11-ஸ்லோகங்களும் ஸ்ரத்தாரா மீட்டர்-ஸ்லோகம் தோறும் நமஸ் பத பிரயோகம்-
யஸ்மின்நேதத்3 விபா4தம் யத இத3
மப4வத்3யேன சேத3ம் யஏதத்
யோSஸ்மாது3த்தீர்ண ரூப : க2லு
ஸகலமித3ம் பா4ஸிதம் யஸ்ய பாஸா|
யோ வாசம் தூ3ர தூ3ரே புனரபி மனஸாம்
யஸ்ய தே3வா முனீந்த்3ரா :
நோ வித்யு3ஸ் தத்வ ரூபம் கிமுபுனரபதே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || (98-1)
அதிஷ்டான ரூபியான எவரிடம் இந்தப் பிரபஞ்சம் ஆரோபிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்றதோ;
உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் உள்ள எவரிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ;
எவரிடம் சென்று இந்தப் பிரபஞ்சம் ஐக்கியம் ஆகின்றதோ; எவர் இந்தப் பிரபஞ்சமாகவே தோன்றுகின்றாரோ;
எவர் இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் வேறான உருவம் கொண்டவரோ;
எவருடைய பிரகாசத்தால் இந்தப் பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ;
எவர் வாக்குக்கும், மனோ விருத்திக்கும் வெகு தூரத்தில் இருக்கின்றாரோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லையோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தை எவருமே அறியவில்லையோ;
அப்படிப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என்னுடைய நமஸ்காரம்.
————–
ஜன்மாதோ2 கர்ம நாம ஸ்புடமிஹ
கு3ண தோ3ஷாதி3கம் வா ந யஸ்மின்
லோகானாமூதயே ய: ஸ்வய மனு பஜதே
தானி மாயானுஸாரீ |
பிப்ரச் சக்தீ ரரூபோபி ச
பஹுதர ரூபோSவ பாத்யத்புதாத்மா
தஸ்மை கைவல்ய தாம்னே பர ரஸ
பரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || ( 98-2)
எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா! இவ்வுலகில் எவரிடத்தில் பிறப்பு, கர்மம், பெயர், குணம், தோஷம்
முதலியவை இல்லையோ: எவர் லோக அனுக்கிரஹத்துக்காக மாயையை அனுசரித்து
அதைச் சுதந்திரனாக அங்கீகரிக்கின்றாரோ;
எவர் வித்யை, அவித்யை, ஞானம் ஐஸ்வர்யம் என்னும் சக்திகளை தரித்தவரோ;
எவர் உருவமே இல்லாத போதிலும் தாவர ஜங்கமங்களின் உருவங்களைத் தரிக்கின்றாரோ;
எவர் ஸ்ரீ மத்ஸ்யம் ஸ்ரீ கூர்மம் போன்ற அற்புத வடிவங்களில் பிரகாசிக்கின்றாரோ;
எவர் மோக்ஷமும், பரமானந்தமும் அளிப்பவரோ அவருக்கு நமஸ்காரம்.
——–
நோ திர்ய்ஞ்சன்ன மர்த்யம் ந ச ஸுரமஸுரம்
ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்3ரவ்யம் கர்ம ஜாதிம் கு3ணமபி
ஸத3ஸத்3வாSபிதே ரூப மாஹு: |
சி’ஷ்டம் யத் ஸ்யான் நிஷேதே4 ஸதி
நிக3ம ச’தைர் லக்ஷணா வ்ருத்தி தஸ் தத்
க்ருச்2ரேண அவேத்3ய மானம் பரம ஸுக2 மயம்
பா4தி தஸ்மை நமஸ்தே || ( 98 – 3 )
தங்கள் ஸ்வரூபம் பசு, பக்ஷி போன்ற திரியக் அல்ல; மனிதன் அல்ல; தேவன் அல்ல;
அசுரன் அல்ல; ஸ்த்ரீ அல்ல; புருஷன் அல்ல; திரவியம் அல்ல; கர்மம் அல்ல;
ஜாதி அல்ல; குணம் அல்ல; அந்தக்கரணம் அல்ல; அவ்யக்தம் அல்ல; என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“நேதி! நேதி! ” என்று ஒவ்வொன்றாக நிஷேதம் பண்ணும் போது எது கடைசியில் மிஞ்சுகின்றதோ,
அதுவே உபநிஷத்துக்களால் லக்ஷண விருத்தி அடைகின்றது.
வாச்ய, வாசக பாவம் இவற்றின் சம்பந்தம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அறிவிக்கப்படும்
ப்ரஹ்மானந்த மயமாக அது பிரகாசிக்கின்றது–அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை உடைய தங்களுக்கு என் நமஸ்காரம்.
——–
மாயாயாம் பி3ம்பி3தஸ்த்வம் ஸ்ருஜதி
மஹத3ஹங்கார தன் மாத்ர பே4தே3ர:
பூ4தக்3ராமேந்ந்த்ரியாத்யைரபி ஸகல ஜக3த்
ஸ்வப்ன ஸங்கல்ப கல்பம் |
பூ4ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட2 இவ
பதா3ன் யாத்மனா கால ச’க்த்யா
க3ம்பீ4ரே ஜாயமானே தமஸி விதி மிரோ
பா4ஸி தஸ்மை நமஸ்தே || ( 98 – 4)
மாயையில் பிரதிபலிக்கும் தாங்கள்; மஹத் தத்வம், அஹம் தத்வம் இவற்றுடன்; சப்தம், ஸ்பரிசம்,
முதலான ஐந்து தன் மாத்திரைகளைக் கொண்டும்; ஐந்து மஹா பூதங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனஸ் இவைகளைக் கொண்டும்;
ஸ்வப்பனத்துக்கும் சங்கல்பத்துக்கும் ஒப்பான பிரபஞ்சத்தைப் படைக்கின்றீர்கள்.
ஆமை தன் கால்களை உள்ளுக்கிழுப்பது போலவே, கால சக்தியால் இவை எல்லாவற்றையும் மீண்டும்
தங்களிடம் அடக்கிக் கொள்கின்றீர்கள். சுஷுப்தியில் ஆழ்ந்த இருளில் தாமஸ சம்பந்தம் இல்லாத
பிரகாச ரூபியாகத் தாங்கள் ஸ்வ ஸ்வரூபத்துடன் விளங்குகின்றீர்கள். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்!
அத்வைதிகள் -மாயம் -உலகு அனைத்தும் அவன் -பிம்பம் -ஸ்வப்னம் போல் -அவன் ஞான ஸ்வரூப -ஒருவனே ஸத்யம் -ப்ரஹ்ம நிவர்த்த வாதம்
நம் சம்ப்ரதாயம் –ப்ரஹ்மம் பரிமாண வாதம் –உலகமும் ஸத்யம் -மாயம் -ஆச்சார்ய சக்தி -ப்ரக்ருதி திரோதானகரீ -அவனையும் மறைக்கும் சக்தி –
—-
ச’ப்3த3 ப்3ரஹ்மேதி கர்மேத்யணுரிதி
ப4க3வன் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விச்’வ ஹேதும் ஸகலமயதயா
ஸர்வதா2 கல்ப்ய மானம் |
வேதா3ந்தைர் யத்து கீ3தம் புருஷ பரசித்3
ஆத்மாபி4த4ம் தத்து தத்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதிக்ருத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 5 )
சர்வ ஸ்வரூபியாக இருப்பதால், தாங்கள் எல்லா விதங்களிலும் கல்பிக்கப் படுகின்றீர்கள்.
சப்தப் ப்ரஹ்மம், கர்மம், பரமாணு, காலம் என்று தங்களையே பிரபஞ்சத்துக்குக் காரணமாகக் கூறுகின்றனர்.
உபநிஷத்துக்கள் புருஷன், பரன், சித், ஆத்மா என்று யாரைக் கூறுமோ அந்தத் தத்துவம்
தன் பார்வையாலேயே மூலப் பிரகிருதியையும் அதன் விகாரங்களையும் சிருஷ்டிக்கின்றது.
அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
சப்த ப்ரஹ்மம் -ஓங்காரம் -ப்ரஹ்மம் பற்றி வேறே வேறே சித்தாந்தம் -சதேவ ஸோம்ய-த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே
——-
ஸத்வேனாஸத்தயா வா ந ச க2லு
ஸத3ஸத்வேன நிர்வாச்யரூபா
த4த்தே யாஸாவவித்3யா கு3ண
பணிமதிவத்3 விச்’வத்3ருச்யாவபா4ஸம் |
வித்3யாத்வம் சைவ யாத ச்’ருதிவசனலவைர்
யத்க்ருபாஸ்யந்த3 லாபே4
ஸம்ஸாராரண்ய ஸத்3யஸ் த்ருடன
பரசு’தாமேதி தஸ்மை நமஸ்தே || ( 98 – 6 )
சத் ( இருப்பது) என்றோ, அசத் (இல்லாதது) என்றோ, சதசத் ( இருந்தும் இல்லாதது ) என்றோ,
வார்த்தைகளால் கூற முடியாத அவித்யை; ஒரு வெறும் கயிற்றில் ஒரு பாம்பைத் தோற்றுவிப்பது போல
அனைத்து த்ருச்ய வஸ்துக்களையும் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கின்றது.
அதே அவித்யை பகவானுடைய கருணைக் கடாக்ஷம் கிடைக்கும் போது உடனே வித்தையாக மாறிவிடுகிறது.
சம்சாரம் என்னும் வனத்தை வெட்டும் கோடாரியாக மாறி விடுகின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
ப்ரமம் -அத்வைத வாதம் -அவித்யை என்பர் -கயிறு பாம்பு -போல் –
சப்தவித அனுபபத்தி -ஸ்ரீ பாஷ்யம் – காட்டி அருளுகிறார் -ஸ்வரூப -கர்மரூபம் -நம் சம்ப்ரதாயம் -உலகம் பொய்யல்லவே -தாழ்ச்சியை உணர்ந்து அவன் தாளிணைக் கீழ் வாழ்ச்சி –
——
பூ4ஷாஸு ஸ்வர்ணவத்3வா ஜக3தி
க4ட ச’ராவாதி3கே ம்ருத்திகாவத்
தத்வே ஸஞ்சிந்த்யமானே ஸ்புரதி
தத3து4னாSப யத்3விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்ன த்3ரஷ்டு: ப்ரபோ3தே4 திமிர லயவிதௌ4
ஜீர்ண ராஜ்ஜோச்’ச யத்3வத்
வித்3யாலாபே4 ததை2வ ஸ்புடமபி விகஸேத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 7 )
ஹே ஸ்ரீ கிருஷ்ணா! உண்மையை ஆராயும் போது குண்டலம் முதலிய
ஆபரணங்களில் உள்ள ஸ்வர்ணத்தைப் போலவும்,
குடம் முதலியவற்றில் உள்ள மண்ணைப் போலவும்,
ஜகத்துக்குக் காரணமான தங்களின் ரூபம் பிரகாசிக்கின்றது.
கனவு விழித்து எழும் போது கனவுலகு அழிந்து விடுகின்றது.
தீபத்தின் ஒளி கிடைக்கும் போது கயிற்றில் தெரியும் பாம்பு மறைந்து போகின்றது.
அது போன்றே ப்ரஹ்ம ஞானம் ஏற்படும் போது பிரபஞ்சத்தின் தொடர்பு அழிந்து அந்த
ப்ரஹ்மம் சத் சித் ஆனந்த மயமாகப் பிரகாசிக்கும். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
ஞானந் மோக்ஷம் –
குடமோ மடக்கோ பொய் தோற்றம் அல்லவே -ப்ரஹ்ம சரீரமே சேதன அசேதநங்கள் -கனவும் ஒருவகையில் உண்மை நம் சம்ப்ரதாயம் -கர்ம பலன்களே இவையும்
—–
யத்3 பீ4த்யோதே3தி ஸூர்யோ த3ஹதி
ச த3ஹனோ வாதி வாயுஸ் ததான்யே
யத்3 பீ4தா: பத்3ம ஜாத்3யா: புனருசித
ப3லீனாஹரந்தேSனுகாலம் |
யேனை வாரோபிதா: ப்ராங்க் நிஜ பத3மபி
தே ச்யாவிதாரச்’ச பச்’யாத்
தஸ்மை விச்’வம் நியந்த்ரே வயமபி
ப4வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || (98 – 8 )
ஹே ஸ்ரீ கிருஷ்ணா! யாரிடம் கொண்ட பயத்தினால் சூரியன் உதிக்கின்றானோ, அக்கினி எரிக்கின்றானோ,
காற்று வீசிகின்றதோ, பிரமன் முதலானவர்கள் காலம் தவறாமல் செயல் புரிகின்றார்களோ,
யாரால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களுக்கு நியமிக்கப் படுகின்றார்களோ,
யாரால் பிறகு அங்கிருந்து தள்ளப் படுகின்றார்களோ அப்படி எல்லாவற்றையும்
நியமனம் செய்யும் தங்களுக்கு நமஸ்காரம்.
—–
த்ரை லோக்யம் பா4வயந்தம் த்ரி கு3ண மயமித3ம்
த்ர்யக்ஷரஸ் யைக வாச்யம்
த்ரீசா’னாமைக்ய ரூபம் த்ரி பி4ரபி
நிக3மைர் கி3யமான ஸ்வரூபம் |
திஸ்ரோSவஸ்தா வித3ந்தம் த்ரி யுக3 ஜனி ஜுஷம்
த்ரி கர்மா க்ராந்த விச்’வம்
த்ரை கால்யே பே4த ஹீனம் த்ரி பி4ரஹ மனிச’ம்
யோக பே4தை3ர் ப4ஜே த்வாம் || ( 98 – 9 )
சத்வம், ரஜஸ், தமஸ், என்ற முக்குணங்களின் விகாரமாக இந்த மூவுலகை சிருஷ்டிப்பவரும்;
அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று அக்ஷரங்களை உடைய பிரணவத்தின் முக்கிய பூதரும்;
பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மும் மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவத்தை உடையவரும்;
ருக், யஜுர், ஸாம என்ற மூன்று வேதங்களால் கானம் செய்யப்படும் ஸ்வரூபத்தை உடையவரும்;
ஜாக்கிரதை, ஸ்வப்பனம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளை அறிகின்றவரும்;
திரேதா, துவாபரம், கலி என்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவரும்;
மூன்றடிகளால் மூவுலகங்களை முழுமையாக ஆக்கிரமித்தவரும்;
பூதம், வர்த்தமானம், பவிஷ்யம் என்ற மூன்று காலங்களிலும் பேதமற்றவரும்;
ஆகிய தங்களை நான் கர்ம, ஞான, பக்தி என்ற மூன்று யோகங்களாலும் வழிபடுவேன் ஆகுக!
——–
ஸத்யம் சு’த்3த4ம் விபு3த்3த4ம் ஜயதி தவ வபு:
நித்ய முக்தம் நிரீஹம்
நிர் த்3வந்த்3வம் நிர் விகாரம் நிகி2ல கு3ண க3ண
வ்யஞ்ஜனாதா4ர பூ4தம் |
நிர் மூலம் நிர் மலம் தாந் நிரவதி4
மஹிமோல்லாஸி நிர்லீனமந்த:
நிஸ் ஸங்கா3னாம் முனீனாம் நிருபம
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம் || ( 98 – 10)
பரமார்த்த சத்யம் ஆனதும்; மாயையின் சம்பந்தம் இல்லாததும்; ஸ்வயம் பிரகாசமானதும்;
எப்போதும் சுதந்திரமாக இருப்பதும், கர்த்துருத்வம் போன்றவை இல்லாததும்; ஸ்வஜாதீய பேதம் இல்லாததும்;
சமஸ்த ஜீவர்களின் நற் குணங்களுக்கு ஆதாரமாக இருப்பதும்; தனக்கு காரணமாக எவருமில்லாததும்;
ஆளவில்லாத மகிமையுடன் பிரகாசிப்பதும்; பற்றற்ற முனிவர்கள் தம் அந்தக்கரணத்தில் பற்றி இருப்பதும்;
பரமானந்தமும், பிரகாசமும் கொண்ட தங்கள் ஸ்வரூபம் மேன்மை பெற்று விளங்குகின்றது.
—-
து3ர்வாரம் த்3வாத3சா’ரம் த்ரிச’த பரிமிலத்
ஷஷ்டி பர்வாபி4வீதம்
ஸம்ப்4ராம்யத் க்ரூர வேக3ம் க்ஷணமனு
ஜக3தா3ச் சி2த்3ய ஸந்தா4வமானம் |
சக்ரம் தே கால ரூபம் வ்யத2யது ந து மாம்
த்வத் பதை3காவ லம்ப3ம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ4
பவன புர பதே பாஹி ஸர்வாமயௌகா4த்|| ( 98 – 11)
ஹே ஸ்ரீ விஷ்ணோ! யாராலும் தடுக்க முடியாததும், பன்னிரண்டு மாதங்கள் என்னும் ஆரங்களை உடையதும்;
முன்னூற்று அறுபது நாட்கள் என்னும் முனைகள் சூழந்ததும், கொடிய வேகத்துடன் நன்கு சுழல்வதும் ;
ஒவ்வொரு க்ஷணத்திலும் உலகை பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்து ஓடும் தங்கள்
காலச் சக்கரம் தங்கள் திருவடிகளில் அவலம்பிதிருக்கும் அடியோங்களை வருத்தக் கூடாது.
கருணைக் கடலான ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –
கால சக்ரத்தோடு வெண் சங்கம் கை யேந்தினாய் -ஆழ்வார்
—————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply