ஸ்ரீ வராஹ நரசிம்மனாக சேவை சாதித்து அருளுகிறார் -த்ராஹி த்ராஹி என்று ஸ்ரீ ப்ரஹ்லாதன் அழைக்க வேகமாக
ஒரு திருக் கையால் திருப் பீதாம்பரத்தை பிடித்துக் கொண்டு
மாற்று ஒரு திருக் கையால் பெரிய திருவடிக்கு வாயில் அம்ருதத்தை கட்டை விரலால் கொடுத்துக் கொண்டே குதிக்க –
வேகம் தாளாமல் பூமி பிளந்து பகவான் திருவடிகள் பாதாளம் வரை சென்றன –
ஹிரண்யகசிபுடன் -32-ரூபங்கள் எடுத்து யுத்தம் செய்தார் -அவற்றில் ஒன்றே ஸ்ரீ வராஹ ந்ருஸிம்ஹ அவதாரம் –
ஸ்ரீ பிரஹ்லாத ஆழ்வான் திருவாராதனம் செய்தார் -அவன் தன் ராஜ்யத்துக்கு திரும்பியதும் பெருமானை வல்மீகீம் புற்று மூட-
கால கிரமத்தில் புரூவரஸ் சக்ரவர்த்தி இந்த இடத்தைக் கடக்க விமானம் தாண்ட முடியாமல் போக -அவன் தேட –
கங்காதாரா தீர்த்தத்தின் அருகில் இருப்பதாக எம்பெருமான் காட்டி அருளினான் –
கங்கா தாரா சமம் தீர்த்தம் க்ஷேத்ரம் ஸிம்ஹாத்ரி நா சமம்
நாரஸிம்ஹ சமோ தேவ த்ரை லோக்யே நாஸ்தி நிச்சய –சிலா சாசனம் க்ஷேத்ர மஹாத்ம்யத்தில் உள்ளது
எம்பெருமானை புற்றில் இருந்து வெளியே எழுந்து அருள பண்ணி கங்கா தாரா தீர்த்தத்தில் திரு மஞ்சனம் செய்து –
வைகாசி சுக்ல த்ருதீயை அன்று பிரதிஷடை செய்தான் –
அது அக்ஷய த்ருதீயை என்று கொண்டாடப் படுகிறது -அன்று சந்தன உத்சவம் நடை பெறுகிறது -நிஜ ரூப தர்சனம் அன்று மட்டும் கிட்டும் –
அன்று -3-மணுகு-125-கிலோ சந்தனம் சாத்துகிறார்கள் -வைகாசி பவுர்ணமி அன்றும் -3–மணுகு சந்தானம் சாத்துகிறார்கள் –
ஜ்யேஷ்ட பவுர்ணமி -ஆனி மாதம் -அன்றும் 3–மணுகு சந்தானம் சாத்துகிறார்கள் –
ஆஷாட பவுர்ணமி -ஆடி மாதம் -அன்றும் 3–மணுகு சந்தனம் சாத்துகிறார்கள் –
ஆக -500-கிலோ சந்தனத்துடன் எப்பொழுதும் சேவை சாதிக்கிறான்
கங்கா தாரா தீர்த்தமே பிரசாத்துக்கு திரு மஞ்சனத்துக்கும் உபயோகம் –
ஸ்ரீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமியின் -32-த்வாத்ரிம்சத் திரு நாமங்கள் –
ஸ்ரீ ஸ்தம்ப உத்பவ நரஸிம்ஹர்
ஸ்ரீ பாவந நரஸிம்ஹர்
ஸ்ரீ பஞ்ச முகி நரஸிம்ஹர்
ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹர்
ஸ்ரீ ஜ்வாலா உக்ர நரஸிம்ஹர்
ஸ்ரீ யோகா ஸ்ரீ நரஸிம்ஹர்
ஸ்ரீ சாளக்ராம நரஸிம்ஹர்
ஸ்ரீ யோகா நந்த நரஸிம்ஹர்
ஸ்ரீ வீர நரஸிம்ஹர்
ஸ்ரீ சர்வதோ முக நரஸிம்ஹர்
ஸ்ரீ மஹா விஷ்ணு நரஸிம்ஹர்
ஸ்ரீ ஸாத்ர வட நரஸிம்ஹர்
ஸ்ரீ ராஜ்ய லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ பார்கவ நரஸிம்ஹர்
ஸ்ரீ ஸூ தர்சன நரஸிம்ஹர்
ஸ்ரீ வ்யாக்ர நரஸிம்ஹர்
ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹர்
ஸ்ரீ கருடா ரூடா நரஸிம்ஹர்
ஸ்ரீ கண்டா பேரண்ட நரஸிம்ஹர்
ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர்
ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹர்
ஸ்ரீ வித்யா நரசிம்ஹர்
ஸ்ரீ யோகப்பட நரஸிம்ஹர்
ஸ்ரீ மாலோல நரஸிம்ஹர்
ஸ்ரீ க்ரோடா நரஸிம்ஹர்
ஸ்ரீ அபாய நரஸிம்ஹர்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ வித்யா சக்ரா நரஸிம்ஹர்
ஸ்ரீ யோக வட லஷ்மீ நரஸிம்ஹர்
ஸ்ரீ கிரிஜா நரஸிம்ஹர்
ஸ்ரீ கல்யாண நரஸிம்ஹர்
ஸ்ரீ வராஹ லஷ்மீ நரஸிம்ஹர் –
——————————————————
ஸ்ரீ கூர்மம் மஹாத்ம்யம் –
ஸ்ரீ கூர்ம க்ஷேத்ரம் மஹாத்ம்யமானது ப்ரஹ்மாண்ட புராண அந்தர்கதமான பாத்ம புராணத்தில் சொல்லப் பட்டது –
இந்த ஸ்ரீ கூர்ம ஷேத்ரத்தில் இருந்து -12-கி மீ தொலைவில் காரா பிராந்தியத்தில் சாலி ஹூண்டா இடம் உள்ளது
இவ்விடங்களை ஸ்வேத சக்ரவர்த்தி ஆண்டு வந்தார் -அவருடைய கோட்டை சாலி ஹூண்டா -வம்ச தாரா நதியால் சூழப்பட்டு இருந்தன இவ்விடங்கள் –
ராணியின் பெயர் ஹரிப்ரியா -பீஷ்ம ஏகாதச விரதம் இருக்கும் பொது காமத்துக்கு வசப்பட்ட ராஜா ராணியிடம், செல்ல
ராணி பெருமானை வேண்ட -இடையில் ஊற்று பிறக்க அதுவே வம்சதாரா-
வருத்தத்துடன் திரும்பிய ராஜாவுக்கு நாரதர் ஸ்ரீ கூர்ம மந்த்ரம் உபதேசித்து இங்கு உள்ள எட்டு புண்ய தீர்த்தங்களில் நீராடி தவம் புரிய சொன்னார் –
ஸ்ரீ மஹா விஷ்ணு பிரத்யக்ஷமாகி -ஸ்ரீ கூர்ம ரூபியாக சேவிக்க பிரார்த்திக்க ராஜாவின் பெயரிலே இங்குள்ள மலையை ஏற்படுத்தி சேவை –
ஸ்வேதாசல நிவாஸாய கூர்ம நாதாயா மங்களம் –
இந்த ஆலயத்தை பிரமன் ஏற்படுத்தினான் –108-விதமான தூண்கள் உண்டு
சக்ர தீர்த்தம் பிரசித்தம் -அங்கு இருந்தே தாயார் திரு அவதாரம்
க்ருத யுகத்தில் பிரமன்
த்ரேதா யுகத்தில் லவ குசர்கள்
த்வாபர யுகத்தில் பலராமன் –திருவாராதனம் –
கலி யுகத்தில் எம்பெருமானார் எழுந்து அருளி மங்களா சாசனம் –
ஸ்வேதாசல நிவாஸாய கூர்ம நாதாயா மங்களம் –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply