ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -94–தத்வ ஞான உத்பத்தி —

ஸ்ராத்தரா சந்தஸ் – அத்வைதி ஸித்தாந்தம் -நாராயண பட்டாத்ரி -அதை ஒட்டியே இந்த சதகம் – பகவத் குண அனுபவம் ரஸிக்கலாம் சு’த்3தா4 நிஷ்காமத4ர்மை : ப்ரவரகு3ருகி3ரா தத்ஸ்வரூபம் பரம் தே சு’த்3த4ம் தே3ஹேந்த்3ரியாதி வ்யபக3த மகி2ல வ்யாப்த மாவேத3யந்தே | நானாத்வ ஸ்தௌல்ய கார்ச்’யாதி து கு3ணஜ வபுஸ்ஸங்க3த்தோத்4யாஸிதம் தே வஹ்னே தா3ரு ப்ரபே4தே3ஷ்விவ மஹத3ணுதா தீ3ப்திததா சாந்ததாதி3 || (94 – 1) பலனில் பற்றில்லாமல் அனுஷ்டிக்கப்பட்ட நிஷ் காம கர்மங்களால் அந்தக் கரணங்கள் சுத்தமாகின்றன. ஸ்ரீ குருவின் உபதேசத்தால்; தேஹம் இந்திரியங்கள் இவற்றிலிருந்து வேறானதும்; மாயை, காரியம் இவற்றுடன் எவ்விதத் தொடர்பு இல்லாததும்; பரப் ப்ரஹ்மம் என்ற பெயர் உடையதும்; எங்கும் நிறைந்துள்ளதுமான தங்களின் நிஷ்கள ஸ்வரூபத்தை அறிகின்றனர். ஆத்மாவாகிய தாங்கள் சரீரங்களில் மாறுபட்டு இருப்பது போலத் தோன்றுவது பலவகையான விறகுகளில் உள்ள அக்கினி பெரியதும், சிறியதுமாக இருப்பது போல குணங்கள், சரீரங்கள் இவற்றின் சம்பந்தத்தால் தோற்றம் தருவது. —————- ஆசார்யாக்2யாத4ர ஸ்தா2ரணி ஸமனுமிலச்சி2ஷ்ய ரூபோத்தரா ரண்யாவேதோ3த்பா4ஸிதேன ஸ்புட தர பரிபோ3தா3க்3னினா த3ஹ்யமானோ | கர்மாலீ வாஸனா தத் க்ருத தானு பு4வன ப்4ராந்தி காந்தார பூரே தா3ஹ்யா பா4வேன வித்3யாசி’கி2னி ச விரதோ த்வன்மயீ க2ல்வவஸ்தா2 || ( 94 – 2) ஸ்ரீ ஆச்சாரியன், சிஷ்யன் இவர்களின் சம்பந்தத்தால் பிரகாசிக்கின்ற தெளிவான ஞானாக்கினியில் கர்மங்கள், அவற்றின் வாசனைகள், இவற்றால் உருவன் சரீரம், லோகம், பிரம்மை என்று எல்லாமே எரிக்கப்படும் போது, எரிக்கப்பட வேண்டிய வஸ்து எதுவும் இல்லாத போது ஞானாக்கினி ஓய்ந்து விடுகின்றது. அப்போது மிஞ்சி இருப்பது தங்கள் ரூபமாகவே ஆகி விடுகின்றது. ஞானம் -மட்டுமே மோக்ஷம் அல்ல உபாஸந ரூபம் -பக்தி ரூபாபன்ன ஞானம் ஞானம் அழியாது -ஐக்கியம் ஆகாது -நமது ஸம்ப்ரதாயம் இந்த வாசி உணரத்தக்கது ———– ஏவம் த்வத் ப்ராப்திதோன்யோ ந ஹி க2லு நிகி2ல க்லேச’ஹானே ருபாயோ நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத3க3த3 ஷாட்3கு3ண்ய ஷட் கர்ம யோகா3: | துர்வைகல்யேரகல்யா அபி நிக3மபதா2: தத்ப2லான் யப்யவாப்தா மத்தாஸ்தவாம் விஸ்மரந்த :ப்ரஜயதி பதனே யான்த்யனந்தான் விஷாதா3ன் || ( 94 – 3) அனைத்துத் துக்கங்களும் நிவிருத்தி ஆவதற்கு ஒரே உபாயம் தங்களைத் தவிர வேறு ஒன்று இல்லை. ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட மருந்துகள், நீதி சாஸ்திரங்கள் கூறும் ஆறு உபாயங்கள், தர்ம சாஸ்திரம் கூறும் ஆறு கர்மங்கள், வேதங்களில் கூறப்படும் பிறவும் துக்கத்தை நாசம் செய்வதற்கோ, அவை மீண்டும் வராமல் தடுப்பதற்கோ ஆற்றல் இல்லாதவை. திரவியம், காலம், கர்த்தா இவற்றில் உள்ள குறைபாடுகளால் வேத மார்க்கங்களை நன்றாக அனுஷ்டிக்க முடிவதில்லை. கஷ்டப்பட்டு அந்தக் கர்மங்களைப் புரிந்து, அவற்றால் பலன் அடைந்தவர்களும் கூட, அதன் பின்னர் மதம் கொண்டு, தங்களை மறந்து, கீழே விழுந்து, முடிவில்லாத துன்பங்களை அடைகின்றனர். ————— த்வல் லோகாத3ன்ய லோக: க்வனு ப4யரஹிதோ யத் பரார்த்த4 த்3வயாந்தே த்வத்3பீ4தஸ் ஸத்ய லோகேsபி ந ஸுக2வஸதி: பத்3மபூ4: பத்3மநாப4 | ஏவம் பாவே த்வத4ர்மார்ஜித ப3ஹு தமஸாம் கா கதா2 நாரகாணாம் தன்மே த்வம் சி2ந்தி4 ப3ந்த4ம் வரத3 க்ருபண ப3ந்தோ4 க்ருபாபூர ஸிந்தோ4 || ( 94 – 4 ) ஹே ஸ்ரீ பத்மநாபா! தங்களின் ஸ்ரீவைகுண்டத்தை விடவும் பயமற்ற லோகம் வேறு எது உள்ளது? ஸ்ரீ பிரம்ம தேவன் தங்களிடம் கொண்ட பயத்தினால் இரண்டு பரார்த்தங்களின் முடிவில் ஸ்ரீ சத்ய லோகத்திலும் சுகமாக வசிப்பது இல்லை. அப்படியானால் அதர்மங்கள் செய்து பல பாவங்களை செய்துள்ள நரகவாசிகளின் நிலை என்னவாக இருக்கும்? வரங்களை அளிப்பவரே! ஏழைகளின் துணைவரே! என் சரீர பந்தத்தை அகற்றுவீராகுக! ——— யதா2ர்த்2யா த்வன் மயஸ்யைவ ஹி மம ந விபோ4 வஸ்துதோ ப3ந்த4 மோக்ஷௌ மாயா வித்3யா தனுப்4யாம் தவ து விரசிதௌ ஸ்வப்ன போ3தோ4பமௌ தௌ | ப3த்3தே4 ஜீவத்3விமுக்திம் க3தவதி ச பி4தா3 தாவதீ தாவதே3கோ பு4ங்க்தே தே3ஹத்3ருமஸ்தோ விஷய ப2ல ரஸான்னாபரோ நிர்வ்யதா2த்மா || ( 94 – 5) ஹே ஸ்ரீ பிரபு! தங்கள் மயமாக இருக்கும் எனக்கு உண்மையில் பந்தமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. ஆனால் அவைகள் தங்களின் மாயையினாலும், வித்தையினாலும் உருவாக்கப்பட்டு, ஸ்வப்ன அவஸ்தைக்கும், ஜாக்கிரத அவஸ்தைக்கும் ஒப்பானவைகள் ஆகின்றன . பத்தனாகிய சம்சாரியிடத்திலும், முத்தனாகிய பக்தனிடத்திலும் உள்ள வேறுபாடு இவ்வளவே. சம்சாரி சரீரம் என்னும் மரத்தில் இருந்து கொண்டு விஷயங்கள் என்னும் பழங்களின் ரசத்தை அனுபவிக்கின்றான். முக்தன் அந்த விஷயங்களை அனுபவிப்பதில்லை. அத்வைத ஸித்தாந்தம் இது -ஸ்வப்னம் போல் -அனைத்தும் மாயம் -ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம் -ஞானான் மோக்ஷம் -ஜீவன் முக்தி -இவற்றை அருளிச் செய்கிறார் இங்கு – ————— ஜீவன் முக்தத்வ மேவம் வித4மிதி வசஸா கிம் ப2லம் தூ3ர தூ3ரே தந் நாமாசு’த்3த4 பு3த்3தே4ர்ன ச லகு4 மனஸ் ச்’சோ’த4னம் ப4க்தி தோsன்யத் | தன்மே விஷ்ணோ க்ருஷீஷ்டா2ஸ்த்வயி க்ருத ஸகல ப்ரார்ப்பணம் ப4க்தி பா4ரம் யேன ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்3 கு3ரு வசன மிலத் த்வத் ப்ரபோ3த4ஸ் த்வதா3த்மா || ( 94 – 6) முக்தனின் நிலை இது என்று கூறுவதால் மட்டும் என்ன பயன் ? அந்தக் கரண சுத்தி பெறாதவன் ஜீவன் முக்தனின் நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளான். மனத்தை சோதனம் செய்வதற்கு பக்தியைத் தவிர வேறு வழி இல்லை. ஆகையால் எல்லாவற்றையும் தங்களிடம் சமர்ப்பணம் செய்யும் திடமான பக்தியை உண்டு பண்ணுவீர். அந்த திடமான பக்தியாலும், குருவின் உபதேசத்தாலும் ப்ரஹ்ம ஞானத்தை அடைந்து தாங்களாகவே நான் பவிப்பேன் ஆகுக! ———– ச’ப்3த3 ப்3ரஹ்மண்யபீஹ ப்ரயதித மனஸஸ் த்வாம் ந ஜானந்தி கேசித் கஷ்டம் வந்த4ய ச்’ரமாஸ்தே சிரதர மிஹ கா3ம்பி3ப்4ரதே நிஷ் ப்ரஸூதிம் | யஸ்யாம் விச்’வாபி4ராமாஸ் ஸகல மல ஹரா தி3வ்ய லீலாவதரா: ஸச் சித் ஸாந்த்3ரம் ச ரூபம் தவ ந நிகதி3தம் தாம் ந வாசம் ப்4ரியாஸம் || ( 94 – 7) சிலர் வேதத்தில் பிரயத்தனம் செய்த மனத்தை உடையவராக இருந்தும் தங்களை அறிவதில்லை. கன்று போடாத பசுவைப் போல பக்தியையும், ஞானத்தையும் உண்டு பண்ணாத வேதத்தை அவர்கள் வீணாகச் சுமக்கின்றார்கள். எந்த வாக்கு எல்லோருடைய மனத்தைக் கவருவதாகவும், எல்லோருடைய பாவங்களைப் போக்குவதாகவும், தங்களின் லீலைகள் அவதாரங்கள் திருவுருவம் இவற்றைக் கூறுவதாகவும் இல்லையோ அந்த வாக்கை நான் சுமக்காமல் இருப்பேன் ஆகுக! ————- யோ யாவான் யாத்3ருசோ’ வா த்வமிதி கிமபி நைவாவ க3ச்சா2மி பூ4மன் ஏவஞ்சானன்ய பா4வஸ் த்வத3னு ப4ஜனமே வாத்3ரியே சைத்3ய வைரின் | த்வல் லிங்கா3னாம் த்வத3ங்க்4ரி ப்ரிய ஜன ஸ3தஸாம் த3ர்ச’ன ஸ்பர்ச’னாதி3: பூ4யான் மே த்வத் பூஜா நதி நுதி கு3ண கர்மானு கீர்த்யாத3ரே || (94 – 8) எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ ஈசா! தங்களின் ஸ்வரூபம், மகிமை, தர்மங்கள் என்ற எதையுமே நான் அறியவில்லை. சிசுபாலனின் வைரியாகிய ஸ்ரீ கிருஷ்ணா! அப்படி இருந்த போதிலும் வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் தங்களைச் சேவிப்பதையே நான் ஆதரிக்கின்றேன். தங்களின் மூர்த்திகள், தங்களின் பக்தர்களின் சபை, தங்களின் தரிசனம், ஸ்பரிசனம், பூஜை, நமஸ்காரம், ஸ்தோத்திரம், தங்கள் குணங்கள் சரிதங்கள் இவற்றின் கீர்த்தனம் இவற்றில் எனக்கு ஆதரவு உண்டாகட்டும். ———- யத்3யல்லப்4யதே தத் தத்தவ ஸமுபஹ்ருதம் தே3வ தா3ஸோsஸ்மி தேsஹம் த்வத்3 கே3ஹான்மார்ஜனாத்3யம் ப4வது மம முஹு: கர்ம நிர்மாய மேவ | ஸூர்யாக்3னி ப்3ராஹ்மணாத்மாதி3ஷு லஸித சதுர் பா3ஹுமாராத4யே த்வாம் த்வத் ப்ரேமார்த்3ரத்வ ரூபோ மம ஸதத மபி4ஷ்யந்ததாம் ப4க்தி யோக3: || ( 94 – 9) ஹே ஸ்வயம் பிரகாசியே! அடையப்படும் பொருள் அனைத்தும் தங்களுக்கு சமர்பிக்கப் படட்டும். நான் தங்களின் அடிமை. தங்களின் ஆலயத்தைச் சுத்தம் செய்யும் கைங்கர்யம் களங்கமற்றதாக எனக்கு உண்டகட்டும். சூரியன், அக்கினி, பிராமணன், ஆத்மா இவைகளில் விளங்கும் நான்கு கரங்கள் உடைய தங்களை நான் ஆராதிப்பேன் ஆகுக. தங்கள் மீது கொண்ட பிரேமையால் உருகும் பக்தியை என்னிடம் இடைவிடாது பெருக்குவீர். —————- ஐக்யம் தே தா3ன ஹோம வ்ரத நியம தபஸ் ஸாங்க்2ய யோக3ர் து3ராபம் த்வத் ஸங்கே3னைவ கோ3ப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுரானந்த ஸாந்த்3ரம் | பக்தேஷ் வன்யேஷு பூ4யஸ் ஸ்வபி ப3ஹுமனுஷே ப4க்திமேவ த்வமாஸாம் தன்மே த்வத்3 ப4க்தி மேவ த்3ருட4ய ஹர க3தா3ன் க்ருஷ்ண வாதால யேசா’ || ( 94 -10) தானம், ஹோமம், விரதம், நியமம், தபஸ், தத்வ ஞானம், அஷ்டாங்க யோகம் இவைகளால் அடைவதற்கு அரியதான, ஆனந்த மயமான தங்களுடன் ஐக்கியத்தை புண்ணிய சாலிகளாகிய ஸ்ரீ கோபிகைகள் தங்கள் சேர்க்கையினலே எளிதாக அடைந்தார்கள். எத்தனையோ பக்தர்கள் இருந்த போதிலும் தாங்கள் அந்த ஸ்ரீ கோபிகளின் பக்தியியே மிகவும் மதிக்கின்றீர்கள். ஹே ஸ்ரீ கிருஷ்ணா! என்னிடம் தங்கள் பக்தியைத் திடமாக்க வேண்டும். ஹே ஸ்ரீ குருவாயூரப்பா ! அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் ! —————————————————————————– ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading