பக்தியின் பெருமையைச் சொல்லி -மார்க்கண்டேயர் சரித்திரம் அருளிச் செய்கிறார்-
த்ரை குண்யாத்3 பி4ன்ன ரூபம் ப4வதி ஹி
பு4வனே ஹீன மத்4யோத்தமம் யத்3
ஞானம் ச்’ரத்3தா4 ச கர்த்தா வலதிரிதி
ஸுக2ம் கர்ம சாஹார பே4தா3 : |
த்வத் க்ஷேத்ர த்வம் நிஷேவாதி3 து யதி3ஹ
புனஸ் த்வத் பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர் நைர் கு3ண்ய நிஷ்ட2ம் தத3னு பஜனதோ
மங்க்க்ஷு ஸித்3தௌ4 ப4வேயம் || ( 97 – 1)
இந்த உலகில் ஞானம், சிரத்தை, கர்த்தா, வாசஸ்தலம், சுகம், கர்மம், ஆகாரம் போன்ற அனைத்துமே
சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக் குணங்களின் பேதத்தால் வேறுபடுகின்றன என்பது பிரசித்தி.
ஆனல் தங்களையும், தங்கள் பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களையும் சேவிப்பது தங்கள் விஷயமாகவே
நடைபெற்றால் அவைகளை மட்டும் நிர் குணம் என்று கூறுவதுண்டு-
அதன் படி அவற்றை அடிக்கடி சேவிக்கும் நான் விரைவில் முக்தி அடைவேன் ஆகுக.
சுத்த ஸத்வம் -அப்ராக்ருதம் போல் திவ்ய க்ஷேத்ர வாசமும் கைங்கர்யங்களும் –
மற்றவர் மிஸ்ர ஸத்வமே
———–
த்வய்யேவ ந்யஸ்த சித்தஸ் ஸுக2மயி
விசரன் ஸர்வ சேஷ்டாஸ் த்வத3ர்த்த2ம்
த்வத்3 ப4க்தைஸ் ஸேவ்ய மானானபி
சரிதசராநாச்’ரயன் புண்ய தே3சா’ன் |
த3ஸ்யௌ விப்ரே ம்ருகா3தி3ஷ்வபி ச
ஸம மதிர் முச்ய மானாவமான
ஸ்பர்த4 அஸூயாதி3 தோ3ஷஸ் ஸததம்
அகி2ல பூ4தேஷு ஸம் பூஜயே த்வாம் || ( 97 – 2)
ஹே ஸ்ரீ ஈசா! தங்களிடம் மனத்தைச் செலுத்தி விட்டு; சுகமாகச் சஞ்சரித்துக் கொண்டு;
சகல பிரவிருத்திகளையும் தங்களுக்காகவே செய்து கொண்டு; தங்கள் பக்தர்களால் இப்போது செய்யப்படும்,
முன்னர் செயப்பட்ட புண்ணிய கர்மங்களைச் செய்து கொண்டு; புண்ணிய க்ஷேத்திரங்களைச் சேவித்துக் கொண்டு;
திருடன், பிராமணன், மிருகம் போன்ற எல்லோரிடமும் சமபுத்தியுடன் இருந்து கொண்டு;
அவமானம், விரோதம், அசூயை போன்ற குணங்களை விட்டு விட்டு; எல்லா உயிர்களிடமும் தங்களை பூஜிப்பேனாகுக!
——–
த்வத்3 பா4வோ யாவதே3ஷு ஸ்புரதி ந
விச’த3ம் தாவதேவம் ஹ்யுபாஸிதம்
குர்வன் நைகாத்ம்ய போ3தே4 ஜ்ஜடிதி விகஸதி
த்வன் மயோSஹம் சரேயம் |
த்வத்3 த4ர்மஸ் யாஸ்ய தாவத் கிமபி ந
ப4க3வன் ப்ரஸ்து தஸ்ய ப்ரணாச’:
தஸ்மாத் ஸர்வாத்மனைவ ப்ரதி3ச’
மம விபோ4 ப4க்தி மார்க்க3ம் மனோக்ஞம் || ( 97 – 3)
இந்தத் திருடன், பிராமண, பசு போன்றவற்றில் ஈஸ்வர பாவம் ஸ்பஷ்டமாக விளங்கும் வரையில்,
எல்லாவற்றிலும் உள்ள ஆத்மா ஒன்றே என்று எண்ணிக் கொண்டு நான் சஞ்சரிப்பேனாகுக.
ஐஸ்வர்யம் ஆதி குணங்கள் நிறைந்த ஸ்ரீ தேவா!
இந்த பாகவத கர்மத்துக்கு தொடக்கம் முதல் முடிவு வரை குறைவு என்பதே இல்லை.
ஆகையால் எனக்கு மனத்தைக் கவரும் பக்தி மார்க்கத்தைத் தந்தருள்வீர்.
———–
தச்சைனம் ப4க்தி யோக3ம் த்3ரட4யிதுமயி மே
ஸாத்4யமாரோக்3ய மாயு:
தி3ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ
பே4ஷ ஜாயேவ து3க்3த4ம் |
மார்கண்டே3யோ ஹி பூர்வம் க3ணக நிக3தி3த
த்3வாத3சா’ப்3தா3யு ருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப4ட நிவஹைர்
த்3ராவயாமாஸ ம்ருத்யும் || (97 – 4 )
ஹே ஸ்ரீ ஈசா! இந்த பக்தி யோகம் உறுதி அடைவதற்கு அடியோங்களை ரோகம் நீங்க வேண்டும்; ஆயுள் கூட வேண்டும்.
அவற்றைப் பெறுவதற்கும் தங்கள் திருவடிகளே மருதுக்கான பால் போல ஆகின்றன. அதுவும் கூட நன்மைக்கே!
முன்னொரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவருக்கு ஜோசியர்கள் பன்னிரண்டு ஆண்டு ஆயுளைக் கூறினார்கள்.
அவர் தங்களை ஒரு வருஷம் நன்றாகச் சேவித்துத் தங்கள் படர்களின் உதவியுடன் யமனையே விரட்டினார்.
பக்தியே விருந்தாகவும் மருந்தாகவும் இருக்கும் -பால் பித்தம் போக்கவும் -இனிமையாக அனுபவிக்கும் -போல் -மருந்தும் அமுதமும் இதுவே –
——–
மார்கண்டே3யச்’சிராயுஸ்ஸ க2லு புனரபி
த்வத் பர: புஷ்ப ப4த்3ரா
தீரே நின்யே தபஸ் யன்னதுல ஸுக2ரதி :
ஷட் து மன்வந்தராணி |
தே3வேந்த்3ரஸ் ஸப்தமஸ்தம் ஸுர யுவதி
மருந் மன்மதை2ர் மோஹ யிஷ்யன்
யோகோ3ஷ்மப்லுஷ்ய மாணைர் ந து
புனரச’க் த்வஜ் ஜனம் நிர்ஜயேத் க: || ( 97 – 5 )
சிரஞ்சீவியான ஸ்ரீ மார்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்ற பின்னரும் தங்கள் பக்தனாகவே இருந்தார்.
புஷ்ப பத்திரா நதிக் கரையில் தபஸ் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார்.
ஏழாவது மன்வந்தரத்தில் தேவேந்திரன் ஸ்ரீ மார்க்கண்டேயரை அப்சரஸ்கள், வசந்த மாருதன், மன்மதன்
இவர்கள் உதவியுடன் மயக்க எண்ணினான்.
ஸ்ரீ மார்க்கண்டேயரின் யோகக்கினியால் தகிக்கப்பட்ட அவர்களால் அவரை மயக்க முடியவில்லை.
தங்கள் பக்தனை யாரால் ஜெயிக்க முடியும்?
———
ப்ரீத்யா நாராயணாக்2ய ஸ்த்வமத2 நர ஸக2:
ப்ராப்த வான் அஸ்ய பார்ச்’வம்
துஷ்ட்யா தோஷ்டூய மானஸ் ஸது விவித4வரை:
லோபி4தோ நானுமேனே |
த்3ரஷ்டும் மாயாம் த்வதீ3யாம் கில
புனர் அவ்ருணோத் ப4க்தி த்ருப்தாந்தராத்மா
மாயாது:கா2னபி3க்ஞ ஸ்தத3பி ம்ருக3யதே
நூன மாச்’சர்ய ஹேதோ: || ( 97 – 6 )
பிறகு ஸ்ரீ நாராயணன் மற்றும் ஸ்ரீ நரன் ஆன தாங்கள் அந்த ஸ்ரீ மார்க்கண்டேயன் அருகில் வந்தீர்கள்.
மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்துதித்த ஸ்ரீ மார்க்கண்டேயன் பல வரங்களால் ஆசை மூட்டப் பட்ட போதும்,
பக்தியினால் திருப்தி அடைந்து இருந்ததால் அந்த வரங்களைக் கேட்க வில்லை.
ஆனால் அவர் தங்கள் மாயையைப் பார்க்க விரும்பினார்.
மாயையினால் உண்டாகும் வருத்தத்ததை அவர் அறியாததால் அதைக் காண விரும்பி இருக்க வேண்டும்.
——
யாதே த்வய்யாசு’ வாதாகுல ஜலத3க3லத்
தோய பூர்ணாதி கூ4ர்ணத்
ஸப்தார்ணோராசி’ மக்3னே ஜக3தி ஸ து
ஜலே ஸம் ப்4ரமன் வர்ஷ கோடி: |
தீ3ன: ப்ரைக்ஷிஷ்ட தூ3ரே வட த3ல ச’யனம்
கஞ்சிதா3ச்’ச்ர்யா பாலம்
த்வாமேவ ச்’யாமளாங்க3ம் வத3ன ஸரஸி
ஜன்யஸ்த பாதா3ங்கு3லீகம் || ( 97 – 7 )
தாங்கள் சென்றவுடன், தாமதியாமல் பிரளய மேகங்கள் பொழிந்த கன மழையால் நிரம்பிய
சப்த சாகரங்களில், பூமி மூழ்கி விட்டது. ஸ்ரீ மார்க்கண்டேயர் அந்தப் பிரளய ஜலத்தில் அனேக கோடி வருஷங்கள்
சுழன்று திரிந்து வருந்தினார். நீரின் மேல் ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, சியாமள வர்ணத்துடன்,
கால் விரலை வாயில் வைத்துச் சுவைக்கும் ஒரு அற்புதக் குழந்தையான தங்களை வெகு தொலைவில் கண்டார்.
———-
த்3ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்ட ரோமா த்வரிதமபி4க3த :
ஸ்ப்ரஷ்டு காமோ முநீந்த்3ர:
ச்’வாஸேனாந்தர் நிவிஷ்ட: புனரிஹ ஸகலம்
த்3ருஷ்டவான் விஷ்ட பௌக4ம் |
பூ4யோSபி ச்’வாஸ வாதைர் ப3ஹிரனுபதிதோ
வீக்ஷிதஸ் த்வத் கடாக்ஷை:
மோதா3 தா3ச்’லேஷ்டு காமஸ் த்வயி பிஹித தனௌ
ஸ்வாச்’ரமே ப்ராக3வதா3ஸீத் || ( 97 – 8 )
தங்களைக் கண்டு மயிர் கூச்சம் அடைந்து, தங்களைத் தொட விரும்பி, விரைவாகத் தங்கள் பக்கம் வந்தார்.
தங்களின் மூச்சுக் காற்றுடன் உள்ளே சென்றவர் அங்கே உலகம் அனைத்தையும் பார்த்தார்.
மறுபடியும் மூச்சுக் காற்றுடன் வெளியே வந்தவர் தங்களை ஆலிங்கனம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால் தாங்கள் தங்கள் சரீரத்தை உடனே மறைத்து விடவே
அவர் தான் முன் போலவே தன் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டார்.
———-
கௌ3ர்யா ஸார்த்த4ம் தத3க்3ரே புரபி4த3த2
க3தஸ் த்வத் ப்ரிய ப்ரேக்ஷ ணாரத்தீ2
ஸித்3தா4னேவாஸ்ய த3த்வா ஸ்வயமயம்
அஜர அம்ருத்யுதாதீ3ன் கா3தோSபூ4த் |
ஏவம் த்வத் ஸேவயைவ ஸ்மரரிபுரபி
ஸ ப்ரயதே யேன தஸ்மாத்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ் த்வம் நனு ஸகல
நியன்தேதி ஸவ்யக்த மாஸீத் ( 97- 9)
அதற்குப் பிறகு ஸ்ரீ பரமேஸ்வரன் தங்கள் பக்தனைக் காண்பதற்குப் ஸ்ரீ பார்வதி தேவியுடன் வந்தார்.
ஸ்ரீ மார்க்கண்டேயன் முன் சென்று, அவர் தன் தவ மகிமையால் முன்பே பெற்றிருந்த ஜனன மரணமின்மையை
அவருக்கு தான் அளிக்கும் வரமாக அருளி விட்டுச் சென்றார்.
ஸ்ரீ பரமேஸ்வரன் கூடத் தங்களைச் சேவிப்பதில் பிரீதி அடைகின்றார் என்பதால்
தாங்களே மும் மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி என்பது தெளிவாகின்றது அல்லவா?
——–
த்ர்யம் சோ’Sஸ்மின் ஸத்ய லோகே விதி4ஹரி
புரபி4ன் மந்தி3ராண் யூர்த்4வ மூர்த்4வம்
தேப்4யோSப் யூர்த்4வம் து மாயா விக்ருதி விரஹிதோ
பா4தி வைகுண்ட2 லோக: |
தத்ர த்வம் காரணாம்ப4ஸ்யாபி பசு’ப குலே
சு’த்3த4 ஸத்வைக ரூபி
ஸச்சித் ப்3ரஹ்ம அத்3வயாத்மா பவன புர பதே
பாஹிமாம் ஸர்வ ரோகா3த் || (97 -10)
பிரம்ம லோகம் , விஷ்ணு லோகம், சிவ லோகம் என்னும் மூன்று பாகங்களை யுடைய அந்த சத்திய லோகத்தில்,
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களின் லோகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உள்ளன.
தங்களின் ஸ்ரீ வைகுண்டமோ எனில் மாயையும் அதன் காரியங்களாகிய மஹத், அஹங்காரம் முதலிய
பதினாறு விகாரங்களும் அற்றதாக அந்த மூன்று லோகங்களுக்குள் மேலே பிரகாசிக்கின்றது.
அந்த ஸ்ரீ வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், ஸ்ரீ கோகுலத்திலும், தாங்கள் சுத்த சத்துவ ஸ்வரூபியாகவும்,
சத் சித் ஆனந்த பிரம்ம ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply