ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -63–ஸ்ரீ கோவர்தன உத்தாரணம்-

மாலினி -2-3-4-5-
துத்த விலம்பிதம் -1-6-7-8-9-10

வெண் கொற்றக்கொடை பரதன் கவிக்க பெருமாள் பட்டாபிஷேகம்
கோவிந்த பட்டாபிஷேகம் -கண்ணனே பிடிக்க
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

தத் ருசிரே கில தத் க்ஷணம் அஷதஸ் தநித ஜ்ரும்பித கம்த திக் தடா
ஸூஷ மயா பவ தங்க துலாம் கதா வ்ரஜ பதோ பரி வாரி தராஸ் த்வயா –1-

பவ தங்க துலாம்-திருமேனி போல் -உன்னைப் போல் என்று சொல்லாமல்-ஸூஷ மயா
நிறத்தில்-ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து போல்

வாரி தராஸ்-தண்ணீர் தாங்கிய மேகம்

அப்பொழுது கோகுலத்திற்கு மேல் எங்கும் கரு மேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகங்கள் தங்களது
திருமேனியைப் போல் காணப் பட்டன. வானில் தொடர்ந்து உண்டான இடி முழக்கத்தால் அனைத்து
திசைகளும் நடுங்கின. -இவை யனைத்தையும் தாங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

———-

விபுல கரக மிஸ்ரைஸ் தோய தாரா நிபாதைர் திசி திஸி பஸூ பாநாம் மண்டலே தண்ட்ய மாநே
குபித ஹரி க்ருதாந்ந பாஹி பாஹி இதி தேஷாம் வசனம் அஜித ஸ்ர்ருண்வந் மாபிபீ தேத் யபாணீ –-2-

விபுல கரக மிஸ்ரைஸ் தோய–கடுங்கால் மாரி கல்லே பொழிய-கல் எடுத்து கல் மாரி

குபித ஹரி க்ருத -இங்கு ஹரி இந்திரன் -இந்திரன் கோபத்தால்

மாஸூச–ஆஜ்ஜை இதுவும் – ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம்

எவராலும் வெல்லப்பட முடியாத பகவானே! பெரிய பெரிய ஆலங்கட்டியுடன் எங்கும் இடைவிடாது மழை கொட்டியது.
அதனால் துன்பமடைந்த கோபர்கள், கிருஷ்ணா! இந்திரனுடைய சினத்திலிருந்து எங்களைக் காப்பாற்று ! காப்பாற்று!’
என்று அலற, அவர்களது கூக்குரலைக் கேட்ட தாங்கள் பயப்படாதீர்கள்’ என்று அவர்களிடம் கூறினீர்கள்.

—————–

குல இஹ கலு கோத்ரோ தைவதம் கோத்ர சத்ரோர் விஹிதிம் இஹ ச ருந்த்யாத் கோ நுவ சம்சயோ அஸ்மின்
இதி ஸஹசித வாதீ தேவ கோவர்த்த நாத்ரிம் த்வரிம் உதமு மூலோ மூலதோ பால தோர்ப்யாம் –3-

குல தெய்வம் கோவர்த்தனம் கோத்ரம் –கோத்ர சத்ரு -இந்திரன் -குல தனம் -பசு

மலைகளைக்கு இறக்கை இருக்க வஜ்ராயுதத்தால் அறுத்த இந்திரன் கோத்ர சத்ரு ஆனான்

இந்த நம் கோகுலத்திற்கு (பசுக் கூட்டங்களையும், நம்மையும் காப்பாற்றும் ) தெய்வம் –
இந்த கோவர்த்தன மலை தான். மலைகளுக்குப் பகைவனான இந்திரனிடமிருந்து தோன்றும் நாசத்தை
இந்தத் தெய்வம் கட்டாயம் தடுக்கும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?’ என்று சிரித்துக் கொண்டே
கூறிய தாங்கள், கோவர்த்தன மலையைத் தங்களது இளங்கைகளால் அடியோடு பிடுங்கித் தூக்கினீர்கள்.

—————-

ததநு கிரி வரஸ்ய ப்ரோத்த்ரு தஸ்ய அஸ்ய தாவத் ஸிகதில ம்ருது தேசே தூரதோ வாரி தாபே
பரிகர பரி மிஸ்ரான் தேநு கோபாந் அதஸ்தாத் உப நித தத் அதத்தா ஹஸ்த பத்மேந சைலம் –-4-

அப்படி மேலே தூக்கப்பட்ட மலையின் கீழ்ப்பகுதியில் மணற்பாங்காகவும், மெதுவாகவும், பரவலாகவும் இருந்த
இடத்தில் கோபர்களைத் தங்களது உடைமைகளுடனும், பசுக்களுடனும் தங்கச் செய்து, தாங்கள் தங்களது
தாமரைக் கையால் மலையைத் தாங்கி நின்றீர்கள். மலை இருந்த இடத்தில் திட்டாக இருந்ததால்
மழை வெள்ளம் தொலைவிலேயே தடுக்கப்பட்டு விட்டது.

—————

பவதி வித்ருத சைலே பாலிகா பிர் வயஸ்யைர் அபி விஹித விலாஸம் கேலி லாபாதி லோலே
ஸவித மிலித தேநூர் ஏக ஹஸ்தேந கண்டூ யதி சதி பஸூ பாலாஸ் தோஷம் ஐஷந்த சர்வே -5-

தாங்கள் ஒரு கையால் மலையைத் தூக்கிக் கொண்டும், மற்றொரு கையால் அருகில் வந்த பசுக்களை
சொறிந்து கொடுத்துக் கொண்டும், இடைப் பெண்களுடனும், நண்பர்களுடனும் அபிநயத்துடன்
கேலிப் பேச்சுகள் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கோபர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

குணங்களையே குன்றாகக் காட்டி ரக்ஷிக்க நமக்கு கவலை ஏது -சிறுவர் போல் ஆனந்தமாக விளையாடலாம்

———–

அதி மஹான் கிரி ரேஷ து வாமகே கர சரோ ருஹி தம் தரதே சிரம்
கிமிதம் அத்புதம் அத்ரி பலம் ந்விதி த்வத் அவலோகிர் ஆகதி கோபகை -6-

வாமகே-இடது கையால் அநாயாஸேந  –

இம் மலையோ மிகப் பெரியதாக உள்ளது. கிருஷ்ணனோ தாமரைப் போன்ற தனது இடது கையினால்
அதை நெடு நேரமாகத் தாங்கி நிற்கிறான். இது என்ன வியப்பு! ஒருக்கால் இது மலையின்
மகிமையாக இருக்குமோ!’ என்று தங்களைப் பார்த்து கோபர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

———–

அஹ ஹ தார்ஷ்ட்யம் அமுஷ்ய வதோர் கிரிம் வ்யதித பாஹுரசாவ் அவரோபயேத்
இதி ஹரிஸ் த்வயி பத்த விகர்ஹனோ திவஸ ஸப்தகம் உக்ரம் அவர்ஷயத் –7-

அஹ ஹ தார்ஷ்ட்யம்–ஐயோ எவ்வளவு கர்வம்

இதைக் கண்ட இந்திரன், ‘இந்தச் சிறுவனுக்குத் தான் எவ்வளவு துணிவு?
இவன் கை சோர்வுற்று (நிச்சயம்) மலையைக் கீழே போட்டு விடுவான் என்று கர்வத்தால் நினைத்துத்
தங்களிடத்தில் வெறுப்பு கொண்டு ஏழு நாட்கள் கடுமையாக மழை பெய்யச் செய்தான்

————–

அசலதி த்வயி தேவ பதாத் பதம் கலித ஸர்வ ஜலே ச கநோத் கரே
அபஹ்ருதே மருதா மருதாம் பதிஸ் த்வத் அபி சங்கித தீ சமுபாத்ரவத் — 8-

தேவ தேவனே! தாங்கள் (அவ் வேழு நாட்களும் ) – நின்ற இடத்திலிருந்து ஓர் அடி கூட நகராது இருக்கையில்
மழையெல்லாம் கொட்டித் தீர்ந்த மேகக் கூட்டங்கள் காற்றினால் – விரட்டி யடிக்கப் பட்டன.
அப்பொழுது வானவர் கோனான இந்திரன் தங்களிடம் பயந்து அங்கிருந்து ஓடி விட்டான்.

————–

சமம் உபே யுஷி வர்ஷ பரே ததா பஸூப தேநு குலே ச விநிர் கதே
புவி விபோ சமுபாஹித பூதர ப்ரமுதிதை பஸூபை பரி ரேபிஷே –9-

விபுவே! அந்த பெருத்த அடை மழை ஓய்ந்ததும் கோபர்களும், பசுக் கூட்டங்களும் – உணர்ந்து (அங்கிருந்து)
வெளியே வந்தனர். தாங்கள் அம் மலையை முன்பு போல் இருந்த இடத்திலேயே கீரிடம் வைத்தீர்கள்.
இதைக் கண்ட கோபர்கள் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.

—————

தரணி மேவ புரா த்ருதவாநஸி ஷிதி தரோத் தரணே தவ கஸ் ஸ்ரம
இதி நுதஸ் த்ரிதஸை கமலா பதே குரு புராலய பாலய மாம் கதாத் –10-

திருமகள் கேள்வனே! முன்பொரு சமயம் (வராஹ அவதாரத்தில்) தாங்கள் இப் பூமியையே தூக்கி இருக்கிறீர்கள்.
(அப்படி யிருக்க) இச் சிறிய மலையைத் தூக்குவதில் தங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று
த்ரிதஸை –தேவர்களனைவரும் தங்களைத் துதித்தனர்.
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading