ஸ்ரத்தாரா சந்தஸ் அனைத்தும் ஸ்லோகங்களும்
அக்³ரே பஶ்யாமி தேஜோ நிபி³ட³தரகலா யாவலீ லோப⁴நீயம்
பீயூஷாப்லாவிதோঽஹம் தத³நு தது³த³ரே தி³வ்ய கைஶோர வேஷம் ।
தாருண்யாரம்ப⁴ ரம்யம் பரம ஸுக²ரஸாஸ்வாத³ ரோமாஞ்சிதாங்கை³-
ராவீதம் நாரதா³த்³யை விலஸது³பநிஷத் ஸுந்த³ரீ மண்ட³லைஶ்ச ॥ 100-1॥
நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன்.
அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன்.
அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால்
மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன்.
பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, ஸ்ரீ நாரதர் முதலானவர்களும்,
சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)
கலய மலரிணர் அனைய ஒளிச்சுழல்
நறவில் குளிக்கிறேன் ஐயனே
இளமை மயக்குறு வடிவில் முனிவரும்
முடிகள் சிலிர்க்கிறார் அப்பனே
ஒளிரும் நிடதமாம் வனிதை குழுமிடும்
மகிழ்வை ருசிக்கிறாய் ஈசனே
எளியன் அடியவன் உனது திருஉரு
எழிலில் கிறங்கிடும் பக்தனே;
————–
நீலாப⁴ம் குஞ்சிதாக்³ரம் க⁴நம் அமலதரம் ஸம் யதம் சாரு ப⁴ங்க்³யா
ரத்நோத்தம் ஸாபி⁴ ராமம் வலயித முத³யச் சந்த்³ரகை: பிஞ்ச²ஜாலை: ।
மந்தா³ரஸ்ரங்நி வீதம் தவ ப்ருʼது²கப³ரீபா⁴ரம் ஆலோகயேঽஹம்
ஸ்நிக்³த⁴ ஶ்வேதோர்த்⁴வ புண்ட்³ராமபி ச ஸுலலிதாம் பா²ல பா³லேந்து³வீதீ²ம் ॥ 100-2॥
நீல நிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும்,
ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின்
வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்;
பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்;
அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.
இணரின் அழகொடு ஒளிரும் நயனமும்
விளங்கு மயில்தரும் பீலியும்
மணிகள் பதியுநல் தலையின் அணிகளும்
மந்தார மலரணி கூந்தலும்
புணரும் கருநிறம் நுனியில் சுருண்டநல்
அடர்ந்த குழலதன் கற்றையும்
மணக்கும் அகிலோடு மயக்கும் ஒண்நுதல்
பிறையின் நிலவணி மோகனா!
—————–
ஹ்ருʼத்³யம் பூர்ணா அநுகம்பார்ணவ ம்ருʼது³லஹரீ சஞ்சல ப்⁴ரூ விலாஸை-
ராநீல ஸ்நிக்³த⁴ பக்ஷ்மா வலி பரிலஸிதம் நேத்ர யுக்³மம் விபோ⁴ தே ।
ஸாந்த்³ரச்சா²யம் விஶால அருண கமல த³ல ஆகாரமாமுக்³த⁴தாரம்
காருண்ய ஆலோக லீலாஶிஶிரித பு⁴வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே² ॥ 100-3॥
ஹே ஸ்ரீ பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும்,
மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்;
அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்;
மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால்
உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆகிய தங்களுடைய இரண்டு கண்களும்
அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)
சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய்.
————
உத்துங்கோ³ல்லாஸி நாஸம் ஹரி மணி முகுர ப்ரோல்லஸத்³ க³ண்ட³பாலீ-
வ்யாலோலத் கர்ண பாஶாஞ்சித மகர மணீ குண்ட³லத்³வந்த்³வதீ³ப்ரம் ।
உந்மீலத்³த³ந்த பங்க்தி ஸ்பு²ர அருண தரச்சா²யபி³ம்பா³த⁴ராந்த:-
ப்ரீதி ப்ரஸ்யந்தி³மந்த³ஸ்மித மது⁴ரதரம் வக்த்ரமுத்³பா⁴ஸதாம் மே ॥ 100-4॥
உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல விளங்குகின்ற
கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்;
அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில்
பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்;
ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)
மகர வடிவினில் அழகுச் செவிகளாம்
இரண்டில் பளிச்சிடும் நீலமும்,
முகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,
பவழ இதழ்களில் தோன்றிடும்
மிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,
விலகும் இதழிடை ஒளியுறும்
தகவு பற்களும் திகழும் எழில்முகம்
களிக்க எனக்குநீ காட்டுவாய்.
———–
பா³ஹு த்³வந்த்³வேந ரத்நோஜ்ஜ்வல வலய ப்⁴ருʼதா ஶோண பாணி ப்ரவாலே-
நோபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ருʼத நக²மயூகா²ங்கு³லீ ஸங்க³ஶாராம் ।
க்ருʼத்வா வக்த்ராரவிந்த்³ரே ஸுமது⁴ர விகஸத்³ராக³முத்³பா⁴வ்ய மாநை:
ஶப்³த³ ப்³ரஹ்மாம்ருʼதைஸ் த்வம் ஶிஶிரித பு⁴வநைஸ் ஸிஞ்ச மே கர்ண வீதீ²ம் ॥ 100-5॥
ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய;
இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால்
சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு;
இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற ஸ்ரீ நாத ப்ரஹ்மம் ஆகிய அமிர்தத்தால்
என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்க வேண்டும்.(100-5 )
வயிர மணிபதி வளையல் வகையுறும்
இளைய குருத்தெனச் சிவந்திடும்
துயர றுப்பவன் மிகவும் எழிலுறும்
நெடிய நகமுடை விரல்களும்
ஒயிலின் இருகரம் வனஜ இதழ்களில்
வருடும் குழலதன் வெளிவரும்
மயக்கும் இசையொளி இயக்கிக் குளிர்செயும்
சுவையின் அமுதமென் செவியுறும்.
————–
உத்ஸர்பத் கௌஸ்துப⁴ஶ்ரீ ததிபி⁴ர் அருணிதம் கோமலம் கண்ட² தே³ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸ ரம்யம் தரல தர ஸமுத்³ தீ³ ப்ர ஹார ப்ரதாநம் ।
நாநா வர்ண ப்ரஸூநா வலி கிஸலயிநீம் வந்ய மாலாம் விலோலல்
லோலம்பா³ம் லம்ப³மாநாம் உரஸி தவ ததா² பா⁴வயே ரத்ந மாலாம் ॥ 100-6॥
உயரக் கிளம்புகின்ற ஸ்ரீ கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்;
ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்;
பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும்,
அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய ஸ்ரீ வனமாலையையும்,
அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.(100-6 )
அணியும் கௌத்துபம் அவிக்கும் சிவப்பொளி
கதிரில் சிவப்பும் கழுத்திடை
இணையும் நித்திலம் இழைத்த மாலையும்
இனிய மார்பினில் அணிந்திடும்
மணிகள் பதித்தநல்அணிசெய் கழுத்தினில்
பணீக்கள் மொய்மலர் மாலையும்
பணியும் அடியவன் பாழுளம் இருத்தியே
பரவிக் களித்திட வைத்திடு.
————
அங்கே³ பஞ்சாங்க³ராகை³ரதிஶய விகஸத் ஸௌரபா⁴க்ருʼஷ்டலோகம்
லீநாநேக த்ரிலோகீ விததிமபி க்ருʼஶாம் பி³ப்⁴ரதம் மத்⁴ய வல்லீம் ।
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்வலகநகநிப⁴ம் பீத சேலம் த³தா⁴நம்
த்⁴யாயாமோ தீ³ப்த ரஶ்மி ஸ்பு²ட மணிரஶநா கிங்கி³ணீ மண்டி³தம் த்வாம் ॥ 100-7॥
சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால்
ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக ப்ரஹ்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில்
லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்;
இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்;
பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின்
கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன். ( 100 – 7 )
களபம் அகிலொடு கலக்கும் நறுமணம்
உலகம் மயக்குறு வாசமும்
புளகம் அளித்திட ஒலிக்கும் கிண்கிணி
இடையின் அணிகளால் எழிலுறும்
அழகு கருமணி இழைத்த பொன்னணி
ஒத்த மஞ்சள்பட் டாடையும்
உலகு மூன்றுமே உறைந்தும் சிறுத்தநல்
அழகு இடையினை உள்ளுவன்.
———-
ஊரூ சாரூ தவோரூ க⁴ந மஸ்ருʼண ருசௌ சித்த சோரௌ ரமாயா
விஶ்வ க்ஷோப⁴ம் விஶங்க்ய த்⁴ருவ மநிஶமுபௌ⁴ பீத சேலாவ்ருʼதாங்கௌ³ ।
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந் யஸந த்⁴ருʼத ஸமஸ்தார்த² பாலீஸ முத்³க³ச்
சா²யாம் ஜாநு த்³வயம் ச க்ரம ப்ருʼது²ல மநோஜ்ஞே ச ஜங்கே⁴ நிஷேவே ॥ 100-8॥
மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த,
(அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால்
மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட,
புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்;
கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக் கால்களையும் சேவிகின்றேன்.( 100 – 8 )
தங்க நிறமுடன் மங்கை இலக்குமி
மயங்கு மஞ்சள்நல் ஆடையும்
அண்டம் நிலைகுலை அழலில் ஒளிர்ந்திடும்
பருத்த கவினுறு தொடைகளும்
நெஞ்சம் கெழுமிய விழைவு பேழையாய்
இலங்கும் இருமுழங் கைகளும்
விஞ்சும் எழில்நிறை கெண்டை கால்களும்
என்னுள மிருத்திநான் மகிழ்கிறேன்
————
மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை³ ரிவ பத³ ப⁴ஜநம் ஶ்ரேய இத்யால பந்தம்
பாதா³க்³ரம் ப்⁴ராந்திமஜ்ஜத்ப்ரணத ஜந மநோ மந்த³ரோத்³தா⁴ர கூர்மம் ।
உத்துங்க³ ஆதாம்ர ராஜந் நக²ர ஹிமகர ஜ்யோத்ஸ்நயா சாঽஶ்ரிதாநாம்
ஸந்தாப த்⁴வாந்த ஹந்த்ரீம் ததி மநு கலயே மங்க³ளாம் அங்கு³லீநாம் ॥ 100-9॥
திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால்
உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய
மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்;
உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை
ஆஸ்ரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்;
மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )
உந்தன் அடிமையே உய்ந்தன மென்றுணர்
சிந்தும் மெல்லொலி சிறுகுழல்
எந்தன் பகவனுன் விந்தை அடியவர்
சிந்தை நிறைந்திடு மாலைகள்
மந்தார மாலைகள் உந்தி ஏந்திடும்
அந்த ஆமையிின் வடிவுறும்
உந்தன் அடிநுனி சிந்தும் நிலவொளி
சிந்தை அந்தகம் நீங்கிடும்.
————
யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஷ் வதி⁴க ஸுமது⁴ரம் முக்தி பா⁴ஜாம் நிவாஸோ
ப⁴க்தாநாம் காம வர்ஷ த்³ யுதருகி ஸலயம் நாத² தே பாத³மூலம் ।
நித்யம் சித்தஸ்தி²தம் மே பவந புர பதே க்ருʼஷ்ண காருண்ய ஸிந்தோ⁴
ஹ்ருʼத்வா நி:ஶேஷ தாபாந் ப்ரதி³ஶது பரமாநந்த³ஸந்தோ³ஹ லக்ஷ்மீம் ॥ 100-10॥
ஹே! ஸ்ரீ நாதா! ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே ஸ்ரீ கிருஷ்ணா!
யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும்,
மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய
தங்கள் ஸ்ரீ பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு
சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)
கண்ணன் திருவடி எண்ணும் முனிவரர்
மன்னும் முக்தருன் உறையுளே.
நண்ணும் அடியவர் உன்னும் விழைவுகள்
திண்ணம் அருளிடம் விண்மர-
மென்மைக் குருத்தென மின்னும் உன்னிணை
என்றும் பற்றிடும் அன்பினன்
துன்பம் அழித்தெனக் கின்ப சிகரமே
அருள் குருவாயூரப்பனே!
——–
அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதி³ஹ நிக³தி³தம் விஶ்வ நாத² க்ஷமேதா:²
ஸ்தோத்ரம் சைதத் ஸஹ ஸ்ரோத்தரம் அதி⁴கதரம் த்வத் ப்ரஸாதா³ய பூ⁴யாத் ।
த்³வேதா⁴ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்பீ²தம் லீலாவதாரைரித³மிஹ குருதாம் ஆயுராரோக்³ய ஸௌக்²யம் ॥ 100-11॥
ஹே ஸ்ரீ ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ
அதைத் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை
அடைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும்.
வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும்,
ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட
“ஸ்ரீ நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு
பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.( 100 -11)
உனது மேன்மைகள் முழுதும் அறிகிலேன்
எழுது மிவையெலாம் பொறுத்தருள்.
உனது பெருமைகள் புகழும் ஆயிரம்
கவிதை நூலிதை அருளுவாய்.
உனது திருவவ தார முழுமையும்
மறைகள் உரைவழி ஆக்கினேன்
மனது களிப்புற உடலும் நலமுறச்
செய்த நாரா யணீய மே.
————
நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
———————————————————-——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
October 3, 2020 at 1:58 pm |
Hi, Your “Narayaniyam” work is simply great…very much appreciated. Suggestions :
1. Dasakam 46 named as 45.
2. Dasakam 85 is missing.
3. From Dasakam 77 editing has not been done properly. That is Sanskrit pronunciation 3,4 numbers are coming in the mid of simple tamil words… Which should be removed so as to facilitate as to read without hurdle.
I am new to Narayaniyam and I don’t know Sanskrit. After long research I found a good..easy to read…tamil lyrics with meaning and follow the slogha from your site only.
Great work.
Namaskarams.
Shankar.