கண்ணா இன்று நான் உன்னைப் பத்து பாட்டு கேட்க விரும்பி இருந்தேன் சொல்லு
1-கண்ணா –கண்ணா நான்முகனைப் படைத்தானே –பெரியாழ்வார் -5-1-6–
2-இன்று -இன்று வந்து இத்தனையும் –நாச்சியார் -9-7–
3-நான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -நான்முகன் -1-
4-உன்னை -உன்னைச் சிந்தை செய்து –திருவாய் -2-6-6-
5-பத்து –பத்துடை அடியவர்க்கு எளியவன் –திருவாய் -1-3-1-
6-பாட்டு –பாட்டு முறையும் படு கதையும் –நான் முகன் –76-
7-கேட்க -கேட்க யான் உற்றது உண்டு –திருக் குறுந்தாண்டகம் -4-
8-விரும்பி –விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –திருமாலை –17-
9-இருந்தேன் –இருந்தேன் இரு வினைப்பாசம் –இராமானுச நூற்று –62-
10-சொல்லு –சொல்லுவன் சொற்பொருள் –பெரிய திருமொழி -2-9-1-
நங்கைமீர் உங்கள் மண் வீடு அடியோடு நன்றாய் இல்லை –
எங்களது மாட மாளிகை முழுதும் தந்தம் பொன் வெள்ளி வெண்கலம் இரும்பானது
1-ஆயிரம் மக்கள் உள்ளே அடங்க இடம் உண்டு
2-நங்கைமீர் -நங்கைமீர் நீரும் ஒரு பெண் பெற்று –திருவாய் -4-2-9-
3-உங்கள் -உங்கள் புழக்கடை –திருப்பாவை -14-
4-மண் -மண்ணாய் நீர் எரி கால் –பெரிய திரு மொழி -1-9-6–
5-வீடு –வீடுமின் முற்றவும் –திருவாய் -1-2-1-
6-அடி -அடியால் படி கடந்த முத்தோ -பெரிய திருவந்தாதி -27–
7-ஓடு -ஓடுவார் விழுவார் –பெரியாழ்வார் -1-1-2-
8-நன்றாய் ஞானம் கடந்து போய் –திருவாய் -8-8-6-
9-இல்லை -இல்லை யல்லல்–திருவாய் -9-10-10-
10-அது -அது நன்று இது தீது என்று —
11-மாட மாளிகை –மாட மாளிகை சூழ் திருமங்கை –பெரிய திருமொழி -5-8-10-
12-முழுதும் -முழுதும் வெண்ணெய் அளந்து –பெருமாள் –7-8-
13-தந்தம் –தந்தம் மக்கள் அழுது சென்றால் –பெரியாழ்வார் -2-2-3-
14-பொன் -பொன் மேல் மஞ்சனமாட்டி -பெரியாழ்வார் -3-1-2–
15-வெள்ளி -வெள்ளியார் பிண்டியார் போதியார் –பெரிய திருமொழி -9-7-9-
16-வெண்கலம் -வெண்கலப் பாத்திரம் –பெரியாழ்வார் -1-9-5-
17-இரும்பு –இரும்பு அகன்று உண்ட –திருக்குறுந்தாண்டகம் -5-
18-ஆனது –ஆனது செம்மை யறநெறி –இராமானுச நூற்று
19-ஆயிரம் –ஆயிரம் தோள் பரப்பி –பெரியாழ்வார் -4-3-10-
20-மக்கள் -மக்கள் பெறு தவம் போலும் –பெரிய திருமொழி -10-4-2-
21-உள்ளே –உள்ளே உருகி நைவேனை –நாச்சியார் -13-8–
22-அடங்க -அடங்கு எழில் சம்பத்து –திருவாய் -1-2-7-
23-இடம் -இடம் வலம் ஏழ் பூண்ட —
24-உண்டு –உண்டு களித்தேற்கு — திருவாய்
————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply