ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ –
ஆன பின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை-என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –
(பல நீ காட்டிப்படுப்பாயோ -அவனைப்போல் அன்று தேவரீர்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – –48 —)
அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்
கீழ் அல்ப அபி என்று தொடங்கி-இவ்வளவும் வர –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -அபராத பூயஸ்தையையும் விண்ணப்பம் செய்து
மேல் இரண்டு ஸ்லோகங்களாலே-
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்கிறார் –
அதில் இஸ் ஸ்லோகத்திலே –
இவர் அல்ப அபி -முதலாக இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தை விண்ணப்பம் செய்தவாறே
நீரும் ஸ்ரீ ஆழ்வான் போல்வாரில் ஒருவர் என்ன
அங்கன் அன்று அடியேன் –மெய்யே நீசன் ஆகையாலே அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய
மற்று ஒரு கதி இல்லை என்கிறார் –வாசா மகோசர மஹா -இத்யாதியாலே(நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -ஆழ்வாரும் நமக்காக சொல்லிக் காட்டி அருளுகிறார் )
வாசா மகோசர மஹா குண தேசிகாக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத்ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத் அகதிஸ் தே –14–
பரிசுத்தமான மனம் உடைய ஸ்ரீ ஆளவந்தார் ,கூரத் ஆழ்வான் , பட்டர் மூவராலும் சொல்ல பட்ட நீச தன்மைகளும்
இப் பூ மண்டலதிலே இன்றே என் இடத்தில் மிக்க விரிவாய் இருக்கிறது –
ஆகையால் யதிகட்க்கு இறைவனே உம் கிருபை தான் எனக்கு கதி..
பதவுரை:-
ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே,
வாசாம் அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய் கொண்டு வருணிக்க முடியாதனவும்,
ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்க முடியாத பெருமையை உடையனவுமாகிய நற் குணங்களை யுடைய,
தேஸிகாக்ர்ய கூராதி நாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால்,
கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட,
அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத் தன்மைக்கும் கொள்கலமானவன்,
ஏஷ: அஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன்,
ஈத்ருஸ: புந: – இத்தகைய மற்றொருவனோவென்னில்,
ஜகதி – உலகில்,
ந (அஸ்தி) – இல்லவேயி ல்லை.
தத் – அக் காரணத்தினால்,
தேது – கருணை புரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய,
கருணா ஏவ – கருணையே,
மத் கதி: – (எல்லாரையும் விடக் குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக,
பவதி – ஆகிறது.
——
வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
மொழியைக் கடக்கும் பெறும் புகழான் -என்கிறபடி இவ்வளவு என்று வாக்கால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
நிஸ் சீமமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையராய் –
தன் திறத்திலே தீரக் கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் ஸ்ரீ பெருமாளோடு ஒரு தலையாக மன்றாடி ரஷிக்கும்
பரம கிருபாவான் ஆகையால் -ஆச்சார்ய ஸ்ரேஷ்டராயும் உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த
அந்த நைச்யத்துக்கும் பாத்திரம் கீழ்ச் சொன்ன ஸ்வ பாவத்தை யுடைய நான் ஒருவனுமேயாய் இருக்கும்
(மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-)
(வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம் || 3)
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்–
ஆராய்ந்து பார்த்தால் இஜ்ஜகத்தில் இப்படிப்பட்ட தோஷத்தை யுடையவன் ஒருவனும் இல்லை
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –
தேவரின் கிருபைக்கு வயிறு நிறையும் படிக்கு ஈடான தோஷ பூர்த்தி எனக்கு உண்டாகையாலே
தேவரீர் கிருபையே எனக்குப் புகல்
ஆர்ய
இவ் விஷயம் தேவரீர் அறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
மோக்ஷ ஏக ஹேதுவான சாதுர்யத்தை யுடைய சதுர அஷரியான திருநாமம் போதாதோ
ந சேத் ராமாநுஜேத் அக்ஷரா சதுரா சதுர் அக்ஷரீ -என்னக் கடவது இறே –மோக்ஷ ஏக ஹேது
தாத்பர்யம்
மிக்க புகழ் கொண்ட கூரத்தாழ்வான் சொல்லிக்கொண்ட குற்றங்களுக்கு எல்லாம்
நான் ஒருவன் ஒழிய பாத்திரம் ஆகிறேன்
இத்தகைய துர்குணங்கள் உள்ள ஒருவன் அடியேன்
என்னால் சொல்லிக் கொள்ளவும் முடியாமல் இருப்பதால் அவர் சொல்லிக் காட்டுகிறார்
தேவரீர் கிருபைக்கு வயிறு நிறையும் படி குற்றங்கள் பூர்ணமாக உள்ளேன்
தேவரீர் கருணையே இத்தைப் போக்கி அருள வேண்டும் -என்கிறார்
——–
வாசா மகோசர –
யதா வாசோ நிவர்த்தந்தே –என்றும் –
மொழியைக் கடக்கும் -என்கிறபடியே ப்ரஹ்மானந்தம் போலே வாக்காலே பரிச்சேதித்துச் சொல்ல அரியவைகளாய்
மஹா –
அப்ராப்ய மநஸா சஹா-என்றும் –
பெரும் புகழான் -என்கிறபடியே மனசாலும் பரிச்சேதித்து அறிய ஒண்ணாதவைகளாய் இருக்கிற
குண –
தயாதி குணங்களை உடையவராய் –
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஒரு நாள் வரையிலே ஸ்ரீ ஆழ்வானை கதளீ தள க்ருந்தநத்திலே (வாழை இலையைப் பறித்து வர )நியமிக்க –
அவரும் அது செய்யப் புக்கு -ஆயுத ஸ்பர்சத்தாலே ஜலம் பொசியக் கண்டு மூர்ச்சித்தார் என்று பிரசித்தம் இறே –
இப்படியே யாயிற்று மற்றைய குணங்களும் இருப்பன
ப்ரஹ்ம குணம் போலே தத் ஆஸ்ரித குணங்களும் அபரிச்சின்னங்களோ என்ன -ஆம் அபரிச்சின்னங்களே
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஸ்ரோத்ரி யஸ்ய சாஹா மஹா தஸ்ய –தைத் -ஆன -என்றும்
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -2-6-8-என்று ப்ரஹ்மத்துக்கு உண்டான ஆனந்தம் நிஷ்காமனான
ஸ்ரோத்ரியனுக்கும் உண்டு என்று இறே வேத புருஷன் சொல்லி வைத்ததும் –
தேசி காக்ர்ய-
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –என்றும் –
விண்ணை வாழ்த்துவர் -என்கிறபடியே
தாம் அத் தேச விசேஷத்தை அறிந்து அதன் வை லஷண்யத்தைப் பிறருக்கும் உபதேசிக்குமவர்களில் (நின் கண் வேட்க்கை எழுவிப்பன் என்னும் ஆச்சார்யர் )தலைவராய் இருக்கிற
இவருக்கு தேசிகரில் தலைமையாவது –
அர்வாஞ்சோ யத் பத சரசிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா -யஸ் யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு
ஸோ அயம் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத மநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்கிறபடியே
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே பூர்வாபர குருத் தாரகரான ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் சம்பந்தம் கொண்டு பேறு
தப்பாது என்று அறுதி இடலாய் இருக்கை –
அன்றிக்கே
உடையவருக்கு ஸ்ரீ பாஷ்ய கரண சஹ காரித்வத்தால் வந்த தலைமை யாகவுமாம்-
சிஷ்ய ஆசார்ய லஷண சீமா பூமியாகையாலே வந்த தலைமை யாகவுமாம் – –
கூராதி நாத –
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அதுவே தமக்கு நிரூபகமாம் படி இருக்கிற ஸ்ரீ கூரத் ஆழ்வானாலே
கதிதாகில -கதித அகில –
கதித -ஷோதீயா நபி -ஸ்ரீ ஸ்தவம் -5- இத்யாதி களாலே அருளிச் செய்யப் பட்டவை களாய் –
கதித -என்கையாலே
அவர் அருளிச் செய்தார் அத்தனை போக்கி அவர்க்கு இது இல்லை என்கிறது –
அகில -அவர் அருளிச் செய்ததில் ஓன்று குறையாத
(க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.
நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.)
நைச்ய பாத்ரம்
நீசதைக்கு கொள்கலன் -இங்கு நீசத்தை யாவது -அஹங்காரம் –
இது தான் 1-தேஹாத்ம அபிமான ரூபமாயும்-
2-ஸ்வா தந்திர அபிமான ரூபமாயும் –
3-சேஷத்வ அபிமான ரூபமாயும் –
4-கர்த்ருத்வ அபிமான ரூபமாயும் -இருக்கையாலே –அகில –என்கிறது –
ஏஷா அஹமேவ-
இச் சரீர விசிஷ்ட அடியேன் -இந் நிர்தேசத்தாலே -ஸ்வ நைச்யத்தில் பூர்வ சரீர சமாப்தமாதல் –உத்தர சரீர சமாப நீயமாதல் இல்லை என்கிறது
அஹமேவ
மற்று ஒருவர் இல்லை
ஏஷா அஹமேவ-
மாரீசன் மிருக வேஷத்தை தரித்தால் போலே சரணாகத வேஷத்தைத் தரித்த அடியேன் -என்கிறார்
ந புநர் ஜகதீத் ருச-
இப்படிக்கு ஒத்தவன் இஜ் ஜகத்திலே கிடையாத மாத்ரம் அன்றிக்கே –
சதுர் தச புவனங்களிலும் -அண்டாந்தரங்களிலும் கிடையாது என்கிறார் –
அவ்யயாநாம் அநேகார்த்த கத்வம் ஆகையாலே(அவ்யயம் –யயம் இல்லாமல் -யதா ததா –ஏக வசனம் பஹு வசனம் -எட்டு வேற்றுமை -ஆக 24 அர்த்தங்கள் )-ஈத்ருச புன -என்று –
ஸ்வ சத்ருசனுடைய ஸ்வ இதர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் )
அதாவது
தம்மைப் போலே பரி பூர்ண நைச்ய பாத்ரமும் அன்றிக்கே ஸ்வ இதரரைப் போலே அல்ப நைச்ய பாத்ரரும் அன்றிக்கே
கிஞ்சின் ந்யூநையான நைச்ய பாத்ரமுமாய் இருக்கை –(கொஞ்சம்- நிறைய -இரண்டையும் விட- முழுவதும் பரிபூர்ணம் மூன்றாவது வகை அடியேன் )
குணாதிகம் இறே உபமானம் ஆவது —
தத் பரிபூர்ண நைச்ய பாத்ரம் அடியேனான படியாலே அடியேனுக்கு புகலிடம் தேவரீருடைய கிருபையே என்கிறார் –
ஸ் தத் ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே —
அடியேனொத்த பரிபூர்ண நைச்ய பாத்ரம் ஜகத்தில் கிடையாமையாலே தேவர் கிருபைக்கு புகுமிடம் அடியேன் என்கிறார்
ராமாநுஜார்ய –
ந கச்சின் ந அபராத்யாதி என்னும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்து –
அடியேனுடைய நைச்சயம் அடியேனுடைய சொல் கொண்டு அறிய வேண்டாதபடி
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே என்று சம்போதிக்கிறார்
(ஸ்ரீ ராமாயணம், யுத்த காண்டம். 116-44:
பாபானாம் வா சுபானாம் வா வாதார்ஹணம் ப்லவங்கம:
கார்யம் ருணமார்யேண ந கச்சித் நபராத்யதி
(அட குரங்கே! பாவிகளோ, அசுபமோ அல்லது கொல்லப்படுவதற்கு தகுதியுடையோரோ, எல்லாருமே தலைசிறந்தவர்களால் கருணை காட்டப்பட வேண்டியவர்கள். தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை.)
நீர் பரிபூர்ண நைச்ய பாத்ரமாகும் காட்டில் உமக்கு நம் கருணை புகலிடமாக வேண்டியது என் என்ன
ராமானுஜ
தம் திறத்தில் தீரக் கழிய அபராதங்களை செய்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி சித்ர வதம் பண்ண உத்யோகிக்க
அப்போது அவனோடு மறுதலைத்து-
கார்யம் கருணமார்யேண -என்று குற்றமே -பச்சையாக ரஷிக்கும் ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து அன்றோ
ஸ்ரீ தேவரீர் திரு வவதரித்தது என்கிறார் –
ஆர்ய
ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு போரும்படியான நைச்யதையை அறிக்கைக்கு ஈடான சர்வஜ்ஞதையை
ஸ்ரீ உடையவர் அன்றோ ஸ்ரீ தேவரீர் என்கிறார் –
இத்தால் ஸ்ரீ தேவரீர் கிருபை பண்ணுகைக்கு இவனுக்கு மேற்பட தண்ணியன் இல்லை என்னும் படியான விஷயம்
வேண்டி இருந்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேணும் -என்கிறார் –
ஸ்ரீ தேவரீர் கிருபையைப் பார்த்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேண்டும்
கருணை வது மத கதிஸ் தே –
தயநீரைக் கண்டால் தயை பண்ணி யல்லது தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான ஸ்ரீ தேவரீருடைய
கருணை வது
தயநீரை ஒழிய தனக்கு விஷயம் கிடையாத கிருபை தானே
மத் கதி –
தேவரீர் கிருபைக்கு போரும்படி குற்றங்களைச் செய்யும் அடியேனுக்கு புகலிடம் என்கிறார் –
தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வரன் கிருபை போலே ஸ்வா தந்தர்ய அபிபூதம் அன்றிக்கே தண்ணளி விஞ்சி இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கிருபையே
அநந்ய கதிகனான அடியேனுக்கு உபாயம் என்கிறார் ஆகவுமாம்
மத் கதிஸ்து தே கருணை வ –
அடியேனுடைய சாதனம் -சாதா நாந்தர-விலஷணம் என்கிறார் –(கதி தஞ்சம் புகல் உபாயம் )
கர்ம ஜ்ஞான பக்திகள்
அஹங்கார கர்ப்பங்களாய்-சேதன சாத்யங்களாய்
அபாய பாஹூளங்களாய் -விளம்ப பல பிரதங்களாய் -ஸ்வரூப விரோதிகளாயும் இருக்கும் –
பிரபத்தி –
நிரஹங்காரமாய்-ஸ்வதஸ் சித்தமாய் -அபாய கந்த ரஹிதமாய்-அவிளம்ப பல பிரதமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமாய்
இருந்ததே யாகிலும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமாய் -பய ஜனகமாய் இருக்கும்
அடியேனுடைய உபாயம்
அஹங்கார கர்ப்பம் அன்றிக்கே ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் பயமும் இன்றிக்கே இருக்கும் –(ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )
அது யத் ரூபம் என்னில்
தே கருணை வ –
ஸ்ரீ ஈஸ்வர கருணையை உள் கொண்டு இருக்கும் ஸ்ரீ தேவரீருடைய கருணையே வடிவாய் இருக்கும் என்கிறார்
ஸ்ரீ ஆசார்யன் ஈஸ்வர பர தந்த்ரன் யாகிலும் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு அபிமத விஷயம் ஆகையாலும்
ஸ்ரீ ஆசார்ய கிருபை ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்தம் இன்றிக்கே –
ஸ்ரீ ஈஸ்வர கருணா கர்ப்பமாய் இருக்கும் என்கிறது –
(இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே.–106–)
———
கீழ் ஆறாவது ஸ்லோகம் தொடங்கி இது வரை-இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப் பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார்.(அஷ்ட சம்பதோவ் -தைத்ரிய ஆரண்யகம் -ஸம்ஹிதை உபநிஷத் -அவற்றை இங்கே படித்துக் கொள்ள வேண்டும் இதி வத் -அதே போல் )
கூரத்தாழ்வானுக்கு ‘வாசா மகோசர மஹா குண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க.
எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகில நைச்ய பாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார்.
தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி.
‘ஆத்யம் யதீந்த்ர ஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்த வேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது.
பஞ்ச ஸ்தவங்களில் விஸ்தாரமாக பல இடங்களில் சொல்லிக் கொள்கிறார் அன்றோ
கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.
ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-இது முதல் பல ஸ்லோகங்களால் நைச்ய அனுசந்தானம்
நமக்காகவே அருளிச் செய்தவை
ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தேனே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்
ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –
பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –
என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே
மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற
அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்
தேவரீர் கருணையே தோஷங்களையே பூர்ணமாகக் கொண்ட அடியேன் உஜ்ஜீவிக்க ஹேது
கதியாக இருக்க வேண்டும் என்று பிரார்திக்கிறார் –
கருணையே ஏவ காரம் -அந்நிய நிஷேதம் -திடமாக காட்டவே அருளிச் செய்கிறார்
அடைமொழி கூரத்தாழ்வானுக்கு சொல்லி -இவை அவர் இடம் நுழைய இடம் இல்லாமையைக் காட்ட
ஆனந்தம் -ஒரு இடம் பொருந்தாவில்லையாகில் -அடுத்து அடுத்து தேடி அவன் இடம் புகுமா போல்
குற்றங்களுக்க்க் கொள்கலமாக இருக்கும் என்னிடமே பொருந்தும் என்று காட்ட ஏஷ அஹம் -இந்த என்னிடம் பொருந்தும் -கிஷ்கிந்தா -சுக்ரீவன் பயந்து இருக்க திருவடி -தீரக்கழிந்த அபராதங்களுக்கு அஞ்சலியே உபாயம் -காட்டி அருளியது போல்
லஷ்மணன் -ராமானுஜர் -அபராதம் செய்தவரை மன்னிக்கவே அவதாரம் -காரேய் கருணை ராமானுஜர் அன்றோ
———————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply