ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -451-500—-மும்மத விளக்கம் —

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ்  சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48
ஸூவ்ரதஸ் ஸூ முகஸ் ஸூ ஷ்மஸ் ஸூ கோஷஸ் ஸூ கதஸ் ஸூ ஹ்ருத்
மநோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹூ ர் விதாரண –49
ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்னா கர்ப்போ தனேஸ்வர –50
தர்மகுப் தர்மக்ருத் தர்மீ சதஷரம சத்ஷரம்
அவிஜ்ஞாதா சஹஸ்ராம்   ஸூர் விதாதா க்ருதலஷண–51
கபஸ்தி நேமிஸ்  சத்வஸ்தஸ் சிம்ஹோ பூத மகேஸ்வர
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு–52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண –53-

————————————————————————

பகவானின் முயற்சி —-436–452—–17  திரு நாமங்கள் –
நரன் —————–453-456——-4  திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14  திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58  திரு நாமங்கள் –

————————————————————-

451-சதாம்கதி –
இந்த்ரியங்களை வென்றவர்களான சாதுக்கள் சேருமிடமாக இருப்பவர் –
இதுவரை பிரவ்ருத்தி தர்ம நிஷ்டர்களுடைய நிலை கூறப்பட்டது -இனி சாதுக்கள் நிலை -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷம் விரும்புவகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களால் அடையைப் பெறுபவர் -நஷத்ரங்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

452-சர்வ தர்சி-
இருவகை பிரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கண் கூடாகக் காண்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிராணிகளின் நல்வினை தீவினைகளை இயற்கையாக அறிபவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்சம் முதலிய யஜ்ஞ விசேஷங்களை யுடையவர் -எல்லாவற்றையும் பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

453-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தி தர்மத்தை உபதேசிப்பதற்காகவும் சிறந்த வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்துவதற்காகவும்
நர நாராயண அவதாரம் எடுத்து சப்தாதி விஷயங்களை மனத்தினால் துறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இயற்கையாகவே எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாகவே இருப்பவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்ட
ஆத்மா என்றுமாம் -விமுக்தாத்மா -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவாத்மாக்களை முக்தி  அடையும்படி அனுக்ரஹிப்பவர் -விசேஷமாக முக்தர்களுக்கு தலைவராக இருப்பவர் –
விமுக்தாத்மா என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

454-சர்வஜ்ஞ-
தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

455-ஜ்ஞான முத்தமம் –
எல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

456-ஸூ வ்ரத-
தம்மைப் பார்த்து மற்றவர்கள்  பயன் பெறுவதற்காகவே தாம் தர்மங்களை விடாமல் பற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அடியவர்களைக் காக்கும் சிறந்த விரதம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காத்தல் முதலிய மங்களமான விரதத்தை யுடையவர் –
தம்மைக் குறித்த மங்களகரமான வ்ரதமுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

457-ஸூமுக –
ஜபம் முதலியவற்றால் யுண்டாகும் வருத்தம் இல்லாத மலர்ந்த முகமுடையவர் –
457-463- நர நாராயண வ்ருத்தாந்தம் –கடல் கடைந்த சரித்ரம் என்கிற இரண்டு நிர்வாகம் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆனந்தமும் அமுதமும் நிறைந்ததாய் சந்தரன் போலே பிரகாசிப்பதாய் கையிலே வைத்து இருக்கும்
கலசம் போன்றதாயத் திகழ்ந்தவர் -அழகிய திரு முகம் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய முகம் உள்ளவர் -தசரத ராமனாக வன வாசத்தில் மகிழ்ந்தவர் -எல்லா வித்யைகளையும் அளித்து மகிழ்பவர் –
மங்களகரமான முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

458-ஸூஷ்ம-
ஸ்வயம் பிரயோஜனமாகச் செய்யப்படும் தியானத்தால் மட்டும் புலப்படும் முக நுட்பமான ஸ்வரூபம் யுடையவர் –
அசுரர்கள் அறியா வண்ணம் மறைத்த எண்ணத்தை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தம் முதலிய ஸ்தூல காரணங்கள் போல் அல்லாமல் -ஆகாசம் முதலிய வற்றிற்கு காரணமானவை –
அப்படி  அல்லாதவர் —சூஷ்ம காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸூஷ்ம ரூபம் யுடையவர் -மங்களமும் மேன்மையும் கொண்ட பூமி தேவியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

459-ஸூகோஷ –
அழகிய உபநிஷத் முதலிய வேதங்களினால் முழங்கப் பெறுபவர் –
தேவாசுரர்களின் கோஷத்தோடு கடைகிற கோஷமும் கூடி அற்புதமான கோஷமுடையவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சோபனமான வேத கோஷத்தை யுடையவர் -மேகம் போன்ற குரலுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்கள வேத ரூபமான பாஞ்சஜன்யம் என்ற சங்கின் ஒலியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

460-ஸூகத –
சதாசாரங்களையும் தானங்களையும் அனுஷ்டிப்பவர்களுக்கு பரம சுகமாகிய பலம் தருபவர் –
தேவர்களுக்கு அமுதம் அளித்து சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அல்லது தீயவர்களுக்கு சுகத்தைக் கெடுப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

முக்தி சுகத்தை அளிப்பவர் -அல்லது -அயோக்யரின் சுகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

461-ஸூ ஹ்ருத் –
தமக்கு உபகாரம் செய்யாதவனுக்கும் இவனுக்கு நான் என்ன செய்வேன் என்று நன்மையே கருதும் சிறந்த மனமுள்ளவர் –
அதற்குக் காரணமான அன்பை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கைம்மாறு எதிர்பாராமல் உபகாரம் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான இதயம் உள்ளவர் -பக்தர்கள் செய்யும் மங்களமான கர்மங்களின் பயன்களைப் பெற்றுக் கொள்பவர் –
பயன் எதிர்பாராமல் உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

462-மநோ ஹர –
இந்த இயற்கையான அன்பினால் அவர்களின் மனங்களைக் கவர்பவர் –
அசுரர்களின் மனங்களை மயக்கிய உருவமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லையற்ற ஆனந்த ஸ்வரூபியாகையால் மனங்களைக் கவர்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய மனங்களினால் கவரப் படுகிறவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

463-ஜிதக்ரோத –
அவர்களுடைய க்ரோதங்கள் முதலியவற்றைப் போக்குபவர் -இவருடைய அழகிய உருவைக் கண்டு மயங்கிக் குழம்பும்படி அசுரர்களைச்
செய்து அசுரர்களுக்கு தேவர்கள் இடமிருந்த க்ரோதத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -கோபத்தினால் அல்லாமல் வேத மரியாதையைக் காப்பதற்கே அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபத்தை  வென்றவர் -கோபத்தின் உருவான அசுரர்களை அழித்தவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

464-வீர பாஹூ-
வளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று
ஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

465-விதாரண –
திவ்ய ஆயுதங்களால் ராகு முதலியவர்களைச் சிதைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதர்மம் புரிபவர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாக பத்னிகளான கோபிகைகளுக்கு சுகத்தை தருபவர் -ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரத்தில் இரணியனைப் பிளந்தவர் –
ஞானிகளான வித்வான்களால் அடையப் பெறுபவர் -எல்லாம் அறிபவர் -ஜராசந்தன் முதலியவர்களுடன்  போர் புரிந்தவர் –
அரணிக் கட்டையில் அக்னிரூபத்தில் இருப்பவர் -ஞானத்தால் மகிழ்பவர் –
மனைவி அற்ற சன்யாசிகளுக்கு ஸூகம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

466-ஸ்வாபன-
மற்றவர்களை அழகிய புன்சிரிப்பு இனிய நோக்கு புருவ நெறிப்பு இவற்றால் வசீகரித்து மயக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளை  மாயையினால் ஆத்ம ஜ்ஞானம் இன்றித் தூங்கச் செய்பவர்  –ஸ்ரீ சங்கரர் –

கனவு நிலையைத் தருபவர் -அல்லது தூங்கும் படி செய்பவர் -தண்ணீரை நன்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

467-ஸ்வ வஸ-
அவர்கள் மயங்கிய போது தம் அடியார்களுடன் விருப்பப்படி கூடி மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் இவற்றில் ஸ்வ தந்தரமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

செல்வத்தைத் தம் வசத்தில் கொண்டவர் -பிரளய காலத்தில் தம் வயிற்றில் வைத்து சுகத்தை தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

468-வ்யாபீ-
தேவர் அசுரர் மந்தரமலை வாசுகி நாகம் -போன்றவர்கள் இடம் வியாபித்து கடல் கடைய வலிமை கொடுத்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாசத்தைப் போலே எங்கும் பரந்து -காரணமாக -எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

எங்கும் எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

469-நைகாத்மா –
அப்போது விஷ்ணு ஆமை மோஹிநீ முதலிய பல உருக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலிய வற்றிற்காக பல சக்திகள் பல உருவங்கள் கொண்டவர் —ஸ்ரீ சங்கரர்-

கணக்கற்ற உருவம் யுடையவர் -கணக்கற்ற ஜீவர்களுக்குத் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

470-நைக கர்மக்ருத் –
கடைவது-மலையைத் தாங்குவது -பகைவரை அழிப்பது -அமுதம் அளிப்பது-முதலிய பல செயல்களைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலிய பல செயல்களைச் செய்பவர் —ஸ்ரீ சங்கரர்-

படைத்தல் -காத்தல் முதலிய பல செயல்களைச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

471-வத்சர-
தர்மாத்மா -அவரவர் வேண்டியவற்றைக் கொடுப்பதற்காக எல்லாரிடமும் அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் தாமே இருப்பிடமானவர் —ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுகளுடன் சேர்ந்து மகிழ்பவர் -வத்சாசூரனை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

472-வத்சல-
நெடுநாள் தம்மைப் பற்றி இருப்பவர்களிடத்தில் காட்டிலும் அப்போதே தம்மைச் சரணம் அடைந்தவர் விஷயத்தில் பசுக்கள் அன்று
ஈன்ற கன்றை நினைத்துக் கனைத்துக் குமுறி முலை கடுத்துப் பாலைச் சொரிந்து என் செய்வது என்று படுவது போலே இருப்பவர் –
அடியவர்களைக் காப்பதற்காக பகவான் இக் குணத்தை உப கரணமாகக் கொண்ட படியால் அன்றோ
இக் குணம் மிகவும் புகழை அடைந்தது –ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் இடத்தில் அன்பு யுடையவர் —ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் இடத்தில் தயை யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

473-வத்சீ-
இப்படி எல்லாக் காலமும் தம்மால் போஷிக்கப் படத் தக்க ஆத்மாக்களை மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மக்களைக் காப்பவர் -உலகிற்குத் தந்தையாதளால் உலகத்தவர்களைக் குழந்தைகளாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ வத்சத்தை -மருவை -யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

474-ரத்ன கர்ப்ப –
அவர்களில் செல்வம் வேண்டுபவர்களுக்குக் கொடுக்கத் தக்க செல்வம் மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ரத்னங்களைக் கொண்ட கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

வயிற்றிலே ரத்னங்களை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

475-தநேச்வர-
அவரவர் விரும்பிய செல்வத்தை உடனே தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வங்களுக்கு அதிபதி –ஸ்ரீ சங்கரர்-

செல்வங்களுக்குப் பிரபுவாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

476-தர்ம குப் –
தம்மால் அளிக்கப்பட அர்த்த கர்மங்களை தீய வழிகளில் செல்லாமல் தடுத்து தர்மத்தைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மங்களைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மபுத்ரரை -அல்லது புண்யத்தைக் காப்பவர் -தர்ம  சாதனங்களான வேத வாக்குகளைக் காப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

477-தர்மக்ருத்
காரணம் அற்ற அருளால் எல்லோரையும் தருமத்தைப் பின்பற்றும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம அதர்மங்கள் அற்றவர் ஆயினும் தர்மத்தைக் காப்பதற்காக அதை அனுஷ்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மத்தைச் செய்பவர் -பக்தர் அல்லாதோரின் தர்மத்தை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

478-தர்மீ –
எல்லாவற்றையும் காப்பதற்கு தர்மத்தையே உபகரணமாகக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மங்களைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்-

யமதர்மனை நியமிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

479-சத் –
சிறந்த வஸ்துவாகிய தர்மமே வடிவாக இருப்பவர் -இந்த தர்மத்தையே சத் என்று கொண்டாடுவது இதனால் சாதிக்கப்படும் பகவான்
சத்தாக இருப்பதாலேயே ஆகும் -அவனுடைய சத்தாய் இருக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது –
எப்போதும் சத்தாய் இருப்பது –ஸ்ரீ பராசர பட்டர் –

சுத்த ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

480-சத் அஷரம்-
இப்படி எல்லாக் காலத்திலும் குணங்களும் ஸ்வரூபமும் குறைவுபடாது இருப்பவர் -அஷரம் என்றது சத் என்பதற்கு அடை மொழி –
அழியாத சத் -எனபது பொருள் -ஷரம் எனபது ஏதோ ஒரு காலத்தில் அல்லது தேசத்தில் அழிவதைக் குறிக்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாத ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழியாத ஸ்ரீ வைகுண்டம் முதலிய இட்டங்களில் மகிழ்பவர் -அழிவற்றவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

481-அசத்-
பாபிகளிடம் நில்லாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேறு ப்ரஹ்மம் -பெயர் வடிவம் முதலிய அவித்யையோடு கூடிய ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-

அழிவற்றவர் -அறிய முடியா ரூபத்தை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

482-அசத் ஷரம் –
பாபிகளுக்கு முடிவற்ற சம்சார துக்கத்தை கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஷரம் -அழியும் எல்லா பூதங்களுமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

எப்போதும் கொடுப்பவர் -உலகை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

483-அவிஜ்ஞாதா –
அடியவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டும் தண்டியாதவர் மட்டும் அல்லாமல் குற்றங்களையே அறியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எவர்கள்  ப்ரஹ்மாமானது ஞான மாத்ரமே என்று கூறி அது ஞானம் என்ற குணத்தைக் கொண்டதன்று என்று கூறுகிறார்களோ –
வேதங்களின் பொருள் ஆசார்யர்களுடைய முடிவுகள் நியாயம் ஆகிய விஷயங்களில் செவிடர்களாகவே உள்ள அவர்கள்
பகவானுடைய இந்த உயர்ந்த குணங்களை அறிந்து கொள்ள வில்லையே என்று
வருந்தத் தக்கவர்களே அன்றி கண்டிக்கத் தகுதி யுள்ளவர்கள் அல்லர் -ஸ்ரீ சங்கரர்

ஆத்மாவில் செயல் உண்டு என்று தவறாக அறிபவன் ஜீவன் -அவ்வாறு தவறாக அறியாதவர் விஷ்ணு –
முழுவதுமாக அறியப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————

484-சஹஸ்ராம்ஸூ-
அடியவர்கள் குற்றங்களைத் தவிர மற்று எல்லாவற்றையும் அறியும் அளவற்ற ஞானங்களை யுடையவர் –
சர்வஜ்ஞ்ஞன் என்பதும் அடியவர்களின் தோஷங்களை அறியாதவன் என்பதும் முரண்பட்டது அல்ல –
அபராதங்களை ஒரு பொருட்டாக நினையாமல் அவற்றை உபேஷித்து கண்டு கொள்ளாமல் விடுதலேயாகும் -ஸ்ரீ பராசர பட்டர்

சூரிய கிரணங்களைத் தம் உடையவையாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

ஆயிரம் கிரணங்கள் உள்ள சூரியனில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————-

485-விதாதா –
பாவங்களுக்குப் பலன் கொடுக்கும் யமனும் அவனுடைய தண்டனைகளும் தம் அடியவர்களைப் பாதிக்காமல் இருக்கும்படி நடத்துபவர் –
இங்கு ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வாமன புராணம் -ஸ்ரீ நரசிம்ஹ புராணம் -ஸ்ரீ லிங்க புராணம் –
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -ஸ்ரீ பாகவத புராணம் -முதலியவற்றில் யமனுக்கும் அவனுடைய கிங்கரனுக்கும் இடையே
நடைபெற்ற உரையாடல்கள் பார்க்கத் தக்கன -ஸ்ரீ பராசர பட்டர்

ஆதி சேஷன் திக் கஜங்கள் முதலியோர் பூமியைத் தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்

உலகைத் தாங்குபவர் -கருடனை விசேஷமாக வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————

486-க்ருத லஷண –
தம்மை அடையக் கூடிய அடியார்களுக்குத் தகுந்த அடையாளம் செய்து இருப்பவர் -தோஷங்களைப் பொறுத்துக் கொள்ள
தீயவர்கள் இடம் இருந்து நல்லவர்களை வேறுபடுத்தி அவர் அறிவது இதனால் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் அடையாளம் யுடையவர் -நித்ய சைதன்ய ரூபியாக இருப்பவர் –
லஷணங்கள் ஆகிய சாஸ்த்ரங்களை செய்தவர் -எல்லா வஸ்துக்களும் ஒன்றோடு ஓன்று வேறு பட்டவைகளாக
இருக்கும் இலக்கணங்களைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையான லஷணங்கள் உள்ளவர் -பக்தர்கள் செய்த கர்மங்களைப் பெறுவதில் மகிழ்ச்சி
உள்ளவர் -பூரணமான -இயல்பான -லஷணங்கள் உடைய சுகத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————-

487-கபஸ்தி நேமி –
கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளோடு கூடிய சக்கரம் உடையவர் -இப்படிப்பட்ட அடையாளங்கள் உள்ளவர்களை
ஆயிரம் ஆரங்களுடைய சக்ராயுதத்தை ஏந்தியுள்ள பகவான் காக்கின்ற படியால்
யமனும் அவனுடைய கிங்கரர்களும் நெருங்க முடியாது -ஸ்ரீ பராசர பட்டர்

வட்டமான கிரணங்களின் நடுவில் ஸூர்ய ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

சக்கரத்தின் நேமியில் உள்ளது போல் வட்டமான ஒளியை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————————

488-சத் வஸ்த-
பக்தர்களின் இதயத்தில் இருப்பவர் -யமனும் கிங்கரர்களும் நெருங்காமல் இருக்க காரணம் அவர்கள் இடம்
பாவங்கள் இல்லாததே யாகும் -அவ்வடியவர்கள் மட்டும் கர்மங்கள் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம்
பகவான் அவர்களிடம் எழுந்து அருளி இருப்பதே காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லா பிராணிகள் இடத்திலும் இருப்பவர் –
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சத்வ குணத்தை முக்யமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்

வலிமையுடன் திகழ்பவர் -ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருப்பவர் -சத்வம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————–

489-சிம்ஹ –
பகவத் பக்தர்களையும் பிறரைப் போலே யமன் முதலியோர் துன்புறுத்துவராயின்
அவர்களை ஹிம்சிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பராக்ரமத்தில் சிம்மம் போன்றவர் -ஸ்ரீ நரசிம்ஹ  திருவவதாரம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————

490-பூத மகேஸ்வர –
எல்லாரையும் நடத்தும் பிரமன் யமன்  முதலியவர்களையும் நடத்துபவர் –
இதுவே கீழ்ச் சொன்ன விஷயங்களில் சமர்த்தராக இருப்பதற்குக் காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

உண்மையில் பரமாத்மாவும் பெரிய ஈஸ்வரும் தாமே யானவர் -பிராணிகளுக்கு பெரிய ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர்

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -மிக அதிகமான உத்சவங்களை உடையவராய் –
ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ வாயுதேவன் ஆகியோருடன் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

491-ஆதி தேவ –
அவர்களுக்கும் காரணமாய் -பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லோரையும் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————–

492- மஹா தேவ —
அவர்களைப் பந்து முதலிய விளையாட்டுக் கருவிகளைப் போலே வைத்து விளையாடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞான ஸ்வரூபமாக உள்ள பெரிய தேவதை -ஸ்ரீ சங்கரர்

நன்கு உண்பவர் -லஷ்மியை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————–

493-தேவேச-
அவர்களுக்குத் தலைவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களுக்குத் தலைவர் -தேவர்களுக்கும் லஷ்மி தேவிக்கும் சுகம் அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————–

494-தேவ ப்ருத்-
அவர்களுக்குத் தம் விருப்பப்படி நடத்துபவரே -அவர்களைத் தாங்குபவர் -தேவர்களைத் தாங்குபவர் –
எல்லா வித்யைகளையும் உபதேசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களைக் காக்கும் இந்திரனையும் நியமிப்பவர் -தேவப்ருத்  குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களைக் காக்கும் பிரமனுக்கும் உபதேசிக்கும் குருவானவர் –
தேவப்ருத்  குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————-

495-குரு –
வேதங்களினால் அவரவர் அதிகாரங்களை உபதேசித்தமையால் அவர்களுக்கு குருவானவர் -ஸ்ரீ பராசர பட்டர்

————————————————————————-

496-உத்தர –
அசுரர்களால் உண்டான ஆபத்தில் இருந்து பிரம்மாதிகளைக் கரை ஏற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

சம்சாரக் கடலில் இருந்து கரை ஏற்றுபவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர்

உயர்ந்த தகுதி உள்ளவர்களை சம்சாரத்தில் இருந்து கரை ஏற்றுபவர் -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

497-கோபதி –
வேதங்களும் மொழிகளும் ஆகியவற்றை நடத்துபவர் -ஸ்ரீ பூமி தேவியின் கணவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களைக் காத்தவர் -ஸ்ரீ சங்கரர்

பூமி பசுக்கள் வாக்கு இவற்றைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————–

498-கோப்தா –
இப்படி எல்லா வித்யைகளையும் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உலகங்கள் அனைத்தையும் காப்பவர்-ஸ்ரீ சங்கரர்

காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————–

499-ஜ்ஞான கம்ய –
பரவித்யை யாகிற சமாதி ஞானத்தால் அறியத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கர்மத்தால் ஞான கர்மங்களால் அன்றி ஞானத்தால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர்

ஞானத்தாலும் ஞானிகளாலும் அடையைப் பெறுபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————-

500-புராதன –
முந்தைய கல்பங்களிலும் இப்படியே வித்யைகளை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கால வரையரை யில்லாமல் முந்தியும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

தேஹத்தில் அல்லத்து ஸ்ரீ வைகுண்டம் முதலிய இடங்களில் வசிப்பவர் -தொன்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading