உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் ஸ்ரீ பாணினி.
‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக,
வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு
சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர்.
அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார்.
அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார்.
இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று
எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீ பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார்.
மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள்.
உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான்.
அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-
ப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்ப வித்யா பரிக்ரஹான்
ஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே
க்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா
ஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே––ஸ்ரீ பர்த்ருஹரி
“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள
முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப் பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர்,
எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று ஸ்ரீ பர்த்ருஹரி புகழ் மாலை சூட்டினார்
காகங்களும் ‘டேக்கா’ கொடுக்கும் மாணவர்களும்
யதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி
ஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா
காகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத
மாணவர்கள் காக்கைக் குளியல் குளித்தவர்களே .
———–
ஆசிரியர் உறவு முறை பற்றி ஒரு உதாரணம் தருகிறார்
சிஷ்யாஹா சத்ரவத் சாத்யாஹா சிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச
‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக் கொள்ள வேண்டும்’
————-
ஏழு விஷயங்கள் ஒருவனின் கவலையை உடனடியாகத் தீர்க்கக் கூடியவை யாகும்.
அவை யாவை?
பண்டிதர்களின் சபை
மஹாபாரதம்
நல்ல கவிதையைப் படிப்பது
வாத்திய இசை
அருமையான பாட்டு
அன்பான மனைவி
நல்ல நண்பன்
இந்த ஏழும் இருப்பின் கவலை ஏது?
இதைக் கூறும் ஸ்ரீ ஸூபாஷிதம் இதோ:
வித்வத் கோஷ்டி பாரதம் காவ்ய சிந்தா தந்த்ரி வாத்யம் சுப்ரயுக்தம் கேயம் |
இஷ்டா பார்யா தத்சமானம் ச மித்ரம் சத்ய: சோகம் நாசயந்தீஹ சப்த ||
——————
ஒருவனுக்கு ஏழு ஸகாரம் இருந்தால் கவலையே இருக்காது. அந்த ஏழு ‘ஸ’காரங்கள் எவை தெரியுமா?
1-ஸம்பத்
2-ஸரஸ்வதி
3-ஸத்யம்
4-ஸந்தானம்
5-ஸதனுக்ரஹ:
6-ஸத்தா
7-ஸுக்ருதஸம்பார:
செல்வம், நல்ல கல்வி, சத்யம், நல்ல புத்திரர்கள்,நல்லோரின் ஆசீர்வாதம், இருத்தல், புண்யத்தின் சேர்க்கை
இந்த ஏழும் இருந்தால் கவலை தான் ஏது? இவை கிடைப்பது துர்லபம் தான்!
இதைக் கூறும் ஸ்ரீ ஸூபாஷிதம் இதோ:-
ஸம்பத்ஸரஸ்வதி ஸத்யம் ஸந்தானம் ஸதனுக்ரஹ: |
ஸத்தா ஸுக்ருதசம்பார: ஸகாரா: ஸப்த துர்லபா: ||
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply