சம்போர் அம் போருஹ முக சகா சந் ஸஹாங்கச் ச சாங்க
குர்வன் சேவாம் வரத விகலோ வ்ருத்த ஹீநஸ் ஸூ வக்ரஸ்
த்வத் பாதாப்ஜே ப்ரியமக நகச் சத்ம நாச்ரித்ய நித்யம்
சத் வ்ருத்தோ அபூத் ச ச தச குண புஷ்கலோ நிஷ் கலங்க -61-
அம் போருஹ முக–தாமரை போன்ற திரு முகத்தை உடையவனாய்
ப்ரியமக–யஜ்ஜ பிரியனான
ஹே வரத
ஏற்கனவே
ஸஹாங்க–பாபம் உடையவனாக –/-2-களங்கத்தை உடையவனான
ச சசாங்க –அந்தச் சந்த்ரனானவன்
சம்போர் –ருத்ரனுக்கு
சகா –தோழனாய் இருந்து கொண்டு
சேவாம் குர்வன் –சிரோ பூஷணமாய்ச் சேவையைச் செய்தவனாயும்
விகலோ –வித்யா விஹீனனாய் -/-2-மூளியாய்
வ்ருத்த ஹீநஸ் –சதாசார ஹீனனாய் -/-2-உருண்டை வடிவம் இழந்தவனாய்
ஸூ வக்ரஸ்–குடிலை ஹ்ருதயனாய் -/-2-மிகவும் கோணலான ஆகாரம் உடையவனாய்
சந் -ஆகா நின்று கொண்டு
நகச் சத்மந –நகங்கள் என்கிற வ்யாஜத்தாலே
த்வத் பாதாப்ஜே நித்யம் ஆஸ்ரித –உன் திருவடித் தாமரைகளை தினமும் ஆஸ்ரயித்து
நிஷ் கலங்க -களங்கம் அற்றவனாய்
புஷ்கலோ -நித்யம் பூர்ணனாய்
சத் வ்ருத்தோ -சதாச்சார்யம் உடையவனாய் –உருண்டை வடிவம் உடையவனாய்
தச குண –பதின் மடங்கு பெருகினவனாய்
அபூத் –ஆனான்
பத்து திரு விரல்களிலும் பத்து சந்திரனானான்-நகத்வ அவஸ்தையில் பூர்ணனானான்
யோ ஜாத க்ரஸிரமர மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்பு நா சோயம் யச் சரணாஸ்ரயீ சச தரஸ் நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜ்வல தயா சார்தம் பஹத்வம் ததா யதாஸ்தம் தருஷண்ட சைல நிலையம்
வந்தாமஹீ ஸூந்தரம் -என்றும் அங்கும் உண்டே –
————
த்வத் பாதாப்ஜே ப்ரஜாதா ஸூரசரித் அபவத் ப்ராக் சதுர்த்தா ததஸ் தாஸூ
ஏகாம் தத்தே த்ருவஸ் சா த்ரி புவநம் அம்புநாத் த்ரீந் பதோ பாவ யந்தீ
தத்ரைகா கம் வ்ரஜந்தீ சிவயதி து சிவம் சா புநஸ் சப்த தாபூத்
தாஸ்வேகா காம் புநாநா வரத சகரஜ ஸ்வர்க்க சர்கம் சகார–62-
ஹே வரத
த்வத் பாதாப்ஜே –உன் திருவடித் தாமரையில்
ப்ரஜாதா -உண்டான
ஸூரசரித் –கங்கையானது
ப்ராக்-முந்துற முன்னம்
சதுர்த்தா–நான்கு பிரிவாக
அபவத் -ஆயிற்று
ததஸ் –பிறகு
தாஸூ –அந்த நான்கில்
ஏகாம் – த்ருவஸ் -தத்தே ஸ்ம —ஒன்றைத் உத்தான பாத சக்ரவர்த்தி திரு மகனான –
த்ருவனானவன் தரித்தான்
சா –என்னால் தரிக்கப்பட்ட அது
த்ரீந் பதோ-மூன்று மார்க்கங்களை
பாவ யந்தீ சதீ –உண்டாக்கா நின்று கொண்டு
த்ரி புவநம் –ஸ்வர்க்க -அந்தரிக்ஷ -பாதாள லோக த்ரயத்தை
அம்புநாத் –பரிசுத்தம் ஆக்கிற்று
தத்ர –மூன்று வழியாகப் பெருகின அவற்றுள்
கம் வ்ரஜந்தீ –அந்தரிக்ஷம் நோக்கிச் செல்கின்ற
ஏகா து -ஒரு நதியோ என்றால்
சிவம் சிவயதி –ருத்ரனைப் பரி சுத்தம் ஆக்குகிறது
கஸ்ய பாதோதகேந ச சிவ ஸ்வ சிரோத்ருதேந –ஸ்ரீ ஆளவந்தார்
சா புநஸ் –சிவனால் தரிக்கப்பட்ட கங்கையோ என்றால்
சப்த தாபூத் -ஏழு பிரிவாக ஆயிற்று
தாஸூ -அவைகளில்
காம் புநாநா–பூமியைப் பரி சுத்தமாகச் செய்கின்ற
ஏகா -ஒரு கங்கை யானது
சகரஜ ஸ்வர்க்க சர்கம் சகார–சகர புத்ரர்களுக்கு ஸ்வர்க்க ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிற்று –
சகர புத்திரர்களை ஸ்வர்க்கம் அடையச் செய்தது -என்றவாறு
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–
திரு பாத தீர்த்தம் பலபடியாக பெருகின படியை அனுபவிக்கிறார்
இந்த ஸ்லோகத்தால் சர்வ லோகத்தையும் பரிசுத்தப் படுத்த வல்ல
ஸ்ரீ பாத தீர்த்தத்தின் மஹிமையை வெளியிட்டு அருளினார்
இந்த ஸ்லோகம் ஸ்ரக்தா வ்ருத்தம்
————————
பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –63-
ஹே வரத
பரிஜன-சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும்
பரி பர்ஹா -சத்ர சாமராதி பரிச் சதங்களும்
பூஷணாநி –கிரீட குண்டலாதி பூஷணங்களும்
ஆயுதாநி –திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்
ஞான சக்த்யாதயஸ் தே ப்ரவர குண கணாச்ச –ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்
பரமபதம் –பரமபதமும்
அத அண்டானி -அண்டங்களும்
ஆத்ம தேஹஸ் -ஸ்வ அசாதாரண விக்ரஹமும்
ததாத்மா –திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்
சகலமேதத் –ஆகிய இவை எல்லாவற்றையும்
சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்
ஸ்ரீ த்வய விவரணமாகவே இந்த ஸ்தகம்
முதல் ஸ்லோகம் ஸ்ரீ மத் சப்தார்த்தம் –
மேல் முதல் சதகம் நார பதார்த்தவேந ஸ்ரீ திருமலையின் சிறப்பை அருளிச் செய்து
நாராயண பதம் -குண பிரதான விவஷையாலே -திருக் கல்யாண குணங்களை த்வதீய சதகத்தில் அருளிச் செய்து
திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் உண்டே -ஆகவே வடிவு அழகு அனுபவத்தில் இது வரை அனுபவம்
இது ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி திரு மேனி அனுபவத்தில் கொண்டு மூட்டிற்று
அதுக்கு முக உரை இந்த ஸ்லோகம்
ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம் -ததா அபி புருஷா காரோ
பக்தா நாம் த்வம் ப்ரகாஸஸே -ஸ்ரீ ஜித்தாந்தா ஸ்லோக விவரணம் இது –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று வாய் வெருவுகையாலே பரிஜனம் ஆஸ்ரிதற்கு ப்ராப்யம்
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை மத் தைவதை பரிஜநைஸ் தவ சங்க ஸீய–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
சத்ர சாமராதி -கைங்கர்ய உபகரணங்களும் ஆஸ்ரித அர்த்தமே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய்
திவ்ய ஆயுத பாரதந்தர்யத்தை ஜெயத்ர வத பிரகாரணத்திலே கண்டு தெளியலாம்
ஞானம் அஞ்ஞர்க்கு –சக்தி அசக்தர்க்கு -க்ஷமை சாபராதற்கு -கிருபை துக்கிகளுக்கு -வாத்சல்யம் ச தோஷர்க்கு –
சீலம் மந்தர்க்கு -ஆர்ஜவம் குடிலர்க்கு -ஸுவ்ஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -மார்த்தவம் விஸ்லேஷ பீருக்களுக்கு –
ஸுவ் லப்யம் காண ஆசைப்பட்டார்க்கு –
ஆஸ்ரித விரோதி நிரசனார்த்த தயா க்ரோதாரபி கல்யாண குண சப்தேந ஸங்க்ரஹ —
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே
திவ்ய மங்கள விக்ரஹமும் ஆஸ்ரிதர்க்கே
பரமபதத்தில் ஸூரி யோக்யம் –
வ்யூஹத்தில் ஸ்வேதா தீப வாசிகளுக்கு போக போக்யம் -ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயம்
விபவத்தில் -அதீந்த்ரிய விக்ரஹத்தை சாது பரித்ராண அர்த்தமாக இந்திரிய கோசரமாக்கி அனுபவிப்பிக்கும்
பின்னானார் வணங்கும் சோதியே அர்ச்சை-அஸ்மதாதிகளுக்கே
திவ்யாத்மா ஸ்வரூபமும் பரார்த்தமாய் -நிலாத் தென்றல் சந்த நாதிகள் போலவே –
இந்த ஸ்லோகம் மாலினீ வ்ருத்தம்
———————–
அநாப்தம் ஹி ஆப்தவ்யம் ந தவ கில கிஞ்சித் வரத தே
ஜெகஜ் ஜென்ம ஸ்தேம ப்ரலய விதயோ தீ விலசிதம்
ததாபி ஷோ தீயஸ் ஸூர நர குலேஷு ஆஸ்ரித ஜனாந்
சமாஸ்லேஷ்டும் பேஷ்டும் தத் அஸூக க்ருதாம் சாவதரஸி–63-
ஹே வரத
தவ அநாப்தம் –உனக்கு முன்பு கிடைக்காததாய்
ஆப்தவ்யம் –பிறந்து படைக்க வேண்டியதாக
கிஞ்சித் ந கில ஹி –ஒன்றும் இல்லை இறே-ஏன் என்றால்
ஜெகஜ் ஜென்ம ஸ்தேம ப்ரலய விதயோ —
ஜகத்துக்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார கார்யங்கள்
தே தீ விலசிதம் -உனது சங்கல்பத்தின் விலாசமாகவே நிகழ்கின்றது அன்றோ
ததாபி -அப்படிப்பட்ட அவாப்த ஸமஸ்த காமனாயினும்
ஆஸ்ரித ஜனாந் –க்ஷண விரஹ அஸஹிஷ்ணுக்களான பாகவதர்களை
சமாஸ்லேஷ்டும்-அணைக்கைக்காகவும்
தத் அஸூக க்ருதாம்–அந்த பாகவதருக்கு தீங்கு இழைக்கும் துஷ்டர்களை
பேஷ்டும் ச–பொடி படுத்துவதற்கும்
ஷோ தீயஸ் ஸூர நர குலேஷு வதரஸி—அதி ஷூத்ரமான தேவ மனுஷ்யாதி ஜாதிகளில் அவதரித்து அருளா நின்றாய்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே
என் கண்கட்க்குத் திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையார்த்தே
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்
சங்கல்ப மாத்திரத்தாலே சர்வத்தையும் நிர்வகிக்க வல்ல சர்வசக்தியான சர்வேஸ்வரன் தன்னை அழிய மாறி
இதர சஜாதீயனாய் அவதரித்துக் கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபங்களான
அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் ப்ரஹ்லாதன் மஹரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில்
அவ்வவர் பண்ணின அபிசார சஹியாமையாலேயே என்று ஆப்ததமரான நஞ்சீயர் அருளிச் செய்வார்
என்று மா முனிகள் வியாக்யானம்
இந்த ஸ்லோகம் சிகிரிணீ வ்ருத்தம் –
———————-
விவேகதியம் ஏகத ஹி அபிநிவேச லேசா ஹரேத்
மஹத் த்வபிநிவேசம் கிமுத தந் மஹிம் நஸ் தவ
அஹோ வி சத்ருஸே ஜகத் அவததர்த்த பார்த்தாதிகம்
நிஜம் ஜனம் உதஞ்சயந் வரத தம் சமாஸ்லேஷக–65-
ஹே வரத
ஏகத -ஒரு வஸ்துவில் உள்ள
அபிநிவேச லேசா -ஆசாலேசமும்
விவேகதியம் -இது தக்கது இது தகாதது என்கிற பகுத்தறிவு ஆகிற விவேக ஞானத்தை
ஹரேத் ஹி –கொள்ளை கொள்ளும் இறே
மஹத் அபிநிவேசம் து -அதிகமான ஆசையோ என்றால்
கிமுத -விவேகத்தை அழிக்கும் என்பதில் என்ன சம்சயம்
தத் –ஆகையால்
தவ மஹிம்நஸ்–உனது பெருமைக்கு
வி சத்ருஸே-அனுரூபம் அல்லாத
ஜகதி–இந்த லோகத்தில்
பார்த்தாதிகம்-அர்ஜூனாதிகளை
நிஜம் ஜனம் உதஞ்சயந்–பந்து ஜனமாக சம்பாவியா நின்ற
தம் சமாஸ்லேஷக— –அந்த அர்ஜூனாதி ஜனத்தை தன்னோடே ஒரு நீராக்கச் செய்கிறவனாய்
அவததர்த்த -அவதரித்து அருளினாய்
அஹோ-இது ஒரு ஸுவ்சீல்யம் இருந்தபடி என் –
அபி நிவேச வஸீக்ருதே சேதஸாம் பஹு விதாம் அபி சம்பவதி ப்ரம–ஆகம ப்ராமாண்யம் -ஆளவந்தார்
ஆசை பெருக ஆராய்ச்சி குறுகுமே
மஹதோ மந்தைஸ் ஸஹ நிரந்தரேண சம்ஸ்லேஷமே ஸுவ்சீல்யம்
இருள் தரும் மா ஞாலத்தில் திருவவதரிக்கை -அர்ஜுனன் அக்ரூரர் விதுரர் மாலா காரார் இத்யாதிகளுடன்
ஸம்ஸ்லேஷிக்கையில் உள்ள அதி அபி நேசமே ஹேது என்றதாயிற்று
இந்த ஸ்லோகம் ப்ருத்வீ வ்ருத்தம்
——————-
சம்ஸ்லேஷ பஜதாம் த்வரா பரவச காலேந சம்சோத்ய தாந்
ஆநீய ஸ்வ பதே ஸ்வ சங்கம க்ருதம் சோடும் விலம்பம் பத
அஷாம் யந் ஷமிணாம் வரோ வரத சந்நத்ர அவதீர்னோ பவே
கிம் நாம ஸ்வம் அசம்ஸ்ரிதேஷு விதரந் வேஷம் வ்ருனீஷே து தாந் –66-
ஹே வரத
ஷமிணாம் வரோ த்வம் –பொறுமை சாலிகளுள் சிறந்த நீ
பஜதாம்-பக்தர்களுடைய
சம்ஸ்லேஷ –கலவியில்
த்வரா பரவச –மிகவும் த்வரிதரனாய்
அத ஏவ
தாந் -அந்த பக்தர்களை
காலேந சம்சோத்ய –காலக்ரமமாக -சீர் திருத்தி
ஸ்வ பதே ஆநீய–தனது நிலையிடமாகிய பரமபதத்தில் கொணர்ந்து சேர்த்துக் கொண்டு –
அல்லது உனது திருவடி சேர்த்துக் கொண்டு
ஸ்வ சங்கம க்ருதம் விலம்பம் –அவர்களை உன்னோடு அணையச் செய்வதில் ஏற்படுகிற விளம்பத்தை
சோடும்–ஸஹிப்பதற்கு
அஷாம் யந் -வல்லவன் அல்லனாய்
அத்ர–இருள் தரும் மா ஞாலத்தில்
அவதீர்னோ பவே -பிறந்தாயில் பிறந்திடு கிடாய்
அதை பற்றி நான் கேட்க வரவில்லை
கிம் து –பின்னையோ என்றால்
அசம்ஸ்ரிதேஷு–அநாஸ்ரிதர்கள் இடத்தில்
வேஷம்-உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை
விதரந்-அநு பாவ்யமாய்க் கொடா நின்றவனாய்
தாந் த்வம் வ்ருனீஷே –நீ திரு உள்ளம் பற்றுகிறாயே
இதம் கிம் நாம –இது என் கொல்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி-நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தே ப்ரஜாயதே
ஒன்றி ஒன்றி நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எலாம்–இந்த க்ரமத்தில் வரும் அளவும் பார்த்து இருக்கும்
விளம்ப ஸஹிஷ்ணுத்வம் அவனுக்கு இல்லையே
ஞானீத் வாத்மைவ மே மதம் -அபிநிவேச அதிசயத்தால் திருவவதாரம்
ஆனால் -வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து நின்ன செற்றத்தீயின் வெந்தவர்க்கும்
வந்து உனை எய்தலாகும் என்பர் –திருச்சந்த –111-
நிராங்குச ஸ்வாதந்தர்யம் கரை அழியப் பெருகப் புக்கால் –உக்காந்தார் யுகாவாதார் என்று வாசி வையாதே
ஓக்கத் திரு உள்ளம் பற்றுகிறது என் கொல் என்று தலை சீய்க்கிறார்
——————-
வரத யதி ந புவி நாவாதரிஷ்யஸ் சுருதி விஹிதாஸ் த்வத் உபாசந அர்ச்சாநாத்யாஸ்
கரண பத விதூரகே சதி த்வயி அவிஷயதா நிக்ருதா கில அபவிஷ்யந் –67-
ஹே வரத
புவி-இவ்வுலகில்
நாவாதரிஷ்யஸ் யதி –நீ அவதரியாமல் போவாய் ஆகில்
த்வயி -பர வ்யூஹ அந்தராம்யாகாரமாய் இருக்கிற நீ
கரண பத விதூரகே சதி –இந்திரிய மார்க்கங்களுக்கு தூரஸ்தனாய் இருக்கும் அளவில்
சுருதி விஹிதாஸ் -வேதங்களில் விதிக்கப்பட்ட
த்வத் உபாசந அர்ச்சாநாத்யாஸ் –உன்னை உபாசித்தல் ஆராதித்தால் முதலிய கிரியைகள்
அவிஷயதா நிக்ருதா–நிர் விஷயங்களாய் ஒழிவதனால் திரஸ் க்ருதங்களாக
அபவிஷ்யந் கில–ஆகி விடும் அத்தனை அன்றோ –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது–பரத்வம் அண்டத்துக்கு புறம்பே பெருகிக் கிடக்கும் ஆவரண ஜலம்
பாலாழி நீ கிடைக்கும் பண்பை நாம் கேட்டேயும்–காண அரிய வ்யூஹம் –துஷ் ப்ராபமான பாற் கடல்
கட்கிலீ–அஷ்டாங்க யோக மஹா யத்னம் கொண்டே காணும் படி – -பூதக ஜலம்-போலே அந்தர்யாமி
மண் மீது உழல்வாய் –பெருக்காறு போலே விபவம் -சஞ்சரித்து அருளாது ஒழிந்தால்
நிதித்யாசி தவ்ய –அர்ச்சயேத் –பிரணமேத் –ப்ரதக்ஷிணீ குர்யாத் –இவற்றுக்கு விஷயம் இன்றிக்கே ஒழியுமே
இந்த ஸ்லோகம் புஷ்பிதாக்ரா வ்ருத்தம் –
——————
நரஸிம்ஹனின் பரத்வம் ஸூந்தர பாஹு ஸ்தவம் -95-96-97-மூன்று லோகங்களில்
வரதராஜ ஸ்தவம் அவன் ஸவ்லப்யம் -68-71 ஸ்லோகங்களில்
யத் அபராத சஹஸ்ரம் அஜஸ்ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்
வரத தேந சிரம் த்வம் அவிக்ரிய விக்ருதிம் அர்ப்பக நிர்ப்பஜ நாத் அகா-68–
சரண்ய ஹே வரத –சரண்யனான ஓ வரதனே
ஹிரண்ய-ஹிரண்ய கசிபு யானவன்
த்வயி–உன் விஷயத்தில்
அஜஸ்ரஜம் –ஸார்வ காலிகமான
யத் அபராத சஹஸ்ரம் –யாதொரு ஆயிரக் கணக்கான அபராதத்தை
உபாவஹத்–செய்தானோ
தேந –அந்த அபராத சஹஸ்ரத்தால்
சிரம் –நெடு நாள் வரையில்
அவிக்ரிய–விகாரமே யுண்டாகாது இருந்த
த்வம்–நீ
அர்ப்பக நிர்ப்பஜ நாத்–சிறு குழந்தை யாகிற ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த நலிவு காரணமாக
விக்ருதிம் அகா— மனோ விகாரத்தை அடைந்தாய் –
ஆஸ்ரித விஷயத்தில் பஷ பாதம் பிரசித்தம் அன்றோ –
த்வயி கிஞ்சித் சமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –என்பவன் அன்றோ
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தாள் வந்நகாநாம் என்றே துரத்தினால் ஈரரியாய் நேர்
வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன் –முதல் திருவந்தாதி -90-ஒட்டி இந்த ஸ்லோகம்
இந்த ஸ்லோகம் த்ருத விலம்பித வ்ருத்தம்
அர்ப்பக-யார் குழந்தை என்று சொல்லாமல் ஸ்லோகம்
பிள்ளையைச் சீறி -தனக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -நாமம் பிள்ளை என்று அபிமானிக்கலாம் படி அன்றோ பிரகலாதன்
ஆராவமுதே நின்பால் அன்பாய் -யாருக்கு என்று இல்லாமல் தனக்கும் கூட ஆராவமுதம் போல்
க்ரோதம் ஆஹார தீவிரம் -கோபத்தை வரவழைத்துக் கொண்ட பெருமாள் -கரதூஷனர் தம்மை நலியும் பொழுது
கோபஸ்ய வசம் திருவடியை ராவணன் நலிய
பெருமாள் கோயில் திருடன் -சிவன் சத்து குல நாசம் –
மயிலாப்பூர் திருவேங்கடமுடையான் -திருட மாட்டிக்கொண்டான் -தேசிகர் கோயில் -வேடிக்கை கதை
————————–
த்வாம் ஆம நந்தி கவய கருணை அம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை
ஏதேஷு கேந வரத உத்தர கோசலஸ்தா பூர்வம் ச தூர்வம் அப ஜந்தா ஹி ஜந்தவஸ் த்வாம்–69-
கருணை அம்ருதாப்தே வரத–அருளாகிய அமிருதத்துக்கு கடல் போன்ற ஓ வரதனே
கவய–பராசர பாரஸர்யாதி கவிகள்
த்வாம் -உன்னை
ஞான க்ரியா பஜன லப்யம்–ஞான யோக கர்ம யோக பக்தி யோகங்களால் ப்ராப்யனாகவும்
அந்யை அலப்யம் –உபாயாந்தரங்களினாலே அப்ராப்யனாகவும்
ஆம நந்தி –ஓதி வைத்து இருக்கிறார்கள்
பூர்வம்–முன்பு ஸ்ரீ ராமாவதாரத்தில்
உத்தர கோசலஸ்தா ச ஜந்தவா –உத்தர கோசலத்தில் உள்ள ஜந்துக்கள்
ச தூர்வம்–த்ருணம் உட்பட
த்வாம்-அபி ஜந்த–உன்னை அடைந்தவன் அன்றோ -அப்படி அடைந்ததானது
ஏதேஷு கேந –கீழ்ச் சொன்ன கர்ம ஞான பக்தி யோகங்களுள் எந்த உபாயம் கொண்டு –
யாதிருச்சிகம் ப்ராசங்கிகம் ஆனு ஷங்கிகம் போன்ற ஸூஹ்ருத விசேஷங்கள் -ஸாஸ்த்ர விஹிதமும் சேதன விதிதமும்
இன்றிக்கே தானே கல்பித்தும் கல்பித்த அவற்றை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போறும் சஹஜ காருண்ய விசேஷம்
தேவபிரான் கருணைக்கு பிறந்தகம் -பேர் அருளாளன் அன்றோ
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையே பற்றாசாக அன்று சாராசரங்களை வைகுந்தத்துக்கு ஏற்றி அருளினாய்
இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம்
——————–
பஜத்ஸூ வாத்சல்ய வசாத் சமுத் ஸூகஸ் பிரகாமம் அத்ர அவதரேர் வரப்ரத
பவேச்ச தேஷாம் ஸூலபோ த கிந்ந்விதம் யதங்க தாம் நா நியதஸ் புராருதஸ்–70-
அங்க வரப்ரத–வாராய் வரதனே
த்வம் பஜத்ஸூ –நீ பக்தர்கள் பக்கலிலே
வாத்சல்ய வசாத் –ப்ரீதி விசேஷத்தாலே
சமுத் ஸூகஸ் –மிக்க விருப்பம் யுடையவனாய்
அத்ர -இவ் விபூதியிலே
பிரகாமம் அவதரேர் -வேண்டியபடி அவதரித்துக் கொள்
அத தேஷாம்–அதற்கு மேல் அந்த அன்பர்களுக்கு
ஸூலப்பச்ச–ஸூ லபனாயும்
பவே–ஆகு கிடாய்
புரா -பண்டு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில்
தாம் நா–தாம்பினால்
நியதஸ்-கட்டுண்டவனாய்
அருதஸ் இதி யத் –அழுதாய் என்பது யாது ஓன்று உண்டோ
இதம் கிம் நு -இது என் கொல்
இது என்ன ஸுவ்லப்ய பரம காஷ்டை என்று உள் குலைந்து உருகி அருளுகிறார்
இந்த ஸ்லோகம் வம்சஸ்த வ்ருத்தம்
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply