ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் -இத்திருமந்த்ரத்தில் வாக்யமும் வாக்யார்த்தமும் பற்றிய விவரணங்கள் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

இத் திருமந்த்ரத்தில் வாக்யமும் வாக்யார்த்தமும் இருக்கும்படி எங்கனே என்னில் –
இத்தை ஏக வாக்கியம் என்றும் –
வாக்யத்வயம் என்றும் –
வாக்ய த்ரயம் என்றும் -அவ்வோ சம்ப்ரதாயங்களாலே அனுசந்திப்பார்கள்
இப்படி வாக்யார்த்தத்தையும் பஹூ பிரகாரமாக வகுத்து அனுசந்தானம் பண்ணுவார்கள் –

1- ஏக வாக்யமாம் போது –
தஸ்ய வாசக பிரணவ -இத்யாதிகளில் படியே
பிரணவ பிரதிபாத்ய ஸ்வபாவ விசிஷ்டாய நாராயணாய நம என்று அந்வயமாம் –
இப் பிரணவம் தான் நாமமாக வற்றாய் நிற்க –அவ்யக்தார்த்தத யோங்கார கேவலம் நைவ சாதக -என்று
சாண்டில்யாத் யுக்த பிரக்ரியையாலே -வ்யாபக மந்த்ரங்களில் நாமாந்தரம் வ்யக்த யர்த்தம் -இந்த யோஜனா விசேஷம்
அஹிர்புத்ன்யாத் யுக்தமான ஸ்தூல அனுசந்தான பிரகாரத்தைப் பார்த்தால் உபாய பரம் –
இப்படியானாலும் ஸ்வரூப புருஷார்த்தங்கள் இதிலே அந்தர்கதங்கள் –

2-பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதின -இத்யாதிகளைப் பார்த்து பிராணயன்தர்கத
சேஷ வ்ருத்தி பரமாகவும் அனுசந்திப்பார்கள் –
இவ் விருத்தி விசேஷமும் ஸ்வரூப அனுசந்தான பூர்வகம் –
இதுவும் க்ருத உபாயர்க்கு இவ்வளவு ரசிக்கும் அவஸ்தையிலும் உப ஜீவ்யம் –

3-இவ்விரண்டு அனுசந்தானமும் பிரதிஷ்டமாம் போது ஸ்வரூப விவேகம் வேணும் —
அதற்காக வாக்ய த்வயமாக அனுசந்திக்கும் போது
அகார நாராயண சப்த வாச்ய சர்வதாரத்வாதி விசிஷ்டன் ஆனவனுக்கே நான் நிருபாதிக அனன்யார்ஹ சேஷ பூதன் –
எனக்கு உரியேன் அல்லேன் -ஒன்றைப் பற்ற நிருபாதிக ஸ்வாமியும் அல்லேன் –
நிரபேஷ ஸ்வ தந்த்ரனும் அல்லேன் -என்றதாம்

அகார நாராயண சப்தங்கள் இரண்டும் பகவன் நாமம் ஆகையாலே புனருக்தி வாராதோ வென்னில்
அப்போது வ்யுத்பத்தி விசேஷ சித்தமான
அர்த்த விசேஷத்தை விவஷித்து ஓன்று விசேஷணமாகக் கடவது –
அகார வாச்யனான நாராயணனுக்கு என்றும் புனருக்தி பரிஹரிக்கலாம்
பகவச் சப்தமும் நாமேதமாய் இருக்க வாஸூ தேவாதி சப்தத்தோடு சாமா நாதி காரணமாகா நின்றது இறே
சர்வ பீஜ அஷர வாச்யமான சர்வ காரணம் தேவதாந்தரமோ என்று சங்கியாதபடி நாராயணன் என்று
விசேஷிக்கையாலும் சபிரயோஜனம்
மந்த்ரங்களுக்கு பதக்ரம் அத்யயன நியதம் -அந்வயம் அர்த்த அனுகுணமாகக் கடவது –
இப்படி வாக்ய த்வயமானால் திருமந்தரம் முழுக்க ஸ்வரூப பரம் –

இந்த ஸ்வரூப பர யோஜனையைப் பற்ற -திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து
த்வயைக நிஷ்டனாவாய் -என்று பூர்வர்கள் அருளிச் செய்தார்கள் —
பிறக்கை யாவது ஸ்வரூப ஞானம் பிறக்கையாலே-
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன் -என்கிற முன்புற்ற நிலை கழிகை-
அதாவது தன் இசைவாலும் அநந்ய சேஷனாய் -அநந்ய அதீனனாய் -அது அடியாக அநந்ய பிரயோஜனனாய் –
அநந்ய சரணனாகை- வளருகையாவது –
அதிகார விசேஷ அநுரூப கர்தவ்ய விசேஷ விஷய ஜ்ஞான விசேஷத்தாலே உபாய பரிக்ரஹம் பண்ணுகை –
த்வயைக நிஷ்டன் ஆகையாவது
த்வய அனுசந்தானத்தாலே உபாயாந்த்ரத்திலும் பிரயோஜனாந்தரத்திலும் துவக்கற இதில் சொன்ன உபாயத்திலும்
பிரயோஜனத்திலும் ப்ரதிஷ்டிதனாகை–
இப்படி திரு மந்த்ரமும் த்வயமும் கூட ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களைக் காட்டுகின்றன –

4-இவ்விரண்டு வாக்யமான யோஜனை தன்னிலே
திருமந்தரம் முழுக்க சபரிகர ஆத்ம சமர்ப்பண பரம் என்றும் அனுசந்திப்பார்கள் –
அப்போது பிரணவத்தில் மகாரம் பிரதமாந்தமேயாக அமையும் –
ஹவிஸ் சமர்ப்பண நியாயத்தாலே நிருபாதிகமான ஆத்ம ஹவிஸ்ஸூ நிருபாதிக தேவதையாய்-
அகார வாச்யனான நாராயணனுக்கே பரமாக சமர்ப்பிதம் என்றதாயிற்று –
இப்படி நிருபாதிகமான ஆத்மயாகத்தில் நம என்று தன்னோடு தன் துவக்கு அறுத்து
எனக்கு பரம் அல்லேன் என்றதாயிற்று —
இதம் இந்த்ராய ந மம-என்னுமா போலே இங்கும் பர சம்பந்த விதியிலும் ஸ்வ சம்பந்த நிஷேதத்திலும் ப்ரவ்ருத்தம் ஆகையாலே
வாக்ய த்வயமும் சபிரயோஜனம் –
இன் நமஸ் ஸூ சமர்ப்பணம் தன்னிலும் பர நிரபேஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கையிலே தத் பரம் ஆகவுமாம்
வேறு ஒருத்தருக்கும் பரம் அன்று -எனக்கும் பரம் அன்று -என்று வாக்ய த்வய அபிப்ராயம் ஆகவுமாம் –

திருமந்தரம் ஆத்ம நிவேதன பரம் என்னும் இடத்தை
நித்யத்திலே மூல மந்தரேண ஸ்வா த்மானம் தேவாய நிவேத்ய -என்று அருளிச் செய்தார் –
இப்படி -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் -ஸ்ரீ மதா மூல மந்தரேண மாமைகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய –
பரிக்ருஹ்ணீஷ் வேதி யாசமான பிராணம்ய ஆத்மானம் பகவதே நிவேதயேத்–சூர்ணிகை -4–என்று இவ்வர்த்தம் தர்சிதம் –

5-வாக்கியம் தோறும் ஒரு பிரார்த்தனா பதத்தை அத்யஹரித்து திருமந்தரம் முழுக்க
த்வயத்தில் உத்தர கண்டம் போலே இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி
ரூப புருஷார்த்த பிரார்த்தனா பரமாயும் அனுசந்திப்பார்கள் –
அப்போதும் ஸ்வரூப அனுசந்தானம் இதிலே அந்தர்கதம் -ஸ்வரூப மாத்ர பரமான போதும்
புருஷார்த்த விசேஷம் ஸூசிதம்-
அதின் உபாயமும் பிரார்த்தனையும் தத்தத் பிரமாண வசத்தாலே வரும் –
இம் மந்திர உத்பாத்யங்களான சேஷத்வ ஜ்ஞானாதிகள் முன்பு பிராப்தங்கள் அல்லாமையாலே
இம் மந்த்ரம் முழுக்கப் பிராப்ய பரம் என்றது அந்ய பரம் -எங்கனே என்னில்
ப்ராப்ய பரம் என்றது அந்ய பரம் -எங்கனே என்னில் ப்ராப்ய பரம் என்றது ப்ராப்ய பிரதிபாதகம் என்றபடி யன்று
சப்தத்தால் உத்பாத்யமான ஜ்ஞானம் சப்தத்துக்கு பிரதிபாத்யம் அன்று இறே-

6- திருமந்தரம் -மூன்று வாக்யமான போது –
ஸ்வரூபமும் -புருஷார்த்தமும் -சொல்ல உபாயம் ஆர்த்தமாதல் –
ஸ்வரூபமும் உபாயமும் சொல்ல புருஷார்த்தம் ஆர்த்தமாதல் –
உபாயமும் புருஷார்த்தமும் சொல்ல ஸ்வரூபம் ஆர்த்தமாதல் –
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் அடைவே சப்தங்கள் ஆதல் ஆகக் கடவது -எங்கனே என்னில்
அகாரார்த்தாயைவ ஸ்வமஹமத மஹ்யம் ந நிவஹா-நராணாம் நித்யா நாமயநமிதி நாராயண பதம்
யமாஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலா ஸ்வ வஸ்தா ஸ்வா விஸ்ஸ்யுர்மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே
பிரணவமும் நமஸ்ஸூம் ஸ்வரூபத்தை சோதிக்கிறன –
மூன்றாம் பதம் பிரணவத்தில் சொன்ன தாதர்த்யத்தை புரஸ் கரித்துக் கொண்டு அத்யாஹ்ருதமான
க்ரியா பதத்தோடு கூடிப் புருஷார்த்த பிரார்தனார்த்தம் –
அப்போது அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனை அர்த்த ஸ்வ பாவத்தாலே வரக் கடவது –

த்வயத்திலும் பாவாம் ஸ் து சஹ வைதேஹ்யா -இத்யாதிகளிலும் சொல்லுகிறபடியே
கைங்கர்ய பிரதி சம்பந்தியும் சபத்நீகன் ஆனபடியாலே
இங்கும் ச லஷ்மீ கணான நாராயணன் பொருட்டாவேன் என்றபடி —
நாராயணாய என்கிற இதுக்கு க்ரியாபேஷை உண்டாகையாலே
ஔசித்யத்தாலே பவேயம் என்று ஒரு பதம் அத்யாஹார்யம்–

வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்றும் –
அடியேனை ஆட்கொண்டு அருளே என்றும்
நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
இப்பிரார்த்தனையை பிரயோகித்தார்களே இறே –

தாதர்த்யம் நித்ய சித்தம் ஆகையாலே ஆசாசிக்க வேண்டாமையாலும் -இஸ் சம்பந்த ஸ்வரூபம் பிரணவத்தில் சொல்லுகையாலும் –
இதின் பலமாய் சமுத்ரே கோஷ்ப தமஸ்தி என்னுமா போல புருஷார்த்தங்களை எல்லாம் விளாக்க்குலை கொண்டிருக்கிற
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ பரிவாஹ ரூபமான கைங்கர்யம்
ஒழிவில் காலத்தில் படியே இங்கு அபேஷிக்கப் படுகிறது
அத்ர ஸ்வ லாப அபேஷாபி ஸ்வாமி லாபாவசாயி நீ -ஸ்வாமி பிரயோஜன அபேஷாப்யத ஸ்வா நந்த ஹேதுகா-
உன்னை உகப்பிக்கும் கைங்கர்யத்தை நான் பெற வேணும் என்பதாலும்
என்னை அடிமை கொண்டு நீ உகக்க வேணும் என்பதாலும் இருவருக்கும் பிரயோஜனம் சித்தம் –

த்ரை குண்யம் ஷட் குணாத்யம் ச த்விதான்னம் பரிகீர்த்திதம் -த்ரைகுண்ய மனனம் பத்தானாம் இதரேஷா மதேதரத் –
என்கிற ஷட் குணாத்யமான அன்னமாவது பகவத் குண அனுபவம் –
அது அடியாக வருகிற போக்யதம கைங்கர்ய விசேஷங்கள் ஆகவுமாம் –
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -என்கிறபடியே முக்த தசையிலே பர சாம்யம் போகத்திலும் ஜ்ஞானத்திலும் ஆகையால்
அப்போதும் ஸ்வரூப அனுபந்தியான சேஷத்வத்துக்கும் இதின் பலமான கைங்கர்யத்துக்கும் விரோதம் இல்லை
முமுஷூ தசையிலும் முக்தி தசையிலும் உண்டான அஹங்க்ரஹம் சரீராத்மா பாவத்தாலே என்று
பாஷ்யாதிகளிலே சமர்த்திதம் ஆகையாலே இவ் வஹங்காரம்
பரார்த்த காஷ்டை அடியாக வந்தது இறே-
இப்படி முக்த தசையில் வரும் கைங்கர்யம் ஸ்வத ப்ராப்தமாய் த்வந்த்வ ரஹிதமாய் நிரந்தரமாய் அநவச்சின்னமாய் இருக்கும்
முமுஷு தசையிலே ஸ்வயம் பிரயோஜனமாகப் பண்ணும் கைங்கர்யம் சக்ருத் விசேஷ ஔபாதிகமாய்
த்வந்த்வதிதி ஷாயுக்தமாய் நித்ராதிகளாலே அந்தரிதமாய் அவச்சின்ன ரசமாய் இருக்கும்
இங்கு இவன் கைங்கர்யம் ஒழியப் பண்ணும் வியாபாரங்களில் பகவத் ஆஜ்ஞ்ஞைக்கு பொருந்தாதவை எல்லாம்
ஏதேனும் ஒரு பிரதிகூல பலத்தைக் கொடுக்கும்
பகவத் அனுஜ்ஞாதங்களான காம்யங்களில் ஸ்வர்க்க பச்வாத் யர்த்தங்கள் ஆனவை எல்லாம்
அநேக தோஷ துஷ்டங்களான அனுகூல ஆபாசங்களைக் கொடுத்து அம்முகத்தாலே பாதகங்கள் ஆகும்

ஆகையாலே முமுஷுவுக்கு த்ரைவர்கான் த்யஜேத் தர்மான் என்கிறபடியே
பிரயோஜனாந்தர ஹேதுக்களை விட்டு பக்தி தத்வ ஜ்ஞானங்களையும்
பகவத் பாகவத சம்ருத்தியையும் பற்றச் செய்யும் காம்யங்களான பகவத் தர்மங்கள் சாதனமாக அனுஷ்டிக்கச் செய்தேயும்
பந்தகங்கள் அல்லாமையாலே உசிதமான கைங்கர்ய கோடியிலே சேர்ந்து கிடக்கும் –
பிரணவத்தில் சொன்ன பகவச் சேஷத்வம் நமஸ் ஸிலே ஔசித்ய ரூபமான அத்யந்த பாரதந்த்ர்ய பாரார்த்தங்கள் அடியாக
யதா பிரமாணம் ததீய பர்யந்தமாய் நிற்கையாலே
நாராயணாய என்கிற இடத்தில் அபேஷிக்கிற பகவத் கைங்கர்யமும் ததீய பர்யந்தம் –
மம மத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -தஸ்மான் மத்பக்த பக்தாச்ச பூஜதீயா விசேஷத –
தஸ்மாத் விஷ்ணு பிரசாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத்-பிரசாத ஸூமுகோ விஷ்ணு தேநைவ
ஸ்யான்ன சம்சய -இத்யாதிகளிலும் இவ்வர்த்தம் சித்தம் –
சர்வம் பரவசம் துக்கம் இத்யாதிகள் தனக்கு பிராப்தம் அல்லாத ஷூத்ர விஷயத்தில்
கர்ம பலமாக வருகிற பாரவச்யம் துக்க காரணம் என்கின்றன –
பகவத் பாகவத விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆத்ம அபிமான அனுகுண புருஷார்த்த வ்யவச்தையாலே நிரதிசய ப்ரீதி காரணம் –
இங்கு ததீயர் என்கிறது ததீயத்வ விவசாய ரசம் உடையவர்களை –

நாரங்களாலே விசிஷ்டனான நாராயணனை பற்றக் கைங்கர்யத்தை அபேஷிக்கும் போது
விசேஷணங்களான நாரங்களையும் பற்றக் கைங்கர்யம் அபேஷிக்கப் பட்டதாம்
என்னும் இடம் நியாய சித்தம் ஆகையாலே இங்கே ததீய கைங்கர்யம் சித்திக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள் –
இப்படி விசேஷணத்வமே பிரயோஜனமானால் நார சப்தார்த்தங்களாக இங்கு விவஷிதங்களான
ப்ரஹ்மாதி தேவதாந்த்ரங்களையும் பகவத் த்வேஷிகளையும் பச்வாதிகளையும் பற்றக் கைங்கர்ய அபேஷை பண்ணிற்றாம் –
நர பதியைப் பற்றக் கைங்கர்யத்தை அபேஷித்தான் என்றால் நரரைப் பற்றக் கைங்கர்யம் அபேஷிதம் ஆகாதாப் போலே
இங்கும் நியாய மாத்ரத்தால் நாரங்களைப் பற்றக் கைங்கர்ய அபேஷை சித்தியாது –
ஆன பின்பு பிரமாண முகத்தாலே ஸ்வாமியினுடைய அபிமதம் செய்ய அபேஷிக்கிறான் ஆகையாலே
அவனுக்கு பிரிய தமராய் இருக்கிற சேஷத்வ ஞானமுடைய அநந்ய பிரயோஜனரைப் பற்ற கைங்கர்யம் அபேஷிதமாம் இத்தனை –
அனுபாவ்யதையிலும் நார சப்தார்த்தமான சர்வமும் பிரவிஷ்டமாம் என்னும் இடம் பிரமாண பலத்தாலே வந்தது அத்தனை –
இப்படி திருமந்த்ரத்தில் வாக்ய த்ரயத்திலே
இரண்டு வாக்கியம் ஸ்வரூப பரமாய்
ஒரு வாக்யம் புருஷார்த்த பிரார்த்தனா பரமாய் யோஜித்தது –

7-இங்கன் அன்றிக்கே பிரணவம் ஸ்வரூப பரமாய் நமஸ் ஸிலே –
அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையாய் -அநிஷ்டம் நிவர்த்தித்தால் வரும் புருஷார்த்தத்தை
நாராயணாய ச்யாம் என்றும் கணிசிக்கிறது என்று ஆகவுமாம்-
இந் நமஸ்ஸூக்கும் இப்படி த்வயத்தில் நமஸ்ஸூ க்குப் போலே விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையிலே
தாத்பர்யமான யோஜனா விசேஷமும்
பிரணவோதித தச்சேஷ பாவோஹம் நிஜகர்மபி -அஹங்கார மமத்வாப்யாம் அபிபூதோப்யத பரம் –
தச் சேஷத்வ அனுசந்தான பூர்வ தச் சேஷ விருத்திக -பூயாசமித்யமும் பாவம் வ்ய நகதி நம இதயத்த -என்று
பட்டர் நித்யத்திலே பிரசித்தம் –
ஆகையாலே அஹம் ந மம ஸ்யாம் என்றாதல் ந மம கிஞ்சித் ஸ்யாத் என்றாதல் வாக்ய அந்வயமாய்-
இத்தாலே அஸ்ய ஜீவாத்மா நோ அநாத்ய வித்யா சம்சித புண்யபாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேது க
ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மாக சதுர்வித தேக பிரவேச க்ருத தத்தத் ஆத்மாபிமான ஜனித
அவர்ஜநீய பவபய வித்வம்சநாய -வேதார்த்த சங்க்ரஹம் –என்றும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் என்றும் சொல்லுகிற
அவித்யா கர்ம ததுபய வாசனா ருசி பிரகிருதி சம்பந்தாதி ரூபமான
சர்வ அநிஷ்டமும் அத்யந்த நிவ்ருத்தமாக வேணும் என்று அபேஷித்ததாயிற்று –

இப்படி அநிஷ்ட நிவ்ருத்தியைப் பிரார்த்தித்தால் இஷ்ட பிராப்தியை அபேஷிக்க வேணுமோ –
சம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேன சப்தாத் -ஸ்ரீ -ப்ரஹ்ம ஸூ தரம் –4-4-1–என்றும்
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நாமல ப்ரஷாள நான்மணே -தோஷ ப்ரஹாணான் ந ஜ்ஞானம் ஆத்மன க்ரியதே ததா
யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் -சதேவ நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத-
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதாததயோ குணா -பிரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா எவாத்மானோ ஹி தே -என்றும்
சொல்லுகிறபடி இஷ்ட பிராப்தி தானோ வாராதோ என்னில்
ஸ்வத ஸ்வார்ஹம் யதா பாகம் புத்ர பிதுர பேஷதே-சாபராதஸ் ததா தாஸ கைங்கர்யம் பரமாத்மன -என்கிறபடியே
தன் அபராதத்தாலே ச்வத பிராப்தத்தை இழந்து கிடக்கிற இவன் -ஏன் கூறு நான் பெற வேணும் –
அதுக்காக என் அபராதத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அபேஷிக்கையில் விரோதம் இல்லை –
இத்தால் பிரதிபந்தக நிவ்ருத்தில் மாணிக்கத்தில் ஒளியும் –
இச்சாத ஏவ தவ விச்வபதார்த்த சத்தா -என்கிறபடியே நியதையான ஈஸ்வர இச்சையாலே பரம்புமா போலே
இங்கும் ஸ்வா பாவிகமான ஜ்ஞான விகாசாதிகள் சஹஜ காருண்ய ரூபையான ஈஸ்வர இச்சையாலே
வருகிறன வென்னும் இடம் தோற்றுகிறது

ஆனாலும் பாவாந்த்ராபாவத்தில் சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி தானே இஷ்ட பிராப்தியாய் இருக்க
தனித்துச் சொன்னால் புனருக்தி வாராதோ
அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோஷ -என்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்திலரோ என்னில் –
ஏகமேவ ஸ்வரூபேண பரேண ச நிரூபிதம் -இஷ்ட பிராப்திர நிஷ்டச்ய நிவ்ருத்திச்சேதி கீர்த்யதே –
ஓன்று தன்னையே ஸ்வரூபத்தாலும் பிரதியோகியாலும் நிரூபித்து பிரயோஜன விசேஷ அபிசந்தியாலே
பிரியச் சொல்லக் கடவதாய் இருக்கும் –
சம்சார தசையில் ஒரு பிரதிகூல நிவ்ருத்தி பிரதிகூலாந்தரமாயும் அனுகூல பிரதிகூல உபய நிவ்ருத்தியாயும் இருக்கும் –
இங்கு சர்வ பிரதிகூல நிவ்ருத்தி யாகையாலே மேல் முழுக்க அனுகூலமாயாயே இருக்கும்
ஆகையால் பூர்வ அவஸ்தையினுடைய அநிஷ்ட தமத்வத்தையும்
கேவல அனுகூல ரூபையான உத்தர அவஸ்தையினுடைய இஷ்ட தமத்வத்தையும் தோற்றுவிக்கைக்காக
ஆதார அதிசயத்தாலே பிரிய அபேஷிக்கிறது
பகவன் நிக்ரஹாதி நிவ்ருத்தியும் ஜீவனுடைய ஜ்ஞான விகாசாதிகளும் வேறாகையாலே பிரிய அபேஷிக்கிற தாகவுமாம்-
ஜ்ஞான சங்கோ சாதிகளுக்கு ஹேதுவான பகவன் நிக்ரஹாதிகள் உடைய நிவ்ருத்தியும் –
நிக்ரஹ பலமான ஜ்ஞான சங்கோ சாதிகள் உடைய நிவ்ருத்தியான
ஜ்ஞான விகாச கைங்கர்யாதிகளும் வேறு பட்டவை யாகையாலே பிரிய அபெஷிக்க குறை இல்லை இறே-
சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பிறந்தால் பாஷாண கல்பத்வாதி மதாந்திர சங்கை வாராமைக்கும் –
பகவத் பிராப்தியில் இந்த்ராதி பிராப்தியில் போலே துக்க சம்பந்தம் இல்லை என்று
தோற்றுவிக்கையில் தாத்பர்யத்தாலும் பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம்
இப்படி ஸ்வரூபமும் புருஷார்த்த ப்ரார்தனமும் சப்தமானால் இப் புருஷார்தத்ததுக்கு சாதனமாக சாஸ்திர விகசிதமான சாத்ய உபாயமும்
பரந்யாச பர்யந்தமாக அகிஞ்சனனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ் ஸிலே ஆர்த்தமாக அனுசந்தேயம் –

8–இப்புருஷார்த்த பிரார்த்தனை இச்சா மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே
கோப்த்ருத்வ வர்ண ரூபை யாகையாலே சேஷம் உப லஷிதம் ஆகவுமாம்-
அப்போது திருமந்தரம் ஸ்வரூப உபாய பிரதானமாய் இருக்கும் –
அயன சப்தத்தில் கரண வ்யுத்பத்தியாலே ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சித்திக்கும் –

9-கேசித்து சரம ஸ்லோகே த்வயே சோக்த க்ரமாதிஹ பரந்யாச பரம் தாரம் சேஷம் பல பரம் விது-

10-இத் திருமந்த்ரத்தில் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றும் அடைவே சப்தமாகவுமாம்-
அப்போது பிரணவம் ஸ்வரூப பரம் –நமஸ்ஸூ உபாய பரம் -சேஷம் புருஷார்த்த பிரார்த்தனா பரம் –
இம் மூன்றின் விரிவு எல்லாம் அத்யாத்ம சாஸ்த்ரங்களைக் கொண்டு தெளிந்து இங்கே அனுசந்தேயம் –
இந்த யோஜனைக்கு வேதாந்த சாஸ்த்ரத்தில் தத்வ உபாய புருஷார்த்தங்களை நிரூபித்த கிரமத்தோடு சேர்த்தி உண்டு –
எங்கனே என்னில் –
முதல் இரண்டு அத்யாயத்தாலே பராவர தத்வங்களைத் தெளிவித்து –
த்ருதீயத்தாலே பராவர தத்வங்களோடு கூடின உபாயம் சொல்லி –
சதுர்த்தத்தாலே பலம் சொல்லி இறே சாரீரக சாஸ்திரம் தலைக் கட்டிற்று –

அங்கே முதல் இரண்டு அத்யாயத்திலே சொன்ன பராவர தத்வ ஸ்வரூபமும் –
நான்காம் அத்யாயத்தில் சொன்ன பலமும் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுக்கும் துல்யம் –
மூன்றாம் அத்யாயத்தில் வைராக்ய பாதத்திலும் உபய லிங்க பாதத்திலும்
சொன்ன சம்சார தோஷமும் சரண்யனுடைய ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வமும் முமுஷுவான
இவனுக்கு அவசியம் ஜ்ஞாதவ்யம்
மூன்றாம் பாதத்தில் உபாயமாகச் சொன்ன உபாசன பேதங்களை அவற்றுக்கு அதிகாரிகள் ஆனவர்கள்
அனுஷ்டிக்கக் கடவர்கள் –

அகிஞ்சனான அதிகாரி தனக்கு அவற்றின் அருமையைக் கண்டு –
நாநா சப்தாதி பேதாத் –3-3-56-என்றும் –
விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் -3-3-57–என்கிற அதிகரணங்களில்
சொன்ன கட்டளையிலே வித்யாந்தர வ்யாவ்ருத்தமாய் அவை கொடுக்கும் மோஷத்தைக் கொடுக்கும் இடத்தில்
நிரபேஷமுமான ந்யாசத்தையே பற்றக் கடவன்

நான்காம் பாதத்தில் சொன்ன வர்ணாஸ்ரம தர்மங்களை உபாசன நிஷ்டன் –
சஹகாரித்வேன ச -3-4-33-என்கிறபடியே வித்யா பரிகரமாக அனுஷ்டிக்கும் –
ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டன் -விஹிதத்வாத் ஆஸ்ரம கர்ம அபி -3-4-32–என்கிறபடியே
பகவத் ஆஜ்ஞ்ஞா சித்தம் என்று ஸ்வயம் பிரயோஜனமாக அனுஷ்டிக்கும் –
இப்படியானால் சாரீரகத்தில் சொன்ன ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் எல்லாம் ஸ்ரீ மதஷ்டாஷர அந்தஸ்தங்கள் –
இதில் அர்த்த பஞ்சகாதிகள் கிடக்கிற வகுப்பு எல்லாம் கீழே சொன்னோம் –

இப்படி திருமந்தரம் ஏக வாக்யமான போது
1-உபாய பரம் என்றும் –
2-வ்ருத்தி பரம் என்றும் –
வாக்ய த்வயமான போது
3-ஸ்வரூப பரம் என்றும் –
4-அந்வய வ்யதிரேக முகேன சமர்ப்பண பரம் என்றும்
5- புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும்
வாக்ய த்ரயமான போது –
6- முதல் இரண்டு பதமும் ஸ்வரூபமாய் மேல் பதம் புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும் –
7-பிரணவம் ஸ்வரூப பரமாய் மேல் இரண்டு பதமும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பரம் என்றும் –
இக்கட்டளையிலே
8-பிரதம பதம் ஸ்வரூப பரமாய் மேல் இரண்டு பதமும் உபாய பரம் என்றும் –
9-பிரதம பதம் சமர்ப்பண பரமாய் மேல் இரண்டு பதமும் பல பிரார்த்தனா பரம் என்றும் –
10-பத த்ரயமும் அடைவே தத்வ உபாய புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்றும்
அனந்தாரத்த கர்ப்பமான இத் திருமந்த்ரத்தில் வாக்யார்த்தத்தைப் பத்துப் படியாக யதா சம்ப்ரதாயம் அனுசந்திப்பார்கள்
இப்படி சிலவற்றை பிரதானமாக அனுசந்தித்தாலும் மற்று உள்ளவையும் ஆர்த்தமாகக் கடவது –
ததேவம் பத வாக்யார்த்தை தத்வவித் குரு தர்சிதை -தத்தத் குத்ருஷ்டி கதிதம் நிரச்தம் யோஜநாந்தரம் –

இத் திருமந்த்ரத்தில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களால் கலக்க ஒண்ணாத தெளிவுடையவனை
பிரஜ்ஞ்ஞா பிரசாத மாருஹ்ய ஹ்யசோச்ய சோசதோ ஜநான்-பூமிஸ் தானிவ சைலச்தோ
ஹ்யஜ்ஞான் ப்ராஜ்ஞ பரபச்யதி-என்கிறது –
ஜ்ஞாநேன ஹீன பசுபி சமான -என்கிற இடத்தில் ஞானம் என்கிறதும் இத் தெளிவை –
இப்படித் தெளிந்தவன் –
ந ப்ரஹ்ருஷ்யதி சம்மானே நாவமானே அனுதப்யதே -கங்காஹ் நத இவா ஷோப்யோ ய ச பண்டித உச்யதே -என்கிறபடியே
மாநாவமாநாதிகளில் கலங்கான் –
இத் திருமந்த்ரத்தில் யதார்த்த ஞானமும் நிஷ்டையும் உடையவனை ஆதரிக்கும் தேசத்திலும்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே-ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷ தஸ்கரா – என்கிறபடியே
ஒரு தோஷமும் வாராது –
இஸ் ஸ்லோகத்தால் ராகாதி ரோகான் சதத அனுஷக்தான் அசேஷகாய ப்ரஸ்ருதான சேஷான்
ஔத் ஸூக்ய மோஹா ரதிதான் ஜகான யோ அபூர்வ வைத்தாய நமோஸ்து தஸ்மை -என்று
ஆயுர்வேத வித்துக்கள் பிரதான வியாதிகளாக எடுத்த ராகாதிகளும் சத்துக்களுக்கு ஸ்ரீ என்று ஓதப்பட்ட
ஜ்ஞான சம்பத்தின் உடைய சங்கோசமும்
பாஹ்யதஸ்கரர்க்கு நிலம் அல்லாத ஆத்மா அபராதிகளை பண்ணும் மாஹா தச்கரரான
அஹங்காராதிகளும் நடையாடா வென்றதாயிற்று –

1-இத்திருமந்த்ரத்தில் அறுதியிட்ட பொருளே
விஷ்ணு வாஸூ தேவ சப்த விசிஷ்டங்களான வ்யாபக மந்த்ராந்தங்களுக்கும் பொருள் –
வியாப்தி காந்தி பிரவேசேச்சா தத்தத் தாது நிபந்தனா -பரத்வே அப்யதிகா விஷ்ணோ தேவஸ்ய பரமாத்மன -என்று
அஹிர் புத்ந்யாதிகள் நிர்வசனம் பண்ணின படியே –
விஷல் வ்யாப்தௌ வஸ காந்தௌ விசா பிரவேசனே இஷூ இச்சாயாம் -என்கிற தாதுக்களிலே
நிஷ்பன்னமான விஷ்ணு சப்தத்தில் உள்ள பொருள்களும்
வாஸூ தேவ சப்தத்திலும் -வசதி வாசயதி -என்றும் -தீவ்யதி என்றும் தோற்றின சர்வ வியாபகத்வம் -சர்வ ஆதாரத்வம் –
தத்கத தோஷ ரஹித்வம்-க்ரீடா விஜிகீஷாதிமத்த்வம் -ஆகாரங்கள் எல்லாம் நாராயண சப்தத்தில் ஏக தேசம் –

2-ருசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச -சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கையாலே
இத் திரு அஷ்டாஷரமே முமுஷுக்களுக்கு தத்வ ஹித அனுபந்திகளான சர்வ அபேஷிதங்களுக்கும் பிரகாசகம்

ருசோ யஜூம்ஷி சாமானி யோ அதீதே அசக்ருதஞஜசா-சக்ருத அஷ்டாஷரம் ஜப்த்வா ச தஸ்ய பலம் அஸ்நுதே -என்கையாலே
இதனுடைய சக்ருத் உச்சாரணம் சர்வ வேத ஜப துல்யம் –

3-யஸ்ய யாவாம்ச்ச விஸ்வாச தஸ்ய சித்தச்ச தாவதீ -ஏதாவா நிதி நை தஸ்ய பிரபாவ பரிமீயதே –என்கையாலே
தந்தம் விஸ்வாச தாரதர்ம்யத்துக்கு ஈடாக சித்தி தாரதம்யம் உண்டானாலும்
மகா விசுவாசம் உடையார் பக்கல் இத்திருமந்த்ரம் அனவச்சின்ன ப்ரபாவமாய் இருக்கும் –
இஸ் ஸ்லோகத்தில் இன்னாரால் பரிச்சேதிக்க ஒண்ணாது என்று விசேஷியாமையாலே-
நர நாரணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் -என்கிறபடியே
இத் திருமந்த்ரத்துக்கு பிரவர்த்தகனுமாய் பிரதிபாத்யனுமாய் இருக்கிற ஸ்வத சர்வஜ்ஞனான நாராயணன் தானும்
இதின் பிரபாவத்தை பரிச்சேத யோக்கியம் அன்று என்று அறியும் அத்தனை –
இம் மந்த்ரத்துக்கு த்ரஷ்டாவுமாய் தேவதையும் ஆனவன் பக்கலிலே இத்தை சாரார்த்தமாகப் பெற்ற திருமங்கை ஆழ்வார்
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் -என்று அருளிச் செய்தார் –

எட்டு மா மூர்த்தி என் கண்ணன் எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டுஎனும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டிரத மேலனவும் எட்டினவே –

சர்வ காரண பூதனுமாய் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானுமான சர்வேஸ்வரனுக்கு பிரதிபாதகமான திரு அஷ்டாஷரத்தை
அனுசந்திக்கும் மகா மதிகளுக்கு ஆத்மா குணாதிகளிலும் அஷ்ட ஐஸ்வர் யாதிகளிலும்
யதா மநோரதம் துர்லபமாய் இருப்பது ஒன்றும் இல்லை என்கிறது
எட்டு மா மூர்த்தி-
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -சந்திர ஆதித்யர்களும் -யஜமானனும் தனக்கு மூர்த்திகளாக
வரம் பெற்று அஷ்ட மூர்த்தி என்று பேர் பெற்ற ருத்ரன் –
என் கண்ணன் –
சதுர்முகன் ஆகையாலே எட்டுக் கண்கள் உடைய ப்ரஹ்மா
எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு திக்குகள் -இந்த்ராதிகளான எட்டு திக் பாலகர்கள் -அவ்யக்த மஹத் அஹங்கா ராதிகளான-எட்டுத் தத்வங்கள்
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன்
எட்டு குல பர்வதங்கள் -இவை எல்லாவற்றையும் சிருஷ்டித்த குண அஷ்டக விசிஷ்டனான பரமாத்மா
இவனுக்கு எட்டு குணங்கள் என்கிறது –
கர்மவஸ்யத்வ ஜரா மரண சோக ஷூத் பிபாசைகள் அன்றிக்கே ஒழிகையும்-
நித்யங்களான போக்யங்கள் உடையனாகையும் -நினைத்தது முடிக்க வல்லனாகையும் –
எட்டு எனும் எண் குண மதியோர்க்கு
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கு பிரதான மந்த்ரமான திரு அஷ்டாஷரத்தை சாரார்தமாக கேட்டு அனுசந்திக்கும்
அஷ்டாங்க புத்தி உடைய அனந்யரான பிரதிபுத்தர்க்கு
புத்திக்கு எட்டு அங்கங்கள் ஆவன –
க்ரஹணம் தாரணம் சைவ ஸ்மரணம் பிரதிபாதனம் ஊஹ அபோஹ அர்த்த விஜ்ஞ்ஞானம்
தத்த்வஜ்ஞானோ ச தீ குணா -என்கிறவை –
எட்டு மா மலர்
அஹிம்சா ப்ரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் வேசிஷத
ஜ்ஞானம் புஷ்பம் தப புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ ப்ரதீதிகரம் பவேத் என்கிற புஷ்பங்கள் –
எண் சித்தி
ஊஹஸ் தர்கோ அத்யயனம் துக்க விதாதாஸ் த்ரய ஸூஹ்ருத் ப்ராப்தி -தானம் ச சித்தயோ அஷ்டௌ-என்கிற எட்டு சித்திகள்
எண் பத்தி
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாம் சாநு மோதனம்-மத்கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா
ஸ்வயம் ஆராதனே யத்னோ மமார்த்தே டம்ப வர்ஜனம் மமா நுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி –
பக்திர் அஷ்டவிதா ஹி ஏஷா -என்கிற எட்டு விதங்களான பக்திகள் –
எட்டு யோகாங்கம் எண் செல்வம்
யோகாங்கமாகச் சொல்லப்பட்ட யம நியமாதிகள் –
அணிமா மஹிமா ச ததா லதிமா கரிமா வசித்வம் ஐஸ்வர்யம் ப்ராப்தி ப்ராகம்யம் சேத்ய அஷ்ட ஐஸ்வர் யாணி யோக
யுக்தஸ்ய -என்கிற எட்டு விபூதிகள் –
எட்டு மா குணம்
முக்தி தசையில் ஆவிர்பவிக்கும் குண அஷ்டகம் -அஷ்டௌ குணா புருஷம் தீபயந்தி –இத்யாதிகளில் சொன்னவை யாகும் –
எட்டு எட்டு எணும் கலை
சதுஷ்ஷடி கலைகள்
எட்டிரத மேலனவும்
ஸ்ருங்கார வீர கருணா அத்புத ஹாஸ்ய பயானக பீபதச ரௌத்ரௌ ச ரசா என்கிற ரசங்கள் எட்டுக்கும் மேலான சாந்தி ரசம் –
எட்டினவே
இவற்றில் இவனுக்கு இச்சை உள்ள போது எட்டாதவை ஒன்றும் இல்லை –

ஆத்மா குணாதிகள் நிரம்பாது ஒழிகிறது அனுசந்தானத்திலே ஊற்றம் போதாமையாலே –
அஷ்ட ஐஸ்வர் யாதிகள் வாராது ஒழிகிறது உபேஷையாலே
கடுக சம்சாரம் நிவர்த்தியாது ஒழிகிறது இசைவில் குறைவாலே
ஆகையால் இறே நமோ நாராயணா யேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறது –

அவித்யா பூத நோன்முக்தை அனவஜ்ஞாத சத்பதை அசதாச்வாத சவ்ரீடை ஆதிஷ்டமிதி தர்சிதம் –

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்துயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழவடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடு நன் மனு வோதினமே –

இத்தம் சங்கடித பதை த்ரிபிரசாவேக தவி பஞ்சாஷரை அர்த்தைஸ்
தத்தவ ஹித பிரயோஜனமயை அத்யாத்ம சாரைஸ் த்ரிபி
ஆத்யஸ் த்ரயஷர வேத ஸூ தி ரஜஹத் ஸ்தூலாதி வ்ருத்தி த்ரய
த்ரை குண்ய பிரசமம் ப்ரயச்சதி சதாம் த்ரயயந்த சாரோ மநு –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading