28. இராவணன் சோகப் படலம்
902.
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போலத் தாமும்
பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி,
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன் ஆவி
இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும் அரவை ஒத்தாள்.(43-1)
903.
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல் ஆய
ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்;
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய,
கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச் சோர்ந்தாள்.(43-2)
904.
பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை எய்தி,
அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன்,எழுந்திராயே!(50-1)
905.
‘மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர்,நல்லோர்,
செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில்,செல்லும்,
வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன்!'(52-1)
29. படைக் காட்சிப் படலம்
906.
தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை வெள்ளம்.(2-1)
907.
மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் – திண் திறலோய்!(22-1)
908.
சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்துஐஞ் –
ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்,
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர்.(25-1)
909.
சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூலபாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு விறலால்
கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் துரந்தோர்.(27-1)
910.
ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடுபோர்
மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் மனத்தோர்
‘காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் காலாள்,
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி’ என்று உரைப்பார்.(30-1)
911.
அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து உலகில்,
துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் –
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? (43-1)
30. மூலபல வதைப் படலம்
912.
போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர்
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத்
தானைதன்னையும், ‘எழுக’ எனச் சாற்றினர் – தறுகண்
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர்.(3-1)
913.
மூன்றின் நூற்றினோடு ஆயிரம் முள்வன் வெள்ளம்
ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி,
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது., அவ் இராமன்மேல், இராக்கதப் பரவை.(23-1)
914.
‘தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும் முதல்வன் –
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும்
தவறோ?தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத் தகுமோ?(26-1)
915.
‘நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர் வெருவல்;
இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி
கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும்’ என்று அமரர்க்கு
அன்று முக்கனான் உரைத்தல் கேட்டு, அவர் உளம் தெளிந்தார்.(26-2)
916.
வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம்
ஆனபோது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத்
தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால்.(26-3)
917.
வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச்
சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில – படர் கவிப் படைகள்.(29-1)
918.
அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார்,
‘கனியும் காய்களும் உணவு உளோ; மலை உள காக்க
மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என்,வையம்?'(44-1)
919.
என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப,
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே,
நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர்கொண்டு,
ஒன்றி வாழ்தலும் உரிமையதே?’ என உரைப்பான்.(44-2)
920.
‘ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க
யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும் வெங் கண்
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்;
ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம் உண்பார்.(52-1)
921.
என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்
வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து,வெள்ளிக்
குன்றிடை நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண் குன்றில்
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான்.(54-1)
922.
‘இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும் இமைப்பின் வாரிப்
பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம்
இசைந்தது போலும்!’ என்று, ஆங்கு, அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி நின்றான்.(69-1)
923.
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்,
‘கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீக!
குவலயத்துஉற்ற தீமை தீர்க, இன்றொடு!’ என்று கூறினார்;
நிலம் துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன சொல்லினார்:(72-1)
924.
அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய்த்
தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன் கை வில்
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, ‘இராம ராம!’ என்று
உரைக்கும் நாமமே எழுந்து, உம்பரோடும் இம்பரே. (76-1)
925.
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப் படைக்
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; – மண்ணின் மீது அரோ.(76-2)
926.
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே,
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல்,
கொண்டல்எழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி பொழிவபோல்
சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து தாக்கினார்.(83-1)
927.
தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக்
காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காலின் வாவு மாத்
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு இலாப்
பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்த பற்றினார்.
928.
துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள்,கைத்
தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை,மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக் குழாம்
படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே.(83-3)
929.
இரைத்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல் கோடி, இடைவிடாது
உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு,ஒவ்வொருவருக்கு
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ,
சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண் வீழ்த்தினான்.(83-4)
930.
‘நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள் எங்குமாய்க்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால்,
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று’ எனா,
வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய்,விளம்புவார்.(83-5)
931.
‘விண்ணின்மீது அனந்த கோடி வீரன்’ என்பர்; ‘அல்ல இம்
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன்’ என்பர்;அல்ல வெங்
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன்’ என்பர்;’அல்ல உம்
எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன்’என்பரால்.(83-6)
932.
இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப,நின்று
எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய்
அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக்குலம்,
தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான்.(83-7)
933.
இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும்
படை விடாது அரக்கர் ஆளிபோல் வளைந்துபற்றவும்,
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல்போல்,
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது தூவினான்.(83-8)
934.
இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம் யாவையும்,
சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே,
மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி,வெய்தினின்
துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார்.(96-1)
935.
வானின்மீது அனந்த கோடி மாய வஞ்சர் மண்டினார்,
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்;
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார்,
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார்.(96-2)
936.
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங் கணை கதுவி,
தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக,
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை வளைந்தார்.(101-1)
937.
கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ
மேல் பொத்திய நிருதக் குலம் வேரொடு உடன் விளிய,
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய,
கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங் கணையால்.(102-1)
938.
அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை செய் அரக்கர்,
எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற மூடி,
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்;
சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற் படையால்.(108-1)
939.
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும்
பிமரம் கெட, அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய,
சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது, ஓர் நொடியின்.(108-2)
940.
காலாள் எனும் நிருதப் படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்;
பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர் கொதித்தார்.(112-1)
941.
கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு முசலம்
குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை,குலிசம்.
விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம் விதைத்தான்.(112-2)
942.
கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு
பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால்.(127-1)
943.
தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே,
மாய வஞ்சர் மடிய, பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்;
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே.(127-2)
944.
கடல் எரிக்க கனற் படை கார்முகத்து –
இடை தொடுத்து, அதை ஏவி, ‘இரும் பிணத்
திடல் அனைத்தையும் தீர்க்க’ எனச் செப்பினான்;
பொடி – படுத்தி இமைப்பில் புகுந்ததால்.(127-3)
945.
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல்.
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால்.(127-4)
946.
இற்றது ஆக இராக்கத வீரர்கள்
உற்று, ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர்
சுற்றினார், படை மாரி சொரிந்துளார்;
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான்.(127-5)
947.
தலை அறுந்தவரும், தடத் திண் புய
மலை அறுந்தவரும், வயக் கையொடு
சிலை அறுந்தவரும், திமிரத்தின் மெய்ந்
நிலை அறுந்தவரும், அன்றி, நின்றது ஆர்?(127-6)
948.
தேர் அளப்பு இல பட்ட; சிறு கண் மாக்
கார் அளப்பு இல பட்ட; கடும் பரித்
தார் அளப்பு இல பட்ட; தடம் புயப்
பேர் அளப்பு இலர் பட்டனர், பீடு இலார்.(127-7)
949.
வானகத்தோடு மா நிலம், எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும், அடுத்துறத்
தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை,
போன திக்கு அறியாது, புரட்டினான்.(127-8)
950.
சுடரும் வேல், கணை, தோமரம், சக்கரம்
அடரும் மூஇலைச் சூலம், மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து, இடை
தொடர, வீரன் துணித்தனன் வாளியால்.(127-9)
951.
ஏனமோடு, எண்கு, சீயம், எழு மத
யானை, ஆளி, புலி என்று இவை முகம்
ஆன தீய அரக்கர் மடிந்திட,
வானவன் கணை மாரி வழங்கினான்.(127-10)
952.
வடி சுடர்க் கணை மாற்ற, அங்கு ஆயிர
முடியுடைத் தலையோர் தலையும் முடிந்து
இடுவது இத் தலத்தே, இடி ஏற்றில் வான்
வட வரைச் சிகரங்கள் மறிவபோல்.(127-11)
953.
இரதம், யானை, இவுளியோடு எண் இலா
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட,
சரதம் அன்னை சொல் தாங்கி, தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான்.(127-12)
954.
கடு வைத்து ஆர் களன் கைப் படு கார்முகம்
ஒடியத் தாக்கும் ஒருவன் சிலையின்வாய்,
வடவைத் தீச் சொரி வாளியின் மா மழை
பட, மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால்.(127-13)
955.
பால் ஒத்து ஆழியில் பாம்பு – அணைமேல் துயில்
சீலத்தான், இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன், இராவணன்
மூலத் தானை முடிய முருக்கினான்.(127-14)
956.
ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து,இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணராப்
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது, பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே சுருதி நின்ற மொழி பொன்றி விடுமோ?(149-1)
957.
பாறு படர் பகழி மாரி நிரைகள் பட,
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர,
வேறு படர அடர் விரவு சுடர் வலையம்,
மாறுபட, உலகின் மலைகள் அளறுபட,(154-1)
958.
திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள்
திரிய ஒருவன், எதிர் சின விலொடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய.(163-1)
959.
கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள்
இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய, விடு குயவர் திரிகை என உலகு
தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய.(164-1)
960.
ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர்,
தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர்
காயும் வெம் படையினர், கடலின் பொங்கியே
மேயினர், தம்தமில் இவை விளம்புவார்.(170-1)
961.
‘அன்றியும் ஒருவன், இங்கு அமரில், நம் படை
என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர்
வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும்
கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே.(171-1)
962.
இவ் உரை வன்னி அங்கு இயம்ப. ‘ஈதுபோல்
செவ் உரை வேறு இலை’ என்று, தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு
அண்ணலோடு எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார்.
963.
இன்னவர் ஐ – இரு கோடி என்று உள
மன்னவர் சதமுகம் உடையர்; மற்று அவர்
துன்னினர், மனத்து அனல் கறுக்கொண்டு ஏறிட
உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார்.(184-1)
964.
அடல் ஐ – இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்;
கடை கண்டிலர், காய் கரி, தேர், பரிமாப்
படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம்.(206-1)
965.
அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு,
எங்கு இங்கும் இராமன் இராமன் எனா,
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால்.(212-1)
966.
ஏயும் ஐ – இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி,
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர் ஆவி
போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி வீழ்ந்தான்.
967.
இட்டதோர் பேயரின் ஈர் – ஐயாயிரம்
பட்டபோது, ஆடும் ஓர் படு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத்
தொட்டனன், சிலை அணி மணி நுணுக்கென.(220-1)
968.
மாத்திரைப் போதினில், மணி தொனித்திட,
போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்,
ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே.(220-20)
969.
மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்,
பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி,
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி,
பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின் மாரி.
970.
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனைத்
தூசி வந்து, அண்ணல்தன்னைப் போக்கு அற வளைத்துச் சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர் யாக்கை
கூசினர், பொடியர் என்றும் குமிழ்த்தனர், ஓமக் கூடம்.
971.
முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள் ஏவும்
பல் நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு ஓட,
தன் நெடுஞ் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் அஞ்சத்
துன்னுவித்து, அரக்கர் சேனையைத் தொலைத்தல் செய்தான்.
972.
கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையின்பூட்டி,
மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர்
வெள்ளம்நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி,
தாலமேல் படுத்து மீண்டது, அவன் சரம் தலைவர்த் தள்ளி.
973.
முடிந்தது மூலத்தானை; மூவுலகு இருண்ட தீமை
விடிந்தது; மேலை வானோர் வெந் துயர் அவரினோடும்
பொடிந்தது; புனிதன் வாளி போக்கு உறப் பொய்யர் ஆவி
படிந்தது, ககனம் எங்கும்; பலித்தது, தரும் அன்றே.
974.
‘ஈது ஒரு விளையாட்டு; அன்பின், இத்துணை தாழ்த்தான், ஐயன்;
எது அவன் துணியின் இப்பால்? நீசர் ஓர் பொருளோ? இன்னும்
போதுமோ? புவன கோடி போதினும், கணத்தில் பொன்றிப்
போதும்’ என்று, அயனோடு ஈசன் அமரர்க்குப் புகன்று நின்றான்.
975.
சேனை அம் தலைவர், சேனை முழுவதும் அழிந்து சிந்த,
தான் எரி கனலின் பொங்கி, தரிப்பு இலர், கடலின் சூழ்ந்தே
வானகம் மறைய, தம் தம் படைக் கல மாரி பெய்தார்
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன், அமலன் அம்பால்.
976.
பகிரண்டப் பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ளத்
தொகை மீண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர், கருவும் துஞ்ச;
செகம் உண்ட ஒருவன் செங் கைச் சிலையுறு மணியின் ஓசை
புக, அண்டம் முழுதும் பாலின் பிரை எனப் பொலிந்தது அன்றே.
977.
நணியனாய்த் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த காலக்
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை; அக் கடிகைவாய் வில்
மணிஒலி எழும்ப, வானோர் வழுத்திட, வள்ளல் நின்றான் (225-2)
31. வேல் ஏற்ற படலம்
978.
அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, ‘அமரில்
துரக்க, மானுடர்தம்மை’ என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான்.(2-1)
32. வானரர் களம் காண் படலம்
979.
என்று உரைத்து, ‘உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெஞ் சின வேழங்கள்தம்மொடும்
துன்று வாசித் தொகைகளும் கேண்ம்’ எனா,
நின்ற வீடணன்தானும் நிகழ்த்துவான்.(27-1)
33. இராவணன் களம் காண் படலம்
980.
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட,
உலக்க வானர வீரரை ஒட்டி, அவ்
இலக்குவன்தனை வீட்டி, இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.
(இப்பாடல் இந்தப் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது.)
981.
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப,ஆவி
பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர் யாக்கை,
சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா,பல் பேய்
கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக் கண்டான்.
34. இராவணன் தேர் ஏறு படலம்
982.
ஏழ் – இருநூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ – இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்
‘வாள் அமர் முடிப்பென் இன்றே’ என மணித் தவிசு நீத்தான்.
983.
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்
அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி
முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான்.
984.
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்,
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின்.
985.
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால் – ஐந்
தும், இந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமரர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான்.
35. இராமன் தேர் ஏறு படலம்
986.
இத் தகையன் ஆகி, ‘இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென்’ என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார்.
36. இராவணன் வதைப் படலம்
987.
புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன்,வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார்.
988.
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிருதரும், களிறும் தேரும்
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல்தன் பகழி மாரி,
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா.
989.
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி
எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள்,
தங்கள்தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார்.
990.
எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு கை கடிகை தன்னில் ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி
வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை மடித்தான்; கண்டு,
உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான்.
991.
மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே,
கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும்
மேவினன், அரக்கனை விடாது பற்றியே.(71-1)
992.
அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்
அண்டர்கள் கலங்கினர்; அரக்கராயுளோர்
உண்டு, இனிக் கரு’ என ஓதற்கு இல்லையால்.(71-2)
993.
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின்.(89-1)
994.
ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது – விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள்மேல் சென்றது போலாம்.
995.
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
‘சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத்
தடுக்க,பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு;அதனால்
நயம் படைப்பென்’ என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான்.
996.
அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய,
சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான்.
997.
ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும்
(107-1)
சினந்தே
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின்
செறுத்தான்,
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான்.
998.
இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன்
சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்;
(107-2)
மதியின்
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன்,
உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும்
ஒறுத்தான்.
999.
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும்
(107-3)
மறைத்தான்;
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி,
‘பேருவிப்பென், மற்று இவன் உயிர்’ எனும் உளம்
பிடித்தான்.
1000.
முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள்
ஒக்க வாரி, அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப,
புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும்,
(107-4)
பொடிபட்டு
உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ?
1001.
இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து,
(118-1)
அங்கு
எத் திறங்களும் இடிஉரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய.
1002.
‘அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து,
(118-2)
உலையக்
கொண்ட காலம் ஈதோ!’ எனக் குலைகுலைந்து,
அமரர்
துண்டவான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, ‘இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்’ என்றான்.
1003.
மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே
போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப்
(123-1)
பொழுதில்
காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம்
கறுத்தான்.
1004.
நெற்றி விழியான் – அயன், நிறைந்த மறையாளர்
மற்றை அமரர், புவியில் வானவர்கள், ‘ஈர் – ஐந்து
உற்ற தலை தானவன் விடும கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ?’ என – இசைத்தான்.
(130-1)
1005.
‘வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்
நீதியொடு கால்குலைய, நீசன் விடு சூலம்
ஈது அழியும்’ என்று இதயம் எண்ணினன், இராமன்.
(130-2)
1006.
எவ் வகை உரகமும் இரியல் போயின,
நொவ்வியல் உற்றென; நொடிப்பது என் இனி?
அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே
கவ்வையின் உழந்தன, சிறையின் காற்றினே.
(143-1)
1007.
பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன், முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து;
(150-1)
உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல்.
1008.
ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால்.
(150-2)
1009.
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார்.
(151-1)
1010.
இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன் –
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான்.
(152-1)
1011.
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே.
(159-1)
1012.
ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான்மீது எழ, மாதலி தூண்டிட,
ஞான நாயகன் தேரும் எழுந்துறப்
போனது; அண்டப்புறத்து அமர் கோலினார்.
(163-1)
1013.
அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தோடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்,
விஞ்சு போர் செயும் வேலையில், வீரனும்.
(182-1)
1014.
ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத் தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்:
(182-2)
1015.
‘துறக்கும் என்பதை எண்ணி சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.
(182-3)
1016.
ஈது அரக்கன் புகல, இராமனும்
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப்
போது உரைக்கும்’ எனக் கொடு பொங்கினான்.
(182-4)
1017.
மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும்
(199-1)
வாள் அரக்கன் மடிய, அன்னான்
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும்
பொன்றிட பண்டு அங்கு இமையா முக் கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின்
ஏகியதால் – இடையே கூடித்
தேறு செய்து உழல் போதில், தீவினை
மாய்த்திடப் போம் நல் வினையே போல.
1018.
‘வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன்,
முதல் அமரர் வாழ்த்தி ஏத்தி,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து,
(219-1)
வைகிய நீ, தாய் சொல் தாங்கி,
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள்
வாளி ஒன்று கடிதின் வந்து, உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட,
உளம் நாணினையோ? உயிரும் உண்டோ?
1019.
‘அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே!
(221-1)
உன்தன்
திரு வினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள,
இறைஞ்ச,
இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே!
1020.
‘அரு வினை வந்தெய்திய போழ்து
(221-2)
ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்?
வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன்
திருநாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,
ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள்,
பத்து உளவே; இறைஞ்ச, மேரு
இருபது கை உள; இலங்கை என்னாக
உயிரோடும் இழந்திட்டாயே!
1021.
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்’
(242-1)
என்று
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால்
நோக்காயோ?
1022.
‘ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார்
தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்?
(242-2)
1023.
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும். முழங்கிட,
(245-1)
1024.
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம விதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான்.
(245-2)
1025.
இனைய வீரன் இளவலை நோக்கி, ‘நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய்’ எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
‘அனையனோடும் அனுமனைச் சார்க’ எனா.
(248-1)
37. மீட்சிப் படலம்
1026.
மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர் கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான்.
(4-1)
1027.
செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ………………………….கம்மி……..
……………………………………………………………………..
(5-1)
1028.
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே.
(5-2)
1029.
பொய்யினுக்கு ஒரு வெ……………………………
……………………………………………………………………..
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார்.
(5-3)
1030.
வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட,
(6-1)
1031.
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர் மார்பொடு அழுந்திடப் புல்லினான்.
ஆரினானும் அறிவரும் ஆதியான்.
(10-1)
1032.
‘ஆதி நாளில், ”அருள் முடி நின்னது” என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகர் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய்.
(11-1)
1033.
”வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது” என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்” என்றான்.
(13-1)
1034.
‘மங்கை சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்
அங்கு அ(வ்) ஆளி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம்!
(16-1)
1035.
‘வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்!
(16-2)
1036.
‘அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்!
(16-3)
1037.
‘நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்!’
(16-4)
1038.
சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
‘அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால்’ என்றாள்.
(16-5)
1039.
சென்றவன்தன்னை நோக்கி, ‘திருவினாள் எங்கே?’
(46-1)
என்ன,
‘மன்றல் அம் கோதையாளும் வந்தனள்,
மானம்தன்னில்’
என்றனனின்; என்னலோடும், ‘ஈண்டு நீ கொணர்க’
என்ன,
‘நன்று! என வணங்கிப் போந்து நால்வரை,
‘கொணர்க!’ என்றான்.
1040.
காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப்
(46-2)
போர்வையாளர்,
வேத்திரக் கையோர், ஈண்டி, விரைவுடன்
வெள்ளம்தன்னைப்
பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
‘ஆர்த்த பேர் ஒலி என்?’ என்ன, ‘அரிகள்
ஆர்ப்பவாம்’ என்றார்.
1041.
என்றபோது இராமன், ‘ஐய! வீடணா! என்ன
கொள்கை!
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம்
அன்றிதுன்றிய குழலினார்தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று,
(46-3)
வேலோய்!’
1042.
அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும்,
(46-4)
திருவனாளும்,
அப்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த
அண்ணல்
ஒப்பினைக் கண்ணின் கண்டே, உடம் நினைந்து,
இனைய சொன்னாள்.
1043.
‘அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும்’ என்றனன், கமலக்கண்ணனே.
(67-1)
1044.
கண்ணுடை நாயகன், ‘கழிப்பென்’ என்றபின்
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
‘எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது’ என்றனள்.
(67-2)
1045.
பொங்கி சிந்தையள் பொருமி, விம்முவாள்,
‘சங்கையென்’ என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதான்அரோ.
(67-3)
1046.
‘அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள் தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது?’ என்றான்.
(86-1)
1047.
கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொலி துதியினன், தொழுத கையினன்,
‘வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான்’ என்றான்.
(88-1)
1048.
‘இன்னும், என் ஐய! கேள்; இசைப்பென் மெய்,
(95-1)
உனக்கு;
அன்னவை மனக் கொள கருதும் ஆகையால்,
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள்.
1049.
‘யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந் –
(95-2)
தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்
கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி
தான் பரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள்.’
1050.
ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,
(97-1)
மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,
ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,
துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்:
1051.
‘மிகுந்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி
(97-2)
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள
எம்
அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து,
எமக்கு அழியாச்
சுகத்தை நல்கிய சுருதி நாயக!’ எனத் தொழுதார்.
1052.
‘திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம்
(109-1)
திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக,
இயையாக்,
கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ?’
1053.
என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,
மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,
‘துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச்
(114-1)
சென்று, மற்று அவன்-தருக’ என வணங்கினன்,
சென்றான்.
1054.
‘எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர்
(123-1)
உலகம்-
தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத்
தகுதி;
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள்
மலராள்;
புனத் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்!’
1055.
‘வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
(141-1)
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன் மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’
என்றான்.
1056.
‘மங்கலா நிதி வடதிசை வானவன் மானம்;
(142-1)
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?’ எனும் இடம் உளது; இதன் மிசை
ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’
என்றான்.
1057.
‘வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
(142-2)
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான்.
1058.
வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
(142-3)
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான்.
1059.
என்று, தெரினை வீடணன் எய்தியது என்றான்;
(142-3)
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும்.
1060.
ஏறினன் விமானம்தன்னில் இராமனும், இளைய
(142-5)
கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை
வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து
ஏற,
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில்
உள்ளார்.
(இது முதல் 142-17 வரையில் ‘இமயப் படலம்’ என்றும், ‘வசந்தன்
உயிர்வரு படலம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளன.)
1061.
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை
(142-6)
நோக்கி,
‘ஏறும் நீர் தேரில்’ என்ன, ‘கருணன் வந்து
எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்’ என்னச்
சொன்னார்.
1062.
என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
(142-7)
நின்ற போதினின் இராகவன் தேரின்நின்று
இழிந்தான்:
‘பொன்றுமா வரக் காரணம் என்?’ எனப் புழுங்கா’
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி’ எனச்
சொன்னான்.
1063.
‘வரி சிலை இராமன் ஓலை, மறம் புரி மறலி,
காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து
போந்தகுரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க;
அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்’என்று
எழுதிவிட்டான்.
(142-8)
1064.
அக் கணத்து அருகு நின்ற அனுமன், கைத்
திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
‘இக்கணம் வருவென்; வாழி! இராம!’ என்று, இரு
தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப்
பாய்ந்தான்.
(142-9)
1065.
மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர் தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, ‘அரி! அரி’ என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம்.
(142-10)
1066.
துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, ‘வசந்தனைக் காட்டு’ என,
அவனும்
உளம் கலங்கி, ‘உன் நாயகன் அடியர் இங்கு
உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து’
என்றான்.
(142-11)
1067.
சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத்
துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப்
புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், ‘முனிவு எனோ?’
என்ன,
‘மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி’ என்றான்.
(142-12)
1068.
‘வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
(142-13)
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி’ என்று
இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத்
துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப்
பாய்ந்தான்.
1069.
சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்
(142-14)
‘வந்த காரியம் எது? என, ‘வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன்தான்
உந்தன் நீள் பதத்துளான்எனின், காட்டு’ என
உணர்த்தும்.
1070.
‘என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை
(142-15)
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்;
விறலோய்!
அன்னவன்தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து’
என்றான்.
1071.
என்ற நான்முகன்தன்னையும், இந்திரன் யமனோடு
(142-16)
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு
குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின்
பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன்
பதியில்.
1072.
மலரின்மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
(142-17)
குலவு வாசவன், யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
அலகு இல் வீரன்தன் அடி இணை அவனொடும்
வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன்,
தேர்மேல்.
1073.
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர்
(142-18)
மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர்
வேந்தனோடும்,
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர்
ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த
கோத்திரத்திலுள்ளார்.
1074.
ஏறினன், இளைய கோவும், இரவி சேய், சாம்பன்,
(142-19)
நீலன்
‘ஏறினன் வாலி மைந்தன்’ என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல்.
1075.
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்
(142-20)
கண்டு கைதொழு வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும் அமரரும் ஆமால்.
1076.
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை;
(142-21)
அவர்தம்மை,
‘வாரும் தேரின்மேல்’ என, ‘கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினான்;
அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்’ என்றார்.
1077.
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
(142-22)
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை
இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன்தனைப் பாரா,
‘வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?’
என்றான்.
1078.
இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை
(142-23)
இறைஞ்சி,
‘சுருதியாய்! ஒரு பேர் அருள் சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று
உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி’ என உரைத்தான்.
1079.
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
(142-24)
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன்தனை
எடுத்துத்,
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத்
தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு
அணிந்தே.
1080.
‘இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல்தன்னில்
(152-25)
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது
அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ?
வாரானாகில்,
நமன் குலம் களைவென்’ என்றான் – ‘நாளை வா’
என்ற வீரன்.
(இதன்பின் 142-8, 9, 10, 11 என்ற பாடல்கள் உள்ளன.)
1081.
‘செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக்
(142-30)
கையால்
அல் எனும் அரக்கர்தம்மை வம்மின்!’ என்று
அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக்
கண்டால்,
‘செல்லவே போமின்’ என்று விடுக்குவென், செவியில்,
செப்பி.
(இதன்பின் 142-12, 13, 14, 15, 16, 17 என்ற பாடல்கள் உள்ளன.)
1082.
‘மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி’
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, ‘விடை’ எனப்
போனாள்.
(146-1)
1083.
என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார்.
(157-3)
(சில பிரதிகளில், ‘சொன்ன வாசகம் பிற்பட’ (157) என்ற
பாடலுக்குப் பின், ‘வசந்தன் உயிர் வரு படலம்’ தொடங்குகிறது.
157-3 என்னும் இந்தப் பாடலுக்கு முன் இதன் முன்னர்த் தந்துள்ள
142-19, 21 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன. இதன்பின்
142-22 என்ற பாடல் உள்ளது.)
1084.
என்னும் காலை(யில்), இராமனும், யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, ‘மணி நகை
முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து’
என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன்,
பொரவே.
(157-5)
1085.
எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்டகோளகை அடுக்கு அழிந்து உலைவுற,
அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில்
நாண் எறிந்தான்.
(157-6)
1086.
பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையினை வளைவுற
வாங்கிமேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான்.
(157-7)
1087.
வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான்.
(157-8)
1088.
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச்
சரங்கன்
தென் புலன்தனை நிறைத்தது; செறிந்தன, சேணில்.
(157-9)
1089.
தருமராசனும், காலனும், யமபடர்தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் காண வாங்கி
நிருமியா, ‘இது இராகவன் சரம்’ என நினைந்தார்.
(157-10)
1090.
‘கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து
எய்தி;
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்’ என்பது ஓர்
பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர்தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார்.
(157-11)
1091.
‘சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது
இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்!
நின்னைமறந்திருந்து உய்வது உண்டோ? மலர்மிசை
(157-12)
அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்’
என்றார்.
1092.
‘அய்யனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
(157-13)
மெய்யனே! என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
‘பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!’ என,
போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன்.
1093.
வந்து அடைந்து, ‘உனக்கு அபயம்’ என்று, அடியினில்
(157-14)
வணங்கி,
”எம் தனிப் பிழை பொறுத்தி” என்று, இயம்பினீர்;
இதனால்
உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூக நாயகன்தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’
என்றான்.
1094.
தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்;
(157-15)
”என் தனிப் பிழை பொறுத்தி” என்று இயம்பினை;
அதனால்
உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூபநாயகன்தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’
என்றான்.
1095.
அண்ணல் ஆரியன், ‘தருதி’ என்று அருளலும், அவர்
(157-16)
போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது
இருந்தார்;
‘திண்ணன் யாக்கை எங்கே?’ என, சாம்புவன்
செப்பும்.
(இதன்பின் 142-23, 142-8, 142-9 என்னும் பாடல்கள் உள்ளன.)
1096.
அன்னதே என, ‘அவன் உயிர்க்கு அமரர்தம்
(157-17)
பதிக்கே
முன்னர் ஓர் உடல் கொண்டு, இவண் தருக!’ என
மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப்
பாரா,
‘பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை’எனப்
போனான்.
(இதன்பின் 142-10, 11, 25, 12, 15, 16 என்னும் பாடல்கள் வர,
‘வசந்தன் உயிர் வரு படலம்’ முடிவு பெறுகிறது.)
1097.
அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை ஆங்கண்
(157-29)
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும்
போனான்.
1098.
அன்னகாலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
(157-30)
முன் இராகவன், சானகி இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற.
1099.
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
(158-2)
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும்.
1100.
ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்;
(158-2)
அனுமன்தன்பால்
நேயம் மூண்டு அதுதான் நிற்க, நெடியவன் சரணம்
சூடி
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம்
அம்மா!
1101.
வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து
(162-1)
எழுந்து விண்மேல்
சென்றது விமானம்; செல்ல திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது
தேறி
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத்
தெரிக்கலுற்றான்.
1102.
‘மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின்
(162-2)
ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி,
”வானோர்
பொன்னகர் ஒக்கும்” என்று புகழ்தலின், புலவராலும்,
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே!
பாராய்.
1103.
‘வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக்
(162-3)
கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர் – இறைவனைச்
சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு
செல்ல
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும்
காணாய்.
1104.
‘வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும்,
(162-4)
இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில்
நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில்
நோக்காய்.
1105.
‘மறத் திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன்
தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை
வாயில் நோக்காய்;அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன்தன்
(162-5)
உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில்
நோக்காய்.
1106.
கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும்
(162-6)
காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை
வல்லி!
இருங் கட முகத்த யானை, இவுளி, தேர், காலாள்
துஞ்சி
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப்
பாராய்.
1107.
‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த்
(162-7)
தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத்
தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை
வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப்
பாராய்.
1108.
‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா
(162-8)
நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன்
விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும்
நோக்காய்.
1109.
ஆவினை, குரவரோடும் அரு மறை முனிவர்தம்மை
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து
தம் இல்மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
(169-1)
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும்
சுரர்கள் ஆவார்.
1110.
மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால்
(169-2)
கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர்
அன்றே.
1111.
ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம்
(170-1)
அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என்
பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை
பகரலுற்றான்.
1112
‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு
(170-2)
இடுக்கண் செய்தோர்
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர்
தம்பால்,
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன்
நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச்
செற்றோர்.
1113.
‘குருக்களை இகழ்வோர் கொண்ட குலமகள் ஒழியத்
(170-3)
தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர்
கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள்
தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை
செய்வோர்.
1114.
‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
(170-4)
மை அறும் முன்னோன்தன்னை வலி செயும்
தம்பிமார்கள்
கை உள முதல்கள்தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று
ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச்
சுளித்துக் கொல்வோர்.
1115.
‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண
(170-5)
வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே
சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர்,
சான்றோர்,
தாரமது அணைவோர், மூத்தோர்தமை இகழ்
அறிவிலாதோர்.
1116.
‘கண்டிலாது ”ஒன்று கண்டோம்” என்று கைக்கூலி
(170-6)
கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு
செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால்
ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள்தம்பால் இகழ்ச்சியை
உரைக்கும் தீயோர்.
1117.
‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும்
(170-7)
பேதை
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளும்
மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து
இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல்
செய்வோர்.
1118.
‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு
(170-8)
மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை
வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை
நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி
வாழ்வோர்.
1119.
‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர்
(170-9)
தங்கள்
வயிற்றிடைக் கருவைத் தாமே வதைப்பவர்,
மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச்
செற்றோர்
மயிர்க் குருள ஒழியப் பெற்றம் வௌவுவோர்,
வாய்மை இல்லோர்.
1120.
‘கொண்டவன்தன்னைப் பேணாக் குலமகள்,
(170-10)
கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும்
பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள்
உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணுதும்
தறுகண்ணாளர்.
1121.
‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள்
(170-11)
வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து
‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை
விட்டோர்,
பூவைமார்தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று
போவோர்.
1122.
‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத்
(170-12)
தீயோர்,
மறையவர், நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும்
மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில்
வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும்
பாவர்.
1123.
கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும்
(170-13)
கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான்
கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது
போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும்
மாக்கள்.
1124.
வழி அடித்து உண்போர், கேட்டால் வழி
(170-14)
சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர்
பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர்
அடைந்தது…………………………….
………………………………………………………
தெரிசிக்கத் தீர்க என்றான்.
1125.
‘ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த
(170-15)
அந்த
நீதியாம் புராணம்தன்னை இகழ்பவர், நிறையக்
கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப்
பிரியப்படுத்தார்,
போதம் இலாதார்’ ”மற்றச் சமயம் பொல்லாதது”
என்பார்.
1126.
‘என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும்
(170-16)
பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே
போல,
தென் திசை வந்து, சேதுத் தரிசிக்க, தீரும்’
என்றான்.
1127.
ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும்,
(170-17)
‘அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ
மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க’ என,
‘நீங்கிடுக அதுவும்’ என்றான் – நிலமடந்தை பொறை
தீர்த்தான்.
1128.
‘பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்
(170-18)
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின்படியே
ஈர் – எழுவர் நால்வர் என்னும் இருடிகளும்
எழுதினரால்.
1129.
‘பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
(170-19)
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’
எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும்
வழிக்கொண்டான்.
1130.
என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
(170-20)
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர்
கோவும்
பொன் பொரு விமானம்தன்மேல் போகின்றபோது,
மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து,
என் செய்வான்.
1131.
முன் பெல அரக்கன்தன்னை முனி கொலை
தொடரக், கண்டு, ஆங்கு
‘அன்பினால் அரி பால் தோன்றும் அரனை
அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை
தொலையாது’ என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழந்து
நின்றான்.
(170-21)
1132.
திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான்.
(170-22)
1133.
கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு
இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள்தன்னுடனே, உயர் சேனைக்
கடலுடனே.
(170-23)
1134.
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன்தானும்
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும்.
(170-24)
1135.
பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு
உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன்தானும்
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும்.
(170-25)
1136.
நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன்தனை வந்து குறுக,
”நன்று நின் வரவு” என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர்தம்மொடு வியந்து.
(170-26)
1137.
சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்
‘ஏது இத் தலம்?’ எனக் குறுமுனிவனைக் கேட்ப,
‘வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர்’ என்று அவன்
புகன்றான்.
(170-27)
1138.
புகன்றவன்தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறுமுனி உரைசெய, அவனும்,
‘பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும்.
(170-28)
1139.
‘இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன்
சாய்கை
அருத்தி இன்றியே, அகன்றது’ என்று அருள் முனி
அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி
‘கருத்து மற்று இனி உரை’ என, குறுமுனி கழறும்;
(170-29)
1140.
‘இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன்தன் மா நகர் எய்தினால், சாய்கை போம்,
உரவோய்!
‘அந்த நீதியே செய்தும்’ என்று, அனுமனை
அழைத்திட்டு,
‘எம்தம் நாதனை இமைப்பினில் கொடுவருக’
என்றான்.
(170-30)
1141.
அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற’கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண்’ என மாருதி தாவினான்.
(170-31)
1142.
‘போதி’ என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்தானும்
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப.
(170-32)
1143.
ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான்.
(170-33)
1144.
காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
‘ஆலம் உண்ட தே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.
(170-34)
1145.
‘முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல்
கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்.
(170-35)
1146.
ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப.
(170-36)
1147.
நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
‘நன்று செய்தனை!’ என்னப் போய் நாதனைப்
பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன்.
(170-37)
(இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக,
பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன.)
1148.
ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
(170-37அ)
தூய வார் கழல் அனுமனும் தோன்றினன்; தோன்றா
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன்
நின்றான்.
1149.
நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை
(170-37ஆ)
நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, ‘நம்
பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப்
புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி’
1150.
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட,
(170-37இ)
இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; ‘மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப்
பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை’
எனவே.
1151.
ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
(170-37 ஈ)
கூத்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து,
அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற,
தளர்ந்து வீழ்ந்தான்.
1152.
மனுபரன் அனுமன்தன்னை வரவழைத்து, ஈசன்
வன்மை
தனை உரைத்து, ‘இடை நீ தந்த நாதனை நடுவே
நாட்டி,முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்’
(170-37உ)
என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி
நின்றார்.
1153.
விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி
(170-38)
‘அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என்
செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி’ என்று
உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை
செய்தான்.
1154.
அவ் இடத்து, ‘அனுமன் தந்த, கங்கைமேல்
(170-39)
வவ்விடப்படும் வந்திடுவான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து, எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான்.
1155.
‘எம்தன் நாதன் இவன்’ என்று இறைமகன்
(170-40)
தந்த நாமம் சராசரம் சார்ந்தபோது
இந்திரன், பிரமா முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார்.
1156.
‘இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
(170-41)
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக’ எனா.
1157.
என்று, இராகவன் ஈசன் பெருமையின்
(170-42)
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்ற சென்று, ‘செய, செய! போற்றி!’ என்று
அன்று இராச குமாரன் அறைகுவான்:
1158.
பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, ‘நீள் திரைக் கடல்
கிடந்தகாவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல்
(170-43)
கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை’ எனப் புகன்றான்.
1159.
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
(170-44)
‘இந்த மா மலை இரும்’, என, யாவையும் நல்கி,
‘விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும்’ என, இராமனும் அகன்றான்.
1160.
போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
(170-45)
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார்.
1161.
தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
(170-46)
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக்
கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில்
போயினனால்.
1162.
சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
(170-47)
கூர்ந்த மானமேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன்.
1163.
வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன்
சிலையால்,
(170-48)
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு
உரவோன்.
1164.
‘நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச்
சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால்.
(170-49)
1165.
‘தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால்.
(171-1)
1166.
‘மாருதி நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப்
பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள்
போக்கு இற்று என,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை
நோக்காய்!’
(171-2)
1167.
ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்; ‘விரிந்த கிட்கிந்தை
உள்ளார்
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி’ என்ன,
கார் நிற அண்ணல், ‘மானம் காசினி குறுக’
என்றான்.
(173-1)
1168.
என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை
உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி’ என்ன,
சென்று அவன் சாம்பன்தன்னை, ‘திசை எட்டும்
திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு’
என்றான்.
(174-1)
1169.
என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை
உள்ளார்க்கு,
ஒன்று அழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா
உற்றென்ன,
மன்றல்அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி
கூட.
(174-2)
1170.
சந்திர மானம்தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும் கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர
மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன்தன்னை ஏத்தினர்; இறைஞ்சி
நின்றார்.
(176-1)
1171.
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக்
கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில்
தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில்
தாரை.
(176-2)
1172.
தாரையைச் சீதை புல்கி, ‘தாமரைக்கண்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார்உளோர்க்கு
அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது
அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை
அம்மா?’
(176-3)
1173.
என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன்
ஈந்தது,அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே,
குமையும் நின்றாள்.
(176-4)
1174.
நின்றவள்தன்னை நங்கை அம் கையால் தழுவி
நின்று
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக்
கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை
உற்றே.
(176-5)
1175.
‘கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள்
வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர்அதன் அழகு பாராய்
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும்
நோக்காய்.
(177-2)
1176.
‘கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை!
நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள்
கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகலவன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம்
நோக்காய்.
(177-2)
1177.
‘மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான்
வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர்
அஞ்சும்,
பாழியான்தன்னை கண்ட பம்பையாறு அதனைப்
பாராய்.
(177-3)1178.
”பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து,
அறைத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும்
படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன்தன்னைக் கண்ட இடம் உது
கண்டாயே.
(177-4)
1179.
‘சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த
கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த
பாரும்,
சவையுறு சுகுட்டன் மைந்தன், சரவங்கன் முதலோர்
காதல்
கவை அறு முனிவர்தங்கள் இடங்களும் கருதி
நோக்காய்.
(177-5)
1180.
‘விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து
போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை
நோக்காய்;
‘சரதம் நான் அரசு வேண்டேன்; தடமுடி சூடுக’
என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப்
பாராய்.
(177-6)
1181.
‘வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல்
பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம்
இன்றி,
விளைதரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப,
வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப்
பாராய்.
(177-7)
1182.
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை
பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும்,
காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல்
ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது
நோக்காய்.
(177-8)
1183.
என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவி
சேயும்
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித்
தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இடவகை இழிந்தான்
அன்றே.
(177-9)
1184.
என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து
குன்று துன்றிய நெறி பயில் குடதிசைச் செவ்வே
சென்று, கங்கையின் திருநதித் தென் கரை
சேர்ந்தான்.
(182-1)
1185.
ஆர்த்து, விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போதினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான்.
(182-2)
1186.
மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார்.
(182-3)
1187.
‘பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது’ என அறநெறி வழுவுறா அலங்கல்மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார்.
(182-4)
1188.
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை
வியவா,
‘புறத்ததாம் உயிர் பெற்றனம்’ என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான்.
(182-5)
1189.
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும்
நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக’ எனச் செப்பி
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார்.
(186-1)
1190.
‘தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன்
பெற்ற
யுகம் அரைக் கோடிகாறும் ஏவல் செய்து உழலும்
தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை
அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி
உண்டோ?’
(188-1)
1191.
இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும்
போக்கி
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!’
என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து
அடைந்தான்.
(189-1)
1192.
அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனைஅம் பெருங் கடல் சூழ்தர, மேல்
நாள்
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான்.
(189-2)
1193.
இருந்தபோது, இராமன்தன்னை இருடியும் இயம்பும்;
எந்தாய்!
பெருந் திறல் இலங்கைதன்னை எங்ஙனம்,
பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன்
தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!
என்றான்.
(189-3)
1194.
இராகவன் அவனை நோக்கி, ‘இறந்த வாள் அரக்கர்
எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன்தானும்,
ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம்
கொண்டு
விராவியே மீண்டது’ என்று, மீளவும் பகரலுற்றான்:
(189-4)
1195.
‘தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்ற போது, அங்கு அரு மருந்து அனுமன்
தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது
அன்றே.
(189-5)
1196.
‘கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும்
காணா,
மறம் புகா, நகரம்தன்னில் வானவர் புகுதல் வம்பே;திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும்
காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும்,
ஐயா!
(189-6)
1197.
‘மறக் கண், வெஞ் சினத்தில் வன்கண், வஞ்சக
அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின்,
எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின்,
பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி
நூலோய்!
(189-7)
1198.
என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, ‘நீ
தக்கதோய்!
வென்று மீண்டிலைஆயின், அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று
உளதோ?
(189-8)
1199.
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு,
மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
‘ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல்
வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார்.
(189-9)
1200.
‘அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்;
அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள், மேல் விளம்புவது
எவனோ?’
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும் இயைந்தே.
(189-10)
அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மா தவன்தனைத் தொழா, ‘புண்ணியப்
பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தனயன்
எனும்அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ’
என்றான்.
(189-11)
1202.
அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்,
அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி
சங்கரன் அயன்தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை
நிகழ்த்தும்.
(189-12)
1203.
‘இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ்
செல்வத்
தராதலம் புகழ் சனகன்தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்:
புராதனர்க்கு அரசே!’ என மாருதி புகன்றான்.
(189-13)
1204.
அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
‘என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?
என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
‘அன்னை வாசவன் திருவினைத் தந்தது’ என்று
அறைந்தான்.
(189-14)
1205.
பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், ‘நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை’
என்றான்.
(189-15)
1206.
என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா
தவனும், ‘இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம்
மேவிக்
குன்று என வருக!’ என்று கூறலும் இமையோர்
நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து
ஆங்கு வந்தார்.
(189-16)
1207.
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்.
(189-17)
1208.
முனிவன் வாள் முகம் நோக்கி, ‘மெய் முழுது உணர்
முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று
எம்மேல்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன்’ எனப் புரவலன் புகன்றான்.
(189-18)
1209.
என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
‘நன்று, நாயகன் கருணை!’ என்று உவகையின
நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, ‘அருந
தொல்லோய்!
ஒன்று கேள்’ என, உவகையின் மாருதி உரைக்கும்:
(189-19)
1210.
‘செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு
சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு
அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ?’ என்று
மொழிந்தான்.
(189-20)
1211.
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய,
ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன்
நினைந்தான்;
‘பொருந்த மா முடி புனைக!’ எனப் பொருந்துறான்,
போத
வருந்து தம்பிக்கு, ‘வருவென் யான்’ என்பதோர்
வாக்கை
(189-21)
1212.
முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப்
பெருமான் –
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிபால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு
அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன
நிகழ்த்தும்.
(193-1)
1213.
அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மா தவனும்
‘இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு
சயனம் மற்றும்
குன்றினில் அருளும்’ என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு
வந்தார்.
(198-1)
1214.
மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன்
பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினன்; அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து
போனான்.
(201-1)
1215.
‘மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்!
(201-2)
1216.
‘அம் பவளச் செவ் வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான் என்னை, இழி குணத்து நாயேனை,
‘தம்பி’ என உரைத்த தாசரதி தோன்றானோ!
(201-3)
1217.
வாழி மலைத் திண் தோள் சனகன்தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
”தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன்
கொழுந்தி; நீ
தோழன்” என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!’
(201-4)
1218.
‘துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர், யான் இறப்பேன்’ எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான்.
(201-5)
1219.
‘வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பேன்’ என்று
எண்ணி,
ஓத நீரிடை ஓடம்அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான்.
(201-6)
1220.
‘கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
‘அண்ணல் வந்தனன்’ என்று உரையாடினான்.
(201-7)
1221.
உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான்.
(201-8)
1222.
ஓங்கு வாலினை ஒட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால்.
(201-9)
223.
‘கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக்
காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேரபுரம் உடையாய்! மிகு கோசலை
களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி
அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியோடும்; அடியேன் உய்ய,
வந்தானே.
(201-10)
1224.
‘ஆர்? உனை உரை’ என, அனுமன் கூறுவான்;
‘சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
சூருடை, இராமற்குத் தூதன்’ என்று எனது
ஏருடைத் தலையின்மேல் எழுதப்பட்டுள்ளேன்.
(201-11)
1225.
பரதனனத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது’ என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான்.
(201-12)
1226.
பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத் துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான்.
(241-1)
1227.
கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரிக் குலம், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணிதன்னுடன்,
ஏ வரும் சிலை வலான், யாவும் நல்கினான்.
(258-1)
1228.
நின்றவன், ‘இவ் வயின் நெடியவன்தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென்,
சென்று’ எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான்.
(258-2)
1229.
ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,
(258-3)
தீயின் ஆகுதி செங் கையின் ஒக்கினான்.
1230.
பான நெய்யோடு, நானமும், சாந்தமும், பலவும்
(258-4)
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்
தேன் அளாவிய முக் கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு
இழிந்தார்.
1231.
கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும்,
(258-5)
காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன்
கலத்தால்,
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க
நிறைத்தனரால்.
1232.
வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக்
(258-6)
கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை
படைத்தனரால்.
1233.
நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி
(258-7)
பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப்
பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர்,
பொலிவால்.
1234.
‘இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
(258-8)
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது
அல்லால்’
இதன்பின் 189-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன.
1235.
‘கொற்றவன் உடன் உண்ணுமோ? – கோது இல்
மாதவனே!
வெற்றி வீரனே!’ என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான்.
(258-9)
1236.
பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள்தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும்
உண்டனரால்.
(258-10)
1237.
பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள்தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர், வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும்
உண்டனனால்.
(258-11)
1238.
அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம்போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்,
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம்
மகிழ்ந்தனனால்.
(258-12)
1239.
பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான்.
(258-13)
1240.
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் –
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப
பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்
மண்ணும், நாகரும், யாவரும், அருந் துயர் மறந்தார்.
(258-14)
1241.
மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து.
(258-15)
1242.
ஆர் இருள் அகலும்காலை, அமலனும், மறையோன்
பாதம்,
ஆர்வமொடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும்
ஆசி,
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து
சென்றான்.
(258-16)
1243.
விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு,
தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும்
அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன், அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான்.
(258-17)
1244.
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான்
அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு எய்ந்த சிகாமணி,
குணபால அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம்
செய்தான்.
(258-18)
1245.
இளவலை, ”அண்ணலுக்கு எதிர் கொண்ம்” என்று,
நம்
வளை மதில் அயோத்தியில் வாழும் மக்களை,
”கிளையொடும் ஏகு” எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசுஇனம் அறைவிப்பாய்’ என்றான்.
(258-19)
1246.
”தோரணம நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக!” எனச் செப்புவாய்’ என்றான்.
(258-20)
1247.
பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்,
புரத்தையும் புதுக்குமா புகறி, போய்’ என்றான்.
(258-21)
1248.
என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்,
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான்.
(258-22)
1249.
அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
‘வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!’ என்றிட.
(258-23)
1250.
‘வானையும் திசையையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான்’ எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார்.
(258-24)
1251.
முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால்.
(258-25)
1252.
‘அனகனை எதிர்கொள்க’ என்று, அறைந்த பேரி, நல்
கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம்அரோ.
(258-26)
1253.
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார்.
(258-27)
1254.
அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா.
(258-28)
1255.
திருவடி இரண்டுமே செம் பொன் மௌலியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான்.
(258-29)
1256.
எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே.
(258-30)
1257.
அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், ‘திருவின் நாயகன்,
எவ் வழி உறைத்தது? அச் செயல் எலாம் விரிந்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்’ என்றான்.
(258-31)
1258.
என்றலும், மாருதி வணங்கி, ‘எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?’
(258-32)
1259.
”ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன்
முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு
இன்னே
சூடுக மௌலி” என்ன, சந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து
விட்டான்.
(258-33)
1260.
தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான்.
(305-1)
1261.
அப் பொழுது அவ் வயின் அடைந்துளோர்களைத்
‘தப்பு அறக் காண்பென்’ என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும்.
(317-1)
1262.
அவ் வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும்,
அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்
இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்’ என்று
இராமன்
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது,
விமானம்தானும்.
(317-2)
1263.
எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால்.
(317-3)
1264.
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினன்.
(329-1)
1265.
ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன்
அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, ‘நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?’ என்று,
வாயிடை மொழிந்தான், – மற்றை மறைகளும் காணா
அண்ணல்.
(332-1)
1266.
வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர், உவந்த பின்பு
தேறிய கமலக்கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான்.
(332-2)
1267.
நம்பியும் பாதனோடு நந்தியம்பதியை நண்ணி,
‘வெம்பிய எரியின் பாங்கர், விலக்குவென்’ என்று
விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர்
பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ.
(332-3)
1268.
மூன்று என நின்ற தன்மைக் குணங்களின்
உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத்
தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும்
சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த
தன்மை!
(332-4)
1269.
இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை
ஏந்தி
பணை முலைப் பாலும் கண்ணீர்த் தாரையும் பாய,
நின்றாள்;பிணை எனத்தகைய நோக்கின் சீதையை, பேடை
அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித்
துறையை, கண்டாள்.
(332-5)
1270.
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி,
விம்மி
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால்முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம்
விட்டார்
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர்
எல்லாம்.
(332-6)
1271.
அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி
நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்,
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு
காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே.
(332-7)
1272.
வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள்
நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு
எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளிப்
பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி
கண்டார்.
(332-8)
1273.
விளங்கிய புட்பகம் நிலத்தின்மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கனி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே.
(332-9)
1274.
புகுந்தனர் நகரிடை – பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம்தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே.
(332-10)
1275.
நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி,
மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார்.
(332-11)
1276.
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற
மண்ணில் தாழும்,
செயிர் அறு சடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து
நீக்கி,
குயில் புரைமொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம்
கொண்டார்.
(332-12)
38. திருமுடி சூட்டுப் படலம்
1277.
எழு வகை முனிவரோடும், எண் திசைத்
திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு
களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில்
துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச்
சார்ந்தார்.
(6-1)
1278.
ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத்
தாழ்ந்து,நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக்
கண்டான்.
(8-1)
1279.
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்தானே,
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர்தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான்
அம்மா.
(8-2)
1280.
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல்
வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண்
குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர்
போனார்.
(11-1)
1281.
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து
மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள்தன்னைக்
கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த.
(26-1)
1282.
வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக்
குலங்கள் ஆதி,
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை
காண
தேறு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து,
ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற
அன்றே.
(26-2)
1283.
தேவர் கம்மியன்தான் செய்த செழு மணி மாட
கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின்
ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி
கொண்டார்.
(29-1)
1284.
அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி
நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய
சான்றோர்
‘உய்ந்தனம் அடியம்’ என்னும் உவகையின் உவரி
நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை
மாக்கள்.
(32-1)
1285.
‘வான் உறு முகுர்த்தம் வந்தது’ என்று மா மறைகள்
நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து
அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து
வாழ்த்த.
(37-1)
1286.
இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும்
நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன்
காதல்
வைப்புடை வளாகம்தன்னில், மன்னுயிர் வாழ்த்த,
வந்தான்.
(41-1)
1287.
மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரக்கர், திங்கள் மும் மழை, வாழி!
மெய்ம்மைஇறையவன் இராமன் வாழி ! இக் கதை கேட்போர் வாழி !
அறை புகழ்ச் சடையன் வாழி ! அரும் புகழ் அனுமன்
வாழி !
(42-1)
39. விடை கொடுத்த படலம்
1288.
கெவனோடு கெவாக்கன், தூம்பன், கேசரி,
கெந்தமாதன்
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி,
நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சுமீரன்
நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன்
என்பான்.
(7-1)
1289.
விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன்,
கயந்தன்
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு
அரம்பன், ஆண்மை
தெரிதரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க
பாதன்.
(7-2)
1290.
வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே
என்றும்
தான் வளர்த்திடுக; நல்லோர்தம் கிளை தழைத்து
வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன்
செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க,
எங்கும்.
(37-1)
1291.
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு
எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம்
சொல்,சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை
செய்யும்,
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக
வாழி.
(37-2)
1292.
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த
வள்ளல்!
வாழிய, வலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!
(37-3)
1293.
இராவணன்தன்னை வீட்டி, இராமனாய் வந்து
தோன்றி
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.
(37-4)
———————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply