ஸ்ரத்தாரா ஸந்தஸ்
ஆதௌ3 ஹைரண்ய க3ர்ப்பீ4 தனு மவிகல
ஜீவாத்மிகா மாஸ்த்தி3தஸ் த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயா கு3ண க3ண கசிதோ
வர்த்தஸே விச்’வ யோனே |
தத்ரோத்3 வ்ருத்3தே4ன ஸத்வேன து
கு3ண யுக3ளம் ப4க்தி பா4வம் க3தேன
ச்சி2த்வா ஸத்வம் ச ஹித்வா புனரனு பஹிதோ
வர்த்திதாஹே த்வமேவ || (95 – 1)
பிரபஞ்சத்திற்குக் காரணமாகிய ஸ்ரீ ஈசா ! சிருஷ்டியின் ஆரம்பத்தில் தாங்கள்
சூக்ஷ்ம சரீரங்களின் சமஷ்டி ரூபத்தையும், ஹிரண்ய கர்ப்பனின் சரீரத்தையும் அடைந்து இருந்தீர்கள்.
பிறகு வியஷ்டித் தன்மையை அடைந்தீர்கள். மாயா காரியங்கள் ஆகிய மஹத் தத்துவம், அஹங்காரம்,
பஞ்ச பூதங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்சப் பிராணன்கள் என்ற
தத்துவங்களின் கூட்டமாகிய சரீரத்துடன் சம்பத்தப் பட்டுள்ளீர்கள்.
அந்த மாயா குணங்களுள், நன்கு விருத்தி அடைந்த, பக்தி ரூபமாகப் பரிணமித்த,
சத்துவ குணத்தினால் நான் ராஜஸ, தாமஸ குணங்களை அழித்துவிடுவேன்.
பிறகு சத்துவ குணத்தையும் விட்டு விட்டுப் பரிபூர்ணன் ஆகிய தாங்களாகவே நான் இருக்கப் போகின்றேன்.
அத்வைதி ஸித்தாந்தம்
ஜீவ ஸமூஹம் -அந்தர்யாமியாக ப்ரஹ்மம் -நம் ஸித்தாந்தம் -பிரகாரி பிரகாரம் -சரீராத்மா பாவம் –
மாயை -ஆச்சார்யம் நாம் -பொய் மித்யை அத்வைதி –
முக்குணம் கட்டுப்படுத்தி வைக்கும்-முக்குணங்களும் நீங்கினால் முக்தி அவ்ர்கள் -சுத்த சத்வ மயமாக வேண்டும் -நம் ஸித்தாந்தம்
ஐக்யம் -அல்லல் புத்தி -ப்ரீதி காரித அனுபவம் கைங்கர்யம் -பரம புருஷார்த்தம் –
————
ஸத்வோன்மேஷாத் கதா3சித் க2லு விஷய ரஸே
தோ3ஷ போ3தோ4Sபி பூ4மன்
பூ4யோSப்யேஷு ப்ரவ்ருத்திஸ் ஸதமஸி
ரஜஸி ப்ரோத்3த4தே து3ர் நிவாரா |
சித்தம் தாவத் கு3ணாச்’ச க்3ரதி2தமிஹ
மித2ஸ்தானி ஸர்வாணி ரோத்3து4ம்
துர்யே த்வய்யேக ப4க்திச்’ சரணமிதி ப4வான்
ஹம்ஸ ரூபி ந்யகா3தீ3த் || ( 95 – 2)
பரிபூர்ண ஸ்வரூபியே! சத்துவ குணத்தின் அபிவிருத்தியால், விஷய அனுபவத்தில்
உள்ள தோஷங்களின் ஞானம் உண்டாகும்.
ஆனால் ரஜோ குணத்துடன் கூடிய தமோ குணம் விருத்தி அடையும் போது இந்த விஷயங்களில்
பிரவிருத்தி ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
இவ்வாறு இருக்கும் வரையில் நான்கு அந்தக் கரணங்களும் மூன்று குணங்களும்
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
மூன்று அவஸ்தைகளையும் கடந்து நிற்கும் தங்களிடம் கொள்ளும் ஏகாக்கிரா பக்தி ஒன்றே
இவற்றை யெல்லாம் தடுக்கும் என்பதை ஹம்ச ரூபியாகத் தாங்கள் சனகாதியருக்கு உபதேசித்தீர்கள் அல்லவா ?
—————–
ஸந்தி ச்’ரேயாம்ஸி பூ4மாம்ஸ் யபி ருசிபி4த3யா
கர்மிணாம் நிர்மிதானி
க்ஷுத்3ரானந்தா3ச்’ச ஸாந்தா ப3ஹு வித4: க3தய:
க்ருஷ்ண தேப்4யோ ப4வேயு: |
த்வஞ்சாசக்2யாத2 ஸக்2யோ நனு மஹித தமாம்
ச்’ரேயஸாம் ப4க்திமேகாம்
த்வத்3 ப4க்த்யானந்த3 துல்ய: க2லு விஷய ஜுஷாம்
ஸம்மத3: கேன வா ஸ்யாத்3 || ( 95 – 3)
ஹே ஸ்ரீ கிருஷ்ணா! கர்மத்தின் அதிகாரிகளின் ருசி பேதங்களை அனுசரித்துப் பலப்பல
சிரேயஸாகிய சாதனங்கள் உபதேசிக்கப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து அற்ப சந்தோஷமும், அநித்தியமான பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் தங்கள் பக்தன் உத்தவனுக்குச் சிரேயஸ் ஆன மார்க்கங்களில் மிகச் சிறந்தது பக்தி
ஒன்றே என்று தாங்கள் உபதேசித்தீர்கள்.
விஷய சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தங்களின் பக்தி தரும் ஆனந்தத்துக்குத்
துல்லியமான ஆனந்தம் எப்படிக் கிடைக்கும்?
————-
த்வத்3ப4க்த்யா துஷ்ட புத்3தே4ஸ் ஸுக2மிஹ சரதோ
விச்யுதாச’ஸ்ய சாசா’ :
ஸர்வாஸ்யு: சௌக்2யமய்ய: ஸலில குஹரக3ஸ் யேவ
தோயைகமய்ய : |
ஸோSயம் க2ல்விந்த்3ர லோகம் கமலஜ ப4வனம்
யோக3 ஸித்3தீ4 ச்’ச ஹ்ருத்3யா :
நாகாங்க்ஷத்யேத தா3ஸ்தாம் ஸ்வயமனுபதிதே
மோக்ஷ சௌக்யேSப்யனீஹா : || ( 95 – 4)
தங்களிடம் கொண்ட பக்தியில் ஆனந்தம் அடைந்து, எல்லா விதமான ஆசைகளையும் ஒழித்து,
இவ்வுலகில் சுகமாகச் சஞ்சரிப்பவன் ஒருவனுக்கு, மடுவின் நடுவில் உள்ளவனுக்கு எல்லாப் பக்கங்களிளும்
நீர் மயமாக இருப்பதைப் போல, எல்லாப் பக்கங்களிலும் சுகமயமாக இருக்கும்.
இது போன்ற பக்தன் இந்திரலோகம் , பிரம்மலோகம், அணிமாதி சித்திகள், அஷ்ட ஐஸ்வரியங்கள் என்ற
எதையும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்? தானாக வந்து சேருகின்ற
மோக்ஷ சுகத்திலும் கூட அவனுக்கு விருப்பம் இராது.
இங்கு மோக்ஷம் -கைவல்யத்தைச் சொன்னபடி -அதையும் விரும்ப மாட்டானே
————
த்வத்3ப4க்தோ பா3த்4ய மானோSபி ச விஷய ரசை:
இந்த்3ரியா சா’ந்தி ஹேதோ:
ப4க்த்யைவாக்ரமய மாணை: புனரபி க2லு
தைர் து3ர்பலைர் நாபி4ஜய்ய : |
ஸப்தார்சிர் தீ3பிதார்சிர் த3ஹதி கில
யதா பூ4ரி தா3ரு ப்ரபஞ்சம்
த்வத்3 ப4க்த் யோகே4 ததை3வ ப்ரத3ஹதி து3ரிதம்
து3ர்மத3: க்வேந்த்3ரியாணாம் || ( 95 – 5)
தங்களுடைய பக்தனின் இந்திரியங்கள் சாந்தி அடையாததால் அவன் விஷய சுகங்களால் பாதிக்கப் படலாம்.
ஆனால் பக்தி அவனை ஆக்கிரமிக்கும்போது அந்த விஷய சுகங்கள் பலமிழந்து போய் விடும்.
அவற்றால் அவனை ஜெயிக்க முடியாது. ஜுவாலைகளை உடைய அக்கினி பெரும் விறகுக் கூட்டத்தை
எரிப்பது போலவே தங்களிடம் கொண்ட பக்தி அந்த இந்திரியங்களின் கொட்டத்தை அழித்து விடும்.
———–
சித்தார்த்3ரீபா4வ முச்சைர் வபுஷி ச
புலகம் ஹர்ஷ பா3ஷ்பஞ்ச ஹித்வா
சித்தம் சுத்3த்4யேத் கத2ம் வா கிமு
ப3ஹு தபஸா வித்3யயா வீதப4க்தே: |
த்வத்3கா3தா2 ஸ்வாத3 ஸித்3தா4ஞ்ஜன ஸதத
மரீ ம்ருஜ்யமானோSய மாத்மா
சக்ஷூர்வத் தத்வ ஸூக்ஷ்மம் ப4ஜதி ந து
ததா2Sப்யஸ் தயா தர்க்க கோட்யா || (95 – 6 )
உள்ளம் உருகாமல், உடலில் மயிர் கூச்சம் அடையாமல், ஆனந்தக் கண்ணீர் பெருகாமல்
சித்தம் எங்கனம் சுத்தி அடையும்? பக்தி இல்லாதவனுக்குத் தவம், ஞானம் இவற்றால் என்ன பயன்?
இந்த ஆத்மா தங்களுடைய கதைகளை அனுபவிப்பதால் சித்தாஞ்சனம் தீட்டப்பட்ட கண்கள்
தத்துவங்களின் உண்மையை அறிவதைப் போல பிற யுக்திகளால் அறிவதே இல்லை.
———
த்4யானம் தே சீ’லயேயம் ஸம தனு ஸுக2
ப3த்3 தா4ஸனோ நாஸிகாக்3ரன்
யஸ்தாக்ஷ: பூரகாத்3யைர் ஜித பவன பத2ச்’
சித்த பத்3மன்தவ வாஞ்சம் |
ஊர்த்4வாக்3ரம் பா4வயித்வா ரவி விது4 சி’கி2னஸ்
ஸம் விசிந்த்யோ பரிஷ்டாத்
தத்ராஸ்த2ம் பா4வயே த்வாம் ஸஜல ஜல த4ர
ச்’யாமலம் கோமளாங்க2ம் || ( 95 – 7 )
தங்களுடைய தியானத்தை நான் நன்கு அப்பியாசிப்பேன். சரீரத்தைச் சமமாக நிலை நிறுத்திச்
சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் அமைத்துக் கொண்டு,
பூரகம் முதலியவற்றால் வாயு மார்க்கத்தை ஜெயித்து, கீழ் முகமாக உள்ள இதயகமலம்
மேல் முகமாக மாறியதாகப் பாவித்து, ஒன்றின் மேல் ஒன்றாகச் –ரவி விது4 சி’கி2னஸ்-சூரியன், சந்திரன் அக்கினி
இவைகளைத் தியானித்து, அக்கினியின் நடுவில் நீருண்ட மேகத்தின் சியாமளா வர்ணமும்
அழகிய அவ்வயவங்களும் கொண்ட தங்களைத் தியானிப்பேன்.
———-
ஆநீலச்’லக்ஷ்ண கேச’ம் ஜ்வலித மகர
ஸத் குண்ட3லம் மந்த3ஹாஸ
ஸ்யன்தா3ர்த்3ரம் கௌஸ்துப4 ஸ்ரீ பரிக3த
வனமாலோருஹாராபி4 ராமம் |
ஸ்ரீவத் ஸாங்க3ம் ஸுபா3ஹும் ம்ருது3லஸது3த3ரம்
காஞ்சனச்சா2ய சேலம்
சாருஸ்நிக்3தோ4ரு மம்போருஹ லலித
பத3ம் பா4வ யேஹம் ப4வந்தம் || (95 – 8 )
நன்கு கறுத்த மினுமினுப்பான கேசங்களை உடையவரும்; பிரகாசிக்கும் மகர குண்டலங்களை அணிந்தவரும்;
புன்னகைப் பெருக்கினால் நனைந்தவரும், கௌஸ்துபத்தின் காந்தியால் சூழப்பட்டவரும்;
வனமாலை, முத்து மாலை இவற்றால் அழகு பெற்றவரும்; ஸ்ரீ வத்சம் என்ற அடையாளத்தை உடையவரும்;
அழகிய திருக் கரங்களை உடையவரும், மிருதுவான, பிரகாசிக்கும் வயிற்றை உடையவரும்;
தங்க நிறப் பட்டாடைகள் அணிந்தவரும்; அழகான புஷ்டியான தொடைகளை உடையவரும்;
தாமரை மலர் போன்ற மிருதுவான திருவடிகளை உடையவரும்; ஆகிய தங்களைத் தியானிப்பேன்.
——–
ஸர்வாங்கே3ஷ்வங்க3 ரங்க3த் குதுகமதி
முஹுர்தா4ரயன்னீச’ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத3னஸரஸிஜே
ஸுந்த3ரே மந்த3ஹாஸே |
தாத்ராலீனந்து சேத: பரமஸுக2
சித3த்3வைத ரூபே விதன்வன்
அன்யன்னோ சிந்தயேயம் முஹுரிதி
ஸமுபாரூட4யோகோ3 ப4வேயம் || (95 – 9 )
ஹே ஸ்ரீ ஈசா விருப்பத்தை அடைந்த மனத்தைத் தங்களுடைய எல்லா அவயவங்களிலும் நிலை நிறுத்துவேன்.
அவை அனைத்திலும் மிக அழகான புன்னகை தவழும் தங்கள் முக கமலத்தில் மனதைச் சேர்த்து வைப்பேன்.
அந்த மனத்தை வேறு எதுவும் சிந்தியாமல் சத் சித் ஆனந்தத மயமான ப்ரஹ்மத்திடத்தில் செலுத்துவேன்.
இப்படி அடிக்கடித் தங்கள் தியான யோகத்தை நான் அடைந்து பவிப்பேன் ஆகுக!
———–
இத்தம் த்வத்3 த்4யான யோகே3 ஸதி
புனரணிமா3த் யஷ்ட ஸம் ஸித்3த4யஸ்தா:
தூ3ரச்’ருத்யாத3யோSபி ஹ்யஹமஹமிகயா
ஸம் பதேயுர் முராரே |
த்வத் ஸம் ப்ராப்தௌ விலம்பா3வஹம் அகிலமிதம்
நாத்3ரியே காமயேSஹம்
த்வாமேவானந்த பூர்ணம் பவன புரபதே
பாஹிமாம் ஸர்வதாபாத் || ( 95 – 10)
ஹே ஸ்ரீ முராரி! இவ்வாறு தங்கள் மீது செய்யும் தியான யோகம் சித்தி அடைந்த பிறகு அணிமா சக்திகள் எட்டும்
” நான் முந்தி! நீ முந்தி ! ” என்று போட்டி போட்டுக் கொண்டு என்னிடம் வந்து சேரும்.
தங்களை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் அவற்றை நான் விரும்பவே மாட்டேன்.
ஆனந்த மயமான தங்களையே நான் விரும்புவேன்.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! அனைத்துத் தாபங்களில் இருந்தும் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply