ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –1-10-

1-ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி –

மகரே சைகை பாத்யேச யாமுனாசார்ய நந்தனம்
கூர நாத குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் -இவர் தனியன் –

தை மாதம் பூரட்டாதி நக்ஷத்ர திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
இவர் ஒரு சமயம் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் கடுமையாகப் பேசி நடந்து கொள்ள –
இங்கு இல்லாமல் போ என்று ஆணை இட
தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்து வந்தார்
சரம காலத்தில் ஒரு வைஷ்ணவர் இவர் இடம் தேவரீர் என்ன திரு உள்ளம் பற்றி உள்ளார் என்று வினவ

ஸ்ரீ ஆளவந்தார் சம்பந்தத்தால் பேறு சித்தம் -அங்கு ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம் நம் பெரிய பெருமாள்
போல் குளிர்ந்து இரா விட்டால் பரம பத அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன் என்றாராம்
திருவாய் மொழி -தன் தனக்கு இன்றி நின்றானை –4-5-7-என்று அருளிச் செய்தது
ஆத்மாநாம் மானுஷம் மன்யே – என்று அருளிச் செய்த
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கே இந்தப் பெருமை சேரும் என்றார்
இவர் திருக் குமாரர் என் ஆச்சான்
அவர் திருக் குமாரர் -பிள்ளை அப்பன் –

————

2- ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ புண்டரீகர் –
இவர் ஸ்ரீ அத்துழாயின் திருச் சகோதரர்

ஸூசவ் மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூ தம்
யதி ராஜ அங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே —

ஆடி உத்தராடம் திரு அவதாரம்
ஸ்ரீ உடையவர் சிஷ்யர்
இவர் சேரக் கூடாத ஸஹ வாசத்தால் போகக் கூடாத இடம் போக –
நீர் எம்மை விட்டாலும் நான் உம்மை விடேன் -என்று கண்டு பிடித்து
அருளிச் செய்து திருத்திப் பணி கொண்டார்

———————

3- ஸ்ரீ தெற்காழ்வான்
ஸ்ரீ திருக் கோட்டி நம்பி திருக் குமாரர் -ஆடித் திரு வோணம் திரு அவதாரம் –
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார் சகோதரர் -காஸ்யப கோத்தரம்
இவரது திருப்பேரானாரும் ஸ்ரீ தெற்காழ்வான்-ஸ்ரீ பட்டர் சிஷ்யர் -இவர் நண்பர் ஸ்ரீ கோளரி ஆழ்வான்
பாபங்கள் குளிப்பதனால் போகாது -ஸ்ரீ சிங்கப் பிரானது சக்ராயுதத்தால் மட்டுமே தொலையும் -என்று
அருளிச் செய்ததை கேட்டு
இவர் ஞானத்தையும் விசுவாசத்தையும் ஸ்ரீ பட்டர் பாராட்டிய ஐதிக்யம் உண்டே

——————

4-ஸ்ரீ ஸூ ந்தரத் தோளுடையான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் –
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்னும் திரு நாமமும் உண்டு –
காஸ்யப கோத்ரம்
சித்திரை சித்திரை திரு அவதாரம்

மாலாதார குரோ புத்ரம் ஸுவ்ந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் சிஷ்யம் வந்தே வர கருணா நிதம்

திருமாலிருஞ்சோலை அழகர் சந்நிதியில் புரோஹிதர்
இவருடைய மூதாதையரில் ஒருவர் கண்ணுக்கு இனியான் அழகரை ஒரு ஆபத்தில் ரக்ஷித்து
இதனால் இவர் வம்சத்துக்கு ஆண்டான் என்ற பட்டப் பெயர் வந்தது
இவர் வம்சத்தில் வந்த யமுனாச்சார்யர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயரின் சிஷ்யர் -யோக சாஸ்திரத்தில் மேதாவி –

——————

5–ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பி –

வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே–தனியன்

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் -வைகாசி திரு விசாகம் திரு அவதாரம் –
இவருக்கு ஸ்ரீ ராமானுஜர் என்ற சகோதரர் உண்டு
இவருடைய சகோதரியின் கணவர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் திருக் குமாரர்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர் -இவரும் ஸிம்ஹாஸனாதி பதிகளில் ஒருவர்–35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற விஞ்சிமூர் தாதாச்சார்யர்

———————

6- ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
ஸ்ரீ எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

ஸ்ரீ எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

————————-

7- ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

———

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
பாகவத அபசாரம் செய்யாமல் இருக்க சத்யம் – தண்ணீர் வார்த்து தானம் -செய்து கொடுத்து –
மீண்டும் அபசாரப்பட்டு மனம் வருந்தி
ஸ்ரீ கூரத்தாழ்வானை சந்திக்கக் கூசினார் -இதை அறிந்து இவர் வீடு சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வான் மன்னித்து இவர் மனம் தேற்றினார்
வீர சுந்தர பிரம ராயர் இவர் திரு மாளிகை இடிக்க ஸ்ரீ பட்டர் மனம் வருந்தி
திருக் கோஷ்ட்டியூர் சென்று இருந்த விருத்தாந்தம்
புள்ளும் சிலம்பின் காண் -காலையில் எம்பெருமானை அனுசந்திக்க பறவைகளின் சப்தம்
உத்தேச்யம் என்று சொல்வாராம்
திரு விருத்தம் வியாக்யானத்தில் -குழந்தை தாய் பால் பருகி முகம் பார்க்குமா போல்
அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு
அவன் திரு மேனி குணங்களில் ஈடுபடுவார்கள் என்பாராம்-

———————

9- ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணே துர் நிஷ் க்ராம தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம் வந்தே குரும் வரத விஷ்ணு பதாபிதாநம் —

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ ராமானுஜர் சகோதரி திருக்குமாரர் -அந்தரங்க கைங்கர்ய பூதர்
ஸ்ரீ வராத விஷ்ணு என்ற பெயரும் உண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி ஸ்ரீ ராமானுஜர் வழங்கிய பட்டம்
இவர் 19-12 சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்யம் வழங்கி உள்ளார்
மான யாதாத்ம்ய நிர்ணயம் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறை கோயிலில் இவர் அர்ச்சா விக்ரஹம் உள்ளது
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் இவர் சிஷ்யர் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவரது திருப்பேரானார்

—————

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம்
பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோம் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு பிராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading