சிகரணி -மீட்டர் இதில் -சிகரம் பற்றிய தசகம்
கதாசித் கோபாலான் விஹித மக சம்பார விபாவான்
நிரீஷ்ய த்வம் ஸுவ்ரே மகவ மதம் உத்த்வம் சிது மநா
விஜா நந்நப் யேதான் விநயம் ருது நந்தாதி பஸூபாந்
அப்ருச்ச கோவா அயம் ஜனக பவதாம் உத்யம இதி –-1-
ஒரு முறை இடையர்கள் இந்திரனைப் பூஜிக்க பொருள்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தார்கள் –
தாங்கள்-மகவ மதம்- இந்திரனின் கர்வத்தை அடக்க திரு உள்ளம் கொண்டீர்கள்
தங்கள் தந்தையிடம் இந்த ஏற்பாடுகள் எதற்கு என்று அறியாதவர் போல் கேட்டீர்கள் –
பகவானது கருவியாக நினைக்காமல் கர்வி கொண்டு இருந்தான்
ஸுவ்ரே-வீரனே -பத பிரயோகம்–இவன் இங்கே இருக்க – -இந்திரனுக்கு விழா எடுப்பதா
உள்ளூவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன்-விநயம் ருது-மெல்லிய குரலில் அறியாதவர் போல் கேட்டீர்கள் –
————–
பபாஷே நந்தஸ் த்வாம் ஸூத நநு விதேயோ மகவதோ
மகோ வர்ஷே வர்ஷே ஸூக யதி ச வர்ஷேண ப்ருதிவீம்
ந்ருணாம் வர்ஷா யத்தம் நிகில முப ஜீவ்யம் மஹி தலே
விசேஷா தஸ்மாகம் த்ருண சலில ஜீவாஹி பஸவ –2-
மகவதோ மகோ-இந்திரா விழா
வர்ஷே வர்ஷே–ஆண்டு தோறும் மழை -சிலேடையில்
நந்தனும் -மகனே இந்திரன் மழை பொழியச் செய்து நம் பூமியை செழிப்பாக வைக்கிறார் –
அதனால் அவருக்கு ஒவ் ஒரு வருஷமும் பூஜை செய்ய வேண்டும் –
அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது –
பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன -என்று கூறினார் –
நீர் வளம் நில வளம் பெருகினால் பால் வளம் பெருகும் -ஓங்கி இத்யாதி –நீங்காத செல்வம்
——-
இதி ஸ்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம்
திக் ஏதந்நோ ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டிரிதி யத்
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் சமுசிதாம்
மஹாரண்யே வ்ருஷா கிமவ பலி மிந்த்ராய தததே –3-
திக் -ஐயோ-அத்ருஷ்டம்-கண்ணுக்குத் தெரியாத வினைப் பயன்கள் -இந்திரன் கர்மத்துக்குத் தக்கபடி மழை பொழிய வைப்பவன் இவனே
அதிருஷ்டம் ஸத் புண்ய பாப ஜனகம் –கர்மங்கள் அடியாகவே -நல்லார் ஓருவர் உளரேல் அவர் பொருட்டு மழை பொழியுமே-
தந்தையின் சொல் கேட்டு -இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மை அல்ல –
நாம் முன் ஜென்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது -காட்டில் உள்ள மரங்கள்
இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன என்று சாமர்த்தியத்தால் பதில் சொன்னீர் –
———–
இதம் தாவத் ஸத்யம் யதிஹ பசவோந குல தனம்
தத் ஆஜீவ்யா யாஸவ் பலிர் அசல பர்த்ரே சமுசித
ஸூரேப்யோ அப்யுத் க்ருஷ்டா நநு தரணி தேவா ஷிதி தலே
ததஸ்தே அப் யாராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஐநான் –-4–
பசவோ ந குல தனம்–மாடு என்றாலே செல்வம்
பாகவதத்தில் மூன்று பக்தி -புல்லை பசுமாட்டுக்கு –தரணி தேவா-வேதம் வல்லார்-பூ ஸூரர் –நிலத்தேவர் -ததீயாராதனம் -மூன்றாவது கோவர்தனம் இங்கு இரண்டையும்
இந்தப் பசுக்கள் நம் இடையர்கள் சொத்து -அவர்களுக்கு புல்லும் நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை –
அதனால் கோவர்த்தன மலைக்கும் தேவர்களை விடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினீர் –
————–
பவத் வாஸம் ஸ்ருத்வா பஹு மதி யுதாஸ் தே அபி பஸூபா
த்வி ஜேந்த்ரா தர்சந்தோ பலி மததுர் உச்சை ஷிதி ப்ருதே
வ்யது ப்ரா தக்ஷிண்யம் ஸூ ப்ருஸ மநமந் நாதர யுதாஸ்
த்வம் ஆதஸ் சைலாத்மா பலி மகிம் ஆபீர புரத –5–
அதைக் கேட்ட இடையர்கள் முனிவர்களையும் கோவர்த்தன மலையையும் பூஜித்தனர் –
பிறகு ஷிதி ப்ருதே-மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர்
அனைத்து பூஜைகளையும் தாங்களே மலை வடிவில் ஏற்றுக் கொண்டீர் –
பூமியில் கால் பாவாத தேவர்கள்
இவனோ ஆஸ்ரித ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யத்தில் அபி நிவேசம் கொண்டுள்ளான்
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 –
———–
அவோசஸ் ச ஏவம் தான் கிமஹ விததம் மேனி கதிதம்
கிரீந்த்ரோ நன்வேஷ ஸ்வ பலிம் உ ப புங்க்தே ஸ்வ வபுஷா
அயம் கோத்ரோ கோத்ர த்விஷி ச குபிதே ரஷிது மலம்
ஸமஸ்தா நித் யுக்தா ஜஹ்ருஷுர் அகிலா கோகுல ஜூஷ –6
இடையர்கள் இடம் நான் சொன்னது போல் இம் மலை பூஜையை ஏற்றுக் கொண்டது -அதனால் இந்திரன்
கோபித்துக் கொண்டாலும் இம் மலையே நம் எல்லாரையும் ரக்ஷிக்கும் என்று கூறினீர்கள் –
இந்திரன் உங்கள் கையால் கொடுத்ததை முகம் மாற்றி வாங்கிக் கொள்வான்
இவனே கோவர்த்தனமாக கண்டு அருளினான்
மலைக்கு கோத்ரம் – –கோத்ர த்விஷி-எதிரியான இந்திரன் -மலைக்கு இறக்கைகளை முன் வெட்டினான்
—————–
பரி ப்ரீதா யாதா கலு பவதுபேதா வ்ரஜ ஜூ ஷோ
வ்ரஜம் யாவத் தாவன் நிஜம கவி பங்கம் நிச மயன்
பவந்தம் ஜாநன் நப் யதிக ரஜசாஅ அக்ராந்த ஹ்ருதயோ
ந ஸேஹே தேவேந்திரஸ் த்வ துபரசித ஆத்மோன் நதி ரபி –7-
அனைவரும் மகிச்சியுடன் வீடு சென்றனர் -தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு
ஏற்டபட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான்
தங்களைப் பற்றியும் தங்களால் கிடைத்த பதவியைப் பற்றியும் அறிந்து இருந்தும்
மிகுந்த அஹங்காரத்தால் கோபம் அடைந்தான் —
—————
மனுஷ்யத்வம் யாதோ மது பிதபி தேவேஷ் வவி நயம்
விதத்தே சேன் நஷ்டஸ் த்ரித ச ஸதஸாம் கோ அபி மஹி மா
ததஸ் ச த்வம்சிஷ்யே பஸூப ஹத கஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ் த்வாம் ஜேதும் சகிலம் அகவா துர்மத நிதி –8-
மது பிதபி-மது சூதனனாய் இருந்தாலும்-இந்திரன் பிள்ளை அர்ஜுனன் இடம் அவதார ரஹஸ்யம்
நாராயணனே மானுஷ அவதாரம் எடுத்து இவ்வாறு செய்வது தேவர்களுக்கு ஒரு குறை அல்லவா –
இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன் என்று இந்திரன் ஆர்பரித்தான் –
———–
த்வத் ஆவாஸம் ஹந்தும் ப்ரலய ஜலதாந் அம்பர புவி
ப்ரஹிண்வந் பிப்ராண குலிச அயம் அப்ரே பகமந
ப்ரதஸ்தே அந்யைர் அந்தர் தஹந மரு தாத்யை விம்ஹசிதோ
பவன் மாயா நைவ த்ரி புவன பதே மோஹ யதிகம் –9-
ஐரா வதம் என்ற யானையின் மீது ஏறிக் கொண்டு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு
பிரளய காலத்து மேகங்களை உருவாக்கி இடையர்கள் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்
பின் தொடர்ந்த அக்னி வாயு முதலிய மற்ற தேவர்கள் மனதிற்கும் பரிகசித்தார்கள் –
மூ உலகிற்கும் நாயகனே உமது மாயையை யாரால் வெல்ல முடியும் –
————
ஸூரேந்த்ர க்ருத்தஸ் சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா
அப் யநாதங்கோ அஸ்மாகம் நியத இதி விஸ்வாஸ்ய பஸூ பான்
அஹோ கிந் ந ஆயாதோ கிரி பிதிதி சஞ்சிந்த்ய நிவஸன்
மருத் கேஹா தீச பிரணுத முர வைரின் மம கதான் –-10-
இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது -முனிவர்களும் கோவர்த்தன மலையும் நிச்சயம்
நம்மை ரக்ஷிப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினீர்கள் –
இந்திரன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்
முரனை நிரசித்த ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply