ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –ஒன்பதாம் பத்து –

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன–9-1-11-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து –
அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள்- அடையப் படும் பொருளும்
அடைதற்கு உரிய வழியும் -இல்லை -என்று அத்யவசித்து -துணிந்து –

இவர்க்கு இப்படி இந்த வ்யவசயத்தை -துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –
அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –என்கிறார் மேல் –

தாது சேர் தோள் கண்ணனை –
அவனுடைய ஸுந்தர்யம் -பெரு வனப்பு ஆயிற்று -இவரை இப்படி துணியப் பண்ணிற்று –

—————

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்-9-2-11-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –

குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த அபேக்ஷை விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த ஸ்வபாவ தன்மையின் அனுசந்தானத்தாலே நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
விஸ்மய நீயமான பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

————–

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்-9-3-11-

சீலம் எல்லை இலான் அடிமேல் –
அமர்யாத எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீலாதிக்யமாயிற்று –சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை நிகமிக்கிறார் -முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்-

—————-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரம்-9-4-11-

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னைச் –
ஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய குவலயா பீடத்தை அழித்தவனை –
அதனை அழித்தாப் போலே-என் விரோதியைப் போக்கினவனை –

சேறு ஆர் வயல் –
குவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக-ஒட்டாதே கிடந்தது –

தென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –
கிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே-நூறு நூறாக சொன்னபடி
பாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே
பாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் – தரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –

—————-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை –9-5-11-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –
எங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-
உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட நிரதிசய -எல்லை இல்லாத ப்ரீதியை உடையராய்க் கொண்டு –

பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் –
காலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –

தனக்கு அருள் செய்த-
உலக மக்களில் அந்ய தமர் -வேறு பட்டவரான தமக்கு
மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –

மாயனைத் –
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும் விசேஷ கடாஷம் செய்த
ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்
எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –என்றுமாம் –

இவர் குண ஞானத்தால் -குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
நித்ய ஸூரிகள் அனுபவத்தையும்
தமக்கு அவர்களோடு ஒத்த ப்ராப்தியையும் அனுசந்தித்து -சம்பந்தத்தையும்
நினைத்து நோவு பட்டார் என்றும்
ஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே
இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –

தென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –
சடகோபன் சொல் என்று பரோக்ஷ நிர்த்தேசத்தாலே -படர்க்கையில் கூறுகையாலே
தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ
பகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –

———–

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை அவன் தன்னோடு போம்படி செய்தான்
தன் பக்கல் இல்லாதது–வந்தேறி ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ பாதகம் -தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற விஜயத்துக்கு -வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று
ஸ்வாமியின் விஜயத்துக்கு -வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே அன்றோ கொடி கட்டுவது –

சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரத்து –
சமுதாய சோபையை -முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி
விஜயம் -வெற்றி உண்டாகையாலே -பிரசஸ்தி -வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

————-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த-9-7-11-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும்-
ஒரு நாளும் விட நினையாமல்-அவ் ஊரில் நித்ய வாசம் செய்யுமவனை –

ஒண் சுடரை –
பின்னானார் வணங்கும் சோதி -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
அவ் ஊரில் நிலையால் வந்த புகர் இருக்கிறபடி –
அன்றிக்கே
அவ் ஊரில் போக்யதையால் -இனிமையால் வந்த புகர் என்னுதல் –
பிற் பாடர்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் -என்றபடி –

ஒழிவில்லா –
அவன் அவ் ஊரை நீங்கில் தரிக்க மாட்டாதவாறு போன்று
அவனை ஒழியில் தரிக்க மாட்டாதவள் -என்கை
நச சீதா த்வயா ஹீநா நசாஹம் அபி ராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மச்த்யாவிவோத்த்ருதௌ-அயோத்யா -33-31-
எனப் படுமவள் அன்றோ இவளும் –

அணி மழலைக் கிளி மொழியாள் –
அழகிய முக்தமான -இளமையான கிளியின் பேச்சுப் போல் இருக்கிற பேச்சினை உடையவள் –

அலற்றிய சொல் –
தன் ஆற்றாமையாலே-அக்ரமமாக -முறை பிறழச் சொல்லிய சொல் –

வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-
பிராட்டி படியில் ஒன்றும் குறைவு அற்று இருக்கிற ஆழ்வார் –

வாய்ந்து உரைத்த –
கிட்டி உரைத்த -என்றது-பாவ பந்தத்தால் சொன்ன -என்றபடி –

—————–

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்-9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
நாநா வர்ணங்களான -பல வகைப் பட்ட நிறங்களை உடைய
ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களை உடைத்தாய்
நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமையை உடைய
திரு நாவாயிலே நின்று அருளினவனை

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் –
திண்ணியதான மதிளை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
திரு நாவாய்க்கு ரக்ஷை -காவல் திரு நகரியின் மதிள் போலே காணும்
ஆழ்வார் பரியவே அப் பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்
அன்றிக்கே –
சர்வேஸ்வரனுக்கு தனம் -செல்வம் ஆழ்வார் ஆகையாலே
செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –

—————-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்–9-9-11-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் -மாலைப் பூசல்
அவனைப் பிரிந்து-விஸிலேஷித்து – தங்களுடைய பிராணங்களை -உயிர்களைக் கொண்டு
தரிக்க மாட்டாதே ஷமைகள் இன்றிக்கே –
அவனுடைய வரவுக்கு உறுப்பாக ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை உடைய ஆயர் பெண்கள் –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
திரு ஆய்ப்பாடியிலே ஐந்து லஷம் குடியில் பெண்கள் அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து இருக்க
வரும் காலத்தில் அவன் வரவு காணாமையாலே கிருஷ்ணனைப் பிரிந்த விரஹத்தாலே
ஒரு ஸந்த்யையில் -மாலைப் பொழுதில் கூப்பிட்ட கூப்பீடு ஆயிற்று –

அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் –
அவனுடைய பிரிவால் நோவுபட்டு அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை -துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை

————-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்-9-10-11-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பார்ஸ்வத்திலே -பக்கத்தில் வந்து கிட்டாதபடி-ச வாசனமாக –
வாசனையோடு போக வேண்டி இருந்தீர்கோள் ஆகில்

மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
நித்யமான- அழியாத மாடங்களை உடைத்தான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே
திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading