கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்.
வைஶம்பாயந உவாச
அத² விஷ்ணுர்மஹாதேஜா முஹூர்தாப்⁴யுதி³தே ரவௌ |
ம்ருக³யாவ்யபதே³ஶேந யயௌ ரைவதகம் கி³ரிம் ||2-73-1
ஆரோப்யைகரதே² தே³வ꞉ ஸாத்யகிம் நரபுங்க³வம் |
ப்ரத்³யும்நமநுக³ச்சே²தி ப்ரோக்த்வா குருகுலோத்³வஹ ||2-73-2
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, “என்னைப் பின்தொடர்வாயாக” எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)
ரைவதம் ச கி³ரிம் தே³வோ க³த்வா தா³ருகமப்³ரவீத் |
மதீ³யம் ரத²மேநம் த்வம் க்³ரஹாயேஹைவ தா³ருக ||2-73-3
ப்ரதிபாலய மாம் ஸௌம்ய தி³நார்த்³த⁴ம் வாரயந்ஹரீந் |
ரதே²நைவ ப்ரவேஷ்டாஹம் த்³வாரகாம் ஸூதஸத்தம ||2-73-4
அந்தத் தெய்வீகமானவன் {கிருஷ்ணன்}, ரைவதக மலையை அடைந்ததும் {தன் தேரோட்டியான} தாருகனிடம், “ஓ! தாருகா, ஓ! தேரோட்டிகளில் முதன்மையானவனே, என் தேரை உன் பொறுப்பில் எடுத்துக் கொண்டும், குதிரைகளை மேயவிட்டுக் கொண்டும் அரை நாள் வரை என்னை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக. இந்தத் தேரிலேயே நான் மீண்டும் துவாரகைக்குள் நுழைவேன்” என்றான்.(3,4)
இதி ஸந்தி³ஶ்ய ப⁴க³வாநாருரோஹ ஜயோத்³யத꞉ |
தார்க்ஷ்யம் ஸஸாத்யகோ தீ⁴மாநப்ரமேயபராக்ரம꞉ ||2-73-5
சிறப்பும், நுண்ணறிவும், அளவற்ற ஆற்றலும் மிக்கவனான அந்தத் தேவன் இவ்வாறு {தாருகனிடம்} ஆணையிட்டுவிட்டு, சாத்யகியுடன் சேர்ந்து கருடனின் முதுகில் ஏறிச் சென்றான் {பறந்து சென்றான்}
ப்ருத²க்³ரதே²ந கௌரவ்ய ப்ரத்³யும்ந꞉ ஶத்ருஸூத³ந꞉ |
ஆகாஶகா³மிநா ராஜந்ப்ருஷ்ட²த꞉ க்ருஷ்ணமந்வயாத் ||2-73-6
ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்
நிமேஷாந்தரமாத்ரேண நந்த³நம் காநநம் ஹரி꞉ |
தே³வோத்³யாநம் யயௌ தீ⁴மாந்பாரிஜாதஜிஹீர்ஷயா ||2-73-7
நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.
த³த³ர்ஶ தத்ர ப⁴க³வாந்தே³வயோதா⁴ந்து³ராஸதா³ந் |
நாநாயுத⁴த⁴ராந்வீராந்நந்த³நஸ்தா²நதோ⁴க்ஷஜ꞉ ||2-73-8
சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.
தேஷாம் ஸம்பஶ்யதாமேவ பாரிஜாதம் மஹாப³ல꞉ |
உத்பாட்யாரோபயாமாஸ பாரிஜாதம் ஸதாம் க³தி꞉ ||2-73-9
நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்
க³ருட³ம் பக்ஷிராஜாநமயத்நேநைவ பா⁴ரத |
உபஸ்தி²தோ விக்³ரஹவாந்பாரிஜாத꞉ ஸ கேஶவம் ||2-73-10
ஓ! பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது
ஸாந்த்விதோ வாஸுதே³வேந பார்ஜாதஶ்ச பா⁴ரத |
உக்தஶ்ச வ்ருக்ஷ மா பை⁴ஸ்த்வம் கேஶவேந மஹாத்மநா ||2-73-11
உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, “ஓ! மரமே, அஞ்சாதே” என்று சொல்லித் தேற்றினான்
தம் ப்ரஸ்தி²தம் தரும் த்³ரூஷ்ட்வா பாரிஜாதமதோ⁴க்ஷஜ꞉ |
அமராவதீம் புரீம் ஶ்ரேஷ்டா²ம் ததஶ்சக்ரே ப்ரத³க்ஷிணாம் ||2-73-12
பிறகு அந்தப் பாரிஜாத மரம் (அந்தப் பறவையின் முதுகில்) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட அதோக்ஷஜன், கோட்டைகளில் சிறந்ததான தேவர்களின் வசிப்பிடத்தை {அமராவதி நகரை} வலம் வரத் தொடங்கினான்.
தே து நந்த³நகோ³ப்தார꞉ பாரிஜாதோ த்³ருமோத்தம꞉ |
ஹ்ரியதீதி மஹேந்த்³ராய க³த்வா ந்ருப ஶஶம்ஸிரே ||2-73-13
அதே வேளையில், அந்தத் தேவ தோட்டத்தின் {நந்தனவனத்தின்} காவலர்கள் மஹேந்திரனிடம் ஓடிச்சென்று, “மரங்களில் மிகச் சிறந்த பாரிஜாதம் அபகரிக்கப்பட்டது” என்று சொன்னார்கள்
அதை²ராவதமாருஹ்ய நிர்யயௌ பாகஶாஸந꞉ |
ஜயந்தேந ரத²ஸ்தே²ந ப்ருஷ்ட²தோ(அ)நுக³த꞉ ப்ரபு⁴꞉ ||2-73-14
பாகனை அடக்கியவன் (இந்திரன்) ஐராவதத்தில் ஏறிக் கொண்டும், தேரில் பின்தொடரும் ஜயந்தனுடன் சேர்ந்தும் வெளியே வந்தான்.
பூர்வமப்⁴யாக³தம் த்³வாரம் கேஶவம் ஶத்ருநாஶநம் |
த்³ருஷ்ட்வோவாச ப்ரவ்ருத்தம் போ⁴꞉ கிமித³ம் மது⁴ஸூத³ந ||2-73-15
பகைவரைக் கொல்பவனான வாசுதேவன் அந்த நேரத்தில் கிழக்கு வாயிலை அடைந்திருப்பதைக் கண்ட இந்திரன், “ஓ! மதுசூதனா, என்ன நடக்கிறது?” என்று கேட்டான்.
ப்ரணம்ய க³ருட³ஸ்தோ²(அ)த² கேஶவ꞉ ஶக்ரமப்³ரவீத் |
வத்⁴வாஸ்தே புண்யகார்யாய நீயதே(அ)யம் வரத்³ரும꞉ ||2-73-16
அப்போது கருடனின் முதுகில் அமர்ந்திருந்த கேசவன், சக்ரனுக்குத் தலைவணங்கி, “உமது கொழுந்தியாளின் (சத்யபாமாவின்) நோன்பைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறந்த மரத்தை எடுத்துச் செல்கிறேன்” என்றான்.
தமுவாச தத꞉ ஶக்ரோ மா மைவம் புஷ்கரேக்ஷண |
அயோத⁴யித்வா ந தருர்நயிதவ்யஸ்த்வயாச்யுத ||2-73-17
சக்ரன், “ஓ! தாமரைக்கண்ணா, ஓ! பிழை செய்யாதவனே, போருக்கு என்னை அறைகூவியழைக்காமல் இம்மரத்தை நீ எடுத்துச் செல்லக்கூடாது
ப்ரஹரஸ்வ மஹாபா³ஹோ ப்ரத²மம் மயி கேஶவ |
ப்ரதிஜ்ஞா ஸப²லா தே(அ)ஸ்து முக்த்வா கௌமோத³கீம் மயி ||2-73-18
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, முதல் அடியை நீயே அடிப்பாயாக; என் மீது கௌமோதகி கதாயுதத்தை வீசும் உன்னுடைய உறுதிமொழி நிறைவேறட்டும்” என்றான்.
தத꞉ க்ருஷ்ண꞉ ஶரைஸ்தீக்ஷ்ணைர்தே³வராஜக³ஜோத்தமம் |
பி³பே⁴தா³ஶநிஸங்காஶை꞉ ப்ரஹஸந்நிவ பா⁴ரத ||2-73-19
ஓ! பாரதா, அப்போது கிருஷ்ணன், இடியைப் போன்று கடுமையான கூரிய கணைகளால் தேவர்களின் மன்னனுடைய சிறந்த யானையை {ஐராவதத்தைத்} துளைக்கத் தொடங்கினான்.
விவ்யாத⁴ க³ருட³ம் வஜ்ரீ தி³வ்யை꞉ ஶரவரைஸ்ததா² |
பா³ணாம்ஶ்சிச்சே²த³ ஸஹஸா கேஶவஸ்ய தரஸ்விந꞉ ||2-73-20
வஜ்ரபாணி {இந்திரன்} தெய்வீகமான சிறந்த கணைகளால் கருடனைத் துளைக்கத் தொடங்கினான்; பிறகு நளினமான கரங்களைக் கொண்ட கேசவனால் ஏவப்படும் கணைகள் அனைத்தையும் அறுப்பதிலும் விரைவில் வென்றான்.
யாந்யாந்முமோச தே³வேந்த்³ரஸ்தாம்ஸ்தாம்ஶ்சிச்சே²த³ மாத⁴வ꞉ |
மாத⁴வேந ப்ரயுக்தாம்ஶ்ச சிச்சே²த³ ப³லவ்ருத்ரஹா ||2-73-21
மாதவனும், தேவர்களின் தலைவனால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அறுத்தான்; பலனையும், விருத்திரனையும் கொன்றவனும் புன்னகைத்தவாறே மாதவனால் ஏவப்பட்டவற்றை அறுத்தான்
மஹேந்த்³ரஸ்ய ச ஶப்³தே³ந த⁴நுஷ꞉ குருநந்த³ந |
ஶார்ங்க³ஸ்ய ச நிநாதே³ந முமுஹு꞉ ஸ்வர்க³வாஸிந꞉ ||2-73-22
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது மஹேந்திரனுடைய வில்லின் ஒலியாலும், சாரங்க வில்லின் நாணொலியாலும் சொர்க்கவாசிகள் மயக்கமடைந்தனர்.
தயோர்வர்ததி ஸங்க்³ராமே க³ருட³ஸ்தோ² மஹாப³ல꞉ |
பாரிஜாதம் ஜயந்தோ(அ)த² ஹர்துமப்⁴யுத்³யதோ ப³லீ ||2-73-23
இவ்வாறு அவர்களுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் கருடனின் முதுகில் இருந்த பாரிஜாத மரத்தை அபகரிக்க முயன்றான்.
ப்ரத்³யும்நமத² கம்ஸக்⁴நோ வாரயேதி ததா³ப்³ரவீத் |
ததஸ்தம் வாரயாமாஸ ரௌக்மிணேய꞉ ப்ரதாபவாந் ||2-73-24
கம்சனைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அப்போது பிரத்யும்னனிடம், “(பாரிஜாத மரத்தை அபகரிப்பதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக” என்றான்; பெருஞ்சக்தி வாய்ந்தவனான ருக்மிணி மகனும் {பிரத்யும்னனும்} உடனே அவனை (உறுதியாக) எதிர்த்தான்.
ஜயந்தோ ஜயதாம் ஶ்ரேஷ்டோ² ரௌக்மிணேயமதே²ஷுபி⁴꞉ |
ஸர்வகா³த்ரேஷு விஹஸந்நாஜகா⁴ந ரதே² ஸ்தி²த꞉ ||2-73-25
வெற்றியாளர்களில் முதன்மையான ஜயந்தன் தன்னுடைய தேரில் அமர்ந்தவாறே சிரித்துக் கொண்டு கூரிய கணைகளால் ருக்மிணி மகனின் {பிரத்யும்னனின்} உடல் பகுதிகள் அனைத்தையும் துளைக்கத் தொடங்கினான்.
ரத²ஸ்த² ஏவ ரதி²நம் காமஸ்து கமலேக்ஷண꞉ |
ஐந்த்³ரிமப்⁴யர்த³யாமாஸ பா³ணைராஶீவிஷோபமை꞉ ||2-73-26
மறுபுறம் தாமரைக் கண்களைக் கொண்ட மன்மதத் தேவன் {பிரத்யும்னன்}, தன் தேரில் அமர்ந்து கொண்டே பாம்புகளைப் போலத் தெரியும் கணைகளால் இந்திரனின் மகனைத் துளைத்தான்
ஸ ஸந்நிபாதஸ்துமுலோ ப³பூ⁴வ குருநந்த³ந |
ஜயந்தஸ்ய ச வீரஸ்ய ரௌக்மிணேயஸ்ய சோப⁴யோ꞉ ||2-73-27
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது வீரனான ஜயந்தனுக்கும், ருக்மிணி மகனுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது.
க்ருதப்ரதிக்ருதம் யுத்³தே⁴ சக்ரதுஸ்தௌ மஹாப³லௌ |
மஹேந்த்³ரோபேந்த்³ரதநயௌ ஜக³த்யஸ்த்ரப்⁴ருதாம் வரௌ ||2-73-28
ஆயுதபாணிகளில் முதன்மையான உபேந்திர மஹேந்திரர்களின் மகன்களும், வலிமைமிக்கவர்களுமான அவ்விரு வீரர்களும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டனர்.
தே³வாஶ்ச முநயஶ்சைவ த³த்³ருஶூர்விஸ்மயாந்விதா꞉ |
தம் ஸம்க்³ராமம் மஹாகோ⁴ரம் ஸித்³தா⁴ஶ்சைவ ஸசாரநா꞉ ||2-73-29
தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் கடும்போரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
ததஸ்து ப்ரவரோ நாம தே³வதூ³தோ மஹாப³ல꞉ |
பாரிஜாதம் புநர்ஹர்துமியேஷ குருநந்த³ந ||2-73-30
அதேவேளையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பெரும்பலம்வாய்ந்தவனும், பிரவரன் எனும் பெயரைக் கொண்டவனுமான தேவர்களின் தூதன் ஒருவன், கருடனின் முதுகில் இருந்த பாரிஜாதத்தை அபகரிக்க முயன்றான்
ஸகா² ஸ தே³வராஜஸ்ய மஹாஸ்த்ரவித³ரிந்த³ம꞉ |
அவத்⁴யோ வரதா³நேந ப்³ரஹ்மண꞉ குருநந்த³ந ||2-73-31
ஓ! குருக்களின் வழித்தோன்றலே, இந்தப் பிரவரன், தேவர்களின் ஆட்சியாளனுடைய நண்பனாவான்; அவன் வலிமைமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறன் மிக்கவனும், தன் பகைவரனைவரையும் அடக்கவல்லவனும் ஆவான்; பிரம்மனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் அவன் கொல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்
ப்³ராஹ்மணஸ்தபஸா ஸித்³தோ⁴ ஜம்பு³த்³வீபாத்³தி³வம் க³த꞉ |
ஸ்வஶக்த்யா ந்ருப ஸம்யாத꞉ ஸகி²த்வம் ப³லகா⁴திநா ||2-73-32
முன்பொரு சமயம் அவன் ஜம்புத் தீவில் {ஜம்பூ த்வீபத்தில் / நாவலந்தீவில்} ஒரு பிராமணனாக {பிறந்து} இருந்து, தன் தவங்களின் அறத்தகுதியால் சொர்க்கத்தை அடைந்து, பலனைக் கொன்றவனின் {பலாசுரனைக் கொன்ற இந்திரனின்} நட்பைத் தன் சக்தியால் ஈட்டினான்.
தமாபதந்தம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ருஷ்ண꞉ ஸாத்யகிமப்³ரவீத் |
அத்ரஸ்த² ஏவ ப்ரவரம் ஶரைர்வாரய ஸாத்யகே ||2-73-33
அவன் {பிரவரன்} முன்னேறி வருவதைக் கண்ட கிருஷ்ணன், சாத்யகியிடம், “ஓ! சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.
ந த்வத்ர நிர்த³யம் பா³ணா மோக்தவ்யா꞉ ஸாத்யகே த்வயா |
அஸ்ய ப்³ராஹ்மணசாபல்யம் ஸோட⁴வ்யம் க²லு ஸர்வதா² ||2-73-34
ஓ! சாத்யகி, கடுங்கணைகளால் நீ அவனைத் தாக்காதே; நிலையற்றதாக இருக்கும் இவனது பிராமணத்தன்மையை எல்லாவகையிலும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றான்.
தத꞉ ஷஷ்ட்யா ரதே²ஷூணாம் க³ருட³ஸ்த²ம் த்³விஜஸ்ததா³ |
ஆஜகா⁴ந மஹாபா³ஹோ ஸாத்யகிம் ப்ரவரோ ப்⁴ருஶம் ||2-73-35
அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனுமான பிரவரன், கருடன் மீது அமர்ந்திருந்த சாத்யகியை கூரிய அறுபது கணைகளால் துளைத்தான்.
ஶிநேர்நப்தா த⁴நுஸ்தஸ்ய க்ஶிபத꞉ ஸாயகாந்ந்ருப |
சிச்சே²த³ புருஷவ்யாக்⁴ரோ வசநம் சேத³மப்³ரவீத் ||3-73-36
ஓ! மன்னா, போர்வீரர்களில் முதன்மையான சிநியின் பேரன் {சாத்யகி}, கணைகளை ஏவப்பயன்படுத்தப்பட்ட பிரவரனின் வில்லை அறுத்து, அவனிடம்,
ப்³ராஹ்மணோ நாபி⁴ஹந்தவ்யஸ்திஷ்ட² திஷ்ட² ஸ்வவர்த்மநி |
அவத்⁴யா யாத³வாநாம் ஹி ஸ்வாபராதே⁴(அ)பி ஹி த்³விஜா꞉ ||2-73-37
“நீ பிராமணனென்பதால் கொல்லத்தக்கவனல்ல; சென்று உனக்கான வாழ்வுமுறையைப் பின்பற்றுவாயாக; இருபிறப்பாளர்கள் குற்றமிழைத்தாலும் யாதவர்களால் கொல்லத்தகாதவர்கள்” என்றான்.
ப்ரவரஸ்து ப்ரஹஸ்யைநமுவாச குருநந்த³ந |
அலம் க்ஷாந்த்யா ந்ருணாம் ஶூர யுத்³த்⁴ய ஸர்வாத்மநா ரணே ||2-73-38
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது பிரவரன் புன்னகைத்தவாறே, “ஓ! வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.
ஜாமத³க்³ந்யஸ்ய ராமஸ்ய ஶிஷ்யோ(அ)ஹமபி யாத³வ |
நாமத꞉ ப்ரவரோ நாம ஸகா² ஶக்ரஸ்ய தீ⁴மத꞉ ||2-73-39
நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.
ந தே³வா யோத்³து⁴மிச்ச²ந்தி மந்யந்தோ மது⁴ஸூத³நம் |
ஆந்ருண்யம் ஸௌஹ்ருத³ஸ்யாஹமதி⁴க³ந்தாஸ்மி மாத⁴வ ||2-73-40
இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ! மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்” என்றான்.
ததஸ்தயோஸ்ததா³ ரௌத்³ர꞉ ஸம்க்³ராமோ வவ்ருதே⁴ ந்ருப |
அஸ்த்ரைர்தி³வ்யைர்நரவ்யாக்⁴ர ஶைநேயத்³விஜமுக்²யயோ꞉ ||2-73-41
பிறகு, ஓ! மன்னா, சிநியின் பேரனுக்கும், இருபிறப்பாளரில் சிறந்தவனுக்கும் இடையில் நடந்த போரில் அவர்கள் தெய்வீக ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்
த்³யௌஶ்சசால ததா³ ராஜந்ஹ்யசலாஶ்ச ஸஹஸ்ரஶ꞉ |
தஸ்மிந்வர்ததி ஸம்க்³ராமே தேஷாமதிமஹாத்மநாம் ||2-73-42
அந்த உயரான்மாக்களுக்கிடையில் போர் நடந்த போது வானம் நடுங்கத் தொடங்கியது, மலைகள் பெரிதும் கலக்கமடைந்தன.
நாதிஶிஷ்யே ரணே கார்ஷ்ணிரைந்த்³ரிமஸ்த்ரப்⁴ருதாம் வரம் |
ஐந்த்³ரி꞉ கார்ஷ்ணிம் மஹாத்மாநம் மாயிநம் ஶூரஸத்தமம் ||2-73-43
மறுபுறம், கிருஷ்ணனின் மகனாலும் ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} வீழ்த்த முடியவில்லை, பின்னவனாலும் {ஜயந்தனாலும்} வீரர்களில் சிறந்தவனும், சிறப்புமிக்கவனுமான கிருஷ்ணனின் வீர மகனை {பிரத்யும்னனை} வீழ்த்த முடியவில்லை
ஹந்த க்³ருஹ்ண ப்ரதீச்சே²தி தாவுபௌ⁴ யோத⁴ஸத்தமௌ |
யுயுதா⁴தே நரஶ்ரேஷ்ட² பரஸ்பரஜயைஷிணௌ ||2-73-44
ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, “தாக்கு”, “பிடி” முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.
அத² ஶார்ங்கா³யுத⁴ஸுதம் ஶசீபுத்ர꞉ ப்ரதாபவாந் |
விபா⁴ஷ்யாப்⁴யஹநத்³ராஜந்தி³வ்யேநாஸ்த்ரேண ஸத்வர꞉ ||2-73-45
ஓ! மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.
ஸோ(அ)ஸ்த்ரம் தத³பி⁴தீ³ப்யந்தமாபதந்தம் ஶிதை꞉ ஶரை꞉ |
தஸ்தம்பே⁴ பா³ணஜாலேந தத³த்³பு⁴தமிவாப⁴வத் ||2-73-46
அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.
ததஸ்தத்³தீ³ப்யமாநம் து பபாத ரணமூர்த்³த⁴நி |
ரௌக்மிணேயஸ்ய கௌரவ்ய கோ⁴ரம் தா³நவமர்த³நம் ||2-73-47
ஆனால், ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.
தேநாஸ்த்ரேண ரதோ² த³க்³த⁴꞉ ப்ரது³ம்நஸ்ய மஹாத்மந꞉ |
நாத³ஹத்தத்ஸுகோ⁴ரம் தம் ரௌக்மிணேயம் நராதி⁴ப ||2-73-48
சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.
த³ஹத்யக்³நிம் ந க²ல்வக்³நிருத்³த⁴தோ(அ)பி விஶாம்பதே |
த³க்³தா⁴ந்ரதா²ந்மஹாபா³ஹூ ரௌக்முணேய꞉ ப்ரசக்ரமே ||2-73-49
ஏனெனில், ஓ! மனிதர்களின் தலைவா, நெருப்பு பேராற்றல் வாய்ந்ததாக இருப்பினும் மற்றொரு நெருப்பை அதனால் எரிக்க முடியாது. அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ருக்மிணியின் மகன் எரியும் தேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
அத² நாராயணஸுதோ விரதோ² ரதி²நாம் வர꞉ |
ஸ்தி²தோ த⁴நுஷ்மாநாகாஶே ஜயந்தமித³மப்³ரவீத் ||2-73-50
தேர்வீரர்களில் சிறந்தவனான நாராயணன் மகன் {பிரத்யும்னன்}, தேரை இழந்தவனாகக் கையில் வில்லுடன் ஆகாயத்தில் நின்றவாறு ஜயந்தனிடம்,
மஹேந்த்³ரபுத்ர தி³வ்யம் த்வம் யத³ஸ்த்ரம் முக்தவாநஸி |
நாஹமீத்³ருஶரூபாணாம் ஶக்யோ ஹந்தும் ஶதைரபி ||2-73-51
ஓ! மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.
ப்ரயத்நம் குரு ஶிக்ஷாணாம் யத்நம் மே(அ)த்³ய ப்ரத³ர்ஶய |
நாஸ்தி மே(அ)திஶயம் கர்தா ஸம்க்³ராமே(அ)மரநந்த³ந ||2–73-52
சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ! தேவனின் மகனே {ஜயந்தனே}, போரில் என்னை எவராலும் வெல்ல இயலாது.
ஆஸீந்மே ஸாத்⁴வஸம் த்³ருஷ்ட்வா ரத²ஸ்த²ம் த்வாம் த்⁴ருதாயுத⁴ம் |
பி³பே⁴மி தவ நேதா³நீம் யுத்³தே⁴ த்³ருஷ்டப³லோ(அ)ப³லம் ||2-73-53
ஆயுதங்களைத் தரித்தவனாக உனது தேரில் நீ வெளியே வந்த போது நான் சற்றே அஞ்சினேன்; ஆனால் இப்போதோ போரில் உன் ஆற்றலைக் கண்ட பிறகு, எனக்கு உன்னிடம் கிஞ்சிற்றும் அச்சமில்லை
மநஸா ஸ்மர்யாதாம் ஸைஷ பாரிஜாதஸ்த்வயா தரு꞉ |
ஶக்யம் ந க²லு ஹஸ்தாப்⁴யாம் ஸ்ப்ரஷ்டவ்யோ யஸ்த்வயா ஹ்யஸௌ ||2-73-54
இனியும் உன்னால் இந்தப் பாரிஜாத மரத்தைக் கரங்களால் தீண்ட முடியாது என்பதால் நீ அதை உன் மனத்தில் மட்டுமே நினைத்து நிறைவடைவாயாக.
ரதோ² மாயாமயோ த³க்³த⁴ஸ்த்வய யோ ஹ்யஸ்த்ரதேஜஸா |
ஈத்³ருஶாநாம் ஸஹஸ்ராணி ஸ்ரஷ்டும் ஶக்தோ(அ)ஸ்மி மாயயா ||2-73-55
உன் ஆயுதத்தின் தழலால் நீ எரித்த மாயத் தேரைப் போன்ற ஆயிரக்கணக்கான தேர்களை என் மாய சக்திகளின் மூலம் என்னால் உண்டாக்க முடியும்” என்றான் {பிரத்யும்னன்}.
ஏவமுக்தோ ஜயந்தஶ்ச முமோசாஸ்த்ரம் மஹாப³ல꞉ |
தபஸோபசிதம் தேந ஸ்வயமேவாதிதேஜஸா ||2-73-56
பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன், இவ்வாறு சொல்லப்பட்டதும், கடுந்தவங்களின் மூலம் தான் அடைந்த ஒரு கடும் ஆயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் அவன் {பிரத்யும்னனின்} மீது ஏவினான்.
தத்ப்ரத்³யும்நோ மஹாதே³வம் ஶரஜாலைரவாரயத் |
சத்வார்யஸ்த்ராணி தி³வ்யாநி முமுசே சாபராணி ஸ꞉ ||2-73-57
பிரத்யும்னன், பெருஞ்சக்தியுடன் ஏவப்பட்ட அந்த ஆயுதத்தைத் தன் கணைவலையால் எதிர்த்தான்; இந்திரனின் மகன் மேலும் நான்கு கணைகளை அடுத்தடுத்து ஏவினான்.
தி³க்ஷு ஸர்வாஸு ருருதூ⁴ஸ்தாந்யஸ்த்ராண்யத² பா⁴ரத |
ரௌக்மிணேயம் மஹாத்மாநமந்தரிக்ஷே ச பஞ்சமம் ||2-73-58
ஓ! பாரதா, அந்த ஆயுதங்கள் ஆகாயத்தின் அனைத்துத் திக்குகளையும் அடைத்தன; பிறகு அவன் ருக்மிணியின் மகனை மேலும் ஐந்து கணைகளால் வானத்தில் முழுமையாக மறைத்தான்
மஹோல்காஸத்³ருஶாந்பா³ணாநஸ்த்ராண்யமரஸத்தம꞉ |
முமோச யாநி கோ⁴ராணி ப்ரத்³யும்நம் ப்ரதி ஸர்வத꞉ ||2-73-59
தேவர்களில் முதன்மையானவன் {ஜயந்தன்} ஏவிய சுடர்மிக்க நெருப்பைப் போன்ற கணைகளும், பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் பிரத்யும்னன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாய்ந்தன.
தாநி ஸர்வாணி பா³நௌகை⁴꞉ கார்ஷ்ணிரஸ்த்ராண்யவாரயத் |
ஜயந்தம் சாபரைர்பா³ணைர்விவ்யாத⁴ நிஶிதைஸ்ததா³ ||2-73-60
அந்த ஆயுதங்களையும், கணைகள் அனைத்தையும் கிருஷ்ணனின் மகன் தன் கணைகளால் தடுத்தான்; பிறகு வேறு கூரிய கணைகளால் அவன் ஜயந்தனையும் துளைத்தான்.
ததோ நாத³꞉ ஸமுத்ஸ்ருஷ்டோ ஹ்யமரை꞉ புண்யகர்மபி⁴꞉ |
த்³ருஷ்ட்வா ஸ்தை²ர்யம் ச ஶைக்⁴ர்யம் ச ப்ரத்³யும்நஸ்ய மஹாத்மந꞉ ||2-73-61
அப்போது புனிதச் செயல்களைச் செய்யும் தேவர்கள், உயரான்ம பிரத்யும்னனின் கரநளினத்தையும், உறுதியையும் கண்டு மகிழ்ச்சி முழக்கம் செய்தனர்
ப்ரவரஸ்யாபி பா³ணேந ஶிதேந ஶிநிபுங்க³வ꞉ |
சிச்சே²தே³ஷ்வாஸநம் வீரோ ஹஸ்தாவாபம் ச பா⁴ரத ||2-73-62
ஓ! பாரதா, சிநியின் வீர வழித்தோன்றலும் {சாத்யகியும்}, பிரவரனுடைய வில்லின் நாணை அறுத்து, மற்றொரு கூரிய கணையால் அவனது விரலுறையையும் {கையுறையையும்} அறுத்தான்
ததோ(அ)ந்யத்ஸ து ஜக்³ராஹ மஹத்தத்³த⁴நுருத்தமம் |
மஹேந்த்³ரத³த்தம் ப்ரவரோ மஹாஶநிஸமஸ்வநம் ||2-73-63
பிரவரன், மஹேந்திரனால் தனக்குக் கொடுக்கப்பட்டதும், இடியின் ஒலிக்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு சிறந்த வலிமைமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்
ஸ தேந வீரோ மஹதா த⁴நுஷா விப்ரஸத்தம꞉ |
ஶராண்முமோச விவிதா⁴நர்கரஶ்மிநிபா⁴ம்ஸ்ததா³ ||2-73-64
இருபிறப்பாளர்களில் முதன்மை வீரனான பிரவரன், அந்த வலிமைமிக்க வில்லைக் கொண்டு பிரகாசமானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசிப்பவையுமான அனைத்து வகைக் கணைகளையும் ஏவத் தொடங்கினான்.
சகர்த ச த⁴நுஶ்சித்ரம் ஶைநேயஸ்யாமிதௌஜஸ꞉ |
விவ்யாத⁴ ஸர்வகா³த்ரேஷு பா³ணைரபி ஸ ஸாத்யகிம் ||2-73-65
அவன் சிநியின் வலிமைமிக்கப் பேரனுடைய அழகிய வில்லை அறுத்து, எண்ணற்ற கணைகளால் அவனது உடற் பகுதிகள் அனைத்தையும் துளைத்தான்.
த⁴நுராதா³ய ஶைநேயஸ்ததோ(அ)ந்யத்குருநந்த³ந |
த்³ருட⁴ம் பா⁴ரஸஹம் தீ⁴மாந்விவ்யாத⁴ ப்ரவரம் ரணே ||2-73-66
அதன்பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சிநியின் பேரன், அதிகச் சக்தியைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்; அப்போது அந்த நுண்ணறிவுமிக்கவன், அந்தப் போரில் பிரவரனை மிகக் கடுமையாகத் துளைத்தான்.
உச்சகர்ததுரந்யோந்யவர்மணீ தௌ ஶிதை꞉ ஶரை꞉ |
கா³த்ரேப்⁴யஶ்சைவ மாம்ஸாநி மர்மபி⁴த்³பி⁴꞉ ஶரோத்³யமை꞉ ||2-73-67
கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் கவசங்களை அறுத்தனர்; இதயத்திற்கே ஊடுருவிச் செல்லவல்ல கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் சதைகளைச் சிதைத்தனர்.
அதா²ஷ்டதா⁴ரபா³ணேந புநரிஷ்வாஸநம் த்³விதா⁴ |
சிச்சே²த³ ப்ரவரோ வீரஸ்த்ரிபி⁴ஶ்சைநமதாட³யத் ||2-73-68
வீரனான பிரவரன், எட்டு கூரிய கணைகளால் மீண்டும் சாத்யகியின் வில்லை அறுத்து, மேலும் மூன்றால் அவனையும் துளைத்தான்
அந்யதி³ஷ்வாஸநம் தம் து க்³ரஹிதுமநஸம் த்³விஜ꞉ |
க³த³யா தாட³யாமாஸ க்ஷேப்யயா லகு⁴ஹஸ்தவாந் ||2-73-69
சாத்யகி மற்றொரு வில்லை எடுக்க நினைத்தபோது, பெருங்கரநளினம் கொண்ட அந்த இருபிறப்பாளன், பகைவரை நோக்கி ஏவவல்ல கதாயுதம் கொண்டு அவனைத் தாக்கினான்.
ஸோ(அ)ஸிம் சர்ம ச ஜக்³ராஹ ஸாத்யகி꞉ ப்ரஹஸந்நிவ |
ந ஜக்³ராஹ த⁴நுர்தீ⁴மாந்க³த³யாபி⁴ஹதோ ப்⁴ருஶம் |
தத꞉ ஶரஶதாந்யேவ முமோச ப்ரவரஸ்ததா³ ||2-73-70
அப்போது வில்லால் கடுமையாகத் தாக்கபட்டிருந்த நுண்ணறிவுமிக்கச் சாத்யகி, தன் வில்லை எடுக்காமல், தன் வாளையும், கேடயத்தையும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டான். ஆனால் துணிவுமிக்கப் பிரவரன் முழுமையாக நூறு கணைகளை ஏவி அந்த வாளையும், கேடயத்தையும் அறுத்தான்.
விஹஸ்தமிவ விஜ்ஞாய ஸாத்யகிம் யது³நந்த³நம் |
ப்ரத்³யும்நோ(அ)ஸ்ய த³தௌ³ க²ட்³க³ம் நிர்மலாகாஶஸந்நிப⁴ம் ||2-73-71
யதுக்களைத் திளைக்கச் செய்பவனான சாத்யகி ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட பிரத்யும்னன், மேகமற்ற வானைப் போன்ற பிரகாசமான மற்றொரு வாளை அவனுக்குக் கொடுத்தான்
தஸ்ய சிச்சே²த³ ப⁴ல்லேந நிஸ்த்ரிம்ஶம் ப்ரவரஸ்தததா³ |
த்ஸருதே³ஶே(அ)பாதயச்ச ப்ரவர꞉ ப்ரஹஸந்நிவ ||2-73-72
ஆனால் பிரவரனோ, அந்த வாள் தன் உரிமையாளனின் கைப்பிடிக்குள் வந்தபோது புன்னகையுடன் அதையும் அறுத்தான்
வ்யத⁴மச்ச ததா² சர்ம ஶிதைர்பா³ணைரஜிஹ்மகை³꞉ |
ஆஜகா⁴ந ச ஶக்த்யைநம் ஹ்ருதி³ விப்ரோ நநாத³ ச ||2-73-73
அதன்பிறகு அவன் நேரான கூரிய கணைகளால் சாத்யகியின் தோலைச் சிதைக்கத் தொடங்கினான்; அந்த இருப்பிறப்பாளன் ஓர் ஈட்டியால் {வேலால் / சக்தி ஆயுதத்தால்} அவனுடைய மார்பில் தாக்கி மகிழ்ச்சியில் முழங்கினான்.
தம் விக்லவமிவ ஜ்ஞாத்வா பாரிஜாதஜிஹீர்ஷயா |
தார்க்ஷ்யாப்⁴யாஶே ரதே²நைவ ஸ தஸ்தௌ² ப்ரவரஸ்ததா³ ||2-73-74
அவன் {சாத்யகி} மயங்கியதைக் கண்ட பிரவரன், கருடனின் முதுகில் இருக்கும் பாரிஜாதத்தை அபகரிக்கும் நோக்கில் தன் தேரில் அவனை {கருடனை} நோக்கிச் சென்றான்
தம் பக்ஷபுடவேகே³ந சிக்ஷேப க³ருட³ஸ்ததா² |
க³வ்யூதிமேகாம் ஸரத²꞉ ஸ பபாத முமோஹ ச ||2-73-75
அப்போது அவன் {பிரவரன்} தன் தேருடன் சேர்ந்து முழுமையாக நான்கு மைல்கள் {ஒரு கவ்யூதி = 4000 தண்டங்கள் = 2 குரோசங்கள்} தொலைவுக்குத் தள்ளி விழுந்து மயங்கும் அளவுக்குக் கருடன் அவனைத் தன் சிறகுகளால் மிகக் கடுமையாகத் தாக்கினான்.
தம் ஜயந்தோ நிபத்யாத² பதிதம் ப்³ராஹ்மணம் ந்ருப |
ஸமாஶ்வாஸ்ய ரத²ம் ஶீக்⁴ரம் ஸமாரோபிதவாம்ஸ்ததா³ ||2-73-76
ஓ! மன்னா, அப்போது ஜயந்தன், இவ்வாறு தூக்கிவீசப்பட்ட அந்தப் பிராமணனை விரைந்து சென்று தூக்கித் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனைத் தேற்றினான்
ஶைநேயமபி முஹ்யந்தம் பதந்தம் ச முஹுர்முஹு꞉ |
ஆஶ்வாஸயாந꞉ ப்ரத்³யும்ந꞉ பித்ருவ்யம் பரிஷஸ்வஜே ||2-73-77
மறுபுறம் பிரத்யும்னன், மீண்டும் மீண்டும் மயங்கி விழும் சிநியின் பேரனான தன் சிற்றப்பனை {சாத்யகியைத்} தழுவி (அவனது பலத்தை மீட்பதற்காக) உற்சாகமூட்டித் தேற்றினான்.
தம் ஹி பஸ்பர்ஶ ஹஸ்தேந ஸவ்யேந மது⁴ஸூத³ந꞉ |
விருஜ꞉ ஸ்பர்ஶமாத்ரேண ஸாத்யகி꞉ ஸமபத்³யத ||2-73-78
மதுசூதனன் தன் வலக்கரத்தால் சாத்யகியைத் தீண்டினான்; இந்தத் தீண்டல் பட்ட உடனேயே பின்னவன் {சாத்யகி} வலியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் விடுபட்டான்.
ப்ரத்³யும்நோ த³க்ஷிணே பார்ஶ்வே வாமே து ஶிநிபுங்க³வ꞉ |
தஸ்த²து꞉ பாரிஜாதஸ்ய யுத்³த⁴ஶௌண்ட³தராவுபௌ⁴ ||2-73-79
அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களான பிரத்யும்னனும், சாத்யகியும் (பாரிஜாதத்தைக் காப்பதற்காக) பாரிஜாதத்தின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்
ஜயந்த꞉ ப்ரவர்ஶ்சைவ ரதே²நைகேந பா⁴ரத |
ஸம்பதந்தௌ மஹேந்த்³ரேண ப்ரஹஸ்யோக்தௌ மஹாத்மநா ||2-73-80
மறுபுறம், ஓ! பாரதா, உயரான்ம மஹேந்திரன், ஒரே தேரில் மீண்டும் போரிடத் திரும்பும் ஜயந்தனையும், பிரவரனையும் கண்டு, புன்னகையுடன் அவர்களிடம்,
நாஸந்நமபி⁴க³ந்தவ்யம் க³ருட³ஸ்ய கத²ஞ்சந |
ப³லவாநேஷ பததாம் ராஜா ச விநதாஸுத꞉ ||2-73-81
“இறகுபடைத்த படைப்புகளின் மன்னனான கருடனின் அருகில் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் செல்லாதீர்கள்; வினதையின் மகன் அபரிமித வலிமைபடைத்தவன்.
த³க்ஷிணே சைவ ஸவ்யே ச பார்ஶ்வே மம த்⁴ருதாயுதௌ⁴ |
உபௌ⁴ ஸ்தி²தௌ யுத்³த்⁴யமாநம் மாமேவ ஹி ப்ரபஶ்யதம் ||2-73-82
நீங்கள் இருவரும் எனக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும் நின்று கொண்டு (கிருஷ்ணனுடன்) நான் போரிடுவதைப் பார்ப்பீராக” என்றான்.
ஏவமுக்தௌ ஸ்தி²தௌ வீரௌ தத꞉ ஶக்ரஸ்ய பார்ஶ்வயோ꞉ |
த³த்³ருஶாதே யுத்³த்³த்⁴யமாநௌ தே³வராஜஜநார்த³நௌ ||2-73-83
இவ்வாறு சொல்லப்பட்ட அவ்விரு வீரர்களும், சக்ரனின் இருபுறத்தையும் அடைந்து, இந்திரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் இடையில் நடந்த போரைக் கண்டனர்.
அதே²ந்த்³ரோ க³ருட³ம் பா³ணைர்மஹாஶநிஸமஸ்வநை꞉ |
விவ்யாத⁴ ஸர்வகா³த்ரேஷு மஹாஸ்த்ரப்ரவரைஸ்ததா² ||2-73-84
அப்போது இந்திரன், கணைகளாலும், சிறந்தவையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், வலிமைமிக்கவையுமான ஆயுதங்களாலும் கருடனுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் துளைத்தான்.
ஸ தாந்பா³ணாநக³ணயந்வைநதேய꞉ ப்ரதாபவாந் |
ஸஸாராபி⁴முகோ² வீர꞉ ஶக்ரநாக³மரிந்த³ம꞉ ||2-73-85
ஆனால் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பகைவரை அடக்கும் வீரனுமான அந்த வினதையின் மகன் {கருடன்}, அந்தக் கணைகளைச் சற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்து, சக்ரனின் யானையை {ஐராவதத்தை} நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.
உபௌ⁴ தௌ ஸஹஸா ராஜந்ப³லிநௌ க³ஜபக்ஷிணௌ |
ப்ரயுத்³தௌ⁴ வீர்யஸம்பந்நௌ மஹாப்ராணௌ து³ராஸதௌ³ ||2-73-86
அப்போது வலிமைமிக்கவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் பறவையானவனும், யானையானவனும் மிகக் கடுமையாகப் போரிடத் தொடங்கினர்
ரத³நை꞉ பந்நக³ரிபும் கரேண ஶிரஸா ததா³ |
ஐராவதோ க³ஜபதிராஜகா⁴ந நத³ம்ஸ்ததா² ||2-73-87
யானைகளின் மன்னனான ஐராவதன், உரக்கப் பிளிறியபடியே தன் தந்தங்களாலும், துதிக்கையாலும், தலையாலும் பாம்புகளின் பகைவனை {கருடனைத்} தாக்கத் தொடங்கினான்.
ததா² நகா²ங்குஶைஸ்தீக்ஷ்ணைர்வைநதேயோ ப³லோத்கட꞉ |
ததா² பக்ஷநிபாதைஶ்ச ஶக்ரநாக³ம் ஜகா⁴ந ஹ ||2-73-88
மறுபுறம் கடும்பலம்வாய்ந்த வினதையின் மகனும், தன் கூரிய நகங்களினாலும், சிறகடிப்புகளாலும் இந்திரனின் யானையைத் தாக்கினான்.
முஹூர்தம் ஸுமஹாநாஸீத்ஸம்பாதோ க³ஜபக்ஷிணோ꞉ |
விஸ்மாபநீயோ ஜக³த꞉ ப்ரேக்ஷித்ரூணாம் ப⁴யாவஹ꞉ ||2-73-89
பறவைக்கும், யானைக்கும் இடையிலான அந்தப் போர், பார்வையாளர்களின் இதயத்தில் அச்சத்தையும், மொத்த அண்டத்திற்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு கணத்திற்குள் பயங்கரமடைந்தது.
மூர்த்⁴ந்யதை²ராவதம் தார்க்ஷ்யஸ்தாட³யாமாஸ பா⁴ரத |
நகா²ங்குஶகராலேந சரணேந மஹாப³ல꞉ ||2-73-90
அதன்பிறகு, ஓ! பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்
ஸம்ப்ரஹாராபி⁴ஸம்தப்தோ நிபபாத த்ரிவிஷ்டபாத் |
பாரியத்ரே கி³ரிஶ்ரேஷ்டே² த்³வீபே(அ)ஸ்மிஞ்ஜநமேஜய ||2-73-91
ஓ! ஜனமேஜயா, கடுமையான காயத்தால் பீடிக்கப்பட்ட அந்த யானையானவன் ஆகாய உயரத்தில் இருந்து, நாம் வாழும் இந்தத் தீவில் இருக்கும் {ஜம்பூத்வீபத்தின்} மலைகளில் சிறந்த பாரியாத்ரத்தின் உச்சியில் விழுந்தான்.
பதந்தமபி தம் ஶக்ரோ ந முமோச மஹாப³ல꞉ |
காருண்யாத³த² ஸௌஹார்தா³த்பூர்வாப்⁴யுபக³மாத³பி || 2-73-92
அவன் அவ்வாறு விழுந்தபோதும் வலிமைமிக்கச் சக்ரன், கருணையாலும், நட்பாலும், ஏற்கனவே தான் செய்து கொடுத்த உறுதிமொழியாலும் அவனைவிட்டு விலகாமல் இருந்தான்.
க்ருஷ்நோ(அ)ப்யந்வக³மச்சைநம் ப்ருஷ்ட²த꞉ ப்ரப⁴வாவ்யய꞉ |
பாரிஜாதவதா தீ⁴மாந்க³ருடே³ந மஹாப³ல꞉ ||2-73-93
பரமபுத்தியைக் கொண்டவனும், பிழைசெய்யாதவனும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், பாரிஜாத மரத்தைச் சுமக்கும் கருடனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.
ஸ தஸ்தௌ² பர்வதஶ்ரேஷ்டே² பாரியாத்ரே து வ்ருத்ரஹா |
ஐராவதே ஸமாஶ்வஸ்தே ஸங்க்³ராமோ வவ்ருதே⁴ புந꞉ ||2-73-94
கிருதனை {விருத்திரனைக்} கொன்றவன் {இந்திரன்} இவ்வாறே பாரியாத்ர மலைக்குக் கொண்டு வரப்பட்டான். ஐராவதம் மீண்டும் பலம்பெற்றதும் கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் இடையிலான போர் மீண்டும் நடந்தது.
ஶரைராஶீவிஶப்ரக்²யை ரத்நயுக்தை꞉ ஸுதேஜிதை꞉ |
அந்யோந்யம் குருஶார்தூ³ல ஶக்ரகேஶவயோர்மஹாந் ||2-73-95
ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், வடிவில் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கவனமாகக் கடினமாக்கிக் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் தாக்கினர்.
ததோ வஜ்ராயுதோ⁴ வஜ்ரமஶநிம் ச புந꞉ புந꞉ |
முமோச க³ருடே³ ராஜந்நைராவதரிபௌ ந்ருப ||2-73-96
ஓ! மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.
வஜ்ராஶநிநிபாதாம்ஸ்தாந்ஸேஹே ஶக்ரஸ்ய பக்ஷிராட் |
அவத்⁴யோ ப³லிநாம் ஶ்ரேஷ்டோ² நிஸர்கே³ண ததோ ப³லாத் ||2-73-97
ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்
முமோச பக்ஷமேகைகம் மாநயந்நஶநிம் ஸதா³ |
வஜ்ரம் ச தே³வராஜ்ஞோ(அ)த² ப்⁴ராது꞉ கஶ்யபஸம்ப⁴வ꞉ ||2-73-98
ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்
ஆக்ரம்யமாணஸ்தார்க்ஷ்யேண ந்யமஜ்ஜந்ந்ருபதே கி³ரி꞉ |
விவேஶ த⁴ரநீம் ராஜஞ்ச்சீ²ர்யமாண꞉ ஸமந்தத꞉ ||2-73-99
அப்போது, ஓ! மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.
சுகூஜ ப³ஹுமாநேந க்ருஷ்ணஸ்ய ஸ து பர்வத꞉ |
தம் சாத்³ராக்ஷீத்தத꞉ க்ருஷ்ண꞉ கிஞ்சிச்சே²ஷமதோ⁴க்ஷஜ꞉ ||2-73-100
கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.
தம் முக்த்வா க³ருடே³நாத² தஸ்தௌ² தே³வோ விஹாயஸி |
ப்ரத்³யும்நம் ச ததோ³வாச ஸர்வக்ருல்லோகபா⁴வந꞉ ||2-73-101
அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,
இதோ த்³வாரவதீம் க³த்வா ரத²மாநய மா சிரம் |
ஸதா³ருகம் மஹாபா³ஹோ மத்தேஜோப³லமாஶ்ரித꞉ ||2-73-102
“ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.
வக்தவ்யோ ப³லப⁴த்³ரஶ்ச ராஜா ச குகுராதி⁴ப꞉ |
ஶ்வோ ஜித்வேந்த்³ரம் த்வாக³மிஷ்யே த்³வாரகாமிதி மாநத³ ||2-73-103
ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பலபத்ரரிடமும் {பலராமரிடமும்}, குகுரர்களின் ஆட்சியாளரிடமும் {உக்ரசேனரிடமும்}, நாளை நான் இந்திரனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்புவேன் என்று சொல்வாயாக” என்றான்.
ததே²த்யுக்த்வா து த⁴ர்மாத்மா ப்ரத்³யும்ந꞉ பிதரம் விபு⁴꞉ |
க³த்வா யதோ²க்தமுக்த்வா ச யாத³வேந்த்³ரப³லாவுபௌ⁴ ||2-73-104
அறம்சார்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான பிரத்யும்னன், “அவ்வாறே ஆகட்டும்” என்று தன் தந்தையிடம் மறுமொழிகூறிவிட்டு, துவாரகைக்குச் சென்று தன் தந்தையின் சொற்களை உக்ரசேனனிடமும், பலபத்ரனிடமும் சொன்னான்.
நாடி³காந்தரமாத்ரேண புநஸ்தம் தே³ஶமாயயௌ |
தா³ருகேண ஸமாயுக்தே ரத²மாஸ்தா²ய பா⁴ரத ||2-73-105
அதன் பிறகு, ஓ! பாரதா, அவன் தாருகனுடன் சேர்ந்து கிருஷ்ணனின் தேரில் ஒரு மணிநேரத்திற்குள் போர் நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான்” என்றார் {வைசம்பாயனர்}
இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே க்ருஷ்ணேந்த்³ரயுத்³தே⁴ த்ரிஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply