நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான ஸ்ரீ நம்பெருமாளுக்கும் ஆசார்யராய்,
ஸ்ரீ யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாள மா முனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய
தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர்.
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீ எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில் ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யார்
என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் ஸ்ரீ தேவராஜன்.
திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி
ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ வடுக நம்பியைப் போலே ஸ்ரீ மணவாள மா முநிகளையொழிய
தேவுமற்றறியாதே மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன்
அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.
ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:
1-ஸ்ரீ வரவரமுநி சதகம்,
2-ஸ்ரீ வரவரமுநி காவ்யம்,
3-ஸ்ரீ வரவரமுநி சம்பூ,
4-ஸ்ரீ வரவரமுநி நாடகம்,
5-ஸ்ரீ பூர்வ தினசர்யா,
6-ஸ்ரீ உத்திர தினசர்யா ஆகியவை ஆகும்.
7-மேலும் ஸ்ரீ விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.
ஸ்ரீ மண்வள மா முனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார். நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான
ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான்.
ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான
வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது ஸ்ரீ விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.
தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே
ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.
தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்
அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டானத்தாலும்
சோபிப்பவருமான ஸ்ரீ தேவராஜகுரு என்னும் ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.
—————————–
ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம் –
யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –
வர வர முனி வர்ய பாது ரத்னம்
வரத குரும் குரும் ஆஸ்ரயே குரூணாம்
உபநிஷத் உபகீதம் அர்த்த தத்த்வம்
ததிஹ யதீய வஸம் வதம் ஸமிந்தே -1-
வரவர முனிம் = மணவாள மாமுனிகளின்
பாது ரத்நம் = திருவடிகளுக்கு ரத்நம் போல் சிறந்த அடியார்
குரூணாம் குரு =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்
உபநிஷதுபகீதம் அர்த்த தத்வம் = உபநிஷத்துகளில் ஓதப்படும் பொருளை
ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே =தம் அதீனமாக உடையவர் ஆகிய
வரதகுரும் ஆச்ரயே = வரதகுருவை வணங்குகிறேன்.
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலமே -புருஷகாரமாகப் பெற்ற செய்ந் நன்றிக்காக
முதலிலே அவரைப் பற்றியே அருளிச் செய்கிறார்
வர வர முனி வர்ய பாது ரத்னம் -ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ பாதுகா ஸ்தானம்
வரத குரும் குரும் ஆஸ்ரயே குரூணாம் -தேவராஜா குரு போல்வாருக்கும்
உபநிஷத் உபகீதம் அர்த்த தத்த்வம் -சாந்தோக்யத்தி -சொல்லும் அர்த்தங்களை அறிந்தவர்
ததிஹ யதீய வஸம் வதம் ஸமிந்தே -அவரும் அவரது சிஷ்ய வர்க்கங்களே அறிவார்
மணவாள மாமுனிகளின் திருவடிகளுக்கு ரத்னம் போல் சிறந்த அடியவர்,
ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்,
உபநிஷத்துகளில் ஓதப்படும் உண்மைப் பொருளைத் தம் அதீனமாக உடையவர் ஆன வரத குருவை வணங்குகிறேன்.
—————
ஆகல்பமத்ர பவது ப்ரதயந் தரித்ரீம்
அஸ்மத் குருர் வரவர ப்ரவரோ முநீநாம் |
அந்தஸ்தமச் சமநம் அந்தத்ருசாம் யதீயம்
அம்லாந பல்லவ தலாருணம்அங்க்ரி யுக்மம் ||
எந்த மணவாள மாமுனிகள் வாடாத தளிர்போல் சிவந்த இரண்டு திருவடிகள் பார்வை இழந்தவர்களுடைய
உள் இருளைப் போக்க வல்லதோ அந்த முனிவர்களின் தலைவர், எமது குருவான மாமுனிகள்
இந்த பூமியைப் ப்ரகாசப் படுத்திக்கொண்டு கல்பம் முடியும்வரை இங்கிருக்கவேண்டும்.
————-
குண மணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமஸ்தே
வர வர முநயே நமோ நமஸ்தே
யதி வர தத்த்வ விதே நமோ நமஸ்தே -2-
குண மணி நிதயே நமோ நமஸ்தே -கல்யாண குணங்களின் -பொக்கிஷம்
குருகுல துர்ய நமோ நமஸ்தே-குரு பரம்பரையில் ஸ்ரேஷ்டர்
வர வர முநயே நமோ நமஸ்தே –
யதி வர தத்த்வ விதே நமோ நமஸ்தே -உண்மையான -சரம உபாயம் அறிந்தவர் –
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் அன்றோ –
சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.
மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.
———–
மேலே தன்னுடைய ஆராதன பெருமாள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுக்கும்
ஸ்ரீ ஸீதாப் பிராட்டிக்கும் பிராணாமங்களை அருளிச் செய்கிறார்
குரு மயி விமலம் த்ருகஞ்சலம் தே
குஸல நிதான தயா நிதே நமஸ்தே
நிஸி சர பரி பத்நி நித்ய யுக்த
நிமி குல மங்கள தீபிகே நமஸ்தே -3-
க்ஷேமத்துக்குக் காரணமான கருணைக் கடலே! உமது சுத்தமான கடைக்கண் பார்வையை என்னிடம் செலுத்தும்.
உமக்கு வணக்கம். அரக்கர்களின் விரோதிகளுடன் கூடியவளே நிமிகுல தீபமானவளே! வணக்கம். (நிமிகுல தீபம்= சீதாப்பிராட்டி)
—————
ரவி ஸூத ஸூஹ்ருத நமோ நமஸ்தே
ரகு குல ரத்ன நமோ நமஸ்தே
தச முக மகுடச்சிதே நமஸ்தே
தசரத நந்தன ஸந்ததம் நமஸ்தே -4-
சுக்ரீவனுடைய நண்பனான உனக்கு வணக்கம். ரகுகுல ச்ரேஷ்டரான உமக்கு வணக்கம்.
பத்துத்தலை உடைய ராவணன் கிரீடத்தை அறுத்த உமக்கு வணக்கம். தசரத குமாரனான உமக்கு வணக்கம்.
—————-
யதி புனரபி தேய மத்வதீயம் க்ருதி
பிரத பரமீஷ்யதே ந கிஞ்சித்
விஜஹதி ந ஹி ஜாது ஸூக்தி முக்தம்
விசதச ஸித் யுதி மௌக்திகம் விதக்த்தா -5-
ஒப்புயர்வற்ற ஒரு பொருள் இருக்குமானால் இதற்கு மேல் முயற்சிகளால் ஒன்றும் காணப்படவில்லை என்றால்
நிர்மல சந்த்ரன் போன்ற காந்தியுள்ள முத்தை நிபுணர்கள் சிப்பியிலிருந்து வந்தது என்று ஒருபோதும் விட மாட்டார்கள்.
———————-
தேவ ப்ரஸீத மயி திவ்ய குணைக ஸிந்தோ த்ருஷ்ட்யா
தயா அம்ருததுஹா ஸக்ரு தீஷிதும் மாம்
நைதேந க்ருத்யமஸதேதி ந சிந்தயித்வா
நாராயணம் வரம் வரதம் விதந்மே –6-
தேவனே! திவ்ய குணங்களுக்குக் கடல் போன்றவரே! தயை எனும் அம்ருதத்தைப் பெருக்குகிற பார்வையால்
என்னை ஒரு தடவை பார்ப்பதற்கு தயை புரிவீராக. இந்த அஸத்தால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று
நினைக்காமல் எனக்கு ஆசார்யர் வரத நாராயண குரு என்பதை அறிந்து அருள் புரிய வேண்டும்.
——————-
ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி –7-
மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்
ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.
—————
தஸ்யை நித்யம் ப்ரதி சதி திஸே தஷிணஸ்யை நமஸ்யாம்
யஸ்யாம் ஆவிர் பவதி ஜகதாஞ் ஜீவநீ ஸஹ கந்யா
புண்யைர் யஸ்யா ஷிதிதல ஜூஷம் பூருஷம் ரங்க பூஷாம்
பஸ்யன் தன்யோ வர வர முனி பாலயன் வர்த்ததே ந –8-
எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ
அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த
ரங்க நகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து
மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.
———————–
ஆசா பாஸைர் அவதி விதுரை ஸ்வைரமா க்ருஷ்ய மாணம்
தூராத் தூரம் புனரபி ந மே தூயதா மேவ சேதஸ்
அந்தக்ருத்வா வர வர முனே நித்யம் அங்க்ரி த்வயம் தே
தாரா கார ஸ்மரண ஸூபகம் நிஸ் சலி பூய தத்ர -9-
முடிவில்லாத பல ஆசைகளால் தன் இஷ்டம்போல் வெகுதூரம் இழுக்கப்பட்ட என் மனம் மறுபடி வருந்த வேண்டாம்.
வரவர முநியே! தினந்தோறும் உமது திருவடிகளையே நினைப்பதால் புனிதமாகி அங்கேயே ஸ்திரமாக இருக்கக் கடவது.
——————
த்வம் மே பந்துஸ் த்வமஸி ஜனக ஸ்த்வம் ஸகா தேசிகஸ் த்வம்
வித்யா விருத்தம் ஸூஹ்ருத மதுலம் வித்தமப் யுத்தமம் த்வம்
ஆத்மா சேஷீ பவஸி பகவன் நான்தரஸ் ஸாஸிதா த்வம்
யத்வா சர்வம் வர வர முநே யத்ய தாத்ம அநு ரூபம் -10-
நீரே எனக்கு உறவினரும், காரணபூதரும், தோழரும், ஆசிரியரும், கல்வியும், நன்னடத்தையும், நிகரில்லாத புண்யமும்,
சிறந்த தனமும், ஆத்மா என்னும் தாரகமும், தேவரீரே அடியேனை உள் இருந்து நியமிக்கும் ஸேஷியும், ஸேஷனுக்கு ஏற்ற எல்லாமும் ஆவீர்.
—————–
ஆம்நாயே ஷு ஸ்ம்ருதி பிரமிதைஸ் ஸேத் இதிஹாஸை புராணை
த்ருஸ்யம் யத்நைர் யதிஹ விதுஷாம் தேஸிகா நாம் ப்ரஸாதாத்
ஸ்வைராலா பைஸ் ஸூலபயஸி தத் பஞ்சம உபாய தத்வம்
தர்சன் தர்சம் வர வர முநே தைன்ய மஸ்மத் விதாநாம் – 11-
ஆம்நாயே ஷு ஸ்ம்ருதி பிரமிதைஸ் ஸேத் இதிஹாஸை புராணை -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசம் இவற்றை
த்ருஸ்யம் யத்நைர் யதிஹ விதுஷாம் தேஸிகா நாம் ப்ரஸாதாத் –ஆச்சார்யர் உபதேசிக்க –
யத்னமும் செய்ய வேண்டும் -ஸ்ரவணம் மனனம் இத்யாதிகளால்
ஸ்வைராலா பைஸ் ஸூலபயஸி தத் பஞ்சம உபாய தத்வம் -ஆலாபங்கள் பேச்சுக்கள்
கால க்ஷேபங்களால்-பஞ்சம உபாயத்தை – சுலபம் ஆக்கி
தர்சன் தர்சம் வர வர முநே தைன்ய மஸ்மத் விதாநாம்-பரம காருண்யத்தால் –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று உபதேசித்து அருளினார் –
அளவற்ற ஸ்ம்ருதிகளாலும் இதிஹாசங்களுடன் கூடிய புராணங்களாலும் அறிஞர்களான ஆசார்யர்களுடைய
கருணையாலும் முயற்சிகளாலும் எது அறியப்படுகிறதோ அந்த ஐந்தாவது (பஞ்சம உபாயம்) உபாயத்தின்
உண்மையை என்னைப் போன்றவர்களின் எளிமையைப் பார்த்துப் பார்த்து ஸாதாரண பேச்சுகளால் எளிதாகப் புரியச் செய்கிறீர்!
—————–
ஸத் சம்பந்தோ பவதி ஹித மித்யாத் மநைவோ பதிஷ்டம்
சிஷ்டாசாரம் த்ருட யிது மிஹ ஸ்ரீ ஸகோ ரெங்க துர்ய
துவாரம் ப்ராப்ய பிரதித விபவோ தேவ தேவஸ் த்வதீயம்
த்ருஷ்ட்வைவ த்வாம் வர வர முநே த்ருஸ்யதே பூர்ண காம –12-
நல்லோர் உறவு உபாயமாகிறது என்று தாம் உபதேசித்த சிஷ்டாசாரத்தை உறுதிப்படுத்த
பெரிய பிராட்டியுடன் கூடிய ஸ்ரீரங்கநாதன் ப்ரஸித்த மஹிமை உடைய தேவதேவர் உமது வாயிற்படியை அடைந்து
உம்மை ஸேவித்த பின்பே பூர்த்தி அடைந்த எண்ணம் உடையவராகக் காணப்படுகிறார்.
——————
ஸோ அயம் பூயஸ் ஸ்வய முபகதோ தேசிகைஸ் ஸம்சதம் தே
ஸ்ருத்வா கூடம் ஸடரிபு கிராமர்த்த தத்துவம் த்வத் யுக்தம்
ஆ கோபாலம் பிரத யதிதராம த்விதீயம் த்விதீயம்
வாசாம் தூரம் வர வர முநே வைபவம் சேஷ ஸாயீ –13-
அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத
வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.
—————
ஸித்த உபாயஸ் த்வமிஹ ஸூலபோ லம்பயன் பூருஷார்த்தான்
அஞ்ஞாதாம்ஸ் ச ப்ரதயஸி புநஸ் யத்தகோ தேஸிகஸ் த்வம்
தேவீ லஷ்மீ பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம்
கோசவ் யஸ் த்வாம் வர வர முநே மன்யதே நாத்ம நீநம் –14-
ஸித்த உபாயஸ் த்வமிஹ ஸூலபோ லம்பயன் பூருஷார்த்தான் – மூன்றாகவும் இவரே –
ஸித்த உபாயமும் இவரே -அடைவிப்பவரும் இவரே ஸூலபமாக பெற்றுக் கொடுத்து அருளுபவர் –
அஞ்ஞாதாம்ஸ் ச ப்ரதயஸி புநஸ் யத்தகோ தேஸிகஸ் த்வம்-அஞ்ஞானங்களைப் போக்கும் ஆச்சார்யரும் இவரே
தேவீ லஷ்மீ பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -வாத்சல்யம் தயை மிக்கு உள்ள பிராட்டி -புருஷகாரமும் தேவரீரே
கோசவ் யஸ் த்வாம் வர வர முநே மன்யதே நாத்ம நீநம் -உயர்ந்த ஸித்த உபாயம் –
தேவரீர் என்று காட்டிக் கொடுத்து அருளினீர்
இப்போது புருஷார்த்த லாபத்தைச் செய்து கொண்டு சுலபமான ஸித்தோபாயமான நீர் அறியாதவைகளை அறிவிப்பிக்கிறீர்.
ஆகையால் நீர் ஆசார்யராகவும் இருக்கிறீர். வாத்ஸல்யத்தாலும் கருணையாலும் பிராட்டி தேவி ஆகிறீர்.
வரவர முநியே! உம்மைத் தம்முடையனாக நினைக்காதவன் யார்?
—————–
நித்யம் பத்யுஸ் பரி சரணதோ வர்ணதோ நிர்மலத்வாத்
வ்ருத்யா வாசாம் நிபுத சரிதஸ் சாதுரீ முத் கிரந்த்யா
சேஷ ஸ்ரீ மா நிதி ரகு பதே ரந்த ரேண அபி வாணீ
கோ நாம த்வாம் வர வர முநே கோவிதோ நாவ கந்தும் -15-
தினந்தோறும் சேஷியானவனுக்குப் பணிவிடை செய்வதாலும் சுத்தமான நிறம் பெற்றிருப்பதாலும்
தேவ கங்கையின் திறமையை வெளிப்படுத்துகின்ற வாக்கின் தன்மையாலும் சேஷன் ஸ்ரீமாந் என்று ரகுபதியான
ஸ்ரீராமருடைய வார்த்தையை விட்டு எவர்தான் உம்மை அறிய ஸமர்த்தன்?
————-
ஸத்யம் ஸத்யம் புநரிதி புரா சாரவித் பிர்யதுக்தம்
ப்ரூமஸ் ஸ்ரோத்ரைஸ் ஸ்ருணுத ஸூதியோ மத் சரம் வர்ஜயித்வா
தத்த்வம் விஷ்ணு பரம நுபமம் தத் பதம் ப்ராப்ய மேவம்
தத் ஸம் ப்ராப்தவ் வரவர முநேர்த் தேசிகோ தீர்க்க தர்சீ -16-
ஸாரத்தை அறிந்தவர்களால் முன்பு உண்மை உண்மை என்று எது கூறப்பட்டதோ சொல்லுகிறோம்
காதுகளால் கேளுங்கள் புத்திமான்களே! பகைமையை வீட்டுக் கேளுங்கள்; விஷ்ணுவே உண்மைப் பொருள்,
அவர் திருவடியே அடைய வேண்டியது, இப்படியே அதை அடைவதில் தீர்க்க தர்சியான ஆசார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
———————
லஷ்யம் யஸ்தே பவதி பகவம்ஸ் சேதஸஸ் சஷு ஷோ வா
துப்யம் த்ருஹ்யந்த்யபி குமுதயோ யே வ்ருதா மத் ஸரேண
முக்திம் கச்சேன் முஷித கலுஷோ மோஹ முத்தூய ஸோ அயம்
நாநா பூதாந் வர வர முநே நாரகான் ப்ராப் நுயஸ்தே –17-
ஹே பகவந்! உமது திருவுள்ளத்திற்கோ அல்லது பார்வைக்கோ எவன் குறியாகிறானோ அவன் பாபத்தைத் துறந்து
மோகத்தை விட்டு மோக்ஷத்தை அடைவான். உம்மை வீணாக த்வேஷத்துடன் பார்த்த கெட்ட புத்தியுடன்
த்ரோஹம் செய்பவர்கள் பலவகைப்பட்ட நரக துன்பத்தை அனுபவிப்பார்கள்.
—————-
ஸ்வப்நே அபி த்வத் பத கமலயோர் அஞ்ஜலிம் கல்பயித்வா
ஸ்ருத்வா யத்வா ஸக்ருத் அபி விபோ நாமதேயம் த்வதீயம்
நிஷ் ப்ரத்யூஹம் வர வர முநே மாநவ கர்ம பந்தான்
பஸ்மீ க்ருத்ய ப்ரவிசதி பரம் ப்ராப்ய மேவ ப்ரதேசம் –18-
உமது திருவடித் தாமரைகளில் கனவிலும் அஞ்ஜலி செய்தவன் அல்லது உமது திருநாமத்தை ஒரு தடவை கேட்டவனும்
தடையினின்றி ஹே வரவரமுநியே! கர்ம பந்தங்களைச் சாம்பலாக்கி மிகவும் அடைய வேண்டிய இடத்தையே அடைகிறான்.
————————
யஸ்மிந் கிஞ்சித் விதிரபி யதா வீஷிதும் ந ஷம ஸ்யாத்
வக்தும் சக்த க இஹ பகவன் வைபவம் தத்த்வதீயம்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸ கலு பகவா நீஷதே தத் சமக்ரம்
தஸ்ய அபி த்வம் வர வர முநே மன்யஸே தத்த்வமேக –19-
எந்த விஷயத்தில் கொஞ்சம் ப்ரம்ஹனும் பார்ப்பதற்குத் திறமையற்றவனாகிறானோ ஹே பகவானே!
அந்த விஷயத்தில் உமது மஹிமையை யார் சொல்ல வல்லவன்?
எல்லாமறிந்த அந்த பகவானே அதை எல்லாம் பார்க்கிறான். அதற்கும் நீர் ஒருவரே தத்வமாக நிற்கிறீர்.
—————-
காலோ அநந்த கமல ஐநுஷோ ந வ்யதீதா கியந்த
திர்யங் மர்த்த்யஸ் த்ருண வநலதா ப்ரஸ்தரோவா அப்யபூவம்
இத்தம் வ்யர்த்தை ஜ நிம்ருதி சதைரேந ஸாமேவ பாத்ரம்
திஷ்ட்யா ஸோ அஹம் வர வர முநே த்ருஷ்டி கம்யஸ்த வாஸம் –20-
காலமோ முடிவில்லாதது. ப்ரம்மனுக்கு எத்தனை காலம் கடக்கவில்லை. திர்யக், மனுஷ்யன், புல், காட்டில் கொடி, புதர் ,
இப்படிப் பலவகையாக இருந்தேன். இது போல் வீணான பிறப்பு இறப்புகளால் பாபத்துக்கு உறைவிடமானேன்.
அப்படிப்பட்ட நான் தெய்வாதீனமாக, வரவரமுநியே! உமது பார்வைக்கு இலக்காக ஆனேன்.
————————
முக்த்வைவ த்வாம் வர வர முநே ஸம்பதாம் மூல கந்தம்
க்ஷேமம் கிஞ்சின்ந கலு ஸூ லபம் கேஸவை காந்த்ய பாஜாம்
த்ருஷ்ட்வா தைவாத்தவ புநரநு க்ரோஸ கோஸரை பாங்கை
நிர் மர்யாத பஸூரபி ப்ருசம் நீயதே நிர்மலத்வம் -21-
வரவர முநியே! செல்வங்களுக்கு மூல காரணமான உம்மை விட்டு, கேசவனிடத்திலேயே பக்தி செலுத்துபவர்களுக்கு
ஒரு வகை க்ஷேமமும் இல்லையன்றோ! விதி வசத்தால் உமது தயை நிறைந்த பார்வைகளால் பார்க்கப் பட்டவன்
ஒன்றும் அறியாத பசுவாயிருந்த போதிலும் மிகவும் பாபமற்றவன் ஆகிறான்.
—————–
மர்த்த் யங்கஞ்சந் வர வர முநே மாந ஹீந ப்ரஸம்ஸந்
பாதவ் தஸ்ய ப்ரபதந பர ப்ரத்யஹம் சேவமாந
தத் சேஷத்வம் நிரயமபி யஸ் ஸ்லாக்ய மித்யேவ புங்க்தே
சோயம் ப்ராப்த கதமிவ பரம் த்வத் பதை காந்த்ய வ்ருத்தம் -22-
வரவரமுநியே! மனிதன் ஒருவனை அஹங்காரமற்ற எவன் ஒருவன் புகழ்ந்து அவனுடைய திருவடிகளில்
சரணாகதி நோக்குடன் தினந்தோறும் சேவை செய்துகொண்டு அவனுடைய அடிமையை நரகத்துக் கொப்பாக இருந்தும்
சிறந்ததாக அனுபவிக்கிறானோ அப்படிப்பட்ட நான் இதோ வந்தேன்;
எப்படியோ உம் திருவடிகளில் அடிமையையே தொழிலாகக் கொண்டேன்.
——————
நித்யா நாம் யஸ் ப்ரதம கண நாம் நீயஸே ஸஸ்த்ர முக்யை
க்ருத்ய அக்ருத்ய பவசி கமலா பர்த்து ரேகாந்த மித்ரம்
தேவ ஸ்வாமீ ஸ்வயமிஹ பவன் சவும்ய ஜாமாத்ரு யோகீ
போகீஸ த்வத் விமுகமபி மாம் பூயஸா பஸ்ய சித்வம் –23-
எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.
———————
விமுகனாகவும் இருந்தாலும் கடாக்ஷித்து கைக் கொண்டு அருளினீரே –
அர்த்தவ் தார்யாதபி ச வசஸா மஞ்ஐஸா சந்நி வேஸாத்
ஆவிர் பாஷ்பை ரமல மதிபிர் நித்ய ஆராத நீயம்
ஆசாஸா நைர் வர வர முநே நித்ய முக்தை ரலப்யம்
மார்த்த்யோ லப்தம் ப்ரபவதி கதம் மத்வித ஸ்ரீ முகம் தே -24-
ஆழ்ந்த பொருளுடைமையாலும், வெகு சீக்கிரத்தில் வாக்கியங்களை அமைப்பதாலும்,
வெளித்தோன்றுகிற கண்ணீர்களை உடைய தூய புத்தி உள்ள மங்களாசாஸனம் செய்கின்றவர்களால்
தினந்தோறும் கௌரவிக்கத் தகுந்ததும்
நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் கிடைக்காததுமான உமது திருமுக மண்டலத்தை என் போன்ற மனிதன் எப்படி அடைய முடியும்?
———————
சார அசார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸனம் தே
ஸத்ய ஸ்ரீ மந் கபிகர க்ருதாம் மாலிகா மேவ குர்யாம்
நோசேதே தத் வர வர முநே தூர தூரம் ஸ்ருதீ நாம்
மௌலவ் குர்யாத் புருஷ வ்ருஷபோ மைதிலீ பாக தேயம் –25-
நன்று தீதென்றறிவற்றவனே எல்லா விதத்திலும் உமது நியமனத்தைக் குரங்குக்கை மாலையாகச் செய்பவன்.
ஸ்ரீமானே! இல்லாவிட்டால் உபநிஷத்தில் இந்த மைதிலியின் வைபவத்தை வெகு தூரத்தில் செய்பவன் புருஷர்களின் சிறந்தவன்.
நீசனான எனக்கும் குரங்கு கைப்பூ மாலை போலே ஸ்ரீ முகம் அனுப்பிக் கைக்கொண்டு அருளுவதே
———————
லஷ்யம் த்யக்த்வா யதபி விபலோ ஜாயதே ராம பாணோ
வாணீ திவ்யா வர வர முநே ஜாது நைவந் த்வதீயம்
சோயம் ஸர்வம் மதபி லஷிதம் வர்ஷதி ஸ்ரீ முகாப்த
தஸ்மை நித்யந்த திஹ பரமம் தாம கஸ்மாத் துராபம் –26-
வரவர முநியே! ஸ்ரீராம பாணமும் குறிதவறி வீணாக ஆனாலும் ஆகலாம்,
ஆனாலும் உமது வாக்கு ஒருபோதும் வீணாவதில்லை.
அப்படிப்பட்ட இந்த ஸ்ரீமுக வர்ஷம் என் இஷ்டத்தை எல்லாம் வர்ஷித்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்டவனுக்கு நித்யமான பரமபதம் ஏன் கிடைக்காமல் போகிறது?
——————
ப்ரேம ஸ்தாநம் வர வர முநே சந்து சந்தஸ் சதம் தே
துல்ய கோ வா வரத குருணா தேஷு நாராயணே ந
ஸா நுக்ரோ ஸஸ்ஸ து மயி த்ருடம் ஸர்வ தோஷாஸ் பதேஸ்மிந்
மாமேவம் தே மனசி குருதே மத்சம கோ ஹி லோகே –27-
வரவர முநியே! உமது அன்புக்குரிய பெரியோர்கள் பலர் இருக்கட்டும்.
அவர்களில் வரத நாராயண குருவுக்கு ஒப்பானவர்கள் எவர்?
அந்த வரத நாராயண குருவானவர் என்னிடம் திடமான அன்பு கொண்டவர்.
நானோ எல்லாக் குறைகளுக்கும் உறைவிடம். உமது திருவுள்ளத்தில் என்னை இவ்விதம் செய்கிறார்,
எனக்கு நிகர் இவ்வுலகில் யார் இருக்கிறார்கள்?
———————
பக்த்யுத் கர்ஷம் திஸதி யதி மே பாத பத்மே த்வதீயே
தஸ்மா தஸ்மை பவதி வரதஸ் சார்த்த நாமா குருர் மே
யத்வா தஸ்மை வர வர முநே யத்யஹம் ப்ரேம யுக்தோ
தன்யஸ் த்வம் மாமநுப ஜஸி தத் கிந்ந மன்யே யதன்யை -28-
உமது திருவடித் தாமரைகளில் எனக்கு பக்தியைத் தருகிற எனது வரதகுரு பொருள் செறிந்த பெயர் படைத்தவராவார்.
அல்லது, வரவர முநியே! அவர் பொருட்டு நான் அன்புடையவன் ஆனால் நீர் தந்யர் ஆகிறீர்,
என்னை அநுஸரித்தவர் ஆகிறீர். ஆகவே மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பேன்!
——————-
யத் சம்பந்தாத் பவதி ஸூலபம் யஸ்ய கஸ்ய அபி லோகே
முக்தைர் நித்யைர் அபி துரதிகம் தைவதம் முக்தி மூலம்
தம் த்வாமேவம் வததி வரதே ஸுவ்ஹ்ருதம் மே யதி ஸ்யாத்
தஸ்யைவ ஸ்யாத் வர வர முநே சந்நிதவ் நித்யவாஸ –29-
இவ்வுலகில் எவன் ஒருவனுக்கும் எவருடைய ஸம்பந்தத்தால் முக்தர்களுக்கும் நித்யர்களுக்கும் அடையமுடியாத
முக்தி காரணமான தேவதை ஸுலபமாகக் கிடைக்கிறதோ அப்படிப்பட்ட உம்மை இவ்வாறு சொல்லுகிற
வரதகுரு வினிடத்தில் எனக்கு ஸ்நேஹம் இருக்குமானால் வரவரமுநியே! அவர் அருகிலேயே நித்ய வாஸம் உண்டாகட்டும்.
——————-
ஸர்வ அவஸ்தா ஸத்ருச விவித அசேஷகஸ் த்வத் பிரியாணாம்
த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ
மக்நா நக்நவ் வர வர முநே மாத்ருஸா நுந்நி நீ ஷந்
மரத்த்யா அவாசோ பவஸி பகவந் மங்களம் ரங்க தாம்ந –30-
எல்லா தசைகளிலும் தகுந்த பலவகையான கைங்கர்யத்தைச் செய்கிற வரவரமுநியே! பகவானே!
அவருக்குப் ப்ரீதி உண்டாவதற்காக அவருடைய அந்தப் பரமபதத்தையும் விட்டு (ஸம்ஸார) அக்னியில் மூழ்குகிற
என்னைப் போன்றவர்களை மீட்பதற்கு விரும்பி மனிதர்களுடன் வசிப்பவராக ஸ்ரீரங்கத்திற்கு மங்களாவஹமாக வந்திருக்கிறீர்.
—————
ப்ரத்யூஷார்க் கத்யுதி பரிசயஸ் மேரபத்மாபி தாம்ரம்
பஸ் யேயம் தத் வர வர முநே பாத யுக்மம் த்வதீயம்
பாதோ பிந்து பரமணுரபி ஸ்பர்ச வேதீ யதீயோ
பாவே பாவே விசய முஷிதாந் பாவ யாத்யேவ லோகான் –31-
விடிந்த ஸூர்யன் கிரணத்தின் ஸம்பந்தத்தால் அழகிய தாமரைபோல் சிவந்த உமது இரண்டு திருவடிகளையும்
எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கக் கடவேன். அந்தத் திருவடி ஸம்பந்தம் பெற்ற நீர்த்துளியும் தனது ஸம்பந்தம் பெற்ற
உலகங்களை (மனிதர்களை) சுத்தப் படுத்துகிறது. உலகங்களால் அபஹரிக்கப்பட்ட மனிதர்களை அடிக்கடி சுத்தப் படுத்துகிறது.
——————–
நித்யே லோகே நிவஸதி புந ஸ்ரீ மதி ஷமா கதா நாம்
தூரீ பாவ ப்ரபவதி புரா துஷ் க்ருதர்த் துர் விபாகை
ஸம் ப்ரத்யேவம் ஸகல ஸூலபோ யத்யபி த்வம் தாயப்தே
மாமேவைகம் வர வர முநே மன்யஸே வர்ஜ நீயம் –32-
நித்ய லோகமான பரமபதத்தில் நீர் வஸிக்கும்போது பூமியில் உள்ளவர்களுடைய பாபங்களால் அணுக முடியாதவராயிருந்தும்
இப்போது எல்லாருக்கும் ஸுலபராக இருக்கிறீர்.
கருணைக் கடலே! வரவர முநியே! என் ஒருவனையே விடாத் தகுந்தவனாக நினைக்கிறீர்.
———————-
த்வத் பதாப்ஜ ப்ரணய விதுரோ தூரகஸ் த்வத் பிரியாணாம்
த்வத் ஸம்பந்த ஸ்மரண விமுகோ வீத ராகஸ் த்வதுக்தவ்
த்வத் கைங்கர்ய த்வ துபஸத நத்வத் ப்ரணாமா அந பிஜ்ஜோ
தூயே தூரம் வர வர முநே தோஷ லஷைக லஷ்யம் –33-
உமது திருவடித் தாமரைகளில் அன்பில்லாதவன், உமது ஸம்பந்தத்தை நினைக்காதவன்,
உமது பக்தர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவன், உமது வார்த்தைகளில் ஆசையற்றவன்,
உமது கைங்கர்யம் உம்மை அநுஸரிப்பது உம்மை வணங்குவது முதலியன அறியாதவன் ஆன நான்
லக்ஷக் கணக்கான குற்றங்களுக்கிருப்பிடமாக வெகு தூரத்திலேயே வருந்துகிறேன்.
————————-
ப்ராதுர் பூத ப்ரசுர மதயோ யே பர ப்ரஹ்ம சாம்யாத்
பஸ் யந்தஸ் தத் பத மநுபமம் யே புநஸ் ஸூத்த ஸத்வா
ஸர்வை ரேதைர் வர வர முநே சஸ்வ துத்திஸ்ய ஸேவ்யம்
காங்ஷத் யே தத் கத மய மஹோ காம காம பதாப்ஜம் –34-
மலர்ந்த புத்தியுடைய எவர்கள் பரமபதத்தைப் பரப்ரஹ்மத்துக்கு ஒப்பாகக் காண்கிறார்களோ
சுத்த ஸத்வ குணமுள்ளவர்கள் எவர்களோ அவர்கள் உமது திருவடியை வரவரமுநியே!
அடிக்கடி பூசித்து விரும்புகிறார்கள். இதென்ன ஆச்சர்யம் !
——————
ப்ராப்த க்ஷேமம் ப்ரக்ருதி மதுரை ப்ராகபி த்வத் கடாஷை
ஸோ அயஞ் ஐந்துஸ் த்வத் அநு பஜ நம் த்வத்த ஏவாப்து மிச்சந்
க்ரந்தத்யுச்சை கலுஷமதிபி ஸம் வசந் காம காமை
கால ஷேபோ வர வர முநே தத் கதம் யுஜ்யதே தே –35-
இயற்கையில் இனிமையான உமது கடாக்ஷங்களால் முந்தியே க்ஷேமத்தை அடைந்த இந்த பிராணி
உம்மைத் துதிப்பதை உம்மிடமிருந்தே அடைய விரும்பி உலக விஷயங்களில் பற்றுள்ள கலக்கமுள்ள
புத்தியுள்ளவர்களுடன் வசித்துக்கொண்டு கதறுகிறது.
வரவரமுநியே! உமக்குக் காலக்ஷேபம் எப்படி நடைபெறுகிறது?
————————
கோணை ரக்ஷண குமந சமிமம் நிர்மலம் கல்பயித்வா
ஹாதும் தூரே வர வர முநே ஹா கதம் யுஜ்யதே தே
பாத பாதும் ப்ரயதந பர பங்கிலம் ஸோத யித்வா
பங்கே முஞ்சன் புநரிதமத ப்ராப்நுயா தேவ கிம் வா -36-
வரவரமுநியே! தேவரீர் திருக்கண்களின் மூலையால் கெட்ட மனமுள்ள என்னைப்
பரிசுத்தப்படுத்தி விட்டுவிடுவதற்கு எப்படித் தகும்? தண்ணீர் குடிக்க முயற்சியுள்ள ஒருவன் கலங்கிய நீரை
சுத்தப் படுத்தி மறுபடி சேற்றில் விட்டு அதையே மறுபடி ஏற்றுக் கொள்வானா?
——————–
கால கிம்ஸ் விந்ந பவதி சமம் காங்ஷித காங்ஷிதா நாம்
யஸ்மிந் நஸ்மாதநல ஜலதே ருப்த்லுத ஸ்வாம் நமஸ்யன்
சிக்த ஸ்ரீமந் வர வர முநே ஸீதலைஸ் த்வத் கடாஷை
முக்தஸ் தாபை ரம்ருத மதுலம் காஹதே மோதமாந –37-
விரும்பத் தகுந்தவைகளுக்குள் விரும்பாத தகுந்த காலம் நமக்குக் கிட்டாதா?
இந்த நெருப்புக்குக் கடலிலிருந்து மேலே கிளம்பி உம்மை வணங்கிக்கொண்டு வரவமுநியே
குளிர்ந்த உமது பார்வைகளால் நனைக்கப்பட்டு தாபங்களால் விடுபட்டவனாகி
நிகரற்ற அமுதக் கடலை சந்தோஷத்துடன் ப்ரவேசிப்பேன்.
——————-
பாரா வாரப்ல வந சதுர குஞ்ஜரோ வாநராணாம்
பத்மா பர்த்து ப்ரிய ஸஹ சர பத்ரிணா மீஸ்வரோ வா
வாயுர் பூத்வா ஸபதி யதி வா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்
காலே காலே வர வர முநே காமயே வீஷிதும் த்வாம்–38-
காற்றாகவோ
பெரிய திருவடியாகவோ
திருவடியாகவோ
இருந்தால் மா முனிகள் இருக்கும் ஸ்ரீ ரெங்கம் உடனே செல்வேனே
—————-
காம க்ரோத ஷுபித ஹ்ருதயா காரணம் வர்ஜயித்வா
மரத்தயவ் பம்யம் வர வர முநே யே புநர் மந்வதே தே
துஷ்டம் தேஷாமபி மத தயா துர்வஸம் தேஸம் ருச்சன்
அந்தஸ் ஸ்வாந்தம் கதமபி மிதோ பாவயேயம் பவந்தம் –39-
காம க்ரோதங்களால் கலங்கிய மனதை யுடையவர்கள் காரணமின்றியே வரவரமுநியே!
உம்மை மனிதர்களுக்கு ஸமமாக நினைக்கிறார்கள்.
அவர்கள் விருப்பத்திற்காகக் கெட்ட என் மனத்தில் உம்மை ச்ரமப்பட்டு நினைக்கக் கடவேன்.
—————–
நாமை தத்தே நவ நவ ரஸம் நாத ஸங்கீர்த்த் யன் ருத்யன்
அந்த கர்த்தும் வர வர முநே நித்ய மிச்சத் யயம் த்வாம்
அர்த்தம் நித்ரா ஹரதி திவ ஸஸ்யார்த்த மன்யன் ந்ருசம்சோ
வாஸோ மூடைர் மலிந மதி பிர் வாக் ப்ரவ்ருத்திம் நிருந்தே –40-
வரவரமுநியே! நாதனே! புதிய ரஸமுள்ள இந்தத் திருநாமத்தைச் சொல்லி ஆடிக்கொண்டு
மனதிலேயே வைத்துக்கொள்ள இவன் எண்ணுகிறான். இதில் பாதி காலம் தூக்கத்தால் போகிறது.
பகலில் பாதி பாகம் வேறு வாஸத்தில் மூடமானவர்களால் வாக் ப்ரவ்ருத்தியையும் தடுக்கிறது.
———————-
அந்தர்த் த்யாயந் வர வர முநே யத்யபி த்வாமஜஸ்த்ரம்
விஸ்வம் தாபைஸ் த்ரி பிரபி ஹிதம் வீஷ்ய முஹ்யாம ஸஹ்யம்
ஷூத் ஸம்பாத ஷுபித மநஸாம் கோ ஹி மத்யே பஹு நாம்
ஏகஸ் ஸ்வாது ஸ்வயம் அநு பவேந் நேதி சேத ப்ரஸாதம் –41-
வரவரமுநியே! உம்மை எப்போதும் மனதில் த்யாநம் செய்துகொண்டு மூன்று வகையான தாபங்களால்
அடிபட்ட பொறுக்க முடியாத உலகத்தைக் கண்டு மோஹத்தை அடைகிறேன்.
பசி தாஹங்களால் கலங்கிய மனமுள்ள பலர் மத்தியில் உள்ள எவன் ஒருவன் தான்
ஸுகத்தை அநுபவித்து மனத்தெளிவைப் பெறுகிறான்?
தாபத் த்ரயத்தால் உள்ளோர் அறியும் படி
நல்லது தனி அருந்தேல் என்றபடி
மா முனிகளின் வைபவம் அருளிச் செய்யவே இந்த ஸ்துதி –
——————–
ஸத்த்வோ தக்ரைஸ் ஸகல புவநஸ் லாக நீயைஸ் சரித்ரை
த்ரையந்தார்த்த ப்ரகடந பரை சாரகர் பைர்வ ஸோபி
லோக உத்தீர்ணம் வர வர முநே லோக ஸாமான்ய த்ருஷ்ட்யா
ஜாநாநஸ் த்வாம் கதமபி ந மே ஜாயதா மஷி கம்ய –42-
ஸத்வ குணம் நிறைந்து, எல்லா உலகத்தவர்களும் புகழத்தக்க சரித்திரங்களாலும் வேதாந்தப் பொருளை
வெளிப்படுத்துவதில் நோக்கமுள்ள ஸாரமுள்ள வார்த்தைகளும் உடைய வரவரமுநியே!
உலகத்தில் ஸாமான்யமாக அறிந்து கண்களுக்குப் புலப்பட்டவராக எனக்கு ஆக வேண்டா.
————————–
கல்யாணைக ப்ரவண மநஸம் கல்மஷோ பப்லுதா நாம்
ஷாந்திஸ் தே மத்ரடிம சமதா சீல வாத்ஸல்ய ஸிந்தோ
த்வாமே வா அயம் வர வர முநே சிந்தயன் நீப் சதி த்வாம்
ஆர்த்தம் ஸ்ரீ மன் க்ருபண மபி மாமர்ஹஸி த்ராதுமேவ –43–
பொறுமை, உறுதி, மனோதிடம், ஸமத்வ புத்தி, நன்னடத்தை, அன்பு இவைகளுக்குக் கடல் போன்ற வரவரமுநியே!
பாபம் நிறைந்த ஜனங்களுக்கு சுபத்தையே விரும்புகின்ற திருவுள்ளத்தைப் படைத்த உம்மையே நினைத்து
விரும்பும் துக்கத்தால் பீடிக்கப்பட்ட இந்த க்ருபணனையும் ரக்ஷிக்கத் தகுந்தவராகிறீர்.
—————-
தோஷை காந்தீ துரித ஜல திர்த் தேசிகோ துர் மதீ நாம்
மூடோ ஜந்துர் த்ருவ மய மிதி ஸ்ரீ மதா மோச நீய
பாதூ யுக்மம் பவ தநு சரைரர்ப்பிதம் பக்தி நம்ரே
மௌலவ் க்ருத்வா வர வர முநே வர்த்ததாம் தத்ர தன்ய –44-
தோஷங்கள் நிறைந்தவன், பாபக்கடல், கெட்ட புத்தி உள்ளவர்களுக்குக் குரு,
இந்தப் ப்ராணி மூடன் என்று நினைத்து தேவரீரால் விடத்தக்கவன்;
உமது பக்தர்களால் பக்தியால் வணங்கி தலையில் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளை வைத்து அதனால் தன்யனானேன்.
————————–
நித்யம் நித்ரா விகம ஸமயே நிர்வி சங்கைரநேகை
த்வந் நாமைவ ஸ்ருதி ஸூ மதுரம் கீய மாநம் த்வ தீயை
ப்ராயஸ் தேஷாம் ப்ரபதந பரோ நிர்பரஸ் த்வத் பிரியாணாம்
பாதாம் போஜே வர வர முநே பாது மிச்சாம் யஹம் தே –45-
தினந்தோறும் தூங்கப் போகும்போதும் உம்முடையதான பல சங்கைகளால் காதுக்கு இனிமையான
உமது திரு நாமத்தையே பாடிக்கொண்டு உமது அன்பர்களான அவர்களின் ப்ரபத்தியில் நோக்கமுள்ளவனாக
நிர்ப்பரனாக நான் உமது திருவடித் தாமரைகளையே பானம் பண்ண விரும்புகிறேன்.
—————
அந்தஸ் ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரம் ஆவர்த்த யந்தீம்
உத்யத் பாஷ்பஸ் திமித நயநா முஜ்ஜிதா சேஷ வ்ருத்திம்
வ்யாக்யா கர்பம் வர வர முநே த்வன் முகம் வீக்ஷ மாணாம்
கோணே லீந க்வசி தநுரசவ் ஸம் சதம் தாம் உபாஸ் தாம் –46–
அந்தஸ் ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரம் ஆவர்த்த யந்தீம் –கால ஷேபம் கோஷ்ட்டி அனுபவம் —
ஸ்ரீ ரெங்கன் முன்னிலையில் ஈடு காலஷேபம் செய்து அருள
உள்ளே மந்த்ரம் -மந்த்ரம் சொல்பவரை ரக்ஷிக்கும் –
மதுரமாக மங்களா சாசனம் -செய்து கொண்டே இருக்கும் கோஷ்ட்டி
உத்யத் பாஷ்பஸ் திமித நயநாம் உஜ்ஜித அசேஷ வ்ருத்திம்–கண்களில் நீர் பெறுக –
ஸகல கைங்கர்யங்களும் செய்ய ஆசை கொண்டு
வ்யாக்யா கர்பம் வர வர முநே த்வன் முகம் வீக்ஷ மாணாம்-காலஷேபம் செய்து அருளும் மா முனிகள்
திரு முகம் அழகையே -சேவித்துக் கொண்டே
கோணே லீந க்வசி தநுரசவ் ஸம் சதம் தாம் உபாஸ் தாம்-சபையில் ஒரு மறைந்து என்றும்
சேவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும்
பரிக்ஷித் இதுவே வேண்டும் என்று அருளிச் செய்த படியே இவரும் பிரார்திக்கிறார்
உள்ளத்துக்குள்ளேயே ஓர் இனிமையான மந்த்ரத்தை உருச் சொல்லிக் கொண்டு வெளிக் கிளம்புகிற
அசைவற்றுக் கிடக்கிற கண் விழிகளை உடையதாயும் மற்றெல்லாத் தொழில்களையும் விட்டு,
வரவரமுநியே! விளக்கிக் கூறுகிற உமது முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிற
அந்த கோஷ்டியில் ஒரு மூலையில் இருக்க வேண்டும்.
—————–
ஆபி ப்ராணஸ் சரண யுகலீ மர்ப்பிதாம் த்வத் ப்ரஸாதாத்
வாரம் வாரம் வர வர முநே வந்த மாநேந மூர்த்நா
ஸ்ருண்வந் வாஸஸ் ஸ்ருதி சத சிரஸ் தத்வ ஸஞ்ஜீவிநீஸ் தே
பஸ்யன் மூர்த்திம் பரி ஷதி ஸதாம் ப்ரேஷணீ யோ பவேயம் -47-
வரவரமுநியே! உமது அருளால் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளையும் வணங்குகிற தலையால்
அடிக்கடி சுமந்துகொண்டு, உமது பல உபநிஷத் வாக்யங்களின் உண்மைப் பொருளை விவரிக்கின்ற
வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு, உமது திருமேனியைப் பார்த்துக்கொண்டு
பெரியோர்கள் அவையில் பார்க்கத் தக்கவனாக வேணும்.
———————–
காலே யஸ்மின் கமல நயனம் தேவ மாலோக யிஷ்யன்
நிர்யாஸி த்வம் வர வர முநே நித்ய யுக்தைஸ் த்வதீயை
அக்ரே ந்ருத்யந் நயமபி ததா தாஹதாம் ஹர்ஷ சிந்தவ்
மஜ்ஜம் மஜ்ஜம் மது வன ஜூஷாம் வைபவம் யூத பாநாம் –48-
எந்த சமயத்தில் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை ஸேவிக்க உம்முடன் தினந்தோறும் கூடியிருக்கிற
அடியார்களுடன் நீர் புறப்படுகிறீரோ அந்த சமயம் உமக்கு எதிரில் இந்த அடியேனும் கூத்தாடிக் கொண்டு
ஆனந்தக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து மது வனத்தை அநுபவித்த வானரர்களுடைய வைபவத்தை நினைத்துப் ப்ரவேசிக்கட்டும்.
————-
பூத்வா பஸ்ஸாத் புநரய மத வ்யோம்நி கோபாய மாநோ
பூயஸ் பார்ஸ்வத் விதய ஸூஷமா சாஹரம் காஹமாந
ஜல்பந்துத் ஸைர் ஜய ஜய விபோ ஜீவ ஜீவேதி வாசம்
சம் சன் மார்க்கம் வர வர முநே ஸுவ்விதல்லோ பவேயம் – 49-
பிறகு ஆகாயத்தில் க்ரஹம் போல மறுபடி பின்புறத்தில் வந்து இரண்டு பக்கங்களிலும் காந்திக் கடலில் ப்ரவேசித்து
உரத்த குரலில் ப்ரபுவே! நீ வாழ வேண்டும், வெற்றி உண்டாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு
உமது வழியில் வழிகாட்டியாய் இருக்கக் கடவேன்.
———————-
தேவீ கோதா யதிபதி சடத்வேஷிணவ் ரங்க ஸ்ருங்கம்
ஸே நா நாதோ விஹக வ்ருஷப ஸ்ரீ நிதிஸ் ஸிந்து கந்யா
பூமா நீலா குரு ஐந வ்ருதஸ் பூருஷஸ் சேத்ய மீஷாம்
அக்ரே நித்யம் வர வர முநேர் அங்க்ரி யுக்மம் ப்ரபத்யே -50-
தேவத்தன்மை குன்றாத கோதை, எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்க விமானம், சேனை முதலியார்,
பக்ஷி ச்ரேஷ்டனான ஸ்ரீ பெரிய திருவடி, பெருமாள், பிராட்டி, ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி முதலிய
ஆசார்யர்களுடன் கூடிய புருஷன், இவர்கள் எல்லார் எதிரிலும்
தினந்தோறும் உமது திருவடிகளைச் சரணாகதி அடைகிறேன்.
—————–
ப்ருத்யைர் த்வித்ரை ப்ரிய ஹித பரை ரஞ்சித பத்ர பீடே
துங்கம் தூலாசனவர மலங்குர்வதஸ் ஸோ பதா நாம்
அங்க்ரி த்வந்த்வம் வர வர முநேர் அப்ஜ பத்ராஸ் அபிதாம்ரம்
மௌலவ் வக்த்ரே புஜ சிரஸி மே வக்ஷஸி ஸ்யாத் க்ரமேண -51-
உமது ப்ரியத்திலும் ஹிதத்திலும் நோக்கமுள்ள பரிசாரகர்கள் இருவர் மூவரால் அலங்கரிக்கப்பட்ட
பத்ர பீடத்திலுள்ள தலையணையுடன் கூடிய உயர்ந்த மெத்தையை அலங்கரித்துக் கொண்டிருக்கும்
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் தாமரை இதழ்போல் சிவந்த திருவடியிணை
சிரஸ்ஸிலும் முகத்திலும் தோளிலும் என் மார்பிலும் முறையே ஸ்பர்சிக்க வேணும்.
————–
அக்ரே பஸ்ஸாது பரி பரிதோ பூதலம் பார்ஸ்வதோ மே
மௌலவ் வக்த்ரே வபுஷி சகலே மானஸ அம்போருஹே ச
தர்சன் தர்சம் வர வர முநே திவ்ய அங்க்ரி த்வயம் தே
மஞ்சன் மஞ்சன் நம்ருத ஜலதவ் நிஸ்தரேயம் பவாப்திம் -52-
முன்புறம், பின்புறம், மேலே, நாற்புறம், பூமி, என் பக்கங்கள், தலை, முகம், எல்லா உடல், உள்ளத் தாமரை
இவ்வெல்லா இடங்களிலும் வரவரமுநியே! உமது திவ்ய திருவடியிணையினைப் பார்த்து
அம்ருதக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவேன்.
—————-
கர்மாதீநே வபுஷி குமதி கல்பயன் நாத்மபாவம்
துக்கே மக்ந கிமிதி ஸூ சிரம் தூயதே ஐந்து ரேஷ
ஸர்வே த்யக்த்வா வர வர முநே ஸம் ப்ரதி த்வத் ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பத யுகம் தேஹி மே ஸூ ப்ரபாதம் – 53-
கர்ம வச்யமான இந்த உடலில் கெட்ட புத்தியுள்ள மனிதன் ஜீவ புத்தியை ஏற்படுத்திக்கொண்டு
துக்கத்தில் மூழ்கிக்கொண்டு இந்த ப்ராணி வெகு நாள்களாக வருந்துகிறான்.
வரவரமுநியே! எல்லாவற்றையும் விட்டு இப்போது உமது அநுக்ரஹத்தால் உமது திவ்யமான திருவடியிணை கிடைத்திருக்கிறது.
எனக்கு நல்லொளி என்னும் ஸுப்ரபாதத்தைக் கொடுப்பீராக!
——————-
யா யா வ்ருத்திர் மனசி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ் தே
யோ யோ ஜல்பஸ் பவது விபோ நாம ஸங்கீர்த்தனம் தே
யா யா சேஷ்டா வபுஷி பகவன் ஸா பவேத் வந்தனம் தே
ஸர்வம் பூயாத் வர வர முநே சம்ய காரா தனம் தே –54-
என் உள்ளத்தில் என்ன தொழில் உண்டாகிறதோ அது எல்லாம் உம் நினைவாகவே இருக்க வேண்டும்.
என் வாயில் என்ன பேச்சு உண்டாகிறதோ அவையெல்லாம் உமது திருநாமத்தைப் பேசுவதாகவே அமைய வேண்டும்.
என் உடலில் ஏற்படும் சேஷ்டைகள் எல்லாம் உமக்கு வந்தனமாகவே அமைய வேண்டும்.
எல்லாம் உமக்குத் த்ருப்தி அளிக்கும் திருவாராதாநம் ஆக வேண்டும்.
—————–
காமா வேச கலுஷ மனஸாம் இந்த்ரியார்த்தே ஷு யோ அசவ்
பூயோ நாதே மம து சததா வர்த்ததா மேவ பூயான்
பூயோ அப்யேவம் வர வர முநே பூஜ நத்வே பிரியாணாம்
பூயோ பூயஸ் ததநு பஜநே பூர்ண காமோ பவேயம் –55-
பாப மனம் படைத்தவர்களுக்கு லௌகிக விஷயங்களில் எவ்வகையான ஆசை இருக்கிறதோ
அவ்வாசை நூறு மடங்காகப் பெருகி உம்மிடத்தில் உண்டாகட்டும்.
அப்படியே உமதன்பர்களைப் பூசிப்பதிலும், அவர்களை அநுவர்த்திப்பதிலும்
நிறைந்த மனம் படைத்தவனாக இருக்கக் கடவேன்.
—————–
பஷ்யா அபஷ்யே பய விரஹிதஸ் ஸர்வதா பக்ஷயித்வா
சேவ்யா அஸேவ்யவ் ஸமய ரஹிதஸ் சேவயா தோஷயித்வா
க்ருத்ய அக்ருத்யே கிமபி ந விதன் கர்ஹிதம் வாபி க்ருத்வா
கர்த்தும் யுக்தம் வர வர முநே காங்ஷிதம் த்வத் பிரியாணாம் -56-
புசிக்கத் தக்கவை புசிக்கத் தகாதவை என்று பகுத்தறியாமல் பயமின்றி எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் புசித்தும்,
அடிமை செய்யத் தக்கவர்கள் செய்யத் தகாதவர்கள் என்கிற பேதமில்லாது எல்லாரையும் அடிமையினால் மகிழ்வித்து
வாசியறியாத நீசனுக்கு மணவாளமாமுநியே! உமதன்பர்களின் விருப்பத்தைச் செய்வது எப்படிப் பொருந்தும்?
————-
வ்ருத்திம் த்ராதும் வர வர முநே விஸ்வதோ வீத ராகை
ப்ராப்யம் சத்பி பரமிதமசவ் நேச்சேதி ப்ரஹ்ம ஸாம்யம்
நிர் மர்யாத பதது நிரயே நிந்திதை ரப்ய நல்பை
லப்த்வா கிஞ்சித் த்வத் அநு பஜநம் த்வன் முகோல்லாஸ மூலம் -57-
வரவரமுநியே! உலகப் பற்றற்ற பெரியோர்களால் அடையத் தகுந்த ப்ரஹ்ம ஸாம்ராஜ்யத்தை இவன் விரும்புகிறதில்லை.
மர்யாதை இல்லாமல் தவறு புரிந்து அளவில்லா இழிதொழில்களால் நரகத்தில் விழட்டும் –
கொஞ்சம் உமக்குத் தொண்டு புரிந்து உமது முகத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே விரும்புகிறேன்.
—————
நா அசவ் வாஸம் நபஸி பரமே வாஞ்ச்சதி த்வத் ப்ரஸாதாத்
மரத்த்யா வாஸோ யதிஹ ஸூலப கோஅபி லாபோ மஹீ யான்
கிஞ்சித் க்ருத்வா வர வர முநே கேவலம் த்வத் பிரியாணாம்
பஸ்யன் ப்ரீதிம் பவதி பவதோ வீக்ஷணா நாம் நிதானம் -58-
இவன் உமது அருளால் பரமபதத்தில் வாஸத்தை விரும்புகிறதில்லை.
இந்த மனிதப் பிறவியே ஒரு சிறந்த லாபத்தைத் தருகிறது.
உமது பக்தர்களுக்குக் கொஞ்சம் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டு
உமது கடாக்ஷங்களுக்கு நிதியாக இருப்பேன்.
—————–
அஸ்மாத் பூயாம்ஸ் த்வமஸி விவித அநாத்மனஸ் சோத யித்வா
பத்மா பர்த்து ப்ரதித நமிஹ ப்ரேஷயன் ப்ராப்ருதாநி
தஸ்மிந் திவ்யே வர வர முநே தாமநி ப்ரஹ்ம சாம்யாத்
பாத்ரீ பூதோ பவதி பகவன் நைவ கிஞ்சித் தயாயா –59-
பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து
எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.
ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.
—————-
ஜப்யந் நான்யத் கிமபி யதி மே திவ்ய நாம்நஸ் த்வதீயா
நைவோ பாஸ்யம் நயன ஸூல பாத அங்க்ரி யுக்மா த்ருதே தே
ப்ராப்யம் கிஞ்சிந் ந பவதி பரம் ப்ரேஷ்ய பாவா த்ருதே தே
பூயா தஸ்மிந் வர வர முநநே பூதலே நித்ய வாஸ –60-
ஹே வரவரமுநியே! உமது திருநாமத்தை யன்றி வேறு ஜபிக்கத்தக்க சொல் எனக்கில்லை.
கண்களுக்குத் தெரிந்த உமது திருவடியிணை யன்றித் த்யானம் செய்யத் தகுந்த வேறொன்று கிடையாது.
உமது அடிமையைத் தவிர வேறொன்று கதி எனக்கு இல்லை.
ஆகையால் இந்நிலவுலகிலேயே எனக்கு நித்ய வாஸம் உண்டாகட்டும்.
பூமியிலே நித்யவாஸம் செய்து -இருந்தாலும் குறை இல்லை
திவ்ய நாமம் ஜபித்துக் கொண்டே வாழ்வேன்
திருவடித் தாமரைகளையே த்யானம் செய்து கொண்டே இருப்பேன்
கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
முக்கரணங்களாலும் -கைங்கர்யம் செய்து கோரமான பூமியிலே இருப்பேன்
——————-
மந்த்ரோ தைவம் பலமிதி மயா வாஞ்சிதம் யத்யபி ஸ்யாத்
மத்யே வாஸோ மலிந மனஸா மேவ மேவம் யதி ஸ்யாத்
யத்வா கிஞ்சித் த்வத் அநுபஜனம் ஸர்வதா துர்லபம் ஸ்யாத்
தேஹம் த்யக்தும் வர வர முநே தீயதாம் நிஸ்ஸயோ மே -61-
மந்த்ரம் தேவதை பலம் இவை என்னால் விரும்பத் தக்கவையாக இருந்தால்,
கெட்ட எண்ணமுள்ள மனிதர் மத்தியில் எனக்கு வாஸம் இருக்குமானால்,
அல்லது உமது ஸேவை எனக்கு எல்லா விதத்திலும் துர்லபமாக இருக்குமானால்
இந்த உடலை விட்டுப்போக எனக்கு நிச்சயத்தை உண்டாக்குவீராக!
கீழே சொன்னது –அழுக்கு படிந்த மனஸ்ஸால் -ஸாதுக்கள் சேர்க்கை கிட்டா விடில்
கைங்கர்யம் கிட்டா விட்டால் -இங்கே இருக்க முடியாதே
தேகத்தை போக்கி தேவரீரே அருள வேண்டும்
ஸீதா பிராட்டி -ராக்ஷஸிகள் மத்யம் இருந்து இழந்தது போல் ஆகக் கூடாதே –
———–
ஆசார்யத்வம் தததிகமிதி க்யாத மாம்நாய முக்யை
ஏஷ ஸ்ரீ மான் பவதி பகவான் ஈஸ்வரத்வம் விஹாய
மந்த்ரம் தாதா வர வர முநே மந்த்ர ரத்னம் த்வதீயம்
தேவ ஸ்ரீ மான் வர வர முநிர் வர்த்ததே தேசிகத்வே -62-
வேத வாக்யங்களால் ஆசார்யனாக இருப்பது ஈஶ்வரத் தன்மைக்கு மேற்பட்டது எனக் கூறப்பட்டது என்று
இந்த பகவான் ஈஶ்வரத்தன்மையை விட்டு ஹே வரவரமுநியே!
உம்மிடத்தில் மந்த்ரத்தைக் கொடுப்பவராயும்
உமது த்வயத்தையும் தேவனான ஶ்ரிய:பதியாகவும் ஆசார்யனாக இருப்பதிலும் இருக்கிறார்.
—————-
ஆத்மா நாத்ம ப்ரமிதி விரஹாத் பத்யு ரத்யந்த தூரோ
கோரே தாபத்ரிதய குஹரே கூர்ண மாநோ ஐநோ அயம்
பாதச்சாயாம் வர வர முநே ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமவ ஸ்ரீ நிதே வித்யதே தே -63-
ஜீவன் ப்ரக்ருதி என்னும் அறிவில்லாமல் எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் கடுமையான
ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்று சொல்லக்கூடிய மூன்று வகையான தாபம் என்னும் பள்ளத்தில்
சுழன்று கொண்டிருக்கிற இந்த ஜநம் வரவரமுநியே! எவர் அநுக்ரஹத்தால் எம்பெருமான் திருவடி நிழலை அடைவிக்கப்பட்டதோ
அவருக்குக் கொடுக்க வேண்டியது (உமக்கு) இங்கு என்ன இருக்கிறது எம்பெருமானே!
——————
விக்யாதம் யத் ரகு குல பதே விஸ்வத ஷமா தலே அஸ்மின்
நித்யோ தக்ரம் வர வர முநே நிஸ் ஸ பத்னம் மஹத்த்வம்
பஸ்யன் நந்தஸ் ப்ரக்ருதி விவஸோ பாலிஸோ யாத்ருஸோ அயம்
தத்த்வம் தஸ்ய பிரகடயஸி மே தாத்ருசைரேவ யோகை –64-
இந்நிலவுலகில் நாற்புறங்களிலும் சக்கரவர்த்தி திருமகனுடைய எந்தப் பெருமை தினந்தோறும் வளர்ந்து
ப்ரஸித்தமாக , எதிரில்லாமல் இருக்கிறதோ அதைப் பார்த்துக்கொண்டும் குருடனான இந்த பாலன்
இந்த ப்ரக்ருதி வசமாக இருப்பவனுக்கு அவருடைய உண்மைகளை
அப்படிப்பட்ட யோகங்களாலேயே (எனக்கு) வெளிப்படுத்துகிறீர்.
—————————–
லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம்
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா –65-
வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப்
பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக
அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.
லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம் -ரஹஸ்ய த்ரய ஞானத்தால் அறிந்து –
இது அன்றோ சரம ப்ரஹ்ம ஞானம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ -அவிச்சின்னமான குரு பரம்பரை மூலம்
வந்த அஷ்டாதச ரஹஸ்ய அர்த்தங்கள்
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம் -இவற்றை அருளிச் செய்து அருளவே -ஸ்வாமி –
வேறே யாராலும் அருளிச் செய்ய முடியாதே
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா–வைபவம் எடுத்துச் சொல்லி
பக்குவம் படுத்தி பின்பு அன்றோ உபதேசம்
சித்த உபாயம் ஆச்சார்ய அபிமானமே என்று காட்டி அருளினார் –
—————-
தத்த்வம் யத்தே கிமபி தபஸா தப்யதா மப்யருஷீணாம்
தூராத் தூரம் வர வர முநே துஷ் க்ருதை காந்தி நோ மே
வ்யா குர்வாண ப்ரதிபத மிதம் வ்யக்த மேவம் தயாவாந்
நாதோ நைதத் கிமிதி க்யா பயத் யத்விதீயம் –66-
தவத்தினால் தபிக்கப்படுகிற முனிவர்களுக்கும் வெகு தூரத்திலுள்ள தத்வம் (ஆகிய தேவரீர்) பாபத்தையே
நிரம்பப் பெற்றிருக்கும் எனக்கு அடிக்கடி தயையுடன் இவ்வாறு விவரித்துக் கொண்டு நாதனாக இருக்கிறீர்.
இது என்னவென்று இந்த உலகில் ஒருவராகவே வெளிப்படுத்துகிறீர்.
—————
காலே காலே கமலஐ நு ஷாம் நாஸ்தி கல்பாயுதம் கிம்
கல்பே கல்பே ஹரி ரவ தரந் கல்பதே கின்ன முக்த்யை
ம்ருத் வாம் ருத்வா ததபி துரிதை ருத் பவந்தோ துரந்தை
அத்யாபி த்வாம் வர வர முநே ஹந்த நைவாஸ் ரயந்தே –67-
ஹே வரவரமுநியே! அந்தந்தக் காலத்தில் ப்ரஹ்மாக்களுக்குப் பதினாயிரம் கல்பம் இல்லையா,
கல்பந்தோறும் எம்பெருமான் அவதரித்து அவர்களுக்கு முக்தி அளிக்க வல்லவராகவில்லையா?
முடிவில்லாத பாபங்களால் அவர்கள் இறந்து இறந்து பிறந்து கொண்டு இப்போதும்
தேவரீரை ஆச்ரயிப்பதில்லை. மஹா கஷ்டம்! ஆச்சர்யம்!
—————–
காரா காரே வர வர முநே வர்த்தமானஸ் ஸரீரே
தாபை ரேஷ த்ரி பிரபி சிரம் துஸ் தரைஸ் தப்ய மாந
இச்சன் போக்தும் ததபி விஷயா நேவ லோக ஷுதார்த்தோ
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர் த்வாரி ப்ருத்வீ பதீ நாம் –68-
ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால்
வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு
பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.
——————–
மத்யே மாம் ஸ ஷத ஜக ஹனம் விட் புஜா மேவ போஜ்யம்
தீநோ வோடும் த்ருடமிதி வபுஸ் சேஷ்ட தே ராத்ர்ய ஹாநி
பக்நே தஸ்மிந் பரிண மதி ய பாதகீ யாத நாப்யோ
தேஹீ நித்யோ வர வர முநே கேந ஜிஜ்ஞாஸ நீய –69-
ஹே வரவரமுநியே! மத்தியில் மாம்ஸம் இரத்தம் இவைகளால் நிறைந்தும் அமேத்யத்தை ருசிப்பவர்களுக்கே
அனுபவிக்கத் தக்கதுமான இந்த உடலை சுமக்க திடமாக எண்ணி இந்த எளியவன் இரவும் பகலும் நடமாடுகிறான்.
அது முறிந்தவுடன் எந்தப் பாபி நரக வேதனைகளில் ப்ரவ்ருத்திக்கிறானோ அவனுக்கு
நிலையான உடலை யுடைய ஜீவாத்மா எவனால் அறியத்தக்கது? ஒருவரும் அதை அறிய ஆவலுடையாரில்லை என்று பொருள்.
—————-
அல்பாதல்பம் க்ஷணிகம ஸக்ருத் துஷ் க்ருதாந் யேவ க்ருத்வா
து கோதக்ரம் ஸூக மபில சந்தர் லபை ரிந்த்ரி யார்த்தை
மோகம் க்ருத்வா வர வர முநே முக்தி மூலம் ஸரீரம்
மஜ்ஜத் யந்தே தமஸி மநுஜஸ் த்வத் ப்ரியஸ் த்வத் பிரியாணாம் –70-
ஹே வரவரமுநியே! மிகவும் சிறியவையும் க்ஷணத்தில் செய்யக் கூடியவையுமான பாபங்களையே
அடிக்கடி செய்து விட்டு துக்கம் நிறைந்த ஸுகத்தை ஆசைப்பட்டு (அடைய முடியாத) இந்திரிய விஷயங்களால்
முக்திக்குக் காரணமான சரீரத்தை வீணாக்கி உமதன்பர்களுக்கு வெறுப்பை யூட்டிக் கொண்டு
அந்த தமஸ் என்னும் நரகத்தில் மூழ்குகிறான்.
——————-
பஸ்யன் நேவம் ப்ரபவதி ஜநோ நேர்ஷ்யிதும் த்வத் ப்ரபாவம்
பிராஜ்ஜை ருக்தம் புனரபி ஹ சந்தர்ச யத் யப்ய ஸூ யாம்
நஸ்யத்வஸ் மிந் வர வர முநே நாத யுக்தம் ததஸ்மிந்
ப்ரத்யக்ஷம் தத் பரிகலயிதும் தத்வம் அப்ராக்ருதம் தே- 71-
பார்த்துக் கொண்டிருக்கும் போதே உமது பெருமையை அறிய முடியவில்லை.
பெரியோர்கள் சொல்லக் கேட்டுச் சிரித்துக் கொண்டு பொறாமையைக் காட்டுகிறான்.
நாதா வரவரமுநியே இப்படி இவன் அழிகிறான். அது இவனிடத்தில் யுக்தமே.
ஏனென்றால் உமது அப்ராக்ருதமான உண்மையை இந்த்ரியங்களால் அறியப் போகாதல்லவா?
—————
சத்த்வ உன்மேஷ பிரமுஷித மன கல்மஷை சத்த்வ நிஷ்டை
சங்கம் த்யக்த்வா சகலமபி ய ஸேவ்யஸே வீத ராகை
தஸ்மை துப்யம் வர வர முநே தர்சயன் நப்ய ஸூயாம்
கஸ்மை க்ருத்வா கிமிவ குமதி கல்பதா மிஷ்டி ஸித்த்யை –72-
ஸத்வ குண வளர்ச்சியால் அபஹரிக்கப்பட்ட மன மலங்களையுடைய ஸத்வ நிஷ்டர்களால்,
எல்லாப் பற்றையும் விட்டு ஆசையற்றவர்களால் ஸேவிக்கப்படுகிற உமது விஷயத்தில்
பொறாமையைக் காட்டிக் கொண்டு கெட்ட புத்தியுள்ள நான் யாருக்கு இஷ்டமானதைச் செய்ய வல்லவன்?
—————–
திவ்யம் தத்தே யதிஹ க்ருபயா தேவ தேவோப திஷ்டம்
தத்த்வம் பூயாத் வர வர முநே சர்வ லோகோ பலப்யம்
வ்யக்தே தஸ்மிந் விதததி பவத் வைபவத் வேஷினோ யே
த்வேஷம் த்யக்த்வா ஸபதி துரி தத்வம்ஸி நீம் த்வத் ஸ பர்யாம் –73-
ஹே வரவரமுநியே! எல்லா ஜனங்களாலும் அறியக்கூடிய எம்பெருமானால் க்ருபையுடன் உபதேசிக்கப்பட்ட
உமக்குத் தத்வமுண்டாக வேணும். வ்யக்தமான அந்தத் தத்வத்தில் உமது பெருமையை த்வேஷிக்கிறவர்கள்
உடனே பாபத்தைப் போக்குகின்ற உமது பூஜையை த்வேஷத்தை விட்டுச் செய்கிறார்கள்.
————–
கேசித் ஸ்வைரம் வர வர முநே கேஸவம் ஸம்ஸ்ர யந்தே
தாநப் யந்யே தமபி ஸூதி யஸ் தோஷ யந் த்யாத்ம வ்ருத்த்யா
த்வத்தோ நான்யத் கிமபி சரணம் யஸ்ய சோயம் த்வதீயோ
ப்ருத்யோ நித்யம் பவதி பவத ப்ரேயசாம் ப்ரேம பாத்ரம் -74-
ஹே வரவரமுநியே சிலர் தாமாகவே எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள்.
அவர்களையும் எம்பெருமானையும் பிற புத்திமான்கள் தமது கர்மத்தால் மகிழ்ச்சி அடையச் செய்கிறார்கள்.
உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இல்லாத எனக்கு மிக்க அன்புக்குரியவராயிருக்கிறீர்.
—————-
தீநே பூர்ணாம் பவதநு ச ரே தேஹி த்ருஷ்டிம் தயாஸ் அர்த்த்ராம்
பக்த் யுத்கர்ஷம் வர வர முநே தாத்ருசம் பாவ யந்தீம்
யேந ஸ்ரீ மன் த்ருத மஹ மித ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம்
த்வத் விஸ்லேஷே தநு விரஹித ஸ் தத்ர லீநோ பவேயம்–75-
ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.
————
த்வத் பாதாப்ஜம் பவது பகவன் துர்லபம் துஷ் க்ருதோ மே
வாஸோ அபி ஸ்யாத் வர வர முநே தூரதஸ் த்வத் பிரியாணாம்
த்வத் வைமுக்யாத் விபல ஜனஷோ யோ புனஸ் தூர்ண மேஷாம்
தூரீ பூத க்வசன கஹநே பூர்ண காமோ பவேயம் -76-
மஹா பாபியான அடியேனுக்கு தேவரீர் திருவடித் தாமரை துர்லபமாகவே இருக்கட்டும்.
அடியேனுக்கு வாஸமோ உமது பக்தர்களுக்கு வெகு தூரத்திலேயே அமையட்டும்.
எவர்கள் உம்மிடத்தில் பராங் முகமாயிருந்து பிறந்த பயனை வீணாக்குகிறார்களோ அவர்களுக்கு
வெகு தூரத்தில் எங்காவது காட்டில் இருந்து கொண்டு என் விருப்பம் நிறைந்தவனாக வேணும்.
—————
ஸிம்ஹ வியாக்ரவ் ஸபதி விபிநே பன்னக பாவகோ வா
குர்யு ப்ராணாந்தக மபி பயம் கோ விரோதஸ் ததோ மே
நைதே தோஷ க்ரஹண ருசயஸ் த்வத் ப்ரியைர் நிர் நிமித்தை
நா நா ஜல்பைர் வர வர முநே நாசயந்த் யந்திகஸ் தாந் -77-
புலி சிங்கம் ஸர்ப்பம் நெருப்பு இவைகள் காட்டில் உடனே எனக்கு உயிருக்கு ஆபத்தைக் கொடுத்தாலும்
அவைகளிடத்தில் எனக்கு பயம் ஏது? வரவரமுநியே! குற்றங்களைக் காணும் இவர்கள் உமக்குப் ப்ரியமில்லாத,
காரணமற்ற பல வாதங்களால் அருகிலுள்ளவர்களை அழிப்பதில்லை.
————–
த்வத் ப்ருத்யா நா மநுஜதி யஸ் ஸர்வதோ ப்ருத்ய க்ருத்யம்
தத் ப்ருத்யா நாமபி லக்ஷதி யஸ் தாத்ருசம் ப்ரேஷ்ய பாவம்
மத் ப்ருத்யோ அஸாவிதி மயி ஸ சேத்ஸாநு கல்பைர பாங்கை
க்ஷேமம் குர்யாத் வர வர முநே கிம் புனஸ் ஸிஷ்யதே மே –78-
எல்லா விதத்திலும் எவர்கள் தேவரீரிடத்தில் அடிமைத் தொழில் புரிகிறார்களோ அவ்வடியவர்களிடத்தில்
அடிமையை எவர் விரும்புகிறார்களோ அவர் அடியேனை இவன் நமது அடியவன் என்று
தயையுடன் கடாக்ஷிப்பாரானால் அதுவே க்ஷேமகரம். அடியேனுக்கு வேறு என்ன தேவை?
———————
க்வா அஹம் ஷுத்ர குலிச ஹ்ருதயோ துர்மதி க்வாதம சிந்தா
த்ரை யந்தா நம ஸூலப தரம் தத் பரம் க்வாஸ் ஆத்ம தத்த்வம்
இத்தம் பூதே வர வர முநே யத் புனஸ் ஸ்வாத்ம ரூபம்
த்ரஷ்டும் தத் தத் சமய ஸத்ருசம் தேஹி மே புத்தி யோகம் -79-
மிகவும் அல்பனான நான் எங்கே! உறுதியான நெஞ்சும் கெட்ட புத்தியும் உள்ளவன் ஆத்ம சிந்தை எங்கே!
உபநிஷத்துகளுக்கே துர்லபமான ஆத்ம தத்வம் எங்கே! ஹே வரவரமுநியே!
நிலைமை இவ்வாறிருக்கும் போது ஸ்வாத்ம ரூபத்தை அறிவதற்கு
அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு புத்தியை அளிப்பீராக.
————-
பரம பக்தி -பிரிந்தால் ஸஹியாமை
சோடும் தாத்ருக்ரகு பரி வ்ருடோ ந ஷமஸ் த்வத் வியோகம்
ஸத்ய காங்ஷந் வர வர முநே ஸந்நிகர்ஷம் தவைஷ
சாயம் ப்ராதஸ் தவ பத யுகம் ஸஸ்வதுத் திஸ்ய திவ்யம்
முஞ்சன் பாஷ்பம் முகுலித கரோ வந்ததே ஹந்த மூர்த் நா –80-
ச்ரேஷ்டரான ஹே வரவரமுநியே! உமது பிரிவை ஸஹியாதவராக உடனே உமது ஸேவையை விரும்பி
ஸாயங்கால வேளையிலும் காலை வேளையிலும் உமது இரண்டு திருவடிகளையும் உத்தேசித்து
அடிக்கடி கண்ணீர் பெருக்கிக்கொண்டு கைகூப்பிய வண்ணம் சிரஸ்ஸால் வணங்குகிறார். ஆச்சர்யம்!
தனக்கு இந்த நிலைமை சக்ரவர்த்தி திரு மகன் அறிவித்தது
மா முனிகளை விட்டுப் பிரிய முடியாமல் பெருமாள் தரிக்க முடியாமல்
தலை மேல் கை கூப்பி அஞ்சலி பண்ணி இந்த நிலைமை அருளப் பிரார்திக்கிறார் இதில்
————-
அந்தஸ் தாம்யன் ரகுபதி ரஸா வந்திகே த்வாம த்ருஷ்ட்வா
சிந்தாக் ராந்தோ வர வர முநே சேதஸோ விஸ்ரமாய
த்வன் நாமைவ ஸ்ருதி ஸூகமிதி ஸ்ரோது காமோ முஹுர் மாம்
க்ருத்யைர் அந்யை கிமிஹ ததிதம் கீர்த்தயேதி ப்ரவீதி –81-
மனதிற்குள் தபித்துக் கொண்டிருக்கும் இந்த ரகுபதி அருகில் உம்மைக் காணாமல் கவலை யுற்றவராக,
உள்ளம் ஆறுதலடைய வந்து உமது திருநாமமே காதுக்கு இனிமையானது என்று கேட்க விரும்பியவராக,
அடிக்கடி வேறு வ்யாபாரங்களால் என்ன பயன்? அந்தத் திருநாமத்தையே கூறுவாயாக என்று சொல்லுகிறார்.
பிரிவால் -பெருமாள் -வருந்தி உமது திருநாமம் கேட்க ஆசைப்பட்டான்
ம்ருத் ஸஞ்சீவியான ராமரையும் உமது திரு நாமமே கேட்க ஆசைப்படுகிறான்
————–
புங்க்தே நைவ ப்ரதம கவலே யஸ் த்வயா நோப புக்தே
நித்ரா நைவ ஸ்ப்ருஸதி ஸூஹ்ருதம் த்வாம் விநா யஸ்ய நேத்ர
ஹீநோ யேந த்வமஸி சலிலோத் ஷிப்தமீநோப மாந
கோ அசவ் சோடும் வர வர முநே ராகவஸ் த்வத் வியோகம் -82-
ஹே வரவரமுநியே! உம்மால் அநுபவிக்கப் படாத போது முதல் கவளத்தில் எவன் அநுபவிக்கிறதில்லையோ,
நண்பனான உம்மை விட்டு எவர் கண்களைத் தூக்கம் தொடுவதில்லையோ எவர் நீர் இல்லாமல்
ஜலத்திலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்போல் துடிக்கிறாரோ –
உமது பிரிவைப் பொறுக்கவல்ல இந்த ராகவன் யார்?
இளைய பெருமாளை விட்டுப் பிரியாமல் முன்பு இருந்தது போல்
தூங்காமல் உண்ணாமல் –
அக்குளத்து மீன் –
இவரது முன் அவதார லீலைகள் கைங்கர்யங்கள் எல்லாம் பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் மேல்
————-
பத்ரம் மூலம் சலிலமபி யத் பாணி நோபாஹ்ருதம் தே
மாத்ரா தத்தாதபி பஹு மதம் பத்யுரே தத்ர கூணாம்
ஸாகா கேஹம் சம ஜநி விபோ ஸம்மதம் சவ்த ஸ்ருங்கம்
பூத்வா வாஸோ மஹதபி வனம் போக பூமிஸ் த்வயா அபூத் -83-
ஹே வரவரமுநியே! உமக்குக் கையால் அளிக்கப்பட்ட இலையாகிலும் புஷ்பமாகிலும் ஜலமேயாகிலும்
தாயால் அளிக்கப் பட்டதைவிட மேலாக எண்ணப்பட்டது.
இது ஸ்ரீராமனுக்கு விளையாடுகிற வீடு மாளிகையாகி பெரிய காடும் உம்முடன் வாழ போக பூமியாகிவிட்டது.
—————
அத்வஸ் ராந்திம் ஹரஸி சரஸை ரார்த்ர ஸாகா ஸமீரை
பாதவ் ஸம் வாஹயஸி குருக்ஷே பர்ண ஸாலாம் விஸாலாம்
போஜ்யம் தத்வா வர வர முநே கல்பயன் புஷ்ப ஸய்யாம்
பஸ்யன் தன்யோ நிசிர குபிதம் பாஸி பத்நீ ஸஹாயம் -84-
ஹே வரவரமுநியே!
ஈரமான கிளைகளில் பட்டு வருகின்ற ரஸத்துடன் கூடிய காற்றால் வழி நடந்த ச்ரமத்தைப் போக்குகின்றீர்;
பாதங்களைப் பிடிக்கின்றீர்; விசாலமான பர்ணசாலையை அமைக்கின்றீர்.
உணவை அளித்து இரவில் புஷ்பப் படுக்கையை ஏற்படுத்தி தேவிகளுடனிருக்கும் ஸ்ரீ ராமனைக் கண்டு
புண்ய சாலியாக ரஸித்துக் கொண்டிருக்கிறீர்.
——————–
பஸ்யன் நக்ரே பரிமித ஹிதஸ் நிக்த்த வாக் வ்ருத்தி யோகம்
ஸத்ய சோக ப்ரச மந பரம் சாந்த்வயந்தம் பவந்தம்
ப்ராஞ்ஜோ ஜஜ்ஜே ஸ கலு பகவான் தூய மாநோ வநாந்தே
பஸ்சாத் கர்த்தும் வர வர முநே ஜாநகீ வி ப்ரயோகம் –85-
ஹே வரவரமுநியே! சுருக்கமும், ஹிதமும், அன்பும் நிறைந்த, (வார்த்தை) தற்சமயம் சோகத்தைக் குறைக்க வல்ல
நல்வார்த்தை கூறுகிற உம்மை எதிரில் பார்த்து அந்த பகவானான ஸ்ரீராமனே
காட்டில் வருந்துபவராக இருந்தும் பிராட்டியின் பிரிவை மறைப்பதற்கு அறிஞராக ஆனார்.
—————–
ஸூக்ரீவோ நஸ் சரணமிதி யத் ஸூந் ருதம் ப்ரா துரர்த்தே
பம்பா தீரே பவந ஜநுஷா பாஷிதம் சோபதே தே
காலா தீதே கபி குல பதவ் தேவ தத்ரைவ பஸ்சாத்
சாபம் தூந் வந் வர வர முநே யத் பவாந் நிக்ரஹே அபூத் -86-
ஹே வரவரமுநியே! தம் ப்ராதாவுக்காக எங்களுக்கு ஸுக்ரீவன் ரக்ஷகனாக வேண்டும் என்று
பம்பைக் கரையில் வாயு குமாரனான ஹநுமானுடன் வார்த்தை அழகாக இருக்கிறது.
காலம் கடந்தபின் அந்த ஸுக்ரீவனிடத்தில் அங்கேயே பிறகு வில்லை அசைத்துக்கொண்டு
அவனை அடக்குவதில் முயற்சி உள்ளவராக ஆனீர்.
——————–
யஸ்மின் ப்ரீதிம் மதபிலஷிதாம் ஆர்ய புத்ரோ விதத்தே
யேநோ பேத ஸ்மரதி ந பிதுஸ்ஸோ அதி வீரோ கதிர் மே
இத்யேவம் த்வாம் ப்ரதி ரகுபதி ப்ரேயஸீ சந்தி ஸந்தீ
வ்யக்தம் தேவீ வர வர முநே தத்த்வமாஹ த்விதீயம் –87-
ஹே வரவரமுநியே! ஸ்ரீ ஸீதாப்பிராட்டி உம்மைப் பற்றிக் கூறுவது:
பெருமாள் எனக்குப் ப்ரியமான அன்பை எவரிடத்தில் செலுத்துவாரோ,
எவருடன் கூடிய போது தம் தந்தையையும் நினைப்பதில்லையோ, அப்படிப் பட்ட வீரரே எனக்குக் கதி ஆகிறார்–
என்று உம்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். வெளிப்படையான உமது விஷயமான உண்மையைக் கூறுகிறார்.
————-
பாணைர் யஸ்ய ஜ்வலந வதநைர் வாஹிநீ வாநராணாம்
வாத்யாவேக ப்ரமித ஜல தஸ்தோம சாதரரம்ய மேதி
ஸோ அயம் பக்நோ வர வர முநே மேக நாதஸ் சரைஸ் தே
ரஷோ நாத கத மிதி ரதா ஹன்யதே ராகவேண–88-
அக்நியை முகத்தில் வைத்துக் கொண்டுள்ள எவருடைய பாணங்களால் வாநரங்களுடைய சேனை
சுழற்காற்றின் வேகத்தால் சுழற்றப்பட்ட மேகக் கூட்டங்களின் ஸாம்யத்தைப் பெறுகிறதோ
அப்படிப்பட்ட இந்த்ரஜித் உம்மால் கொல்லப்பட்டான்.
இல்லா விட்டால் ராமனால் எப்படி ராவணன் கொல்லப்படுவான்?
———–
ப்ருத்வீம் பித்வா புனரபி திவம் ப்ரேயசீ மஸ்நு வாநாம்
த்ருஷ்ட்வா ஸ்ரீ மத் வதந கமலே தத்த த்ருஷ்ட்டி ப்ரஸீதந்
ப்ரேமோ தக்ரைர் வர வர முநே ப்ருத்ய க்ருத்யை ஸ்த்வதீயை
நீத ப்ரீதம் ப்ரதி தின மஸவ் சாஸிதா நைர் ருதீ நாம் -89-
ஹே வரவரமுநியே! மறுபடி பூமியைப் பிளந்து கொண்டு ஸ்வர்கத்தை அடைகின்ற காதலியைப் பார்த்துக் கொண்டு
ஒளி வீசுகின்ற முகத் தாமரையைப் பார்த்துக் கொண்டு அன்பு நிறைந்த உமது அடிமைக் கார்யங்களால்
அரக்கர்களுக்கு சிக்ஷகரான இந்த ஸ்ரீராமர் தினந்தோறும் ப்ரீதியை அடைவிக்கப் படுகிறார்.
—————-
ஸோ தர்யேஷு த்வமஸி தயிதோ யஸ்ய ப்ருத்யஸ் ஸூஹ்ருத்வா
ஸோட வ்யோ அபூத் த்வயி ஸஹ சரே ஜானகீ வி ப்ரயோக
த்யாயன் த்யாயன் வர வர முநே தஸ்ய தே விப்ரயோகம்
மன்யே அநித்ரா மரதி ஜனி தாம் மா நயத்யக்ராஜோ அயம் -90-
எவருடைய நண்பனோ பணியாளோ அந்த ராமனுக்கு ஸஹோதரர்களில் நீர் அன்புக்குரியவர் ஏனென்றால்
நீர் உடன் இருக்கும் போது பிராட்டியின் பிரிவு அவருக்குப் பொறுக்கத் தக்கதாக இருந்தது.
ஹே வரவரமுநியே! உமது பிரிவை நினைத்து நினைத்து வெறுப்பாலுண்டான நித்ரையாக
இந்த மூத்த ஸஹோதரர் கௌரவிக்கிறார்.
—————-
முக்த்தா லோகம் முக மநு பவந் மோததே நைவ தேவ்யா
ஸ்நிக்த்தா லாபம் கபி குல பதிம் நைவ சிஞ்சத்ய பாங்கை
த்வாமே வைகம் வர வர முநே சோதரம் த்ரஷ்டு காமோ
நாதோ நைதி க்வசிதபி ரதிம் தர்சனே யூத பாநாம் -91-
அழகிய பார்வையுடன் கூடிய தேவியான பிராட்டியின் முகத்தை அநுபவித்து ஸந்தோஷிப்பதில்லை.
அன்பு நிறைந்த பேச்சாளரான ஸுக்ரீவனையும் கடாக்ஷங்களால் நனைப்பதில்லை.
ஹே வரவரமுநியே! உம்மை ஒருவரையே, ஸஹோதரனை, பார்க்க விரும்பி முதலிகள் தலைவரான
ஸ்ரீராமன் ஓரிடத்திலும் மகிழ்ச்சியைப் பெறுவதில்லை.
————-
ஏவம் தேவ ஸ்வயம் அபி லக்ஷன் நேஷ தே சேஷ வ்ருத்திம்
ஜஜ் ஜே பூயஸ் த்வதநு ஜகதா நந்தநோ நந்த ஸூநு
தூரீ பாவம் வர வர முநே துஸ் ஸஹம் பூர்வஜ ஸ்தே
தன்ய ஸ் த்யக்த்வா தயது ந சிராச் சாஷுஷா ராகவஸ் த்வாம் –92-
இந்த மாதிரி தேவரான ஸ்ரீராமர் தாமாகவே செய்ய விரும்பி மறுபடி உலகத்துக்கு ஆனந்தத்தை
அளிக்க வல்ல நந்தகுமாரனாக ஆனார். ஹே வரவரமுநியே! பொறுக்க முடியாத இந்தப் பெருமையை
உமது தமையனான ஸ்ரீராமர் விட்டுக் கண்ணால் உம்மை மகிழ்விக்கட்டும்.
————–
பாரம் பாயம் ப்ரணய மதுரே பாத பத்மே த்வதீயே
பஸ்யேயம் தத் கிமபி மனஸா பாவ யந்தம் பவந்தம்
காம க்ரோத ப்ரக்ருதி ரஹிதை காங்ஷி தத்வத் ப்ரஸாதை
சத்பிஸ் சாகம் வர வர முநே ஸந்ததம் வர்த்தி ஷீய -93-
அன்பு கனிந்த உமது திருவடித் தாமரையைப் பருகிப் பருகி, எதையோ மனத்தால் நினைத்துக் கொண்டிருக்கும்
உம்மைப் பார்க்க வேண்டும். காமத்துக்கும் கோபத்துக்கும் ப்ரக்ருதியில்லாத, வேண்டிய
உமது அருள் பெற்ற நல்லவர்களோடு எப்போதும் இருக்கவேண்டும், வரவரமுநியே!
——————
பஸ்யத் வேநம் ஜனக தனயா பத்ம கர்பைர பாங்கை
ப்ராரப்தாநி பிரசமயது மே பாகதேயம் ரகூணாம்
ஆவிர் பூயா தமல கமலோ தக்ர மஷனோ பதம் மே
திவ்யம் தேஜோ வர வர முநே தேவ தேவ த்வதீயம் –94-
என்னைப் பிராட்டி குளிர்ந்த கடாக்ஷங்களால் பார்க்கவேண்டும்.
ஸ்ரீராமர் எனது ப்ராரப்த பாபங்களை ஒழிக்கட்டும். வரவரமுநியே!
எனது கண்களுக்கு உமது நிர்மலமான தாமரை போன்ற ஒளி எதிரில் எப்போதும் தோன்றுவதாக.
————–
ராம ஸ்ரீமான் ரவி ஸூத சகோ வர்த்ததாம் யூத பாலை
தேவீ தஸ்மை திசது குசலம் மைதிலீ நித்ய யோகாத்
சாநுக் ரோஸோ ஜயது ஜநயன் ஸர்வதஸ் தத் ப்ரஸாதம்
ஸுவ்மித்ரிர் மே ச கலு பகவான் ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -95-
ஸுக்ரீவ நண்பனான அந்த ஸ்ரீராமர் வாநர முதலிகளுடன் ஓங்கட்டும்.
நித்யம் உடனிருந்து பிராட்டி க்ஷேமத்தை அளிக்கட்டும்.
எல்லா வகையிலும் அவர் அருள் கூடிய ஸுமித்ரா புத்ரரான (உமக்கு) மணவாள மாமுனிகளுக்கு வெற்றி உண்டாகட்டும்.
————-
யஸ் மாதே தத்ய துபநிக்ஷ தாம ப்ரமேயம்
குர்வாணஸ் தத் ஸகல ஸூலபம் கோமலை ரேவ வாக்யை
நீ ரோகஸ் த்வம் வரத குருணா நித்ய யுக்தோ தரித் ரீம்
பாஹி ஸ்ரீ மான் வர வர முநே பத்ம யோ நேர்த்தி நாநி –96-
ஹே ஸ்ரீமானான வரவரமுநியே! எதிலிருந்து இந்த உலகம் ஏற்பட்டதோ,
எது உபநிஷத்துகளுக்கும் எட்டாத விஷயமோ அதை ம்ருதுவான வார்த்தைகளால் எல்லாருக்கும்
எளிதாக்கிக் கொண்டு நீர் ரோகமற்றவராக வரத குருவுடன் நித்யமாகச் சேர்ந்து கொண்டு
இந்த பூமியை ப்ரஹ்மா ஆயுள் உள்ளவரை பாலநம் செய்வீராக.
—————-
அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97
மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள்,
சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள்,
அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –
இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்க வேண்டும்.
—————
வர வர முநி வர்ய சிந்தா மஹந்தா முஷம் தாவ கீம்
அவிரத மநு வர்த்த மாநாநு மாநாவ மாநாநி மாந்
நிருபதி பத பக்தி நிஷ்டாந நுஷ்டாந நிஷ்டாந ஹம்
பிரதிதி நமநு பூய பூயோ ந பூயா ஸமாயா ஸ பூ –98-
வரவரமுநியே! உமது விஷயமான சிந்தையை எப்போதும் அநுபவித்துக் கொண்டு ஓயாது
அஹங்காரம் அவமானம் இவைகளை விட்டு உமது திருவடிகளில் பக்தி செலுத்துகின்ற அநுஷ்டான நிஷ்டர்களான
இந்த பாகவதர்களை தினந்தோறும் அநுபவித்துக் கொண்டு மறுபடியும்
ச்ரமத்துக்குக் காரணம் ஆகாதவனாக ஆகக் கடவேன்.
————–
வர வர முநி வர்ய பாதா வுபாதாய ஸுவ்தாமி நீ
விலஸித விப வேஷு வித்தேஷு புத்ரேஷு முக்தே ஷ ணா
கதி சந யதி வர்ய கோஷ்டீ பஹிஷ் டீ க்ருதஷ்டீ வநா
விஜஹதி ஜநி ம்ருத்யு நித்யாநு வ்ருத்த்யா ய தத்யாஹிதம் –99-
வரவரமுநியே! உமது திருவடிகளைச் சரணமாக ஏற்று, மின்னல் போல் விளங்குகிற பெருமைகளிலும்,
தனங்களிலும், புத்ரர்களிடத்திலும் ஆசையை விட்டவர்களுக்கு
எம்பெருமானாருடைய கோஷ்டியிலிருந்து கொண்டு சிலர்
பிறவி மரணம் இவை தொடர்ந்து வருவதால் ஏற்படும் பயத்தை விடுகிறார்கள்.
—————
நிரவதி நிகமாந்த வித்யா நிஷத்யா நவத்யா சயா ந்
யதிபதி பத பத்ம பந்தாநு பந்தாநு சந்தாயிந
வர வர முநி வர்ய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்தி ந
ப்ரதிதி நமநு பூய பூயோ ந பூயா ஸமாயா ஸ பூ –100-
எல்லையற்ற வேதாந்த வித்யையைக் கற்றவர்களும், குற்றமற்ற மனம் படைத்தவர்களும்,
எதிராசருடைய திருவடித் தாமரைகளில் ஸம்பந்தத்தை தினந்தோறும் நினைப்பவர்களும் (ஆன) –
ஹே வரவரமுநியே! உமது ஸம்பந்தம் பெற்றவர்களையும் தினந்தோறும் அநுபவித்துக் கொண்டு
மறுபடி ஆயாஸத்தை அடைந்தவன் ஆக மாட்டேன்.
————————
யந் மூல மாஸ்வ யுஐமாஸ் யவதார மூலம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ
ஆஸீத ஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா
மூலம் ததேவ ஜகதப் யுதயைக மூலம் –101-
கருணைக் கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில்
எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ –
அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று,
அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது.
யந் மூலம் ஆஸ்வ யுஐமாஸ் யவதார மூலம் -ஐப்பசி மூலம் திரு அவதாரம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ -கருணைக் கடலாகவே அன்றோ தேவரீர்
ஆஸீத் அஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா -அசத்துக்களில் கடை நிலையில் உள்ள
அடியேனைக்கூட சத்தாக்கி-அருளிய திரு நக்ஷத்ரம்
மூலம் ததேவ ஜகத் அப்யுதயைக மூலம்-ஜகம் உஜ்ஜீவனத்துக்கு மூலம்
மந்த மதியில் உள்ள மானிடரை வானில் உயர்த்தவே அவதாரம்
————-
யதவதரணமூலம் முக்தி மூலம் ப்ரஜானாம் |
சடரிபு முநி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் ||
கலி கலுஷ ஸமூலோன் மூலனே மூலமேதத் |
ஸ பவது வரயோகீ ந: ஸமர்த்தார்த்த மூலம் || 102
எந்த வரவரமுநி அவதாரத் திருநக்ஷத்ரமான மூலமானது ப்ரஜைகளுடைய முக்திக்கு காரணமாகவும்,
நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்தியான ஸாம்ராஜ்யத்துக்கு மூலமாகவும்
கலியுகத்தால் ஏற்பட்ட பாபத்தை வேருடன் களையக் கூடியதாகவும் இருக்கிறதோ
அப்படிப்பட்ட மணவாளமாமுனிகள் நமக்கு எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிறார்.
——————-
மூலம் ஸடாரி முக ஸூக்தி விவேச நாயா
கூலம் கவேரது ஹிதுஸ் சமுபாக தஸ்ய
ஆலம்ப நஸ்ய மம ஸுவ்ம்ய வரஸ்ய ஜந்ம
மூலம் விபாதி சதுலம் விதுலஸ் ச சித்ரம் –103-
ஆழ்வாருடைய திருமுகத்திலுதித்த வாக்குகளைப் பரிசீலிப்பதற்குக் காரணமாயும்
காவேரி நதியின் கரையை அடைந்த எனது ஆலம்பனமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய
அவதாரமான மூல திருநக்ஷத்ரம் துலா மாதத்துடன் கூடி நிகரற்றதாக, ஆச்சர்யமாக இருக்கிறது.
————-
ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –104-
உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.
வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும்.
வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.
————–
படதி சதக மேதத் ப்ரத் யஹம் ய ஸூ ஜநாந்
ஸ ஹி பவதி நிதாநம் ஸம்பதா மீப்ஸிதா நாம்
பிரசமயதி விபாகம் பாதகா நாம் குரூணாம்
ப்ரதயதி ச நிதாநம் பார மாப்தும் பவாப்தே –105-
எந்த நற் பிறவி எடுத்தவன் இந்த நூறு ச்லோகங்களையும் தினந்தோறும் படிக்கிறானோ அவனுக்கு,
இது விருப்பமான ஸம்பத்துகளுக்குக் காரணமாகிறது. பெரிய பாபங்களுடைய பரிபாக தசையைத் தணிக்கிறது.
ஸம்ஸார ஸாகரத்தின் கரையைக் கடக்க முக்ய காரணமாகத் திகழ்கிறது.
அர்த்த அனுசந்தானம் வல்லவர்களுக்கு
பிரதம மத்யம சரம நிலைகளை இவர்களும் கிடைக்கும்
இவர்கள் கடாக்ஷத்தால் மற்றவர்களுக்கும் அருளுவார்
ஸித்த உபாய நிஷ்டர்கள் இங்கே இருக்கும் வரை கைங்கர்யம் செய்ய வேண்டியதை அருளும்
பாபங்கள் கழியும் -ஸம்ஸார கடல் கடத்தும் -ஞானம் பரப்பும் படி ஆவார்கள்
————-
அநுதிந மந வத்யை பத்ய பந்தை ரமீபி
வர வர முநி தத்துவம் வியக்த முத்தோஷ யந்தம்
அநு பத மநு கச்சன் ந ப்ரமேய ஸ்ருதீ நாம்
அபி லஷிதம சேஷம் ஸ்ரூயதே சேஷ ஸாயீ –106-
தினந்தோறும் குற்றமற்ற இந்த ச்லோகங்களால் மணவாள மாமுனிகளுடைய உண்மையை
வெளிப்படையாகப் ப்ரகாசிப்பித்து க்கொண்டு அடி தோறும் பின் தொடர்ந்து கொண்டு
வேதங்களுடைய அப்ரமேயமான வஸ்து(வான) ஸேஷ சாயீ கேட்கப் படுகிறார்.
ஸ்ரீ ரெங்க நாதனே இப்பலன்களை அளித்து அருளுவான்
நமக்கு ஆசை இருந்தால் மட்டும் போதும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்
———
இதி வர வர முநி சதகம் ஸமாப்தம்
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply