யத்தை அறிந்து அந்நலனுடை யொருவனை நணுகுமவனே பரமாஸ்திகனென்று
அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம்
வ்யாக்யானம்
ஸ்ரீ அப்புள்ளார் கூறுவதாவது —-
கோகுலத்து ஆய்ச்சியர்கள் போன்று விவேகம் இல்லையென்றாலும் , ஒருவன் , பகவானின்
ஸௌலப்யத்தை–எளிமையை உணர்ந்து அவன் பகவானை அணுகினால்,அவன் பரம ஆஸ்திகன் .
ஆனால், பகவானின் பரத்வத்தை மட்டிலுமே உணர்ந்து , அவனை அணுகத் தகுதியில்லை
என்றிருப்பவன் ”நராதமன் ” என்று கீதை சொல்கிறது ஆதலால், நராதமன் என்பவனைக்காட்டிலும்
பரம ஆஸ்திகன் பகவானிடம் மஹாவிச்வாஸம் அதிகமுள்ளவன் ஆகிறான்
அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் மஹாவிச்வாஸம் ,கார்ப்பண்யம்
இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விச்வாஸ மஹத்வமும் விச்வாஸ ஸ்வரூபமும்
கார்ப்பண்யமும் ப்ரபத்யே என்கிற க்ரியா பதத்தில் உபஸர்க்கத்திலும் ,சரணசப்தோபலிஷ்டமான
தாதுவிலும் உத்தமனிலும் அநுஸந்தேயங்கள் . இதில் உத்தமனில் விவக்ஷிதத்தை அநந்யசரண :
என்று கத்யத்திலே வ்யாக்யானம் பண்ணினார்
வ்யாக்யானம்
த்வய மந்த்ரத்தில் உள்ள ப்ரபத்யே என்பதில் ”ப்ர ” என்பதில், பெரியபிராட்டியாரின்
புருஷாகாரம் ,மஹா விச்வாஸத்தின் மேன்மை இதன் ஸ்வரூபம் , வேறு கதியில்லை
என்கிற முடிவு சொல்லப்படுகிறது.
மேலும்,சரணம் என்கிற வார்த்தையுடன் சேர்ந்து வருகிற ”ப்ரபத்யே ” என்பதில் உள்ள
”’பத் ‘ என்பதிலும் ( தாது—root )தெரிகிறது.இக் கருத்தையே எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில்
அநந்யசரண :–வேறு அடைக்கலம் இல்லை என்று அருளினார்
அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் –கோப்த்ருத்வ வரணம்
இவ்விடத்தில் உபாயத்வ அத்யவஸாய வாசக ஸப்தத்திலே கோப்த்ருத்வவரணம் அந்தர்நீதம் .
அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி :
சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் என்றும்
உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : என்றும்
சொல்லுகிறபடியே உபாயாந்தர அசக்தனுக்கு ஸர்வேச்வரன் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த
சாதாரணமான ரக்ஷகத்வ மாத்ரத்திலே நிற்கை யன்றிக்கே ஸ்வீக்ருத பரனாய்க் கொண்டு
உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் ந்யஸ்த பரனான இவ்வதிகாரிக்குப் பின்பு
அந்நயோபாயத்வம் நிலை நிற்கைக்காகவும் உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்திலே
விவக்ஷிதமாயிற்று . உபாயமென்றால் ஒரு விரகு என்ற மாத்ரமாகையாலே
இவ்வுபாயத்வம் சேதந அசேதந ஸாதாரணமாயிருக்கையாலும்
ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா என்றும்
ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே என்றும்
சொல்லுகிறபடியே சேதநைகாந்தமான கோப்த்ருத்வ வரணம் அநுஸந்தேயமாகையாலும்
கோப்த்ருத்வ வரணம் இங்கே விவக்ஷிதம் . அதி சரண சப்தம் ஒரு ப்ரயோகத்திலே
இரண்டு அர்த்தத்தை அபிகாநம் பண்ணமாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அஸாதாரணமான உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்தில் சப்தமாய் ஸர்வாதிகாரி
ஸாதாரணமான கோப்த்ருத்வவரணம் அர்த்தமாகக் கடவது
வ்யாக்யானம்
பகவானிடம் ஏற்படுகிற மஹா விச்வாஸம் த்வயத்தில் வெளிப்படையாகவே உள்ளது.
நம்மைக் காப்பாற்றும்படி ப்ரார்த்திப்பது சரணம் என்பதிலேயே உள்ளது
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ப்ரமாணம் சொல்கிறார்
அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி : ( 37–30 )
சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ( 37–31 )
உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : ( 37–29 )
நீயே எனக்கு உபாயமாகவேண்டும் என்று ப்ரார்த்திப்பது –சரணாகதி –அது
இந்த எம்பெருமானிடம் செய்யப்படட்டும்
அடியோங்கள் குற்றங்களுக்கு இருப்பிடம் கைமுதல் ஏதும் இல்லாதவன்
ரக்ஷகன் யாருமில்லாமல் இருக்கிறேன் .தேவரீரே எனக்கு உபாயமாக
இருக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை வடிவமான ஜ்ஞானம் –சரணாகதி —
இது பகவானிடம் செய்ய வேண்டும்
சரணம் என்கிற வார்த்தை உபாயம் ( சாதனம் ), வீடு, ரக்ஷிப்பவன் என்கிற பல
அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு உபாயம் என்று பொருள்
எல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமான். சரணாகதி செய்த ப்ரபன்னனைக்
காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டும் , உபாயமே எம்பெருமானாக உள்ளதாலும்
ப்ரபன்னன் எப்போதும் எல்லாப் பொறுப்புக்களையும் பகவானிடம் கொடுத்து
வேறு உபாயத்தை நாடாமல் ,அவனே உபாயம் என்று இருக்கவேண்டும்.
உபாயம் என்னில் இலக்கை அடைய வழி
ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா
ரக்ஷிப்பான் என்கிற திடநம்பிக்கை , ரக்ஷிக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை
ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே —–லக்ஷ்மீ தந்த்ரம்
எல்லாவற்றையும் நியமிப்பவன்; எல்லாம் அறிந்தவன் ;மிகுந்த காருண்யமுள்ளவன் ,
இருந்தாலும் ஸம்ஸாரத்தை வழி நடத்துபவனாகையால் , ”ரக்ஷிக்க வேணும் ”
என்கிற ப்ரார்த்தனையை எதிர்பார்க்கிறான்
சேதனன் மட்டுமே இப்படி ப்ரார்த்திக்க முடியும்.
த்வயத்தில் உள்ள ”சரணம் ” என்கிற பதம் உபாயத்தையும் குறிக்கிறது;
ரக்ஷிக்க வேணும் என்பதையும் குறிக்கிறது
சரணம் என்னும் இப் பதம் பகவானே ப்ரபன்னனுக்கு உபாயம் என்பதையும்
ரக்ஷிக்க வேணும் என்று வேண்டப் பட்டதாகவும் கொள்ள வேணும்.
அதிகாரத்திலிருந்து
அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே
ப்ரக்யாத :பஞ்சஷ அங்க :ஸக்ருத் இதி பகவச் சாஸநை : ஏஷ யோக :
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி : அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அந்யேந தத் ஸாத்யதா இச்சா
தத்வ ஜ்ஞான ப்ரயுக்தா து இஹ ஸ பரிகரே தாததீந்ய ஆதி புத்தி :
வ்யாக்யானம்
பக்தி யோகம் போன்றவற்றை அனுசரிக்க இயலாத நிலையில் இருப்போருக்கும்
இவை பலன் தருமோ என்று சந்தேகப் படுவோருக்கும் இவர்களது கதி யற்ற
நிலையை உணர்ந்த எம்பெருமான் நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொண்டான்.
உபாயமாக அவனையே வேண்டி, அவனையே அடைய அன்பு கொண்ட
ஆசார்யர்கள் -அதற்கான வழியை உபதேசித்தார்கள்
, இதன் மூலமாக,நம்மைப் போன்றே கர்ம வினைகளால் பீடிக்கப்படும்
மற்ற தெய்வங்களை நாடி , நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத அவர்களிடம்
என்னை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று
இத் தெய்வங்களிடம் கையேந்தும் தவறைச் செய்ய மாட்டோம்
பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி யோகம் ஐந்து அங்கங்களைக் கொண்டது
என்றும் ஒரே ஒருமுறை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
(மோக்ஷத்துக்காகச் செய்யப்படும் ப்ரபத்தியில் ”ஸாத்விக த்யாகம் ”ஆறாவது அங்கம் )
ஏனைய பலன்களைக் கோரிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் இல்லை.
எம்பெருமானின் கட்டளையை மீறுதல் என்பதை மாற்ற,ஆநுகூல்ய ஸங்கல்பம் ,
ப்ராதிகூல்ய வ்ரஜநம் இரண்டு அங்கங்களும் , பகவானை அல்லாது வேறு
உபாயத்தைப் பற்றாததை கார்ப்பண்யம் என்கிற அங்கமும் , தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்
விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாமல் பகவானை நம்பி யிருப்பது
மஹா விச்வாஸத்தையும் , விரும்பும் பலனை அளிக்கிறேன் என்கிற பகவானின்
ஸங்கல்பத்தை கோப்த்ருத்வ வரணம் என்கிற அங்கமும் ஏற்படுத்துகிறது .
இப்படியாக உள்ள ப்ரபத்தியில் ,இவை யாவும் பகவானாலேயே என்கிற எண்ணமும்
சாஸ்த்ர ஞானத்தால் மட்டுமே உண்டாகிறது .
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –11 வது அதிகாரம் —- பரிகரவிபாகாதிகாரம் —–நிறைவு
——————-
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply