ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திருப் பாணாழ்வார்- வைபவம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திருப் பாணாழ்வார் வைபவம்

ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திர ஸ்கந்தா திரூடங் கலயாமி நித்யம்
களங்க ஹீநங்க மநீய பக்தம் கவீஸ்வரம் காயக ஸார்வ பவ்மம்-பாடுபவர்களில் தலை சிறந்தவர்

ஸ்ரீ வேலாப்த வி நிர்க்கமே கலி யுகே சம்வத்சரே துர்மதவ்
பாநவ் வ்ருச்சிக பாஜி பஞ்சம திநே வாரே புதஸ் யோத்தமே
ரோஹிண்யா சஹிதே லசத் யுடுபதவ் கிருஷ்னே த்விதீய திதவ்
சஞ்சே முநி வாஹநஸ் சரணயோர் யோரங்கிண அந்தர்த்ததே-திருவரங்கன் திருவடிகளில் சேர்ந்தவர்

-வேலாப்த-கலி 342-வருஷம் -திருமங்கை ஆழ்வாருக்கு முன்பே அவதரித்தவர் இவர் –
துர்மதி வருஷம்-ஸ்ரீ வத்ஸ அம்சம்
புதன் கிழமை கிருஷ்ண பக்ஷம் த்விதீய திதி

விருச்சிகே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ பாணம் நிகழா புரே
ஸ்ரீ வத் ஸாம்சம் காய கேந்த்ரம் முனி வாஹனம் ஆஸ்ரயே

திருப் பாணாழ்வார் திரு அவதார கிரமம் இருக்கும்படி எங்கனே என்னில்
காவேரீ தோயமா ஸ்ரீத்ய வாதோ யத்ர ப்ரவர்த்ததே –தத் தேச வாசி நாம் முக்தி கிமுதத் தீர வாஸீ நாம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்வ ப்ரவாஹ ஸ்பர்ஸ மருத் சம்பந்தத்தால் முக்தி தர வல்ல நீர்மையை உடைத்தான திருக் காவேரி கரையிலே நிசுளா புரி என்று
சொல்லப்பட்டு இருப்பதாய் -மாட கூட பிரசாத உப சோபிதமான உறையூரிலே-
ஸூர்ய வம்ச ப்ரதீபனான சோழ பூபதி தர்மமாக ப்ருத்வீ பரிபாலநம் பண்ணா நிற்கச் செய்தே ஷீரார்ணவ ராஜன் இடத்தே
பிராட்டி ப்ராதுர்ப்பவித்து அருளினால் போலே நம் பெருமாள் இடத்தே ஏகாக்ர சித்தனான தர்மவர்மா வாகிற சோழனுக்கு கன்யகையாய்
நீளாம் ஸஜையான உறையூர் நாச்சியார் திருவவதரித்து அருள சோழ ராஜாவும் ஸ்ரீ ஜனகராஜன் பிராட்டியை ப்ரீதியோடே எடுத்து
வளர்த்தால் போலே உவப்போடே வளர்க்க வளர்ந்து அருளுகிற நாச்சியார் பால க்ரீடையிலும் நம்பெருமாளை அல்லது வேறொரு
விளையாட்டு அறியாதவளாய் சகிகளோடே கூடி விஹரித்து வளர்ந்தவள்– ப்ராப்த யவ்நையான பின்பு ஒரு நாள் உத்யாவனத்திலே
சகிகளோடே கூட டோலா லீலையாக விஹரியா நிற்க வேட்டையாடி வருவானை வ்ருந்தாவனத்தே கண்டோமே என்கிறபடியே
நம்பெருமாள் அங்கே ம்ருகயா விஹார பரராய் எழுந்து அருள கண்டு மையல் ஏறி மோஹித்து ஊரே வந்து
ஸ்வ பிதாவான சோழ ராஜாவைக் குறித்து -நம்பெருமாளை அல்லது வேறொரு புருஷனுக்கு வாழ்க்கைப் படேன்-
என்னை அவருக்கே உதகம் பண்ணிக் கொடும் என்ன -சோழ ராஜாவும் அதி ஸந்துஷ்டனாய்
நம்பெருமாள் சந்நிதியில் சென்று அச் செய்தியை விண்ணப்பம் செய்ய

பெருமாளும் -நாமே பாணி கிரஹணம் பண்ணுகிறோம் -நமக்கே உதகம் பண்ணிக் கொடும் என்று நியமிக்க – ராஜாவும் ஸந்துஷ்டனாய்த்
துமிலம் எழப் பறை கொட்டித் தோரணம் நாட்டி அரங்க மா நகரை அலங்கரித்துப் பெரிய ப்ரீதியுடன் பெருப் பெருத்த கண்ணாலம் செய்து
நாச்சியாரை உதகம் பண்ணிக் கொடுக்க -பெருமாளும் ஜனகராஜன் திருமகளை உத் வாஹம் பண்ணினால் போலே
உவப்போடே திருமணம் புணர ராஜாவும் பொன்னரிசி முந்நூற்று அறுபது பாரமும் அதுக்குத் தக்க முத்து மாணிக்க மயமான
நவரத்ன உப ஹாரமும் – நிரவதிக வஸ்திர ஆபரணங்களும் போ கஜ அஸ்வ (மாடுகள் யானைகள் குதிரைகள் )தாசீ வர்க்கங்களும் குறைவறக் கொடுத்தும்-
சர்வத்திலும் பர்யாப்தி பிறவாமையாலும் தஸ் சர்வத்தையும் நம்பெருமாளுக்கே சமர்ப்பித்து வாழும் காலத்தில்
உறந்தை -என்கிற அந்த உறையூரிலே கார்த்திகை மாசத்தில் ரோஹிணீ நக்ஷத்ரத்திலே குலம் தங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து –
என்று சொல்லப்பட்ட பஞ்சம வர்ணத்தில் ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்த பாகவதரைப் போலே(நம்பாடுவான் ப்ரஹ்ம ரஜஸ் )
ஸ்ரீ வத்ஸ அம்சராக திருப் பாணாழ்வார் அவதரித்து அருளினார்
அத தத்ர குலே அந்திமே ரமா ரமனோரஸ் ஸ்தித லாஞ்ச நாம்ஸஜ-
சம ஜாயதபாண சம்ஜ்ஞகஸ் ஸூகவி கார்த்திக மாசி வைதபே -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந சாத்விகஸ் சது விஜ்ஜேயஸ் சவை மோஷார்த்தக சிந்தக–என்கிறபடியே
எம்பெருமான் இவருக்கு ஜாயமான கடாக்ஷத்தைப் பண்ணுகையாலே கேவல சத்வ குண பிரசுரராய் –
சேமமுடை நாரதரைப் போலேயும் –
நிக்ரஹாத் தாரய அஸ்மாத் வைதேந கீதபலே நமாம் –ஏவ முக்த்வாது சண்டாளம் ராக்ஷஸஸ் சரணங்கத -என்கிறபடியே
சரணாகதனான ப்ரஹ்ம ரக்ஷசைக் குறித்து
யன்மயா பஸ்ஸிம சங்கீதம் ஸ்வரம் கைசிகம் உத்தமம் -பலேந தஸ்ய பத்ரந்தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்-என்று
கைசிக புராணத்தில் யாக தோஷம் பரிஹரித்த பாகவதரைப் போலேயும்
பகவத் கான வித்யைக்கு ஸார்வ பவ்மராய் பரமாத்மாவை சூழ்ந்து இருந்து சாம கானம் பண்ணும் நித்ய ஸூரிகளிலே
ஒருவர் வந்து அவதரித்தாரோ என்று சொல்லலாம்படியான திவ்ய சரித்திரங்களை உடையராய்
மோஷார்த்தியான இப் பாண் பெருமாள் ஸ்வ வர்ண அனுகூலமாக இரண்டு ஆற்றுக்கும் நடுவே தாம் மிதியாமே
தென் ஆற்றின் தென் கரையில் திரு முகத் துறைக்கு எதிரே தொழும் அத் திசை உற்று நோக்கியே என்கிறபடியே
திருவரங்க மேயான் திசையை நோக்கித் தூர நின்று வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று
உள் கலந்து வீணையும் கையுமாய் திருப் புகழ்கள் பலவும் பாடிக் கொண்டு –
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் என்கிறபடியே பெரிய பெருமாளை அநவரத பாவனை பண்ணிப் போருகையாலே

ததோமே தத் கதம் மந (பீஷ்மர் இடமே எனது மனம் சென்றது என்று கண்ணன் அர்ஜுனனுக்கும் சொன்னது)-என்கிறபடியே பெரிய பெருமாளும் இவர் பக்கல் உவந்த திரு உள்ளத்தராக அவ்வளவில்
நாச்சியாரும் பெருமாளுடனே நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கப் பெறுமோ -என்று விண்ணப்பம் செய்ய
பெரிய பெருமாளும் இவரைப் பலகால் அருள் பாடிட்டு போக விட்ட இடத்திலும் இவர் ஸ்வரூபத்தால் வந்த நைச்யத்தாலும்-
ஸ்வ வர்ணத்தால் வந்த நைச்யத்தாலும் பிற்காலித்துக் கடு நடையிட்டு அகல்கிற அளவிலே
பெரிய பெருமாள் பின்னையும் இவர் பக்கல் உள்ள கிருபா அதிசயத்தாலும்
இப் பாண் பெருமாள் திரு முகத் துறைக்கு அருகே பெரிய பெருமாள் இடத்தே பரபக்தி பரஞான பரமபக்திகளை உடையராய்
மிகவும் பரவசராய்க் கண்களை மூடிக் கொண்டு திருப் புகழ்கள் பலவும் பாடிக் கொண்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்தரரும் விடிவு காலத்தே பெரிய பெருமாளுக்குத் திரு மஞ்சனக் குடம் எடுத்துக் கொண்டு போய் நின்று
இவரைக் கண்டு தூரப் போ என்று சொல்ல இவரும் திருமேனி தெரியாமல் இருக்க
அவரும் ஒரு கல்லை எடுத்து வீசி எறிய இவருடைய முகத்தில் பட்டு ருதிர வர்ஷமாக வர்ஷிக்க –
இவரும் கண்களை விழித்துப் பார்த்து கலங்கி மஹா பாகவத அபசாரப் பட்டோம் என்று தூரப் போய் நிற்க

அவரும் நீராடி நித்ய கர்ம அனுஷ்டானங்களை செய்து திரு மஞ்சனம் எடுத்துக் கொண்டு
சத்ர சாமர தால வ்ருத்தாதிகளோடே சகல வாத்ய கோஷத்துடன் பெருமாள் சந்நிதியில் செல்லா நிற்க
பெருமாளும் திரு உள்ளம் கலங்கி -நம்முடைய பக்தனை இவர் இப்படிச் செய்யவோ என்று கனக்க நொந்து இருக்க –
அவ்வளவில் நாச்சியாரும் பெரிய பெருமாளுடனே நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ என்று
விண்ணப்பம் செய்ய பெரிய பெருமாளும் திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு லோக சாரங்க முனீந்திரரை கனக்கக் கோபித்து –
நம்முடைய பக்தரை நீர் இப்படிச் செய்யலாமோ என்று இவருக்கு திருக் காப்பு நீக்காமல் இருக்க
இவரும் வியாகுல அந்தக் கரணராய் -அடியேன் மஹா பாகவத அபசாரப் பட்டு விட்டேன் அடியேனுக்கு இனி ஈடேற வழி ஏது என்று கேட்க
பெருமாள் பின்னையும் இப் பாண் பெருமாள் பக்கல் உள்ள கிருபா அதிசயத்தாலும் தன் நிரங்குச ஸ்வாதந்தர்யத்தாலும்
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திரரைப் பார்த்து -நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை நீர் நெகிழ நினையாதே அவரை
உம்முடைய தோளிலே கொண்டு நம் பக்கல் அழைத்துக் கொண்டு வாரும் என்று ஸ்வப்ந முகேன நியமித்து அருள

அவரும் விடிவோரை எழுந்து அருளி
அத்யமே சபலம் ஜென்ம ஸூ பிரசாத மே நிசா -என்கிறபடியே இற்றை விடிவு எனக்கு நல் விடிவாச்சுது என்று
ஸ்வப்னத்தை நிச்சயித்து மிகவும் ஹ்ருஷ்டராய் -தோதவத்தித் தூய் மறையோருடனே திரு முகத் துறையிலே –
நாட் காலே நீராடி -நித்ய அனுஷ்டானம் செய்து அருளி ஸூ தூரம் அபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ் ஸ்தித-என்கையாலே
இவ் வாழ்வார் அதி தூரத்திலே நின்று யாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கத்தை நோக்கி நித்தியமாக சேவித்து
ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு நிற்கிற இடத்தே எழுந்து அருளி
இப் பாண் பெருமாள் திருவடிகளிலே தாளும் தடக்கையும் கூப்பித் தண்டன் சமர்ப்பித்து –
நம்பெருமாள் தேவரீரை எழுந்து அருள பண்ணுவித்துக் கொண்டு வர வேண்டும் என்று அடியேனை
நியமித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய ஆழ்வாரும்
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து -என்றும்
குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும் சொல்லுகிறபடியே ஸ்வ நைச்யத்தை முன்னிட்டுப் பிற்காலித்து
திருவரங்கப் பெரு நகரை நான் மிதிப்பேனோ -என்ன
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனிகளும் -ஆகில் அடியேனுடைய தோளில் மேலே எழுந்து அருளும் –
பெருமாள் அருள் பாடிட்டு அருளின படியே எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிறேன் என்ன

ஆழ்வாரும் -செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -என்கிறபடியே
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று ந்யஸ்த பரராய் நிற்க –
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திரரும் முக்தனாய்ப் போமவனை ஆதி வாஹிகர் எழுந்து அருளுவித்துக் கொண்டு
திரு மா மணி மண்டபத்து ஏறப் போமாப் போலே ஆழ்வாரை தம் திருத் தோளின் மேலே எழுந்து அருளுவித்துக் கொண்டு
அழகிய மணவாளன் திரு மண்டபத்துக்கு அவ் வருகே புகுர-
பெரிய பெருமாளும் தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நித்ய தரித்ரனுக்கு நிதி காட்டுவரைப் போலே
இவருக்குக் காட்டிக் கொடுக்க

கிரீட கேயூரக ரத்ன குண்டல ப்ரலம்ப முக்தா மணி ஹார பூஷிதம் -விசால வக்ஷஸ்தல ஸ அபி கௌஸ்துபம்
ஸ்ரீ யாச தேவயாத் யூஷிதோரு வக்ஷஸம் ப்ரதப்த சாமீகர சாரு வாஸஸம் ஸூ மேகலம் நூபுர ஸோபி தாங்க்ரிகம்-
ஸூ வர்த்து நீ ஜாதம் ருணாள கோமளம் ததா நமச்சச்ச வ்யஞ்ஜ ஸூத்ரகம்-புஜோ பதாநம் பிரஸ்ருதான்ய ஹஸ்தம்
நிகுஞ்சி தோத்த நித பாத யுக்தம் ஸூ தீர்க்கம் உத்பாஹு முதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷந் ததர்ச –
என்று சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாதி சகல சேதனராலும் ஸேவ்யமானரான அரங்கத்து அரவிணைப் பள்ளியானை சேவிக்கப் புகுந்த ஆழ்வார்
மாதாவினுடைய சர்வ அவயவங்களும் கிடக்கச் செய்தே ஸ்தந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை திருவடிகள் ஆகையால்
அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் என் கண்ணின் உள்ளன ஒக்கின்றனவே என்கிறபடியே
சேஷித்வ போக்யத்வ உபாயத்வங்கள் குறைவற்ற திருவடிகளை இறே முந்துறப் பற்றிற்று
அரங்கத்தம்மான் -என்கையாலே சேஷித்வமும்
கமலம் -என்கையாலே -போக்யத்வமும்
பாதம் -என்கையாலே உபாயத்வமும் சொல்லிற்று –

பெரியாழ்வாரும் இப்படி இருந்துள்ள திருவடித் தாமரைகள் முதலாகத் திருப் பாத கேசத்தை
விருப்பால் உரைத்து அனுபவித்தால் போலே இவரும்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை
ஆட் கொள்வானான பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பாதாதி கேசாந்தமாக அனுபவித்து –
அவ் வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே தாம் பத்தும் பத்துமாக அனுபவித்த படிக்கு
அமலனாதி பிரான் -என்கிற திவ்ய பிரபந்தத்தை பிற்பாடரும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி உபகரித்து அருளி
லோகத்தை வாழ்வித்து அருளி மிகவும் உகப்போடே நிற்க
பெரிய பெருமாளும் வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றாதாப் போலே அத் திருமேனியோடே அங்கீ கரித்து அருள
ஆழ்வாரும் அகிலரும் காணும்படி அணியரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து அருளினார் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading