ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -51-60–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

யா தாமோதர இதி நாமதா தவாஸீத் ச தாமா கில கிண காரிணீ பபூவ
தந் நூநம் வரத வலி த்ரயச் சலேந த்வந் மத்ய பிரதம விபூஷிணீ பபூவ –51-

ஹே வரத
யா தாமா -யாதொரு தாம்பானது
தவ தாமோதர இதி நாமதா ஆஸீத் -உனக்குத் தாமோதரன் என்னும் பெயரைத் தந்ததோ
ச கில கிண காரிணீ பபூவ-அந்தத் தாம்பு அன்றோ தழும்பையும் உண்டு பண்ணிற்று
தத் த்ரயச் சலேந–அந்தத் தழும்பானது த்ரிவளி என்கிற வ்யாஜத்தாலே
த்வந் மத்ய பிரதம விபூஷிணீ பபூவ -உனது மத்யம பிரதேசத்துக்கு முதன்மையான பூஷணம் ஆயிற்று

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதிரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த தாமோதரா
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் பொறி கொள் சிறை யுவணமூர்ந்தாய் வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாம்பே கொண்டார்த்த தழும்பு
மும்மடியாகக் கட்டியதால் வளி த்ரயம் -ஸுலப்ய ஸுலப்யங்களை வெளிப்படுத்தும் கோலமே
முதன்மை யாகுமே

இந்த ஸ்லோகத்தால் கண்ண பிரானுக்கும் தேவ பிரானுக்கும் உள்ள
தாதாத்ம்யத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

————-

யாத்ருக் பீஜாத் யுஷித புவி யத் வஸ்து ஹஸ்தீஸ ஜாதம்
தத் தாத்ருஷம் பலதி ஹி பலம் த்வய அபி ஈஷா மஹே தத்
யஸ்மாத் அண்டாத் யுஷித உதரே தாவகேந் ஜாய மானம்
பத்மம் பத்மாநந கில பலதி யண்ட ஷண்டாந் அகண்டாந் -52-

பத்மாநந–தாமரை போன்ற திரு முகத்தை உடைய
ஹஸ்தீஸ–ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
யாத்ருக் பீஜாத் யுஷித புவி –எந்த ஜாதீயமான விதை பொருந்திய இடத்தில்
யத் வஸ்து ஜாதம் -எந்த வஸ்துவானது உண்டானதோ
தத் தாத்ருஷம் பலம் –அந்த வஸ்துவானது அந்த விதையின் சஜாதீயமான பலத்தை
பலதி ஹி-உண்டாக்குகின்றது அன்றோ
தத் த்வய அபி -அந்த நியாயத்தை உன்னிடத்திலும்
ஈஷா மஹே –காண்கின்றோம்
தத்
யஸ்மாத் -யாது ஒரு காரணத்தால்
அண்டாத் யுஷிதே -அண்டங்கள் வசிக்கப் பெற்ற
தாவகே உதரே — உனது திரு வயிற்றில்
ஜாய மானம் பத்மம் -உண்டாகிற நாபிக் கமலமானது
அகண்டாந் -அளவற்ற
யண்ட ஷண்டாந் – பலதி -கில –அண்ட சமூகங்களை உண்டாக்குகின்றது

ஸிம்ஹ அவலோக ந்யாயத்தாலே தெரியவும் திரு நாபீ கமல அனுபவம்
கடலை விதைத்தால் காராமணி விளையாது -காராமணி விதைத்தால் கடலை விளையாதே
திரு உதரம் அண்டங்களுக்கு இருப்பிடம் -ஆகவே அதில் உண்டான திரு நாபீ கமலம்
நிஜ பீஜ ஸஜாதீயங்களான அண்டங்களை உண்டு பண்ணா நின்றது –
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன் எந்தை பெம்மான்

எம்பெருமானுடைய பரத்வம் மூதலிக்க அடி இடுகின்ற ஸ்லோகம் இது

இந்த ஸ்லோகம் முதல் கொண்டு உள்ள தசகம் -மந்தாக்ராந்தா வ்ருத்தம்

——————

அஜ்ஜே யஜ்ஜேஸ்வர கில ஜநே க்வாப்ய அதர்சம் விமர்சம்
விச்வா தீச கதம இதி தந் நிர்ணயம் வர்ணயாம
வ்யாவக்ரோசீ ந்ருஷு ஸமுதிதா யாந் உபாச்ரித்ய தேபி
ப்ரஹ்மாத்யாஸ் தே வரத ஜெனிதாஸ் துந்த கந்த அரவிந்தே–53-

யஜ்ஜேஸ்வர ஹே வரத -சர்வ யஜ்ஜ சமாராத்யனான ஓ வரதனே
க்வாபி அஜ்ஜே ஜநே -அடியேனாகிற ஒரு மூட ஜனத்தின் இடத்தில்
விச்வா தீச கதம இதி விமர்சம் –சகல லோகங்களுக்கும் தலைவன் யார் என்னும் ஆராய்ச்சியில்
அதர்சம் -நோக்கினேன் -சர்வேஸ்வரன் யார் என்று அஞ்ஞனான அடியேன் ஆராய்ந்து பார்த்தேன் -என்கை
தந் நிர்ணயம் வர்ணயாம-அவ்வாராய்ச்சி முடிவை சொல்கின்றோம்
யாந் உபாச்ரித்ய –யாவர் சிலர் ப்ரஹ்மாதிகளைப் பற்ற
வ்யாவக்ரோசீ -பரத்வ விஷயமான -மாறான -கோலாஹலம் –
ந்ருஷு ஸமுதிதா -வேதாந்த ப்ரவணரான மனிதர்கள் இடத்தில் உண்டாயிற்றோ
தே ப்ரஹ்மாத்யாஸ் அபி -அந்த பிரமனாதி தேவதாந்தரங்களும்
தே துந்த கந்த அரவிந்தே-உந்தியை மூல கந்தமாக உடைய தாமரை மலரில்

நளிர் மதிச் சடையனே என்பாரும் நான் முகக் கடவுளே என்பாரும் இமையவர் தலைவனே என்பாரும்
கார்ய வர்க்கத்தில் ஏக தேசம் அன்றோ
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கே —
திரு நாபிக்கமலத்தை தொழுது பரத்வ சங்கை தீர்த்துக் கொள்ளலாமே
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹு தாசனான் -சர்வ பூத அந்தராத்மாநாம் விஷ்ணும் ஏவ யஜந்தி தே —
இத்யாதிகளில் மஹரிஷிகள் அறுதி இட்ட படி ராஜ சேவகர் ராஜாவுக்கு சட்டை மேலே மாலையையும் ஆபரணத்தையும்
இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே பிரயோஜனமாகத் தெளிந்து இருக்குமா போலேயும்–
க்ருதக்ருத்யாதிகாரம் -ரஹஸ்ய த்ரயம் -தேசிகன் –

————–

முஷ்ணந் கிருஷ்ண ப்ரிய ஜன ஜனைர் ஐய்ய ஹையங்க வீநம்
தாம்நா பூம்நா வரத ஹி யயா த்வம் யசோதா கராப்யாம்
பத்தோ பந்த ஷபண கரணீம் தாம் கிலாத்யாபி மாதுஸ்
ப்ரேம்ணா காத்ராபரணம் உதார பந்த நாக்க்யம் பிபர்ஷி–54-

ஹே வரத
கிருஷ்ண த்வம் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்து அருளின நீ
ஐய்ய ஹையங்க வீநம் -ஜெயித்து சம்பாதிக்கக் கூடிய நவ நீதத்தை -கவ்யத்தை –
ப்ரிய ஜன ஜனைர் ஸஹ –தோழன்மாரோடே கூட
முஷ்ணந் -களவாடினவனாய்
யசோதா கராப்யாம்-யசோதா பிராட்டியின் திருக்கைகளால்
யயா தாம்நா பூம்நா பத்தோ–யாதொரு தாம்பினால் மிகவும் கட்டுண்டவனாய்
அபூ -ஆனாயோ
பந்த ஷபண கரணீம் -சம்சார பந்தம் என்னும் கட்டை அவிழ்த்துத் தொலைக்க வல்ல
தாம் -அந்தத் தாம்பை
அத்யாபி -ஸ்ரீ பேர் அருளாளனாக சேவை சாதிக்கும் இப்போதும்
மாதுஸ் ப்ரேம்ணா -தாய் இடத்தில் அன்பினால்
உதார பந்த நாக்க்யம் -உத்தர பந்தனம் என்று பெயர் பூண்ட
காத்ராபரணம் பிபர்ஷி-தேஹ பூஷணமாக சாத்தி அருளா நின்றாய் –

திரு நாபீ கமலத்தை விட திரு உதர பந்தத்தின் உத்கர்ஷம்-
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் விகணயதி வைச்வர்யம் வ்யாக்யாதி
ரெங்க மகேசிது ப்ரணத வசதாம் ப்ரூதே தாமோதரத்வகரஸ் கிண ததுபய குணாக்ருஷ்டம் பட்டம்
கிலோதர பந்தனம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய் வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காணேடீ என்று
ஏசும்படி போலே -சகல வஸ்துக்களுக்கும் கடவனானானாலும் அஞ்ஞாரையும் அசக்தரையும் போலே
களவு வழியிலே கைப்பற்றி ஸுலப்யத்தை பிரகாசப் படுத்திக் கொண்டு இருந்தாய்
பூம் நா -வாஹுல் யேந அதிசயேந அத்யர்த்த -மிகவும் -முதலிலே திரு வயிற்றிலே கட்டி பிறகு
திரு வயிற்றையும் குரலையும் இணைத்துக் கட்டின மிகைப்பு
அவனுடைய அனுக்ரஹ பரிவாக ரூபமான இந்த பந்தத்தை அனுசந்திக்க பந்த நிவ்ருத்தயே பலம்
தாம்புகளால் புடைக்க அலருமவன் அன்றோ -அந்த மாதாவின் ப்ரேமமே இந்த உதர பந்தன திரு ஆபரணம்

—————

ஸுந்தர்யாக்க்யா சரித உரசி விஸ்தீர்ய மத்யாவருத்தா
ஸ்தாந அல்பத்வாத் விஷம கதிஜ ஆவர்த்தகர்த்தாப நாபி
ப்ராப்ய பிராப்த ப்ரதிம ஜனகம் விஸ்த்ருதா ஹஸ்தி நாத
ஸ்ரோதோ பேதம் பஜதி பவத பாத தேச அபதேசாத் –55-

ஹே ஹஸ்தி நாத
உரசி விஸ்தீர்ய –திரு மார்பில் பரவி பெருகிக் கொண்டு வரும் அளவில்
மத்யாவருத்தா -மத்ய பிரதேசத்தால் தடைப்பட்ட தாய்
ஸ்தாந அல்பத்வாத் -அவகாசம் ஸ்வல்பமாய் இருந்ததால் உண்டான
விஷம கதிஜ ஆவர்த்தகர்த்தாப நாபி -விஷம கதியால் உண்டான குழி போன்று இருக்கிற நாபியை உடைத்தான்
ஸுந்தர்யாக்க்யா சரித -ஸுந்தர்யம் என்று பெயர் பெற்ற நதியானது
பிராப்த ப்ரதிம -அடையப்பட்ட ப்ருதத்வத்தை உடைய -கனமான
ஜனகம் ப்ராப்ய-ஜனக பிரதேசத்தை அடைந்து
விஸ்த்ருதா -சதீ -முன்பு திரு மார்பில் போலே பரவியதாய்க் கொண்டு
பவத பாத தேச அபதேசாத் –உன்னுடைய திருவடிகள் என்கிற வ்யாஜத்தாலே
ஸ்ரோதோ பேதம் பஜதி -ப்ரவாஹ பேதத்தை அடைகிறது -இரண்டு வாய்க்காலாய் பிரிகிறது என்றபடி

பெரிய வரை மார்பு அன்றோ இவனது –
திருவடிகள் ஸுந்தர்யமே வடிவு எடுத்தால் போன்றுள்ளவை என்றதாய்த்து

——————

ரம்பாஸ் தம்பாஸ் கரிவர கராஸ் காரபாஸ் சாரபாஜ
வேஷா ஸ்லேஷா அபி மரகதஸ்தம்ப முக்யாஸ் துலாக்யாஸ் அபி
சாம்யம் சம்யக் வரத ந ததுஸ் சர்வம் உர்வோஸ் த்வ தூர்வோ
ந ஹி ஐஸ்வர்யம் தததி ந ததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா –56-

ஹே வரத
சாரபாஜ -பலிஷ்டங்களான
ரம்பாஸ் தம்பாஸ் -வாழைத்தண்டுகள் என்ன
கரிவர கராஸ் -கஜேந்திரனின் துதிக்கைகள் என்ன
காரபாஸ் –கரப பிரதேசங்கள் என்ன
மரகதஸ்தம்ப முக்யாஸ் –மரகத மயமான தூண் முதலியவை என்ன
ஆகிய இவை எல்லாம்
வேஷா ஸ்லேஷா -திருத் துடைகளினுடைய ஆக்ருதி போன்ற ஆக்ருதியின் சம்பந்தத்தை உடையவர்களாய்
அத ஏவ
துலாக்யாஸ் அபி -உபமானமாகப் போறும் பிரசித்தியை உடையவை யாயினும்
உர்வோ-பருத்து இருக்கிற
த்வ தூர்வோ–உனது திருத்துடைகளுக்கு
சர்வம் சாம்யம் –சர்வாத்மநா சாம்யத்தை
சம்யக் ந ததுஸ் -நன்றாகக் பெறவில்லை
ஹி -ஏன் என்றால்
தே -கீழ்ச் சொன்ன ரம்பாஸ் தம்பாதிகள்
ததா ஐஸ்வர்யம் –அப்படிப்பட்ட சக்தி விசேஷத்தை
ந தததி –வஹிக்கின்றன அல்லவே
ததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா –ந தததி –எப்போதும் யவ்வன ஆரம்பமேயாய் இருக்கிற அப்படிப்பட்ட அழகுகளையும் –
அல்லது யவ்வன ஆரம்பத்தில் உண்டாக்க கூடிய அப்படிப்பட்ட விகாசங்களையும் வஹிக்கின்றன அல்லவே
அடி பெருத்து நுனி சிறுத்து இருக்கையாலே மட்டுமே இவை த்ருஷ்டாந்தங்களாக சொல்லப்படுகின்றன
ஹஸ்தி ஹஸ்த யுகலாப ஸூ வ்ருத்தவ் ராஜதஸ் க்ரம க்ரஸவ் ச சதூரூ ஸூந்தரஸ்ய வன பூதரபர்த்து- என்று அங்கும் உண்டே
பிரதான அம்சங்களில் குறை உற்று இருக்குமே –
ஐஸ்வர்யம் -சக்தி -மதுகைடப சம்ஹார வ்ருத்தாந்தம்

—————-

யா தே காத்ரே வரத ஜனிதா காந்தி மயீ யா ஆபகா பூத்
தஸ்யாஸ் ஸ்ரோதா த்விதயமிஹ யத் யாதி பாத பிரவாதம்
தஜ்ஜாத ஊர்த்வ ப்ரமியுக மிவ உத்பாநு நீ ஜாநு நீ தே
ஸ்யாத் உஷ்ணோர் வா காகுதயுகளம் யவ்வன ஐஸ்வர்ய நாம் நோ –57-

ஹே வரத
தே காத்ரே –உனது திரு மேனியில்
காந்தி மயீ–காந்தி ஸ்வரூபமான
யா ஆபகா-யாதொரு நதியானது
ஜனிதா –உண்டாக்கப்பட்டு இருக்கிறதோ
தஸ்யாஸ்–அந்த நதியினுடைய
யத் ஸரோதா த்விதயம் -இரண்டு பிரிவான யாதொரு பிரவாஹமானது
இஹ -இந்தத் திரு மேனியில்
பாத பிரவாதம் –திருவடிகள் என்கிற வ்யாஜத்தை
யாதி -அடைகின்றதோ
உத்பாநு-மேல் கிளர்ந்த சோபையை யுடைய
தே ஜாந-உனது முழந்தாள்கள்
தஜ்ஜாத ஊர்த்வ ப்ரமியுக மிவ–பாத பிரவாதத்தை அடைந்த அந்த ப்ரவாஹ த்வயத்தில் உண்டான
ஊர்த்வ ஆகாரமான இரண்டு நீர்க்குமிழி போலே
பாத –விளங்குகின்றன
வா -அல்லது
யவ்வன ஐஸ்வர்ய நாம் நோ –யவ்வனம் என்னும் ஐஸ்வர்யம் என்னும் பெயரை உடைய
உஷ்ணோர் காகுதயுகளம் -ஸ்யாத்-இரண்டு எருதுகளினுடைய இரண்டு முசுப்புகளாம்

யவ்வன வ்ருஷ ககுதோத் பேத நிபம் நிதராம்பாதி விபோ ரூபபயம் ஜானு
சுபாக்ருதிகம் –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் ஸ்லோகம்

————-

ப்ரேம்ணா ஆக்ராதும் கரிகிரிசிரஸ் அதோமுகீ பாவ பாஜோ
அங்கரி த்வந்த ஆஹ்வய கமலயோர் தண்டகாண்ட யமாநே
அத்ரிஸ் ஸ்பர்சோத்பவ ஸூகத உத் கண்டகே ரோம ஹர்ஷத்
த்ரஷ்டுர் த்ருஷ்டிர் வரத கிம் அலம் லங்கிதும் ஜங்கிகே தே -57-

ஹே வரத
கரிகிரிசிரஸ் –கரி கிரியின் உச்சியை
ப்ரேம்ணா ஆக்ராதும் –போக்யதா அதிசய ப்ரயுக்தமான ஆக்ராணம் செய்வதற்கு
அதோமுகீ பாவ பாஜோ –கவிழ் முகமாய் இருக்கும் நிலைமையை அடைந்துள்ள
அங்கரி த்வந்த ஆஹ்வய கமலயோர் –திருவடி இணைகள் என்னும் தாமரை மலர்களினுடைய
தண்டகாண்ட யமாநே –நாளத்தண்டு போன்றனவாய்
அத்ரிஸ் ஸ்பர்சோத்பவ ஸூகத –திருமலையோட்டை ஸ்பர்சத்தால் உண்டான ஸூகத்தினால் ஆகிய
ரோம ஹர்ஷத் -உத் கண்டகே—மயிர்க்கூச்சு எறிவதால் கண்ட கிதங்களாய் இருக்கிற
தே ஜங்கே –உனது கணைக்கால்கள்
த்ரஷ்டுர் த்ருஷ்டிர் -சேவிப்பவனுடைய கண்கள்
கிம் அலம் லங்கிதும் -விட்டு அவ்வருகே போக வல்லதோ –

அத்யந்த ப்ரீதி விஷயமான வாஸ்துவில் ப்ரீதி பரீவாஹமாக செய்யும் செயல்களில் உச்சி முகருகை-
என்பது ஓன்று உண்டே
ஏன் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாது உச்சி –
திருமலையை உச்சி முகந்து மகிழ திருவடித்தாமரை அதோ முகத்வத்தைப் பிராபிக்க-
கணைக்கால்கள் நாளத்தண்டு ஸ்தானத்தைப் பிராபித்தனவே

அதோ முக ந்யஸ்த பதாரவிந்தயோ -உதஞ்சி தோதாத்த ஸூநால சந்நிப –விலங்க்ய ஜங்கே க்வநு ரம்ஹதோ
த்ருஸவ் வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –என்று அங்கும் உண்டே
நாளமாக சொன்னால் -ரோமாஞ்சம் -இஷ்ட தம வஸ்து சங்கத்தால்
வைத்த கண் வாங்காதே அமையும் கொட்டாமல் சதா தர்சனம் பண்ணிக் கொண்டே இருக்கும் படி
திருக் கணைக் கால்களின் அழகு –

——————–

பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம்
யச்ச அம்லாநம் வரத சததாத்யாச நாத் ஆசநாப்ஜம்
ஆம்நாயநாம் யதபி ச சிரோ யச்ச மூர்த்தா சடாரே
ஹஸ்த்யத்ரேர் வா கிமதி ஸூ கதம் தேஷு பாதாப்ஜ யோஸ் தே –59-

ஹே வரத
பக்தாநாம் –பக்தர்களான யோகிகளுடைய
வபுஷி -சரீரத்தில்
பண்டிதம் -ஞான விகாச சாலியாய்
தஹரம் –தஹரம் என்று பேர் உடையதாய்
யத் புண்டரீகம் -யாதொரு தாமரை உண்டாய்
பரமபதத்தில்
சததாத்யாச நாத் – அபி – அம்லாநம் –நீ எப்போதும் வீற்று இருந்த போதிலும் வாட்டம் அடையாத
ஆசநாப்ஜம் ச யத் –ஆஸனத் தாமரை என்று யாது ஓன்று உண்டோ
ஆம்நாயநாம் சிரோபி யதபி -வேதாந்தம் என்பது யாதொன்று உண்டோ
சடாரே மூர்த்தா யச் ச–நம்மாழ்வாருடைய திரு முடி யாது ஓன்று உண்டோ
ஹஸ்த்யத்ரேர் மூர்த்தா யச் ச-இந்த ஹஸ்தி கிரியின் சிகரம் யாது ஓன்று உண்டோ
தேஷு–ஆக பிரசித்தமான இந்த ஸ்தானங்களுக்குள்
தே பாதாப்ஜ யோஸ் தே –அதி ஸூகதம்-கிம் வா -உன் திருவடித் தாமரைகளுக்கு
மிக்க ஸூகத்தைக் கொடுக்கும் இடம் ஏது கொல்

திரு ஹஸ்திகிரி மலையின் உச்சியே யாம் என்கிற தமது திரு உள்ளக்கருத்தை ப்ரஸ்ன முகேன அருளிச் செய்கிறார்

போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலுள் வாழ வல்ல என் மாய மணாளா நம்பி
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்
நான் மறை உச்சியில் நன்கு விளங்கிய நாரணனார் பதம்
வந்து எனது உச்சி உளானே
திருமாலிருஞ்சோலை மலையே
திருப்பாற் கடலே என் தலையே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம –சாந்தோக்யம் -2-1-1-
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் தஹர அதிகரண ப்ரமேயம் அனுசந்திப்பது

பிராமண பலத்தால் பக்த ஜன ஹ்ருதய புண்டரீகாதிகள் பாங்கான பிரதேசமாக இருந்தாலும்
ப்ரத்யக்ஷத்திலே ஸ்ரீ ஹஸ்திகிரி மூர்த்தாவே பாங்கான பிரதேசம் என்று சொல்லலாமே
நீயே சோதிவாய் திறந்து அருளிச் செய்து அருளுவாய்

சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை யுறையும் ஆயா -எனக்கு உரையாய் இது –
மறை நான்கின் உள்ளாயோ-தீ ஒப்பு கை மறையோர் சிறு புலியூர் சல சயனத்தாயோ –
உனது அடியார் மனத்தாயோ -அறியேனே –பெரிய திருமொழி -7-9-7–
ஸுவ்பரி -பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை
என்னும் படி குறைவற வர்த்திக்கும் படியைக் காட்டிக் கொடுத்தான்

——————-

பத்யாஸ் வத்ய அங்குளீஷு வரத ப்ராந்ததஸ் காந்தி ஸிந்தோ
வீசி வீதி விபவம் உபயீஷு அம்பசோ லம்பிதாஸூ
விந்தந்ந் இந்துஸ் பிரதிபலநஜாம் சம்பதம் கிம் பதம் தே
சாயாச்சத்மா நகவிததி தாம் லம்பிதஸ் சும்பிதஸ் சந் –60-

ஹே வரத
காந்தி ஸிந்தோ –காந்திக் கடலினுடைய
அம்பசோ ப்ராந்ததஸ்–நீரைச் சுற்றி
வீசி வீதி விபவம்–அலை வரிசையின் சோபையை
லம்பிதாஸூ –அடைவிக்கப்பட்டு இருக்கிற
பத்யாஸ் உபயீஷு அங்குளீஷு –திருவடிகளில் உண்டான இரண்டு வகுப்பான திரு விரல்களில்
பிரதிபலநஜாம் சம்பதம்–பிரதிபலிப்பதனால் உண்டான சோபையை
அத்ய விந்தந்ந் –இப்போது அடைகிறவனாய்
அத ஏவ
சாயாச்சத்மா–ப்ரதிச்சாயா ஸ்வரூபனான
இந்துஸ் –சந்த்ரனானவன்
நகவிததி தாம்-நக பங்க்தியாய் இருக்கையை
லம்பிதஸ் சந் –அடைவிக்கப் பட்டவனாய்
தே பதம் –உனது திருவடியை
கிம்
சும்பிதஸ் கிம் — -விளங்கச் செய்தனன் கொல்

காந்தி சமுத்திரம் -இருக்க அலைகளும் இருக்குமே -அவையே திரு விரல்கள் –
அதில் பிரதிபலியா நின்ற சந்திரன் -ப்ரதிச்சாயை வியாஜத்தாலே திரு நக பங்க்தி

ஸுவ்ந்தர்ய சாரம் அம்ருத சிந்து வீசீச்ரேணீ ஷு பாதாம் குலி நாமிகா ஸூ – ந்யக்க்ருத்ய
சந்த்ரச்ரியமாத்ம காந்த்யா நகா வலீ சம்பாதி ஸூந்தரஸ்ய —

பிரதிபலநஜாம் சம்பதம்-என்றது சங்கரன் சடையினில் தங்கிச் சீர் குலைந்து இருக்குமவனுக்கு
கிடைத்த ஐஸ்வர்யம் என்றவாறு –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading