பிதாச ரஹகச் சேஷி பர்த்தா ஜஞேயோ ரமா பதிர் ஸ்வாமீ ஆதாரோ மமாத்மா ச போக்தா ச ஆத்யமநூதித –
ஸ்தான பிரமாணத்தாலே -உகாராம் -அவதரணார்த்தம் –
கண்டார்கள் இகழ்கனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -6-2-
பர்த்ரு பார்யா பாவ ரூப சம்பந்தத்தால் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை-
———————————————————————————————————————————
அசந்நேவ ச பவதி
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -திருச் சந்த விருத்தம் -64
சரீரமேவ மாதா பிதரௌ ச ஹி வித்யாஸ் தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்மம் –
ஆச்சார்யன் -பிதா -வித்யா மாதா -ஆத்மாவுக்கு -வித்யா -திருமந்தரம்
தஞ்சமாகிய தந்தை -திருவாய்மொழி -3-6-9-
தந்தை -ஜன்மம் அடியாக -கைவிடும் தந்தை
ஆகிய தந்தை -சர்வேஸ்வரன் -கை விடாத தந்தை -சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது
தஞ்சமாகிய தந்தை -ஆச்சார்யன்
——————————————————————————-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் -பெரிய திருமொழி -6-10-6-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மால் இரும் சோலை கோனே –
ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போல் வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் -பெரியாழ்வார் -3-8-4-
-திரு நாமங்கள் -பகவத் விஷயங்கள் இட்டு -அனன்யார்ஹ சேஷத்வாதிகளால் வளர்க்கப்படும்
————————————————————————————–
ஏற்ற புருஷன் பரம் புருஷனே
எழிலுடைய அன்னைமீர் என்னரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -நாச்-11-2-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -10-3-
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறக்கும் நீர்மையினால் அருள் செய்தவராய்
இவர் வாயில் நல வேதம் ஓதும் வானவராவர் தோழி -பெரிய திருமொழி -9-2-1-
குலம்தரும் –நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-9-
சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத யூணாக யுண்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-திருவாய் -6-5-10-
காவியம் கண்ணி எண்ணில் கடி மலர்ப் பாவை ஒப்பாள் -பெரிய திரு -8-7-9-
———————————————————————————————————————————–
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிந்ததோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை யாழி சங்கு உத்தமற்க்கு என்று உன்னித்து எழுந்த என் தடா முலைகள்
மானிடவர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -நாச் -1-5-
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்து சிறு மானிடவரைக் காணில் நானும் கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -நாச் -12-4-
மற்றொருவருக்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே -பெரியாழ்வார் – 3-4-5-
பதிம் விச்வச்யாத்மேச்வரீம்
கௌசல்யா லோக பர்த்தாரம்
பணவாள் அரவிணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -நாச் -10-6-
அன்று ஈன்ற கன்றுக்கு தாய் இரங்கி முன்னனைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும் -தத்வ த்ரயம் -3-11-
——————————————————————————————————————————————————
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள சூத்ரம் போலே திருமந்தரம்
பாணீம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பறவை ஏறு பரம்புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ் -5-4-2-
————————————————————————————————————-
பிறந்தகம் -லீலா விபூதி
புக்ககம் -நித்ய விபூதி
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு -திருவாய் 5-1-5-
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி
மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை யல்லால் திரு விண்ணகரானே
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நான் முகன் -53
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -திருவாய்மொழி 3-6-8
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழால் அவளை யல்லால் -திருவாய் -4-6-10
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -திருமாலை 7
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது -பெரியாழ்வார் -5-1-2-
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-மற்றும் பலவும் பாரிடந்து பாரை யுண்டுபாரை உளிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்டது -பேசியும் பொழுது போக்குபவள்
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமாகில் –அது காணும் கண் பயனாவதே
நம்பனை நரசிங்கனை நவின்று யேத்துவர்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று இசைகள் தீர்வன்–பெரியாழ்வார் -4-4-9-
தேவர் கோலத்தோடும் –ஆவா வென்று அருள் செய்து அடியெனொடும் ஆனானே
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
காதல் கடல் புரைய விளைத்த காரமர் மேனி
ஒண் டொடி யாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து வடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் –
நான் ஏறப் பெறுவேன் நரகத்தை நகு நெஞ்சே –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்
நெருநல் கண்டது நீர்மலை –ஒரு நல் சுற்றம் –
முற்றிலும் பைம்கிளியும் பந்து மூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
மிக்கு ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை தொக்குப் பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையர் திருவாய் -7-6-11-
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பரே –
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது நோக்க வேணும் என்று -அழியாது ஒழிகை
அனன்யார்ஹத்வ வைபவம் மூதலிக்கப் படுகிறது
————————————————————————————————————————————————————
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய
கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –திரு விருத்தம் -60-
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் மொழி –4-5-8-
பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திருநாமம் கேட்பது சிந்தையே –திருவாய் மொழி -6-5-10-
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ –10-10-7-
————————————————————————————————————————————————
அழகிய பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply