பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38
அதுலஸ் சரபோ பீமஸ் சமயஜ்ஞோ ஹவிர்ஹரி
சர்வ லஷண லஷண்யோ லஷ்மீ வான் சமிதிஜ்ஞய –39
விஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் சஹ
மஹீதரோ மஹா பாகோ வேகவா நமிதாசன –40
உத்பவ ஷோபணோ தேவாஸ் ஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர
கரணம் காரணம் கர்த்தா விகாரத்தா கஹநோ குஹ –41
வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42
ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-
———————————————————————–
பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –
—————————————————————————
351-மஹர்த்தி-
பக்தர்களின் யோக ஷேமங்களைக் குறைவின்றி நடத்தும் அளவற்ற செல்வம் யுடையவர் –
இனி அவனுடைய செல்வத்தை விளக்குகின்றார் -ஸ்ரீ பராசர பட்டர் –
பெரும் செல்வத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
மிகுந்த செல்வம் யுடையவர் -யஜ்ஞம் முதலியவற்றால் நிறைவான செல்வம் யுடையவர் –
மகாபலி யஜ்ஞத்தில் த்ரிவிக்ரம ரூபத்துடன் வளர்ச்சி பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————–
352-ருத்த –
பக்தர்களின் சம்ருத்தியால்- நிறைவால் -தாமும் சம்ருத்தி அடைபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பிரபஞ்ச ரூபமாக விரிவடைந்தவர் – -ஸ்ரீ சங்கரர் –
ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களால் மிக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————————
353-வ்ருத்தாத்மா –
இவ்வளவு மகிமைகளும் உள்ளங்கையில் அடங்கியது போல் தோன்றும்படி பெரிய ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மிகவும் தொன்மையான ஆத்மாவாக இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
மிக வளர்ந்த தேகம் உள்ளவர் -மிக்க குணங்களுடைய பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————–
354-மஹாஷ-
யாவராலும் பூஜிக்கப் படும் கருடனை வாகனமாக யுடையவர் -வகிக்கும் தன்மை கொண்டு தேரின் அவயவத்தை
ஒத்து இருப்பதால் அஷம் என்று வேத மயமான கருடனைக் கூறி அவனை வாகனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பெரிய இரு கண்களை அல்லது சிறந்த புலன்களை யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –
மகிமை உள்ள இரு கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————
355-கருடத்வஜ –
அந்தக் கருடனையே கொடியாக உடையவர் -அதுவே பரம் பொருளின் அசாதாராண -தனிப்பட்ட அடையாளம் –ஸ்ரீ பராசர பட்டர் –
கருடனை அடையாளைமாக வுடைய கொடியுள்ளவர்- -ஸ்ரீ சங்கரர் –
கருடனைக் கொடியாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————-
356-அதுல –
இவ்வாறு ஒப்பற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உவமை இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –
ஒப்பற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————–
357-சரப –
வரம்பு மீறுபவர்களை அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
அழியும் உடல்கள் தோறும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
பிரளய ஜலத்தில் பிரகாசிப்பவர் -முப்புரம் எரித்த அம்பில் பிரகாசிப்பவர் என்றும் கூறுவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————-
358-பீம-
வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————–
359-சமயஜ்ஞ-
பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தரும் காலம் அறிபவர் -நெருப்பு முதலியவை மேல் நோக்கியே எரிய
வேண்டும் எனபது போன்ற அதிகார நியமத்தைக் கண்டறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களை அறிபவர் -ஆறு சமயங்களை அறிந்தவர் -எல்லா பூதங்களிலும்
சமமாக இருத்தலையே யஜ்ஞமாக உடையவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுக்கு சுபம் தரும் முறையை அறிந்தவர் – ஸ்ரீ லஷ்மியுடன் சேர்ந்து இருப்பவராய் எல்லாம் அறிந்தவர் -பக்தர்கள்
வேண்டுமவற்றைக் கொடுப்பதற்கு உரிய காலம் அறிந்தவர் -சாஸ்த்ரங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————–
360-ஹவிர்ஹரி –
பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாதரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————–
361-சர்வ லஷண லஷண்ய-
திருமகள் எப்போதும் ஆலிங்கனம் செய்யும் சௌபாக்யத்திற்கான எல்லா லஷணங்களும் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாப் பிரமாணங்களாலும் அறியப் படுபவர் -அவர் ஒருவரே உண்மைப் பொருள் – -ஸ்ரீ சங்கரர் –
உலகப் படைப்பிற்கும் காரணம் முதலிய எல்லா வித லஷணங்களும் பொருந்தியவர் –
மிகச் சிறந்தவர் -என்று அறியத் தக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————–
362-லஷ்மீவான் –
எப்போதும் திருமகளுடன் கூடி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் திருமகள் மார்வில் தங்கப் பெற்றவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களை நன்கு பார்ப்பவர் -லஷ்மீ செல்வம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————–
363-சமிதிஞ்ஜய –
பிதாவான தமக்கு அடிமை செய்வதில் விவாதம் செய்யும் ஜீவர்களை தாயான லஷ்மியைக் கொண்டு வசப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
போர்களில் வெல்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
போர்களில் வெல்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
364-விஷர-
அடியவர்களிடம் நீங்காத அன்புடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவு இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்கள் வேண்டுவதை விசேஷமாக கொடுப்பவர் -அழிவற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
365-ரோஹித –
தாமரையின் உட்புறம் போல் சிவந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம் விருப்பத்தினால் சிவந்த மத்ஸ்ய மீன் வடிவைக் கொண்டவர் –ஸ்ரீ சங்கரர் –
சிவந்த நிறம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
366-மார்க்க –
உபாசகர்களால் தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
367-ஹேது –
பக்தர்களுக்குப் பயன் கிடைக்கக் காரணம் ஆனவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உபாதான நிமித்த காரணங்களாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
368-தாமோதர –
யசோதை கட்டிய கயிற்றை வயிற்றிலுடையவர்-எம்பெருமானுடைய சாதுர்யமானது லஷ்மியாலும் கொண்டாடப் படுவதாக இருந்த போதிலும்
யசோதையினால் உரலில் கட்டப் பட்ட போது-அவள் மீது உள்ள அன்பால் கட்டை அவிழ்த்துக் கொள்ளாமல்
கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்றானே -ஸ்ரீ பராசர பட்டர் –
உயர்ந்த மதியினால் அறியப் படுபவர் -யசோதையினால் வயிற்றில் கயிற்றினால் கட்டப் பெற்றவர் -தாம -என்று
கூறப்படும் உலகங்களை தம் வயிற்றிலே கொண்டவர் -என்று வியாசர் கூறின படியால் தாமோதரர் –ஸ்ரீ சங்கரர் –
வள்ளல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்-பிரளய ஜலத்தில் விளையாடி மகிழ்பவர் -இந்த்ரியங்களை அடக்கிய முனிவர்களிடம் மகிழ்பவர் –
துன்பத்தை விளைக்கும் அசுரர்களுக்குத் துன்பம் தருபவர் -கிருஷ்ணாவதாரத்தில் யசோதை வயிற்றில்
கட்டிய கயிற்றை யுடையவர் -பொறுமை யுள்ள ஜீவர்களிடம் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————–
369-சஹ –
இப்படிக் கட்டுவது -மிரட்டுவது அடிப்பது முதலிய வற்றைப் பொறுத்துக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லா வற்றையும் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————
370-மஹீதர-
அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————–
371-மஹா பாக-
ஆயர்குலப் பெண்கள் -பதினாறாயிரம் பெண்கள் நப்பின்னை ருக்மிணி சத்யபாமை ஜாம்பவதீ முதலியோர்
தாமே விரும்பி வந்து அடையும் வடிவழகு யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தமக்கு விருப்பமான உடலைக் கொண்டு உயர்ந்த உணவுகளை உண்பவர் –
அவதாரங்களில் சிறந்த போகங்களை அனுபவிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞங்களில் உயர்ந்த ஹவிர்ப்பாகம் உள்ளவர் -உயர்ந்த ஒளியுள்ள கோவர்த்தன மந்தர மலைகள் உடையவர் –
ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்களுக்கு ஆதாரமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
372-வேகவான்
மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் தமது பரமேஸ்வர சக்தியின் வேகம் குறையாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வேகத்தை யுடையவர் —ஸ்ரீ சங்கரர் –
கஜேந்த்திரன் முதலிய பக்தர்களைக் காப்பதில் வேகம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
373-அமிதாசந-
ஆயர்கள் இந்திரனுக்கு என்று வைத்து இருந்த அளவற்ற சோற்றை உண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சம்ஹார காலத்தில் அளவற்ற உலகங்களை உண்பவர் —ஸ்ரீ சங்கரர் –
அளவுபட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஜீவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர் –
பிரளயத்தில் அளவில்லாமல் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————-
374-உத்பவ –
கயிற்றினால் கட்டப்பட்ட அவரை தியானிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை யாகிய கட்டைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உலகிற்கு உபாதான காரணமாக இருப்பவர் -சம்சாரத்திற்கு அப்பால் பட்டவர் —ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்தவர்களாகச் சொல்லப்படும் பார்வதியின் பதியான ருத்ரன் முதலியவர்களைப் படைத்தவர் –
சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர் -சம்சாரத்தைக் கடந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
375-ஷோபண-
கட்டுப் படுவதற்கு உரிய பிற ஜீவர்களையும் உலகையும் கலக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சிருஷ்டி காலத்தில் ஜீவனையும் மாயையும் பிரவேசித்துக் கலக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –
பிரகிருதி புருஷர்களைக் கலங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————–
376-தேவ –
புலி பன்றி முதலியவற்றைக் கட்டி விளையாடுவது போலே ஜீவர்களை மாயை என்னும்
கயிற்றினால் கட்டி விளையாடுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சிருஷ்டி முதலிய செயல்களால் விளையாடுதல் முதலிய செயல்களைச் செய்பவர் -தேவர்களின் விரோதிகளை வெல்பவர் –
எல்லா பூதங்களிலும் செயல்படுபவர் -ஆத்மாவாக பிரகாசிப்பவர் -ஸ்தோத்ரங்களால் துதிக்கப் படுபவர் –
எல்லா இடங்களிலும் செல்பவர் —ஸ்ரீ சங்கரர் –
விளையாடுபவர் -போற்றப் படுபவர் -அடையப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————-
377-ஸ்ரீ கர்ப்ப –
இவ் வகைகளான விளையாட்டுகளிலும் அகலாமல் இருக்கும் திருமகளை கர்ப்பத்தைப் போல் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தமது செல்வமாகிய உலகம் அனைத்தையும் வயிற்றில் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
லஷ்மீ தேவியின் கர்ப்பத்திற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————-
378-பரமேஸ்வர –
இப்படித் திரு மகளே விரும்பும்படி இருப்பதால் தம் மேன்மை பயன் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றிற்கும் மேலான ஈஸ்வரர் —ஸ்ரீ சங்கரர் –
உலகத்தைக் காப்பவராகவும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதியாகவும் இருப்பவர் –
தமக்கு மேம்பட்டவர் இல்லாத ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————
379-கரணம் –
தம்மை அடைவதற்குத் தாமே சிறந்த கருவியாக இருப்பவர் -ஞான இந்த்ரியங்களான காது கண் முதலியன
கர்ம இந்த்ரியங்களான கை கால் முதலியன ஆகிய இவைகளும் எம்பெருமானுடைய இச் சக்தியில் லவலேசம் இருப்பதால்
கரணங்கள் எனப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –
உலகின் உற்பத்திக்கு முழு முதல் கருவியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
சுகம் அல்லது பலம் தரும் கை உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
380-காரணம் –
அந்தந்த இந்த்ரியங்களால் ஜீவர்களுக்கு எல்லா அறிவையும் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உபாதான நிமித்த காரணமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
வாயுவுக்கும் நான்முகனுக்கும் புகலிடமானவர்- உலகைப் படைத்தவர் -ஜலத்தை இருப்பிடமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————————-
381-கர்த்தா –
அப்படிச் செய்விப்பதில் தாமே சுதந்திரராக இருப்பவர் -ஒரு செயலைச் செய்யும் அதிகாரியான ஜீவன் அதற்குரிய பலனை
புஜிக்கும் ஜீவன் எப்படித் தனது இன்ப துன்பங்களுக்கு அபிமானியாக இருக்கிறானோ அப்படியே எம்பெருமானும் அந்த ஜீவர்களை விட
அதிகமாக அவர்களுடைய இன்ப துன்பங்களுக்குத் தான் அபிமானியாக இருக்கின்றார் –ஸ்ரீ பராசர பட்டர் –
சுதந்திரமானவர் –ஸ்ரீ சங்கரர் –
அனைத்தையும் நடத்துபவர் -பந்தத்தை அழிப்பவர்- -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————-
382-விகர்த்தா-
பிறருடைய இன்ப துன்பங்களைத் தாமும் அடைந்து மாறுகிறவர் -இது குற்றம் ஆகாது –
பரதுக்க துக்கித்வம் கல்யாண குணமே –ஸ்ரீ பராசர பட்டர் –
விசித்திரமான உலகங்களைப் படைத்தவர் —ஸ்ரீ சங்கரர் –
பலவிதமான செய்கைகள் உடையவர் -தனக்கு ஒரு கர்த்தா இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————-
383-கஹந-
இப்படி ஜீவர்களுடைய இன்ப துன்பங்களைத் தம்முடையவையாக நினைப்பதாகிய மஹா குணத்தில் கரை கடந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தம்முடைய தன்மை சக்தி செயல்களை ஒருவரும் அறிய முடியாதவர் —ஸ்ரீ சங்கரர் –
அறிந்து கொள்ள முடியாதவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————-
384-குஹ-
இவ்வாறு எல்லோரையும் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மாயையினால் தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
தன் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
385-வ்யவஸாய-
நஷத்ரங்கள் முதலியன தம்மிடம் கட்டுப் பட்டு இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஞான ஸ்வரூபியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
உறுதியான தன்மை அல்லது வடிவம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————
386-வ்ய்வஸ்தாந –
கலை முஹூர்த்தம் முதலிய காலப் பிரிவுகளின் நிலைக்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றுக்கும் ஆதாரமாக இருப்பவர் -லோகபாலர்களுடைய அதிகார் வ்யவஸ்தை-கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள் முட்டையில்
இருந்து பிறப்பவைகள் -வியர்வையில் இருந்து பிறப்பவைகள் -பூமியில் இருந்து பிறப்பவைகள் ஆகியோருடைய
ஜன்ம வ்யவஸ்தை பிராமணர்கள் ஷத்ரியர்கள் வைச்யர்கள் சூத்ரர்கள் கலப்பினங்கள் ஆகியோருடைய ஜாதி வ்யவஸ்தை
ப்ரம்மசர்ய கார்ஹச்த்ய வானப்ரஸ்த சன்யாச ஆகிய ஆஸ்ரம வ்யவஸ்தை அவற்றின் தர்ம வ்யவச்தைகள்
ஆகிய வியவஸ்தைகளை-கட்டுப்பாடுகளை பகுத்து ஏற்படுத்தியவர் —ஸ்ரீ சங்கரர் –
அசுரர்களுக்கு விரோதமாக இருப்பவர் -விழிப்பு கனவு துக்கம் முதலிய நிலைகளை நடத்துபவர் –
தேவர்களுக்கு அனுக்ரஹம் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————-
387-சமஸ்தாந-
எல்லாம் தம்மிடத்தில் முடிவு பெறும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்த ஸ்தானத்தை உடையவர் -பிரளயத்தில் பூதங்கள் அடையுமிடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
வாயுக்கள் நிலை பெற்று இருக்கச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————–
388-ஸ்தாநத-
உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
த்ருவன் முதலியவர்க்கு அவரவர் கருமத்திற்கு ஏற்ற ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பக்தர்க்கு வைகுண்டம் முதலிய ஸ்தானம் தருபவர் -அயோக்யர்களின் இருப்பிடத்தை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————-
389-த்ருவ-
கீழ்ப்பட்டவனான த்ருவனுக்கும் அழியாத உயர்ந்த நிலை கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
அழியாதவர் –ஸ்ரீ சங்கரர் –
அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
390-பரர்த்தி
சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது —
அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————–
391- பரம ஸ்பஷ்ட –
தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
392-துஷ்ட –
உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக
திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பேரானந்த வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————–
393-புஷ்ப –
இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————————————————————————————
394-ஸூ பேஷண-
தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்
மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்
தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
—————————————————————————–
395-ராம –
குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்
ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர் -மகிழ்பவர் –
அளவிடமுடியாதவர் -லீலை புரிபவர் -பூர்ணர் -ஆனந்த ரூபம் -ஸ்ரீ சத்ய சந்தர்
————————————————————————————–
396-விராம –
வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும்
தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
மேன்மையுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் –
பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————————————————————————————–
397-விரத –
ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்
தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————————-
398-மார்க்க –
பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————–
399-நேய –
தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தத்வ ஞானத்தினால் ஜீவனைப் பரமாத்மா ஆக்குபவர் -ஸ்ரீ சங்கரர்
சிஷ்யர்களில் உபதேசத்தால் நடத்தத் தகுதியானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————–
400-நய –
அந்த ரிஷிகளையும் காப்பவர் –
எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –
மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply