ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -301-350—-மும்மத விளக்கம் —

யுகதிக்ருத் யுகாவர்த்த நைகமாயோ மஹாஸந
அத்ருச்யோ வ்யக்த ரூபஸ்ஸ சஹஸ்ரஜித நந்தஜித் –33
இஷ்டோ விசிஷ்டஸ் சிஷ்டேஷ் டஸ் சிகண்டீ நஹூ ஷோ வ்ருஷ
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வ பாஹூர் மஹீ தர -34
அச்யுத ப்ரதித ப்ராண பிராணதோ வாசவா நுஜ
அபான் நிதிரஷ்டா நம் அப்ரமத்த ப்ரதிஷ்டித –35
ஸ்கந்தஸ் ச்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36
அசோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூ ரஸ் சௌரிர் ஜநேச்வர
அநு கூலஸ் சதாவர்த்த பத்மீ பத்ம நிபேஷண –37
பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38-

—————————————————————

வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –

————————————————————–

301-யுகாதிக்ருத் –
அகடுகடந சாமர்த்யம் -உள்ளவன் -உதாரணம் -ஆலினிலைப் பள்ளியானாகவும் -பிரளயத்தின் போதும் யுகங்களுக்கு
ஆதியான சிருஷ்டியைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யுகம் முதலிய கால பேதங்களைத் தொடங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளைப் படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

302-யுகாவர்த்த –
நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மங்களோடு மீண்டும் மீண்டும் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால ரூபியாக யுகங்களைத் திருப்புபவர் -ஸ்ரீ சங்கரர் –

கிருத யுகம் முதலியவற்றை மீண்டும் சுழற்றுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

303-நைகமாய-
சிறு குழந்தையாக உலகங்களை விழுங்குவது -ஒரே நீரில் பிடிப்பில்லாத ஆலிலையிலே படுப்பது முதலிய
அகத்கடிதந செயல்களை உடையவர் -மாயா என்று பொய் எனபது இல்லை -உண்மையான விஷயங்களிலும் மாயா என்ற சொல்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதால் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரு மாயை அல்லாமல் பல மாயைகளைத் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பலவிதமான இச்சைகள் உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

304-மஹாசந-
உலகு அனைத்தையும் விழுங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கல்பத்தின் முடிவில் எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிக அதிகமான உணவு உண்பவர் -அதிக உணவில் ஆசையுள்ள துர்வாச முனிவருக்கு உணவு அளித்தவர் –
யஜ்ஞத்தில் ஆசை உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

305-அத்ருச்ய-
நினைவிற்கு எட்டாத செய்கை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோருடையவும் புத்தி இந்த்ரியங்களுக்கு புலப்படாதவர் -ஸ்ரீ சங்கரர்-

தம் தயை இன்றிக் காண முடியாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

306-வ்யக்தரூப –
தம்மை அடைந்த மார்க்கண்டேயர் முதலிய வர்களுக்குத் தெளிவாகக் காட்டிய திரு மேனி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்ச ரூபம் யுடையவர் -ஸ்வயம் பிரகாசமானவர் -யோகிகளுக்கு பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தயை இன்றி காண முடியா உருவம் உடையவர் -அவ்யக்த ரூபம் -என்ற பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

307-சஹஸ்ரஜித் –
ஆயிரம் யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை சயனித்துக் கொண்டே வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

308-அனந்தஜித்-
சிறு குழந்தையாக இருக்கின்ற  போதும் யாரும் எப்போதும் எப்படியும் தமது மகிமையை அறிய முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் அளப்பரிய சக்தியினால் எல்லோரையும் போர் முதலியவற்றில் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணற்ற பொருள்களை அடைந்து இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

309-இஷ்டோ அவிசிஷ்ட –
தம் வயிற்றில் தாங்கப்பட்ட யாவராலும் வேறுபாடு இன்றி தாய் போலே விரும்பும் படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இஷ்ட -ஆனந்த ரூபியாதலால் விரும்பப்படுபவர் –
அவிசிஷ்ட -அனைவருக்கும் அந்தர்யாமி -இரண்டு திரு நாமங்கள் -யஜ்ஞங்களால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

இஷ்ட -யஜ்ஞத்தால் பூஜிக்கப் படுவதால் அனைவருக்கும் பிரியமானவர் -விசிஷ்ட -பிரளயத்தில் விசேஷமாக மிஞ்சி
இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -பிரியமானவர் -சிஷ்டர்களை –நல்லோர்களை -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

310-சிஷ்டேஷ்ட-
மார்க்கண்டேயர் முதலிய பெரியோர்களால் உயர்ந்த பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானிகளுக்குப் பிரியமானவர் -ஞானிகளால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோரால் பூஜிக்கப் படுபவர் -பிரளய காலத்தில் அழியாத  லஷ்மி யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

311-சிகண்டீ-
யாராலும் வெல்ல முடியாத மகிமையையே சிரோபூஷணமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மயிலின் தோகையை அணிந்த கோபாலன் –ஸ்ரீ சங்கரர் –

உலக சுகங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டிப்பவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவனாக மயில் பீலியைத் திரு முடியில் அணிந்தவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

312-நஹூஷ-
தமது மாயையினால் ஜீவர்களைக் கட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மாயையினால் பிராணிகளைக் கட்டுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களைக் கட்டுபவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

313-வ்ருஷ-
கடலில் அலைந்து வருந்தும் மார்க்கண்டேயரை அமுதம் போன்ற தேக ஒளியினாலும் இன்சொல்லாலும் நனைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்புவற்றைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு விருப்பமானவற்றைத் தந்து உதவுபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

314-க்ரோதஹா-
ஷத்ரியர்களை இருப்பத்தொரு  தலைமுறை வதம் செய்த பிறகு காச்யபர் வேண்டியவுடன் அந்தக் கோபம் தணிந்தவர் –
பார்கவ பரசு ராமனைப் பற்றி கூறத் தொடங்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்குக் கோபத்தை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபமே வடிவெடுத்த அசுரர்களை அழிப்பவர் -பொறுமை நிறைந்தவர் ஆதலால் கோபத்தை அடக்கியவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

315-க்ரோதக்ருத்-
அதற்கு முன் ஷத்ரியர் மீது கோபம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தீயவர்கள் மீது கோபத்தைக் கொள்பவர் —ஸ்ரீ சங்கரர் –

தீயவரிடம் கோபம் கொள்பவர் -கோபத்தை ஒழித்தவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

316-கர்த்தா –
தம் கோபத்திற்குக் காரணமான கார்த்த வீர்யனை அழித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைப்பவர் -குரோதமுள்ள அசுரர்களை அழிப்பவர் -க்ரோத க்ருத்கர்த்தா-என்று ஒரே திருநாமமாகக் கொள்ளலாம் –ஸ்ரீ சங்கரர் –

சுதந்தரத் தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

317-விஸ்வ பாஹூ-
விரோதிகளை அழிப்பதால் உலகுக்கு நன்மை செய்யும் கரங்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களுக்கு எல்லாம் ஆதரவான கைகள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனுக்கு ஆதாரமான கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

318-மஹீதர-
இப்படி துஷ்டர்களை அளித்தது பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை அல்லது பூஜையைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

319-அச்யுத –
பிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

320-ப்ரதித-
அத் தன்மையால் புகழ் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகப் படைப்பு முதலிய செயல்களால் புகழ் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமானவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

321-ப்ராண-
தன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————

322-பிராணத-
ஸ்ரீ கூர்மமாக தேவர்களுக்குக் கடல் கடைவதற்கு உரிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு பலம் கொடுப்பவர் -அசுரர்களுக்கு பலத்தைக் கெடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிராணனை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

323-வாசவா நுஜ-
அமுதம் வேண்டிய இந்திரனுக்கு அளிப்பதற்காகப் பின் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காச்யபருக்கு அதிதியினிடம் இந்திரனுடைய தம்பியாகப் பிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர் -வசுதேவருக்கு மகனாக அவதரித்தவர் –
செல்வங்கள் ரத்னங்கள் யுடையவர் -அசுரர்களின் இருப்பிடங்களை நாசம் செய்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

324-அபாம் நிதி –
கடல் கடைந்த போது அக் கடலைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நீர் நிரம்பும் கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

325-அதிஷ்டா நம் –
கடல் கடைந்த போது மந்திர மலையைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு எல்லாம் உபாதான காரணமானவர் –ஸ்ரீ சங்கரர் –

இங்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

326-அப்ரமத்த-
இப்படி அடியவர்களைக்  காப்பதில் மிகவும் ஊக்கம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலன்களைத் தருவதில் தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறிதும் செருக்கு இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

327-ப்ரதிஷ்டித –
பிறரை எதிர்பாராமல் தம் மகிமையில் நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மகிமையில் நிலைத்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலைத்து இருக்கும் தன்மை யுடையவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

328-ஸ்கந்த –
அசுரர் முதலியவர்களை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அமுதமாகப் பெருகுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பெருகுபவர் அல்லது வளர்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

329-ஸ்கந்த தர –
தேவ சேனாதிபதியான குமாரனைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம மார்க்கத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷண்முகனைத் தரிப்பவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

330-துர்ய-
உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ பிராணிகளின் உத்பத்திகளைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாரங்களைத் தாங்குபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

331-வரத-
உலக பாரங்களை வகிக்கும் தேவர்களுக்கும் அந்தந்த சாமர்த்யமாகிய வரங்களை அளிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பிய வரங்களைக் கொடுப்பவர் -யஜமான ரூபியாக தஷிணைகளைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷம் அளிப்பவர் ருத்ரன் முதலிய வர்களால் கொடுக்கப்பட்ட வரங்களை அழிப்பவர்-
கணவன் அற்ற சூர்பணகையின் மூக்கை அறுத்தவர் –
அவரதர் -என்ற பாடத்தில் அசுரர்களை ஹிம்சிப்பவர் என்றுமாம் —–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

332-வாய்வாஹந-
உலகத்திற்குப் பிராணனான வாயுவை நடத்துபவர்-ஸ்ரீ பராசர பட்டர்-

ஏழு மருத்துக்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மூச்சுக் காற்றைத் தாங்கி இருக்கும் ஜீவர்களை நடத்துபவர் – —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

333-வாஸூ தேவ –
பறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –
அவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும்  வாஸூ என்றும்
இதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்
விளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது
துதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

வாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –
எல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –
பிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————

334-ப்ருஹத் பாநு –
பிரகாசிக்கும் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சந்திர சூரியர்களினால் உலகங்களைப் பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான ஒளி யுள்ளவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

335-ஆதி தேவ –
உலகைப் படைப்பை விளையாட்டாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்திற்குக் காரணமான தேவர் -தானம் -பிரகாசித்தல் முதலிய குணங்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றிற்கும் காரணமான தேவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

336-புரந்தர –
அசுரர்களின் பட்டணங்களைப் பிளப்பவர் -இனி நான்கு திரு நாமங்களில் துஷ்டர்களால் ஏற்படும் துன்பங்களை விலக்குதலும் –
அசுரர்கள் பிசாசங்கள் இடி சாபம் முதலிய ஆதிதைவிகங்களில் இருந்து காத்தல் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

அசுரர்களின் பட்டணங்களைப் பிளந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் புரங்களைப் பிளப்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

337-அசோக-
ஆத்யாத்மிகங்களான சோகம் மோஹம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோகம் முதலிய ஆறு ஊர்மிகள் அற்றவர்-ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

338-தாரண –
ஆதி பௌதிகங்களான பகைவர் கள்வர் பிணிகள் முதலியவற்றைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவர் –
சூர்ய மண்டலத்தின் நடுவில் இருப்பவர் -சூர்ய குலத்தில் உதித்தவர் –சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தார என்னும் ஓங்காரத்தின் மூலமாய் சுகம் தருபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

339-தார –
உலக வாழ்க்கை யாகிய பயத்தை தாண்டுவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ப்பம் பிறப்பு மூப்பு மரணம் முதலிய பயங்களில் இருந்து கரை ஏற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தில் இருந்து தாண்டச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

340-ஸூர –
வெற்றியை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பயந்தவர்களால் அடையப்படுபவர் -போருக்குச் செல்பவர் -சுகத்தைத் தருபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

341-சௌரி-
சூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரா குலத்தில்  பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

342-ஜநேஸ்வர-
பிறந்தவர் யாவர்க்கும் ஈஸ்வரராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

பிறப்பற்றவர்-ஸ்ரீ லஷ்மி தேவிக்கு நாதர்-ஜனங்களுக்கு ஈஸ்வரர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

343-அநுகூல –
இயற்கையான பெருமை இருப்பதால் அதைப் பற்று வியப்பு கர்வம் அற்றவர் -கரை கடவாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மாவாதலால் யாவர்க்கும் அநு கூலராக இருப்பவர் -தமக்குப் பிரதிகூலமானதைத் தாமே செய்யார் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்மையைச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

344-சதா வர்த்த –
அளவற்ற ஐஸ்வர்ய பெருக்காகிய சூழல்களை உடையவர் -அளவற்ற ஐஸ்வர்யம் உடையவராயினும் கரை கடந்து
பெருகாதவராய் அணுகுவதற்கு எளிதாக -நதியின் சுழல் சிறிய
இடைவெளியின் மூலம் வெளிவருவது போலே விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காக்கும் பொருட்டு அநேக அவதாரங்களைச் செய்பவர் -நூறு நாடிகளில் பிராண ரூபத்தில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் தேவர் முதலான ரூபங்களில் நடத்துபவர் -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

345-பத்மீ-
விளையாட்டுத்  தாமரை மலரை எப்போதும் யுடையவர் -இப்படி வாஸூதேவனுடைய குணங்களை வர்ணித்த பின்பு
அவனுடைய திவ்ய ரூபத்தை விளக்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

கையில் தாமரையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் தாமரையை யுடையவர் -நான் முகனைப் பிள்ளையாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

346-பத்ம நிபேஷண-
தாமரை போலே மலர்ந்து அழகிய சிரமத்தைப் போக்கும் கடாஷம் யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போன்ற இரண்டு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் -தாமரைகளுக்கு நண்பனான சூரியன் ஒளியுள்ள சந்திரன்
ஆகியவர்களைக் கண்களாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

347-பத்ம நாப –
தாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

348-அரவிந்தாஷ-
தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர்   –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர்   -ஞானாத்மகமான திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

349-பத்மகர்ப்ப –
தமக்குத் தகுதியான மனமும் மென்மையும் உள்ள பத்மாசனத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

இதயமாகிய தாமரையில் உபாசிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் கமலம் யுடையவர் -நான் முகனை பிரளயத்தில் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

350-சரீரப்ருத்-
உபாசகனுடைய இதயத்தில் இருந்து கொண்டு அவனைப் போஷிப்பவர் –
பரம புருஷனுடைய குணங்களே அன்றோ உபாசகனுக்குப் போஷணம் –
உபாசகன் தான் அவனுக்கு ஆத்மாவும் உடலும் போன்றவன் அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மாயையினால் சரீரங்களைக் கொள்பவர் -அன்ன ரூபத்தால் பிராண ரூபத்தால் சரீரங்களை போஷித்து தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சரீரமாகிய உலகத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading