திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா—உபாதானத்வம் ஏவ-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-
மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/மிக்க வேதியர் –
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை
பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து அஞ்ஞானம் போக்கினவர்

மா மறையோர்–
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக் கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/
இவர் மா மறையோர் என்பதால்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//
அந்யோந்ய ஆஸ்ரயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/
மா மறையோர் ஆகிறார்
மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /-ததீய வைபவம் அறிந்தவர்-
அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்-சமாக்யா பந்ததி பாதுகா சஹஸ்ரம் –

தொல்-
பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழ மன்னர்கள்//
பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/-

நகரம்
நகரங்களில் இறே நல்ல வஸ்துக்கள் இருப்பது
நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும் அனுபவம் கிட்டும்
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –
உண்டோ ஒப்பு என்று திவ்ய தேசம் -ஆழ்வார் -திவ்ய பிரபந்தம் அனைத்துக்கும் மா முனிகள் –
தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமை/

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்
தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
கனக நாம்நி — பொன்னி–பொன் அலைக்கரங்கள்-மகரந்த துகள்களால் மூடப்பட்டபடியால் –
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–
ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரமும் நீளா துங்க தனியனும் பட்டர் திருக் கோஷ்ட்டியூரிலே இருந்து அருளிச் செய்தார்
பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-
அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் –
இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா–2-3-2–அஞ்ஞானம் போக்க –
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading