நியாய தர்சனம் /இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும்–

நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று.
இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது.
இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும்.
இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது

நியாயம் தத்துவப் பிரிவு
நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும்.
தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர்,
பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.

நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே
துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள்.
இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர்.
நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:

பிரத்தியட்சம் – நேரடிக்காட்சி
அனுமானம் – உய்த்துணர்வு
உபமானம் – ஒப்பீடு
சப்தம் – உரைச்சான்று என்பனவாகும்.

ஸூ த் ரங்கள் –ஐந்து அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் இரண்டு பாகங்கள்

The core of the text dates to roughly the 2nd century BC, although there are significant later interpolations.
கௌதமர் -அக்ஷய பாதர் -காலிலே கண் உள்ளவர்
தீர்க்க தபஸ்வீ -மஹா ரிஷி
நியாய ஸூ த் ரங்கள் — 528 –
வாத் சயனர் -(c.450–500 CE),
நியாய வார்த்திகா -உத்யோதகாரர் (c. 6th–7th century),
வாசஸ்பதி மிஸ்ரர் (9th century)
உதயனர் -தாத்பர்ய பரிசுத்தி , (10th century),
ஜெயந்தர் நியாய மஞ்சரி (10th century).

16 வகையால் ஞானம் –ஞானத்தாலே மோக்ஷம்
பிரமாணம்
பிரமேயம்
சம்சயம்
பிரயோஜனம்
த்ருஷ்டாந்தம்
சித்தாந்தம்
அவயவங்கள்
தர்க்கம்
நிர்ணயம்
வாதம்
ஜல்பம்
விதண்டாவாதம்
ஹேத்வ ஆபாசம்
சலம்
வாத நிரசனம்
நிக்ரஹ ஆஸ்தானம்

நித்யம்
அநித்யம்
சேதன க்ருத்யமே காரணம் -பகவான் நியமனம் -சஹகாரி என்பர்

ப்ரதிஜ்ஜை
மலை உச்சியில் புகையைப் பார்த்து -ஹேது
சமையல் அறையில் புகையையும் நெருப்பையும் சேர்த்து பார்த்த அனுபவம் உதாஹரணம்
ஐந்து வித தப்பான ஹேதுக்கள்
ஸவ்யபிசார -முடிவு கொள்ள முடியாத -பல முடிவுகள் கொள்ளும் படி
விருத்த முடிவு
பிரகரணஸ் சாம-விரோதமாயுள்ள முடிவு
ஸத்யாசமா -கேள்விக்கு உரிய முடிவு
கால அதீத

ஆறு ஆஸ்த்திக அல்லது வைதிக தரிசனங்கள் (Vedic Systems or Homogeneous Systems)
ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:

நியாயம் – கௌதமர்
வைசேடிகம் – கணாதர்
சாங்கியம் – கபிலர்
யோகம் – பதஞ்சலி
மீமாம்சை (பூர்வ மீமாம்சை) – ஜைமினி
வேதாந்தம் (உத்தர மீமாம்சை) – பாதராயணர்
இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும்,
இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

நியாயம் – வைசேடிகம்
சாங்கியம் – யோகம்
மீமாம்சை – வேதாந்தம்
நான்கு நாத்திக அல்லது அவைதிக தர்சனங்கள் (Non-Vedic or Heterogeneous System)
நான்கு நாத்திக அல்லது அவைதிக தரிசனங்களும் அவற்றை நிறுவியவர்களும் பின்வருமாறு:

சார்வகம் எனும் உலகாயதம்
ஆசீவகம்
மூவகைச் ஜைனம் = 1 திகம்பரர், 2 சுவேதாம்பரர், 3 யாபனியம் — மகாவீரர்
நால்வகை பௌத்தம் = ஈனயான பௌத்தப் பிரிவுகள் 1 சௌத்திராந்திகம் 2 வைபாடிகம் ;
மகாயான பௌத்த பிரிவுகள் 3 மாத்தியமிகம் 4 யோகசாரம் — கௌதம புத்தர்

————–

கணாதரர், கானடா அல்லது கணபுஜா –
கணபுஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள்.
இப் பெயர் வரக் காரணம், அவரது எளிமையை விளக்குவதாகும்.
அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி
அதனை சமைத்து உண்பவராம்

————

தர்க்க சாஸ்திர நூல்கள்
‘ந்யாய சாஸ்த்ரம்’செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’என்று பேர்*.
அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பாராதலால் வெளி உலகமே அவர் கண்ணுக்குத் தெரியாதாம்.
எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பதால் absent mind கௌதமர் இப்படித்தான் இருந்தார்.
அதனால் எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றிலே விழுந்து விட்டாராம்.
அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணை வைத்துவிட்டாராம்!
கால் தானாக, involuntary – யாக, நடக்கிற போது அதிலுள்ள கண்ணும் தானாகப் பார்த்து விடும்படி அனுக்ரஹம் செய்தாராம்.
பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பேர் வந்தது என்று கதை.

இவருடைய சாஸ்த்ரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர் வாத்ஸ்யாயனர்.
வார்த்திகம் செய்தவர் உத்யேதகரர்.
பரம அத்வைதியான வாசஸ்பதி மிச்ரர் இந்த வார்திகத்துக்கு ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார்.
ந்யாய – வார்த்திக – தாத்பர்ய டீகா என்று அதற்குப் பெயர்.
இந்த விளக்கத்துக்கு விளக்கம் எழுதியிருக்கிறார் உதயனாசாரியார். தாத்பாய – டீகா – பரிசுத்தி என்று அதற்குப் பெயர்.
ந்யாய குஸுமாஞ்ஜலி என்றும் உதயனர் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்.
இவர்தான் புத்த மதத்தைக் கண்டனம் பண்ணி நம் தேசத்தில் இல்லாமல் பண்ணியவர்களில் முக்கியமான ஒருவர்.
‘ந்யாய சாஸ்த்ரத்துக்கு ஜயந்தர் எழுதிய ‘ந்யாய மஞ்ஜரி’என்ற பாஷ்யமும் இருக்கிறது.
அன்னம் பட்டர் என்பவர் தர்க்க ஸங்கிரஹம் என்றும் அதற்குத் தாமே விரிவுரையாக ஓரு ‘தீபிகை’யும் எழுதியிருக்கிறார்.
ஸாதாரணமாக ந்யாய சாஸ்திரம் படிக்கிறவர்கள் (கடைசியில் சொன்ன) இந்த இரண்டு புஸ்தகங்களோடு தான் ஆரம்பிக்கிறார்கள்.

கணாத மஹரிஷி எழுதிய வைசேஷிக சாஸ்த்ரத்துக்கு ராவண பாஷ்யம் என்று ஒன்று இருந்து காணாமற் போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.
பாஷ்யம் மாதிரியாகப் பிரசஸ்தபாதர் எழுதிய ‘பதார்த்த – தர்ம – ஸங்க்ரஹம்’நமக்குக் கிடைத்திருக்கிறது.
இதற்கு உதயனர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.
ஸமீபத்தில் உத்தமூர் வீரராகவாச்சாரியார் வைசேஷிக ரஸாயனம் என்ற நூலை எழுதியிருக்கிறார்.

வைசேஷிகத்துக்கு ஒளலூக்ய தர்சனம் என்றும் ஒரு பெயர் உள்ளது.
‘உலுகம்’என்றால் ஆந்தை. ‘உலூ’தான் இங்கிலீஷில் ‘OWL’ என்று ஆயிற்று. ஆந்தை சம்பந்தப்பட்டது ஒளலூக்யம்.
கணாதருக்கே ‘உலூகம்’என்று பேர் வந்ததாகச் சொல்கிறார்கள்!
கௌதமர் யோசனையிலேயே இருந்ததால் கண் தெரியாமல் கிணற்றில் விழுந்தார் என்றால்,
கணாதர் பகலெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்துவிட்டு இரவுக்குப் பின்தான் பி¬க்ஷக்குப் புறப்படுவாராம்.
பகலில் கண்ணுக்கு அகப்படாமல் ராத்ரியிலேயே இவர் சஞ்சாரம் செய்ததால்,’ஆந்தை’என்று nick – name பெற்றதாகச் சொல்கிறார்கள்.
அஞ்ஞானியின் ராத்திரி ஞானிக்குப் பகலாயிருக்கிறது என்று கீதையில் பகவான் சொல்லும்போது
எல்லா ஞானிகளையுமே ஆந்தையாகத்தான் சொல்லிவிட்டார்!

கணாதர் ஸ்தாபித்ததால் காணாத சாஸ்திரம் என்றும் வைசேஷிகத்துக்குப் பெயர்.
‘தமிழ் ‘காணாத’அல்ல;எல்லாவற்றையும் ‘கண்டு’சொன்னவர்’என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார்*.
மற்ற எந்த சாஸ்திரத்தையும் படித்து அறிவதற்கு வியாகரணமும் வைசேஷிகமும் நிரம்ப ஒத்தாசை செய்கின்றன
என்பது வித்வான்களின் அபிப்பிராயம்.
இதனால்.
காணாதம் பாணினீயம் ச ஸர்வசாஸ்த்ரோபகாரகம் என்று வசனமும் இருக்கிறது.
(காணாதம் – வைசேஷிகம்;பாணினீயம் – வியாகரணம்.)
வியாகரணம் நடராஜாவின் டமருவிலிருந்து வந்தது என்றால்
நியாய – வைசேஷிக சாஸ்திரங்களும் சிவ பெருமான் ஸம்பந்தமுடையவை.
வைசேஷிக சாஸ்திரங்களில் மஹேச்வரனையே பரமாத்மாவாகச் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறது.
ஜகத்துக்கு ஈச்வரன் ‘நிமித்த காரணம்’என்று கொள்வதில் சைவ மதங்கள் நியாய சாஸ்திரத்தையே பின்பற்றுகின்றன எனலாம்.

——————-

இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும் :

இந்திய மெய்யியலுக்கு ஆறு முதன்மையான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது.
அதில் நியாயம் (தர்க்கம்) தத்துவத்தை நிறுவியவர் கௌதமர்.
வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர்.
சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்),
யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலிஆவர்.
மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினி ஆவர்,
மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது.
இதில் முதல் ஐந்தில் பிரம்மம் எனும் இறையியலைப் (பிரம்மம்) பற்றி பேசுவதில்லை.
வேதாந்தம் ஒன்றுதான் மூலப்பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியத் தத்துவ இயலுக்கு இறைமறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும்,
சார்வகம் மற்றும் லோகாயதம் எனும் பொருள் முதல்வாதிகள்,
ஆசீவகம், பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும்
இந்தியத் தத்துவ வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்துள்ளனர்.
இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள் முதல் வாதம்
குறித்து அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.

அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய பௌத்த கொள்கைகளை விளக்கும் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.

அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.

அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல்.
நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.

அபிதம்ம விபாசா : காத்தியாயனரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ்
நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) எனும் துவைதம் மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism)
வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.

அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.

அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல்.
ஆதிசங்கரர் எனும்அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அஜிதகேசகம்பிளி : கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள்முதல்வாதி.

அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு
முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.

அக்சபாதா : கோதமரின் மறு பெயர். நியாய தத்துவ (தர்க்கம்) அமைப்பினை நிறுவியர்.

ஆலம்பன பரீக்சா : திக்நாகர் என்பவர் எழுதியது. யோகசாரம் கருத்தியற் கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.

அனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியவர்.

அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.

அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாயம் – வைசேடிக தத்துவவாதி.
தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.

ஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி

ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாதம், போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.

அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்மகீர்த்தி என்பவர் எழுதிய
ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.

அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.

ஆரியதேவர் : கி பி.320இல் வாழ்ந்தவர். மத்தியமிகம் பௌத்த தத்துவத்தின் திறனாய்வாளர்.

ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.

அசங்கா : கி.பி.450-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.

ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.

அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.

அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது.
இதனை தொகுத்தவர் பைலர் எனும் ரிஷி.

ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு
மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.

பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் புகழ்பெற்ற வேதாந்த நூலை எழுதியவர்.

பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.

பகவத் கீதை : கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற தத்துவங்களை,
ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
பிரஸ்தானத்ரயம் எனும் மூன்று உயர்ந்த வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றில் பகவத் கீதையும் ஒன்று.
பகவத் கீதைக்கு, ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் எழுதிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது.

வாசஸ்பதி மிஸ்ரர்: தத்துவபிந்து மற்றும் பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் விளக்க உரைகளுக்கு விரிவுரை எழுதி
பாமதி எனும் தன் மனைவியின் பெயரில் வெளியிட்டவர்.

பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.

பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.

பாட்ட மீமாம்சம் : குமரிலபட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.

பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.

பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய
மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.

பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.

போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமத தத்துவத்தை போற்றும் கவிதைகள்.

பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.

பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை,
பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர்.

ப்ரஹதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.

கௌதம புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.

புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.

புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்தியமிகம் புத்த தத்துவ நிபுணர்.

சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.

சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமிக புத்த தத்துவ நிபுணர்;
நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.

சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.

சார்வகம்: சார்வகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள் முதல்வாதம் எனப்படும்.
சார்வாகர் என்ற பகுத்தறிவுவாதி ’சார்வகம்’ எனும் தத்துவத்தை நிறுவியவர்.

சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆரியதேவர் எழுதியது.

சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும்
அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.

தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.

தத்துவ – சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.

தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.

திக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.

திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.

துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.

துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும்
இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.

துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் எனும்
தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.

சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாயம் தத்துவ நிபுணர்.

கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த நியாயம் தத்துவ அறிஞர்.

கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.

குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர்.
இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.

ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான
சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.

ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 – 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர்.
தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.

ஹேது – பிந்து : தர்மகீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.

ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல்.
(ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).

ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.

ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.

ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.

ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய – வைசேஷிக தத்துவ அறிஞர்.

ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்.
இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.

ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்தியாயனர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான
மஹா விபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.

கமலசீலா : கி. பி. 750-இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

கணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.

காத்தியாயனர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம் எனும் நூலை எழுதியவர்.

கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.

கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி

காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி,
பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.

கிராணவளி : வைசேஷிகம் தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.

குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.

குமரிலபட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர்.
பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.

லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.

லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.

லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.

லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர்.
இதனை சார்வகம் என்றும் அழைப்பர்.

மாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற
இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.

மதுசூதன சரஸ்வதி : காலம் 1565-1650. அத்வைத சித்தி என்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.

மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.

மத்தியமிகம் : மகாயான பௌத்த சமயத்தின் கருத்தியல் பிரிவு. இதனை நிறுவியது நாகார்ஜுனர்.
யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.

மாத்யமிக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்

மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர்.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.

மகா சாங்கிகர்கள் : பழமை வாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள்.
பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.

மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு.
இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.

மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.

மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.

மந்தன மிஸ்ரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.

மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.

மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல்.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.

மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது)
எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.

மிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.

பூர்வ மீமாம்சம்: ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த
விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.

உத்தர மீமாம்சம் : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.

மீமாம்ச சூத்ரா : மீமாம்சம் தத்துவம் பற்றிய மூல நூல்.

நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்

நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கம் கொடுத்தவர்.

நவ்ய நியாயா : நவ நியாயம் (இந்து தத்துவம்). காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.

நியாயம் (இந்து தத்துவம்) (தர்க்கம்) : இத்ததுவத்தை நிறுவியவர் கௌதமர்.
அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.

நியாய – பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.

நியாய – பிந்து – திகா : ’நியாய – பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.

நியாய – கந்தழி : வைசேடிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.

நியாய – கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது.
இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.

நியாய – குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.

நியாய-மஞ்சரி : நியாயம் (இந்து தத்துவம்)- வைசேஷிகம் முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.

நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.

நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.

நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு
இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.

நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.

நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ர்ர் எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.

பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேடிகம் தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.

பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.

பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.

பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த சமஸ்கிருத மொழி இலக்கண ஆசிரியர்.

பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.

பதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.

பயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.

திரிபிடகம் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.

பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.

பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை பரப்பியவர்.

பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.

பிரக்ஞ – ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.

பிரகரண – பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.

பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.

பிரமாண – வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.

பிரசன்ன – பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.

பதார்த்த – தர்ம – சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.

புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)

பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.

ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.

ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.

ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.

இராமானுசர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார்.
பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.

ராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேடிகம் நூல்களில் ஒன்று.

ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.

ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 – 1100 ஆகும்.

ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.

சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்சம் பற்றிய விளக்க நூல். இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான இந்நூலை எழுதியவர் சபரர்.

சபர பாஷ்யம் : மீமாம்சம் குறித்து விளக்க நூலை எழுதியவர் சபரர்.

சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.

சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8-வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட
விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.

சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.

சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது.
இதனை தொகுத்தவர் ஜைமினி ரிஷி.

சங்கரர் : கி. பி.788 – 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர்.
இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர்.
மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.

சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. சாங்கியம் இத்தத்துவத்தை நிறுவியவர்.

சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணர் எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.

சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.

சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.

சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.

சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாடிகம் பௌத்தப் பிரிவின் தத்துவவாதி.

சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.

சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.

சாரீரக – பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.

சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.

சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.

சௌத்திராந்திகம் : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் பௌத்தப் பிரிவின் தத்துவம்.

சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர்.
நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.

சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.

சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.

சுலோக வார்த்திகா : குமரிலபட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.

ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.

ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.

சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.

ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.

சுரேஷ்வரர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர்.
சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.

சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.

தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரிலபட்டர் எழுதியது.

தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.

தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய-வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.

தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.

தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.

தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.

தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.

தத்வோபப்ளவசிம்மம் : ஜெயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல்.
பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.

துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச தத்துவ நூல்.

உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய – வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.

உத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள்
என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தை பற்றியும், பிரபஞ்சம் பற்றியும்,
பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமை என்றும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள்.
ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார்.
சங்கரருக்குப் பின் வந்தவர்களில் இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் பாஷ்யம் எழுதியுள்ளனர்.

உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத
வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.

வைபாடிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.

வைசேஷிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.

வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.

வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.

வாசுதேவ சார்வபா உமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர்.
நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.

வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞர். சௌத்திராந்திக யோகசாரம் எனும் பௌத்த தத்துவத்தை நிறுவியவர்.

வாத்ஸ்யாயணர் : கி. பி. 4-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.

வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது.
இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.

வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.

வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்றும் பிட்சு சூத்திரம் என்றும் அழைப்பர்.

வேதாந்த சாரம் (நூல்) : 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.

விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.

வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.

வித்யாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய
பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த விளக்க நூல் மிகவும் பிரபலமானது.
மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி

விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.

விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.

விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.

வினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.

விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.

விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.

விவேகசூடாமணி (நூல்): ஆதிசங்கரர் எழுதியது.

யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை.
பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.

யோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே
உண்மை என்பது இவர்கள் கொள்கை.

யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.

பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.

யாக்யவல்க்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.

யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. மு. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.

யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல். இதனை தொகுத்தவர் வைசம்பாயனர்.

யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.

யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading