ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்–17–20- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாய பூதனான ஈஸ்வரன் கிருத்யம் அன்றோ –
நம்மால் அது செய்து தலைக்கட்டப் போமோ என்ன
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் –விண்ணின் தலை நின்று -மண்ணின் தலத்து உதித்து
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க சாயியாய் இருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ –
ஆகிலும் அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக சர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டு அருளினீர் ஆகிலும்
அந்த ஈஸ்வரன் தானும் தேவரீருக்கு வஸ்யன் அன்றோ-
ஆனபின்பு ஆஸ்ரிதர் பாப விமோசனத்தில் சக்தி தேவரீருக்கே உள்ளது என்கிறார் –

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ-திவ்ய குண ஸ்வரூப-
அபவ்ருஷேயமாய் -நித்ய நிரதோஷமான வேதாந்தத்தில் வேத்யமான தன்னுடைய கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவன் -ஸ்வரூப குணங்களை யுடையவன் –
ஸ்வரூப குணங்களைச் சொன்ன இது ரூப விபூதிகளுக்கும் உப லக்ஷணம்
திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு ணா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
இப்படி என்றும் சாஸ்திரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே கண்டு எல்லாரும் அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினை ஸுவ்லப்யத்தைச் சொல்கிறது
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
என்றேனும் கட்கண்ணால் காணாத தன் வடிவை கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -என்பாரைப் போலே தன் வடிவில் வாசி அறிந்து ஈடுபடுவார் இல்லாத சம்சாரத்திலே
கிடீர் தம் வடிவை ப்ரத்யஷிப்பித்தது –
ரங்க ராஜ
வி சத்ருசமான தேசத்திலே வந்தால் தன் வைபவம் குன்றுகை அன்றிக்கே துடித்த படி
பரம சாம்யா பன்னருக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற இருப்பிலும் இங்கே வந்து ஈரரசு தவிர்ந்த பின்பு
யாய்த்து சேஷித்வம் தலை நின்றது
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே
த்வம்–-
இப்படி மேன்மை நீர்மை இரண்டாலும் பூரணமான ஸ்ரீ பெரிய பெருமாள் தேவரீருக்கு எப்போதும் வஸ்யர் அன்றோ –
நம் சேவகனார் மருவிய கோயில் என்றபடி -ஆஸ்ரிதருக்கு கை இலைக்கக்கு பவேவிக்கும் அவன் அன்றோ
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குத் தந்த படி –
நாம் பல பிறப்புப் பிறந்து திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத சம்சாரிகள் முருடைத் தீர்த்து நமக்கு ஆளாம்படி
திருத்தித் தருகைக்கு இவர் ஒருவரைப் பெற்றோமே என்று நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி-
ஒரு காரியத்தில் எப்போது இவர் நம்மை நியமிப்பது என்று -அவசர பிரதீஷராய்க் கொண்டு சர்வகாலமும்
இங்குத்தைக்கு விதேயராய்ப் போரா நின்றார் என்பது யாது ஓன்று
வச்யஸ் சதா பவதி
இப்படி ஆஸ்ரித பரதந்த்ரராய் -அத்தாலே சத்தை பெற்ற படி
ஆத்மா நாம் நாதி வார்த்தேயா -என்றும்
தேவும் தன்னையும் -என்னக் கடவது இறே
நிரங்குச ஸ்வதந்த்ரனானவன் ஒருக்காலாக இசைந்து நிற்கிலோ என்ன
வச்யஸ் சதா பவதி-என்கிறார்
ஸ்வ தந்திரத்தால் தன் சத்தை இன்றிக்கே தன் ஸ்வரூப ஸ்திதி அழியக் கார்யம் பார்க்குமோ –
தேவரீர் அளவிலே வ்யாமோஹத்தாலே பர தந்தரனாகை அன்றிக்கே
தன் ஸ்வரூப ஸ்திதிக்காகப் பர தந்திரனாகையாலே எப்போதும் இஸ் ஸ்வ பாவத்துக்கு குலைத்தலில்லை
தஸ்மாத்
ஆகையால் தேவரீர் ஆஸ்ரித ஜனங்களின் பாபத்தைப் போக்குகைக்கு சக்தர் அன்றோ -என்கிறார் –

——————–

உபாய பூதனான ஈஸ்வரன் நமக்கு பவ்யனாய் இருந்தாலும் அநாதி காலம் தத் ஆஜ்ஞா ரூப ஸாஸ்த்ர மரியாதையை உல்லங்கித்து-
கரண த்ரயத்தாலும் அதி குரூரமான பாபங்களைக் கூடு பூரித்து இப்போதும் அதிலே முதிர நடவா நின்ற அளவிலே
ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை அவன் தன்னையே இரந்து கால் கட்டி ஆற்றிக் கொள்ள வேண்டி அன்றோ இவனுக்கு இருப்பது-
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப் போலே இதத்தாயான தேவரீரும்
ஆஸ்ரிதரான அடியோங்களுக்காக ஸ்ரீ பிராட்டிக்கு வல்லவனான எம்பெருமான் திருவடிகளில் சர்வ அபராதங்களையும்
பொறுத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அருளுகையாலே அடியோங்களுக்கு அந்தக் குறையில்லை என்கிறார் –

கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் –18-

கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –
கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே காரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –
நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை
பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –
சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே
த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம் –
கமலாரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –
அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப்பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –

——————–

இப்படி எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தை தம்முடைய ப்ரேம அநு குணமாக பேசுகையில் இறங்கின இவர்
முதல் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலும் அவர்களும் உகந்த விஷயமான ஸ்ரீ எம்பெருமான் அளவிலும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டான ப்ராவண்ய அதிசயத்தையும்
ஸ்வ ஆஸ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் இருக்கிற படியையும் பேசி

மேல் மூன்று ஸ்லோகங்களாலே
தமக்கு அபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளில் பிரார்த்தித்து

அநந்தர ஸ்லோகத்தாலே உடையவர் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கும் அடியான
பாபத்தை போக்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து

மேல் ஆறு ஸ்லோகத்தாலே
பத த்ரய நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும் அபராதிகளையும் பரக்கப் பேசி

மேல் ஒரு ஸ்லோகத்தாலே
அநந்த கிலேச பாஜனமான தேகத்தோடே பொருந்தி இருக்கைக்கு அடியான பாபத்தைப் போக்க வேணும் என்று

அநந்தரம் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ யாமுனாச்சார்ய ப்ரப்ருதிகள் அருளிச் செய்த தோஷ சமூகங்களுக்கு எல்லாம் கொள்கலமான எனக்கு
தேவரீருடைய கிருபை ஒழிய வேறு புகல் இல்லை என்று

மேல் மூன்று ஸ்லோகங்களாலே
அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தை தந்து அருள வேணும் என்றும்
அவர் தம்முடைய கார்யங்களைச் செய்ய சக்தர் என்றும்
அவர் ஸ்ரீ கத்யத்ரயத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பண்ணின பிரபத்தியே தமக்குப் பேற்றுக்கு
உடல் என்று அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் இரண்டு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேவையாகிற பரம ப்ராப்யம் நித்ய அபி விருத்யமாய்ச் செல்ல வேணும் என்றும் –
அதுக்கு பிரதிபந்தகமான சஷுர் விஷய சங்கம் நசிக்க வேணும் என்றும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் பிரார்த்தித்து
இப்பிரபந்த முகேந அடியேன் விண்ணப்பம் செய்த இத்தை சாதரமாக அங்கீ கரித்து அருள வேணும் என்று
அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்

அதில் முதல் ஸ்லோகத்தாலே
தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற பரம ப்ராப்யமே நமக்கு நித்ய அவிவிருத்தியாம் படியாகவும்
அதுக்கு இடைச் சுவரான இதர விஷய சங்கம் அறும் படியாகவும் தேவரீர் செய்து அருள வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானாரை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன்
ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யம் ஆகிற நிலை நின்ற சம்பத்தை யுடையவரே
யதீந்திர
அந்த ஸ்வரூப அநு ரூபமான சம்பத்தை பஜிக்கும் அளவில் எனக்கு என்று நாக்கு நீட்டாதபடி இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைப் பற்ற யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி -என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணமாகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே
அன்றிக்கே
தமக்கு அபேக்ஷிதமான ப்ராப்யத்தைத் தருகைக்கு ஈடான ஞானாதி சம்பத்தை யுடையவர் என்றும்
அதுக்கு விரோதியைப் போக்க வல்ல சக்தியையும் யுடையவர் என்றும் நினைத்து
ஸ்ரீ மந் யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் என்னவுமாம்
யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
தம்முடைய ப்ராப்ய வேஷம் இருக்கிறபடி -வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
நிரந்தரம் அனுபவமாகிற சேவையை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றும்
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி ராமானுஜன் அடிப் பூ மண்ணாவே -என்றும்
ஸ்ரீ பிள்ளை அமுதனார் உபக்ரம உபஸம்ஹாரங்களிலே பேசின கிரமத்தைக் கணிசிக்கிறது
இந்த ப்ராப்யம் நீர் உம்முடைய யத்னத்தாலே சாதித்துப் பெற்றதோ என்ன
அன்று தாயப்ராப்தம் -என்கிறார் –
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்-
எங்களுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை தாம் எப்போதும் அனுபவித்துக் கொண்டு போகிற இந்த பரம ப்ராப்யத்தை
யுபகரித்துக் கொண்டே நிற்க வேண்டும்படி தடையறப் பெருகுகிற தம்முடைய நிர்ஹேதுக கிருபைக்குப் போக்கு வீடாக
முலைக் கடுப்பாலே பாலைத் தறையிலே பீச்சுமா போலே எனக்கு அபேக்ஷை இன்றிக்கே இருக்க
தம்முடையது பேறாகவே சர்வ ஸ்வதாநம் பண்ணி அருளினார்
அத்தாலே எனக்கு வந்து கை கூடிற்று –
ஸ்ரீ பிள்ளை அருளாலே பேறு பெற்றீர் ஆகில் இப்போது நம் பக்கல் அபேக்ஷிக்கிறது என் என்ன
தாமன்வஹம் மம விவரதய
என்று அருளிச் செய்கிறார்
தேவரீர் இப்போது புதிதாக ஓன்று உண்டாக்க வேண்டுவது இல்லை –
ஸ்ரீ பிள்ளை அருளாலே உபகரித்த அத்தை நாள் தோறும் வளர்த்து அருளுகையே உள்ளது
அவரும் அப்படியே செய்யக் கடவோம்-என்னும் இடம் தோற்ற கருணா அம்ருத பரிணாம ரூப கடாக்ஷ வ்ருஷ்டிகளாலே குளிர வழியப் பார்க்க
அத்தாலே நிரஸ்த ஸமஸ்த பாப தப்தராய் பூர்ணமாக யுபகரியா நின்று கொண்டு உத்தர உத்தர
தழைத்துச் செல்லும்படி வளர்த்து அருள வேணும் என்கிறார்
தாமன்வஹம் மம விவரதய -என்று
உபகரிக்கிற ப்ராப்யத்தின் கௌரவம் ஆதல்
இவ்வுபகாரத்துக்கு இலக்கான என்னுடைய பாவமாதல் பாராதே தம்மளவில் உபகரித்து அருளுவதே என்று வித்தாராகிறார் தாம் என்று –
இப்படி செய்ய வேண்டும் நிர்பந்தம் என் என்ன அருளிச் செய்கிறார்
நாத
உடைமையானதின் கார்யம் செய்கை உடையவனுக்கே பரம் இறே
சர்வ ஆஸ்ரித சாதாரணாரான நமக்கு இவன் ஒருவனையே பார்த்து இருக்கப் போகுமோ என்று உபேக்ஷித்து அருளாதே
தேவரீர் திருவடிகளில் அனுபவத்தால் அல்லது செல்லாத என் பிரக்ருதியைத் திரு உள்ளம் பற்றி அருளி
எனக்கு ஒருவனுக்குமே முற்றூட்டு யாம்படி அவ்வனுபவத்தை இடைவிடாமல் வர்த்திப்பித்து அருள வேணும் என்கிறார்
இப்படி நாம் அனுபவத்தை வளர்த்துக் கொடுக்கிலும் இதுக்கு இடைச்சுவரான விரோதியைத் தானே கழித்துக் கொள்கிறான்
என்று விரோதி நிவ்ருத்திக்கு என்னை என் கையிலே காட்டித் தர ஒண்ணாது -அதுவும் தேவரீர் தாமே செய்து அருள வேணும் என்கிறார்
தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –-
என்று -தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற இந்தப் பரம ப்ராப்யத்துக்கு விருத்தமாய் -விஷய பேதத்தாலே
பஹு விதமாய் இருந்த விஷய ப்ராவண்ய ரூபமான காமத்தை சாவாசனமாக போக்கி அருள வேணும்
இங்கனம் அன்றிக்கே இதுக்கு விருத்தமான ஐஸ்வர்யா அனுபவமாகிற காமத்தையும் ஆத்ம அனுபவத்தையும்
பகவத் அனுபவத்துக்கு பிரதிபந்தகங்கள் எல்லாவற்றையும் போக்கி அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –
இதில் முற்பட்ட யோஜனைக்கு ஓவ்வித்யம் உண்டு
சப்தாதி விஷய ப்ராவண்யமே இதுக்கு பிரதிபந்தமாக கீழே அருளிச் செய்ததும்
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் தமக்கு அபேக்ஷிதமாய் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை அநாதி காலம்
இந்த புருஷார்த்தத்துக்கு இடைச்சுவராய் இப்போதும் அநு வர்த்தித்துப் போகும் அர்வாதீந விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி
பூர்வகமாகப் பல படியாகப் பிரார்த்திக்குக் கொண்டு போந்தார் –

————————–

என்னுடைய பாப பலத்தால் அடைவு கெட விண்ணப்பம் செய்த இந்த ஸ்தோத்ரத்தை அடியேனுடைய தோஷங்களைப் பார்த்து
உபேஷியாமல் அங்கீ கரித்து அருள வேணும் என்று ஸ்தோத்ரத்தை நிகமித்து அருளுகிறார்

விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-

விஜ்ஞாபனம்
தம்முடைய அபேக்ஷித்ங்களைத் திருவடிகளில் விண்ணப்பம் செய்ய அது ப்ரபந்தமாய்த் தலைக் கட்டிற்று-
யதிதமத் யது மாம கீ நம்
யாருக்கும் சாதரமாய் இருக்கிற படி -செவிக்கு இனிய செஞ்சொல் -என்கிறபடி
ஒன்றை நினைத்து ஒன்றைச் சொன்னது இன்றிக்கே
நினைவும் சொலவும் சேர்ந்து இருக்கும்படியை சொன்னதாய் இருக்கை

பூ அலரும் போது போலே பேசுகிற தசையில் பேசுகிற தசையில் செவ்வியைச் சொன்னபடி
இச் சுவடு போவதற்கு முன்னே திருச் செவி சாற்றி -இளைய புன் கவிதை -என்கிறபடியே
ஸ்வச்சார்ய விஷய வைபவத்தை உள்ளபடி அறிந்து பேசுகைக்குத் தக்க ஞான சக்திகள் இன்றிக்கே இருக்க செய்தேயும் –
தன் உகப்பாகாப் பண்ணும் வை லக்ஷண்யம் அற்று இருந்தாலும் நம் அடியார் சொன்னது அன்றோ என்று
திரு உள்ளம் உகந்து கேட்டு அருளத் தக்கது என்கை –
அங்கீ குருஷ்வ
யாருடைய ப்ரயோஜனத்துக்காக யார் பிரார்த்திக்கிறார் இவன் வாக்கில் இப்படி -இதுக்கு கிருஷி பண்ணிப் போந்த
நம்மதன்றோ பிரயோஜனம் என்று அங்கீ கரித்து அருள வேணும் என்கிறார் –

யதிராஜ
இத்தலையில் தோஷத்தைப் போக்க வல்ல உடையவர் அன்றோ தேவரீர்
தயாம்பு ராஸே
சீறி எடுத்து எறியும் படியான தோஷம் இத்தலையிலே உண்டாலும் திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி
இருக்கிற அருள் கடல் அன்றோ தேவரீர்
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
இவன் தான் ஸ்வ ரக்ஷணத்துக்கு நம்மை ஒழிய வேறே கைம்முதல் உண்டு என்று இருக்குமவனோ
நம்மை ஒழிய மற்று ஒன்றை அறியுமோ –
ஆத்ம குணம் உண்டாக நினைத்து பேற்றுக்கு உடல் என்று இருக்குமவனோ –
நம் கிருபைக்குத் தண்ணீர் துரும்பாகச் சொல்லத் தக்கதொரு சத் குண லேசம் உண்டோ
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –
ஆகையால் இவனுக்கு நம்மை ஒழிய வேறே புகல் உண்டோ
ஸ்வ ரக்ஷணத்துக்கு ஒரு உபாயாந்தரம் அறிந்து இருத்தல் செய்யத் தக்க ஞானம் இல்லாதவனுமாய்
சத்துக்கள் அங்கீ கரிக்கைக்கு உறுப்பான ஆத்ம குண சம்பத் ரஹிதனுமாய் இருக்கையாலே வேறு ஒரு புகல் இல்லாதவன் –
இதி மத்வா –
இப்படி பகவத் அனுபவாதிகளிலே அந்ய பரதையைத் தவிர்த்துத் திரு உள்ளம் பற்றி அருளி
இத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று

———————————————————–————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading