ஸ்ரீ பெருமாள் திருமொழி அருளிச் செயலில் – பல ஸ்ருதிகள் தொகுப்பு –

கொடை குலசேகரன் சொல் செய்த நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–1-11-

கொடை மாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச் செய்த –
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே -பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே -இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமிகளாய்-வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள்-

————————

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் – தொண்டர் தொண்டர்கள் ஆவரே –2-10-
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

———————————–

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே
ஏதமாவது-அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் -வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ்விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

—————————————–

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –4-11-

பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே
அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள்-

——————————

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–5-10-
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும்
இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

—————————————-

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-

பாட்யே கே யே ச மதுரம் –எண்ணும்படியான தமித் தொடை பத்தும்
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை பிறவாதே
நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

—————————————

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்-நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–7-11-

சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய பெருமாள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

——————————————-

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—8-11-

வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————

குலசேகரன் சொல் செய்த-சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் –
ஐஸ்வர்ய பிரகாசகமுமான வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

—————————————–

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11-
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading