ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1

கங்கையில் புனிதமாய காவேரி நடுபாட்டில் பொன் மதிள் ஏழ் உடுத்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் அரவரசப் பெரும் சோதி அனந்தன்
என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணை மேவி சீர் பூத்த செலும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நிலமகளும் அடிவருடப் பள்ளி கொள்ளும் பரமனை தாம் இடை வீடின்றி பாவனை செய்யும் பரிசினை அருளிச் செய்கிறார்

சப்த பிரகார மத்யே
மாட மாளிகை சூழ் திரு வீதியும் -மன்னு சேர் திருவிக்ரமன் வீதியும் -ஆடல் மாறனகளங்கன் வீதியும்
ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும் -கூடல் வாழ் குலசேகரன் வீதியும் -குலவு ராச மகேந்தரன் வீதியும் -தேடுதன்மவன் மாவலன் வீதியும் தென்னரங்கன் திரு வாரணமே
சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
சரசிஜ முகுள உத்பா சமாநே விமாநே -தாமரை முகிலம் போலே விளங்கும் பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே
காவேரி மத்ய தேசே
உபய காவேரி மத்யத்தில் உள்ள தென் திருவரங்கத்திலே
ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
பர ஸூ குமாரமான திரு வனந்த ஆழ்வான் திருமேனி ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே
நித்ரா முத்ரா பிராமம்
நிதர முத்ரா அபிராமம் -உறங்குவான் போலே யோகு செய்யும் பெருமான் –
ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற
கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
திருவரை யருகில் ஒரு திருக்கையும் திருமுடி யருகில் ஒரு திருக் கையும் வைத்து இருப்பவரும்
பிரம்மா ருத்ராதிகளுக்கும் தலைவர் என்று திரு அபிஷேகத்தைக் காட்டி அருளியும்
திரு முழம் தாள் அளவும் நீட்டி திருவடியில் தாழ்ந்தார்க்கு தக்க புகல் இடம் என்று காட்டி அருளியும்
வலத் திருக்கை பரத்வத்தையும் -இடத்திருக்கை சௌலப்யத்தையும் கோட் சொல்லி தருமே
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்
திருமகளும் மண் மகளும் தமது திருக்கைகளினால் திருவடி வருடப் பெற்றவருமான
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே -என்னும் அபிசந்தியால்
ரங்க ராஜம் பஜேஹம்
ரங்க ராஜம் அஹம் பஜே -ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-

———

மேல் நான்கு ஸ்லோகங்களால் தமது ஆற்றாமையை வெளியிடுகிறார் –

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம் கர்ணாந்த லோல ஈஷணம்
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம் முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்–2-

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம்
கஸ்தூரீ காப்பினால் அமைந்த திவ்ய உஊர்த்வ புண்டரீக திலகம் உடையதும்
கர்ணாந்த லோல ஈஷணம்
திருச் செவி யளவும் சுழல விடா நின்ற திருக் கண்களை உடையதும்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் என்றபடி
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம்
வ்யாமோஹமே வடிவு எடுத்து புன் முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை உடையதும்
முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
முத்துக் கிரீடத்தால் ஒளி பெற்று விளங்குவதும்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச
கண்டார் நெஞ்சை கவரும் அழகு வாய்ந்த
பர்யாய பங்கே ருஹம்
தாமரையே என்னலாம்படி உள்ளதுமான
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்
ஸ்ரீ ரெங்க நாதருடைய திரு முக மண்டலத்தை அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே -போலே அருளுகிறார்

————-

கதாஹம் காவேரீ தட பரிசரே ரங்க நகரே
சயா நம் போ கீந்த்ரே சதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மது மதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான் –3-

காவேரீ தட பரிசரே
திருக் காவேரி கரை யருகில்
ரங்க நகரே
திரு வரங்க மா நரரிலே
சயா நம் போ கீந்த்ரே
திரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற
சதமகமணி ச்யாமல ருசிம்
சதமகன் இந்த்ரன் -இந்திர நீல ரத்னம் போன்ற ச்யாமளமான காந்தியை யுடைய -பச்சை நீலம் கருமை பர்யாயம் –
உபாசீன
பணிந்தவனாகி
க்ரோசன் மது மதன நாராயண ஹரே முராரே கோவிந்த இதி அநிசம் –
மது ஸூ தனா நாராயண ஹரி முராரி கோவிந்த போன்ற திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டு நின்றவனாய்
கதாஹம் -அப நேஷ்யாமி திவசான் —
அஹம் கதா திவசான் அப நேஷ்யாமி –அடியேன் எப்போது ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்

தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்பவன் -ஸ்ரீ ரெங்கன் -அவனை திரு நாமங்கள் வாய் வெருவி சேவித்து
போது போக்கவும் -காவரிக் கரையில் இருந்து திரு நாமங்களை வாய் வெருவிக் கொண்டு போது போக்கவும் பாரிக்கிறார்

———————————————

கதாஹம் காவேரீ விமல சலிலே வீத கலுஷ
பவேயம் தத்தீரே ஸ்ரமமுஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

காவேரீ விமல சலிலே வீத கலுஷ பவேயம்
திருக் காவேரியிலே நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி சகல கல்மஷங்களும் அற்றவனாக நான் என்றைக்கு ஆவேன்
விமல சலிலே -தெளிந்த –தெண்ணீர் பொன்னி –பிரசன்னாம்பு –
தெளிவிலா கலங்கள் நீர் சூழ் -துக்தாப்திர் ஜன நோ ஜனன்ய ஹமியம் -ஆறுகளுக்கு கலக்கமும் தெளிவும் சம்பாவிதமே
வீத கலுஷ -விரஜா ஸ்நானத்தால் போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே போகுமே –
தத்தீரே ஸ்ரமமுஷி -கநவநே-கதா-வசேயம்
அந்தக் காவேரியின் கரையில் விடாய் தீர்க்கும் எப்போது வசிக்கப் பெறுவேன் சோலைகளிலே
தத் தீரே கநவநே -வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை
குயிலனம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை -போலவும்
கதள வகுள ஜம்பூ –ஸ்புரித சபர தீர்யன் நாளி கேரீ-ஸ்ரீ ரென்ச ராத சதவ ஸ்தோத்ரங்கள் போலேவும்
புண்யே மஹதி புளிநே
புனிதமாயும் பெருமை வாய்ந்த மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே
மங்கள குணம்
கதாஹம-பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்
அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் -தாமரை போன்ற திருக் கண்களை உடைய
கல்யாண குண நிதியான ஸ்ரீ ரெங்க நாதரை எப்போது சேவிக்கப் பெறுவேன் –

———————————————-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –5-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
பாகு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் -தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் அன்றோ
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
அரு மா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச் சித்ர கூடம் -திருமங்கை ஆழ்வார்
தோதவத்தித் தீ மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே -பெரியாழ்வார்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இ றே
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

—————————————————————————–

ஜாது பீதாம்ருத மூர்ச்சிதாநாம் நா கௌ கசாம் நந்த நவாடி கா ஸூ
ரங்கேஸ்வர த்வத் புரம் ஆஸ்ரிதா நாம் ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –6-

பீதாம்ருத மூர்ச்சிதாநாம்
அம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற
நந்த நவாடி கா ஸூ-
தேவேந்தரன் உடைய சோலைப் புறங்களிலே
நா கௌ கசாம் -ஜாது -பவேயம் –
அமரர்களில் ஒருவனாக ஒருக்காலும் ஆகக் கடவேன் அல்லேன்
பின்னியோ என்னில்
ரங்கேஸ்வர
ஸ்ரீ ரெங்க நாதனே
த்வத் புரம் ஆஸ்ரிதா நாம்
தேவரீர் உடைய ஸ்ரீ ரெங்கம் நகரியைப் பற்றி வாழ்கிற
ரத்யாசு நாம் அந்யதமோ
திருவீதி நாய்களுள் ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –

இந்திர லோகம் ஆளும அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும் எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் எ
ன்பர் கோஷ்டியில் இவரும் அன்றோ
வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தான் அன்றோ
அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூ ரய –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –ஸ்ரீ ரங்கத்திலே மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் எல்லாருமே நித்ய முக்தர்கள் என்றாரே
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரங்கள் இந்த ஆறும் -மேல் இரண்டும் முக்த கங்கள்-என்பர்

—————————————————————————————-

அசந் நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர் மித்த்யா அபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந் நிக்ருஷ்டே காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —

அ சந் நிக்ருஷ்டஸ்ய
உண்மையில் உமது அருகில் வாராத
நிக்ருஷ்ட ஜந்தோர்
ஒரு நாயின் சம்பந்தமான
மித்த்யா அபவாதேன
பொய்யான அபவாதத்தினால்
கரோஷி சாந்திம்
சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
ததோ நிக்ருஷ்டே மயி
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன்
சந் நிக்ருஷ்டே
வெகு சமீபத்திலே வந்த போது
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

கீழே -ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –என்றதாலே இந்த முக்தகமும் இங்கே சேர்ந்து அனுசந்திக்கப் படுகின்றது போலும்

—————————–

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானு ஜோயம் முனி

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading