ஶ்ரீப⁴க³வானுவாச
கர்மணா தை³வநேத்ரேண ஜந்துர்தே³ஹோபபத்தயே .
ஸ்த்ரியா꞉ ப்ரவிஷ்ட உத³ரம்ʼ பும்ʼஸோ ரேத꞉ கணாஶ்ரய꞉ .. 1..
கலலம்ʼ த்வேகராத்ரேண பஞ்சராத்ரேண பு³த்³பு³த³ம் .
த³ஶாஹேன து கர்கந்தூ⁴꞉ பேஶ்யண்ட³ம்ʼ வா தத꞉ பரம் .. 2..
மாஸேன து ஶிரோ த்³வாப்⁴யாம்ʼ பா³ஹ்வங்க்⁴ர்யாத்³யங்க³விக்³ரஹ꞉ .
நக²லோமாஸ்தி²சர்மாணி லிங்க³ச்சி²த்³ரோத்³ப⁴வஸ்த்ரிபி⁴꞉ .. 3..
சதுர்பி⁴ர்தா⁴தவ꞉ ஸப்த பஞ்சபி⁴꞉ க்ஷுத்த்ருʼடு³த்³ப⁴வ꞉ .
ஷட்³பி⁴ர்ஜராயுணா வீத꞉ குக்ஷௌ ப்⁴ராம்யதி த³க்ஷிணே .. 4..
மாதுர்ஜக்³தா⁴ன்னபாநாத்³யைரேத⁴த்³தா⁴துரஸம்மதே .
ஶேதே விண்மூத்ரயோர்க³ர்தே ஸ ஜந்துர்ஜந்துஸம்ப⁴வே .. 5..
க்ருʼமிபி⁴꞉ க்ஷதஸர்வாங்க³꞉ ஸௌகுமார்யாத்ப்ரதிக்ஷணம் .
மூர்ச்சா²மாப்னோத்யுருக்லேஶஸ்தத்ரத்யை꞉ க்ஷுதி⁴தைர்முஹு꞉ .. 6..
கடுதீக்ஷ்ணோஷ்ணலவணரூக்ஷாம்லாதி³பி⁴ருல்ப³ணை꞉ .
மாத்ருʼபு⁴க்தைருபஸ்ப்ருʼஷ்ட꞉ ஸர்வாங்கோ³த்தி²தவேத³ன꞉ .. 7..
உல்பே³ன ஸம்ʼவ்ருʼதஸ்தஸ்மின்னந்த்ரைஶ்ச ப³ஹிராவ்ருʼத꞉ .
ஆஸ்தே க்ருʼத்வா ஶிர꞉ குக்ஷௌ பு⁴க்³னப்ருʼஷ்ட²ஶிரோத⁴ர꞉ .. 8..
அகல்ப꞉ ஸ்வாங்க³சேஷ்டாயாம்ʼ ஶகுந்த இவ பஞ்ஜரே .
தத்ர லப்³த⁴ஸ்ம்ருʼதிர்தை³வாத்கர்மஜன்மஶதோத்³ப⁴வம் .
ஸ்மரன் தீ³ர்க⁴மனுச்ச்²வாஸம்ʼ ஶர்ம கிம்ʼ நாம விந்த³தே .. 9..
ஆரப்⁴ய ஸப்தமான்மாஸால்லப்³த⁴போ³தோ⁴(அ)பி வேபித꞉ .
நைகத்ராஸ்தே ஸூதிவாதைர்விஷ்டா²பூ⁴ரிவ ஸோத³ர꞉ .. 10..
நாத²மான ருʼஷிர்பீ⁴த꞉ ஸப்தவத்⁴ரி꞉ க்ருʼதாஞ்ஜலி꞉ .
ஸ்துவீத தம்ʼ விக்லவயா வாசா யேனோத³ரே(அ)ர்பித꞉ .. 11..
ஜந்துருவாச
தஸ்யோபஸன்னமவிதும்ʼ ஜக³தி³ச்ச²யாத்த-
நானாதனோர்பு⁴வி சலச்சரணாரவிந்த³ம் .
ஸோ(அ)ஹம்ʼ வ்ரஜாமி ஶரணம்ʼ ஹ்யகுதோப⁴யம்ʼ மே
யேனேத்³ருʼஶீ க³திரத³ர்ஶ்யஸதோ(அ)னுரூபா .. 12..
யஸ்த்வத்ர ப³த்³த⁴ இவ கர்மபி⁴ராவ்ருʼதாத்மா
பூ⁴தேந்த்³ரியாஶயமயீமவலம்ப்³ய மாயாம் .
ஆஸ்தே விஶுத்³த⁴மவிகாரமக²ண்ட³போ³த⁴-
மாதப்யமானஹ்ருʼத³யே(அ)வஸிதம்ʼ நமாமி .. 13..
ய꞉ பஞ்சபூ⁴தரசிதே ரஹித꞉ ஶரீரே
ச²ன்னோ யதே²ந்த்³ரியகு³ணார்த²சிதா³த்மகோ(அ)ஹம் .
தேனாவிகுண்ட²மஹிமானம்ருʼஷிம்ʼ தமேனம்
வந்தே³ பரம்ʼ ப்ரக்ருʼதிபூருஷயோ꞉ புமாம்ʼஸம் .. 14..
யன்மாயயோருகு³ணகர்மநிப³ந்த⁴னே(அ)ஸ்மின்
ஸாம்ʼஸாரிகே பதி² சரம்ʼஸ்தத³பி⁴ஶ்ரமேண .
நஷ்டஸ்ம்ருʼதி꞉ புனரயம்ʼ ப்ரவ்ருʼணீத லோகம்
யுக்த்யா கயா மஹத³னுக்³ரஹமந்தரேண .. 15..
ஜ்ஞானம்ʼ யதே³தத³த³தா⁴த்கதம꞉ ஸ தே³வ꞉
த்ரைகாலிகம்ʼ ஸ்தி²ரசரேஷ்வனுவர்திதாம்ʼஶ꞉ .
தம்ʼ ஜீவகர்மபத³வீமனுவர்தமானா-
ஸ்தாபத்ரயோபஶமனாய வயம்ʼ ப⁴ஜேம .. 16..
தே³ஹ்யன்யதே³ஹவிவரே ஜட²ராக்³னினாஸ்ருʼக்³-
விண்மூத்ரகூபபதிதோ ப்⁴ருʼஶதப்ததே³ஹ꞉ .
இச்ச²ன்னிதோ விவஸிதும்ʼ க³ணயன் ஸ்வமாஸான்
நிர்வாஸ்யதே க்ருʼபணதீ⁴ர்ப⁴க³வன் கதா³ நு .. 17..
யேனேத்³ருʼஶீம்ʼ க³திமஸௌ த³ஶமாஸ்ய ஈஶ
ஸங்க்³ராஹித꞉ புருத³யேன ப⁴வாத்³ருʼஶேன .
ஸ்வேனைவ துஷ்யது க்ருʼதேன ஸ தீ³னநாத²꞉
கோ நாம தத்ப்ரதி வினாஞ்ஜலிமஸ்ய குர்யாத் .. 18..
பஶ்யத்யயம்ʼ தி⁴ஷணயா நனு ஸப்தவத்⁴ரி꞉
ஶாரீரகே த³மஶரீர்யபர꞉ ஸ்வதே³ஹே .
யத்ஸ்ருʼஷ்டயா(ஆ)ஸம்ʼ தமஹம்ʼ புருஷம்ʼ புராணம்
பஶ்யே ப³ஹிர்ஹ்ருʼதி³ ச சைத்யமிவ ப்ரதீதம் .. 19..
ஸோ(அ)ஹம்ʼ வஸன்னபி விபோ⁴ ப³ஹுது³꞉க²வாஸம்
க³ர்பா⁴ன்ன நிர்ஜிக³மிஷே ப³ஹிரந்த⁴கூபே .
யத்ரோபயாதமுபஸர்பதி தே³வமாயா
மித்²யாமதிர்யத³னு ஸம்ʼஸ்ருʼதிசக்ரமேதத் .. 20..
தஸ்மாத³ஹம்ʼ விக³தவிக்லவ உத்³த⁴ரிஷ்ய
ஆத்மானமாஶு தமஸ꞉ ஸுஹ்ருʼதா³த்மனைவ .
பூ⁴யோ யதா² வ்யஸனமேதத³னேகரந்த்⁴ரம்ʼ
மா மே ப⁴விஷ்யது³பஸாதி³தவிஷ்ணுபாத³꞉ .. 21..
கபில உவாச
ஏவம்ʼ க்ருʼதமதிர்க³ர்பே⁴ த³ஶமாஸ்ய꞉ ஸ்துவன் ருʼஷி꞉ .
ஸத்³ய꞉ க்ஷிபத்யவாசீனம்ʼ ப்ரஸூத்யை ஸூதிமாருத꞉ .. 22..
தேனாவஸ்ருʼஷ்ட꞉ ஸஹஸா க்ருʼத்வாவாக்ஶிர ஆதுர꞉ .
விநிஷ்க்ராமதி க்ருʼச்ச்²ரேண நிருச்ச்²வாஸோ ஹதஸ்ம்ருʼதி꞉ .. 23..
பதிதோ பு⁴வ்யஸ்ருʼங்மூத்ரே விஷ்டா²பூ⁴ரிவ சேஷ்டதே .
ரோரூயதி க³தே ஜ்ஞானே விபரீதாம்ʼ க³திம்ʼ க³த꞉ .. 24..
பரச்ச²ந்த³ம்ʼ ந விது³ஷா புஷ்யமாணோ ஜனேன ஸ꞉ .
அனபி⁴ப்ரேதமாபன்ன꞉ ப்ரத்யாக்²யாதுமனீஶ்வர꞉ .. 25..
ஶாயிதோ(அ)ஶுசிபர்யங்கே ஜந்து꞉ ஸ்வேத³ஜதூ³ஷிதே .
நேஶ꞉ கண்டூ³யனே(அ)ங்கா³நாமாஸனோத்தா²னசேஷ்டனே .. 26..
துத³ந்த்யாமத்வசம்ʼ த³ம்ʼஶா மஶகா மத்குணாத³ய꞉ .
ருத³ந்தம்ʼ விக³தஜ்ஞானம்ʼ க்ருʼமய꞉ க்ருʼமிகம்ʼ யதா² .. 27..
இத்யேவம்ʼ ஶைஶவம்ʼ பு⁴க்த்வா து³꞉க²ம்ʼ பௌக³ண்ட³மேவ ச .
அலப்³தா⁴பீ⁴ப்ஸிதோ(அ)ஜ்ஞாநாதி³த்³த⁴மன்யு꞉ ஶுசார்பித꞉ .. 28..
ஸஹ தே³ஹேன மானேன வர்த⁴மானேன மன்யுனா .
கரோதி விக்³ரஹம்ʼ காமீ காமிஷ்வந்தாய சாத்மன꞉ .. 29..
பூ⁴தை꞉ பஞ்சபி⁴ராரப்³தே⁴ தே³ஹே தே³ஹ்யபு³தோ⁴(அ)ஸக்ருʼத் .
அஹம்ʼ மமேத்யஸத்³க்³ராஹ꞉ கரோதி குமதிர்மதிம்ʼ .. 30..
தத³ர்த²ம்ʼ குருதே கர்ம யத்³ப³த்³தோ⁴ யாதி ஸம்ʼஸ்ருʼதிம் .
யோ(அ)னுயாதி த³த³த்க்லேஶமவித்³யாகர்மப³ந்த⁴ன꞉ .. 31..
யத்³யஸத்³பி⁴꞉ பதி² புன꞉ ஶிஶ்னோத³ரக்ருʼதோத்³யமை꞉ .
ஆஸ்தி²தோ ரமதே ஜந்துஸ்தமோ விஶதி பூர்வவத் .. 32..
ஸத்யம்ʼ ஶௌசம்ʼ த³யா மௌனம்ʼ பு³த்³தி⁴꞉ ஶ்ரீர்ஹ்ரீர்யஶ꞉ க்ஷமா .
ஶமோ த³மோ ப⁴க³ஶ்சேதி யத்ஸங்கா³த்³யாதி ஸங்க்ஷயம் .. 33..
தேஷ்வஶாந்தேஷு மூடே⁴ஷு க²ண்டி³தாத்மஸ்வஸாது⁴ஷு .
ஸங்க³ம்ʼ ந குர்யாச்சோ²ச்யேஷு யோஷித்க்ரீடா³ம்ருʼகே³ஷு ச .. 34..
ந ததா²ஸ்ய ப⁴வேன்மோஹோ ப³ந்த⁴ஶ்சான்யப்ரஸங்க³த꞉ .
யோஷித்ஸங்கா³த்³யதா² பும்ʼஸோ யதா² தத்ஸங்கி³ஸங்க³த꞉ .. 35..
ப்ரஜாபதி꞉ ஸ்வாம்ʼ து³ஹிதரம்ʼ த்³ருʼஷ்ட்வா தத்³ரூபத⁴ர்ஷித꞉ .
ரோஹித்³பூ⁴தாம்ʼ ஸோ(அ)ன்வதா⁴வத்³ருʼக்ஷரூபீ ஹதத்ரப꞉ .. 36..
தத்ஸ்ருʼஷ்டஸ்ருʼஷ்டஸ்ருʼஷ்டேஷு கோ ந்வக²ண்டி³ததீ⁴꞉ புமான் .
ருʼஷிம்ʼ நாராயணம்ருʼதே யோஷின்மய்யேஹ மாயயா .. 37..
ப³லம்ʼ மே பஶ்ய மாயாயா꞉ ஸ்த்ரீமய்யா ஜயினோ தி³ஶாம் .
யா கரோதி பதா³க்ராந்தான் ப்⁴ரூவிஜ்ருʼம்பே⁴ண கேவலம் .. 38..
ஸங்க³ம்ʼ ந குர்யாத்ப்ரமதா³ஸு ஜாது
யோக³ஸ்ய பாரம்ʼ பரமாருருக்ஷு꞉ .
மத்ஸேவயா ப்ரதிலப்³தா⁴த்மலாபோ⁴
வத³ந்தி யா நிரயத்³வாரமஸ்ய .. 39..
யோபயாதி ஶனைர்மாயா யோஷித்³தே³வவிநிர்மிதா .
தாமீக்ஷேதாத்மனோ ம்ருʼத்யும்ʼ த்ருʼணை꞉ கூபமிவாவ்ருʼதம் .. 40..
யாம்ʼ மன்யதே பதிம்ʼ மோஹான்மன்மாயாம்ருʼஷபா⁴யதீம் .
ஸ்த்ரீத்வம்ʼ ஸ்த்ரீஸங்க³த꞉ ப்ராப்தோ வித்தாபத்யக்³ருʼஹப்ரத³ம் .. 41..
தாமாத்மனோ விஜானீயாத்பத்யபத்யக்³ருʼஹாத்மகம் .
தை³வோபஸாதி³தம்ʼ ம்ருʼத்யும்ʼ ம்ருʼக³யோர்கா³யனம்ʼ யதா² .. 42..
தே³ஹேன ஜீவபூ⁴தேன லோகால்லோகமனுவ்ரஜன் .
பு⁴ஞ்ஜான ஏவ கர்மாணி கரோத்யவிரதம்ʼ புமான் .. 43..
ஜீவோ ஹ்யஸ்யானுகோ³ தே³ஹோ பூ⁴தேந்த்³ரியமனோமய꞉ .
தந்நிரோதோ⁴(அ)ஸ்ய மரணமாவிர்பா⁴வஸ்து ஸம்ப⁴வ꞉ .. 44..
த்³ரவ்யோபலப்³தி⁴ஸ்தா²னஸ்ய த்³ரவ்யேக்ஷாயோக்³யதா யதா³ .
தத்பஞ்சத்வமஹம்ʼமாநாது³த்பத்திர்த்³ரவ்யத³ர்ஶனம் .. 45..
யதா²க்ஷ்ணோர்த்³ரவ்யாவயவத³ர்ஶனாயோக்³யதா யதா³ .
ததை³வ சக்ஷுஷோ த்³ரஷ்டுர்த்³ரஷ்ட்ருʼத்வாயோக்³யதானயோ꞉ .. 46..
தஸ்மான்ன கார்ய꞉ ஸந்த்ராஸோ ந கார்பண்யம்ʼ ந ஸம்ப்⁴ரம꞉ .
பு³த்³த்⁴வா ஜீவக³திம்ʼ தீ⁴ரோ முக்தஸங்க³ஶ்சரேதி³ஹ .. 47..
ஸம்யக்³த³ர்ஶனயா பு³த்³த்⁴யா யோக³வைராக்³யயுக்தயா .
மாயாவிரசிதே லோகே சரேன்ன்யஸ்ய கலேவரம் .. 48..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே ஜீவக³திர்நாம ஏகத்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 31
———————————————————-
பூர்வ கர்ம வசத்தால் உந்தப்பட்டு ஜீவன் உடலை எடுக்கும் பொருட்டு புருஷனுடைய வீரியத்தில் ஒட்டிக் கொண்டு
ஸ்திரீயின் கர்பப்பையில் புகுகிறான்.
ஓர் இரவில் கருவாகவும், ஐந்து இரவுகள் சென்றபின் நுரை போன்ற வடிவமும், பத்து நாட்களில் இலந்தைப்பழ வடிவமும்
அதன் பிறகு முட்டை வடிவமும் எய்துகிறான்.
ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதத்தில் கை கால் முதலிய அங்கங்களின் தோற்றமும் மூன்று மாதங்களில்
நகம் ரோமம் தோல் எலும்பு முதலியவைகளின் அடையாளங்களும் தோன்றுகின்றன.
ஆணா பெண்ணா என்பது இப்போது நிச்ச்யிக்கப்படுகிறது.
ஐந்தாவது மாதத்தில் சிசு பசி தாகம் இவைகளை உணர்கிறது. ஆறாவது மாதம் அசைய ஆரம்பிக்கிறது.
ஏழாவது மாதம் தொடங்கி அறிவு உதிக்க ஆரம்பிக்கிறது. இந்த சமயம் பூர்வ ஜன்ம நினைவுகள் வர மறுபடி பிறவி எடுக்க
பயந்து எந்த பகவானால் தாயின் வயிற்றில் புகுத்தப்பட்டானோ அந்த பகவானைக் கை கூப்பி துதிக்க ஆரம்பிக்கிறான்.
பகவானுடைய மாயையின் சக்தியினால் கர்ம வசப்பட்டு என் உண்மை நிலையை உணராமல் சம்சார பந்தத்தில் அகப்பட்டுள்ளேன்.
எங்கும் நிறைந்த அந்த பரம் பொருளின் கிருபையால் எனக்கு இப்போது பூர்வ ஜன்ம நினைவு வருகிறது.
அவர் அருளாலேயே கர்ம பந்தத்தில் இருந்து விடுபட முடியும்.
இப்போது இன்னொரு உடலினுள் அகப்பட்டு அங்குள்ள திரவங்களால் அலைக் கழிக்கப் பட்டு ஜாடராக்னியால்
பொசுக்கப்பட்டு வெளியேறுவேன் என நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ஆயினும் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தாலும் இதை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஏனென்றால்
வெளியே என் நினைவுகள் மறைந்து உலக மாயையில் அகப்பட்டு சம்சார பந்தத்தில் சிக்கி பகவானை மறந்து
தேகமே நான் என்றெண்ணி மறுபடி பிறவிப் பிணியை அனுபவிக்க வேண்டுமே.
அதனால் நான் இறைவனின் பகவத் த்யானத்தினால் இந்தப் பிறவித் துன்பத்தை ஒழிக்க எண்ணுகிறேன்.
இவ்வாறு கர்பத்தில் இருக்கும் போது ஈச்வரனைத் துதித்துக் கொண்டிருக்கையில் பத்து மாதம் முடிந்து சட வாயுவானது
அவனை உந்திக் கீழே தலை கீழாகத் தள்ளி விடுகிறது.
அறிவு மறைந்து விபரீத அஞ்ஞானநிலையடைந்து வீரிட்டு அழத் தொடங்குகிறான்.
பிறந்தவுடன் நடக்கவும் பேசவும் ஆரம்பிக்கும் முன் பிறர் தயவில் வாழும்போது, பூச்சி கடித்தாலும்,
உடல் உபாதை இருந்தாலும் அவனால் அழத்தான் முடிகிறது.
அறிவுள்ள பெற்றோர் வாய்ப்பின் ஓரளவு சுகம் காண முடியும் இல்லாவிட்டால் நரக வேதனைதான்.
வளர்ந்த பிறகும் தேவைகளும் ஆசைகளும் கூடவே வளர்வதால் முந்தைய ஜென்மத்தின் இடர்கள் பின் தொடர்கின்றன.
நல்ல வழியில் செல்லும் ஜீவனும் காம இச்சைக்கும் வயிற்றை நிரப்புவதற்குமே வாழும் தீயோரிடம் சேர்ந்தால்
முன் போல் நரக வாசம் போன்ற பிறவித் துன்பத்தை அடைகிறான்.
அதனால் இந்த துன்பத்தை வெல்ல என்ன வழி ?
மரண பயத்தை விட்டு தன் உண்மை நிலை என்ன என்று உணர்ந்து பற்றற்ற வாழ்க்கை மூலம் தேஹாத்ம புத்தியை விட்டு
கர்ம பந்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply