உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண ————-53
சோமப அம்ருதபஸ் சோம புருஜித் புருசத்தம
விநயோ ஜயஸ சத்ய சந்தோ தாசார்ஹஸ் சாத்வதாம் பதி—54
ஜீவோ விநயிதா சாஷி முகுந்தோ அமிதவிக்ரம
அம்போ நிதி ர நந்தாத்மா மகோததிச யோந்தக –55
அஜோ மகார்ஹஸ் ஸ்வா பாவ்யோ ஜிதாமித்ர ப்ரமோதன
ஆனந்தோ நந்த நோ நந்தச் சத்ய தர்மா த்ரிவிக்ரம ——–56
மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57
மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58-
———————————————————————
தர்ம ஸ்வரூபி -471-528—–58 திரு நாமங்கள்
கபில மூர்த்தி -529-543—–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562——19 திரு நாமங்கள்
——————————————————————-
501-சரீர பூதப்ருத்-
தம் சரீரமாக உள்ள பிரகிருதி முதலிய தத்துவங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சரீரத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
சரீரங்களையும் பூதங்களையும் தாங்குபவர் -பிரளயத்தின் போது-தம்முடைய சரீரத்தில் பூதங்களைத் தரித்தவர் –
சரீர பூதப்ருத் என்ற பாடத்தில் சரீரம் உடையவர் -பூதங்களைத் தரிப்பவர் -என்று இரண்டு திரு நாமங்கள் –
அல்லது தம்முடைய சரீரங்களாக அந்தர்யாமி பிராமணத்தில் பிருத்வி முதலிய சப்தங்களால் கூறப் பட்ட
ஸ்ரீ கருடன் முதலியோரை தரிப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
502-போக்தா –
ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –
காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
503-கபீந்திர –
வானர உருவத்தை எடுத்துக் கொண்ட தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வானரர்களுக்குத் தலைவராகிய ஸ்ரீ ராமனாக திரு வவதரித்தவர் – -ஸ்ரீ சங்கரர் –
வானரனான வாலியின் செல்வத்தை அழித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
504-பூரி தஷிண –
உலகில் ஆசாரத்தை நிலை நாட்டுவதற்காகச் செய்யப்பட அஸ்வமேதம் முதலிய யாகங்களில் தஷிணைகள் அளித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டு யாகம் செய்து மிகுந்த தஷிணைகள் தருபவர் – -ஸ்ரீ சங்கரர் –
பூரி தானத்திற்கு அபிமானியான ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தம் வலது பக்கத்தில் உடையவர் -தங்கத்தை தஷிணையாக உடையவர் –
மிகுதியாகக் கொடுப்பவர் -மிகுந்த சாமர்த்தியம் உடையவர் -எஜமானர்கள் பலரை உடைய சத்ர யாகத்தினால் சுகமுள்ளவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————————-
505-சோமப –
அந்த யாகங்களில் சோம பானம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா யாகங்களிலும் அந்தந்த தேவதா ரூபியாக -தர்மத்தைத் தெரிவிப்பதற்காக –
யாகங்களின் எஜமானனாக -சோமபானம் செய்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
உமையுடன் கூடிய ருத்ரனைக் காப்பவர் -சோம ரசத்தைப் பருகுபவர் -சந்திர கிரணத்தைப் பருகுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————————–
506-அம்ருதப –
தம் அனுஷ்டானத்தைப் பின்பற்றுபவர்க்குத் தம்மை பரம பதத்தில் அனுபவிப்பதாகிய அமுதத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆத்மானந்தமாகிய அமுதத்தைப் பருகுபவர் -அசுரர்களால் அபகரிக்கப் பட்ட அமுதத்தைக் காத்து
அவ்வமுதத்தை தேவர்கள் பருகும்படி செய்து தாமும் பருகியவர் – -ஸ்ரீ சங்கரர் –
அமுதத்தைப் பருகுபவர் -அமுதத்தை அசுரர்கள் இடம் இருந்து காப்பவர் –
அமுதமாகப் பரிணமித்த ஹவிஸ்ஸைத் தாமே உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————
507-சோம –
தம்மை அனுபவிப்பவர்களுக்குத் தாமே அமுதமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சந்தரன் வடிவில் ஔஷாதிகளை வளரும்படி செய்பவர்-உமையோடு கூடிய சிவன் – -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ லஷ்மியோடும் ருத்ரனோடும் சேர்ந்து இருப்பவர் -சௌம்யமானவர்-அளவிட முடியாத சாரமாக இருப்பவர் –
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————————-
508-புருஜித் –
பலரையும் வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பலரை வென்றவர் – -ஸ்ரீ சங்கரர் –
பகைவர் பலரை வென்றவர் -பல பொருள்களை குணங்களை வெல்பவர் -அடைபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————————-
509-புருசத்தம –
தமது குணங்களாகிய அமுதக் கடலைப் பருக விரும்பும் அனுமன் முதலிய பெரியவர்களிடம்
நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
விச்வ ரூபியாகவும் மிக உயர்ந்தவராகவும் இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக உள்ளிருப்பவர் -உயர்ந்தவர் -பூர்ணர் -அழிவைப் போக்கடிப்பவர் –
உயர்ந்த ஸ்ரீ லஷ்மீ தேவியை யுடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————————–
510-வி நய –
மாரீசன் முதலியவர்களையும் தம் பராக்ரமத்தினால் அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
துஷ்டர்களைத் தண்டிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
விநியோஜ்ய -ஒரே திரு நாமம் -கட்டளை இடப் படாதவர் -பலவித உலகை நியமிப்பவர் –
சிலர் விநய -தண்டிப்பவர் -ஜய -வெல்பவர் -என்று இரண்டு திரு நாமமாக கொண்டு பொருள் கூறுவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————————————
511-ஜய –
அடியவர்களால் ஏவப்படும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
எல்லாப் பிராணிகளையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
———————————————————————————————-
512-சத்ய சந்த-
அடியவர்கள் இடத்தில் சொன்ன சொல் தவறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தாம் சங்கல்பிப்பது தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –
சத்யமான சப்தமுள்ளவர்-உண்மையைச் சேர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————————
513-தாசார்ஹ-
அடியவர்களுக்குத் தம்மையே தானமாகத் தருபவர் –
தாசர்ஹ-யாதவ -குலத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தானத்திற்கு உரியவர் -தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் –ஸ்ரீ சங்கரர் –
தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் -தானத்திற்கு தகுதியானவர் –
தாசராஜன் மகள் -சத்யவதி -புத்ரனாக வியாசராக தோன்றியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————
514-சாத்த்வதாம் பதி –
ஸ்ரீ ப்ரஹ்மத்தை அறிந்த சாத்வதர்களான பாகவதர்களின் சாஸ்த்ரமான பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தலைவர் –
யாதவர்களின் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சாத்வதம் என்னும் சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு யோக ஷேமத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களைக் காப்பவர் -சாத்வதர்களான பாஞ்ச ராத்ரிகளுக்கும் ஸ்ரீ முதலிய நவ மூர்த்திகளுக்கும் பதி –
ஆதி மூர்த்தியானவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————-
515-ஜீவ-
தமக்கு ஆராதனம் செய்யும் அந்த பாகவதர்களை ஆத்ம நாசத்தில் இருந்து காத்து உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜீவ ரூபியாக எல்லா உயிர்களையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
ஜனங்களை ஜீவிக்கச் செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————–
516-விநயிதா –
அந்த பாகவதர்களை ராஜ குமாரர்களைப் போல் ஆதரித்துக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜனங்களின் அடக்கத்தை நேரில் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திரு நாமம் –
எல்லாவற்றையும் நடத்துபவர் -தம்மைக் காட்டிலும் வேறு பொருளைப் பாராதவர் –ஸ்ரீ சங்கரர் –
ஜீவர்களின் பணிவு முதலியவற்றை நேராகக் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திருநாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————————–
517-சாஷி –
அதற்காக அவர்களுடைய ஒழுக்கங்களைப் பிரத்யஷமாகப் பார்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
——————————————————————————————-
518-முகுந்த –
அவர்களால் வேண்டப் பெற்றவராய் முக்தியைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
முக்தியைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –
முக்தியைத் தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————————-
519-அமித விக்ரம –
அவர்கள் தியானத்திலும் ஆராதனத்திலும் நினைக்கும் தத்வங்கள் எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சக்தியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
திரிவிக்ரம அவதாரத்தில் அளவிட முடியாத மூன்று அடிகளை உடையவர் -அளவற்ற பராக்கிரமம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
அளவிட முடியாத பராக்கிரமம் யுடையவர் -முழுவதுமாக அறியப்படாதவர் -கருடனைக் கொண்டு சஞ்சரிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
520-அம்போ நிதி –
பாதாளக் கடலில் எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல் கூர்ம ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அம்பஸ்ஸூக்களான தேவர் மக்கள் பித்ருக்கள் அசுரர்கள் ஆகியோரைத் தாங்குபவர் -கடல் போன்றவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ விஷ்ணு லோகமான பரம பதத்தைத் தம்மிடம் யுடையவர் –கடல் போன்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————————
521-அனந்தாத்மா-
ஸ்ரீ கூர்ம ரூபத்தின் மேல் உலகங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பம் போல் நிற்கும் ஆதி சேஷனுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேசம் காலம் பொருள் இவற்றால் வரையரை யற்றவர் –ஸ்ரீ சங்கரர் –
எண்ணிக்கை இல்லாத அமுக்தர்களுக்கும் முக்தர்களுக்கும் தலைவர் -அளவற்ற உடல்களை உடையவர் -கட்டுப்படாதவராய்
ஆத்மாவாக இருப்பவர் -ஆதி சேஷன் மீது தம் திருமேனியை வைத்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————-
522-மஹோததிசய-
பிரளய காலத்தில் ஆதிசேஷன் ஆகிற சயனத்தில் பெரும் கடலில் சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அனைத்தையும் அழித்து பிரளய சமுத்ரத்தில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
மேன்மை கொண்ட ஸ்ரீ வாமன ஸ்ரீ கிருஷ்ண ரூபங்களில் கையிலே தயிரை உடையவர் -பெரிய கடலில்
சயனித்து இருப்பவர் -ப்ரஹ்மாதிகளைத் தம் வசத்தில் உடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————-
523-அந்தக –
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளுக்கு முடிவைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ ராமனாக சமுத்திர ஜலத்தை -அணை-கட்டியவர் -ஜராசந்தன் போன்ற அசுரர்களால் சிறைப் பட்ட அரசர்களுக்கு
விடுதலை அளித்து சுகம் அளித்தவர் -எல்லாவற்றையும் அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————
524-அஜ –
பிரணவத்தின் முதலாகிய ஆகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————————-
525-மஹார்ஹ-
பிரணவத்தை உச்சரித்து ஆத்மாவைப் பரமாத்மாவிடம் ஒப்படைப்பதாகிய பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ சங்கரர் –
பூஜை முதலிய உத்சவங்களுக்கு உரியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
526-ஸ்வா பாவ்ய-
தமது பொருள்களான ஜீவாத்மாக்கள் பிரணவத்தைச் சொல்லி ஸ்வாமி யாகத் தம்மை த்யானிப்பதற்கு உரியவர் –
ஸ்வாபாவிக நித்ய ஸ்வாமி-சொத்து -சம்பந்தம் இருப்பதால் ஜீவர்களால் எப்போதும் த்யானிக்கத் தக்கவராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் ஒரே ஸ்வ பாவத்துடன் கூடியே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
மங்களகரமான பொருள் அனைத்தையும் உடையவர் -சுதந்த்ரமானவர் – ஸ்வ தந்த்ரமானவர் -அவாப்த சமஸ்த காமர் -தம்மைப் போலவே
ஞான ஆனந்தங்கள் உடைய நல்ல ஜீவர்களைக் காப்பவர் -தாமாகவும் முழுவதும் அனுபவிக்கத் தக்கவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————–
527-ஜிதா மித்ர-
தாம் ஸ்வாமியாக உள்ள ரஹச்யத்தைக் கண்டு அறிவதற்கு விரோதிகளான அஹங்காரம் மமகாரம் காமம் குரோதம்
முதலியவற்றை வென்றவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
உட் பகைகளான ஆசை வெறுப்பு போன்றவற்றையும் வெளிப் பகைவர்களான ராவண கும்பகர்ண
சிசுபாலாதிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் –
விரோதிகளை வென்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————–
528-ப்ரமோதன-
தம் மடியவர்கள் தம்மை தியானிக்க தொடங்கும் போதே மகிழ்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஆத்மாவாகிய அமுத ரசத்தை அனுபவிப்பதனால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –
தியானிப்பவர்களுக்கு தியானித்த அளவிலே மகிழ்ச்சி அளிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த ஸ்ரீ லஷ்மியையும் உயர்ந்த வாயுவையும் உடையவர் -தாம் ஆனந்திப்பவர் –
ஜனங்களை ஆனந்தப் படுத்துபவர் -மகிழ்ச்சியை உண்டாக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————-
529-ஆனந்த –
உபநிஷத் -ஆனந்த வல்லியில் சொல்லியபடி வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத ஆனந்தமுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஆனந்த ஸ்வரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆனந்த ஸ்வரூபம் யுடையவர் -ஆனந்திப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————
530-நந்தன –
தம் பரமானந்தத்தை மோஷத்தில் அளித்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பக்தர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
மகிழ்விப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————
531-நந்த –
அனுபவிப்பதற்கு உரிய பொருள்கள் கருவிகள் அனுபவங்கள் அனுபவிப்பவர்கள் தம்மிடம் நிரம்பியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
நந்த வேண்டியவை எல்லாம் நிரம்பியவர் -அனந்த விஷய சுகங்களைக் கடந்தவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லாம் நிறைந்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————–
532-சத்ய தர்மா –
ஆரம்பம் முதல் தம்மை அடையும் வரை தம் தர்மத்தை தவறாது நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உண்மையான ஞானம் முதலியவற்றை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைத் தாங்குபவர் -உண்மையான ஞானம் முதலிய தர்மங்கள் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————–
533-த்ரி விக்ரம-
இச் சிறந்த மகிமையினால் மூன்று வேதங்களையும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –
மூன்றடிகளால் மூன்று உலகங்களை வியாபித்தவர் -மூவுலகங்களையும் அளந்தவர் –ஸ்ரீ சங்கரர் –
மூன்று லோகங்களிலும் கருடன் மூலம் சஞ்சரிப்பவர் -திரி விக்ரம அவதாரத்தில் மூன்றடிகளை யுடையவர் –
மூன்று வேதங்கள் அல்லது முக்குணங்கள் அல்லது மூன்று உலகங்கள் அல்லது தேவர் மனிசர் அசுரர் ஆகிய மூவர்
அல்லது சேதனம் அசேதனம் இரண்டும் கலந்தது ஆகிய மூன்று ஆகியவற்றில் மூன்றடிகளை வைத்தவர் –
அத்ரி விக்ரம-என்று பாடம் கொண்டால் -அத்ரி மகரிஷியின் புதல்வரான தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————-
534-மஹர்ஷி –
வேதங்கள் அனைத்தையும் நேராகக் கண்ட கபில மகரிஷி –ஸ்ரீ பராசர பட்டர் –
மகரிஷி -கபிலாசார்யா -என்று ஒரே திரு நாமம் -வேதத்தைப் பார்த்தவரான கபிலாசார்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சிறந்த ரிஷி -சம்சார நடுக்கத்தை அழிப்பவர்-பிரமனையும் ருத்ரனையும் சீராட்டுபவர் –
மஹர்ஷி கபிலாசார்யா -ஒரே திரு நாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————-
535-கபிலாசார்யா –
கபிலர் என்னும் ஆச்சார்யராக இருப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
————————————————————
536-க்ருதஜ்ஞ-
சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————
537-மேதி நீ பதி –
பூமிக்கு நாதர் -இந்தப் பூமி முழுதும் எந்த வாசு தேவருடையதோ அவரே கபில மூர்த்தியாய் பூமியை எக்காலமும்
தாங்கிக் கொண்டு இருக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –
பூமிக்கு நாதர் –ஸ்ரீ சங்கரர் –
பூமிக்குப் பதி– ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
538-த்ரிபத-
போக்கியம் -அசேதனம் போக்தா -சேதனம் -நியந்தா -ஈஸ்வரன் -ஆகிய மூன்று தத்தவங்களை அறிவிப்பவர் –
மூன்று பதங்களை உடைய பிரணவம் ஆனது தம்மைக் குறிப்பதாக இருப்பவர் –
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் மூன்றடிகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ வைகுண்டம் -அனந்தாசனம்-ச்வேதத்வீபம் -என்னும் மூன்று இடங்களை யுடையவர் -காயத்ரி மந்த்ரத்தின் மூன்று
பாதங்களாலும் தெரிவிக்கப் படுபவர் -மூன்று பாதங்களால் ஞானத்தை அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————-
539-த்ரித சாத்யஷா –
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி என்னும் மூன்று நிலைகளையும் நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத் தொழில்களுக்குத் தலைவர் -மூன்றடிகளை அளந்தவர் -மூன்றாவது
நிலையான யௌவன பருவத்தை எப்போதும் யுடைய தேவர்களுக்குத் தலைவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————
540-மஹா ஸ்ருங்க –
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மத்ஸ்ய ரூபத்தில் பிரளய சமுத்ரத்தில் ஓடமாகிய பூமியைக் கட்டி விளையாடிய சிறந்த கொம்பு யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –
மிகுந்த ஞானம் உள்ளவர் -மிகவும் பிரதானமானவர் -மத்ஸ்ய திரு வவதாரத்தில் பெரிய கொம்பை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
541-க்ருதாந்தக்ருத் –
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
-சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மால் செய்யப்பட உலகைத் தாமே அழிப்பவர்-எமனை வெல்பவர்–ஸ்ரீ சங்கரர் –
தீய கர்மங்களை அழிப்பவர் -ஜீவர்கள் செய்த கர்மங்களின் பலன்களை நிர்ணயம் செய்பவர் -கர்ம பந்தங்களை
உண்டாக்குபவர் – ப்ரஹ்ம ஸூத்ரங்களை ஏற்படுத்தி சித்தாந்தம் செய்பவர் -மரணத்தை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————
542-மஹா வராஹ –
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –
பெரிய ஸ்ரீ வராஹ ரூபி –ஸ்ரீ சங்கரர் –
கொடிய அரக்கர்களை அழிப்பவர்-ஸ்ரீ ருக்மிணி தேவியின் ஸ்வயம் வரத்தில் சிசுபாலனை அடக்கியவர் -மிகச் சிறந்தவர்களால்
ஒதுக்கப் படாதவர் -மிகவும் தாழ்ந்த கலி புருஷன் போன்றவர்களை அடக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————–
543-கோவிந்த –
நஷ்டமாய்ப் போன பூமியை மீண்டும் அடைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
வேதாந்த வாக்குகளால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்
த்ருதராஷ்ரானுக்கு கண்களை அளித்தவர் -சமுத்திர ஜலத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————————————————
544-ஸூ ஷேண-
பத்த முக்த நித்யர்களை வசப்படுத்துவதற்குச் சேனை போலச் சிறந்த கருவியான
பஞ்ச உபநிஷத்துக்களைத் திரு மேனியாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தம் கணங்கள் ஆகிய சிறந்த சேனை உடையவர் -ஸ்ரீ சங்கரர்
நல்ல சேனையை உடையவர் -மிகவும் அதிகமாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————————————————————
545-கனகாங்கதீ –
அப்ராக்ருதமான தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை எப்போதும் அணிந்து இருப்பவர்-
கனகம் -தங்கம் -பஞ்ச உபநிதத்துக்களைக் குறிக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்
பொன் மயமான தோள் வளைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்
பொன் மயமான தோள் வளைகளை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————————————————————
546-குஹ்ய –
வெளிப்படையாகப் புலப்படாத ரஹச்யமான பஞ்ச உபநிஷத் எனப்படும் திரு மேனியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்
ரஹச்யமான உபநிஷத்தினால் அறியக் கூடியவர் -உதய குகையில் மறைந்து உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்
மறைந்து இருப்பவர் -குஹனால் அர்ச்சிக்கப் பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————————————————————————-
547-கபீர –
யாருக்கும் புலப்படாத ஈஸ்வர மகிமை உடையவர் -கலங்கிய தண்ணீர் கதக விதையினோடு -தேற்றாங்க கொட்டையோடு –
சேர்ந்தால் சுத்தமாவது போலே-அநாதியான அவித்யை யாதியால் கலங்கிய ஜீவனும் பகவானுடன் சேர்ந்தால்
தெளிவை அடைகிறான் என்னும் போது ஸ்வாபாவிக பிரகாசத்வம் விளங்கும் -ஸ்ரீ பராசர பட்டர்
ஞானம் ஐஸ்வர்யம் பலம் முதலிய அளவற்ற குணங்களால் அகாதமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
ஸ்ரீ லஷ்மி தேவியுடன் ரமிப்பவர் -அசுரர்களுக்கு பயத்தை அளிப்பவ்வர் –
அகபீர -பாடம் -கோவர்த்தன மலை யால் மழை பயத்தை போக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————————————————————————–
548-கஹன-
உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரிந்தாலும் இறங்குவதற்கு அரிய கடல் போல அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர்
இறங்க முடியாதவர் -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி நிலைகளில் இருக்கின்ற போதும்
இல்லாத போதும் சாஷியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
அறிய முடியாதவர் -அகஹன-பாடம் -மலைகளின் இறக்கைகளை வெட்டியா இந்திரனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————–
549-குப்த-
இம் மகிமை அறிந்த பூர்வாச்சார்யர்களால் காக்கப் பட்டவர்-ஸ்ரீ பராசர பட்டர்
வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் மறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
அயோக்யர்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————————————————————-
550-சக்ர கதாதர –
மேற் சொன்ன திவ்ய பூஷணங்களைப் போலே பஞ்ச உபநிஷத் மயமான
திவ்ய ஆயுதங்களை எப்போதும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்
மனஸ் தத்வமாகிய சக்ரத்தையும் புத்தி தத்வமாகிய கதையையும் உலகைக் காப்பதற்காக தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்
சக்ரம் கதைகளைத் தரிப்பவர் -நரகாசுரனை அழித்தவர்-எவராலும் தாங்கப் படாதவர் –
எல்லோரையும் நன்கு தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply