ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –
1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை
———
1-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்
————–
2-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்
வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே
வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்
வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்
இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்
இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே
—————–
3-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்
சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே
1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்
ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்
இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்
இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்
ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்
1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்
இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –
தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே
————–
4-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி
கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்
இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –
இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –
92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –
————
5-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்
துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே
ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்
அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே
———————-
6- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –
————————-
7- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –
—————-
ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்
1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்
———————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply