ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கனக்க கனக்க ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழு மடை கொள்ளும் என்று இருக்கிறார்-
ஸ்ரீ கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரமே ஷோ அஹமேவ -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இவ்வளவேயோ உமக்கு உள்ள நைச்யம் -மற்றவர்கள் அனுசந்தித்தது உமக்கு இல்லையோ என்ன –
அடியேன் ஸ்ரீ ஆழ்வானை உப லஷணமாகக் கொண்டு விண்ணப்பம் செய்தேன் இத்தனை போக்கி -அவ்வளவிலே பர்யவசிதனன்று –
அனைவரும் ஸ்வ கதமாக அனுசந்தித்த நைச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது
அடியேன் இடத்தில் என்கிறார்-ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத –இத்யாதியாலே —
ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில்,
அத்ய – கலி புருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில்,
ஸூ த்தாத்ம யாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான-ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன,- ஆத்ம குணங்கள் நிறைந்தவர்களில் மிக மிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன,-பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸர பட்டரென்ன இவர்களால்,
உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லா வகையான நீச தர்மங்களும் (குற்றங்களும்),
மயி ஏவ – அடியேனிடத்திலேயே,
அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன)
தஸ்மாத் – ஆகையால்,
தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்தி பெற்ற தேவரீரது கருணையானது,
மத் கதி: ஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.
(மிகப் பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப் பெருத்த பாபம் செய்த அடியேனொருவனே யன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லை யென்றபடி.)
——–
ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்-
பரி ஸூத்த அந்தக் கரணரான ஸ்ரீ ஆளவந்தார் -ஆச்சார்ய உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வான் -அவர் திரு மகனாரான ஸ்ரீ பட்டர்
இவர்கள் ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே
அமர்யாத–ஸூய்வாப நோப-அதி க்ரம அஞ்ஞானம் – இத்யாதிகளில் அருளிச் செய்த எல்லா நைச்சியமும்
திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்
(ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “”வள வேழ் உலகில் -செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.
——————
ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.
அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
——–
ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.
அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)
—————–————–
ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்
ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-
ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தே னே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்
ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –
பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –
என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே
மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற
அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்
———
அத்யாபி நாஸ்த் யுபரதி த்ரிவித அபசாராத் பாப பரே நிபதி தோஸ்மி தமஸ்ய பாரே
ஏதாத்ருஸ அஹம் அகதிர் பவதோ தயாயா பாத்ரம் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –59-
த்ரிவித அபசாராத் –மூன்று வித அபசாரங்களில் நின்றும்
யுபரதி-அத்யாபி நாஸ்த்–ஒழிந்தமை இன்றைக்கும் இல்லை
பாப பரே அபாரே தமசி –பாபியான அடியேன் மஹத்தாயும் துஸ்தரமுமாயும் இருக்கிற அஞ்ஞானத்தில்
நிபதி தோஸ்மி–விழுந்து கிடக்கிறேன்
ஏதாத்ருஸ –இப்படிப்பட்டவனாய்
அகதிர் –உபாயான்தர ஸூந்யனாய்
பவதோ தயாயா பாத்ரம் –உன் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிற
அஹம்-அடியேன்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –உன் திருவடிகளை சரணம் புகுகிறேன்
—————
ஹை நிர்ப்பயஸ் அஸ்மி அவிநயஸ் அஸ்மி யதஸ் த்வத் அங்க்ரவ் லிப்சாம் அலப்தவதி சேதஸி துர்விநீதே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் ஏஷ ஸோஹம் அக்ரே வரப்ரதே தவ ப்ரலபாமி கிஞ்சித் –74-
ஹே வரப்ரதே
ஏஷ ஸோஹம் –இவ்வடியேன்
நிர்ப்பயஸ் அஸ்மி –அச்சம் அற்றவனாய் இருக்கிறேன் –
கடதாசி ஸார்வ பவ்மனானவானை என்னை நோக்காய் என்னுமா போலே விலக்ஷண விஷயத்தை காமுற்றோமே–
பிறர் அறிந்தால் என் படுவோம் என்று அஞ்சாதே கிடக்கிறேன்
அவிநயஸ் அஸ்மி –விநயம் அற்று இருக்கிறேன் –ஆச்சார்ய சேவையை கனவிலும் செய்து அறியேன்
ஹை –அந்தோ -கெட்டேன்-அவனுடைய வை லக்ஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டு
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே ஆழ்வாராதிகள் அனுபவிக்கும் உன்னை
சம்போதித்து தூஷிக்கிற படி என்னே என்று வெறுக்கிறார்
யதஸ் –ஏன் எனில்
துர்விநீதே -சீர் திருந்தாமல் இருக்கிற
சேதஸி–என் நெஞ்சானது
த்வத் அங்க்ரவ் லிப்சாம் –உனது திருவடிகளில் விருப்பத்தை
அலப்தவதி சதி -அடையாது இருக்கும் அளவிலே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் –தீ வினைகள் ஆகிற கவசங்களை அணிந்துள்ள
ஏஷ ஸோஹம் த்வத் அக்ரே -இவ்வடியேன் உன் எதிரில்
கிஞ்சித் ப்ரலபாமி –வாயால் வந்ததொன்றை பிதற்றா நின்றேன்
திரு முன்பே நிற்கைக்கும் அயோக்யனாய் இருந்து வைத்தும் கடாக்ஷ மழை சூழந்து இருக்க
விண்ணப்பம்க் செய்தேனே–என்ன அநீதி என்று அநு சயிக்கிறார்
ஞான பக்திகள் தலை எடுத்தார் பேசும் படிகளை அநு கரித்து பாசுரம் செய்தேனே-
பய விநயங்கள் அடியேனுக்கு உண்டாகில் இப்படிப் பேச ப்ரஸக்தி உண்டோ
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
—————-
சவ்யாதிர் ஆதிர் அவிதுஷ்டிர் அநிஷ்ட யோக ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் அமர்ஷகரோ நிகர்ஷ
க்ருந்தந்தி சந்ததம் இமாநி மனோ மதீயம் ஹஸ்தீஸ ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-75-
ஹஸ்தீஸ-ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
சவ்யாதிர் –சரீர வியாதியுடன் கூடின
ஆதிர் –மனோ வியாதி என்ன
அவிதுஷ்டிர் –நெடு நாள் அனுபவித்தும் திருப்தி பிறவாமை என்ன
அநிஷ்ட யோக –வேண்டாதவர்கள் வந்து சேர்வது என்ன
ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் –விரும்பிய பொருள்கள் கிடைக்காத படி தடை படுவது என்ன
அமர்ஷகரோ நிகர்ஷ –கோபத்தை உண்டாக்க வல்ல தாழ்ச்சி என்ன
அமர்ஷம் -ரோஷம் -அதை விளைக்கக் கடவ நிகர்ஷம் -குலம் ரூபம் வித்யா தனம் இத்யாதிகளில்
தனக்குள்ள தண்மை நிமித்தமான நிகர்ஷம்
இமாநி–ஆகிய இவைகள்
மதீயம் மனோ சந்ததம் –என் மனதை எப்போதும்
க்ருந்தந்தி –ஈர்கின்றன
ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-உன்னிடம் அன்பு வைப்பதாகிய நிதியின் இழவோ என்றால்
ந க்ருந்ததி -வருந்துகின்றது இல்லையே -உன்னிடம் அன்பு இல்லையே என்ற துக்கம் மாத்திரமே இல்லை என்கை
பகவத் விஷயத்தில் அபிலாஷை மாத்திரமே அக்ஷய பல பிரதமாகையாலே அதனை நிதி என்கிறார் —
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயதே -சா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம் சா ப்ராந்திஸ்
ச சா விக்ரியா –என்று ஒரு க்ஷணம் சிந்தை மாறினாலும் மஹா ஆபத்து என்று சாஸ்திரம் சொல்லா நிற்க
அதிலே நான் கரையாதே கிடக்கிறேன்
விஷயாந்தரங்களுக்காகவே கரைந்து போகின்றேன்
—————-
வித்வேஷ மான மத ராக விலோப மோஹாதி ஆஜாந பூமிர் அஹம் அத்ர பாவே நிமஜ் ஜன்
நிர் த்வந்த்வ நித்ய நிரவத்ய மஹா குணம் த்வாம் ஹஸ்தீஸ க ச்ரயிதும் ஈஷிதும் ஈப்ஸிதும் வா –76-
நிர் த்வந்த்வ –ஞான அஞ்ஞானங்கள் ஸூக துக்கங்கள் -போன்ற த்வந்தம் இல்லாதவனாயும்
கொள்கை கொளாமை இலாதவன் –எள்கல் ராகம் இலாதான்
நித்ய நிரவத்ய–ஸ்வபாவமாகவே ஹேயபிரதிபடனாயும் உள்ள
ஹஸ்தீஸ–ஸ்ரீ பேர் அருளாளனே
வித்வேஷ –ஒரு வஸ்துவில் அகாரணமாக த்வேஷிப்பது
மான –ஆபீஜாத்யாதி ப்ரயுக்தமாக அஹங்கரிக்கை என்ன
மத -விஷய லாபத்தாலே கொழுப்படைவது
ராக -விஷய ப்ராப்தியை விரும்புகை
விலோப –விசேஷ லோபம் என்ன –ப்ராப்தமான பொருளை ஸத்பாத்ரத்தில் விநியோகம் செய்ய இடைச்சுவரான அபி நிவேசம்
மோஹாதி ஆஜாந பூமிர் –மோகம் முதலான துர்குணங்களுக்குப் பிறப்பிடமாய் –ஆதி சப்தம் காம க்ரோதாதிகள்
மொழியைக் கடக்கும் பெறும் புகழ் கொண்ட -ஸத் குண கணா நாமா காரரான இவர் –
இப்படிப்பட்ட தோஷங்களுக்கு ஜென்ம பூமியாக அருளிச் செய்து கொள்கிறார்
அத்ர பாவே –இந்த சம்சாரத்தில்
நிமஜ்ஜன் அஹம் –மூழ்கிக் கிடக்கிற அடியேன்
மஹா குணம் த்வாம் –சிறந்த குணமுடைய உன்னை
ச்ரயிதும் -அடைவதற்கும்
ஈஷிதும் –காண்பதற்கும்
ஈப்ஸிதும் –அடைய விரும்புவதற்கும்
க –எவ்வளவன் –ஒன்றுக்கும் அதிகாரி அல்லேன்
நிகர்ஷித்தின் எல்லையில் இருக்கும் நான் சர்வாதிகனான உன்னை அபி லஷிக்க எவ்வளவன்
சர்வாத்மநா அடியேன் அநதி காரி -என்கிறார்
——————–————————–
அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவ த சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே
ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-
ரெங்கேச
ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்
பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற
அஹம்–அடியேன்
மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்
மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு
சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்
த்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்
ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர
ஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்
ஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-
ரங்க சந்த்ர
புருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்
மத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க
அஹம் ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்
அஹம் யு–அஹங்காரியுமாயும் இருந்து கொண்டு
த்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று
பவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்
ஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –
நைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –
அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-
ரங்க ப்ரவண
சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய
அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்
வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்
பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்
அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்
அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ
பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்
ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்
தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்
தவ பர ஏவ பவேயம் என்றபடி
———-
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே-தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே–
இந்த லோகத்தில் இக்காலத்தில் நான் ஒருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகா நின்றது என்பது யாதொன்று –
ஆகையால் தேவரீர் கிருபையே எனக்கு உஜ்ஜீவன உபாயம் –
இஹ லோகே
லோகாந்தரங்களில் உண்டாகில் தெரியாது
அத்யா
காலாந்தரத்தில் உண்டாகில் தெரியாது
அ சங்குசிதம்-
உண்டாகில் இப்படிக் குறைவற உண்டாகக் கூடாது -ஆகையால் இங்கனம் ஒத்த விஷயம்
ஸ்ரீ தேவரீர் கிருபைக்கு வேறே எங்கும் எப்பொழுதும் இல்லை –
அடியேனுக்கும் தேவரீர் கிருபை ஒழிய வேறே புகல் இல்லை என்றபடி -இல்லை
இத்தால்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
அருட்க்கும் அஃதே புகல் 48–என்றத்தைச் சொன்னபடி –
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-
தாத்பர்யம்
ஆளவந்தார் பரமாச்சார்யரான -கூரத்தாழ்வான் திருமகனாரான பட்டர்
அடியேன் இடம் பரிபூர்ணமாக இருக்க –
அஸ்ய -இஹ -அத்ர-அனைத்து விசேஷங்களும் அடியேன் இடமே
தேவரீர் உடைய நிருபாதிக க்ருபை ஒழிய -ஈஸ்வர கருணையில் வ்யாவ்ருத்தி –
ஒழிய வேறே கதி இல்லை
உஜ்ஜீவித்து அருள வேண்டும் என்கிறார்
——–
ஸூத்தாத்ம –
ஆத்ம சப்தம் மநோ வாசியாய் ஸூத்தமான திரு உள்ளத்தை உடையவர்களாய் –
திரு உள்ளத்துக்கு ஸூத்தியாவது –
தேஹத்திலும் – தேஹ அநு பந்திகளிலும் ஆத்மாவிலும் ஆத்ம அனுபந்திகளிலும் சக்தம் அன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வரன் இடத்திலும் தத் அனுபந்திகள் இடத்திலும் சக்தமாய் இருக்கை –
இது இறே ந காம கலுஷம் சித்தம் மம தே பாத யோஸ் ஸ்திதம் காமயே வைஷ்ணவத் வந்து
சர்வ ஜன்ம ஸூ கேவலம் –ஜிதந்தே 13-என்றும் ‘
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -இத்யாதிகளிலே சொல்லப் படுகிறது
யாமுன –
முற்காலத்திலே ஸ்ரீ மன் நாத முனிகள் -ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்ரீ யமுனா தீரத்திலே பெண்கள் படித் துறையைக் காக்கையாலே
அதுவே நிரூபகமாய் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கண்ணனை சேவித்துக் கொண்டு இருக்கையாலே
அவர் இடத்திலே ப்ரேமம் தலை எடுத்து -அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஈஸ்வர முநிகளைக் குறித்து
உமக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார் -அவருக்கு ஸ்ரீ யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்தும் என்று நியமித்து அருள
அவரும் அப்படியே செய்து அருளுகையாலே ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ ஆளவந்தாராலும்-
குரூத்தம கூர நாத –
ஸ்வ உபதேசாதிகளாலே -ஸ்வ ஆஸ்ரித அஜ்ஞான நிவர்த்தகரான ஆசார்யர்களில் தலைவரான ஸ்ரீ ஆழ்வானாலும்-
இவர்க்கு அஜ்ஞான நிவர்த்தகரில் தலைமை யாவது –
ஸ்ரீ உடையவர் தமக்கு உட்பட்ட அசிஷணீயரான ஸ்ரீ அமுதனாரை தாம் அனுவர்த்தித்து
வசீகரித்து ஸ்ரீ உடையவர்க்கு ஆளாக்குகை-
ஆகை இறே ஸ்ரீ அமுதனாரும் –மொழியைக் கடக்கும் -என்று அருளிச் செய்தது –
பட்டாக்ய தேசிக வர –
ஸ்ரீ விஷ்ணு பரத்வ ஸ்தாபாகமான ஸ்ரீ விஷ்ணு புராண பிரவர்த்தகர் ஆகையாலே மஹா உபாகாரகரான ஸ்ரீ பராசரர் இடத்தில்
உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் –
அது செய்யப் பெறாதே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளின ஸ்ரீ ஆளவந்தார் குறை தீர ஸ்ரீ உடையவராலே இவரும்-
ஸ்ரீ பராசர பகவான் போல்வார் ஒருவர் என்று திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பராசர பட்டர் என்று சாத்தப் பட்ட
திரு நாமம் உடையராய் இவ் விபூதியில் இருந்தே அவ்விபூதியில் அனுபவத்தை அனுபவிக்கும்
அவர்களில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பராசர பட்டராலேயும்
இவருக்கு தேசிகரில் ஸ்ரைஷ்ட்யம் ஆவது –
ஸ்ரீ பட்டர் திருவவதரித்த பின்பு ஸ்ரீ பரம பதத்துக்கும் லீலா விபூதிக்கும் இடைச் சுவர் இல்லை என்னும் படியாய் இருக்கை –
உக்த –
ஸ்வ ஸ்வ பிரபந்தங்களில் ஸ்வ கதமாக அனுசந்திக்கப் பட்டதாய் –
இத்தால் இவர்கள் ஸூத்தாத்மாக்கள் ஆகையாலே அவர்களுக்கு நைச்சயமே இல்லை யாகிலும் அவர்கள்
ஸ்வ கதமாக நைச்யத்தை அனுசந்திக்கிறது –
ஸ்வ சம்பந்தியான அடியேன் -நைச்சயமே ஸ்வ நைச்யம் என்னும் அபிப்ப்ராயத்தாலே -என்கிறது –
திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்
(ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “”வள வேழ் உலகில் -செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.
——————
ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.
அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
——–
ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.
அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)
—————–————–
ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்
ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-
ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தே னே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்
ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –
பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –
என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே
மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற
அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்
———
அத்யாபி நாஸ்த் யுபரதி த்ரிவித அபசாராத் பாப பரே நிபதி தோஸ்மி தமஸ்ய பாரே
ஏதாத்ருஸ அஹம் அகதிர் பவதோ தயாயா பாத்ரம் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –59-
த்ரிவித அபசாராத் –மூன்று வித அபசாரங்களில் நின்றும்
யுபரதி-அத்யாபி நாஸ்த்–ஒழிந்தமை இன்றைக்கும் இல்லை
பாப பரே அபாரே தமசி –பாபியான அடியேன் மஹத்தாயும் துஸ்தரமுமாயும் இருக்கிற அஞ்ஞானத்தில்
நிபதி தோஸ்மி–விழுந்து கிடக்கிறேன்
ஏதாத்ருஸ –இப்படிப்பட்டவனாய்
அகதிர் –உபாயான்தர ஸூந்யனாய்
பவதோ தயாயா பாத்ரம் –உன் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிற
அஹம்-அடியேன்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –உன் திருவடிகளை சரணம் புகுகிறேன்
—————
ஹை நிர்ப்பயஸ் அஸ்மி அவிநயஸ் அஸ்மி யதஸ் த்வத் அங்க்ரவ் லிப்சாம் அலப்தவதி சேதஸி துர்விநீதே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் ஏஷ ஸோஹம் அக்ரே வரப்ரதே தவ ப்ரலபாமி கிஞ்சித் –74-
ஹே வரப்ரதே
ஏஷ ஸோஹம் –இவ்வடியேன்
நிர்ப்பயஸ் அஸ்மி –அச்சம் அற்றவனாய் இருக்கிறேன் –
கடதாசி ஸார்வ பவ்மனானவானை என்னை நோக்காய் என்னுமா போலே விலக்ஷண விஷயத்தை காமுற்றோமே–
பிறர் அறிந்தால் என் படுவோம் என்று அஞ்சாதே கிடக்கிறேன்
அவிநயஸ் அஸ்மி –விநயம் அற்று இருக்கிறேன் –ஆச்சார்ய சேவையை கனவிலும் செய்து அறியேன்
ஹை –அந்தோ -கெட்டேன்-அவனுடைய வை லக்ஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டு
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே ஆழ்வாராதிகள் அனுபவிக்கும் உன்னை
சம்போதித்து தூஷிக்கிற படி என்னே என்று வெறுக்கிறார்
யதஸ் –ஏன் எனில்
துர்விநீதே -சீர் திருந்தாமல் இருக்கிற
சேதஸி–என் நெஞ்சானது
த்வத் அங்க்ரவ் லிப்சாம் –உனது திருவடிகளில் விருப்பத்தை
அலப்தவதி சதி -அடையாது இருக்கும் அளவிலே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் –தீ வினைகள் ஆகிற கவசங்களை அணிந்துள்ள
ஏஷ ஸோஹம் த்வத் அக்ரே -இவ்வடியேன் உன் எதிரில்
கிஞ்சித் ப்ரலபாமி –வாயால் வந்ததொன்றை பிதற்றா நின்றேன்
திரு முன்பே நிற்கைக்கும் அயோக்யனாய் இருந்து வைத்தும் கடாக்ஷ மழை சூழந்து இருக்க
விண்ணப்பம்க் செய்தேனே–என்ன அநீதி என்று அநு சயிக்கிறார்
ஞான பக்திகள் தலை எடுத்தார் பேசும் படிகளை அநு கரித்து பாசுரம் செய்தேனே-
பய விநயங்கள் அடியேனுக்கு உண்டாகில் இப்படிப் பேச ப்ரஸக்தி உண்டோ
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
—————-
சவ்யாதிர் ஆதிர் அவிதுஷ்டிர் அநிஷ்ட யோக ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் அமர்ஷகரோ நிகர்ஷ
க்ருந்தந்தி சந்ததம் இமாநி மனோ மதீயம் ஹஸ்தீஸ ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-75-
ஹஸ்தீஸ-ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
சவ்யாதிர் –சரீர வியாதியுடன் கூடின
ஆதிர் –மனோ வியாதி என்ன
அவிதுஷ்டிர் –நெடு நாள் அனுபவித்தும் திருப்தி பிறவாமை என்ன
அநிஷ்ட யோக –வேண்டாதவர்கள் வந்து சேர்வது என்ன
ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் –விரும்பிய பொருள்கள் கிடைக்காத படி தடை படுவது என்ன
அமர்ஷகரோ நிகர்ஷ –கோபத்தை உண்டாக்க வல்ல தாழ்ச்சி என்ன
அமர்ஷம் -ரோஷம் -அதை விளைக்கக் கடவ நிகர்ஷம் -குலம் ரூபம் வித்யா தனம் இத்யாதிகளில்
தனக்குள்ள தண்மை நிமித்தமான நிகர்ஷம்
இமாநி–ஆகிய இவைகள்
மதீயம் மனோ சந்ததம் –என் மனதை எப்போதும்
க்ருந்தந்தி –ஈர்கின்றன
ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-உன்னிடம் அன்பு வைப்பதாகிய நிதியின் இழவோ என்றால்
ந க்ருந்ததி -வருந்துகின்றது இல்லையே -உன்னிடம் அன்பு இல்லையே என்ற துக்கம் மாத்திரமே இல்லை என்கை
பகவத் விஷயத்தில் அபிலாஷை மாத்திரமே அக்ஷய பல பிரதமாகையாலே அதனை நிதி என்கிறார் —
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயதே -சா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம் சா ப்ராந்திஸ்
ச சா விக்ரியா –என்று ஒரு க்ஷணம் சிந்தை மாறினாலும் மஹா ஆபத்து என்று சாஸ்திரம் சொல்லா நிற்க
அதிலே நான் கரையாதே கிடக்கிறேன்
விஷயாந்தரங்களுக்காகவே கரைந்து போகின்றேன்
—————-
வித்வேஷ மான மத ராக விலோப மோஹாதி ஆஜாந பூமிர் அஹம் அத்ர பாவே நிமஜ் ஜன்
நிர் த்வந்த்வ நித்ய நிரவத்ய மஹா குணம் த்வாம் ஹஸ்தீஸ க ச்ரயிதும் ஈஷிதும் ஈப்ஸிதும் வா –76-
நிர் த்வந்த்வ –ஞான அஞ்ஞானங்கள் ஸூக துக்கங்கள் -போன்ற த்வந்தம் இல்லாதவனாயும்
கொள்கை கொளாமை இலாதவன் –எள்கல் ராகம் இலாதான்
நித்ய நிரவத்ய–ஸ்வபாவமாகவே ஹேயபிரதிபடனாயும் உள்ள
ஹஸ்தீஸ–ஸ்ரீ பேர் அருளாளனே
வித்வேஷ –ஒரு வஸ்துவில் அகாரணமாக த்வேஷிப்பது
மான –ஆபீஜாத்யாதி ப்ரயுக்தமாக அஹங்கரிக்கை என்ன
மத -விஷய லாபத்தாலே கொழுப்படைவது
ராக -விஷய ப்ராப்தியை விரும்புகை
விலோப –விசேஷ லோபம் என்ன –ப்ராப்தமான பொருளை ஸத்பாத்ரத்தில் விநியோகம் செய்ய இடைச்சுவரான அபி நிவேசம்
மோஹாதி ஆஜாந பூமிர் –மோகம் முதலான துர்குணங்களுக்குப் பிறப்பிடமாய் –ஆதி சப்தம் காம க்ரோதாதிகள்
மொழியைக் கடக்கும் பெறும் புகழ் கொண்ட -ஸத் குண கணா நாமா காரரான இவர் –
இப்படிப்பட்ட தோஷங்களுக்கு ஜென்ம பூமியாக அருளிச் செய்து கொள்கிறார்
அத்ர பாவே –இந்த சம்சாரத்தில்
நிமஜ்ஜன் அஹம் –மூழ்கிக் கிடக்கிற அடியேன்
மஹா குணம் த்வாம் –சிறந்த குணமுடைய உன்னை
ச்ரயிதும் -அடைவதற்கும்
ஈஷிதும் –காண்பதற்கும்
ஈப்ஸிதும் –அடைய விரும்புவதற்கும்
க –எவ்வளவன் –ஒன்றுக்கும் அதிகாரி அல்லேன்
நிகர்ஷித்தின் எல்லையில் இருக்கும் நான் சர்வாதிகனான உன்னை அபி லஷிக்க எவ்வளவன்
சர்வாத்மநா அடியேன் அநதி காரி -என்கிறார்
——————–————
அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே
ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-
ரெங்கேச
ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்
பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற
அஹம்–அடியேன்
மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்
மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு
சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்
த்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்
ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர
ஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்
ஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-
ரங்க சந்த்ர
புருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்
மத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க
அஹம் ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்
அஹம் யு–அஹங்காரியுமாயும் இருந்து கொண்டு
த்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று
பவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்
ஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –
நைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –
அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-
ரங்க ப்ரவண
சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய
அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்
வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்
பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்
அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்
அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ
பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்
ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்
தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்
தவ பர ஏவ பவேயம் என்றபடி
———-
சமஸ்த –
அகிலமான என்னுதல்-
ஒன்றோடு ஓன்று பிணைத்துக் கொண்டு இருக்கிற என்னுதல் –
இத்தால் தனித் தனியே விபஜித்து அறிய ஒண்ணாது என்கிறது
நைச்யம்
ஒரு விசேஷம் சொல்லாமையாலே ஏக வசனம் ஜாதி அபிப்ராயமே –நைச்யத்வா வச்சின்னம் எல்லாம் என்கிறது
அத்ய
ஸ்ரீ தேவரீரை சரணம் அடைகிற இக் காலத்திலே -ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே சரணம் புகுகிறது –
ராவணஸ்ய அநுஜோ பிராதா விபீஷண இதி ஸ்ருத –என்று ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்தது –
சரணாகத்ய அநந்தரம்-நிர்தோஷம்-சாத்த்வத ஸம் – என்கையாலே நைச்யம் கிடையாது என்று கருத்து –
(துரோ சாரோ அபி சர்வாசீ க்ருதக்ந நாஸ்திக புறா ஆதி தேவம் ஸ்ரத்தயா சரணம் சமாஸ்ர யேத்யதி தம் ஜந்தும் நிர்தோஷம் வித்தி பிரபாவாத் பரமாத்மன –ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் சரணாகதனான பின்பு தோஷம் அற்றவனாக ஆவதாகச் சொல்வதால் முன்பு தோஷம் இருந்தமை சித்தம் அன்றோ0
அத்ய இஹ லோகே
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் விண்ணின் தலை நின்று இம் மண்ணின் தலத்து உதித்து -95- என்கிறபடியே
சர்வ சேதனரையும் உத்தரிப்பிக்க தேவரீர் திரு வவதரித்து அருளின இத் தேசத்திலே என்னுதல் –
இக் கர்ம பூமியிலே என்னுதல் –(நமக்கு கர்மம் செய்யும் பூமி -உடையவருக்கு உலகத்தில் உள்ளோர் அனைவரையும் உத்தாரகம் செய்யும் கர்மம் செய்யும் பூமி )
உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-
இஹ மயி –
சரணம் அடைகிற அடியேன் இடத்திலே என்னுதல்
கத்யந்தர ஸூந்யனான அடியேன் இடத்திலே என்னுதல்
அகில நைச்ய பாத்ரம் ஏஷ அஹமேவ – என்று
தன் நெஞ்சு உணர பாபங்களைச் செய்து அது தன்னையே
தன் வாயாலே சொல்ல வல்லனான அடியேன் இடத்திலே என்னுதல்
இஹாத்ய மய்யஸ்தி
இத் தேசத்துக்காக இக்காலத்துக்காக அடியேன் இடத்திலே உண்டு
அசங்குசித மே வ அஸ்தி-
நைச்யம் குறைவற வேணுமாகில்-சங்கோசம் இன்றிக்கே அடியேன் இடத்திலே உண்டு என்கிறார்
அசங்குசிதம் நைச்யம் மய்யத்யை வ அஸ்தி –
உத்தர காலத்தில் ஸ்யாத்-என்று பிரார்த்தித்தாலும் கிடையாது
மயி இஹை வாஸ்தி
அடியேன் இடத்தில் நைச்யம் உள்ளது இவ் விபூதியிலேயே –
மேல் கந்தவ்ய தேசம் ஸ்ரீ தேவரீர் திருவடிகள் ஆகையாலே நைச்யம் கிடையாது என்கிறார்
மய்யேவ நைச்யம் அசங்குசிதம்
அசங்குசித மாய் உள்ளது அடியேன் இடத்திலேயே
மற்றையார் இடத்தில் உண்டாகில் சங்குசித மாயக் காணும் உள்ளது
அசங்குசிதமாகை யாவது –
குறைத்தல் இன்றிக்கே இருக்கை –குறைத்தலாவது நைச்யத்தில் சிறிது அம்சம் இல்லாமை
அது உண்டாவது ஆஸ்ரயாந்தரம் உண்டாகில் இறே –
புறம்பு ஆஸ்ரயாந்தரம் இல்லாமையாலே நைச்ய சப்த வாச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது அடியேன் இடத்திலேயே என்கிறார்
இஹாத்ய மய் யஸ்த்யேவ-
தேசமோ இருள் தரும் மா ஞாலமான இத் தேசம் –
காலமோ சாத்தவ விரோதியான கலி சாம்ராஜ்யம் பண்ணும் காலம்
பாத்ரமோ -ஸோ அஹம் ஷூத்ரதயா -என்கிறபடியே அதி ஷூத்ரனான அடியேன்
ஆகையாலே இவன் இடத்தில் குறைவற நைச்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டாத படி
அவசியம் உண்டு என்கிறார்
இஹாத்ய -என்று
தேச காலங்களை விசேஷிக்கையாலே தேசாந்த்ரே காலாந்த்ரே தம்மளவில் அசங்குசித நைச்யம் இல்லாமை யாதல் –
ஆஸ்ரயாந்தரத்தில் உண்டாகை யாதல் தோற்றும் இறே –அத்தை வ்யாவர்த்திக்கிறது ஏவ காரம்
அது எங்கனே என்னில்
தேசாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் இங்கு சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகில் இவர் இடத்தில்
நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது –
காலாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் அங்கும் சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகக் கூடுமாகில்
அது இவருக்கு இப்போது இல்லாமையாலே இவர் இடத்தில் நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது
ஆகையால் தேசாந்த்ர காலாந்தரங்களிலும் அடியேனை ஒத்த நைச்ய ஆஸ்ரயம் இல்லை என்னும்
இவ் வர்த்தத்தை ஏவ காரம் தோற்றுவிக்கிறது –
தஸ்மாத்-
இத் தேசத்தில் இக் காலத்தில் இன்றிக்கே -தேசாந்தரத்திலும் காலாந்தரத்திலும் அடியேனை ஒத்த
நைச்ய ஆஸ்ரயம் கிடையாமையாலே
தே கருணா து மத் கதிர்வ –
இவனத்தனை நீசர் இல்லை என்னுமவனை கடாஷிக்கத் திரு உள்ளம் பற்றி இருக்கிற ஸ்ரீ தேவரீருடைய சம்பந்தி நியாய –
ஸ்ரீ ஈஸ்வர கருணை போலே ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்த சம்சயமாதல் –
ரஷ்ய அபேஷா ப்ரதீஷை யாதல் அன்றிக்கே விலஷணையான கருணை யானது –
அருட்கும் அக்தே புகல்-48- என்கிறபடியே
அடியேனையே விஷயமாக உடைத்தாகா நின்றது –
கருணை ஜீவிப்பது அபராதிகள் இடங்களிலே யானால் அது பூரணமான இடம் அதுக்கு மிகவும் ஜீவனம் ஆகையாலே
அசங்குசித அபராதியான அடியேனே அதுக்கு புகலிடம் என்கிறார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-
மத்யே -யதீந்த்ரே -என்றது
இவர் தம்மோடு ஒத்த நீசர் இல்லை என்று விண்ணப்பம் செய்தவாறே இவர் தம்மை அங்கீ கரித்தோமாம்
விரகு ஏதோ என்று திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கக் கண்டு –
ஸ்ரீ யதீந்திர –என்று சம்போதிக்கிறார்
இத்தால் அடியேனை அங்கீ கரிக்கும் இடத்தில் கருணை ஒழிய மற்ற ஒரு விரகு இல்லை என்று கருத்து
தஸ்மாத் மத் கதிஸ்து தே கருணைவ –
நிகரின்றி நின்ற வென் நிசதைக்கு நின் அருளின் கண் இன்றி புகல் ஓன்று இல்லை –46- என்கிறபடியே
தீரக் கழிய அபராதங்களைப் பண்ணி -அனுதாபமும் இன்றிக்கே
ஸ்ரீ ஈஸ்வர அங்கீ காரத்துக்கும் அவ்வருகான அடியேனுக்கு புகலிடம் தாப த்ரய அபி பூதராய் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு
அபேஷா நிரபேஷராய் கிருபை பண்ணும் தேவரீருடைய கருணை ஒழிய மற்று ஓன்று இல்லை என்கிறார்
ததஹம் த்வத் ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தயநீயவான் ந ச -ஸ்ரீ ஸ்தோத் ரத் -51- என்று
ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அனுசந்தித்தால் போலே இவரும் இவ் விஷயத்திலே அனுசந்திக்கிறார் —(நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இலேன் )
ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.
ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.
————
தாபத்த்ரயம் மலிந்த இந்த பூ லோகத்தில்
கலி ஸாம்ராஜ்ய காலத்தில்
தாழ்ச்சி -பயம் மிக்க இடத்தில்
ஸூத்த –தங்களால் தோஷம் செய்ய அனுசந்திக்கவும் இல்லாமல்
தோஷம் -கந்தமும் இல்லாமல்
ஆத்ம -கீழ் திரு உள்ளம் -இங்கு ஆத்மா -ஸ்வரூபம்
ஸூத்தமான ஆத்மாவை யுடையவன் யாரோ -அவர் -தத் புருஷ ஸமாஸம் சொல்லாமல் -பஹு வ்ரீஹி ஸமாஸம் -உடையவர் வேறே உடைமை வேறே
அம்மிக்குழவியின் உடல் -ஆறாவது வேற்றுமை உருபு இருந்தாலும் -அம்மிக்குழவியே உடல்
அதே போல் இங்கும் ஸூத்த ஆத்மாவே -கொள்ள வேண்டும்
சப்தம் பஹு வ்ரீஹீ இருந்தாலும் அர்த்தம் படி தத் புருஷ ஸமாஸம் என்றே கொள்ள வேண்டும்
ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸர பட்டர் ஆகிய இம் மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக் கொண்ட குற்றங்களில் ஒன்று கூடத் தம்மிடமில்லாமையே ஆகும்.
பட்டர் – பராஸர பட்டர், கூரத்தாழ்வானுடைய பெரிய திருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற் பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரிய பெருமாள் ‘பராஸர பட்டர்’ என்று பலதடவைகள் அருள் பாடிட்டதனால் அவருக்கு பராஸர பட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணு புராணத்தில் பராஸர முனிவர் போல், ‘பரம் பொருள் திருமாலே’ என்று அறுதி யிட்டுப் ப்ரசாரம் செய்ததே யாகும்.
‘ஸமஸ்த நைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமே யல்லாமல், ‘ஸமஸ்த நைச்யம் மயி அஸங்குசித மேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம்.
எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக் கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம்.
‘தே கருணா து மத் கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியே யன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்ம யோக ஜ்ஞான யோக பக்தி யோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்ல தகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.
நான் தேவரீரை தேடுகிறேன் என்று கொள்ளாமல்
உமது கருணை என்னைத்தேடி உஜ்ஜீவிக்க வருகிறது என்றவாறு
குற்றங்களுடன் லவ லேஸ நல்ல குணம் ஸஹ வாஸம் பண்ணினாள் க்ஷமைக்கு ஸங்கோசம் -சுருக்கம் வருமே –
அவ்வாறு இல்லாமல் இருப்பதால் அஹம் மேவ இதுக்கு முழு வயிறு நிறையும் படி உள்ளேன்
கருணையில் ஏவ காரம் -அஸங்குசிதம் ஏவ –இரண்டு இடத்திலும் -கருணையே கதி -கருணைக்கு என்னுடைய நீசயதையே இலக்கு-
ஸூத்த ஆத்மா–தேசிக வர -குருரேவ -யோக்யதை உதகர்ஷம் சொல்ல விசேஷணங்களுடன் அருளிச் செய்கிறார் -பூஜ நீயர் -உத்தம பரம இத்யாதி
ஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ர வரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சல புத்தி யுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந் நன்றி கொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.
கூரத்தாழ்வான் அதி மாநுஷ ஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்க முடியாத பெரிய அஞ்ஞானக் கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதி வார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக் கொண்ட குற்றங்களாகும்.
ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞான யோக கர்ம யோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத் தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுந குரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.
———————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply