ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய ஸ்ரீ திருவெழுகூற்றிருக்கை–

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் -தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –
பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் -தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்
ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தன குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் அமுதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத்தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –
யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –
கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த பானகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையை பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

எழு ஏழு
கூற்று
இருக்கை
ஏழு கூறுகள் சொற்கள்
அடுக்குகள்
பேர் இன்பத்தால் எழுந்த வார்த்தைகள்
அவன் எழுந்து அருளும் சொல் தேர்
தேர் தட்டில் இருந்து அருளிய சரணாகதி நினைவூட்ட

ஒரே திவ்ய தேசம் பிரபந்தம்
திருமாலையில் வட மதுரை உண்டே
திருப்பள்ளி எழுச்சியில் அயோத்யா உண்டே
கல் தேர் கர்ப்ப க்ரஹம்
மரத்தேர்
சொல் தேர்
ரத பந்தன கவி
ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் மங்களா சாசனம்
வேதம் -ஏழு சந்தஸ்ஸூக்கள்
காயத்ரி ஜகதி சக்கரம்
உஷ்ணு
அனுஷ்ட்ப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் தட்டு

சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ -ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு நம்மாழ்வார் போல் இவரும்

18 குணங்களை காட்டி சரண்

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-சர்வ பல பிரதத்வம்
11-புருஷகாரம்
12-ஆராதனைக்கு எளியவன்
13-சரீர சரீரீ பாவம் –
14-பிரதிபந்தகம் போக்கி
15-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
16-ஸ்ரீ யபதித்தவம்
17-சர்வ அந்தர்யாமி
17 மேன்மைகள்
18-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
வரும் இடர் அகல சரணாகதி
நம்மாழ்வார் போல்

——————

திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய திருவெழுகூற்றிருக்கை

ஒருகுணக் கடலே! இருவினை இருள்தனை
நிலந்தரம் செய்யும் ஒருபேர் ஒளியே!
அடைந்திடும் அடியவர்க்கு ஒருதனிப் புகலே!
உடையவர் தந்தம் ஈரடி மலரே!
மூவெழுத்து உணர்ந்தோர் முடியினில் அணியே!
இருநிலந் தனிலே ஒன்றாம் திங்கள்,
ஒன்றிய விண்மீன் தன்னில் தோன்றும்
இருப்பிறப் பினரே! மூவாத் தொண்டரே!
நானிலத் தாரியர் முக்கோல் பகவர்
நன்மொழி யின்படி இருவராய் வந்தே
ஓர்மலை தன்னில் ஒருதனித் தோட்டம்
இருவராய் அமைத்த குரவரே! முக்குணம்
கடந்த அந்நான்மறை வேதியன் அஞ்சல்
அளிக்கவே, நால்திசை தொழுந்திரு மலையினில்
மேவி, முக்காலும் அண்ணல் ஈரடி
ஒன்றிலே, ஒன்றிய மனத்துடன் மலர்த்தொடை
சூட்டி, இருமுப் பொழுதும் கடமையில்
ஊன்றிய சீர் ஆண் பிள்ளையே! நான்மறை
வேதியன் ஐநிலை அறுகுணன், ஐந்தாம்
மறையும் நாலா யிரமும், புகழும்
முப்பதப் பொருள்தன், இருகண் நோக்கின்
ஓரிலக்காகி, அவன்தனக்கு ஓருயர்
மாமனும் ஆகி, ஈரிதழ்க் கோவையால்
தனியனும் பெற்ற தனிப்பெரும் சீலரே!
மூவகை வாக்கியம் ஒருங்கவிட்டு அருளி,
நான்மறை மயர்வினை முழுவதும் நீக்கி,
ஐவகை அர்த்தமும் ஆறொடு பேறும்,
ஏழுலகினுக்கும் தெளிவாய் உரைத்தே,
அறுமதச் செடிதனை அடியுடன் அறுத்தே,
ஐந்து சடங்கொடு நானிலத் தார்க்கெலாம்,
மூன்று இரகசியப் பொருளையும் காட்டி,
நாரணன் ஈரடி சேர்த்திடும் ஆரியர்,
தாள்களில் ஒன்றிய உளந்தன்னாலே,
மதுர கவிகளின் தாசனென்று ஒருபேர்
பெற்ற செல்வரே! ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் நான்காய் ஐந்து பூதமாய்,
ஆறாய் ஆகியும் ஆக்கியும் ஆளும்
ஏழு மலையின் நாயகன் முகத்தில்
தழும்பினை ஆற்றிய பத்தியின் ஆறே!
ஐம்புலன் கிரிசை யாவையும், நால்தோள்
நாதனின் தாளிணை சேர்த்த செம்மலே!
முத்தமிழ் இருநூல் ஒருத்தியின் தாளைப்
போற்றிடும் திருமலை அனந்தாழ் வானே!
வித்தகர் உம்மடி எந்தம்
சித்தம் திகழ்ந்திட நித்தம் நலமே!

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading