ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -96–ஸ்ரீ பகவத் விபூதியம்–பக்தி யோக மஹாத்ம்யம்-

ஸ்ரத்தரா சந்தஸ்-

தவம் ஹி ப்3ரஹ்மைவ ஸாக்ஷாத்
பரமுருமஹிமன் னக்ஷராணாமகார:
தாரோ மந்த்ரேஷு ராஞாம் மனுரஸி முனிஷு
த்வம் ப்4ருகுர் நாரதோ3பி |
ப்ரஹ்லாதோ3 தா3னவனாம் பசு’ஷுச
ஸுரபி4 பக்ஷிணாம் வைனதேயோ
நாகா3னாமஸ்யனந்தச் ஸுரஸரித3பி
ச ஸ்ரோதஸாம் விஸ்வ மூர்த்தே || ( 96 – 1)

அதிக மகிமை உடைய ஸ்ரீ விஸ்வ மூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் ஸ்ரீ பர ப்ரஹ்மம் ஆவீர்கள்.
அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்;
முனிவர்களுக்குள் ஸ்ரீ ப்ருகு மற்றும் ஸ்ரீ நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ஸ்ரீ ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்;
பட்சிகளில் ஸ்ரீ பெரிய திருவடியாகவும் ; நாகங்களில் ஸ்ரீ அனந்தனாகவும்,
நதிகளில் ஸ்ரீ கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள் ( 96 – 1 )

————–

ப்3ரஹ்மண்யானம் ப3லிஸ்த்வ்ம் க்ரதுஷு ச
ஜப யக்ஞோஸி வீரேஷு பார்த்தோ2
ப4க்தானாமுத்3த்4வஸ்தம் பலமஸி ப3லினாம்
தா4ம தேஜஸ்வினாம் த்வம்|
நாத்ஸ்யந்தஸ் த்வத் விபூ4தேர் விகாஸ
த3திச’யம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா3னம் யதி3ஹ
ப4வத்3ருதே தன்ன கிஞ்சித் ப்ரபஞ்சே || ( 96 – 2 )

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்;
வீரர்களுக்குள் ஸ்ரீ அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் ஸ்ரீ உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்;
தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை.
விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்!
ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே,
இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா? ( 96 – 2 )

———

த4ர்மம் வர்ணாச்’ரமாணாம் ச்’ருதி பத2 விஹிதம்
த்வத் பரத்வேன ப4க்த்யா
குர்வன்தோSந்தர் விராகே3 விகஸதி
ச’னகைஸ் ஸந்த்ய ஜந்தோ லப4ந்தே|
ஸத்தாஸ் பூர்த்தி ப்ரியத் வாத்மகம்
அகி2ல பதா3ர்தேஷு பி4ன்னேஷ்வ பி4ன்னம்
நிர் மூலம் விச்’வ மூலம் பரம மஹமிதி
த்வத்3 விபோ4த4ம் விசு’த்3த4ம் || ( 96 – 3 )

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேத மார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை
ஸ்ரீ ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும் போது
கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள்; சச்சிதானந்த ரூபமானதும்,
வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும்,
தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் ஸ்ரீ பரமாத்மாவாகிய
தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள். ( 96 – 3 )

நம் சம்ப்ரதாயம் கர்ம அனுஷ்டானங்களை விடவே கூடாது –
ஞானம் வடிவாகவும் -ஞானமுடையவனாயும் ஜீவன்
அணு மாத்திரம் -பரன் விபு -ஆத்மஞானம் வந்து பக்தி யோக த்யானம் ஈடுபட்டு அவனையும் அறிந்த பின்பே மோக்ஷம்
இம் மூன்று வேறுபாடுகள்

———–

ஞானம் கர்மாபி ப4க்திஸ் த்ரிதயமிஹ
ப4வத்3 ப்ராபகம் தத்ரதாவன்
நிர்விண்ணானா மசே’ஷே விஷய இஹ
ப4வேத் ஞான யோகோ3Sதி4கார:|
ஸக்தானாம் கர்ம யோக3ஸ் த்வயி ஹி
விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா:
நாப்யப்யந்தம் விரக்தாஸ் த்வயி ச
த்3ருத ரஸா ப4க்தி யோகோ3 ஹ்யமீச’ம்|| ( 96 – 4 )

இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும்.
இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷய சுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே
ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும்.
விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது.
எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ ,
தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது ( 96 – 4 )

நம் சம்ப்ரதாயம் பக்தி வேறே பக்தி யோகம் வேறே –
பக்தி யோகம் ஒன்றே அவனை அடைய வழி
ஆத்ம தர்சனம் மட்டுமே கர்ம யோகமும் ஞான யோகமும் பெற்றுத் தரும்

—————–

ஞானம் த்வத்3 ப4க்தானாம் வா லகு4
ஸுக்ருத வசா’ன் மர்த்யலோகே லப4ந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி
ப4கவன் நாககோ3 நாரகோ வா|
ஆவிஷ்டம் மாம் து தை3வாத்3 ப4வ ஜல நிதி4
போதாயிதோ மர்த்ய தே3ஹே
த்வம் க்ருத்வா கர்ண தா3ரம் கு3ரு மனு கு3ண
வாதாயிதஸ் தாரயேதா2:|| ( 96 – 5)

ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால்
பிரயாசை இன்றி அடைகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும்,
மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான்.
சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும்,
ஸ்ரீ ஆச்சாரியானைப் பட கோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து,
அடியோங்களைக் கரை சேர்ப்பீர் ஆகுக. ( 96 – 5 )

———–

அவ்யக்தம் மார்க3யந்த: ச்’ருதி பி4ரபி நயை:
கேவல ஞான லுப்தா4:
க்லிச்’யன்தே Sதீவ ஸித்3தி4ம் ப3ஹு தர
ஜனுஷா மந்த ஏவாப்னுவந்தி|
தூ3ரஸ்த2: கர்ம யோகோ3பி ச பரம ப2லே
நன்வயம் ப4க்தி யோகஸ்
த்வா மூலாதே3வ ஹ்ருத்யஸ் த்வரிதமயி
ப4க3வத் ப்ராபகோ வர்த்த4தாம் மே|| ( 96 – 6 )

வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும்,
அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள்.
கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான
மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது.
ஹே ஸ்ரீ பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய
இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது. ( 96 – 6 )

——–

ஞானாயை வாதியத்னம் முனிரப வத3தே
ப்3ரஹ்ம தத்வம் து ச்’ருண்வன்
கா3ட4ம் த்வத் பாத3 ப4க்திம் ச’ரணமயதி
யஸ் தஸ்ய முக்தி: கராக்3ரே |
த்வத்3 த்4யானேSபோஹ துல்யா புனரஸுகரதா
சித்த சாஞ்சல்ய ஹேதோ:
அப்4யாஸாதா3சு’ ச’க்யம் தத3பி வச’யிதும்
த்வத் க்ருபா சாருதாப்4யாம்|| ( 96 – 7 )

ஸ்ரீ வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும்
அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார்.
ஆனால் எவன் ஒருவன் ப்ரஹ்ம தத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன்
உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது
ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்ய முடியாது என்பது துல்லியமே.
ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும்
தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும். ( 96 – 7 )

பக்தி யோகம் -செய்து ஸர்வ பல கேசவ -ஐஸ்வர்யத்துக்கும் ஆத்ம அனுபவத்துக்கும் -பகவத் லாபத்துக்கும் -இதுவே –

—–

நிர்விண்ண: கர்ம மார்கே3 க2லு விஷமதமே
த்வத் கதா2 யாதௌ3 ச கா3ட4ம்
ஜாதச்’ரத்3தோ4Sபி காமனயி பு4வன பதே
நைவ ச’க்னோமி ஹாதும்|
தத்3 பூ4யோ நிச்’சயேன த்வயி நிஹித மனா
தோ3ஷபு3த்3த4யா ப4ஜஸ்தான்
புஷ்ணீயாம் ப4க்திமேவ த்வயி ஹ்ருத3ய க3தே
மங்க்ஷு நங்க்ஷயந்தி ஸங்கா3 || ( 96 – 8 )

ஹே ஸ்ரீ லோக நாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்; தங்கள் சரித்திரம் முதலியவற்றில்
திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்; கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன்.
ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக் கொண்டும், தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும்
அனுபவித்துக் கொண்டும், பக்தியை வளர்ப்பேன் ஆகுக
தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா? ( 96 – 8 )

மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14

——–

கச்’சித் க்லேசா’ர்ஜிதார்த்த2க்ஷய
விமல மதிர் நுத்3யமானோ ஜனௌ கை4:
ப்ராகே3வம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜன:
கால கர்மாக்ர ஹாவா|
சேதோ மே து3:க2ஹேதுஸ் ததி3ஹ கு3ண  க3ணாம்
பா4வயத் ஸர்வகாரீ
த்யுக்த்வா சா’ந்தோ க3தஸ் த்வாம் மம ச குரு விபோ4
தாத்3ருசீ’ம் சித்த சா’ந்திம் || ( 96 – 9 )

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து,
அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
“என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல-
மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை
ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது” என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத்
தங்களை வந்து அடைந்தான் ஹே ஸ்ரீ பிரபு! அந்த மனச் சாந்தியை எனக்கும் தந்தருள்வீர் ( 96 – 9 )

——-

ஐல: ப்ராகு3ர்வசீ’ம் ப்ரத் யதிவிவச’மனாஸ்
ஸேவமானச்’ சிரம் தாம்
கா3ட4ம் நிர்வித்3ய பூ4யோ யுவதி ஸுக2மித3ம்
க்ஷுத்3ர மேவேதி கா3யன்|
த்வத்3 ப4க்தீம் ப்ராப்ய பூர்ணஸ்
ஸுக2தரமசரத் தத்3 வது3த்3தூ4யஹ ஸங்க3ம்
ப4க்தோத்தம் ஸம் க்ரியாமாம் பவன புர பதே
ஹந்தமேருந்தி3 ரோகா3ன் || ( 96 – 10 )

முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து,
வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான வைராக்கியத்தை அடைந்து,
“இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!” என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து,
பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து,
அடியோங்களை பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக!
அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ( 96 – 10)

இல அரசனின் மகன் ப்ரூரவஸ் –ஐல: ப்ராகு3ர்

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading