ஸ்ரீ திருவல்லிக்கேணி கண்டேனே -பாடல் தோறும் கண்டு ஹர்ஷித்து அருளிச் செய்கிறார் ஸ்ரீ திருமங்கை மன்னன்
பாடல் ஸ்தலம் வைப்பு ஸ்தலம் -சைவர்கள் பதிகம் பெற்ற ஸ்தலத்துக்கும் துணுக்கு பாசுரத்துக்கும் வாசி சொல்வர் –
நாமோ அனைத்தும் ஸ்ரீ திவ்ய தேசங்கள் -பாசுரம் பெற ஸ்ரீ பெருமாள் முயன்று பெற்றார்கள் அன்றோ –
ஸ்ரீ ஆழ்வார்களின் ஏற்றம் அவனால் ஏற்படுத்தப் பட்டது அன்றோ –
ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை ஸ்ரீ பெருமாள் கோயில் மூவரையும் ஸ்ரீ திருவல்லிக்கேணியில் சேவை
ஸ்ரீ பஞ்சாம்ருதம் போலே ஐவர் சேவை –
ஸ்ரீ கஜேந்திர வரதன் பரத்வமாக
சதுர்புஜ ஸ்ரீ என்னை ஆளுடை அப்பன் வ்யூஹம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண விபவம்-இருவருமே குடும்ப ஸஹிதமாக
தெள்ளிய சிம்மம் -தூணுக்கும் அந்தர்யாமி -குடும்பம் -தாயார் உடன்
அர்ச்சா -வேங்கட கிருஷ்ணன் -சுமதி ஆசைப்பட்ட படி -fusion music போலே
மனத்துள்ளான் மா கடல் நீறுதான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் -சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த ஓங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து — ஐவரையும் ஸ்ரீ பூதத்தாழ்வார்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதி யன்ற புற வண்டத்தாய் எனதாவி உள் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ —-திருவாய் -6-9-5- போலே
ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தவமே இந்த திவ்ய தேசத்தில் ஸ்ரீ ஆழ்வார்களுக்குக் காட்டி அருளிய குணம்
வந்து உதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணி யான் சென்று -16-ஸ்ரீ பேய் ஆழ்வார் –
வேங்கடத்தான் மேல் ஆழ்ந்து ஸ்ரீ திருவல்லிக்கேணி மங்களா சாசனமும் –
சென்று –
தானே சென்று மார்பிலே ஒன்றிக் கொண்டாள் அன்றோ –
இவள் சந்நிதியாலே தானே ஆஸ்ரித ரக்ஷணம் –
ஸ்ரீ பேயாழ்வார் ஸ்ரீ திருவேங்கடத்திலும் ஸ்ரீ கண்ணன் மேலும் ஒன்றி இவரையே மங்களா ஸாஸனம் –
இவர் அருளிச் செய்த திருவேங்கட மங்களா சாசன பாசுரங்களும் ஸ்ரீ கிருஷ்ணாவதார பாசுரங்களும்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை திரு உள்ளத்தில் கொண்டே மங்களா ஸாஸனம்
ஸ்ரீ சரம ஸ்லோகம் அருளியவனும் முத்ரா மூலம் காட்டியவனும் இருவரும் ஒன்றே தானே
ஸ்ரீ திவ்ய தேசம் -ஆழ்வார் அவதாரம் -ஆச்சார்யர் -மூவர் -அவதாரம் ஸ்ரீ பார்த்த சாரதியே ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி போலே முப்புரியூட்டிய திவ்ய தேசம்-அங்கு போல் இங்கும் மூலவருக்கும் உத்சவருக்கும் மங்களாசானம்
ஸ்ரீ ராமர் உடன் எழுந்து அருளும் பொழுது அருகிலே எழுந்து அருளுவார் ஸ்ரீ எம்பெருமானார் இங்கு ஆதி சேஷன் அவதாரம்
ஸ்ரீ பார்த்த சாரதி எழுந்து அருள மாட்டார் ஸ்ரீ எம்பெருமானார் உத்சவத்துக்கு
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்து அருளும் வாய் திரிவான் -நீளோதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35- ஸ்ரீ திருமழிசைப் பிரான் –
தர்மி ஐக்கியம் சயன கோலம் -ஸ்ரீ மன்னாதான் என்றுமாம் –
இங்கே சேவை பெற்று கிடந்த கோலத்தில் ஆழ்ந்து – அடுத்து ஒரே பாசுரத்தியல் பல சயன திருக்கோலம்
நாகத்தணைக் குடந்தை வெக்கா திருஎவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேர் அன்பில் -நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான் -36-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே —
ஆஸ்ரித விரோதி நிரசனத்தவம் -வாத்சல்யம் – சீலத்தவம் –ஸ்ரீ திருவல்லிக்கேணி பதிகத்தில் பிரதான கல்யாண குணம்
முன் நின்றானை -சாரதி உடகாராமல் நின்று -ரஷித்து-முன் -முன்னால் -வடுக்களை திரு முக மண்டலத்தில் -திரு மேனியில் சேவை
முன் சென்று கப்பம் தவிர்த்தது / மாதலி தேர் முன்-/போலே
ஸ்ரீ வீர ராகவன் -வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் அனுபவம்-இங்கு சிற்றவை பணியால் முடி துறந்தான்-ஸ்ரீ ராமர் அனுபவம் தர்மி ஐக்கியம்
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைத்திரியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
ராவணாந்தகன் -இங்கும் விரோதி நிரசன சீலத்தவம்
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பைப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே —
ஆங்கு அதனுக்கு-சொன்னது நல்ல விஷயம் -தன் பிள்ளை வேறே -தன் சிறுவன் -வாயில் ஓர் ஆயிரம் நாமம் –
ஸ்ரீ அழகிய சிங்கர் -அழகியான் தானே அரி உருவான தானே -இங்கும் விரோதி நிரசன சீலத்தவம் –
மீனவர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேடிக்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
கஜேந்திர வரதன் -யானையின் துயரம் தீர புள்ளூர்ந்து -அனைத்தும் விரோதி நிரசனம் -ஆஸ்ரித சம்ரக்ஷணம்
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
பிருகு முனிவர் புதல்வி -பெரிய பிராட்டியார் ஆசைப்பட அவளுக்காக -ஸ்ரீ மன்னாதன் –
ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் தானே இதுவும்
ஸ்ரீ பிராட்டி -தேவர் -பார்த்தன் -அசுரர் சிறுவன் -திர்யக் -அதிகாரி நியமம் இல்லாமல்
ரஷிக்கும் குணமே ஆஸ்ரித வாத்சல்யம் –
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply