ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் -என்கிறார் –

பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது ப்ரம விப்ர லம்பாதி காரண தோஷமும்
நேதம் இத்யாதி- பாதகட்ரத்யமும் இறே  –
காரணா நபேஷமுமாய் அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

வேதா  –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நித்தா விச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த்தோஷமாய்-
ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது ஏன்
யோ புத்த்யதே ஸ பரான் போதயாதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ரா நவதி காதிசயம் -என்றும்
தவா நந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குணா கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே

அபரிச்சின்னம்  என்று அறிகை இறே
அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் குறை இல்லை –
வேத புருஷன் தானே -வேதாஹா மேதம் புருஷம் -என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சிண்ணன் என்று அறிந்தேன் என்றான் இறே

வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜ நா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இ றே

நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது அன்றே

இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமா நி ததை வாதர்வணா நி ஸ -என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காணவ மாத் யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே காரே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத சந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர விஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது

வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த   கதமான கமவச்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிர சந்கிப்பதும் செய்யும்
இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அச்த்யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிமப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர் த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் -இவ்விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
சுருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதகுபாத்தமாய் -சஹபடிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தச்யமும் –
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –
மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரண்மும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –
நியாயை என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷண மே இருக்கிறது

இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வ ராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிச்ரிதா –வேதா ஸ்தா நாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சொப்யாம் சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் ஹ்புசிதகமிதயோர் நியாய மீமாம்சையோ ச்யாதர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா – என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது
வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதி ருபகுருதே -என்று
பிபெத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப்ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்தமதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ்வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்ம தாதடே -சாரச்வதாய தேநாபி மம சாரச்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

புராணம் ஆவது –
புராபி நவ -என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

ந்யாயம் ஆவது
பூர்வபஷ சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ்கர்ஷித்துக் கொடுக்கை –

ஆக இப்படி
சாங்கமாயும் சசிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –

அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-என்றும்
வாயவ்யம் ச்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் ப ஸூகாம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

த்வதர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ்விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவநஸய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ் நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹூதாச நான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த்யக்நிம் மனுமந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான சுருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்
அபர்யவசாநவ்ருத்தியாலே யாதல்
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

த்வதர்ச்சாவிதிமுபரி –
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தா நேந தபஸா அநாசகேந -என்றும்
வர்ணாச்ரமா சாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுராராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராத நத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை இதோ விமுகராக்கி நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

முதல் பழுவிலே தவறி யெலாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெறு-என்று சொன்னால்
அப சர்ப்பேத சௌகதா ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ச்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விசுவாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான
ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்னபத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு

அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவா ஹ்யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபிபாத பீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவ நாலலோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெல்ல இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

அழகியது -பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என் என்னில்

ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி -என்றும்
கஷாயே கர்மபி பாகவே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதாக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதொர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்ய மித்யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே -என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதிபாத நம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ்வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும் சொல்லுகிறது –

சேஷ்டா தஸ்யா ப்ரேமே யஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித்யுபா தார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண –
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ச்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்

விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ்யேசான-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரெ லோகே விரசம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவி சதே தேவ ஏக -என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன –
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் -என்கிறது-

குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம நுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசரோ பவதி -என்றும்
இக்குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் வை ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே
இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
சவிபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

த்வதாப்தௌ -எஎன்னா தே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம் –

ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

ஆக -இத்தால்-
நதா ஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புணயே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும்சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –
வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

சர்வைர் வேதை –
அதீயமானமாயும் -விபர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பலப்ரதானவன் -என்கிறார்

ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ்ஜாதி விசிஷ்ட  பிண்டத்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம் மளவிலே பர்வசிக்கக் கடவது -என்கிறார்

வேத்ய
வாசக சப்தமானது வாச்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

பகவன் –
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம் -என்கிறார்

ஸ்வேந ச  வ்யாசகர்த்த –
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ -என்கிறார்

————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

வேதா -வேதங்களானவை-

பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

பகவன்-எம்பெருமானே

சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்

த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

————————————————————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading